- Joined
- Jan 17, 2018
- Messages
- 1,547
- Reaction score
- 7,648
அத்தியாயம் - 7
மறுநாள் காலையில் எழுந்தவன், அருகில் மனைவியை காணாமல் அவளை தேடினான் அறைக்குள். அங்கே அவள் இருப்பதற்கான அறிகுறி தெரியாததால், மணி என்னவென்று பார்த்தான். அது மணி காலை ஏழு என்று காட்டவும், இவ்வளவு நேரமா உறங்கினோம் என்று தன்னையே கடிந்து கொண்டு, குளிக்க சென்றான்.
குளித்துவிட்டு உடை மாற்றிக் கொண்டு இருந்தவன் காதுகளில், கீழே கேட்ட சத்தத்தில் அடித்து பிடித்து ஓடி வந்தான்.
அங்கே அவனின் தாயை பாதுகாத்துக் கொண்டு இருப்பது போல் நின்ற அவனின் மனைவி தான், முதலில் அவன் கண்களுக்கு தெரிந்தான். அங்கே அவனின் சித்தி, அத்தை அவர்களின் புதல்வர்கள் என்று வரிசையாக நின்று இருந்தனர்.
“என்னது இது? எதுக்காக எல்லோரும் காலையிலே இப்படி ரவுண்டு கட்டி நிக்குறாங்க? என்ன பிரச்சனை இப்போ?” என்று தெரியாமல், அங்கே யாரும் அறியாமல் ஒரு ஓரமாக நின்று என்ன நடக்கிறது என்று கவனிக்க தொடங்கினான்.
“பார்த்தீங்களா அண்ணி, உங்க தம்பி பொண்டாட்டி மருமகளை கூட்டிட்டு வந்த மிதப்பில் நமக்கு செய்றதை எல்லாம் மறந்துட்டாங்க” என்று அவன் சித்தி கூற அவன் அத்தை அதற்கு, அவனின் தாயை முறைத்துக் கொண்டு நின்று இருந்தார்.
“ஹலோ! என்ன முறைப்பு வேண்டி இருக்கு? இவங்க என் அத்தை, இந்த வீட்டு மகாராணி, ஒழுங்கா அவங்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்தா, உங்களுக்கு இந்த வீட்டில் இடம் இருக்கும், இல்லைனா ஒரேடியா வீட்டை விட்டு விரட்டி விட்டுடுவேன் பார்த்துக்கோங்க” என்று அவன் மனைவி ஈஸ்வரி போட்ட போடில்
அவனுக்கு அப்பொழுது தான், லேசாக விஷயம் புரிய ஆரம்பித்து இருந்தது.
“நேத்து முளைச்ச காளான் எல்லாம், இன்னைக்கு என்னை வந்து கேள்வி கேட்குது. அடியே இந்த வீட்டு மகாராணி எப்போவும் நான் தான், நான் வைக்கிறது தான் இங்க சட்டம். என் தம்பியே என் பேச்சை தான் கேட்பான், நீ இன்னைக்கு வந்து நாட்டாமை பண்ண நினைகிறியா?”.
“ஒழுங்கா நான் சொல்லுறதை கேட்டு நடந்தா, நீ இங்க இருக்கலாம், இல்லை உன்னை நான் வாழாவெட்டியா உங்க வீட்டுக்கு துரத்தி விட்டுடுவேன் பார்த்துக்க” என்று மிரட்டினார் அவனின் அத்தை கங்காவதி.
“ஹச்சோ! நான் பயந்துட்டேன்! சும்மா காமெடி பண்ணாம ஓரமா போய் உட்காருங்க, ஒசி சாப்பாடு இன்னைக்கு மட்டும் தான் கிடைக்கும், நாளையில் இருந்து வெளியே போய் உழைச்சு சாப்பிடனும், போய் வெளியே உட்காருங்க ஓடுங்க” என்று அவரை விரட்டிக் கொண்டு இருந்தாள் ஈஸ்வரி.
“ஏய்! யாரை வெளியே விரட்டிகிட்டு இருக்க? அவங்க என் அத்தை, அவங்க கிட்ட இப்படி தான் மரியாதை இல்லாம பேசுவியா?” என்று மிரட்டினான் ஈஸ்வர்.
அவனின் அந்த மிரட்டலில், முதலில் அவள் புருவத்தை சுருக்கினாள். அதன் பின் அவனின் நிமிட நேர கண் சிமிட்டலில், அவனின் சம்மதம் கிடைத்த குஷியில் புகுந்து விளையாட முடிவு எடுத்துவிட்டாள்.
“மரியாதை கொடுத்தா மட்டும் தான், நான் ஒழுங்கா பேசுவேன். இங்க எங்க அத்தைக்கே மரியாதை இல்லையாம், எனக்கு மரியாதை கிடைச்சிடுமா என்ன? அதுவும் தி கிரேட் அசிஸ்டென்ட் கமிஷனர் ஆப் போலீஸ் கிரைம் பிரன்ஞ் ஆபிசர் ஈஸ்வர் பொண்டாட்டிக்கு, வீட்டுக்குள்ளேயே மரியாதை இல்லைனா, வெளியே எப்படிப்பா மரியாதை கிடைக்கும்” என்று அவனையே திருப்பி கேட்டவளின் திறமையை மெச்சிக் கொண்டான் அவளின் மணாளன்.
“இப்போ என்ன மரியாதை தரல, என் அத்தை உனக்கு? சொல்லு நான் கேட்கிறேன்” என்று கூறி அங்கேயே தோரணையாக ஒரு இருக்கையில் அமர்ந்து விட்டான் ஈஸ்வர்.
அவன் அமர்ந்த தோரணையில், அங்கு ஆட்டம் கண்டது என்னவோ அவனின் அத்தையின் புதல்வர்களும், சித்தியின் புதல்வர்களும் தான். அவனின் அத்தையும், சித்தியும் தைரியமாக தான் இருந்தார்கள்.
“நல்லா கேளு பா, உன் பொண்டாட்டி என்னமோ புதுசா மரியாதை பத்தி எல்லாம் பேசுறா, யார் சொல்லி இவ இப்படி பேசுறாளோ?” என்று கண்கள் அவனின் தாயை நோக்கி தான் வஞ்சித்துக் கொண்டு இருந்தது.
எல்லாவற்றையும் பார்த்தவனுக்கு, மனம் கனத்து போனது. வீட்டிற்கு வராமல், இங்கு நடப்பதை கவனிக்காமல் என்ன செய்து கொண்டு இருந்து இருக்கிறோம் என்று எண்ணி, மனம் உடைந்தான்.
“யாரும் சொல்லி தான் எனக்கு தெரியனும் இல்லை, சில பேரை பார்த்தா தன்னாலே கை எடுத்து கும்பிட்டு மரியாதை கொடுக்க தோணும். உங்களை பார்த்தா எனக்கு கை அடி கொடுக்க தான் பரபரக்குது, அதுக்கு நான் என்ன செய்றது?” என்று வெளுத்து வாங்கினாள் ஈஸ்வரி.
அவள் எங்கே அடித்து விடுவாளோ, என்று சற்று பயத்துடன் ஈஸ்வரனின் அன்னை பார்த்து இருக்க, அவனோ மனைவியின் பேச்சிலும், செய்கையிலும் மயங்கி கொண்டு இருந்தான்.
“அடியே! கை பரபரக்குதோ, அந்த கையை உடைச்சு உடப்பில் போடுறேன்” என்று அவளின் கையை பிடித்த அவனின் அத்தை கங்காவதி, அடுத்து தரையில் விழுந்து கிடந்தார்.
என்ன நடந்தது என்று எல்லோரும் முழித்துக் கொண்டு இருந்தனர், கண் சிமிட்டும் நேரத்தில் அவள் அவரை கீழே விழ வைத்து இருந்தாள்.
“அடிப்பாவி! கண் சிமிட்டுற நேரத்தில், நான் உஷாரகிறதுக்கு முன்னாடி இப்படி பண்ணிட்டியே” என்று பார்வையில் கண்டிப்பு காட்டினான் மனைவியிடம் ஈஸ்வர்.
கீழே விழுந்த தன் அத்தைக்கு கை கொடுத்து தூக்கி நிறுத்தினான், அவரின் புதல்வர்களின் உதவியுடன். பின் தன் அத்தையிடம், பேசிக் கொண்டு இருக்கும் பொழுதே, இப்படி கை நீட்டி இருக்க வேண்டாம் என்று கூறினான்.
“ஆமாம் பா! இப்போ கல்யாணமான புதுசுல உனக்கு, இப்போ இப்படி தான் அவளுக்கு சாதகமா பேசுவ. சரி, சரி இப்போ என் தம்பி சாப்பிட வந்திடுவான், சாப்பாடு எடுத்து வைக்க சொல்லு” என்று கூறிவிட்டு மற்றவர்களையும் அழைத்துக் கொண்டு, நடுகூடத்திற்க்கு சென்றார்.
“ஏய்! இப்படித்தான் அவங்களை கீழே தள்ளி விடுவியா? கொஞ்சமாச்சும் பெரியவங்க அப்படின்னு மரியாதை வேண்டாம், ஏன் இப்படி செய்ற?” என்று அவளிடம் சிடுசிடுத்தான்.
“ஆமா! எனக்கு வேண்டுதல் பாருங்க. முதல அத்தையை இந்த வீட்டு வேலைக்காரியை விட மோசமா நடத்திகிட்டு இருக்காங்க, இன்னைக்கு சீக்கிரம் முழிப்பு வரவும், குளிச்சிட்டு கீழே இறங்கி வந்தேன்”.
“காலையில் நாலு மணியில் இருந்து சமையற்கட்டில் தான் இருக்காங்க, என்ன அத்தை இவ்வளவு சீக்கிரம் அப்படின்னு கேட்டா, ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மெனு சொல்லி செய்ய சொல்லிடுவாங்கலாம்”.
“அவங்க அத்தையை, இந்த வீட்டு வேலைக்காரி அப்படின்னு நினைச்சிட்டாங்களா? மெனு சொல்லுறது சரி, கூட மாட ஒத்தாசை செய்யலாம் தானே, அதுவும் செய்யாம, குறையும் சொல்லிட்டு, நாட்டாமை பண்ணா, எந்த ஒரு மனுஷிக்கும் கோபம் வரத்தான் செய்யும்”.
“ஆனா! இங்க என் அத்தை தெய்வம், இத்தனை ஏச்சு, பேச்சுக்கும் பொறுமையாய் அவங்க இருந்ததே, உங்களுக்காக தான். ஆனா நீங்க என்னடானா, என் அப்பா கூட சண்டை அதனால வீட்டுக்கு சாப்பிட, தூங்க தான் வருவேன்னு சின்ன பிள்ளை மாதிரி, இன்னும் முகத்தை தூக்கிட்டு இருக்கீங்க”.
“வெளியே தான் பெத்த பேரு போலீஸ்ன்னு, வீட்டுல இன்னும் சின்ன பாப்பா மாதிரி சண்டை போட்டுக்கிட்டு இருக்க வேண்டியது” என்று அவனையும் விடாமல் வாங்கி விட்டாள் ஈஸ்வரி.
தன் தவறை உணர்ந்ததாலோ, என்னவோ அவள் பேசியதற்கு ஏதும் எதிர்மறை காட்டாமல், தனக்கு வேண்டியது தான் என்று வசவு வாங்கிக் கொண்டான்.
மறுநாள் காலையில் எழுந்தவன், அருகில் மனைவியை காணாமல் அவளை தேடினான் அறைக்குள். அங்கே அவள் இருப்பதற்கான அறிகுறி தெரியாததால், மணி என்னவென்று பார்த்தான். அது மணி காலை ஏழு என்று காட்டவும், இவ்வளவு நேரமா உறங்கினோம் என்று தன்னையே கடிந்து கொண்டு, குளிக்க சென்றான்.
குளித்துவிட்டு உடை மாற்றிக் கொண்டு இருந்தவன் காதுகளில், கீழே கேட்ட சத்தத்தில் அடித்து பிடித்து ஓடி வந்தான்.
அங்கே அவனின் தாயை பாதுகாத்துக் கொண்டு இருப்பது போல் நின்ற அவனின் மனைவி தான், முதலில் அவன் கண்களுக்கு தெரிந்தான். அங்கே அவனின் சித்தி, அத்தை அவர்களின் புதல்வர்கள் என்று வரிசையாக நின்று இருந்தனர்.
“என்னது இது? எதுக்காக எல்லோரும் காலையிலே இப்படி ரவுண்டு கட்டி நிக்குறாங்க? என்ன பிரச்சனை இப்போ?” என்று தெரியாமல், அங்கே யாரும் அறியாமல் ஒரு ஓரமாக நின்று என்ன நடக்கிறது என்று கவனிக்க தொடங்கினான்.
“பார்த்தீங்களா அண்ணி, உங்க தம்பி பொண்டாட்டி மருமகளை கூட்டிட்டு வந்த மிதப்பில் நமக்கு செய்றதை எல்லாம் மறந்துட்டாங்க” என்று அவன் சித்தி கூற அவன் அத்தை அதற்கு, அவனின் தாயை முறைத்துக் கொண்டு நின்று இருந்தார்.
“ஹலோ! என்ன முறைப்பு வேண்டி இருக்கு? இவங்க என் அத்தை, இந்த வீட்டு மகாராணி, ஒழுங்கா அவங்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்தா, உங்களுக்கு இந்த வீட்டில் இடம் இருக்கும், இல்லைனா ஒரேடியா வீட்டை விட்டு விரட்டி விட்டுடுவேன் பார்த்துக்கோங்க” என்று அவன் மனைவி ஈஸ்வரி போட்ட போடில்
அவனுக்கு அப்பொழுது தான், லேசாக விஷயம் புரிய ஆரம்பித்து இருந்தது.
“நேத்து முளைச்ச காளான் எல்லாம், இன்னைக்கு என்னை வந்து கேள்வி கேட்குது. அடியே இந்த வீட்டு மகாராணி எப்போவும் நான் தான், நான் வைக்கிறது தான் இங்க சட்டம். என் தம்பியே என் பேச்சை தான் கேட்பான், நீ இன்னைக்கு வந்து நாட்டாமை பண்ண நினைகிறியா?”.
“ஒழுங்கா நான் சொல்லுறதை கேட்டு நடந்தா, நீ இங்க இருக்கலாம், இல்லை உன்னை நான் வாழாவெட்டியா உங்க வீட்டுக்கு துரத்தி விட்டுடுவேன் பார்த்துக்க” என்று மிரட்டினார் அவனின் அத்தை கங்காவதி.
“ஹச்சோ! நான் பயந்துட்டேன்! சும்மா காமெடி பண்ணாம ஓரமா போய் உட்காருங்க, ஒசி சாப்பாடு இன்னைக்கு மட்டும் தான் கிடைக்கும், நாளையில் இருந்து வெளியே போய் உழைச்சு சாப்பிடனும், போய் வெளியே உட்காருங்க ஓடுங்க” என்று அவரை விரட்டிக் கொண்டு இருந்தாள் ஈஸ்வரி.
“ஏய்! யாரை வெளியே விரட்டிகிட்டு இருக்க? அவங்க என் அத்தை, அவங்க கிட்ட இப்படி தான் மரியாதை இல்லாம பேசுவியா?” என்று மிரட்டினான் ஈஸ்வர்.
அவனின் அந்த மிரட்டலில், முதலில் அவள் புருவத்தை சுருக்கினாள். அதன் பின் அவனின் நிமிட நேர கண் சிமிட்டலில், அவனின் சம்மதம் கிடைத்த குஷியில் புகுந்து விளையாட முடிவு எடுத்துவிட்டாள்.
“மரியாதை கொடுத்தா மட்டும் தான், நான் ஒழுங்கா பேசுவேன். இங்க எங்க அத்தைக்கே மரியாதை இல்லையாம், எனக்கு மரியாதை கிடைச்சிடுமா என்ன? அதுவும் தி கிரேட் அசிஸ்டென்ட் கமிஷனர் ஆப் போலீஸ் கிரைம் பிரன்ஞ் ஆபிசர் ஈஸ்வர் பொண்டாட்டிக்கு, வீட்டுக்குள்ளேயே மரியாதை இல்லைனா, வெளியே எப்படிப்பா மரியாதை கிடைக்கும்” என்று அவனையே திருப்பி கேட்டவளின் திறமையை மெச்சிக் கொண்டான் அவளின் மணாளன்.
“இப்போ என்ன மரியாதை தரல, என் அத்தை உனக்கு? சொல்லு நான் கேட்கிறேன்” என்று கூறி அங்கேயே தோரணையாக ஒரு இருக்கையில் அமர்ந்து விட்டான் ஈஸ்வர்.
அவன் அமர்ந்த தோரணையில், அங்கு ஆட்டம் கண்டது என்னவோ அவனின் அத்தையின் புதல்வர்களும், சித்தியின் புதல்வர்களும் தான். அவனின் அத்தையும், சித்தியும் தைரியமாக தான் இருந்தார்கள்.
“நல்லா கேளு பா, உன் பொண்டாட்டி என்னமோ புதுசா மரியாதை பத்தி எல்லாம் பேசுறா, யார் சொல்லி இவ இப்படி பேசுறாளோ?” என்று கண்கள் அவனின் தாயை நோக்கி தான் வஞ்சித்துக் கொண்டு இருந்தது.
எல்லாவற்றையும் பார்த்தவனுக்கு, மனம் கனத்து போனது. வீட்டிற்கு வராமல், இங்கு நடப்பதை கவனிக்காமல் என்ன செய்து கொண்டு இருந்து இருக்கிறோம் என்று எண்ணி, மனம் உடைந்தான்.
“யாரும் சொல்லி தான் எனக்கு தெரியனும் இல்லை, சில பேரை பார்த்தா தன்னாலே கை எடுத்து கும்பிட்டு மரியாதை கொடுக்க தோணும். உங்களை பார்த்தா எனக்கு கை அடி கொடுக்க தான் பரபரக்குது, அதுக்கு நான் என்ன செய்றது?” என்று வெளுத்து வாங்கினாள் ஈஸ்வரி.
அவள் எங்கே அடித்து விடுவாளோ, என்று சற்று பயத்துடன் ஈஸ்வரனின் அன்னை பார்த்து இருக்க, அவனோ மனைவியின் பேச்சிலும், செய்கையிலும் மயங்கி கொண்டு இருந்தான்.
“அடியே! கை பரபரக்குதோ, அந்த கையை உடைச்சு உடப்பில் போடுறேன்” என்று அவளின் கையை பிடித்த அவனின் அத்தை கங்காவதி, அடுத்து தரையில் விழுந்து கிடந்தார்.
என்ன நடந்தது என்று எல்லோரும் முழித்துக் கொண்டு இருந்தனர், கண் சிமிட்டும் நேரத்தில் அவள் அவரை கீழே விழ வைத்து இருந்தாள்.
“அடிப்பாவி! கண் சிமிட்டுற நேரத்தில், நான் உஷாரகிறதுக்கு முன்னாடி இப்படி பண்ணிட்டியே” என்று பார்வையில் கண்டிப்பு காட்டினான் மனைவியிடம் ஈஸ்வர்.
கீழே விழுந்த தன் அத்தைக்கு கை கொடுத்து தூக்கி நிறுத்தினான், அவரின் புதல்வர்களின் உதவியுடன். பின் தன் அத்தையிடம், பேசிக் கொண்டு இருக்கும் பொழுதே, இப்படி கை நீட்டி இருக்க வேண்டாம் என்று கூறினான்.
“ஆமாம் பா! இப்போ கல்யாணமான புதுசுல உனக்கு, இப்போ இப்படி தான் அவளுக்கு சாதகமா பேசுவ. சரி, சரி இப்போ என் தம்பி சாப்பிட வந்திடுவான், சாப்பாடு எடுத்து வைக்க சொல்லு” என்று கூறிவிட்டு மற்றவர்களையும் அழைத்துக் கொண்டு, நடுகூடத்திற்க்கு சென்றார்.
“ஏய்! இப்படித்தான் அவங்களை கீழே தள்ளி விடுவியா? கொஞ்சமாச்சும் பெரியவங்க அப்படின்னு மரியாதை வேண்டாம், ஏன் இப்படி செய்ற?” என்று அவளிடம் சிடுசிடுத்தான்.
“ஆமா! எனக்கு வேண்டுதல் பாருங்க. முதல அத்தையை இந்த வீட்டு வேலைக்காரியை விட மோசமா நடத்திகிட்டு இருக்காங்க, இன்னைக்கு சீக்கிரம் முழிப்பு வரவும், குளிச்சிட்டு கீழே இறங்கி வந்தேன்”.
“காலையில் நாலு மணியில் இருந்து சமையற்கட்டில் தான் இருக்காங்க, என்ன அத்தை இவ்வளவு சீக்கிரம் அப்படின்னு கேட்டா, ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மெனு சொல்லி செய்ய சொல்லிடுவாங்கலாம்”.
“அவங்க அத்தையை, இந்த வீட்டு வேலைக்காரி அப்படின்னு நினைச்சிட்டாங்களா? மெனு சொல்லுறது சரி, கூட மாட ஒத்தாசை செய்யலாம் தானே, அதுவும் செய்யாம, குறையும் சொல்லிட்டு, நாட்டாமை பண்ணா, எந்த ஒரு மனுஷிக்கும் கோபம் வரத்தான் செய்யும்”.
“ஆனா! இங்க என் அத்தை தெய்வம், இத்தனை ஏச்சு, பேச்சுக்கும் பொறுமையாய் அவங்க இருந்ததே, உங்களுக்காக தான். ஆனா நீங்க என்னடானா, என் அப்பா கூட சண்டை அதனால வீட்டுக்கு சாப்பிட, தூங்க தான் வருவேன்னு சின்ன பிள்ளை மாதிரி, இன்னும் முகத்தை தூக்கிட்டு இருக்கீங்க”.
“வெளியே தான் பெத்த பேரு போலீஸ்ன்னு, வீட்டுல இன்னும் சின்ன பாப்பா மாதிரி சண்டை போட்டுக்கிட்டு இருக்க வேண்டியது” என்று அவனையும் விடாமல் வாங்கி விட்டாள் ஈஸ்வரி.
தன் தவறை உணர்ந்ததாலோ, என்னவோ அவள் பேசியதற்கு ஏதும் எதிர்மறை காட்டாமல், தனக்கு வேண்டியது தான் என்று வசவு வாங்கிக் கொண்டான்.