snehasree
SM Exclusive
"நீ உள்ளே வா கண்ணா" என்று தங்கையை கையை பிடித்து தனலட்சுமி அழைத்து செல்ல ஆனந்தனுடன் அர்ச்சனா ஆகாஷ் எல்லோரும் உள்ளே சென்றார்கள்
தங்கையை சோபாவில் அமர வைத்துவிட்டு கூட அமர்ந்த தனலட்சுமி அவளிடம்,
"ஏன் கண்ணா... நீ பேசாமல் இருக்காமல் இருக்கிறாய். அக்கா மேல் இன்னும் உனக்கு கோபம் தீரவில்லையா?" என்றாள்.
"ஆமாம்..." என்று தங்கை சொல்ல அக்கா தனலட்சுமி அதிர்ச்சியாகி பின்,
"நான் பன்னது பெரிய தப்புதான் என்னால் நல்லா படிச்சிட்டு இருந்த உன்ன படிப்பு என்னால் கெட்டு போச்சு. நீ டிகிரி படிக்க வேண்டிய ஆளு நான்தான் அதையும் கெடுத்துட்டேன்" என்றாள்.
கண்ணாத்தாள் அமைதியாக இருக்க தனலட்சுமி அழ ஆரம்பித்து பின் அழுகையுடன, "அக்காவை நீ மன்னிக்க மாட்டியா?" என்றாள்.
கண்ணாத்தாள் இல்லை என்று தலை அசைக்க தனலட்சுமிக்கு அழுகையை கட்டுபடுத்த முடியாமல் கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தாள்.
தனலட்சுமியின் அழுகையால் எல்லோரும் பதற்றமாகி விட கண்ணாத்தாள் உடனே தன் அக்காவை இறுக கட்டி பிடித்து கன்னத்தில் முத்தம் தந்தாள்.
கண்ணாத்தாளின் அணைப்பும் முத்தமும் அவள் பாசத்தை காட்டியது.
"என் செல்ல அக்கா மேல் இந்த தங்கைக்கு எப்படி கோபம் வரும்" என்றாள் கண்ணாத்தாள்.
தனலட்சுமி அழுகையை நிறுத்தி விட்டு தன் தங்கையை பார்த்து, "அப்புறம் ஏன் நான் கேட்டதும் ஆமாம் என்று சொன்னேடி" என்றாள்.
"அதுவாக்கா... நான் உன்னை பார்த்ததும் ஷாக் ஆகி நின்ற பொழுது நீ என்னை கூட்டிட்டு வந்து உட்கார வைத்து சென்டிமென்டாக உருகி பேசிட்டு இருந்தாய் அதான் நீ என்னதான் பன்றேன்னு பார்க்கலாமுன்னு நான் அப்படி சொன்னேன்." என்று சொல்லி விட்டு சிரித்தாள் கண்ணாத்தாள்.
"அடிபாவி! நீ இன்னும் கோபமாக இருக்கிறாய் என்று நினைத்து நான் அழதால் என்னை வைத்து நீ விளையாடி இருக்கிறாய். உன்னை" என்று கோபமாக முறைத்தாள் தனலட்சுமி.
"அக்கா! என் செல்ல அக்காகிட்ட நான் விளையாடமல் யார் விளையாடறது சொல்லு"
"நீ ரொம்ப கெட்டு போய் விட்டாய் கண்ணா அக்காவை அழ வைக்கிறாயா நீ" என்று தனலட்சுமி முறைத்தாள்.
"சாரிக்கா என் செல்ல அக்கா இல்லையா சாரி" என்று அணைத்தபடி கண்ணாத்தாள் கூற அவளும் தங்கையை அணைத்து முத்தமிட இருவரும் சிரித்தார்கள்.
"இது உலக மகா நடிப்புடா சாமி" என்று கவுண்டமணி ஸ்டைலில் அர்ச்சனா சொல்ல அக்கா தங்கை இருவரும் கூட்டாக சிரிக்க அனைவரும் சிரிப்பில் பங்கேற்றார்கள்.
"ஒருவழியாக நாம் எல்லாம் ஒன்றாக சேர்ந்து விட்டோம். இனி நாம் பெற்றோரிடம் சேர வேண்டும்." என்றாள் அர்ச்சனா.
"ஆமாம் அர்ச்சனா நாளைக்கு இவங்க ரிசப்ஷனுக்கு போயி நம்ம பெர்பர்மான்சை காட்டி சேர்ந்துவிடனும்" என்று தனலட்சுமி கூறினாள்.
"என்ன பன்ன போறிங்க? தனா மாதிரி அழ போறிங்களா? அர்ச்சனா மாதிரி காலில் விழ போறிங்களா?" என்றான் ஆகாஷ்.
"அர்ச்சனா காலில் விழுந்தாளா அது என்ன கதை" என்று தனலட்சுமி கேட்க,
"அதுவாக்கா நான் சொல்றேன்" என்று கண்ணாத்தாள் நடந்ததை சொல்லி முடித்தாள்.
"குழந்தை என்றதும்தான் எனக்கு ஞாபகம்" என்றவள் அறைக்கு சென்று தன் மகனை கொண்டு வந்து தங்கை மடியில் வைத்தாள் தனலட்சுமி.
"அக்கா... உன்னை மாதிரியே அழகாக இருக்கான் உன் புள்ளை" என்ற கண்ணாத்தாள் "சித்தியை பாரு சித்தியை பாரு" என்றாள்.
"உம் பேருதான் அவனுக்கும் மாய கண்ணன்" என்று தனலட்சுமி கூறினாள்.
Message…
தங்கையை சோபாவில் அமர வைத்துவிட்டு கூட அமர்ந்த தனலட்சுமி அவளிடம்,
"ஏன் கண்ணா... நீ பேசாமல் இருக்காமல் இருக்கிறாய். அக்கா மேல் இன்னும் உனக்கு கோபம் தீரவில்லையா?" என்றாள்.
"ஆமாம்..." என்று தங்கை சொல்ல அக்கா தனலட்சுமி அதிர்ச்சியாகி பின்,
"நான் பன்னது பெரிய தப்புதான் என்னால் நல்லா படிச்சிட்டு இருந்த உன்ன படிப்பு என்னால் கெட்டு போச்சு. நீ டிகிரி படிக்க வேண்டிய ஆளு நான்தான் அதையும் கெடுத்துட்டேன்" என்றாள்.
கண்ணாத்தாள் அமைதியாக இருக்க தனலட்சுமி அழ ஆரம்பித்து பின் அழுகையுடன, "அக்காவை நீ மன்னிக்க மாட்டியா?" என்றாள்.
கண்ணாத்தாள் இல்லை என்று தலை அசைக்க தனலட்சுமிக்கு அழுகையை கட்டுபடுத்த முடியாமல் கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தாள்.
தனலட்சுமியின் அழுகையால் எல்லோரும் பதற்றமாகி விட கண்ணாத்தாள் உடனே தன் அக்காவை இறுக கட்டி பிடித்து கன்னத்தில் முத்தம் தந்தாள்.
கண்ணாத்தாளின் அணைப்பும் முத்தமும் அவள் பாசத்தை காட்டியது.
"என் செல்ல அக்கா மேல் இந்த தங்கைக்கு எப்படி கோபம் வரும்" என்றாள் கண்ணாத்தாள்.
தனலட்சுமி அழுகையை நிறுத்தி விட்டு தன் தங்கையை பார்த்து, "அப்புறம் ஏன் நான் கேட்டதும் ஆமாம் என்று சொன்னேடி" என்றாள்.
"அதுவாக்கா... நான் உன்னை பார்த்ததும் ஷாக் ஆகி நின்ற பொழுது நீ என்னை கூட்டிட்டு வந்து உட்கார வைத்து சென்டிமென்டாக உருகி பேசிட்டு இருந்தாய் அதான் நீ என்னதான் பன்றேன்னு பார்க்கலாமுன்னு நான் அப்படி சொன்னேன்." என்று சொல்லி விட்டு சிரித்தாள் கண்ணாத்தாள்.
"அடிபாவி! நீ இன்னும் கோபமாக இருக்கிறாய் என்று நினைத்து நான் அழதால் என்னை வைத்து நீ விளையாடி இருக்கிறாய். உன்னை" என்று கோபமாக முறைத்தாள் தனலட்சுமி.
"அக்கா! என் செல்ல அக்காகிட்ட நான் விளையாடமல் யார் விளையாடறது சொல்லு"
"நீ ரொம்ப கெட்டு போய் விட்டாய் கண்ணா அக்காவை அழ வைக்கிறாயா நீ" என்று தனலட்சுமி முறைத்தாள்.
"சாரிக்கா என் செல்ல அக்கா இல்லையா சாரி" என்று அணைத்தபடி கண்ணாத்தாள் கூற அவளும் தங்கையை அணைத்து முத்தமிட இருவரும் சிரித்தார்கள்.
"இது உலக மகா நடிப்புடா சாமி" என்று கவுண்டமணி ஸ்டைலில் அர்ச்சனா சொல்ல அக்கா தங்கை இருவரும் கூட்டாக சிரிக்க அனைவரும் சிரிப்பில் பங்கேற்றார்கள்.
"ஒருவழியாக நாம் எல்லாம் ஒன்றாக சேர்ந்து விட்டோம். இனி நாம் பெற்றோரிடம் சேர வேண்டும்." என்றாள் அர்ச்சனா.
"ஆமாம் அர்ச்சனா நாளைக்கு இவங்க ரிசப்ஷனுக்கு போயி நம்ம பெர்பர்மான்சை காட்டி சேர்ந்துவிடனும்" என்று தனலட்சுமி கூறினாள்.
"என்ன பன்ன போறிங்க? தனா மாதிரி அழ போறிங்களா? அர்ச்சனா மாதிரி காலில் விழ போறிங்களா?" என்றான் ஆகாஷ்.
"அர்ச்சனா காலில் விழுந்தாளா அது என்ன கதை" என்று தனலட்சுமி கேட்க,
"அதுவாக்கா நான் சொல்றேன்" என்று கண்ணாத்தாள் நடந்ததை சொல்லி முடித்தாள்.
"குழந்தை என்றதும்தான் எனக்கு ஞாபகம்" என்றவள் அறைக்கு சென்று தன் மகனை கொண்டு வந்து தங்கை மடியில் வைத்தாள் தனலட்சுமி.
"அக்கா... உன்னை மாதிரியே அழகாக இருக்கான் உன் புள்ளை" என்ற கண்ணாத்தாள் "சித்தியை பாரு சித்தியை பாரு" என்றாள்.
"உம் பேருதான் அவனுக்கும் மாய கண்ணன்" என்று தனலட்சுமி கூறினாள்.
Message…