snehasree
SM Exclusive
மாணிக்கம் மாமா கேள்வி கேட்டபின் அனைவரும் ஆனந்தனை பதிலுக்காக பார்த்தார்கள்
"இப்பொழுது ரிசப்ஷனுக்கு மட்டும். நீங்கள் எல்லோரும் அவர்களை மன்னித்தால் நம் குடும்பத்திலும் சேர்த்து கொள்ளலாம்" என்றான் ஆனந்தன்.
"ஆக ஒரு முடிவுடன்தான் ரெண்டு பேரும் பேச வந்து இருக்கீங்க." என்றார் மரகதம்.
"நாங்கள் எல்லாவற்றையும் மறந்து விட்டோம். நீங்களும் அப்படியே செய்ய வேண்டும் என்று சொல்றிங்க" என்று கோபத்துடன் கேட்டார் மாணிக்கம்.
"என்னம்மா இதெல்லாம்? யாரிடம் என்ன பேசுகிறோம் என்று தெரியுதா?" என்று கேட்டார் மாடசாமி.
"நாங்கள் யாரையும் மறக்க சொல்லவே இல்லை. அவர்கள் தப்பு செய்தார்கள் அதற்காக நம் எல்லோரையும் பிரிந்து இத்தனை வருடம் கஷ்டமும் பட்டுட்டாங்க. நீங்களும் வெளியில் காட்டவில்லை என்றாலும் உள்ளுக்குள் உங்களுக்கும் வேதனை இருக்கிறது. மனசுக்குள் வைத்து கஷ்டபடறதை விட அவர்களை மன்னித்து ஏற்று கொள்ளலாம் என்றுதான் சொல்கிறோம்" என்றான் ஆனந்தன்.
"அவள் மன்னிக்கிற மாதிரியான காரியத்தையா செய்து இருக்கிறாள். அவளால்தான் உன் அப்பா இறந்து விட்டார். நீ அதை மறக்கவில்லை என்று நினைக்கிறேன்" என்றார் மரகதம்.
"நான் மறக்கவில்லை அம்மா. அப்பா இறந்ததை மறக்க இல்லை அதேசமயம் அதையே நினைத்து கொண்டு அவர்களை எதிரியாக பார்த்து கொண்டு இருக்க விரும்பவில்லை." என்றான் ஆனந்தன்.
"உன் அப்பா செத்து போனது அவளால்தான் ஆனந்தா. நீ வேண்டுமென்றால் அதை மறந்து ஏற்று கொள்ளலாம். என்னால் அவ்வளவு சீக்கீரத்தில் ஏற்றுக் கொள்ள முடியாது" என்றார் மரகதம்.
"என்னம்மா... நீ என்ன சொல்ல போகிறாய்?" என்று அவளை பார்த்து கேட்டார் மாடசாமி.
"எனக்கும் அவர் சொல்கிறது சரிதான் என்று தோணுகிறது அப்பா. அக்காவை மன்னித்து ஏற்று கொள்ளலாம். அக்கா பாவம்பா" என்று கண்ணாத்தாள் சொல்லி விட்டு பார்த்தாள்.
"அம்மா... அவள் ஒடி போயி கல்யாணம் செய்யாமல் நாம் கல்யாணம் பன்னி வைத்து அப்பொழுது அப்பா இறந்து இருந்தால் என்ன செய்து இருப்பீர்கள்." என்று கேட்டான் ஆனந்தன்.
ஆனந்தன் அம்மா தடுமாற,
"அம்மா... அவள் காதல் கல்யாணம் செய்ததால் நமக்கு தலைகுனிவு ஏற்பட்டது, என் கல்யாணம் தடைபட்டது எல்லாம் உண்மைதான் ஆனால் அவர்கள் குறை சொன்னார்கள் தவிர தீர்வு சொல்லவில்லை" என்றான் ஆனந்தன்.
"எனக்கும் அவங்க சொல்றது சரியாகத்தான் படுது அண்ணா. தனா செய்த தப்புக்காக நம்மில் அதிகம் கஷ்டபட்டவள் கண்ணாதான். அவள் மனதில் கவலை இருந்தாலும், நாம் சொல்வது பிடிக்கவில்லை என்றாலும் நமக்காக செய்தாள். தனாவும் இந்த கல்யாணத்தை தவிர வேறு எதிலும் தப்பு செய்யவே இல்லையே அண்ணா" என்று மீனாட்சி அத்தை ஆதரவாக பேசினாள்.
"இவளை நான் எப்பொழுதும் குறை சொல்லவே மாட்டேன். கண்ணா ஒரு தங்கம். அவள் அப்படி இல்லையே ஊர் முன்னாடி மானத்தை வாங்கி விட்டாளே" என்றார் மாடசாமி.
"நானும் அதைதான் சொல்ல வருகிறேன். உனக்காக எது வேண்டுமானாலும் கேள். நாங்கள் மறுக்காமல் செய்து விடுகிறோம் ஆனால் அவளை சேர்த்துக்க சொல்லாதே" என்றார் மரகதம்.
"அம்மா... எங்க சந்தோஷமே அவர்களை நீங்க மன்னித்து ஏற்று கொள்ள வேண்டும். அவர்களும் நாளை நடக்கும் ரிசப்ஷனில் மூணாவது மனுஷியாக இல்லாமல் எங்கள் கூட பிறந்தவர்களாக அதில் கலந்து எங்களுடன் இருக்க வேண்டும்" என்றான் ஆனந்தன்.
"நீங்க ரெண்டுபேரும் முன்னரே பேசி வைத்துவிட்டு வந்துதான் பேச துவங்கி உள்ளீர்கள். உங்களை மாதிரி உடனே எங்களால் சரி என்று அவர்களை ஏற்று கொள்ள முடியாது. நாங்கள் யோசித்து நாளை சொல்கிறோம்." என்றார் மாடசாமி.
"சம்மந்தி நான் நினைத்ததை சொல்லி விட்டார். நானும் நாளை சொல்கிறேன்" என்று மரகதம் சொல்ல அனைவரும் தங்கள் அறைக்கு சென்றார்கள்.
"அம்மாடி! இவ்வளவு நேற்று ராத்திரி நடந்ததா?" என்று ஆச்சரியமாக கேட்டாள் அர்ச்சனா.
"மாமா கலக்கீட்டிங்க போங்க. கண்ணா நீயும்தான். எங்கள் இருவருக்காக தில்லாக பேசி இருக்கீங்க. உங்கள் இரண்டு பேரையும் எப்படி பாரட்டறது என்று தெரியவில்லை" என்றாள் தனலட்சுமி
"அர்ச்சனா! இனிதான் உங்கள் ரெண்டு பேரின் ஹஸ்பென்ட்ஸ் பற்றி வருகிறது அதையும் கேட்டுட்டு மொத்தமாக ஆச்சரியபடுங்க" என்றாள் ரஞ்சிதா.
Message…
"இப்பொழுது ரிசப்ஷனுக்கு மட்டும். நீங்கள் எல்லோரும் அவர்களை மன்னித்தால் நம் குடும்பத்திலும் சேர்த்து கொள்ளலாம்" என்றான் ஆனந்தன்.
"ஆக ஒரு முடிவுடன்தான் ரெண்டு பேரும் பேச வந்து இருக்கீங்க." என்றார் மரகதம்.
"நாங்கள் எல்லாவற்றையும் மறந்து விட்டோம். நீங்களும் அப்படியே செய்ய வேண்டும் என்று சொல்றிங்க" என்று கோபத்துடன் கேட்டார் மாணிக்கம்.
"என்னம்மா இதெல்லாம்? யாரிடம் என்ன பேசுகிறோம் என்று தெரியுதா?" என்று கேட்டார் மாடசாமி.
"நாங்கள் யாரையும் மறக்க சொல்லவே இல்லை. அவர்கள் தப்பு செய்தார்கள் அதற்காக நம் எல்லோரையும் பிரிந்து இத்தனை வருடம் கஷ்டமும் பட்டுட்டாங்க. நீங்களும் வெளியில் காட்டவில்லை என்றாலும் உள்ளுக்குள் உங்களுக்கும் வேதனை இருக்கிறது. மனசுக்குள் வைத்து கஷ்டபடறதை விட அவர்களை மன்னித்து ஏற்று கொள்ளலாம் என்றுதான் சொல்கிறோம்" என்றான் ஆனந்தன்.
"அவள் மன்னிக்கிற மாதிரியான காரியத்தையா செய்து இருக்கிறாள். அவளால்தான் உன் அப்பா இறந்து விட்டார். நீ அதை மறக்கவில்லை என்று நினைக்கிறேன்" என்றார் மரகதம்.
"நான் மறக்கவில்லை அம்மா. அப்பா இறந்ததை மறக்க இல்லை அதேசமயம் அதையே நினைத்து கொண்டு அவர்களை எதிரியாக பார்த்து கொண்டு இருக்க விரும்பவில்லை." என்றான் ஆனந்தன்.
"உன் அப்பா செத்து போனது அவளால்தான் ஆனந்தா. நீ வேண்டுமென்றால் அதை மறந்து ஏற்று கொள்ளலாம். என்னால் அவ்வளவு சீக்கீரத்தில் ஏற்றுக் கொள்ள முடியாது" என்றார் மரகதம்.
"என்னம்மா... நீ என்ன சொல்ல போகிறாய்?" என்று அவளை பார்த்து கேட்டார் மாடசாமி.
"எனக்கும் அவர் சொல்கிறது சரிதான் என்று தோணுகிறது அப்பா. அக்காவை மன்னித்து ஏற்று கொள்ளலாம். அக்கா பாவம்பா" என்று கண்ணாத்தாள் சொல்லி விட்டு பார்த்தாள்.
"அம்மா... அவள் ஒடி போயி கல்யாணம் செய்யாமல் நாம் கல்யாணம் பன்னி வைத்து அப்பொழுது அப்பா இறந்து இருந்தால் என்ன செய்து இருப்பீர்கள்." என்று கேட்டான் ஆனந்தன்.
ஆனந்தன் அம்மா தடுமாற,
"அம்மா... அவள் காதல் கல்யாணம் செய்ததால் நமக்கு தலைகுனிவு ஏற்பட்டது, என் கல்யாணம் தடைபட்டது எல்லாம் உண்மைதான் ஆனால் அவர்கள் குறை சொன்னார்கள் தவிர தீர்வு சொல்லவில்லை" என்றான் ஆனந்தன்.
"எனக்கும் அவங்க சொல்றது சரியாகத்தான் படுது அண்ணா. தனா செய்த தப்புக்காக நம்மில் அதிகம் கஷ்டபட்டவள் கண்ணாதான். அவள் மனதில் கவலை இருந்தாலும், நாம் சொல்வது பிடிக்கவில்லை என்றாலும் நமக்காக செய்தாள். தனாவும் இந்த கல்யாணத்தை தவிர வேறு எதிலும் தப்பு செய்யவே இல்லையே அண்ணா" என்று மீனாட்சி அத்தை ஆதரவாக பேசினாள்.
"இவளை நான் எப்பொழுதும் குறை சொல்லவே மாட்டேன். கண்ணா ஒரு தங்கம். அவள் அப்படி இல்லையே ஊர் முன்னாடி மானத்தை வாங்கி விட்டாளே" என்றார் மாடசாமி.
"நானும் அதைதான் சொல்ல வருகிறேன். உனக்காக எது வேண்டுமானாலும் கேள். நாங்கள் மறுக்காமல் செய்து விடுகிறோம் ஆனால் அவளை சேர்த்துக்க சொல்லாதே" என்றார் மரகதம்.
"அம்மா... எங்க சந்தோஷமே அவர்களை நீங்க மன்னித்து ஏற்று கொள்ள வேண்டும். அவர்களும் நாளை நடக்கும் ரிசப்ஷனில் மூணாவது மனுஷியாக இல்லாமல் எங்கள் கூட பிறந்தவர்களாக அதில் கலந்து எங்களுடன் இருக்க வேண்டும்" என்றான் ஆனந்தன்.
"நீங்க ரெண்டுபேரும் முன்னரே பேசி வைத்துவிட்டு வந்துதான் பேச துவங்கி உள்ளீர்கள். உங்களை மாதிரி உடனே எங்களால் சரி என்று அவர்களை ஏற்று கொள்ள முடியாது. நாங்கள் யோசித்து நாளை சொல்கிறோம்." என்றார் மாடசாமி.
"சம்மந்தி நான் நினைத்ததை சொல்லி விட்டார். நானும் நாளை சொல்கிறேன்" என்று மரகதம் சொல்ல அனைவரும் தங்கள் அறைக்கு சென்றார்கள்.
"அம்மாடி! இவ்வளவு நேற்று ராத்திரி நடந்ததா?" என்று ஆச்சரியமாக கேட்டாள் அர்ச்சனா.
"மாமா கலக்கீட்டிங்க போங்க. கண்ணா நீயும்தான். எங்கள் இருவருக்காக தில்லாக பேசி இருக்கீங்க. உங்கள் இரண்டு பேரையும் எப்படி பாரட்டறது என்று தெரியவில்லை" என்றாள் தனலட்சுமி
"அர்ச்சனா! இனிதான் உங்கள் ரெண்டு பேரின் ஹஸ்பென்ட்ஸ் பற்றி வருகிறது அதையும் கேட்டுட்டு மொத்தமாக ஆச்சரியபடுங்க" என்றாள் ரஞ்சிதா.
Message…