snehasree
SM Exclusive
தீபாவளிக்கு முதல் நாள் தனலட்சுமியின் வீட்டுக்கு அவள் அப்பா மாடசாமி அம்மா கமலம், கண்ணாத்தாள். ஆனந்தன் ஆகியோர் சென்று தங்கி கொண்டனர்.
மரகதம், மாணிக்கம், அருண், ரஞ்சிதா ஆகியோர் அர்ச்சனா வீட்டில் தங்கி கொண்டனர்.
மறுநாள் அதிகாலை எழுந்து குளித்து முடித்தபின்னர் தனலட்சுமியின் வீட்டில் பூஜை செய்து மாடசாமியும், கமலமும் தம்பதி சமேதராய் நின்று தங்கள் இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மருமகன்களுக்கும், பேரனுக்கும் புது துணிகளை ஆசீர்வாதம் செய்து தர பெற்று கொண்டனர்.
மகள்கள் தனலட்சுமி மற்றும் கண்ணாத்தாள் எடுத்து தந்த துணியை பெற்று கொண்ட அவர்கள் தனலட்சுமி தந்த துணியை அணிந்து கொள்ள அவளுக்கு தாங்க முடியாத சந்தோஷம் ஏற்பட்டது.
மாடசாமி கமலம் தம்பதியினர் இரண்டு மருமகன்களுக்கும் தீபாவளி சீராக ஒரு பவுனில் மோதிரம் போட அதை பெற்ற தனலட்சுமிக்கு மேலும் ஆனந்தம் ஏற்பட்டது.
அர்ச்சனா விட்டில் அதே போல் மாணிக்கம் விஜயா தம்பதிகள் பூஜை செய்து தங்கை மரகதம் அர்ச்சனா ஆகாஷ் பேத்தி ஆனந்த ஜோதி மகன் அருண் மருமகள் ரஞ்சிதா பேத்தி வைசாலி ஆகியோருக்கு ஆசீர்வாதம் செய்து துணிகளை வழங்கினார்.
அர்ச்சனா-ஆகாஷ், அருண்- ரஞ்சிதா மற்றும் ஆனந்தன்- கண்ணாத்தாள் எடுத்து தந்த துணிகளை மரகதம் மற்றும் மாணிக்கம், விஜயா பெற்று கொண்டாலும் அர்ச்சனா துணிகளை அணிந்து கொண்டதால் அவளுக்கும் மிக்க மகிழ்ச்சி ஏற்பட்டது.
மரகதம் அம்மா தன் மருமகன் ஆகாஷ். அண்ணன் மகன் அருண் இருவருக்கும் ஒரு பவுன் மோதிரம் தீபாவளிக்கு சீராக தந்தார்.
காலையில் பூஜை முடித்து தங்கள் வீடுகளில் டிபன் சாப்பிட்ட பின்னர் ஒன்றாக கோவிலுக்கு சென்று சாமி கும்பிட சென்ற பொழுது சரண்யா விவேக் அவர்களுடன் இணைந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கண்ணாத்தாளுக்கு ஒரு அக்கா போல் இருந்து சரண்யா செய்து வரும் உதவிகளை அறிந்த இரு வீட்டு பெரியவர்கள் கோவிலில் இருந்து வீட்டுக்கு திரும்பும் சரண்யா விவேக் இருவரையும் அவர்களை வீட்டுக்கு அழைக்க அவளுக்கு நெகிழ்ச்சி ஏற்பட்டது.
"எங்கள் கண்ணாவுக்கு நீ ஒரு அக்கா மாதிரி பார்த்து பார்த்து எல்லாம் செய்கிறாய். நீயும் எங்கள் மகள் மாதிரிதான் அதனால் எங்கள் கூட வந்து வீட்டில் தங்கி மதியம் சாப்பிட்டு விட்டுதான் செல்ல வேண்டும்" என்றார் மாடசாமி.
"ஆமாம்மா... என் மருமகளை தங்கையாக பார்த்து கொள்ளும் நீயும் என் மகள் மாதிரிதான். நீ எதுவும் சொல்லாமல் வந்து மதியம் சாப்பிட்டு விட்டு போ" என்றார் மரகதம்.
"கண்ணா... உன் அக்காவை கூட்டி கொண்டு வா" என்று ஆனந்தன் கண்ணாத்தாளிடம் சொல்லி விட "அக்கா... மாமா... இரண்டும் பேரும் உடனே எங்களுடன் வீட்டுக்கு வர்றீங்க" என்று சரண்யா அவள் கணவன் விவேக்கை அழைத்தாள்.
இரு குடும்பத்தின் அன்பில் மகிழ்ந்து கண்கள் கலங்கி நின்ற சரண்யாவை கண்ணாத்தாளும் அவள் கணவன் விவேக்கை ஆனந்தனும் அவர்களுடன்
அழைத்து வந்து விட்டார்கள்.
தனலட்சுமி வீட்டில் இரு குடும்பங்களுடன் சரண்யாவும் இணைந்து கொள்ள அர்ச்சனா, தனலட்சுமி, கண்ணாத்தாள், ரஞ்சிதா, சரண்யா என்று ஐந்து பேரும் பேசி கொண்டு சமைத்து முடிக்க அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர்.
சரண்யாவும் விவேக்கும் சாப்பாடு முடிந்த பின்னர் இரு வீட்டு பெரியவர்கள் ஆசீர்வாதம் செய்து தந்த துணியையும் பரிசையும் பெற்று கொண்டு எல்லோரிடமும் ஆசீர்வாதம் பெற்று மிகுந்த மகிழ்ச்சியுடன் திரும்பினார்கள்.
அன்று மாலை அனைவரும் கிளம்பி ஆனந்தன் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.
அன்று இரவு ஆகாஷ்-அர்ச்சனா, தனசேகர்-தனலட்சுமி, சரண்யா மற்றும் விவேக் மகிழ்ச்சியாக
தீபாவளியை பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.
Message…
மரகதம், மாணிக்கம், அருண், ரஞ்சிதா ஆகியோர் அர்ச்சனா வீட்டில் தங்கி கொண்டனர்.
மறுநாள் அதிகாலை எழுந்து குளித்து முடித்தபின்னர் தனலட்சுமியின் வீட்டில் பூஜை செய்து மாடசாமியும், கமலமும் தம்பதி சமேதராய் நின்று தங்கள் இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மருமகன்களுக்கும், பேரனுக்கும் புது துணிகளை ஆசீர்வாதம் செய்து தர பெற்று கொண்டனர்.
மகள்கள் தனலட்சுமி மற்றும் கண்ணாத்தாள் எடுத்து தந்த துணியை பெற்று கொண்ட அவர்கள் தனலட்சுமி தந்த துணியை அணிந்து கொள்ள அவளுக்கு தாங்க முடியாத சந்தோஷம் ஏற்பட்டது.
மாடசாமி கமலம் தம்பதியினர் இரண்டு மருமகன்களுக்கும் தீபாவளி சீராக ஒரு பவுனில் மோதிரம் போட அதை பெற்ற தனலட்சுமிக்கு மேலும் ஆனந்தம் ஏற்பட்டது.
அர்ச்சனா விட்டில் அதே போல் மாணிக்கம் விஜயா தம்பதிகள் பூஜை செய்து தங்கை மரகதம் அர்ச்சனா ஆகாஷ் பேத்தி ஆனந்த ஜோதி மகன் அருண் மருமகள் ரஞ்சிதா பேத்தி வைசாலி ஆகியோருக்கு ஆசீர்வாதம் செய்து துணிகளை வழங்கினார்.
அர்ச்சனா-ஆகாஷ், அருண்- ரஞ்சிதா மற்றும் ஆனந்தன்- கண்ணாத்தாள் எடுத்து தந்த துணிகளை மரகதம் மற்றும் மாணிக்கம், விஜயா பெற்று கொண்டாலும் அர்ச்சனா துணிகளை அணிந்து கொண்டதால் அவளுக்கும் மிக்க மகிழ்ச்சி ஏற்பட்டது.
மரகதம் அம்மா தன் மருமகன் ஆகாஷ். அண்ணன் மகன் அருண் இருவருக்கும் ஒரு பவுன் மோதிரம் தீபாவளிக்கு சீராக தந்தார்.
காலையில் பூஜை முடித்து தங்கள் வீடுகளில் டிபன் சாப்பிட்ட பின்னர் ஒன்றாக கோவிலுக்கு சென்று சாமி கும்பிட சென்ற பொழுது சரண்யா விவேக் அவர்களுடன் இணைந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கண்ணாத்தாளுக்கு ஒரு அக்கா போல் இருந்து சரண்யா செய்து வரும் உதவிகளை அறிந்த இரு வீட்டு பெரியவர்கள் கோவிலில் இருந்து வீட்டுக்கு திரும்பும் சரண்யா விவேக் இருவரையும் அவர்களை வீட்டுக்கு அழைக்க அவளுக்கு நெகிழ்ச்சி ஏற்பட்டது.
"எங்கள் கண்ணாவுக்கு நீ ஒரு அக்கா மாதிரி பார்த்து பார்த்து எல்லாம் செய்கிறாய். நீயும் எங்கள் மகள் மாதிரிதான் அதனால் எங்கள் கூட வந்து வீட்டில் தங்கி மதியம் சாப்பிட்டு விட்டுதான் செல்ல வேண்டும்" என்றார் மாடசாமி.
"ஆமாம்மா... என் மருமகளை தங்கையாக பார்த்து கொள்ளும் நீயும் என் மகள் மாதிரிதான். நீ எதுவும் சொல்லாமல் வந்து மதியம் சாப்பிட்டு விட்டு போ" என்றார் மரகதம்.
"கண்ணா... உன் அக்காவை கூட்டி கொண்டு வா" என்று ஆனந்தன் கண்ணாத்தாளிடம் சொல்லி விட "அக்கா... மாமா... இரண்டும் பேரும் உடனே எங்களுடன் வீட்டுக்கு வர்றீங்க" என்று சரண்யா அவள் கணவன் விவேக்கை அழைத்தாள்.
இரு குடும்பத்தின் அன்பில் மகிழ்ந்து கண்கள் கலங்கி நின்ற சரண்யாவை கண்ணாத்தாளும் அவள் கணவன் விவேக்கை ஆனந்தனும் அவர்களுடன்
அழைத்து வந்து விட்டார்கள்.
தனலட்சுமி வீட்டில் இரு குடும்பங்களுடன் சரண்யாவும் இணைந்து கொள்ள அர்ச்சனா, தனலட்சுமி, கண்ணாத்தாள், ரஞ்சிதா, சரண்யா என்று ஐந்து பேரும் பேசி கொண்டு சமைத்து முடிக்க அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர்.
சரண்யாவும் விவேக்கும் சாப்பாடு முடிந்த பின்னர் இரு வீட்டு பெரியவர்கள் ஆசீர்வாதம் செய்து தந்த துணியையும் பரிசையும் பெற்று கொண்டு எல்லோரிடமும் ஆசீர்வாதம் பெற்று மிகுந்த மகிழ்ச்சியுடன் திரும்பினார்கள்.
அன்று மாலை அனைவரும் கிளம்பி ஆனந்தன் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.
அன்று இரவு ஆகாஷ்-அர்ச்சனா, தனசேகர்-தனலட்சுமி, சரண்யா மற்றும் விவேக் மகிழ்ச்சியாக
தீபாவளியை பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.
Message…