• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

En kaadhal kanmaniye-17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
thaதம்பி ஆனந்த ...உனக்கு எல்லாம் கல்யாணம் ரொம்ப அவசியமா ??????கிரிக்கெட் மேட்ச் ரொம்ப முக்கியம் பாரு .அந்த புள்ள அங்க பாத்திரம் விளக்கிட்டு வருது ...கூட போய் ஹெல்ப் செய்து ரொமான்ஸ் செய்வோம் என்று இல்ல .பொண்டாட்டிக்கு கிரிக்கெட் தெரியாது சொல்லி கொடுப்போம் னு இல்லையே .புள்ள வேலை செஞ்சுட்டு களைச்சு போய் மடியில் தூங்கின "கையில் மிதக்கும் கனவா நீ"ன்னு தூக்கி போய் ரூமில் தூங்க வைப்போமேன்னு இல்லை ...சரியான பழம் பா நீ ......கிரிக்கெட் தான் இப்போ நாட்டுக்கு ரொம்ப முக்கியம்
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
thaதம்பி ஆனந்த ...உனக்கு எல்லாம் கல்யாணம் ரொம்ப அவசியமா ??????கிரிக்கெட் மேட்ச் ரொம்ப முக்கியம் பாரு .அந்த புள்ள அங்க பாத்திரம் விளக்கிட்டு வருது ...கூட போய் ஹெல்ப் செய்து ரொமான்ஸ் செய்வோம் என்று இல்ல .பொண்டாட்டிக்கு கிரிக்கெட் தெரியாது சொல்லி கொடுப்போம் னு இல்லையே .புள்ள வேலை செஞ்சுட்டு களைச்சு போய் மடியில் தூங்கின "கையில் மிதக்கும் கனவா நீ"ன்னு தூக்கி போய் ரூமில் தூங்க வைப்போமேன்னு இல்லை ...சரியான பழம் பா நீ ......கிரிக்கெட் தான் இப்போ நாட்டுக்கு ரொம்ப முக்கியம்
நன்றி அனிதா சிஸ்டர்
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
கல்யாணம் ஆன பெண்களுக்கு ரொட்டின் வேலை தொடங்கிடுச்சு ஆனா என்ன இந்த ஆனந்த் புது மப்பிள்ளை போல வா நடந்துக்குறான் இப்போ கருமம் புடிச்ச கிரிகட்டு ரொம்ப முக்கியாம லுசு பயா புது பொண்டாட்டி கிட்ட ஆசையா பேசி ஒருத்தர ஒருத்தர் பத்தி பேசி புரிஞ்சுக்க வேணடாமா இந்த கீரக்கு கூட இவ எப்பிடி குப்பா கொட்ட போற ??‍♀க்கும்??எல்லாம் இப்பிடி தான் அவன் மடியிலே இப்பிடியே தூங்கி காலத்தா ஒட்ட வேண்டியது தான் ஹீஹீ??
Nice ud sneha?????
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,902
Reaction score
46,328
Location
Earth
ஆனந்தனும் கண்ணாத்தாளும் மேலே மேடையில் நின்று கொண்டு வந்தவர்களிடம் பரிசு பொருட்களை வாங்கி கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தபடி நின்று கொண்டு இருந்தனர்.

ரஞ்சிதா,அர்ச்சனா,தனலட்சுமி என மாறி மாறி தம்பதிகள் அருகில் தங்கள் கணவர்களுடன் நின்று பரிசு பொருட்களை வாங்கி வைத்தனர்.

அர்ச்சனாவும், தனலட்சுமியும் நீண்டநாள் கழித்து தங்கள் சொந்தங்களுடன் சேர்ந்த காரணத்தால் அவர்கள் அப்பா,அம்மா,மாமா,அத்தை என எல்லோரிடமும் பேசி பேசி சந்தோஷபட்டனர்.

அர்ச்சனா அம்மா மரகதத்திற்கு பாசம் உள்ளுக்குள் இருந்தாலும் வெளியில் அதிகம் காட்டாமல், அதேசமயம் வெறுப்பை காட்டாமல் பேசியது அவளுக்கு மகிழ்ச்சி தந்தது.

மாணிக்கம் மாமா, விஜயா அத்தை என எல்லோரும் அர்ச்சனாவிடம் பாசத்தை காட்டினாலும் ஒரு இடைவெளி உடன் அதை காட்டினார்கள்.

இங்கே தனலட்சுமிக்கும் அதே மாதிரி அவள் அப்பா,அம்மா, மாமா,அத்தை என எல்லோரும் நன்றாக பேசினாலும் அதிக நெருக்கம் காட்டவில்லை.

ரஞ்சிதா நன்றாக நெருக்கம் காட்டி இயல்பாக பேசினாள்.

மீனாட்சி அத்தை மட்டும் அவர்கள் இருவரிடமும் மனம் விட்டு பேசி நெருக்கமான அன்பு காட்ட அர்ச்சனாவும், தனலட்சுமியும் அத்தையின் செல்ல பிள்ளைகளாக வலம் வந்தனர்.

கண்ணாத்தாளின் அருகில் சென்று அவளை கிண்டல் செய்துவிட்டு இருவரும் சிரிக்க "அக்கா உங்களை" என்று அவர்களிடம் செல்லமாக கோபம் காட்டி சிணுங்கினாள் கண்ணாத்தாள்.

"பார்றா... எங்க கண்ணாவுக்கு வரும் வெட்கத்தை" என்று தனலட்சுமி சொல்ல அதிகம் வெட்கபட்டு சிரித்தாள்.

"கண்ணா... உன்னால்தான் எங்களுக்கு இந்த சந்தோஷம் கிடைத்தது. நாம் இப்படி ஒன்றாக சேருவோம் என்று கனவிலும் நினைக்கவில்லை. எல்லாம் உன்னால்தான்டி." என்று அர்ச்சனா சொல்லும் வேளையில் அவள் கண்களில் அவ்வளவு ஆனந்தம்.

"எனக்கு இப்பொழுது எப்படி இருக்கு தெரியுமா கண்ணா? என் சந்தோஷத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை. எங்களின் இத்தனை வருட கவலையை, துக்கத்தை எல்லாம் நீ போக்கி விட்டாய் கண்ணா" என்றாள் தனலட்சுமி.

"உங்க கண்ணா மட்டும் இதை செய்யவில்லை. ஆனந்தன் அண்ணா, உங்க வீட்டுகாரர்கள் எல்லாம் சேர்ந்துதான் செய்தார்கள். உங்கள் கண்ணா அவர்களுக்கு துணைக்கு பேசினாள் அவ்வளவுதான்" என்றாள் ரஞ்சிதா.

ஆனந்தன் பக்கம் பார்வையை திருப்பிய அர்ச்சனாவும், தனலட்சுமியும் நன்றி சொல்ல வாயெடுத்தார்கள்.

"அர்ச்சனா... தனா... எனக்கும் உங்கள் மேல் கோபம் இருந்தது. உங்களை சந்தித்தபின்னரும் கோபமே இருந்து வந்தது ஆனால் நீங்கள் காட்டிய அன்பும், பாசமும் என்னை மாற்ற ஆரம்பித்தது. கண்ணாவிடம் என் மனதில் உள்ளதை சொல்ல அவள் புரிந்து கொண்டு தக்க நேரத்தில் அவள் இப்படி செய்யலாமா என்று யோசனை சொன்னாள். நான் செய்தேன். உங்களின் கணவன்களிடம் நாங்கள் பேச அவர்களும் சம்மதித்து வந்தார்கள். நீங்கள் நன்றி சொல்வது என்றால் உங்க புருஷனுக்கு சொல்லுங்கள்" என்றான் ஆனந்தன்.

ஆனந்தன் பேசி முடித்தபின், "அவங்களுக்கு வீட்டிற்கு போய் ஸ்பெஷலாக நன்றி சொல்லி கொள்கிறோம். எங்களை குடும்பத்துடன் சேர்த்து வைத்த உங்களுக்கு நன்றி" என்று கூட்டாக சொன்னார்கள் அர்ச்சனா மற்றும் தனலட்சுமி.

ஜெனிபரும், காவ்யாவும் தங்கள் பெற்றோருடன் வந்து சேர்ந்து கலக்க ஆரம்பிக்க மிக அருமையாக வரவேற்பு சிறப்பாக முடிந்தது.

தங்கள் குடும்பத்துடன் சேர்ந்து விட்ட மகிழ்ச்சியில் இருந்த தனலட்சுமியும் அர்சசனாவும் இறுதியில் பிரிவதற்கு மனமில்லாமல் பிரிந்து சென்றார்கள்.

கண்ணாத்தாளின் அப்பா, அம்மா, மாமா,அத்தை என அவளின் சொந்தங்கள் மறுநாள் இரவு கிளம்பி செல்ல பஸ் ஸ்டாண்ட் வரை சென்று அவர்களுக்கு டாட்டா காட்டிவிட்டு வீடு திரும்பினாள் கண்ணாத்தாள்.

மாமா மாணிக்கமும், அத்தை விஜயா, அருண்,ரஞ்சிதா அடுத்த நாட்களில் கிளம்பி ஊருக்கு சென்றார்கள்.

அர்ச்சனாவும், தனாவும் ஒவ்வொரு முறையும் பஸ் ஸ்டான்ட் வரை வந்து அவர்களுடன் டாட்டா காட்டி தங்கள் சொந்தங்களை அனுப்பி விட்டு சென்றார்கள்.

ஆனந்தன் அம்மா மரகதம் மட்டும் அவர்களுடன் இரண்டு வாரங்கள் தங்கினார்.
Message…
??? nice epi
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top