snehasree
SM Exclusive
கண்ணாத்தாள் ஏறி சென்ற கார் சில நிமிடங்களில் ஆனந்தன் வீட்டை அடைந்தது.
காரை விட்டு தம்பதிகளாக இறங்கிய அவர்களுக்கு ஆரத்தி எடுத்த பின்னர் தன் சூட்கேசுடன் புகுந்த வீட்டுக்கு உள்ளே நுழைந்தாள் கண்ணாத்தாள்.
ஆனந்தன் தன் அறைக்கு செல்ல அவளும் பின்னால் சென்று அந்த அறையில் தன் கொண்டு வந்த சூட்கேஸை ஒரிடத்தில் வைத்து கொண்டாள்.
"நீ இந்த பீரோவில் துணி வைத்துக் கொள்ளலாம்" என்று திறந்து காட்ட அவன் துணிகள் இருந்த பீரோவில் அவளுக்கும் இடம் ஒதுக்கி வைத்திருந்தான்.
"கண்ணா... இதை உன் வீடு மாதிரி நினைச்சுக்கோ. நீ எப்பொழுதும் போல் இரு" என்று ஆனந்தன் சொல்ல சரிங்க என்றாள் கண்ணாத்தாள்.
ஆனந்தனுக்கு போன் வர பேசிக் கொண்டு வெளியில் செல்ல அவன் அறையை பார்வையிட்ட கண்ணாத்தாள் பின் அறைக்கு வெளியில் வந்தாள்.
"என்ன மருமகளே... உனக்கு வீடு பிடிச்சிருக்கா?" என்று பாசத்துடன் கேட்டார் அத்தை மரகதம்.
"பிடிச்சிருக்கு அத்தை" என்று அவள் தயங்கி சொல்ல,
"நல்லா எல்லாபக்கமும் போய் பார்த்து விட்டு வந்து சொல்" என்றார் அத்தை மரகதம்.
"சரிங்க அத்தை" என்று அவள் தலையசைத்த பின்னர் அவள் வீட்டின் பின்புறம் வரை சென்று பார்க்க ஆரம்பித்தாள் .
ஒரு பெரிய ஹால், ஹாலின் எதிரே இரு அறைகள் ஹாலில் சமபாதி அளவில் இருந்தது. ஹாலை அடுத்து பூஜை அறை, அடுத்து சமையலறை, அதற்கு எதிரே ஸ்டோர் ரூம் பின்னால் பாத்ரும், அதற்குபின் தோட்டம் என்று அழகாக இருந்தது.
கண்ணாத்தாள் வீட்டை சுற்றி பார்த்து விட்டு வந்து தன் மாமியார் மரகத்திடம்,
"ரொம்ப பிடிச்சிருக்கு அத்தை" என்றாள்.
"சரிம்மா... என் பக்கத்தில் வந்து உட்கார்" என்று அத்தை சொல்ல அவள் தயங்கி நின்றாள்.
"என்ன முழிச்சிட்டு நிற்கிறே. சொல்றது காதில் விழலை" என்று மரகதம் அதட்ட அவள் பயந்து போய் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.
மரகதம் அவளை பார்த்து கோபமாய் முறைக்க அவள் மருண்டவிழிகளை கண்டு சிரித்து விட்டாள்.
"நல்லா பொண்ணு நீ. நானும் உன் அம்மா மாதிரிதான். நீ என்னை பார்த்து இப்படி மிரள வேண்டாம்" என்றார் அத்தை.
"சரிங்க அத்தை" என்றபடி கண்ணாத்தாள் சிரிக்க மரகதம் தன் மருமகளை அணைத்து முத்தமிட சிலிர்த்தாள்.
இரவு சமையலுக்கு அத்தைக்கு கண்ணாத்தாள் உதவி செய்ய அவளுக்கு நேரம் ஒடியது.
ஆனந்தன் வந்து சாப்பிட்டபின் அத்தையுடன் சேர்ந்து அடுப்படி வேலைகளை முடித்து விட்டு இன்று என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பில் அறைக்குள் நுழைந்தாள் கண்ணாத்தாள்.
ஆனந்தன் அவளுக்கு கட்டில் இடம் விட்டு படுத்திருந்தான். அவன் செல்போனில் பாட்டு கேட்டபடி படுத்திருக்க அவள் அருகில் சென்று படுத்துக் கொண்டாள்.
அவன் சிறிது நேரத்தில் தன் போனை எடுத்து வைத்து விட்டு உறங்க ஆரம்பிக்க, அவளுக்கோ இன்றும் அவளின் எதிர்பார்ப்பு நிராசையாகி விட சரி நாளை பார்ப்போம் என்று தூங்க ஆரம்பித்து விட்டாள் கண்ணாத்தாள்.
அடுத்த வந்த பத்து நாட்களில் பகலில் உறவினர் வீடுகளில் விருந்து, கோவில் என சுற்றி விட்டு இரவில் கண்ணயர்ந்து தூங்க ஆரம்பித்தான் ஆனந்தன்.
கண்ணாத்தாளை மூன்று வேளையும் "சாப்பிட்டியா" என்று விசாரிப்பான். அவள் சமையல் நன்றாக இருக்க அவளை தனிமையில் பாராட்டுவான்.
தன் வீட்டு விருந்துடன் அவள் வீட்டு விருந்துக்கும் சென்று அங்கே அவன் அவர்களிடம் தன்மையாக நடக்க "கண்ணா... நீ கொடுத்து வைச்ச மகராசி அதனால்தான் இப்படி ஒரு புருஷன் கிடைச்சிருக்கார்" என்று எல்லோரும் பாராட்ட அவள் மகிழ்ந்தாள்.
Message…Message…
காரை விட்டு தம்பதிகளாக இறங்கிய அவர்களுக்கு ஆரத்தி எடுத்த பின்னர் தன் சூட்கேசுடன் புகுந்த வீட்டுக்கு உள்ளே நுழைந்தாள் கண்ணாத்தாள்.
ஆனந்தன் தன் அறைக்கு செல்ல அவளும் பின்னால் சென்று அந்த அறையில் தன் கொண்டு வந்த சூட்கேஸை ஒரிடத்தில் வைத்து கொண்டாள்.
"நீ இந்த பீரோவில் துணி வைத்துக் கொள்ளலாம்" என்று திறந்து காட்ட அவன் துணிகள் இருந்த பீரோவில் அவளுக்கும் இடம் ஒதுக்கி வைத்திருந்தான்.
"கண்ணா... இதை உன் வீடு மாதிரி நினைச்சுக்கோ. நீ எப்பொழுதும் போல் இரு" என்று ஆனந்தன் சொல்ல சரிங்க என்றாள் கண்ணாத்தாள்.
ஆனந்தனுக்கு போன் வர பேசிக் கொண்டு வெளியில் செல்ல அவன் அறையை பார்வையிட்ட கண்ணாத்தாள் பின் அறைக்கு வெளியில் வந்தாள்.
"என்ன மருமகளே... உனக்கு வீடு பிடிச்சிருக்கா?" என்று பாசத்துடன் கேட்டார் அத்தை மரகதம்.
"பிடிச்சிருக்கு அத்தை" என்று அவள் தயங்கி சொல்ல,
"நல்லா எல்லாபக்கமும் போய் பார்த்து விட்டு வந்து சொல்" என்றார் அத்தை மரகதம்.
"சரிங்க அத்தை" என்று அவள் தலையசைத்த பின்னர் அவள் வீட்டின் பின்புறம் வரை சென்று பார்க்க ஆரம்பித்தாள் .
ஒரு பெரிய ஹால், ஹாலின் எதிரே இரு அறைகள் ஹாலில் சமபாதி அளவில் இருந்தது. ஹாலை அடுத்து பூஜை அறை, அடுத்து சமையலறை, அதற்கு எதிரே ஸ்டோர் ரூம் பின்னால் பாத்ரும், அதற்குபின் தோட்டம் என்று அழகாக இருந்தது.
கண்ணாத்தாள் வீட்டை சுற்றி பார்த்து விட்டு வந்து தன் மாமியார் மரகத்திடம்,
"ரொம்ப பிடிச்சிருக்கு அத்தை" என்றாள்.
"சரிம்மா... என் பக்கத்தில் வந்து உட்கார்" என்று அத்தை சொல்ல அவள் தயங்கி நின்றாள்.
"என்ன முழிச்சிட்டு நிற்கிறே. சொல்றது காதில் விழலை" என்று மரகதம் அதட்ட அவள் பயந்து போய் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.
மரகதம் அவளை பார்த்து கோபமாய் முறைக்க அவள் மருண்டவிழிகளை கண்டு சிரித்து விட்டாள்.
"நல்லா பொண்ணு நீ. நானும் உன் அம்மா மாதிரிதான். நீ என்னை பார்த்து இப்படி மிரள வேண்டாம்" என்றார் அத்தை.
"சரிங்க அத்தை" என்றபடி கண்ணாத்தாள் சிரிக்க மரகதம் தன் மருமகளை அணைத்து முத்தமிட சிலிர்த்தாள்.
இரவு சமையலுக்கு அத்தைக்கு கண்ணாத்தாள் உதவி செய்ய அவளுக்கு நேரம் ஒடியது.
ஆனந்தன் வந்து சாப்பிட்டபின் அத்தையுடன் சேர்ந்து அடுப்படி வேலைகளை முடித்து விட்டு இன்று என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பில் அறைக்குள் நுழைந்தாள் கண்ணாத்தாள்.
ஆனந்தன் அவளுக்கு கட்டில் இடம் விட்டு படுத்திருந்தான். அவன் செல்போனில் பாட்டு கேட்டபடி படுத்திருக்க அவள் அருகில் சென்று படுத்துக் கொண்டாள்.
அவன் சிறிது நேரத்தில் தன் போனை எடுத்து வைத்து விட்டு உறங்க ஆரம்பிக்க, அவளுக்கோ இன்றும் அவளின் எதிர்பார்ப்பு நிராசையாகி விட சரி நாளை பார்ப்போம் என்று தூங்க ஆரம்பித்து விட்டாள் கண்ணாத்தாள்.
அடுத்த வந்த பத்து நாட்களில் பகலில் உறவினர் வீடுகளில் விருந்து, கோவில் என சுற்றி விட்டு இரவில் கண்ணயர்ந்து தூங்க ஆரம்பித்தான் ஆனந்தன்.
கண்ணாத்தாளை மூன்று வேளையும் "சாப்பிட்டியா" என்று விசாரிப்பான். அவள் சமையல் நன்றாக இருக்க அவளை தனிமையில் பாராட்டுவான்.
தன் வீட்டு விருந்துடன் அவள் வீட்டு விருந்துக்கும் சென்று அங்கே அவன் அவர்களிடம் தன்மையாக நடக்க "கண்ணா... நீ கொடுத்து வைச்ச மகராசி அதனால்தான் இப்படி ஒரு புருஷன் கிடைச்சிருக்கார்" என்று எல்லோரும் பாராட்ட அவள் மகிழ்ந்தாள்.
Message…Message…