• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

En kaadhal kanmaniye-28

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
ஆனந்தன் எப்படி செய்வான் என்று யோசித்த கண்ணாத்தாள் அவனை பார்த்தாள்.

"நீ எழுந்து நின்று கண்ணை மூடு கண்ணா. அது எப்படி என்று தெரியும்" என்றவன் சொல்ல அப்படியே செய்தாள்.

கண்களை மூடி நின்றவளை தன் கைகளால் மெல்ல மெல்ல தூக்கி தலைக்கு மேல் நிறுத்த அவளுக்கு அந்தரத்தில் இருப்பது போல் இருக்க கண்களை திறந்தாள்.

ஆனந்தன் அவளை கைகளில் ஏந்தி கொண்டு இருக்க அவன் தலைக்கு மேல் தான் இருப்பதை கண்டு வெட்கத்தில் அவளின் முகம் சிவந்து அழகு சேர்த்தது.

"என்ன கண்ணா ஒகேவா?" என்ற ஆனந்தன் கேட்க சரி என்று அவள் தலையை அசைத்து சம்மதம் சொல்ல அவளை அப்படியே ஏந்தியபடி பெட்ருமிற்கு சென்றான்.

அவளை தூக்கியபடி அறைக்குள் சென்றவன் அப்படியே அவளை ஏந்தியபடி சுழற்ற அவள் காலை மடக்கி கைகளை விரித்து கொண்டாள்.

"என்ன கண்ணா... ஆகாயத்தில் பறக்கிற மாதிரி இருக்கிறதா?"

"ஆமாங்க" என்றவள் சொல்ல சிறிது நேரம் சுற்றிவிட அவள் ஆனந்தமாக சிரித்து கொண்டு இருந்தாள்.

"என்ன கண்ணா போதுமா?" என்று ஆனந்தன் கேட்க,
"போதும்ங்க. இறக்கி விடுங்க" என்று அவள் சொன்னாள்.

ஆனந்தன் அவளை மெல்ல மெல்ல இறக்கி விட அந்த தருணம் அவள் பெண்மையை அவள் உணர்ந்தாள்.

அவளை கட்டிலுக்கு அழைத்து சென்றவன் அவளை தன் மடியில் அமர்த்தி கொண்டு விட்டான்.

ஆனந்தனின் மடியில் இருந்த கண்ணாத்தாளை பின்புறமாக பாந்தமாக அணைக்க அவள் சிலிர்க்க தன் கரத்தில் சிறைபட்டிருந்த அவளின் கன்னங்களில் முத்தம் பதித்தான்.

அவள் சிலிர்த்தபடி அமர்ந்து இருக்க "கண்ணா" என்றான்.

அவள் இதழ்கள் வெட்கம் சிந்த காதுகளில் "ஐ லவ் யூ" என்று சொல்ல அவள் வெட்கம் சிந்தி அதை ஏற்றாள்.

"கண்ணா... உன்னை அப்படியே கடித்து திங்க தோன்றுகிறது" என்றான் ஆனந்தன்.
"செய்யுங்க. யாரு வேண்டாம் என்று தடுக்கிறாங்க" என்று கூறி அவள் சிரித்தாள்.

"அப்படிங்களா மேடம்" என்று கேலியாய் கேட்க "உங்களை" என்று மார்பில் முழங்கையால் குத்தினாள் கண்ணாத்தாள்.

"கண்ணா... நீ ரொம்ப கெட்டு போய் விட்டாய். என்னை அடிக்கிறாய் நீ" என்றவன் செல்லமாக மிரட்ட,
"அய்யோ அப்படி எல்லாம் இல்லைங்க சாரிங்க சாரி" என்றாள் கண்ணாத்தாள்.

"கண்ணா... உன் கவனத்தை எல்லாம் கொஞ்ச நாட்கள் மட்டும் பாட்டில் மட்டும் செலுத்துடா. இந்த ஆறு மாதத்தில் நல்லா பாட்டு கேளு. எனக்கு பாடி காட்டு. நல்லா பிராக்டிஸ் செய். இந்த போட்டி முடியும் வரை நாம் இப்படியே காதலர்களாக இருப்போம். என்ன சரியா?"

"சரிங்க" என்றவளின் மனதில் மனைவியின் ஆசையை நிறைவேற்ற தன் சுகங்களை கூட தள்ளி வைக்க எண்ணும் தன் கணவனை நினைத்து மிக்க சந்தோஷம் கொண்டு மனம் சிலிர்த்தாள்.

"சரி கண்ணா... ஒரு பாட்டு பாடு" என்று அவன் கேட்க, "உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும். என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்" என்று பாடினாள் கண்ணாத்தாள்.

"என்ன பாட தோன்றும் என்று இத்தனை நேரம் பாடுகிறாயா நீ? கண்ணா பாட்டு அருமைடா" என்று அணைத்து கொள்ள அவன் மார்பில் சாய்ந்து கழுத்தை வளைத்து அவளை பார்த்தாள் கண்ணாத்தாள்.

சில நிமிட அணைப்பிற்கு பின் "சரி கண்ணா... டைம் ஆச்சு. நாம் தூங்கலாம்" என்று ஆனந்தன் சொல்ல மடியில் இருந்து இறங்கியவள் அருகில் படுத்து கொண்டாள்.

அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலுடன் பார்த்தபடி உறங்கினார்கள்.

முல்லை டிவியில் அவள் நிகழ்ச்சி கண்ட ஆனந்தனின் அம்மா, மாமா, அருண், ரஞ்சிதா என்று அனைவரும் போன் செய்து பாராட்டினார்கள்.

கண்ணாத்தாளின் பெற்றோர், மாமா, அத்தை, தோழிகள் என்று அவள் தரப்பும் போன் செய்து பாராட்டினார்கள்.

வைஷ்ணவி அபார்ட்மென்ட்டில் அவள் நிகழ்ச்சியை பார்த்த அனைவரும் நேரில் பாராட்ட அவள் ஒருநாளில் அங்கே பிரபலமாகி விட்டாள்.

காவியா, ஜெனிபரை டிவியில் பார்த்த அவர்கள் தோழிகள் போன் செய்து பாராட்டி விட இருவரும் வந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தி விட்டு சென்றார்கள்.

அவள் அக்கா தனலட்சுமிக்கும், நாத்தனார் அர்ச்சனாவுக்கும் கூட பாராட்டு கிடைக்க அவர்கள் இருவரும் வந்து மகிழ்ந்து கண்ணாத்தாள் வீட்டிற்கு வந்து தங்கள் சந்தோஷத்தை வெளிபடுத்தி சென்றார்கள்.

"அண்ணி... ஒவர் நைட்டில் உலகம் முழுவதும் பேமஸ் ஆகிவிட்டீர்கள். நம்முடைய அபார்ட்மெண்ட முழுவதும் இன்று உங்களை பற்றிதான் பேச்சுதான். அண்ணன் வேறு என்னை பற்றி சொல்லி விட்டார் அல்லவா? இப்பொழுது என்னை எல்லோரும் விசாரிக்க ஆரம்பித்து விட்டார்கள். எல்லாம் உங்களால்தான்" என்று சரண்யா பாராட்டி பேசினாள்.
Message…
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
"அப்புறம்... சும்மா இருந்த புள்ளையை பாட வைத்தீர்கள் அல்லவா? அதற்காக நீங்கள் நல்லா அனுபவிங்க அக்கா" என்று கேட்டு விட்டு சிரித்தாள் கண்ணாத்தாள்.

"அண்ணி... இந்த அளவு பேச ஆரம்பித்து வீட்டீர்களா? ம் பெரிய பாடகி ஆகி விட்டிங்க. நீங்கள் இனி பேசலாம்"

"அக்கா... நான் எவ்வளவு புகழ் அடைந்தாலும் என் செல்ல அக்காவின் பிரிய தங்கைதான்" என்று அணைத்து முத்தமிட்டு சிரித்தாள்.

"அதான் எனக்கு தெரியுமே" என்று கூறினாள் சரண்யா.

ஆபிஸ் முடிந்து வீடு வந்த ஆனந்தன் கண்ணாத்தாள் கதவை சாத்திய அவளை பின் பக்கமாக அணைத்து கொண்டான்.

ஆனந்தனின் எதிர்பாராத அணைப்பினால் அதிர்ச்சியாகி "ஆ" என்று அலறி திமிறினாள்.

"கண்ணா செல்லம்" என்று அவள் காதின் அருகில் சொல்ல சட்டென்று சிலிர்த்து கழுத்தை திருப்ப அவன் முகம் தெரிய புன்னகைத்து வெட்கத்துடன் தலை கவிழ்த்தாள்.

அவள் கன்னங்களில் ஆனந்தன் தன் முத்தத்தை பதிக்க மறு கன்னமும் சிவந்தது.

பேதை அவள் சொல்ல தெரியாத ஆனந்தத்தில் மூழ்க அவளை இரு கைகளில் அள்ளி தூக்கி கொண்டு நடந்தான்.

அவன் கைகளில் தவழ்ந்தவள் தோளையும், கழுத்தையும் பிடித்தபடி அவனை பார்த்தபடி பயணித்தாள்.

ஆனந்தன் சோபாவில் அமர்ந்து கொண்டு அவளை மடியில் வைத்து பின்புறமாக பாந்தமாக அணைத்து கொள்ள அவள் சிலிர்த்தாள்.

"கண்ணா... இன்னிக்கு ஆபிஸ் முழுக்க உன் பேச்சுதான். ஆனந்த்... உங்க மனைவி சூப்பராக பாடறாங்க என்று பாராட்டி தள்ளிட்டாங்க. எங்க டீம் லீடரே பாராட்டினாரு தெரியுமா? முதல்ல எல்லாம் என்னை பலபேர் கண்டுக்க மாட்டார்கள். இன்னிக்கு அவங்களே வந்து என்னிடம் பேசி விட்டு போகிறார்கள். நீங்கள்தான் கண்ணாத்தாள் ஹஸ்பன்டா என்றுதான் கேட்கிறார்கள் என்றால் பார்த்து கொள் கண்ணா" என்றான் ஆனந்தன்.

ஆனந்தன் பேசியதை எல்லாம் அமைதியாக கேட்டவள் பின் "நீங்கள் சந்தோஷமாக இருந்தால் அதுவே போதும் அப்புறம் ஆனந்தன் மனைவி கண்ணா என்பதில் தான் எனக்கு பெருமைங்க. நீங்களும் அவர்களிடம் அப்படியே சொல்லுங்க" என்றாள் கண்ணாத்தாள்.

ஆனந்தன் புகழ் கிடைத்தும் குணம் மாறாத தங்கமாய் இருக்கும் மனைவியை ரசித்தான்.

கண்ணாத்தாளுக்கு அடுத்து அடுத்த வாரங்களில் பல சுற்றுகள் வர அவள் பயிற்சி தீவிரமாகியது.

பகலில் அவள் பயிற்சிக்கு சரண்யாவும் இரவில் அவள் கணவன் ஆனந்தனும் உதவி வந்தனர்.

வார விடுமுறை நாட்களில் காவியா, ஜெனிபர், அவள் அக்கா தனலட்சுமி, ஆனந்தன் தங்கை அர்ச்சனா என்று பலரும் சேர்ந்து கொண்டார்கள்.

கண்ணாத்தாள் நாட்டுபுற சுற்றில் கண்டாங்கி சேலை அணிந்து "ஊருசனம் தூங்கிருச்சு "பாடி அசத்தினாள்.

கிளாசிகல் ரவுண்டு வர அவள் பயின்ற கர்நாடக இசை வைத்து "அலைபாயுதே கண்ணா" "என்ன தவம் செய்தனை யசோதா" பாடி மயக்கினாள்.

வெஸ்டர்ன் ரவுண்ட் வர அவளை கடைக்கு அழைத்து சென்று அவளை தேர்வு செய்ய சொன்னான் ஆனந்தன்.

அழகிய டிசைன் வேலைபாடுகள் நிறைந்த இளம் பச்சை நிற ஒரு சுடிதார் அவளை கவர்ந்தது.

அவள் விலையை பார்க்க அது இரண்டாயிரம் என்று இருக்க தன் மனதை மாற்றி கொண்டு வேறு கம்மி விலை சுடிதாரை தேடி தேர்வு செய்தாள்.

அவளின் நடவடிக்கைகளை கவனித்து கொண்டிருந்த ஆனந்தன் அவள் முதலில் பார்த்த சுடிதாரை அவளிடம் காட்டி "கண்ணா...இது உனக்கு பிடித்திருக்கா?" என்று கேட்டான் ஆனந்தன்.

"ரொம்ப பிடிச்சிருக்குங்க ஆனால் காஸ்ட்லியாக இருக்கு அதனால் அது வேண்டாங்க. இது விலை கம்மியாக இருக்கு அதேசமயம் ரொம்ப அழகாகவும் இருக்குங்க இதுவே எனக்கு போதும்" என்று தான் எடுத்த பிங்க் கலர் சுடிதாரை காட்டி கூறினாள் கண்ணாத்தாள்.


"சரி கண்ணா... உனக்கு பிடித்து இருந்தால் இதையே எடுத்து கொள்" என்றான் ஆனந்தன்.

அவள் பிற ஐட்டங்களை வாங்க சென்றவேளையில் அவளுக்கு பிடித்த சுடிதாரையும் சேர்த்து பில் போட சொல்லிவிட்டான்.

கண்ணாத்தாளும் ஆனந்தனும் கடையில் பர்சேஸ் முடித்து வீட்டுக்கு வந்தபின்னும் அவன் எதுவும் தெரியாதவன் போல் இருந்தான்.

கண்ணாத்தாள் துணிகளை எல்லாம் சரி பார்க்க கவரை பிரித்து பார்த்தாள்.

அவள் வேண்டாம் என்று விட்ட அவளுக்கு பிடித்த அந்த பச்சை நிற சுடிதார் இருக்க கண்களில் அதிர்ச்சி கலந்த ஆனந்ததோடு அதை பார்த்தாள்.

சில நொடிகள் பார்த்தபின் இது எப்படி நம் பையில் வந்திருக்கும் என்று யோசிக்க அவளுக்கு ஆனந்தனின் செயல் இது என்று புரிந்தது.

அவள் அந்த சுடிதாரை எடுத்து கொண்டு வந்து ஆனந்தனிடம் காண்பித்து "என்னங்க இந்த சுடிதார்" என்றாள்.

"கண்ணா... உனக்கு இந்த பிடிச்சிருந்தது ஆனால் விலையை பார்த்து வேண்டாம் என்றாய் அதான் உனக்கு தெரியாமல் எடுத்துவிட்டேன்"

தன்னை முழுவதும் புரிந்த தன் கணவன் ஆனந்தன் அன்பை கண்டு மனதில் ஆனந்தம் கொண்டு அப்படியே அவனை கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு மார்பில் சாய்ந்தாள் கண்ணாத்தாள்.
Write your reply...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top