snehasree
SM Exclusive
ஆனந்தன் எப்படி செய்வான் என்று யோசித்த கண்ணாத்தாள் அவனை பார்த்தாள்.
"நீ எழுந்து நின்று கண்ணை மூடு கண்ணா. அது எப்படி என்று தெரியும்" என்றவன் சொல்ல அப்படியே செய்தாள்.
கண்களை மூடி நின்றவளை தன் கைகளால் மெல்ல மெல்ல தூக்கி தலைக்கு மேல் நிறுத்த அவளுக்கு அந்தரத்தில் இருப்பது போல் இருக்க கண்களை திறந்தாள்.
ஆனந்தன் அவளை கைகளில் ஏந்தி கொண்டு இருக்க அவன் தலைக்கு மேல் தான் இருப்பதை கண்டு வெட்கத்தில் அவளின் முகம் சிவந்து அழகு சேர்த்தது.
"என்ன கண்ணா ஒகேவா?" என்ற ஆனந்தன் கேட்க சரி என்று அவள் தலையை அசைத்து சம்மதம் சொல்ல அவளை அப்படியே ஏந்தியபடி பெட்ருமிற்கு சென்றான்.
அவளை தூக்கியபடி அறைக்குள் சென்றவன் அப்படியே அவளை ஏந்தியபடி சுழற்ற அவள் காலை மடக்கி கைகளை விரித்து கொண்டாள்.
"என்ன கண்ணா... ஆகாயத்தில் பறக்கிற மாதிரி இருக்கிறதா?"
"ஆமாங்க" என்றவள் சொல்ல சிறிது நேரம் சுற்றிவிட அவள் ஆனந்தமாக சிரித்து கொண்டு இருந்தாள்.
"என்ன கண்ணா போதுமா?" என்று ஆனந்தன் கேட்க,
"போதும்ங்க. இறக்கி விடுங்க" என்று அவள் சொன்னாள்.
ஆனந்தன் அவளை மெல்ல மெல்ல இறக்கி விட அந்த தருணம் அவள் பெண்மையை அவள் உணர்ந்தாள்.
அவளை கட்டிலுக்கு அழைத்து சென்றவன் அவளை தன் மடியில் அமர்த்தி கொண்டு விட்டான்.
ஆனந்தனின் மடியில் இருந்த கண்ணாத்தாளை பின்புறமாக பாந்தமாக அணைக்க அவள் சிலிர்க்க தன் கரத்தில் சிறைபட்டிருந்த அவளின் கன்னங்களில் முத்தம் பதித்தான்.
அவள் சிலிர்த்தபடி அமர்ந்து இருக்க "கண்ணா" என்றான்.
அவள் இதழ்கள் வெட்கம் சிந்த காதுகளில் "ஐ லவ் யூ" என்று சொல்ல அவள் வெட்கம் சிந்தி அதை ஏற்றாள்.
"கண்ணா... உன்னை அப்படியே கடித்து திங்க தோன்றுகிறது" என்றான் ஆனந்தன்.
"செய்யுங்க. யாரு வேண்டாம் என்று தடுக்கிறாங்க" என்று கூறி அவள் சிரித்தாள்.
"அப்படிங்களா மேடம்" என்று கேலியாய் கேட்க "உங்களை" என்று மார்பில் முழங்கையால் குத்தினாள் கண்ணாத்தாள்.
"கண்ணா... நீ ரொம்ப கெட்டு போய் விட்டாய். என்னை அடிக்கிறாய் நீ" என்றவன் செல்லமாக மிரட்ட,
"அய்யோ அப்படி எல்லாம் இல்லைங்க சாரிங்க சாரி" என்றாள் கண்ணாத்தாள்.
"கண்ணா... உன் கவனத்தை எல்லாம் கொஞ்ச நாட்கள் மட்டும் பாட்டில் மட்டும் செலுத்துடா. இந்த ஆறு மாதத்தில் நல்லா பாட்டு கேளு. எனக்கு பாடி காட்டு. நல்லா பிராக்டிஸ் செய். இந்த போட்டி முடியும் வரை நாம் இப்படியே காதலர்களாக இருப்போம். என்ன சரியா?"
"சரிங்க" என்றவளின் மனதில் மனைவியின் ஆசையை நிறைவேற்ற தன் சுகங்களை கூட தள்ளி வைக்க எண்ணும் தன் கணவனை நினைத்து மிக்க சந்தோஷம் கொண்டு மனம் சிலிர்த்தாள்.
"சரி கண்ணா... ஒரு பாட்டு பாடு" என்று அவன் கேட்க, "உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும். என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்" என்று பாடினாள் கண்ணாத்தாள்.
"என்ன பாட தோன்றும் என்று இத்தனை நேரம் பாடுகிறாயா நீ? கண்ணா பாட்டு அருமைடா" என்று அணைத்து கொள்ள அவன் மார்பில் சாய்ந்து கழுத்தை வளைத்து அவளை பார்த்தாள் கண்ணாத்தாள்.
சில நிமிட அணைப்பிற்கு பின் "சரி கண்ணா... டைம் ஆச்சு. நாம் தூங்கலாம்" என்று ஆனந்தன் சொல்ல மடியில் இருந்து இறங்கியவள் அருகில் படுத்து கொண்டாள்.
அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலுடன் பார்த்தபடி உறங்கினார்கள்.
முல்லை டிவியில் அவள் நிகழ்ச்சி கண்ட ஆனந்தனின் அம்மா, மாமா, அருண், ரஞ்சிதா என்று அனைவரும் போன் செய்து பாராட்டினார்கள்.
கண்ணாத்தாளின் பெற்றோர், மாமா, அத்தை, தோழிகள் என்று அவள் தரப்பும் போன் செய்து பாராட்டினார்கள்.
வைஷ்ணவி அபார்ட்மென்ட்டில் அவள் நிகழ்ச்சியை பார்த்த அனைவரும் நேரில் பாராட்ட அவள் ஒருநாளில் அங்கே பிரபலமாகி விட்டாள்.
காவியா, ஜெனிபரை டிவியில் பார்த்த அவர்கள் தோழிகள் போன் செய்து பாராட்டி விட இருவரும் வந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தி விட்டு சென்றார்கள்.
அவள் அக்கா தனலட்சுமிக்கும், நாத்தனார் அர்ச்சனாவுக்கும் கூட பாராட்டு கிடைக்க அவர்கள் இருவரும் வந்து மகிழ்ந்து கண்ணாத்தாள் வீட்டிற்கு வந்து தங்கள் சந்தோஷத்தை வெளிபடுத்தி சென்றார்கள்.
"அண்ணி... ஒவர் நைட்டில் உலகம் முழுவதும் பேமஸ் ஆகிவிட்டீர்கள். நம்முடைய அபார்ட்மெண்ட முழுவதும் இன்று உங்களை பற்றிதான் பேச்சுதான். அண்ணன் வேறு என்னை பற்றி சொல்லி விட்டார் அல்லவா? இப்பொழுது என்னை எல்லோரும் விசாரிக்க ஆரம்பித்து விட்டார்கள். எல்லாம் உங்களால்தான்" என்று சரண்யா பாராட்டி பேசினாள்.
Message…
"நீ எழுந்து நின்று கண்ணை மூடு கண்ணா. அது எப்படி என்று தெரியும்" என்றவன் சொல்ல அப்படியே செய்தாள்.
கண்களை மூடி நின்றவளை தன் கைகளால் மெல்ல மெல்ல தூக்கி தலைக்கு மேல் நிறுத்த அவளுக்கு அந்தரத்தில் இருப்பது போல் இருக்க கண்களை திறந்தாள்.
ஆனந்தன் அவளை கைகளில் ஏந்தி கொண்டு இருக்க அவன் தலைக்கு மேல் தான் இருப்பதை கண்டு வெட்கத்தில் அவளின் முகம் சிவந்து அழகு சேர்த்தது.
"என்ன கண்ணா ஒகேவா?" என்ற ஆனந்தன் கேட்க சரி என்று அவள் தலையை அசைத்து சம்மதம் சொல்ல அவளை அப்படியே ஏந்தியபடி பெட்ருமிற்கு சென்றான்.
அவளை தூக்கியபடி அறைக்குள் சென்றவன் அப்படியே அவளை ஏந்தியபடி சுழற்ற அவள் காலை மடக்கி கைகளை விரித்து கொண்டாள்.
"என்ன கண்ணா... ஆகாயத்தில் பறக்கிற மாதிரி இருக்கிறதா?"
"ஆமாங்க" என்றவள் சொல்ல சிறிது நேரம் சுற்றிவிட அவள் ஆனந்தமாக சிரித்து கொண்டு இருந்தாள்.
"என்ன கண்ணா போதுமா?" என்று ஆனந்தன் கேட்க,
"போதும்ங்க. இறக்கி விடுங்க" என்று அவள் சொன்னாள்.
ஆனந்தன் அவளை மெல்ல மெல்ல இறக்கி விட அந்த தருணம் அவள் பெண்மையை அவள் உணர்ந்தாள்.
அவளை கட்டிலுக்கு அழைத்து சென்றவன் அவளை தன் மடியில் அமர்த்தி கொண்டு விட்டான்.
ஆனந்தனின் மடியில் இருந்த கண்ணாத்தாளை பின்புறமாக பாந்தமாக அணைக்க அவள் சிலிர்க்க தன் கரத்தில் சிறைபட்டிருந்த அவளின் கன்னங்களில் முத்தம் பதித்தான்.
அவள் சிலிர்த்தபடி அமர்ந்து இருக்க "கண்ணா" என்றான்.
அவள் இதழ்கள் வெட்கம் சிந்த காதுகளில் "ஐ லவ் யூ" என்று சொல்ல அவள் வெட்கம் சிந்தி அதை ஏற்றாள்.
"கண்ணா... உன்னை அப்படியே கடித்து திங்க தோன்றுகிறது" என்றான் ஆனந்தன்.
"செய்யுங்க. யாரு வேண்டாம் என்று தடுக்கிறாங்க" என்று கூறி அவள் சிரித்தாள்.
"அப்படிங்களா மேடம்" என்று கேலியாய் கேட்க "உங்களை" என்று மார்பில் முழங்கையால் குத்தினாள் கண்ணாத்தாள்.
"கண்ணா... நீ ரொம்ப கெட்டு போய் விட்டாய். என்னை அடிக்கிறாய் நீ" என்றவன் செல்லமாக மிரட்ட,
"அய்யோ அப்படி எல்லாம் இல்லைங்க சாரிங்க சாரி" என்றாள் கண்ணாத்தாள்.
"கண்ணா... உன் கவனத்தை எல்லாம் கொஞ்ச நாட்கள் மட்டும் பாட்டில் மட்டும் செலுத்துடா. இந்த ஆறு மாதத்தில் நல்லா பாட்டு கேளு. எனக்கு பாடி காட்டு. நல்லா பிராக்டிஸ் செய். இந்த போட்டி முடியும் வரை நாம் இப்படியே காதலர்களாக இருப்போம். என்ன சரியா?"
"சரிங்க" என்றவளின் மனதில் மனைவியின் ஆசையை நிறைவேற்ற தன் சுகங்களை கூட தள்ளி வைக்க எண்ணும் தன் கணவனை நினைத்து மிக்க சந்தோஷம் கொண்டு மனம் சிலிர்த்தாள்.
"சரி கண்ணா... ஒரு பாட்டு பாடு" என்று அவன் கேட்க, "உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும். என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்" என்று பாடினாள் கண்ணாத்தாள்.
"என்ன பாட தோன்றும் என்று இத்தனை நேரம் பாடுகிறாயா நீ? கண்ணா பாட்டு அருமைடா" என்று அணைத்து கொள்ள அவன் மார்பில் சாய்ந்து கழுத்தை வளைத்து அவளை பார்த்தாள் கண்ணாத்தாள்.
சில நிமிட அணைப்பிற்கு பின் "சரி கண்ணா... டைம் ஆச்சு. நாம் தூங்கலாம்" என்று ஆனந்தன் சொல்ல மடியில் இருந்து இறங்கியவள் அருகில் படுத்து கொண்டாள்.
அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலுடன் பார்த்தபடி உறங்கினார்கள்.
முல்லை டிவியில் அவள் நிகழ்ச்சி கண்ட ஆனந்தனின் அம்மா, மாமா, அருண், ரஞ்சிதா என்று அனைவரும் போன் செய்து பாராட்டினார்கள்.
கண்ணாத்தாளின் பெற்றோர், மாமா, அத்தை, தோழிகள் என்று அவள் தரப்பும் போன் செய்து பாராட்டினார்கள்.
வைஷ்ணவி அபார்ட்மென்ட்டில் அவள் நிகழ்ச்சியை பார்த்த அனைவரும் நேரில் பாராட்ட அவள் ஒருநாளில் அங்கே பிரபலமாகி விட்டாள்.
காவியா, ஜெனிபரை டிவியில் பார்த்த அவர்கள் தோழிகள் போன் செய்து பாராட்டி விட இருவரும் வந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தி விட்டு சென்றார்கள்.
அவள் அக்கா தனலட்சுமிக்கும், நாத்தனார் அர்ச்சனாவுக்கும் கூட பாராட்டு கிடைக்க அவர்கள் இருவரும் வந்து மகிழ்ந்து கண்ணாத்தாள் வீட்டிற்கு வந்து தங்கள் சந்தோஷத்தை வெளிபடுத்தி சென்றார்கள்.
"அண்ணி... ஒவர் நைட்டில் உலகம் முழுவதும் பேமஸ் ஆகிவிட்டீர்கள். நம்முடைய அபார்ட்மெண்ட முழுவதும் இன்று உங்களை பற்றிதான் பேச்சுதான். அண்ணன் வேறு என்னை பற்றி சொல்லி விட்டார் அல்லவா? இப்பொழுது என்னை எல்லோரும் விசாரிக்க ஆரம்பித்து விட்டார்கள். எல்லாம் உங்களால்தான்" என்று சரண்யா பாராட்டி பேசினாள்.
Message…