snehasree
SM Exclusive
மணமக்களுக்கு கல்யாணம், நிச்சயதார்த்தம் இரண்டிற்கும் துணி எடுக்க இரு வீட்டாரும் உமா டெக்ஸடைல் வந்து விட்டார்கள்.
கீர்த்தனா மற்றும் கார்த்திகேயன் இருவருக்கும் பிரத்யோகமாக விலை உயர்ந்த ஆடைகளை ஆர்டர் செய்து வரவழைத்து இருந்தான் செல்வ கணேஷ்.
மணமக்கள் தவிர இரு வீட்டு நபர்கள் எடுக்க விசேஷமாக சில ஆடைகள் வரவழைக்கப்பட்டு இருந்தன.
கீர்த்தனாவும், கல்பனாவும், எல்லாவற்றையும் பார்த்து எதை தேர்ந்தெடுப்பது என்று யோசிக்க விஜயலட்சுமி அவர்களுடன் இணைந்து கொண்டாள்.
கார்த்திகேயன் தன் அருமை காதலி துணி எடுக்கும் அழகை தூரத்திலிருந்து அவளுக்கும் தெரியாமல் ரசித்து கொண்டு இருந்தான்.
மூன்று பெண்களும் சேர்ந்து ஆலோசித்து இறுதியில் கல்யாணத்திற்கு மஞ்சள் வண்ணத்திற்கு டிசைன் வேலைபாடுகள் அமைந்த பட்டு புடவையும், நிச்சயதார்த்திற்கு பிங்க நிற பட்டு புடவையும் கீர்த்தனா எடுத்து கொண்டாள்.
கார்த்திகேயன் திருமணத்திற்கு பட்டு வேட்டி, பட்டு சட்டையும், நிச்சயத்திற்கு சபாரி சூட்டும் எடுத்து கொண்டான்.
விஜயலட்சுமியும். கல்பனாவும் தங்களுக்கு பிடித்த டிரஸ்களை எடுத்து கொண்டார்கள்.
அடுத்ததாக மஞ்சுளா ஜுவல்லரி சென்று தாலியை தேர்ந்தெடுத்து விட்டு வீடு திரும்பினார்கள்.
கல்யாண நாள் மிக அருகில் நெருங்கி வர ஆரம்பித்தது.
இரு வீட்டாரும் திருமணத்திற்கு செய்ய வேண்டிய சடங்குகள் முதலிய காரியங்களை செய்து முடித்தார்கள்.
கீர்த்தனாவிற்கு காயங்கள் ஆறி முழுவதும் தேறி இருந்தாள்.
கார்த்திகேயன் எப்பொழுது கீர்த்தனா தன் மனைவியாக வருவாள் என்று ஆவலாக கனவு கண்டு கொண்டிருந்தான்.
கீர்த்தனாவிற்கு அதேசமயம் திருமணத்திற்கு பின்னர் தான் விளையாட முடியுமா என்ற கவலையில் இருந்தாள்.
"அக்கா" என்று அழைத்தபடி கல்பனா அறைக்குள் வந்தாள்.
கீர்த்தனா அவள் அழைத்தது கூட கவனிக்காமல் தீவிர சிந்தனையில் இருந்தாள்.
கல்பனா அவளின் அருகில் வந்து அக்கா என்று சத்தமாக அழைக்க சிந்தனை கலைந்து தங்கையை என்ன என்பது போல் பார்த்தாள்.
"அக்கா... என்ன மாம்ஸ் கூட டீரீம்சில் டூயட்டா?" என்று கேலியாக கேட்டாள் கல்பனா.
கீர்த்தனா அவளை கோபமாக முறைத்து விட்டு மீண்டும் திரும்பி முகத்தை சோகமாக வைத்து கொண்டாள்.
கல்பனா அக்காவை கட்டி முத்தமிட்ட பின்னர் அவளிடம் "அக்கா... நானும் உன்னை கவனித்து கொண்டுதான் வருகிறேன். உன் முகமே சரியில்லை. என்ன பிராபளம் உனக்கு?" என்றாள் கல்பனா.
"அதெல்லாம் ஒன்றுமில்லை கல்பி. கல்யாண டென்சன்தான்" என்று சமாளித்தாள் கீர்த்தனா.
"பொய்" என்று அவள் கூற அவளை அதிர்ச்சியாக பார்த்தாள் கீர்த்தனா.
"பொய்யா? என்ன பொய்?"
"அக்கா... உன்னை சின்ன வயசிலிருந்து பார்க்கிறேன். என்னிடமே பொய் சொல்கிறாயா நீ?"
கீர்த்தனா தங்கையை பார்க்க.
"அக்கா... உனக்கு மேரேஜ் டென்ஷன் எல்லாம் இல்லை. கல்யாணத்திற்கு பின்னால் போட்டிகளில் விளையாட முடியுமா இல்லையா என்று கவலைதான் உனக்கு" என்று கூறினாள் கல்பனா.
இவள் எப்படி என் மனதில் உள்ள விஷயங்களை அப்படியே சொல்கிறாள் என்று கீர்த்தனா பார்த்தாள்.
"என்ன அக்கா... நான் சொன்னது சரியா?" என்று கல்பனா கேட்க ஆம் என்பது போல் கீர்த்தனா தலையசைத்தாள்.
"அக்கா... நீ கவலையேபடாதே. நீ கண்டிப்பாக விளையாடுவாய்"
"நடக்கிற கதையை பற்றி பேசு கல்பி."
"ஏன் நடக்காது அக்கா?"
"என்னை அதற்குதான் அவர்கள் மகனுக்கு கல்யாணம் செய்து கொண்டு போகிறார்கள் பாரு. நான் போனதும் மருமகளே நீ போயி டென்னிஸ் விளையாடு என்பார்களாடி"
"ஏன் சொல்ல மாட்டார்களா?"
"கல்பி... நம் அம்மாவுக்கே நான் டென்னிஸ் விளையாடுவது பிடிக்காமல்தான் என்னை கல்யாணம் பன்னி தருகிறார்கள். இந்த லட்சணத்தில் மாமியார் வீட்டில் எப்படிடி சம்மதிப்பார்கள். சொல்லுடி"
"அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் என்ன அக்கா? மாம்ஸ் இருக்காரில்லையா? அவரை தாஜா செய்து சம்மதிக்க வை. கண்டிப்பாக மாம்ஸ் உனக்காக செய்வார் அக்கா"
"ஆமாம்டி. அவருக்கு வேறு வேலை இல்லை. ஏதோ அவர் என்னை காதலிக்கிறப்ப என் மேட்சை பார்க்க வந்தாரு. நான் அவர் பொண்டாட்டியான பின் ஹனிமூனுக்கு என்னை கூட்டி கொண்டு போவாரா? என்னை மேட்ச் ஆட வைப்பாராடி" என்றாள் கீர்த்தனா.
"நீ சொல்கிறதும் உண்மைதான். நானே ஆம்பளையாக இருந்தால் உன்னைமாதிரி சூப்பர் பிகரை ஹனி மூனுக்கு சிம்லாவுக்கு அள்ளி கொண்டு போயிடுவேன்"
"அப்புறம்?"
"அப்புறம் தாம்பரம்தான். நீ பேசாமல் உன் டென்னிஸ் கனவை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு கிடைக்கபோகிற வசதியான வாழ்க்கையை நன்றாக என்ஜாய் பன்னு"
Message…
கீர்த்தனா மற்றும் கார்த்திகேயன் இருவருக்கும் பிரத்யோகமாக விலை உயர்ந்த ஆடைகளை ஆர்டர் செய்து வரவழைத்து இருந்தான் செல்வ கணேஷ்.
மணமக்கள் தவிர இரு வீட்டு நபர்கள் எடுக்க விசேஷமாக சில ஆடைகள் வரவழைக்கப்பட்டு இருந்தன.
கீர்த்தனாவும், கல்பனாவும், எல்லாவற்றையும் பார்த்து எதை தேர்ந்தெடுப்பது என்று யோசிக்க விஜயலட்சுமி அவர்களுடன் இணைந்து கொண்டாள்.
கார்த்திகேயன் தன் அருமை காதலி துணி எடுக்கும் அழகை தூரத்திலிருந்து அவளுக்கும் தெரியாமல் ரசித்து கொண்டு இருந்தான்.
மூன்று பெண்களும் சேர்ந்து ஆலோசித்து இறுதியில் கல்யாணத்திற்கு மஞ்சள் வண்ணத்திற்கு டிசைன் வேலைபாடுகள் அமைந்த பட்டு புடவையும், நிச்சயதார்த்திற்கு பிங்க நிற பட்டு புடவையும் கீர்த்தனா எடுத்து கொண்டாள்.
கார்த்திகேயன் திருமணத்திற்கு பட்டு வேட்டி, பட்டு சட்டையும், நிச்சயத்திற்கு சபாரி சூட்டும் எடுத்து கொண்டான்.
விஜயலட்சுமியும். கல்பனாவும் தங்களுக்கு பிடித்த டிரஸ்களை எடுத்து கொண்டார்கள்.
அடுத்ததாக மஞ்சுளா ஜுவல்லரி சென்று தாலியை தேர்ந்தெடுத்து விட்டு வீடு திரும்பினார்கள்.
கல்யாண நாள் மிக அருகில் நெருங்கி வர ஆரம்பித்தது.
இரு வீட்டாரும் திருமணத்திற்கு செய்ய வேண்டிய சடங்குகள் முதலிய காரியங்களை செய்து முடித்தார்கள்.
கீர்த்தனாவிற்கு காயங்கள் ஆறி முழுவதும் தேறி இருந்தாள்.
கார்த்திகேயன் எப்பொழுது கீர்த்தனா தன் மனைவியாக வருவாள் என்று ஆவலாக கனவு கண்டு கொண்டிருந்தான்.
கீர்த்தனாவிற்கு அதேசமயம் திருமணத்திற்கு பின்னர் தான் விளையாட முடியுமா என்ற கவலையில் இருந்தாள்.
"அக்கா" என்று அழைத்தபடி கல்பனா அறைக்குள் வந்தாள்.
கீர்த்தனா அவள் அழைத்தது கூட கவனிக்காமல் தீவிர சிந்தனையில் இருந்தாள்.
கல்பனா அவளின் அருகில் வந்து அக்கா என்று சத்தமாக அழைக்க சிந்தனை கலைந்து தங்கையை என்ன என்பது போல் பார்த்தாள்.
"அக்கா... என்ன மாம்ஸ் கூட டீரீம்சில் டூயட்டா?" என்று கேலியாக கேட்டாள் கல்பனா.
கீர்த்தனா அவளை கோபமாக முறைத்து விட்டு மீண்டும் திரும்பி முகத்தை சோகமாக வைத்து கொண்டாள்.
கல்பனா அக்காவை கட்டி முத்தமிட்ட பின்னர் அவளிடம் "அக்கா... நானும் உன்னை கவனித்து கொண்டுதான் வருகிறேன். உன் முகமே சரியில்லை. என்ன பிராபளம் உனக்கு?" என்றாள் கல்பனா.
"அதெல்லாம் ஒன்றுமில்லை கல்பி. கல்யாண டென்சன்தான்" என்று சமாளித்தாள் கீர்த்தனா.
"பொய்" என்று அவள் கூற அவளை அதிர்ச்சியாக பார்த்தாள் கீர்த்தனா.
"பொய்யா? என்ன பொய்?"
"அக்கா... உன்னை சின்ன வயசிலிருந்து பார்க்கிறேன். என்னிடமே பொய் சொல்கிறாயா நீ?"
கீர்த்தனா தங்கையை பார்க்க.
"அக்கா... உனக்கு மேரேஜ் டென்ஷன் எல்லாம் இல்லை. கல்யாணத்திற்கு பின்னால் போட்டிகளில் விளையாட முடியுமா இல்லையா என்று கவலைதான் உனக்கு" என்று கூறினாள் கல்பனா.
இவள் எப்படி என் மனதில் உள்ள விஷயங்களை அப்படியே சொல்கிறாள் என்று கீர்த்தனா பார்த்தாள்.
"என்ன அக்கா... நான் சொன்னது சரியா?" என்று கல்பனா கேட்க ஆம் என்பது போல் கீர்த்தனா தலையசைத்தாள்.
"அக்கா... நீ கவலையேபடாதே. நீ கண்டிப்பாக விளையாடுவாய்"
"நடக்கிற கதையை பற்றி பேசு கல்பி."
"ஏன் நடக்காது அக்கா?"
"என்னை அதற்குதான் அவர்கள் மகனுக்கு கல்யாணம் செய்து கொண்டு போகிறார்கள் பாரு. நான் போனதும் மருமகளே நீ போயி டென்னிஸ் விளையாடு என்பார்களாடி"
"ஏன் சொல்ல மாட்டார்களா?"
"கல்பி... நம் அம்மாவுக்கே நான் டென்னிஸ் விளையாடுவது பிடிக்காமல்தான் என்னை கல்யாணம் பன்னி தருகிறார்கள். இந்த லட்சணத்தில் மாமியார் வீட்டில் எப்படிடி சம்மதிப்பார்கள். சொல்லுடி"
"அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் என்ன அக்கா? மாம்ஸ் இருக்காரில்லையா? அவரை தாஜா செய்து சம்மதிக்க வை. கண்டிப்பாக மாம்ஸ் உனக்காக செய்வார் அக்கா"
"ஆமாம்டி. அவருக்கு வேறு வேலை இல்லை. ஏதோ அவர் என்னை காதலிக்கிறப்ப என் மேட்சை பார்க்க வந்தாரு. நான் அவர் பொண்டாட்டியான பின் ஹனிமூனுக்கு என்னை கூட்டி கொண்டு போவாரா? என்னை மேட்ச் ஆட வைப்பாராடி" என்றாள் கீர்த்தனா.
"நீ சொல்கிறதும் உண்மைதான். நானே ஆம்பளையாக இருந்தால் உன்னைமாதிரி சூப்பர் பிகரை ஹனி மூனுக்கு சிம்லாவுக்கு அள்ளி கொண்டு போயிடுவேன்"
"அப்புறம்?"
"அப்புறம் தாம்பரம்தான். நீ பேசாமல் உன் டென்னிஸ் கனவை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு கிடைக்கபோகிற வசதியான வாழ்க்கையை நன்றாக என்ஜாய் பன்னு"
Message…