• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

En kaadhal kanmaniye-16

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
மாணிக்கம் மாமா கேள்வி கேட்டபின் அனைவரும் ஆனந்தனை பதிலுக்காக பார்த்தார்கள்

"இப்பொழுது ரிசப்ஷனுக்கு மட்டும். நீங்கள் எல்லோரும் அவர்களை மன்னித்தால் நம் குடும்பத்திலும் சேர்த்து கொள்ளலாம்" என்றான் ஆனந்தன்.

"ஆக ஒரு முடிவுடன்தான் ரெண்டு பேரும் பேச வந்து இருக்கீங்க." என்றார் மரகதம்.

"நாங்கள் எல்லாவற்றையும் மறந்து விட்டோம். நீங்களும் அப்படியே செய்ய வேண்டும் என்று சொல்றிங்க" என்று கோபத்துடன் கேட்டார் மாணிக்கம்.

"என்னம்மா இதெல்லாம்? யாரிடம் என்ன பேசுகிறோம் என்று தெரியுதா?" என்று கேட்டார் மாடசாமி.

"நாங்கள் யாரையும் மறக்க சொல்லவே இல்லை. அவர்கள் தப்பு செய்தார்கள் அதற்காக நம் எல்லோரையும் பிரிந்து இத்தனை வருடம் கஷ்டமும் பட்டுட்டாங்க. நீங்களும் வெளியில் காட்டவில்லை என்றாலும் உள்ளுக்குள் உங்களுக்கும் வேதனை இருக்கிறது. மனசுக்குள் வைத்து கஷ்டபடறதை விட அவர்களை மன்னித்து ஏற்று கொள்ளலாம் என்றுதான் சொல்கிறோம்" என்றான் ஆனந்தன்.

"அவள் மன்னிக்கிற மாதிரியான காரியத்தையா செய்து இருக்கிறாள். அவளால்தான் உன் அப்பா இறந்து விட்டார். நீ அதை மறக்கவில்லை என்று நினைக்கிறேன்" என்றார் மரகதம்.

"நான் மறக்கவில்லை அம்மா. அப்பா இறந்ததை மறக்க இல்லை அதேசமயம் அதையே நினைத்து கொண்டு அவர்களை எதிரியாக பார்த்து கொண்டு இருக்க விரும்பவில்லை." என்றான் ஆனந்தன்.

"உன் அப்பா செத்து போனது அவளால்தான் ஆனந்தா. நீ வேண்டுமென்றால் அதை மறந்து ஏற்று கொள்ளலாம். என்னால் அவ்வளவு சீக்கீரத்தில் ஏற்றுக் கொள்ள முடியாது" என்றார் மரகதம்.

"என்னம்மா... நீ என்ன சொல்ல போகிறாய்?" என்று அவளை பார்த்து கேட்டார் மாடசாமி.

"எனக்கும் அவர் சொல்கிறது சரிதான் என்று தோணுகிறது அப்பா. அக்காவை மன்னித்து ஏற்று கொள்ளலாம். அக்கா பாவம்பா" என்று கண்ணாத்தாள் சொல்லி விட்டு பார்த்தாள்.

"அம்மா... அவள் ஒடி போயி கல்யாணம் செய்யாமல் நாம் கல்யாணம் பன்னி வைத்து அப்பொழுது அப்பா இறந்து இருந்தால் என்ன செய்து இருப்பீர்கள்." என்று கேட்டான் ஆனந்தன்.

ஆனந்தன் அம்மா தடுமாற,
"அம்மா... அவள் காதல் கல்யாணம் செய்ததால் நமக்கு தலைகுனிவு ஏற்பட்டது, என் கல்யாணம் தடைபட்டது எல்லாம் உண்மைதான் ஆனால் அவர்கள் குறை சொன்னார்கள் தவிர தீர்வு சொல்லவில்லை" என்றான் ஆனந்தன்.

"எனக்கும் அவங்க சொல்றது சரியாகத்தான் படுது அண்ணா. தனா செய்த தப்புக்காக நம்மில் அதிகம் கஷ்டபட்டவள் கண்ணாதான். அவள் மனதில் கவலை இருந்தாலும், நாம் சொல்வது பிடிக்கவில்லை என்றாலும் நமக்காக செய்தாள். தனாவும் இந்த கல்யாணத்தை தவிர வேறு எதிலும் தப்பு செய்யவே இல்லையே அண்ணா" என்று மீனாட்சி அத்தை ஆதரவாக பேசினாள்.

"இவளை நான் எப்பொழுதும் குறை சொல்லவே மாட்டேன். கண்ணா ஒரு தங்கம். அவள் அப்படி இல்லையே ஊர் முன்னாடி மானத்தை வாங்கி விட்டாளே" என்றார் மாடசாமி.

"நானும் அதைதான் சொல்ல வருகிறேன். உனக்காக எது வேண்டுமானாலும் கேள். நாங்கள் மறுக்காமல் செய்து விடுகிறோம் ஆனால் அவளை சேர்த்துக்க சொல்லாதே" என்றார் மரகதம்.

"அம்மா... எங்க சந்தோஷமே அவர்களை நீங்க மன்னித்து ஏற்று கொள்ள வேண்டும். அவர்களும் நாளை நடக்கும் ரிசப்ஷனில் மூணாவது மனுஷியாக இல்லாமல் எங்கள் கூட பிறந்தவர்களாக அதில் கலந்து எங்களுடன் இருக்க வேண்டும்" என்றான் ஆனந்தன்.

"நீங்க ரெண்டுபேரும் முன்னரே பேசி வைத்துவிட்டு வந்துதான் பேச துவங்கி உள்ளீர்கள். உங்களை மாதிரி உடனே எங்களால் சரி என்று அவர்களை ஏற்று கொள்ள முடியாது. நாங்கள் யோசித்து நாளை சொல்கிறோம்." என்றார் மாடசாமி.

"சம்மந்தி நான் நினைத்ததை சொல்லி விட்டார். நானும் நாளை சொல்கிறேன்" என்று மரகதம் சொல்ல அனைவரும் தங்கள் அறைக்கு சென்றார்கள்.

"அம்மாடி! இவ்வளவு நேற்று ராத்திரி நடந்ததா?" என்று ஆச்சரியமாக கேட்டாள் அர்ச்சனா.

"மாமா கலக்கீட்டிங்க போங்க. கண்ணா நீயும்தான். எங்கள் இருவருக்காக தில்லாக பேசி இருக்கீங்க. உங்கள் இரண்டு பேரையும் எப்படி பாரட்டறது என்று தெரியவில்லை" என்றாள் தனலட்சுமி

"அர்ச்சனா! இனிதான் உங்கள் ரெண்டு பேரின் ஹஸ்பென்ட்ஸ் பற்றி வருகிறது அதையும் கேட்டுட்டு மொத்தமாக ஆச்சரியபடுங்க" என்றாள் ரஞ்சிதா.
Message…
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
"எங்க ஆளுக வேறா? அவங்க என்ன பன்னாங்க?" என்று தனலட்சுமி கேட்டுவிட்டு தன் கணவனை பார்க்க, அர்ச்சனா தன் கணவனை பார்த்தாள்.

"என்ன பன்னாங்களா? அவர்கள் இரண்டு பேரும் தில்லாக வந்து பேசிகலக்கிட்டாங்க. சரி நான் அதையும் சொல்கிறேன்.ரெண்டு பேரும் கேளுங்க" என்று காலையில் நடந்தவற்றை சொல்ல ஆரம்பித்தாள் ரஞ்சிதா.

காலை வேளை டிபன் முடித்த பின்னர் அனைவரும் ஹாலில் அமர்ந்து இருந்தார்கள்.

காலிங் பெல் அடிக்கும் சப்தம் கேட்க கண்ணாத்தாள் சென்று கதவை திறந்தாள்.

"நாங்கள் உள்ளே வரலாமா?" என்று கேட்டபடி வாசலில் நின்றிருந்தார்கள் தனசேகர் மற்றும் ஆகாஷ்.

"ம்" என்று அவள் தலையசைக்க தனசேகர் உடன் ஆகாஷ் உள்ளே வந்தார்கள்.

அவர்கள் இருவரையும் இரு வீட்டு குடும்பத்தாரும் பல கேள்விகளுடன் பார்த்தார்கள்.

அவர்கள் பார்வை ஆனந்தன் மீது விழ இரு வீட்டாரின் பார்வை அவனை நோக்கி விட்டு பின் கண்ணாத்தாளையும் பார்த்து விட்டு பின் ஆகாஷ் மற்றும் தனசேகர் மேல் பாய்ந்தது.

"உங்கள் எல்லோருக்கும் எங்களை ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். நான் அர்ச்சனாவின் கணவன் ஆகாஷ். இவன் தனலட்சுமியின் கணவன் தனசேகர்" என்றான் ஆகாஷ்.

மறக்ககூடிய ஆளுகளா நீங்கள் என்று எல்லோரின் மனதிலும் தோன்றியது.

"எதற்கு இதை இப்பொழுது இங்கே வந்து சொல்கிறோம் என்று பார்க்கிறிங்களா. எங்கள் மனைவிகளின் நலனுக்காக நாங்கள் பேச வந்திருக்கிறோம். என் மனைவி தனாவையும் சரி அவனின் மனைவி அர்ச்சனாவையும் சரி நாங்கள் முடிந்த அளவு நல்லா வைத்திருக்க முயற்சி செய்து வருகிறோம். எங்களால் பண விஷயத்தில் அவர்களுக்கு எந்த வித குறையும் இல்லாமல் பார்த்து கொள்ள முடிந்தது" என்று தனசேகர் நிறுத்தினான்.

"அவர்களை எங்க அன்பால் திருப்திபடும் அளவுக்கு அன்பு செய்ய முடிந்தது. அவர்கள் மனம் அப்பா, அம்மா, அண்ணன், தங்கை, மாமா, அத்தை என்ற சொந்தங்களுக்காக ஏங்குகிறது. எங்கள் சொந்தங்கள் என்னதான் அன்பு காட்டினாலும் அவர்கள் விரும்பும் அன்பு உங்களின் அன்பாகத்தான் இருக்கிறது." என்றான் ஆகாஷ்.

"அவர்கள் பிரசவத்தின் போதும் சரி வளைகாப்பின் போதும் சரி அவர்கள் ஏக்கத்தை உணர முடிந்தது. இப்பொழுது நடந்த கல்யாணத்தின்போது கூட அது தெரிந்தது. நாங்கள் இருவரும் அதனால் ஒரு முடிவுக்கு வந்த காரணத்தினால்தான் இங்கே பேச வந்திருக்கிறோம். " என்றான் தனசேகர்.

"நீங்கள் எல்லோரும் எங்களை மன்னித்து ஏற்று கொள்ள வேண்டும். உங்களால் அதை உடனடியாக செய்ய முடியாது என்று எங்களுக்கும் தெரியும். நாங்கள் உங்கள் வீட்டுக்கு வந்து உறவு கொண்டாட அனுமதி கேட்க முடியாது ஆனால் எங்களை மன்னித்து இந்த மாதிரி நிகழ்ச்சிகளிலாவது கலந்து உறவாக இருக்க அனுமதி கேட்கிறோம்" என்றான் ஆகாஷ்.

ஆகாஷ் மற்றும் தனசேகரின் பேச்சும், நேற்று ஆனந்தன் மற்றும் கண்ணாத்தாளின் வேண்டுகோளும் ஒன்றைதான் அவர்களுக்கு உணர்த்தியது. அவர்கள் கேட்பது எதிரியாக இருக்கும் மனோபாவத்தை கைவிட்டு குறைந்த பட்ச அன்பை காட்ட வேண்டும் என்பதே அது.

இரு வீட்டு சொந்தங்களும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள்.

"நாங்கள் எல்லோரும் கொஞ்சம் கலந்து பேசி விட்டு வந்து எங்கள் முடிவை சொல்கிறோம். கொஞ்சம் இங்கே காத்திருங்க" என்றார் மாடசாமி.

"எனக்கும் அவர் சொல்வதுதான் சரி என்று படுகிறது. நாங்கள் கலந்து பேசிதான் ஒரு முடிவு சொல்ல முடியும்" என்றார் ஆனந்தன் மாமா மாணிக்கம்.

இரு வீட்டு சொந்தங்களும் எழுந்து அருகில் உள்ள அறைக்கு சென்று கதவை மூடி கொண்டனர்.
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
ஹாலில் இருந்த ஆகாஷ் மற்றும் தனசேகர் அவர்கள் வந்து என்ன சொல்ல போகிறார்களோ என்று யோசித்தபடி இருந்தனர்.

அரைமணி நேரத்திற்கு பிறகு கதவை திறந்து கொண்டு வந்த இரு வீட்டு சொந்தங்கள் தங்கள் இடங்களில் உட்கார்ந்து கொண்டார்கள்.

ஆகாஷ் மற்றுப் தனசேகர் அவர்களை ஆவலுடன் பார்க்க மாணிக்கம் மாமாதான் பேச்சை துவக்கினார்.

"நீங்கள் சொல்கிறதை நாங்கள் ஏற்று கொள்கிறோம் அதே நேரத்தில் நாங்கள் அந்த கால மனிதர்கள். எங்களால் உடனே உங்கள் தவறுகளை மன்னிக்க முடியும் என்று சொல்ல முடியாது. அர்ச்சனாவையும் சரி தனாவையும் சரி உடனே எங்களால் ஏற்று கொள்ள முடியாது. நீங்கள் பேசியதில் உள்ள உண்மையையும், நியாயத்தையும் நாங்கள் மதிக்கிறோம். நீங்கள் எங்கள் வீட்டு பெண்களை நல்லா பார்த்து கொள்கிறீர்கள் என்று தெரிகிறது.எங்கள் வீட்டு பெண்களுக்காக வீடு தேடி வந்து பேசியீருக்கீறீர்கள். நேற்று இரவு ஆனந்தனும் கண்ணாத்தாளும் கூட இதை பற்றி பேசினார்கள். " என்று மாணிக்கம் மாமா நிறுத்தி விட்டு கண்ணாத்தாள் அப்பா மாடசாமியை பார்த்தார்.

"நாங்கள் வாழ்ந்து முடித்து விட்டோம். இனி வாழ போகும் உங்களின் ஆசையை மதித்து அவர்களை மன்னிக்கிறோம். நீங்கள் தாரளமாக ரிசப்ஷனில் கலந்து கொள்ளுங்கள் ஆனால் எங்கள் மனம் மாறும் வரை உங்கள் வீட்டுக்கு நாங்கள வர இயலாது. எங்கள் வீட்டுக்கு உங்களை அழைக்க முடியாது. அதை நீங்கள் ஏற்று கொள்ள வேண்டும். வெளியிடங்களில் நாம் சந்தித்து பழகி வரலாம். எங்கள் மனம் மாறியபின் நிரந்தர உறவு கொள்ளலாம். என்ன சரியா?" என்று கேட்டு விட்டு மாடசாமி அவர்களை பார்த்தார்.

"தற்போதைக்கு இதுவே போதும் எங்களுக்கு" என்று மகிழ்ச்சியாக ஆகாஷ் சொல்லிவிட்டு சிரித்தான்.

"இந்த அளவுக்கு எங்களை புரிந்து கொண்டு எங்கள் கோரிக்கையை ஏற்று கொண்டதற்கு நன்றி" என்றான் தனசேகர்.

"நன்றி எங்களுக்கு சொல்ல வேண்டாம். உங்களுக்காக எங்களிடம் பேசிய இவர்களுக்கு சொல்லுங்கள்" என்ற மாடசாமி அருகிலிருந்த ஆனந்தன் மற்றும் கண்ணாத்தாளை பார்த்து சொன்னார்.

"கண்டிப்பாக சொல்லியாக வேண்டும். எங்களை முதலில் மன்னித்து ஏற்றுகொண்டு, பின் எங்களுக்காக பேசிவிட்டு, எங்களையும் பேச சொன்ன அவங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்" என்றான் ஆகாஷ்.

"நீங்கள் எங்களுக்கு செய்த உதவிகளுக்கு நன்றி ஆனந்த். நன்றி சிஸ்டர்" என்று தனசேகர் அவர்களை பார்த்து நன்றி சொன்னான்.

"நாங்கள் எங்களுக்கு சரி என்று பட்ட ஒன்றை செய்ய முயற்சி செய்தோம் ஆனால் அதை ஏற்று கொண்டு சம்மதித்தற்கு அப்பா, அம்மா,மாமா,அத்தை,அண்ணா எல்லோருக்கும் நன்றி. நாங்கள் சொன்னதை கேட்டு பேச வந்த உங்களுக்கும் நன்றி" என்றாள் கண்ணாத்தாள்.

"சரி... இப்படியே பேசி கொண்டு நின்றால் எப்படி? தம்பிகளா... நீங்கள் போயி ரிசப்ஷன் ரெடி ஆகி வாங்க." என்றார் சண்முகம்.

"அப்புறம் அவங்களுக்கு இதை பற்றி சொல்லாமல் அழைத்து கொண்டு வாங்க. இங்கே வந்து சர்பரைஸ் தருவோம்" என்றார் அத்தை மீனாட்சி.

"சரி அப்படியே செய்கிறோம்" என்று சொல்லிவிட்டு ஆகாஷ் மற்றும் தனசேகர் கிளம்பி சென்றார்கள்.

"இதுதான் நடந்தது அர்ச்சனா" என்று ரஞ்சிதா சொல்லிவிட்டு அவர்களை பார்த்தாள்.

ரஞ்சிதா சொன்னதை எல்லாம் கேட்டு முடித்த அர்ச்சனாவும் தனலட்சுமீயும் தங்கள் கணவண்களை பிரமிப்பாக பார்த்தார்கள்.

"என்னம்மா... கதை எல்லாம் கேட்டாச்சா? இப்ப திருப்தியா? அங்கே மண்டபத்தில் ஆளுக வர ஆரம்பிச்சிட்டாங்க. அர்ச்சனா... தனா... ரஞ்சிதா... நீங்கள் ரெண்டுபேரும் கண்ணாவை கூட்டிட்டு ஸ்டேஜ்க்கு போங்க." என்றார் அத்தை மீனாட்சி.

"சரிங்க அத்தை" என்று சொன்ன அவர்கள் மூவரும் கண்ணாத்தாளை அழைத்து கொண்டு மேடைக்கு சென்றனர்.

"மாப்பிள்ளைகளா நீங்களும்... அருண்... நீங்க ஆனந்தை கூட்டிட்டு வாங்க" என்றதும் அவர்கள் மூவரும் ஆனந்தை அழைத்து கொண்டு மேடைக்கு சென்றனர்.

ஆனந்தன் கண்ணாத்தாள் இருவரும் மேடைக்கு வந்து எல்லோருக்கும் வணக்கம் செலுத்தி வாழ்த்தை ஏற்க ஜோடியாக நின்றனர்.

Write your reply...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஹலோ, இரண்டு "மா"னாவும்
ஓவராத்தேன் பந்தா பண்ணி
கெத்து காட்டுறாய்ங்க,
சினேகாஸ்ரீ டியர்
 




Last edited:

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
@smteam @banumathi jayaraman @Thendral @Sandhiya @Shanthini @Dsk @radhaviswa @Kavyajaya @chitrasaraswati @Vijaya @Riha @Mathiman @Inool @sridevi @ORANGE @vadivelammal @Pradeep @mila @saroja @Madhumathi @Arya @Nadarajan @kaivalya @Anitha @shamla @aadhira @anisiva @Aparna @Puvi @Premalatha @Keerthi @Monisha @Zainab @Suvitha @Lakshmi @Sindhu @Sameera @sakthipriya மற்றும் பிற நண்பர்களே பெயர் குறிப்பிடவில்லை என்றாலும் மன்னித்து எல்லோரும் எங்கள் கண்ணாத்தாள் ஆனந்தனை வந்து வாழ்த்திவிட்டு அறுசுவை விருந்து சாப்பிட்டுவிட்டு செல்லுங்கள் Write your reply...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top