Hii friends,
How are u all?Thanks for your likes and comments..
Please do read and share your comments.
சிநேகா சென்றவுடன் ரூமிற்கு வந்த அனன்யாவிற்கு தன் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.வந்து தன் கட்டிலில் படுத்தவள் அழுது கொண்டே இருந்தாள்.எப்பொழுதும் அவளுடன் சுகமாக தூங்கும் நினைவுகள் அவளை வந்து தாக்கின.
இவ்வளவு நாட்கள் பாசத்திற்காக ஏங்கிய அனன்யாவிற்கு சிநேகாவின் நட்பு பாலைவனத்தில் கிடைத்த நிழல் போல் இருந்தது.ஆனால் அதையும் இவ்வளவு சீக்கிரம் இழந்து விட அவள் மனம் சொல்லேன துயரம் கொண்டது.
தன்னை நினைத்தே அவள் மனம் தாழ்ப்புணர்ச்சி கொண்டது.’ஒரு வேளை சித்தி சொன்னது போல் நான் ராசி கெட்டவளோ?.அதனால் தான் தன்னிடம் பாசமாக இருப்பவர்கள் எல்லாம் தன்னை விட்டு சென்று விடுகின்றனரோ?’ என்று மனம் நினைக்க ஆரம்பித்தது.அவள் மனம் ஒரு விரக்தியான நிலையில் இருந்தது.
சின்ன வயதில் இருந்த பாசத்திற்கான நல்ல நட்பிற்கான ஏக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இருந்தது சிநேகாவின் நட்பு.ஆனால் அவள் பிரிந்து சென்றது அவள் ஏக்கத்தை மேலும் அதிகரித்து விட்டது.மிட்டாய்க்காக ஏங்கிக்கொண்டிருக்கும் குழந்தைக்கு மிட்டாயை கையில் கொடுத்து அதை சுவைக்க விடாமல் பிடிங்கியது போலானது அவள் நிலைமை.
அனன்யாவிற்கு இப்பொழுது தன் அம்மாவின் நினைவு வந்துவிட்டது ‘ஏன் ம்மா..என்ன விட்டுட்டு போனிங்க?என்னையும் உங்க கூடவே கூட்டிட்டு போயிருக்கலாம்ல?என்ன இப்படி தனியா தவிக்க விட்டுட்டு போயிட்டிங்களே?’ என்று மனசுக்குள் மருகியவள் அப்படியே கண் அயர்ந்தாள்.
அடுத்த நாள் காலை அறைத் தோழிகள் இருவரும் பேசிக் கொண்டிருந்த சத்தம் கேட்டு எழுந்தவள் மணியைப் பார்க்க அது எட்டரை என்று காட்டியது.இங்கே இருந்தால் சிநேகாவைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்போம் என்று எண்ணியவள் கல்லூரிக்கு கிளம்ப ஆயத்தமானாள்.
ஒன்பது மணிக்கு கல்லூரி அதனால் அரக்கப் பரக்கக் கிளம்பியவள் கல்லூரிக்குச் சென்றாள்.பதினோரு வகுப்பு வரை உட்கார்ந்திருந்தவள் அதற்கு மேல் உட்கார முடியாமல் வெளியே வந்தாள்.
நேற்று மதியம் சாப்பிட்டது.இரவு சிநேகா இல்லாத சோகத்தில் சாப்பிடவில்லை.காலையில் அவசரமாக கிளம்பியதால் காலை உணவையும் உட்கொள்ளவில்லை.பசி வயிற்றைக் கிள்ளியது.
கால்கள் எல்லாம் நடக்க முடியாமல் தள்ளாடியது.எப்படியாவது மெதுவாக சென்று மெஸ்ஸில் சாப்பிட்டு விடலாம் என்று நினைத்தவள் நடந்து போய்க் கொண்டிருந்தாள். மயங்கி விடாமல் சென்று விடவேண்டும் என்று கடவுளிடம் வேண்டியவள் கம்பியைப் பிடித்து நடந்து போனாள்.
ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அவளால் நடக்க முடியவில்லை.சூரியன் வேறு அன்று அளவுக்கு அதிகமாக சுட்டெரித்தது.அவளுக்கு அப்படியே கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது.
அங்கிருந்த மரபெஞ்சில் அமர்ந்தவள் அப்படியே கண்ணை மூடிக் கொண்டாள்.பசியைத் தாங்க முடியவில்லை.அப்பொழுது அவள் அருகில் வந்தவன் “ஏய் அனு...என்ன ஆச்சு?” என்று கேட்க அவளால் பதில் பேச முடியவில்லை.அவளிடம் ’இனி மயங்கினாலும் பரவாயில்லை..அவன் பார்த்துக் கொள்வான்’ என்ற நம்பிக்கை இருந்தது.
அவளிடம் இருந்து பதில் வராமல் போகவே அவள் கன்னத்தை “அனு அனு” என்று தட்ட அவளின் கண்கள் திறந்தவுடன் மூடிக்கொண்டன.அவன் பையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவள் முகத்தில் தெளித்தான்.அவளிடம் சிறு அசைவு ஏற்படவே அவளுக்கு மெதுவாக தண்ணீர் புகட்டினான்.
தண்ணீர் கொடுத்த புத்துணர்ச்சியில் அவள் மெதுவாக கண்ணைத் திறந்தாள்.”அனு என்ன ஆச்சு?” என்று பதட்டமாக கேட்வனைப் பார்த்து ஒரு சின்ன புன்னகையை உதிர்த்தவள் “ஒன்னும் இல்லை..சாப்பிட்டா சரி ஆயிரும்” என்றாள்.
“காலைல என்ன சாப்பிட்ட?” என்று கேட்க அவளுக்கு எப்பொழுதும் இக்கேள்வியால் மனதில் தோன்றும் உற்சாகம் இன்றும் தோன்றிற்று. இல்லை என்பது போல் தலையசைத்தவளைப் பார்த்து முறைத்தவன் தன் பையில் இருந்த சாப்பாட்டை எடுத்து அவளுக்கு கொடுத்தான்.
அதை வாங்கத் தயங்கியவள் அவன் முகம் பார்க்க “ஒழுங்கு மரியாதையா சாப்பிடற..” என்று அவள் கையில் சாப்பாட்டைத் தினித்தான்.அவளால் அதற்கு மேல் மறுக்கவும் முடியவில்லை.மேலும் மெஸ்ஸிற்கு சென்று சாப்பிடும் அளவிற்கு அவள் உடம்பில் தெம்பும் இல்லை.
அதை அவ்வளவு வேகமாக உண்டவளைப் பார்க்கும் பொழுது தான் அவனுக்கு அவள் பசி புரிந்தது.’எப்பவும் ரொம்ப மெதுவா தான சாப்பிடுவா..’ என்று மனதில் நினைத்தவன் அவள் சாப்பிடும் வரை அமைதி காத்தான்.
அவள் சாப்பிட்டு முடித்தவுடன் “கடைசியா எப்ப சாப்பிட்ட?” என்று கேட்க “நேத்து மதியம்” என்று தயங்கித் தயங்கி சொன்னாள்.அவளை அவன் நன்றாக முறைக்க வேறு வழி இல்லாமல் நேற்று நடந்தது முழுவதையும் அவனிடம் சொல்லிவிட்டாள்.
சிநேகாவைப் பற்றி சொல்லும்பொழுது அவள் கண்கள் கலங்குவதையும் அவள் முயன்று தன்னைக் கட்டுப் படுத்துவதையும் பார்த்தவன் “ச்சு..என்ன அனன்யா இது..சின்ன பொண்ணு மாதிரி..தினமும் அவள் கூட போன்ல பேசு..இதுக்கு எல்லாம் பீல் பண்ணுவியா?முதல்ல கண்ணைத் தொட...” என்று அவளை சமாதானப்படுத்தினான்.
அவள் முகம் இன்னும் தெளியாததைப் பார்த்தவன் “மதியம் ஏதாச்சும் முக்கியமான கிளாஸ் இருக்கா?” என்று கேட்க அவள் மறுப்பாய் தலையசைத்தாள்.”சரி அப்ப நாம ஒரு இடத்துக்கு போகலாம்..” என்றவன் எழுந்தான்.
அவளும் அவனுடன் சென்றாள்.சிறிது நேரம் மெளனமாய் கழிய அவன் தான் அதை உடைத்தான்.”இது மாறி யாரு கூப்பிட்டாலும் என்ன ஏதுனு கேட்காம உடனே வர கூடாது சரியா?” என்று சொல்ல அப்பொழுது தான் அவளுக்குப் தான் செய்த தவறு புரிந்தது.
‘எப்படி இவங்க கூப்பிட்ட உடனே என்னனு கூட கேட்காம வந்தோம்’ என்று மனதிற்குள் நினைத்தவள் அவனிடம் ‘ம்ம்..’ என்று தலையாட்டினாள்.அவளின் முகபாவத்தைப் பார்த்துச் சிரித்தவன் “இப்ப நான் உன்ன ஏதாச்சும் பண்ணிட்டா என்ன பண்ணுவ?” என்று கேட்க அவள் முகத்தில் மெல்லிய புன்னகைக் கீற்று.
“ஏய் நான் இவ்வளவு சீரியசா பேசிட்டு இருக்க..நீ சிரிக்கிற..?” என்றவன் கேட்க “நீங்க அப்படி எல்லாம் பண்ண மாட்டிங்கனு எனக்கு தெரியும்..” என்று அவன் கண்ணைப் பார்த்து உறுதியாகக் கூறினாள்.
“எப்படி இவ்வளவு உறுதியா சொல்லற?” என்றவன் கேட்க “குரைக்குற நாய் கடிக்காது” என்று சொல்லி தன் நாக்கை கடித்தவள் அவன் முகத்தைப் பார்த்தாள்.அவன் முகத்தில் எவ்வித பாவனையும் காட்டாமல் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவள் “நான் தப்பான அர்த்தத்துல சொல்லல..என் மனசு நீங்க அப்படி பண்ண மாட்டிங்கனு சொல்லுது” என்றவள் சொல்ல “என் மேல அவ்வளவு நம்பிக்கையா?” என்றவன் புருவத்தை உயர்த்திக் கேட்டான்.
“ஆமா” என்றவள் உடனடியாக பதில் சொல்ல வியந்தவன் “இவ்வளவு நம்பிக்கை வைக்குற அளவுக்கு என்னை தெரியுமா என்ன?” என்று கேட்டான்.”உங்கள பத்தி எதுவும் தெரியாது..ஆனால் நீங்க நல்லவங்கனு மட்டும் தெரியும்” என்றாள்.
“என்னை பத்தி எதுவும் தெரியாம நான் நல்லவன்னு மட்டும் எப்படி தெரியும்?” என்றவன் விடாமல் கேட்க அவளுக்கு என்ன பதில் சொல்லவதென்று தெரியவில்லை.அவள் திரு திருவென்று முழிக்க சிரித்தவன் “வா..” என்று அவளை அழைத்துச் சென்றான்.
அந்த இடத்தில் ஆள் நடமாட்டம் சற்று குறைவாக இருந்தது.அங்கு அவளை ஒரு பெரிய மரத்திற்கு அருகில் அழைத்துச் சென்றவன் அங்கிருந்த நாய்க்குட்டிகளை அவளுக்கு காட்டினான்..அங்கே மூன்று நாய் குட்டிகள் விளையாடிக்கொண்டுருந்தன.
அவற்றைப் பார்த்ததும் சந்தோஷத்தில் அந்த மரத்தின் கீழ் அமர்ந்தவள் அவற்றை தன் மடியில் வைத்து விளையாட ஆரம்பித்து விட்டாள்.அவள் உட்காரும்பொழுது “இது ரோடு” என்று சொல்லவந்தவன் அவள் முகத்தில் இருந்த சந்தோசத்தைப் பார்த்து அதை சொல்லாமல் விட்டுவிட்டான்.
சாம்பல் நிறத்தில் ஒரு குட்டியும் வெள்ளை நிறத்தில் இரண்டு குட்டிகளும் இருந்தன.அவற்றைக் கொஞ்சிக் கொண்டிருந்தவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்!
How are u all?Thanks for your likes and comments..
Please do read and share your comments.
சிநேகா சென்றவுடன் ரூமிற்கு வந்த அனன்யாவிற்கு தன் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.வந்து தன் கட்டிலில் படுத்தவள் அழுது கொண்டே இருந்தாள்.எப்பொழுதும் அவளுடன் சுகமாக தூங்கும் நினைவுகள் அவளை வந்து தாக்கின.
இவ்வளவு நாட்கள் பாசத்திற்காக ஏங்கிய அனன்யாவிற்கு சிநேகாவின் நட்பு பாலைவனத்தில் கிடைத்த நிழல் போல் இருந்தது.ஆனால் அதையும் இவ்வளவு சீக்கிரம் இழந்து விட அவள் மனம் சொல்லேன துயரம் கொண்டது.
தன்னை நினைத்தே அவள் மனம் தாழ்ப்புணர்ச்சி கொண்டது.’ஒரு வேளை சித்தி சொன்னது போல் நான் ராசி கெட்டவளோ?.அதனால் தான் தன்னிடம் பாசமாக இருப்பவர்கள் எல்லாம் தன்னை விட்டு சென்று விடுகின்றனரோ?’ என்று மனம் நினைக்க ஆரம்பித்தது.அவள் மனம் ஒரு விரக்தியான நிலையில் இருந்தது.
சின்ன வயதில் இருந்த பாசத்திற்கான நல்ல நட்பிற்கான ஏக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இருந்தது சிநேகாவின் நட்பு.ஆனால் அவள் பிரிந்து சென்றது அவள் ஏக்கத்தை மேலும் அதிகரித்து விட்டது.மிட்டாய்க்காக ஏங்கிக்கொண்டிருக்கும் குழந்தைக்கு மிட்டாயை கையில் கொடுத்து அதை சுவைக்க விடாமல் பிடிங்கியது போலானது அவள் நிலைமை.
அனன்யாவிற்கு இப்பொழுது தன் அம்மாவின் நினைவு வந்துவிட்டது ‘ஏன் ம்மா..என்ன விட்டுட்டு போனிங்க?என்னையும் உங்க கூடவே கூட்டிட்டு போயிருக்கலாம்ல?என்ன இப்படி தனியா தவிக்க விட்டுட்டு போயிட்டிங்களே?’ என்று மனசுக்குள் மருகியவள் அப்படியே கண் அயர்ந்தாள்.
அடுத்த நாள் காலை அறைத் தோழிகள் இருவரும் பேசிக் கொண்டிருந்த சத்தம் கேட்டு எழுந்தவள் மணியைப் பார்க்க அது எட்டரை என்று காட்டியது.இங்கே இருந்தால் சிநேகாவைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்போம் என்று எண்ணியவள் கல்லூரிக்கு கிளம்ப ஆயத்தமானாள்.
ஒன்பது மணிக்கு கல்லூரி அதனால் அரக்கப் பரக்கக் கிளம்பியவள் கல்லூரிக்குச் சென்றாள்.பதினோரு வகுப்பு வரை உட்கார்ந்திருந்தவள் அதற்கு மேல் உட்கார முடியாமல் வெளியே வந்தாள்.
நேற்று மதியம் சாப்பிட்டது.இரவு சிநேகா இல்லாத சோகத்தில் சாப்பிடவில்லை.காலையில் அவசரமாக கிளம்பியதால் காலை உணவையும் உட்கொள்ளவில்லை.பசி வயிற்றைக் கிள்ளியது.
கால்கள் எல்லாம் நடக்க முடியாமல் தள்ளாடியது.எப்படியாவது மெதுவாக சென்று மெஸ்ஸில் சாப்பிட்டு விடலாம் என்று நினைத்தவள் நடந்து போய்க் கொண்டிருந்தாள். மயங்கி விடாமல் சென்று விடவேண்டும் என்று கடவுளிடம் வேண்டியவள் கம்பியைப் பிடித்து நடந்து போனாள்.
ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அவளால் நடக்க முடியவில்லை.சூரியன் வேறு அன்று அளவுக்கு அதிகமாக சுட்டெரித்தது.அவளுக்கு அப்படியே கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது.
அங்கிருந்த மரபெஞ்சில் அமர்ந்தவள் அப்படியே கண்ணை மூடிக் கொண்டாள்.பசியைத் தாங்க முடியவில்லை.அப்பொழுது அவள் அருகில் வந்தவன் “ஏய் அனு...என்ன ஆச்சு?” என்று கேட்க அவளால் பதில் பேச முடியவில்லை.அவளிடம் ’இனி மயங்கினாலும் பரவாயில்லை..அவன் பார்த்துக் கொள்வான்’ என்ற நம்பிக்கை இருந்தது.
அவளிடம் இருந்து பதில் வராமல் போகவே அவள் கன்னத்தை “அனு அனு” என்று தட்ட அவளின் கண்கள் திறந்தவுடன் மூடிக்கொண்டன.அவன் பையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவள் முகத்தில் தெளித்தான்.அவளிடம் சிறு அசைவு ஏற்படவே அவளுக்கு மெதுவாக தண்ணீர் புகட்டினான்.
தண்ணீர் கொடுத்த புத்துணர்ச்சியில் அவள் மெதுவாக கண்ணைத் திறந்தாள்.”அனு என்ன ஆச்சு?” என்று பதட்டமாக கேட்வனைப் பார்த்து ஒரு சின்ன புன்னகையை உதிர்த்தவள் “ஒன்னும் இல்லை..சாப்பிட்டா சரி ஆயிரும்” என்றாள்.
“காலைல என்ன சாப்பிட்ட?” என்று கேட்க அவளுக்கு எப்பொழுதும் இக்கேள்வியால் மனதில் தோன்றும் உற்சாகம் இன்றும் தோன்றிற்று. இல்லை என்பது போல் தலையசைத்தவளைப் பார்த்து முறைத்தவன் தன் பையில் இருந்த சாப்பாட்டை எடுத்து அவளுக்கு கொடுத்தான்.
அதை வாங்கத் தயங்கியவள் அவன் முகம் பார்க்க “ஒழுங்கு மரியாதையா சாப்பிடற..” என்று அவள் கையில் சாப்பாட்டைத் தினித்தான்.அவளால் அதற்கு மேல் மறுக்கவும் முடியவில்லை.மேலும் மெஸ்ஸிற்கு சென்று சாப்பிடும் அளவிற்கு அவள் உடம்பில் தெம்பும் இல்லை.
அதை அவ்வளவு வேகமாக உண்டவளைப் பார்க்கும் பொழுது தான் அவனுக்கு அவள் பசி புரிந்தது.’எப்பவும் ரொம்ப மெதுவா தான சாப்பிடுவா..’ என்று மனதில் நினைத்தவன் அவள் சாப்பிடும் வரை அமைதி காத்தான்.
அவள் சாப்பிட்டு முடித்தவுடன் “கடைசியா எப்ப சாப்பிட்ட?” என்று கேட்க “நேத்து மதியம்” என்று தயங்கித் தயங்கி சொன்னாள்.அவளை அவன் நன்றாக முறைக்க வேறு வழி இல்லாமல் நேற்று நடந்தது முழுவதையும் அவனிடம் சொல்லிவிட்டாள்.
சிநேகாவைப் பற்றி சொல்லும்பொழுது அவள் கண்கள் கலங்குவதையும் அவள் முயன்று தன்னைக் கட்டுப் படுத்துவதையும் பார்த்தவன் “ச்சு..என்ன அனன்யா இது..சின்ன பொண்ணு மாதிரி..தினமும் அவள் கூட போன்ல பேசு..இதுக்கு எல்லாம் பீல் பண்ணுவியா?முதல்ல கண்ணைத் தொட...” என்று அவளை சமாதானப்படுத்தினான்.
அவள் முகம் இன்னும் தெளியாததைப் பார்த்தவன் “மதியம் ஏதாச்சும் முக்கியமான கிளாஸ் இருக்கா?” என்று கேட்க அவள் மறுப்பாய் தலையசைத்தாள்.”சரி அப்ப நாம ஒரு இடத்துக்கு போகலாம்..” என்றவன் எழுந்தான்.
அவளும் அவனுடன் சென்றாள்.சிறிது நேரம் மெளனமாய் கழிய அவன் தான் அதை உடைத்தான்.”இது மாறி யாரு கூப்பிட்டாலும் என்ன ஏதுனு கேட்காம உடனே வர கூடாது சரியா?” என்று சொல்ல அப்பொழுது தான் அவளுக்குப் தான் செய்த தவறு புரிந்தது.
‘எப்படி இவங்க கூப்பிட்ட உடனே என்னனு கூட கேட்காம வந்தோம்’ என்று மனதிற்குள் நினைத்தவள் அவனிடம் ‘ம்ம்..’ என்று தலையாட்டினாள்.அவளின் முகபாவத்தைப் பார்த்துச் சிரித்தவன் “இப்ப நான் உன்ன ஏதாச்சும் பண்ணிட்டா என்ன பண்ணுவ?” என்று கேட்க அவள் முகத்தில் மெல்லிய புன்னகைக் கீற்று.
“ஏய் நான் இவ்வளவு சீரியசா பேசிட்டு இருக்க..நீ சிரிக்கிற..?” என்றவன் கேட்க “நீங்க அப்படி எல்லாம் பண்ண மாட்டிங்கனு எனக்கு தெரியும்..” என்று அவன் கண்ணைப் பார்த்து உறுதியாகக் கூறினாள்.
“எப்படி இவ்வளவு உறுதியா சொல்லற?” என்றவன் கேட்க “குரைக்குற நாய் கடிக்காது” என்று சொல்லி தன் நாக்கை கடித்தவள் அவன் முகத்தைப் பார்த்தாள்.அவன் முகத்தில் எவ்வித பாவனையும் காட்டாமல் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவள் “நான் தப்பான அர்த்தத்துல சொல்லல..என் மனசு நீங்க அப்படி பண்ண மாட்டிங்கனு சொல்லுது” என்றவள் சொல்ல “என் மேல அவ்வளவு நம்பிக்கையா?” என்றவன் புருவத்தை உயர்த்திக் கேட்டான்.
“ஆமா” என்றவள் உடனடியாக பதில் சொல்ல வியந்தவன் “இவ்வளவு நம்பிக்கை வைக்குற அளவுக்கு என்னை தெரியுமா என்ன?” என்று கேட்டான்.”உங்கள பத்தி எதுவும் தெரியாது..ஆனால் நீங்க நல்லவங்கனு மட்டும் தெரியும்” என்றாள்.
“என்னை பத்தி எதுவும் தெரியாம நான் நல்லவன்னு மட்டும் எப்படி தெரியும்?” என்றவன் விடாமல் கேட்க அவளுக்கு என்ன பதில் சொல்லவதென்று தெரியவில்லை.அவள் திரு திருவென்று முழிக்க சிரித்தவன் “வா..” என்று அவளை அழைத்துச் சென்றான்.
அந்த இடத்தில் ஆள் நடமாட்டம் சற்று குறைவாக இருந்தது.அங்கு அவளை ஒரு பெரிய மரத்திற்கு அருகில் அழைத்துச் சென்றவன் அங்கிருந்த நாய்க்குட்டிகளை அவளுக்கு காட்டினான்..அங்கே மூன்று நாய் குட்டிகள் விளையாடிக்கொண்டுருந்தன.
அவற்றைப் பார்த்ததும் சந்தோஷத்தில் அந்த மரத்தின் கீழ் அமர்ந்தவள் அவற்றை தன் மடியில் வைத்து விளையாட ஆரம்பித்து விட்டாள்.அவள் உட்காரும்பொழுது “இது ரோடு” என்று சொல்லவந்தவன் அவள் முகத்தில் இருந்த சந்தோசத்தைப் பார்த்து அதை சொல்லாமல் விட்டுவிட்டான்.
சாம்பல் நிறத்தில் ஒரு குட்டியும் வெள்ளை நிறத்தில் இரண்டு குட்டிகளும் இருந்தன.அவற்றைக் கொஞ்சிக் கொண்டிருந்தவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்!