snehasree
SM Exclusive
கண்ணாத்தாள் தன் பிளாட்டுக்கு கணவனுடன் திரும்பியவள் குளித்து விட்டு சமையலை தொடங்கி விட்டாள்.
ஆனந்தன் அவளுக்கு உதவி செய்ய சாதம்,வெண்டைக்காய் மோர் குழம்பு, பருப்பு ரசம், உருளை கிழங்கு பொரியல், அப்பளம், பாயசம், வடை என்று ஒரு மினி விருந்தையே அசால்ட்டாக முடித்து விட்டாள் கண்ணாத்தாள்.
தாங்கள் செய்தவற்றை எல்லா ஐட்டங்களையும் அடுக்கி விட்டு ஒருவரை ஒருவரை பார்த்து கொண்டார்கள்.
"வாங்க... அவங்களை கூட்டிட்டு வரலாம். பசியாக இருப்பாங்க மணி ஒன்றரை வேற ஆகுது" என்றாள் கண்ணாத்தாள்.
"சரி வா போகலாம்" என்றபடி ஆனந்தன் சென்று கதவை திறக்க சரண்யா விவேக்குடன் பிளாட் வாசலுக்கு வந்து விட்டாள்.
"உங்களை கூப்பிடத்தான் நாங்கள் இருவரும் கிளம்பி வந்தோம்" என்றான் ஆனந்தன்.
"சாப்பாடு விஷயத்தில் என்னை எல்லாம் கூப்பிடற சிரமம் எல்லாம் வைக்க மாட்டேன் அண்ணா. நானாக வந்து விடுவேன். இவரை கிளப்பதான் நேரமாச்சு. வாங்க உள்ளே போகலாம்." என்றாள் சரண்யா.
"சரி வாங்க" என்று ஆனந்தனும் கண்ணாத்தாளும் அவர்களை அழைத்து சென்று டைனிங் டேபிளில் அவர்களை அமர வைத்தார்கள்.
"நீங்களும் உட்காருங்க. நான் பரிமாறிக்கிறேன்" என்று ஆனந்தனையும் அமர வைத்து விட்டாள் கண்ணாத்தாள்.
சரண்யா டைனிங் டேபிளில் அடுக்கி வைத்த ஐட்டங்களை பார்த்து விட்டு,
"அண்ணா! ஒரு பேச்சுக்கு விருந்து கேட்டால் இப்படியா ஐட்டங்களை போட்டு தாக்கி வைப்பீங்க. அண்ணி பாவம் இல்லையா?" என்றாள்.
"அவரும் கூட சமையலுக்கு உதவி செஞ்சாங்க" என்று கணவனை விட்டு தராமல் கூறினாள் கண்ணாத்தாள்.
"என்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் கட் பன்னி தந்திருப்பாரு அண்ணா. நீங்கள் அதை போயி ஒர் உதவியாக சொல்றிங்களா அண்ணி?"
"அதுவும் ஒர் உதவிதானேப்பா. அவர் கூட காய்கறி வேறு நறுக்கி தந்தாரு. சமையலுக்கு தேவையான பொருட்களை தயார் செய்து விட்டால் அதன் பிறகு சமையலை ஈசியாக செய்து விடலாம் இல்லையா?" என்றாள் கண்ணாத்தாள்.
"உங்க புருஷனை எளிதில் விட்டு தரமாட்டிங்களே" என்றாள் சரண்யா.
"அப்புறம் உன்னை மாதிரி போகிற இடத்தில் எல்லாம் என்னை வாருவாங்க" என்று சொல்லிவிட்டு விவேக் சிரிக்க,
"நான் எப்பொழுது உங்களை வாரியிருக்கிறேன் சொல்லுங்க" என்று கோபமாக கேட்டாள் சரண்யா.
"அண்ணா... சரண்யா சும்மா கிண்டலுக்குதான் பேசறாங்க மற்றபடி அவங்கள் மனதில் ஒன்றுமில்லை" என்றாள் கண்ணாத்தாள்.
"கேட்டுக்குங்கோங்க." என்று தணியாத கோபத்துடன் சரண்யா சொல்லி விட்டு பார்க்க,
"என் ஹனியை பற்றி எனக்கு தெரியாதா?" என்று விவேக் கொஞ்சலாக சொன்னான்.
கண்ணாத்தாள் பேசி கொண்டே எல்லோருக்கும் சாப்பாட்டை பரிமாறி விட்டாள்.
"முதலில் நான் சாப்பிடுகிறேன் பிறகு நான் இதை பற்றி யோசிக்கிறேன். அண்ணி... நீங்கள் இருக்கிங்களே. எங்கள் கூட பேசிகிட்டே சாப்பாட்டை பரிமாறிட்டிங்களே" என்ற சரண்யா சாப்பிட ஆரம்பித்தாள்.
"வாவ்! பென்டாஸ்டிக்! அண்ணி உங்க கைபக்குவம் அருமை." என்று மனதார பாரட்டியபடி சாப்பாட்டை ருசித்து சாப்பிட்டு முடித்தாள் சரண்யா.
இறுதியாக பாயசத்தை ருசித்து சாப்பிட்ட தம்பதியினர் கை கழுவி விட்டு எழுந்தனர்.
"அண்ணி! நீங்கள் உட்காருங்க. உங்களுக்கு நான் பரிமாற போகிறேன்" என்ற சரண்யா கண்ணாத்தாளை அமர வைத்து சாப்பாட்டு பரிமாறி சாப்பிட வைத்தாள்.
கண்ணாத்தாள் சாப்பிட்டு முடித்த பின்னர் அனைவரும் வந்து சோபாவில் அமர்ந்தனர்.
"சரி அண்ணா... அண்ணி கையால் நல்லா சூப்பர் சாப்பாட்டை திருப்தியாக சாப்பிட்டு விட்டோம். நாங்கள் எங்களின் வசந்த மாளிகைக்கு போயி ஒரு குட்டி தூக்கம் போடுகிறோம்" என்றாள் சரண்யா.
"கொஞ்சம் வெயிட் பன்னுங்க" என்று சொல்லிவிட்டு உள்ளே சென்ற கண்ணாத்தாள் ரெண்டு டிபன்களுடன் வந்தாள்.
"இதில் பாயாசமும்,வடையும் இருக்கு அப்புறமாக சாப்பிடுங்க" என்று கண்ணாத்தாள் அதை தர,
"இது வேறா?" என்று வாங்கி கொண்டாள் சரண்யா.
"சரிப்பா ஆனந்த். நாங்கள் போயிட்டு வருகிறோம்" என்று விவேக் சொல்ல இருவரும் கிளம்பி சென்றனர்.
இரவு ஆனந்தன் பேசிய பொழுது அவர்களை பற்றி சொல்ல கண்ணாத்தாள் மனதில் சரண்யா எனக்கு அக்காவா? அவர்களை மரியாதையாக இனி பேச வேண்டும் என்று நினைத்து கொண்டாள்.
மறுநாள் காலை ஆனந்தன் கிளம்பி சென்று விட என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தபடி அமர்ந்திருந்தாள் கண்ணாத்தாள்.
காலிங் பெல் அடிக்க சென்று அவள் கதவை திறக்க காவ்யா உடன் ஜெனிபர் நின்று கொண்டு இருந்தாள்.
"வா காவியா... வா ஜெனிபர்..." என்று கண்ணாத்தாள் கூப்பிட இருவரும் உள்ளே வந்து தங்கள் நோட் புத்தகங்களுடன் அமர்ந்து கொண்டார்கள்.
Message…
ஆனந்தன் அவளுக்கு உதவி செய்ய சாதம்,வெண்டைக்காய் மோர் குழம்பு, பருப்பு ரசம், உருளை கிழங்கு பொரியல், அப்பளம், பாயசம், வடை என்று ஒரு மினி விருந்தையே அசால்ட்டாக முடித்து விட்டாள் கண்ணாத்தாள்.
தாங்கள் செய்தவற்றை எல்லா ஐட்டங்களையும் அடுக்கி விட்டு ஒருவரை ஒருவரை பார்த்து கொண்டார்கள்.
"வாங்க... அவங்களை கூட்டிட்டு வரலாம். பசியாக இருப்பாங்க மணி ஒன்றரை வேற ஆகுது" என்றாள் கண்ணாத்தாள்.
"சரி வா போகலாம்" என்றபடி ஆனந்தன் சென்று கதவை திறக்க சரண்யா விவேக்குடன் பிளாட் வாசலுக்கு வந்து விட்டாள்.
"உங்களை கூப்பிடத்தான் நாங்கள் இருவரும் கிளம்பி வந்தோம்" என்றான் ஆனந்தன்.
"சாப்பாடு விஷயத்தில் என்னை எல்லாம் கூப்பிடற சிரமம் எல்லாம் வைக்க மாட்டேன் அண்ணா. நானாக வந்து விடுவேன். இவரை கிளப்பதான் நேரமாச்சு. வாங்க உள்ளே போகலாம்." என்றாள் சரண்யா.
"சரி வாங்க" என்று ஆனந்தனும் கண்ணாத்தாளும் அவர்களை அழைத்து சென்று டைனிங் டேபிளில் அவர்களை அமர வைத்தார்கள்.
"நீங்களும் உட்காருங்க. நான் பரிமாறிக்கிறேன்" என்று ஆனந்தனையும் அமர வைத்து விட்டாள் கண்ணாத்தாள்.
சரண்யா டைனிங் டேபிளில் அடுக்கி வைத்த ஐட்டங்களை பார்த்து விட்டு,
"அண்ணா! ஒரு பேச்சுக்கு விருந்து கேட்டால் இப்படியா ஐட்டங்களை போட்டு தாக்கி வைப்பீங்க. அண்ணி பாவம் இல்லையா?" என்றாள்.
"அவரும் கூட சமையலுக்கு உதவி செஞ்சாங்க" என்று கணவனை விட்டு தராமல் கூறினாள் கண்ணாத்தாள்.
"என்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் கட் பன்னி தந்திருப்பாரு அண்ணா. நீங்கள் அதை போயி ஒர் உதவியாக சொல்றிங்களா அண்ணி?"
"அதுவும் ஒர் உதவிதானேப்பா. அவர் கூட காய்கறி வேறு நறுக்கி தந்தாரு. சமையலுக்கு தேவையான பொருட்களை தயார் செய்து விட்டால் அதன் பிறகு சமையலை ஈசியாக செய்து விடலாம் இல்லையா?" என்றாள் கண்ணாத்தாள்.
"உங்க புருஷனை எளிதில் விட்டு தரமாட்டிங்களே" என்றாள் சரண்யா.
"அப்புறம் உன்னை மாதிரி போகிற இடத்தில் எல்லாம் என்னை வாருவாங்க" என்று சொல்லிவிட்டு விவேக் சிரிக்க,
"நான் எப்பொழுது உங்களை வாரியிருக்கிறேன் சொல்லுங்க" என்று கோபமாக கேட்டாள் சரண்யா.
"அண்ணா... சரண்யா சும்மா கிண்டலுக்குதான் பேசறாங்க மற்றபடி அவங்கள் மனதில் ஒன்றுமில்லை" என்றாள் கண்ணாத்தாள்.
"கேட்டுக்குங்கோங்க." என்று தணியாத கோபத்துடன் சரண்யா சொல்லி விட்டு பார்க்க,
"என் ஹனியை பற்றி எனக்கு தெரியாதா?" என்று விவேக் கொஞ்சலாக சொன்னான்.
கண்ணாத்தாள் பேசி கொண்டே எல்லோருக்கும் சாப்பாட்டை பரிமாறி விட்டாள்.
"முதலில் நான் சாப்பிடுகிறேன் பிறகு நான் இதை பற்றி யோசிக்கிறேன். அண்ணி... நீங்கள் இருக்கிங்களே. எங்கள் கூட பேசிகிட்டே சாப்பாட்டை பரிமாறிட்டிங்களே" என்ற சரண்யா சாப்பிட ஆரம்பித்தாள்.
"வாவ்! பென்டாஸ்டிக்! அண்ணி உங்க கைபக்குவம் அருமை." என்று மனதார பாரட்டியபடி சாப்பாட்டை ருசித்து சாப்பிட்டு முடித்தாள் சரண்யா.
இறுதியாக பாயசத்தை ருசித்து சாப்பிட்ட தம்பதியினர் கை கழுவி விட்டு எழுந்தனர்.
"அண்ணி! நீங்கள் உட்காருங்க. உங்களுக்கு நான் பரிமாற போகிறேன்" என்ற சரண்யா கண்ணாத்தாளை அமர வைத்து சாப்பாட்டு பரிமாறி சாப்பிட வைத்தாள்.
கண்ணாத்தாள் சாப்பிட்டு முடித்த பின்னர் அனைவரும் வந்து சோபாவில் அமர்ந்தனர்.
"சரி அண்ணா... அண்ணி கையால் நல்லா சூப்பர் சாப்பாட்டை திருப்தியாக சாப்பிட்டு விட்டோம். நாங்கள் எங்களின் வசந்த மாளிகைக்கு போயி ஒரு குட்டி தூக்கம் போடுகிறோம்" என்றாள் சரண்யா.
"கொஞ்சம் வெயிட் பன்னுங்க" என்று சொல்லிவிட்டு உள்ளே சென்ற கண்ணாத்தாள் ரெண்டு டிபன்களுடன் வந்தாள்.
"இதில் பாயாசமும்,வடையும் இருக்கு அப்புறமாக சாப்பிடுங்க" என்று கண்ணாத்தாள் அதை தர,
"இது வேறா?" என்று வாங்கி கொண்டாள் சரண்யா.
"சரிப்பா ஆனந்த். நாங்கள் போயிட்டு வருகிறோம்" என்று விவேக் சொல்ல இருவரும் கிளம்பி சென்றனர்.
இரவு ஆனந்தன் பேசிய பொழுது அவர்களை பற்றி சொல்ல கண்ணாத்தாள் மனதில் சரண்யா எனக்கு அக்காவா? அவர்களை மரியாதையாக இனி பேச வேண்டும் என்று நினைத்து கொண்டாள்.
மறுநாள் காலை ஆனந்தன் கிளம்பி சென்று விட என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தபடி அமர்ந்திருந்தாள் கண்ணாத்தாள்.
காலிங் பெல் அடிக்க சென்று அவள் கதவை திறக்க காவ்யா உடன் ஜெனிபர் நின்று கொண்டு இருந்தாள்.
"வா காவியா... வா ஜெனிபர்..." என்று கண்ணாத்தாள் கூப்பிட இருவரும் உள்ளே வந்து தங்கள் நோட் புத்தகங்களுடன் அமர்ந்து கொண்டார்கள்.
Message…