snehasree
SM Exclusive
அர்ச்சனாவும், தனலட்சுமியும் எதை பற்றியும் கவலைபடாமல் முன்வரிசையில் சென்று அமர்ந்து கொள்ள அருகில் குழந்தைகளுடன் அமர்ந்து கொண்டார்கள் அவர்களின் கணவன்கள்.
அவர்கள் அருகில் வந்த இரு வீட்டு உறவினர்கள் நான்கு பேரையும் சுற்றி வளைத்து நின்றனர்.
தனலட்சுமியும், அர்ச்சனாவும் எழுந்து பயந்தபடி நிற்க,
"உன்னை யார்டி இங்கே கூப்பிட்டது?" என்று தன் மகளை பார்த்து கேட்டார் மரகதம்.
"அம்மா" என்று அதிர்ந்து கேட்டபடி அர்ச்சனா நிற்க,
"உன்னையும்தான்" என்று தனலட்சுமியை பார்த்து கேட்டார் மாடசாமி.
"அப்பா" என்று அதிர்ந்து கேட்டாள் தனலட்சுமி.
"உங்கள் உறவு வேண்டாம் என்று நாங்கள் ஒதுக்கி வைத்து விட்டோமே அதனால்தானே கல்யாணத்திற்கு கூட அழைக்க இல்லையே. இப்பொழுது ஏன் வந்தீங்க" என்றார் மாணிக்கம்.
"பெற்ற அப்பா, அம்மா, சொந்தம் என்று எதுவும் வேண்டாம் என்று போய்விட்டு இப்பொழுது எதற்கு வந்து நிற்கிறாய் அர்ச்சனா" என்றார் மரகதம்.
"உனக்கு கீழே ஒரு தங்கை இருக்கிறாள் என்று துளியும் யோசிக்காமல் போய் விட்டு இப்பொழுது ஏன் வந்து நிற்கிறாய்" என்றார் சண்முகம்.
"ஜனங்கள் வருகிற நேரம் ஆச்சு. சட்டுபுட்டுன்னு கிளம்புங்கள்" என்றார் செல்வராஜ்.
இரு வீட்டு சொந்தங்களும் சரமாரியாக தாக்க இருவரும் நிலை குலைந்து நின்றனர்.
அர்ச்சனா தைரியம் வந்தவளாய் அவர்களை எல்லாம் பார்த்து,
"நாங்கள் செஞ்சது தப்புதான். என் வாழ்க்கையை பற்றி யோசித்த நான் அண்ணனை பற்றி யோசிக்கவில்லை. நாங்கள் அதை ஏற்றுக் கொள்கிறோம். நான் அதற்காக இத்தனை வருடம் உங்களை விட்டு பிரிந்து தண்டணையை அனுபவித்து விட்டேன். அண்ணாவுக்கும் திருமணம் முடிந்து விட்டது. இனியாவது எங்களை மன்னித்து ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று கண்ணீர் மல்க கெஞ்சினாள் அர்ச்சனா.
"ஆமாம். கண்ணாவை பற்றி நினைக்காமல் நான் என் வாழ்க்கையை பற்றி மட்டும் யோசித்து தப்பு செய்து விட்டேன். நான் உங்களுக்கும் சரி அதை விட மிகபெரிய தண்டணையை அவளுக்கு கொடுத்து விட்டேன். நான் அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இப்பொழுது அவளுக்கு மேரேஜ் ஆகிவிட்டது அல்லவா. இனியாவது எங்களை மன்னித்து ஏற்று கொள்ளுங்கள்" என்றாள் தனலட்சுமி.
"நீங்கள் இப்பொழுது மன்னிப்பு கேட்டால் எல்லாம் சரியாகி விடுமா? உங்களால் நாங்கள் அனுபவித்த துன்பம், எங்களை பிரிந்த துன்பம் எல்லாம் போய் விடுமா?" என்றார் மாடசாமி.
"இல்லைதான் ஆனால் இனி மேலும் நாம் பிரிந்து அதே கஷ்டத்தை அனுபவிக்க வேண்டுமா?" என்றாள் அர்ச்சனா.
"உங்கள் எல்லோரையும் விட, எங்களை விட அதிக பாதிப்பு அடைஞ்சவள் கண்ணாதான். அவளை எங்களிடம் போக சொல்ல சொல்லுங்க. நாங்கள் மறுபேச்சு இல்லாமல் சென்று விடுகிறோம்" என்றாள் தனலட்சுமி.
கண்ணாத்தாள் நடப்பதை எல்லாம் நின்று பார்த்து கொண்டிருக்க அவளிடம் எல்லோருடைய பார்வை திரும்பியது.
"சொல்லு கண்ணா. நாங்கள் செஞ்சது தப்பு. நாங்கள் இங்கே இருக்க கூடாது. நாங்கள் போக வேண்டும் என்றால் சொல். நாங்கள் கிளம்பறோம்" என்றாள் தனலட்சுமி.
"சொல்லு கண்ணா தைரியமாக உன் முடிவை உன் வாயாலே சொல்லி விடு" என்றார் மாடசாமி.
"போதும்பா... என் பதிலை நேற்றே சொல்லிட்டேனே. நீங்க எல்லோரும் சம்மதிச்சிட்டிங்க. இப்பொழுது திரும்ப ஒரு முறையா?" என்று தன் தந்தையை பார்த்து சிரித்தபடி கூறினாள் கண்ணாத்தாள்.
Message…
அவர்கள் அருகில் வந்த இரு வீட்டு உறவினர்கள் நான்கு பேரையும் சுற்றி வளைத்து நின்றனர்.
தனலட்சுமியும், அர்ச்சனாவும் எழுந்து பயந்தபடி நிற்க,
"உன்னை யார்டி இங்கே கூப்பிட்டது?" என்று தன் மகளை பார்த்து கேட்டார் மரகதம்.
"அம்மா" என்று அதிர்ந்து கேட்டபடி அர்ச்சனா நிற்க,
"உன்னையும்தான்" என்று தனலட்சுமியை பார்த்து கேட்டார் மாடசாமி.
"அப்பா" என்று அதிர்ந்து கேட்டாள் தனலட்சுமி.
"உங்கள் உறவு வேண்டாம் என்று நாங்கள் ஒதுக்கி வைத்து விட்டோமே அதனால்தானே கல்யாணத்திற்கு கூட அழைக்க இல்லையே. இப்பொழுது ஏன் வந்தீங்க" என்றார் மாணிக்கம்.
"பெற்ற அப்பா, அம்மா, சொந்தம் என்று எதுவும் வேண்டாம் என்று போய்விட்டு இப்பொழுது எதற்கு வந்து நிற்கிறாய் அர்ச்சனா" என்றார் மரகதம்.
"உனக்கு கீழே ஒரு தங்கை இருக்கிறாள் என்று துளியும் யோசிக்காமல் போய் விட்டு இப்பொழுது ஏன் வந்து நிற்கிறாய்" என்றார் சண்முகம்.
"ஜனங்கள் வருகிற நேரம் ஆச்சு. சட்டுபுட்டுன்னு கிளம்புங்கள்" என்றார் செல்வராஜ்.
இரு வீட்டு சொந்தங்களும் சரமாரியாக தாக்க இருவரும் நிலை குலைந்து நின்றனர்.
அர்ச்சனா தைரியம் வந்தவளாய் அவர்களை எல்லாம் பார்த்து,
"நாங்கள் செஞ்சது தப்புதான். என் வாழ்க்கையை பற்றி யோசித்த நான் அண்ணனை பற்றி யோசிக்கவில்லை. நாங்கள் அதை ஏற்றுக் கொள்கிறோம். நான் அதற்காக இத்தனை வருடம் உங்களை விட்டு பிரிந்து தண்டணையை அனுபவித்து விட்டேன். அண்ணாவுக்கும் திருமணம் முடிந்து விட்டது. இனியாவது எங்களை மன்னித்து ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று கண்ணீர் மல்க கெஞ்சினாள் அர்ச்சனா.
"ஆமாம். கண்ணாவை பற்றி நினைக்காமல் நான் என் வாழ்க்கையை பற்றி மட்டும் யோசித்து தப்பு செய்து விட்டேன். நான் உங்களுக்கும் சரி அதை விட மிகபெரிய தண்டணையை அவளுக்கு கொடுத்து விட்டேன். நான் அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இப்பொழுது அவளுக்கு மேரேஜ் ஆகிவிட்டது அல்லவா. இனியாவது எங்களை மன்னித்து ஏற்று கொள்ளுங்கள்" என்றாள் தனலட்சுமி.
"நீங்கள் இப்பொழுது மன்னிப்பு கேட்டால் எல்லாம் சரியாகி விடுமா? உங்களால் நாங்கள் அனுபவித்த துன்பம், எங்களை பிரிந்த துன்பம் எல்லாம் போய் விடுமா?" என்றார் மாடசாமி.
"இல்லைதான் ஆனால் இனி மேலும் நாம் பிரிந்து அதே கஷ்டத்தை அனுபவிக்க வேண்டுமா?" என்றாள் அர்ச்சனா.
"உங்கள் எல்லோரையும் விட, எங்களை விட அதிக பாதிப்பு அடைஞ்சவள் கண்ணாதான். அவளை எங்களிடம் போக சொல்ல சொல்லுங்க. நாங்கள் மறுபேச்சு இல்லாமல் சென்று விடுகிறோம்" என்றாள் தனலட்சுமி.
கண்ணாத்தாள் நடப்பதை எல்லாம் நின்று பார்த்து கொண்டிருக்க அவளிடம் எல்லோருடைய பார்வை திரும்பியது.
"சொல்லு கண்ணா. நாங்கள் செஞ்சது தப்பு. நாங்கள் இங்கே இருக்க கூடாது. நாங்கள் போக வேண்டும் என்றால் சொல். நாங்கள் கிளம்பறோம்" என்றாள் தனலட்சுமி.
"சொல்லு கண்ணா தைரியமாக உன் முடிவை உன் வாயாலே சொல்லி விடு" என்றார் மாடசாமி.
"போதும்பா... என் பதிலை நேற்றே சொல்லிட்டேனே. நீங்க எல்லோரும் சம்மதிச்சிட்டிங்க. இப்பொழுது திரும்ப ஒரு முறையா?" என்று தன் தந்தையை பார்த்து சிரித்தபடி கூறினாள் கண்ணாத்தாள்.
Message…