• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Edited episode 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
விநாயக் தன் அறைக்குச் சென்று உடை மாற்றிக்கொண்டிருக்கும் பொழுது போன் வர அதை எடுத்துப் பார்த்தவனின் உதடுகளில் புன்னகை பூத்தது.போனை காதுக்குக் கொடுத்தவன் “மச்சான்...எப்படி டா இருக்க?” என்று கேட்க “எப்ப டா உங்க எல்லாத்தையும் வந்து பக்க போறனு ஏங்கிட்டு இருக்க மச்சா” என்று பாவமாக கூறினான் ஹரிஷ்.

“டேய் இந்த கதைலாம் என்கிட்ட சொல்லாத...உன் செல்ல தங்கச்சிகிட்ட சொல்லு அவ வேணுனா நம்புவா...நான் நம்ப மாட்டேன்..” என்றான்.”நம்மளோட 25 வருஷ பிரிண்ட்ஷிப்ப சங்கதேக பட்டுடியே மச்சான்..என்னால இதை பொறுக்க முடியலையே மச்சான்...எனக்கு நீ சொன்னத நினைச்ச இப்பவே ஹார்ட் அட்டாக் வந்துரும் போலையே” என்று ஏக வசனங்கள் பேசினான்.

“டேய் டேய் ரொம்ப நடிக்காத..சொல்ல வந்த விஷயத்த சொல்லு” என்று கேட்க”அது வந்து மச்சான்..” என்றவன் இழுக்க “எது வந்து?” என்று விநாயக்கும் அவனைப் போலவே இழுக்க “உன் தங்கச்சி என்ன ரொம்ப படுத்துறா டா” என்று அவனிடம் முறையிட்டான்.

“என் தங்கச்சி உன்ன படுத்துறாளா இல்ல நீ அவள படுத்துறியா?” என்று அவன் மறு கேள்வி கேட்க “டேய் எல்லாம் நீ குடுக்குற செல்லம் தான் டா அவள் இவ்வளவு ஆடுறா...நான் சொல்லறத கேக்க மாட்டங்கிறா ...” என்று அவன் பொரிந்தான்.

“அவளுக்கு மேல படிக்க ஆசை இருக்குனு தெரிஞ்சும் நீ ஏன் டா அவள படிக்க விடமாட்டேங்குற?அதனால தான் அவ உங்கிட்ட சண்டை போடறா....அவ சொல்லறது எனக்கு நியாயமா தான் படுது...அதனால நான் அவளுக்கு சப்போர்ட் பண்ணற..” என்று தன்னிலை விளக்கம் குடுக்க “அவ மேல படுச்சா இன்னும் 2 வருஷத்துக்கு கல்யாணத்த தள்ளி போடணும் டா...என்னால அவளோ நாள் அவள பாக்காம இருக்க முடியாது..அதனால தான் வேண்டான்னு சொன்ன..அதை அவ புரிஞ்சுக்காம என் கூட சண்டை போடுறா...நீ ஆச்சு அவளுக்கு எடுத்து சொல்லு டா..” என்று கெஞ்ச சிரித்த விநாயக் “உன்னோட பாசமலர் கிட்ட சொல்லி அவகிட்ட பேச சொல்ல வேண்டியது தான?” என்று வினவ சலித்துக்கொண்ட ஹரிஷ்”அவ அதுக்கு மேல டா...நீ அவள ரொம்ப டாமினேட் பண்ற...நீ மட்டும் உனக்கு புடுச்சத படுச்ச...அவள மட்டும் படிக்க விடமாட்டேங்கிற...நே சரியான மேல் சாவனிஸ்ட்...அப்படி இப்படின்னு என்கூட சண்ட போடுற...என் பாசமலர் கிட்ட எனக்காக அவகிட்ட பேச சொல்றதும் எனக்கு நானே பாம் வெக்கறதும் ஒன்னு” என்றான்.

சிரித்த விநாயக் “ அபி என்கிட்ட அவளுக்கு வீட்ல இருக்கறது ரொம்ப போர் அடிக்குது...அதனால தான் படிக்கிறனு சொல்லற அதுக்கும் அவன் விட மாட்டேங்கிறான்..வீட்ல சும்மா இருக்கறது தெரிஞ்சு நிறைய பேர் வந்து பொண்ணு கேட்கிறாங்க ...நான் அம்மா கிட்ட எது எதோ பொய் சொல்லி சமாளிச்சுட்டு இருக்க...இதுல்லாம் சொன்னா அவன் புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறான்னு சொல்லி ரொம்ப பீல் பண்ணா டா...அவ சொல்லறதும் கரெக்ட் தான..” என்று அபி பக்க நியாயங்களை விளக்கினான்.

“அவள் சொல்லறதும் கரெக்ட் தான் டா..பட் அவ இப்ப படிக்க ஆரம்பிச்ச அது முடிய இன்னும் 2 வருஷம் ஆகும்..அதுக்கு அப்புறம் தான் கல்யாணம் பண்ண முடியும்...இப்பவே என்னால அவள விட்டு இருக்க முடில...இன்னும் 2 வருஷம் அவ இந்தியால நான் யூ.எஸ்ல இருக்கறது ரொம்ப கஷ்டம் டா...இன்னொரு 1 வருஷத்துல கல்யாணம் பண்ணனும் டா..” என்று கூறினான்.

“நீ ஏன் அவள இப்பவே கல்யாணம் பண்ணிக்க கூடாது..ஏன் 1 வருஷம் தள்ளி போடணும்னு நினைக்கிற?” என்று கேட்க “எனக்கு இப்ப இங்க வொர்க் லோஅது கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு டா...கல்யாணம் பண்ணி நான் அவ கூட நிறைய டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு நினைக்கிற...” என்றான்.

விநாயக்கோ “மச்சான்..நீங்க பேசாம இப்பவே கல்யாணம் பண்ணிகோங்க...அபி யூ.எஸ்ல படிக்கட்டும்...நீயும் அவளும் ஒன்னா இருக்கலாம்...அவளும் படுச்சானா பிஸி ஆயிருவா...நீயும் உன் வொர்க் பாத்துக்கலாம்.” என்று அறிவுரை வழங்க “சூப்பர் டா மச்சா!செம்ம ஐடியா...நான் மட்டும் நேர்ல இருந்துருந்த உன்ன கட்டி புடுச்சு உம்மா குடுத்துருப்ப...” என்று சிரிக்க “அட ச்சி நாயே...போ டா” என்றான் விநாயக்.

ஹரிஷ் “மச்சான் நான் இன்னொரு ஒன் வீக்ல இந்தியா வர...அம்மா அப்பா கிட்ட பேசிட்டு நாம அபி வீட்டுக்கு போய் பேசலாம்..இத அபி கிட்ட சொல்லாத..சர்ப்ரைஸா இருக்கட்டும்..அப்டியா யாழிகிட்டயும் சொல்லிரு” என்று கூறி முடிப்பதற்குள் “நீயே உன் தங்கச்சிகிட்ட சொல்லிரு..என்னால சொல்ல முடியாது” என்று கடுப்பாக கூற “உங்க ரெண்டு பேர்க்கு அப்படி என்ன தான் டா பிரச்சனை?” என்று கேட்க “எல்லாமே பிரச்சனை..” என்று அவன் முடித்தான்.

“சரி நான் அவளுக்கு கால் பண்ணி சொல்லிற ..டிக்கெட் புக் பண்ணிட்டு சொல்லற..ஏர்போர்ட் வந்துரு பிக் அப் பண்ண...வரப்ப யாழினியையும் கூடிட்டு வந்துரு” என்று கூறி போனை வைத்தான்.எப்படியாவது இருவருக்கும் உள்ள சண்டையை தீர்த்து வைக்க வேண்டும் என்று மனதுக்குள் நினைத்தான்.


அன்று ஹரிஷ் யூ.எஸிலிருந்து வருகிறான்.விநாயக் காரில் அமர்ந்து விட்டான்.ஆனால் யாழினி இன்னும் வரவில்லை.அவளை அழைக்கவும் ஈகோ தடுத்தது.அதனால் கார் ஹார்றனை விடாமல் ஒலிக்க அதன் சத்தம் பொறுக்க முடியாமல் வெளியே ஓடி பணியாளரிடம் யாழினியை அழைக்கச் சொன்னான்.

அவன் அவளை கூப்பிடுவான் என்று நினைத்த யாழினிக்கு அவன் அழைக்காதது பெரிய ஏமாற்றம்.கூம்பிய முகத்துடன் வெளியே வந்த யாழினியைப் பார்த்த பொழுது அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.அவளுக்கு வேண்டுமானால் அவள் வந்து பேசட்டும் என்று நினைத்து அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் காரை எடுத்தான்.

ஏர்போர்ட்டில் ஹரிஷ் வந்ததும் அவனிடம் பேசியபடியே வெளியே வந்தவர்களை “ஹாய் கைய்ஸ்!எப்படி இருக்கிங்க?” என்ற குரல் தடுத்தது.அந்தக் குரலை கேட்டதும் 1000 வாட்ஸ் பல்பு போல் இருந்த யாழினியின் முகம் ப்யுஸ் போன பல்பு போல் ஆனது.”நல்லா இருக்கோம்.நீ எப்படி இருக்க?” என்று விநாயக் கேட்க சிரித்துக்கொண்டே “ஐ ஆம் அப்சல்யுட்லி பைன்” என்றாள் பிரியா.


பொதுப்படையாக அவர்கள் மூவரும் பேசிக்கொண்டிருப்பதை கேட்டுக்கொண்டிருந்தாள் யாழினி.அவளுக்கு உள்ளுக்குள் பெரிய வலி.அவளை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டு விநாயக் பேசிக்கொண்டிருந்தது அவளுக்கு மேலும் எரிச்சலைக் கொடுத்தது.தனக்கு தலை வலி என்று கூறி அவர்களிடம் விடை பெற்று காருக்குச் சென்றாள்.அவளைத் தொடர்ந்து விநாயக்கும் ஹரிஷும் காருக்குச் சென்றனர்.

******************************************************************************************************************


ஹரிஷ் அபிக்கு போன் செய்தான்.அவன்மேல் கோபமாக இருந்தவள் போனை அட்டென்ட் செய்யவில்லை.அவன் மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய அவள் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் போனை எடுத்தாள்.அவள் போனை எடுத்தவுடன் “அபி நான் வேலை விஷயமா 1 வீக் கனடா போற..அங்க ரொம்ப பிஸியா இருப்ப...போன் பண்ண முடியாது..” என்ற கூற அபிக்கு கண்ணில் தண்ணீர் வந்து விட்டது.
“நீ என்கிட்ட பேசறதே டெய்லி 1 மணி நேரம் தான்..இப்ப அதுவும் இல்லைனா எப்படி?நீ யூ.எஸ் போனதுல இருந்து ரொம்ப மாறிட்ட...இந்தியால இருந்தவரைக்கும் டெய்லி 3 மணி நேரமாச்சு என்குட பேசுவ..இப்ப 10 மினிட்ஸ் பேச கூட உனக்கு டைம் கிடைக்கல...போட இனி பேசாத..”என்று கூறி போன் வைத்து விட்டாள்.

அவன் திரும்ப அழைத்து இவளை சமாதனப் படுத்துவான் என்று இவள் நினைத்துக்கொண்டிருந்தாள்.ஆனால் அவன் திரும்ப அழைக்காமல் இருந்தது இவளுக்கு பெரிய ஏமாற்றமாகி விட்டது.


ஹரிஷ் அவன் பெற்றோர்களிடம் பேசி சம்மதம் வாங்கினான்.பின்பு அபியின் பெற்றோர்களிடம் பேசி அவர்கள் சமதத்தையும் பெற்றான்.ஹரிஷின் குடும்பமும் சந்தானகிருஷ்ணன் குடும்பமும் குடும்ப நண்பர்கள்.அதனால் சந்தானகிருஷ்ணனின் ஒன்று விட்ட அண்ணன் மகனான சக்திக்கு (அபியின் தந்தை) ஹரிஷைப் பற்றியும் அவன் குடும்பத்தைப் பற்றியும் நன்றாகத் தெரியும்.அவர்களிடம் அபியிடம் சொல்ல வேண்டாம் என்று சொல்லி இருந்தான்.


அன்று அபியின் வீடு மிகவும் பரபரப்பாக இருந்தது.ஆனால் ஏன் என்று அபிக்குத் தெரியவில்லை;தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை. அன்று ஹரிஷுடன் சண்டை போட்டது...அதுக்கு அப்புறம் அவனும் அழைக்கவில்லை இவளும் அழைக்கவில்லை..அவள் மனம் மிகவும் சோர்வாக இருந்தது.

அவள் அம்மா அவளிடம் ஒரு புடவையை கொடுத்து கட்டச் சொல்ல அவள் எதற்கு என்று கேட்க அவர் ஒன்றும் சொல்லாமல்”சொல்லறத செய்..” என்று கூறிவிட்டுச் சென்றார்.

அவளும் அவர் கூறிய படி புடவையை உடுத்த அவள் அறையைத் தட்டும் சத்தம் கேட்டது.கதவைத் திறந்தவுடன் உள்ளே வந்த பியூடிசன் அவளுக்கு மேக் அப் செய்தார்.அவளுக்கு என்னமோ புரிவது போல் இருந்தது.உடனே ஹரிஷிற்கு அழைத்தாள்.ஆனால் அவன் போன் ஸ்விட்ச் ஆப் என்று வந்தது.பின்பு விநாயக்கிற்கு முயற்சி செய்ய அவனோ எடுக்கவே இல்லை. யாழினிக்கு அழைக்க அவளும் போனை எடுக்கவில்லை.

அபிக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.அதுக்குள் அவள் அம்மா வந்து அவளை அழைக்க “ம்மா..இதுலாம் யாரைக் கேட்டு முடிவு செஞ்சிங்க?” என்று கேட்க அவர் “யாரைக் கேட்கணும்?” என்று அவளிடம் எதிர் கேள்வி கேட்டார்.

அவளால் ஒன்றும் பேச முடியாமல் போகவே அவருடன் அமைதியாக கீழே சென்றாள்.முகம் மட்டும் கலை இழந்து இருந்தது.அவள் அம்மா குடுத்த காப்பியை அனைவருக்கும் கொடுத்தவள் யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை.அதனால் வந்தது ஹரிஷ் தான் என்பதை அறியவில்லை.

அந்த இடமே அமைதியாக இருக்க யாழினி தான் முதலில் பேச ஆரம்பித்தாள்.”பொண்ணுக்கு சமைக்க தெரியுமா?என் அண்ணா சாப்பாடு நல்லா டேஸ்டா இருந்தா தான் சாப்பிடுவான்...சமைக்க தெரியாதுனா சொல்லுங்க நாங்க வேற பொண்ணு பாத்துக்கறோம்...” .யாழினியின் குரலைக் கேட்டதும் நிமிர்ந்து பார்த்த அபிக்கு அங்கிருந்தவர்களைக் கண்டதும் கவலையில் வந்த கண்ணீர் ஆனந்தக் கண்ணீராக மாறியது.

யாழினி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும் விதமாக விநாயக்” என் தங்கச்சிக்கு நல்லா சமைக்க தெரியும்...5 ஸ்டார் ஹோட்டல்ல கூட அவள மாரி டேஸ்ட்டா சமைக்க மாட்டாங்க...” என்று பெருமை பேசினான்.ஆம்!அபி மிக அருமையாக சமைப்பாள்.அவள் சாப்பாட்டை சாப்பிடுபவர்கள் அதன் ருசியில் மெய் மறந்து போவர்கள்.

ஹரிஷையும் அபியையும் தனியாக பேச பெரியவர்கள் அனுமதிக்க இருவரும் அபியின் அறையை நோக்கி நடந்தனர்.உள்ளே சென்றதும் கதவை அபி சாத்த ஹரிஷோ மனதுக்குள் “நம்ம ஆள் ரொம்ப பாஸ்ட்...” என்று நினைக்க அவளோ அவனை முதுகில் டமார் டமார் என்று அடிக்கத் தொடங்கிவிட்டாள்.

“அடிக்காத டி! வலிக்குது....ஆ அம்மா...வலிக்குத்து!” என்று கத்தினான்.”ஏன் டா என்கிட்ட சொல்லல?நான் எவ்வளவு பயந்து போய்ட தெரியுமா?” என்று மீண்டும் அடிக்கத் தொடங்க அடி பொறுக்க முடியாமல் அவள் கையைப் பிடித்தவன் அவள் அதரங்களிடம் விளக்கம் சொல்லத் தொடங்கினான்.நிமிடங்கள் நொடிகளாய்க் கரைய இருவரும் அதை அனுபவித்துக் கொண்டிருந்தனர்.

*****

அன்று காலை மிகவும் அற்புதமாக விடிந்தது.ஏனென்றால் அன்றுதான் அபிநயா சக்தி – அபிநயா ஹரிஷாக மாறும் நாள்...அன்று அவர்களின் திருமணம்.முப்பது முக்கோடி தேவர்கள் சாட்சியாக ஹரிஷ் அபியின் கழுத்தில் மாங்கல்யத்தை அணிவித்தான்.அபியின் கண் ஓரம் இரண்டு சொட்டு ஆனந்தக் கண்ணீர் வந்தது.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top