snehasree
SM Exclusive
கீர்த்தனாவின் திருமணம் மிக சிறப்பாக முடிந்து வந்தவர்கள் மதிய சாப்பாட்டை முடித்து கொண்டு கிளம்பி விட்டார்கள்.
கீர்த்தனா மற்றும் கார்த்தியின் முக்கிய உறவினர்கள் மட்டும் மண்டபத்தில் இருந்தார்கள்.
விக்னேஷ் மற்றும் கார்த்தியின் அண்ணன் செல்வகணேஷ் இருவரும் மண்டபத்தை காலி செய்யும் வேலையில் ஈடுபட்டு இருந்தார்கள்.
சில நிமிடங்களில் அனைவரும் மண்டபத்தில் இருந்து கிளம்பி கார்த்திகேயன் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.
கார்த்திகேயன், கீர்த்தனாவுக்கு ஆரத்தி எடுக்கப்பட்டு உள்ளே அழைத்து செல்லபட்டு பால், பழம் கொடுத்தார்கள்.
சில மணி நேரங்கள் கார்த்தி வீட்டில் இருந்தபின் அங்கு இருந்து கிளம்பி கீர்த்தனா வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்.
கீர்த்தனா வீட்டில் ஆரத்தி எடுக்கப்பட்டு உள்ளே சென்ற அவர்களை தனி அறைகளில் தங்க வைத்தார்கள்.
அன்று நாள் நல்லதாக இருந்த காரணத்தால் முதலிரவை அன்றே நடத்திவிட இரண்டு வீட்டு பெரியவர்களும் முடிவு செய்து ஏற்பாடுகளை செய்து விட்டார்கள்.
கீர்த்தனாவை விட்டு பிரிந்து இருந்த கார்த்திகேயனுக்கு அவளை காணாமல் நிலை கொள்ளாமல் தவித்து கொண்டு இருந்தான்.
அவன் அண்ணன், அண்ணி, தங்கை, அம்மா, அப்பா என்று மாற்றி மாற்றி வந்து பேசி கொண்டு இருந்தார்கள். அவன் நண்பர்கள் வேறு போனில் வந்து தொல்லை செய்தார்கள்.
கீர்த்தனாவிற்கு வாட்ஸ்அப் மூலம் சில மெசேஜ்கள் தட்டி விட்டான். எந்த மெசேஜ்க்கும் பார்த்த அடையாளம் கூட காட்டவில்லை.
வாட்ஸ்அப் மெசேஜ் கூட பார்க்காமல் இவள் என்னதான் செய்கிறாள் என்று யோசித்தபடி காலத்தை கடத்தினான் நம் கார்த்திகேயன்.
அங்கே கீர்த்தனாவை சுற்றி தங்கை கல்பனா, நாத்தனார்கள் செல்வபிரியா,விஜயலட்சுமி, அம்மா ராதா என்று பெரிய கூட்டமே இருந்தது. அவள் மாமியார் உமாதேவி அடிக்கடி வந்து பார்வையிட்டு பேசி சென்றார்.
கீர்த்தனா இளம் பச்சை நிற சேலை அணிந்து கூந்தலை தளர்வாக விடபட்டு பின்னி மல்லிகை பூ சூடி சிறிய நகைகள் அணிந்து லைட்டாக மேக்கப் போட்டு இருந்தாள்.
அவளை சுற்றி இருந்தவர்கள் கேலி செய்து கொண்டிருக்க அதை வெட்கத்துடன் ஏற்று கொண்டிருந்தாள்.
அவள் வெளியே மற்றவர்கள் முன்னால் சிரித்து கொண்டு இருந்தாலும் உள்ளே அழுது கொண்டு இருந்தாள்.
ஆம். அவளின் சிறுவயது முதல் கண்டு கொண்டிருந்த கனவுகள் இன்றுடன் முடிந்து விடுமா என்ற எண்ணமே அவள் மனதின் அழுகைக்கு காரணம் ஆகும்.
தங்கை கல்பனா அக்காவின் முகத்தை பார்த்தே அவளின் நிலை உணர்ந்து தனிமை எப்பொழுது கிடைக்கும் என்று காத்திருந்தாள்.
சில நிமிடங்களில் கிடைக்க பேச துவங்கினாள் கல்பனா.
"அக்கா... நீ வெளியில்தான் சிரித்து கொண்டிருக்கிறாய் ஆனால் உள்ளே அழுகிறாய் என்று தெரியும். நீ கார்த்திக் மாமாவிடம் தைரியமாக பேசி விடு அக்கா."
"என்னடி பேச சொல்கிறாய்? கல்யாணத்துக்கு முன் பேச முடியவில்லை. இந்த பர்ஸ்ட் நைட்டை கொஞ்சம் தள்ளி வைத்திருந்தால் பேசலாம் ஆனால் அதையும் இன்றைக்கே ஏற்பாடு செய்து விட்டார்கள். அவர் வேறு ஆவலாக காத்து கொண்டிருப்பார். இப்பொழுது போய் எனக்கு பர்ஸ்ட்நைட் எல்லாம் வேண்டாம் என்று சொல்ல முடியுமா? எந்த ஆம்பளைதான் இதை ஏற்று சம்மதிப்பார்?"
"கொஞ்சம் கஷ்டம்தான் அக்கா ஆனால் அவர் உன்னிடம் பேச்சு கொடுத்து, டாபிக் டென்னிஸ் பக்கம் திரும்பினால் உன் ஆசையை சொல்லிவிடு"
"ஆமாண்டி... எத்தனை சினிமா பார்த்து இருக்கிறாய். நான் உள்ளே போய் கொஞ்ச நேரம் வேண்டுமானால் அமைதியாக கேட்பார் அப்புறம் லைட் ஆப் செய்து அவர் வேலையை முடிக்க பார்ப்பாரா இல்லை நீ பேசு என்று வேடிக்கை பார்த்து கொண்டிருப்பாரா?"
"நீ சொல்வதும் சரிதான் அக்கா"
"கல்பி... என் கனவெல்லாம் போச்சுடி. இந்த அம்மா திட்டம் போட்டு அவர்கள் நினைத்ததை நடத்தி விட்டார்கள்" என்று கூறி கீர்த்தனா அழத் தொடங்கினாள்.
"அக்கா... அழாதே... பர்ஸ்ட் நைட் நடந்தால் என்ன? நிறைய பெண்கள் குழந்தை பெற்ற பிறகு கூட சாதிக்கவில்லையா? நீ அந்த மாதிரி சாதிக்க முடியும். கார்த்தி மாமாகிட்ட நீ பேசி டென்னிஸ் விளையாட முயற்சி செய்"
"அவர்கள் எல்லாம் முன்னாடி சாதித்து விட்ட நட்சத்திரங்கள். நான் வளர்ந்து வரும் ஆள். இந்த ஆறு மாத கேப்பில் என் ரேங்க் 600ல் இருந்து 800க்கு மேல் போய்விட்டது. இன்னும் நான் பல மாதங்கள் கடந்தால் ரேங்க 1000க்கு மேல் போய்விடும் அப்புறம் எல்லாம் சான்சே இல்லை"
"நீ சொல்வதும் சரிதான் அக்கா"
"நான் பிரக்னன்ட் ஆகி குழந்தை எல்லாம் பிறந்து விட்டால் என்னை எப்படிடி விளையாட விடுவார்கள்"
Message…
கீர்த்தனா மற்றும் கார்த்தியின் முக்கிய உறவினர்கள் மட்டும் மண்டபத்தில் இருந்தார்கள்.
விக்னேஷ் மற்றும் கார்த்தியின் அண்ணன் செல்வகணேஷ் இருவரும் மண்டபத்தை காலி செய்யும் வேலையில் ஈடுபட்டு இருந்தார்கள்.
சில நிமிடங்களில் அனைவரும் மண்டபத்தில் இருந்து கிளம்பி கார்த்திகேயன் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.
கார்த்திகேயன், கீர்த்தனாவுக்கு ஆரத்தி எடுக்கப்பட்டு உள்ளே அழைத்து செல்லபட்டு பால், பழம் கொடுத்தார்கள்.
சில மணி நேரங்கள் கார்த்தி வீட்டில் இருந்தபின் அங்கு இருந்து கிளம்பி கீர்த்தனா வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்.
கீர்த்தனா வீட்டில் ஆரத்தி எடுக்கப்பட்டு உள்ளே சென்ற அவர்களை தனி அறைகளில் தங்க வைத்தார்கள்.
அன்று நாள் நல்லதாக இருந்த காரணத்தால் முதலிரவை அன்றே நடத்திவிட இரண்டு வீட்டு பெரியவர்களும் முடிவு செய்து ஏற்பாடுகளை செய்து விட்டார்கள்.
கீர்த்தனாவை விட்டு பிரிந்து இருந்த கார்த்திகேயனுக்கு அவளை காணாமல் நிலை கொள்ளாமல் தவித்து கொண்டு இருந்தான்.
அவன் அண்ணன், அண்ணி, தங்கை, அம்மா, அப்பா என்று மாற்றி மாற்றி வந்து பேசி கொண்டு இருந்தார்கள். அவன் நண்பர்கள் வேறு போனில் வந்து தொல்லை செய்தார்கள்.
கீர்த்தனாவிற்கு வாட்ஸ்அப் மூலம் சில மெசேஜ்கள் தட்டி விட்டான். எந்த மெசேஜ்க்கும் பார்த்த அடையாளம் கூட காட்டவில்லை.
வாட்ஸ்அப் மெசேஜ் கூட பார்க்காமல் இவள் என்னதான் செய்கிறாள் என்று யோசித்தபடி காலத்தை கடத்தினான் நம் கார்த்திகேயன்.
அங்கே கீர்த்தனாவை சுற்றி தங்கை கல்பனா, நாத்தனார்கள் செல்வபிரியா,விஜயலட்சுமி, அம்மா ராதா என்று பெரிய கூட்டமே இருந்தது. அவள் மாமியார் உமாதேவி அடிக்கடி வந்து பார்வையிட்டு பேசி சென்றார்.
கீர்த்தனா இளம் பச்சை நிற சேலை அணிந்து கூந்தலை தளர்வாக விடபட்டு பின்னி மல்லிகை பூ சூடி சிறிய நகைகள் அணிந்து லைட்டாக மேக்கப் போட்டு இருந்தாள்.
அவளை சுற்றி இருந்தவர்கள் கேலி செய்து கொண்டிருக்க அதை வெட்கத்துடன் ஏற்று கொண்டிருந்தாள்.
அவள் வெளியே மற்றவர்கள் முன்னால் சிரித்து கொண்டு இருந்தாலும் உள்ளே அழுது கொண்டு இருந்தாள்.
ஆம். அவளின் சிறுவயது முதல் கண்டு கொண்டிருந்த கனவுகள் இன்றுடன் முடிந்து விடுமா என்ற எண்ணமே அவள் மனதின் அழுகைக்கு காரணம் ஆகும்.
தங்கை கல்பனா அக்காவின் முகத்தை பார்த்தே அவளின் நிலை உணர்ந்து தனிமை எப்பொழுது கிடைக்கும் என்று காத்திருந்தாள்.
சில நிமிடங்களில் கிடைக்க பேச துவங்கினாள் கல்பனா.
"அக்கா... நீ வெளியில்தான் சிரித்து கொண்டிருக்கிறாய் ஆனால் உள்ளே அழுகிறாய் என்று தெரியும். நீ கார்த்திக் மாமாவிடம் தைரியமாக பேசி விடு அக்கா."
"என்னடி பேச சொல்கிறாய்? கல்யாணத்துக்கு முன் பேச முடியவில்லை. இந்த பர்ஸ்ட் நைட்டை கொஞ்சம் தள்ளி வைத்திருந்தால் பேசலாம் ஆனால் அதையும் இன்றைக்கே ஏற்பாடு செய்து விட்டார்கள். அவர் வேறு ஆவலாக காத்து கொண்டிருப்பார். இப்பொழுது போய் எனக்கு பர்ஸ்ட்நைட் எல்லாம் வேண்டாம் என்று சொல்ல முடியுமா? எந்த ஆம்பளைதான் இதை ஏற்று சம்மதிப்பார்?"
"கொஞ்சம் கஷ்டம்தான் அக்கா ஆனால் அவர் உன்னிடம் பேச்சு கொடுத்து, டாபிக் டென்னிஸ் பக்கம் திரும்பினால் உன் ஆசையை சொல்லிவிடு"
"ஆமாண்டி... எத்தனை சினிமா பார்த்து இருக்கிறாய். நான் உள்ளே போய் கொஞ்ச நேரம் வேண்டுமானால் அமைதியாக கேட்பார் அப்புறம் லைட் ஆப் செய்து அவர் வேலையை முடிக்க பார்ப்பாரா இல்லை நீ பேசு என்று வேடிக்கை பார்த்து கொண்டிருப்பாரா?"
"நீ சொல்வதும் சரிதான் அக்கா"
"கல்பி... என் கனவெல்லாம் போச்சுடி. இந்த அம்மா திட்டம் போட்டு அவர்கள் நினைத்ததை நடத்தி விட்டார்கள்" என்று கூறி கீர்த்தனா அழத் தொடங்கினாள்.
"அக்கா... அழாதே... பர்ஸ்ட் நைட் நடந்தால் என்ன? நிறைய பெண்கள் குழந்தை பெற்ற பிறகு கூட சாதிக்கவில்லையா? நீ அந்த மாதிரி சாதிக்க முடியும். கார்த்தி மாமாகிட்ட நீ பேசி டென்னிஸ் விளையாட முயற்சி செய்"
"அவர்கள் எல்லாம் முன்னாடி சாதித்து விட்ட நட்சத்திரங்கள். நான் வளர்ந்து வரும் ஆள். இந்த ஆறு மாத கேப்பில் என் ரேங்க் 600ல் இருந்து 800க்கு மேல் போய்விட்டது. இன்னும் நான் பல மாதங்கள் கடந்தால் ரேங்க 1000க்கு மேல் போய்விடும் அப்புறம் எல்லாம் சான்சே இல்லை"
"நீ சொல்வதும் சரிதான் அக்கா"
"நான் பிரக்னன்ட் ஆகி குழந்தை எல்லாம் பிறந்து விட்டால் என்னை எப்படிடி விளையாட விடுவார்கள்"
Message…