யாழினியை அழைத்துச் சென்ற விநாயக் கல்லூரிக்குச் செல்லாமல் வேறு வழியில் செல்லவே யாழினிக்குத் தெரிந்துவிட்டது வேறு எதோ சர்ப்ரைஸ் இருக்கிறது என்று.”திரும்ப என்ன சர்ப்ரைஸ் டா?” என்று கேட்டதற்கு” வந்து பாரு டி தெரியும்” என்றான்.
ஒரு மணி நேர பயணத்துக்குப் பிறகு ஒரு மூங்கில் கபே (cafe) சென்றனர்.அங்கே கவிதா,ஹரிஷ்,அபி மூவரும் அவளுக்காக காத்துக்கொண்டிருந்தனர்.அவர்கள் அவளுக்கு வாழ்த்து சொல்ல
யாழினியின் கேக் வந்தது.அதை வெட்ட அவள் கீழே குனிய அப்படியே அவள் முகத்தை கேக்கில் வைத்து அமித்தினர்.அவள் முகம் முழுக்க கேக் ஆகிவிட்டது.
சுத்தம் செய்ய பெண்கள் மூவரும் செல்ல ஆண்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.அப்பொழுது யாழினியின் போன் அடிக்க எடுத்துப் பார்த்தவன் அதில் தெரிந்த பெயரைப் பார்த்து கோபம் கொண்டான்.
யாழினியின் போனைப் பார்த்தவன் அதில் தெரிந்த பெயரைப் பார்த்து கோபம் கொண்டான்.யோகேஷ் தான் அழைத்திருந்தான்.
போனை எடுக்காமல் விட அது மீண்டும் மீண்டும் அழைத்துக்கொண்டே இருந்தது.ஹரிஷ் “யாருடா மச்சான் போன்ல?” என்று கேட்க “ச்சு...அந்த யோகேஷ் தான் டா” என்றான்.”அவன் எதுக்கு மச்சான் யாழினிக்கு கால் பண்ணறான்?” என்றதற்கு “தெரில டா..அவன் சரி இல்லன்னு பசங்க வேற பேசிக்கிறாங்க “ என்று சலிப்பாக சொல்ல “நீ ஏன் டா பீல் பண்ணற...யாழினி தான் அவன் கூட அந்த அளவுக்கு பேசறது இல்லையே” என்றபொழுது பெண்கள் மூவரும் வர அந்தப் பேச்சு அப்படியே நின்றது.
அனைவரும் பேசிக்கொண்டே உணவு அருந்த நேரம் றெக்கை கட்டிக் கொண்டு பறந்தது.மணி மூன்றான பின்பு தான் விநாயக்கிற்கு உரைத்தது அவர்கள் வேறு ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டும் என்பது.அவர்களிடம் விடை பெற்றவன் யாழினியை அழைத்துக்கொண்டு சென்றான்.
யாழினி பைக்கில் ஏறும்பொழுது அவளுக்கு கால் வர அட்டென்ட் செய்தவள் “சொல்லு யோகேஷ்” என்றாள்.விநாயக்கிற்கு அவ்வளவு நேரம் மறைந்திருந்த கோபம் மீண்டும் மூக்கில் வந்து ஒட்டிக்கொண்டது.அவன் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல இவளும் நன்றி தெரிவித்துவிட்டு கட் செய்து விட்டாள்.
“நீ எதுக்கு டி அவனுக்கு எல்லாம் நம்பர் குடுக்குற?” என்று கேட்க “அவனும் நானும் குரூப் மேட்ஸ்...அதனால எக்ஸ்பெரிமெண்ட்ஸ் ப்ரோஜெக்ட்ஸ் எல்லாம் அவன் கூட சேர்ந்து தான் பண்ணனும்...அதனால குடுத்த..” என்றாள்.விநாயக் மீண்டும் விடாமல் அவன் அவளுடன் பஸ் ஸ்டாப் சென்றது,காண்டீனில் இருந்தது பற்றி கேட்க ”லூசு..எக்ஸ்பெரிமேன்ட்கு வேஸ்ட் வாட்டர் வாங்கிட்டு வர சொன்னாங்க...அதனால கான்டீன் போனோம்.... அப்ரோ அன்னைக்கு கிளாஸ் சீக்கிரம் முடுஞ்சுருச்சு...அதனால அவன் வெளிய போனும்னு சொல்லி என்கூட பஸ் ஸ்டாப் வரைக்கும் நடந்து வந்தான்” என்றாள்.அதற்குள் வீடு வந்துவிட்டது.
வெளியே நின்றிருந்த புது போலோ காரைப் பார்த்தவள் “இது யாரோட கார்?புதுசா இருக்க மாரி இருக்கு” என்று கேட்க உதட்டைப் பிதிக்கி தனக்கு தெரியாது என்றான்.
வீட்டிற்குள் சென்றவள் அவள் தந்தையிடம் கேட்க அவர் அவளுக்கு தான் அந்த கார் என்றார்.ஆனந்தத்தில் தந்தையை அணைத்துக்கொண்டவள் “தேங்க்ஸ் பா...பட் உங்களுக்கு எப்படி திடிர்னு இப்படி ஒரு ஞான உதயம் பிறந்துச்சு?” என்று கேட்க அவள் தலையில் செல்லமாக தட்டியவர் “விநாயக் தான்..பாவம் அவ பஸ்ல போய் ரொம்ப கஷ்ட படரா...அவளுக்கு ஒரு கார் வாங்கி குடுங்க...இல்லனா டெய்லி நானே அவள காலேஜ் கூப்டு போறனு சொன்னான்..அதனால தான் வாங்கி குடுத்தேன்” என்றார்.
காரை எடுத்துக்கொண்டு அனைவரும் பிள்ளையார் கோவில் சென்று பூஜை முடித்துவிட்டு ஒரு நட்சத்திர ஹோட்டலில் உணவு முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தனர்.
விநாயக்கின் அறைக்குச் சென்றவள் அவன் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து எழுப்ப மனம் வராமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.பழைய யாழினியாக இருந்திருந்தால் கண்டிப்பாக அவனை எழுப்பி இருப்பாள்...ஆனால் ஏன் என்று அவளுக்குத் தெரியவில்லை...தெரிந்திருந்தால் பின்னால் வரும் பிரச்சனை இல்லாது போய் இருக்குமோ?
ஆனால் என்ன செய்வது நாம் ஒன்று நினைக்க....தெய்வம் ஒன்று நினைக்கும்....