snehasree
SM Exclusive
கண்ணாத்தாள் முதல் பாடல் பாட வந்தாள். அவள் கண்கள் ஆனந்தனை தேட அவன் பார்வையில் படும்படி நிற்க அவள் உற்சாகமாகி பின் "பாடறியேன் படிப்பறியேன் பள்ளி கூடம் நானறியேன்" பாடலை அருமையாக பாடி முடித்தாள்.
அவள் பாடலுக்கு அரங்கம் அதிர முதல் பாடலை சிறப்பாக பாடியதில் அனைவருக்கும் மகிழ்ச்சி ஏற்பட்டது.
இரண்டாவது பாடலுக்கு வந்து நின்ற பொழுது அவள் கண்கள் தேடி பார்க்க ஆனந்தனும் சரண்யாவும் அவள் கண்களுக்கு தெரியவில்லை.
கண்ணாத்தாள் குழம்பி சுற்றிலும் எல்லா பக்கமும் பார்த்து விட்டு சோகமாகி "எங்கே எனது கவிதை கனவில் எழுதி மடித்த கவிதை" என்ற பாடலை மிக சோகமான குரலில் பாடி விட்டு சென்று விட்டாள்.
மூன்றாவது பாடல் பாட வந்த பொழுது சரண்யா எதிர் நிற்க அவள் கண்களில் அவ்வளவு ஆனந்தம்.
ஆனந்தனை பார்க்க அவன் தெரியாத காரணத்தால் குழம்பி பார்க்க மறைவாக நின்றிருந்த ஆனந்தனை சரண்யா காட்டி கொடுத்தாள்.
கணவனை கண்டு மகிழ்ந்த கண்ணாத்தாள் "மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன" என்ற பாடலை பாடினாள்.
நான்காவது மற்றும் இறுதி பாடலை பாட வந்தவளுக்கு எதிரே ஆனந்தன் நின்று பார்க்க மனத்தில் உற்சாகம் அடைய "கண்ணா மூச்சி ஏனடா என் கண்ணா" என்று பாடலை பாடினாள்.
கண்ணாத்தாள் பாடிய நான்கு பாடலிலும் அவளின் மனதில் உணர்ச்சிகள் கலக்க அரங்கமே அவள் இசையில் லயித்து பாடி முடித்த பின்னர் கை தட்டி பாராட்டுகளை தெரிவித்தனர்.
ஆரியமான், வித்யா, மித்ரா, ஆங்கர் பார்கவி, கவுசிக் என்று அனைவரும் அவள் பாடலை பாராட்டினார்கள்.
வாக்கெடுப்பு முடிவுகளுக்காக காத்திருக்கும் வேளையில் ஆங்கர் பார்கவி ஆனந்தனையும் கண்ணாத்தாளையும் மேடைக்கு அழைக்க இருவரும் மேடையில் நின்றார்கள்.
"கண்ணாத்தாள்... உங்களிடம் ஒரு கேள்வி. இது உங்கள் இருவரை பார்த்து வரும் அனைவரின் மனத்தில் உள்ள கேள்வி. உங்களை விட பத்து வயது பெரியதாக உள்ளவரை அதுவும் கறுப்பாக உள்ள ஒருவரை திருமணம் செய்து ஆனந்தமாக வாழ்கிறீர்கள். இதன் ரகசியம் என்ன?"
கண்ணாத்தாள் பதிலுக்காக அனைவரும் காதுகளை தீட்ட
"அவர் என் மீது வைத்துள்ள அன்புதான் காரணம். அவர் என்னை மனைவியாக மட்டும் பார்க்கவில்லை. அவரின் முதல் குழந்தையாக என்னை பார்த்து இதுவரை என்னை ஒரு வார்த்தை அதட்டாமல் நான் செய்த தவறுகளை ஏற்று அன்பாக திருத்தி வரும் அவர் அன்பின் முன் வயது பேதம், நிற பேதம் எல்லாம் மறைந்து விட்டது." என்றவள் கூற அதை கேட்ட அவளின் உறவுகள் முகத்தில் ஆனந்தம் கலந்த மகிழ்ச்சி.
கண்ணாத்தாளிடம் மைக்கை வாங்கிய ஆனந்தன்
"நீங்கள் கேட்ட நிற பேதம், வயது வித்தியாச உணர்வுகள் எனக்குள் ஆரம்பத்தில் இருந்து வந்தது. கண்ணாத்தாளின் கள்ளம் கபடமற்ற முகம் மற்றும் தூய்மையான அன்பால் நான் அவளை காதலிக்க ஆரம்பித்து விட்டேன். அவள் என் மனைவி என்பதை தாண்டி காதல் கண்மணியாகி விட எல்லா உணர்வுகளும் அதில் அழிந்து விட்டன" என்றான்.
"உங்கள் காதல் கண்மணிக்கு காதலை சொல்ல வாய்ப்பு தருகிறோம்." என்று பார்கவி கூறினாள்.
ஆனந்தன் மேடையில் அவளை காதலுடன் பார்த்து "ஐ லவ் யூ கண்ணா" என்று சொல்லி ரோஜாவை நீட்ட வாங்கியபடி "மீ டு" என்றாள்.
"கண்ணா! எங்களுக்காக ஏழு ஸ்வரங்களில் பாடல் பாட முடியுமா?" என்றாள் பார்கவி.
"சரி" என்ற கண்ணாத்தாள் "ஏழு ஸ்வரங்களில் எத்தனை ராகம்" என்ற பாடலை பாடி முடித்தாள்.
"கண்ணா! உங்கள் குரலில் மன்னவன் வந்தனாடி கேட்க ஆசை" என்றான் ஆங்கர் கவுசிக்.
"சரி" என்றவள் ஆனந்தனை ஒரு பார்வை பார்த்து விட்டு "மன்னவன் வந்தனாடி... மாயவனோ தூயவனோ நாயகனோ நானறியேன்" என்று பாடி முடித்தாள்.
போட்டி முடிவு அறிவுக்கும் தருணம் வந்தது.
கண்ணாத்தாள் உட்பட மற்ற போட்டியாளர்கள் பரபரப்பாக காதை தீட்டிய படி நின்றார்கள்.
"ஒரு கவுண்ட் டவுன் வைத்து கொள்வோம்" என்றாள் பார்கவி.
"டென்... நைன்... எய்ட்... செவன்... சிக்ஸ்... பைவ்... போர்... த்ரீ... டு... ஒன்... அண்ட் சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் இஸ்" என்றாள் பார்கவி.
"கண்ணாத்தாள்" என்றார் ஆரியமான்.
கண்ணாத்தாள் முகத்தில் மட்டுமில்லை அவளை சேர்ந்தவர்கள் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி.Message…
அவள் பாடலுக்கு அரங்கம் அதிர முதல் பாடலை சிறப்பாக பாடியதில் அனைவருக்கும் மகிழ்ச்சி ஏற்பட்டது.
இரண்டாவது பாடலுக்கு வந்து நின்ற பொழுது அவள் கண்கள் தேடி பார்க்க ஆனந்தனும் சரண்யாவும் அவள் கண்களுக்கு தெரியவில்லை.
கண்ணாத்தாள் குழம்பி சுற்றிலும் எல்லா பக்கமும் பார்த்து விட்டு சோகமாகி "எங்கே எனது கவிதை கனவில் எழுதி மடித்த கவிதை" என்ற பாடலை மிக சோகமான குரலில் பாடி விட்டு சென்று விட்டாள்.
மூன்றாவது பாடல் பாட வந்த பொழுது சரண்யா எதிர் நிற்க அவள் கண்களில் அவ்வளவு ஆனந்தம்.
ஆனந்தனை பார்க்க அவன் தெரியாத காரணத்தால் குழம்பி பார்க்க மறைவாக நின்றிருந்த ஆனந்தனை சரண்யா காட்டி கொடுத்தாள்.
கணவனை கண்டு மகிழ்ந்த கண்ணாத்தாள் "மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன" என்ற பாடலை பாடினாள்.
நான்காவது மற்றும் இறுதி பாடலை பாட வந்தவளுக்கு எதிரே ஆனந்தன் நின்று பார்க்க மனத்தில் உற்சாகம் அடைய "கண்ணா மூச்சி ஏனடா என் கண்ணா" என்று பாடலை பாடினாள்.
கண்ணாத்தாள் பாடிய நான்கு பாடலிலும் அவளின் மனதில் உணர்ச்சிகள் கலக்க அரங்கமே அவள் இசையில் லயித்து பாடி முடித்த பின்னர் கை தட்டி பாராட்டுகளை தெரிவித்தனர்.
ஆரியமான், வித்யா, மித்ரா, ஆங்கர் பார்கவி, கவுசிக் என்று அனைவரும் அவள் பாடலை பாராட்டினார்கள்.
வாக்கெடுப்பு முடிவுகளுக்காக காத்திருக்கும் வேளையில் ஆங்கர் பார்கவி ஆனந்தனையும் கண்ணாத்தாளையும் மேடைக்கு அழைக்க இருவரும் மேடையில் நின்றார்கள்.
"கண்ணாத்தாள்... உங்களிடம் ஒரு கேள்வி. இது உங்கள் இருவரை பார்த்து வரும் அனைவரின் மனத்தில் உள்ள கேள்வி. உங்களை விட பத்து வயது பெரியதாக உள்ளவரை அதுவும் கறுப்பாக உள்ள ஒருவரை திருமணம் செய்து ஆனந்தமாக வாழ்கிறீர்கள். இதன் ரகசியம் என்ன?"
கண்ணாத்தாள் பதிலுக்காக அனைவரும் காதுகளை தீட்ட
"அவர் என் மீது வைத்துள்ள அன்புதான் காரணம். அவர் என்னை மனைவியாக மட்டும் பார்க்கவில்லை. அவரின் முதல் குழந்தையாக என்னை பார்த்து இதுவரை என்னை ஒரு வார்த்தை அதட்டாமல் நான் செய்த தவறுகளை ஏற்று அன்பாக திருத்தி வரும் அவர் அன்பின் முன் வயது பேதம், நிற பேதம் எல்லாம் மறைந்து விட்டது." என்றவள் கூற அதை கேட்ட அவளின் உறவுகள் முகத்தில் ஆனந்தம் கலந்த மகிழ்ச்சி.
கண்ணாத்தாளிடம் மைக்கை வாங்கிய ஆனந்தன்
"நீங்கள் கேட்ட நிற பேதம், வயது வித்தியாச உணர்வுகள் எனக்குள் ஆரம்பத்தில் இருந்து வந்தது. கண்ணாத்தாளின் கள்ளம் கபடமற்ற முகம் மற்றும் தூய்மையான அன்பால் நான் அவளை காதலிக்க ஆரம்பித்து விட்டேன். அவள் என் மனைவி என்பதை தாண்டி காதல் கண்மணியாகி விட எல்லா உணர்வுகளும் அதில் அழிந்து விட்டன" என்றான்.
"உங்கள் காதல் கண்மணிக்கு காதலை சொல்ல வாய்ப்பு தருகிறோம்." என்று பார்கவி கூறினாள்.
ஆனந்தன் மேடையில் அவளை காதலுடன் பார்த்து "ஐ லவ் யூ கண்ணா" என்று சொல்லி ரோஜாவை நீட்ட வாங்கியபடி "மீ டு" என்றாள்.
"கண்ணா! எங்களுக்காக ஏழு ஸ்வரங்களில் பாடல் பாட முடியுமா?" என்றாள் பார்கவி.
"சரி" என்ற கண்ணாத்தாள் "ஏழு ஸ்வரங்களில் எத்தனை ராகம்" என்ற பாடலை பாடி முடித்தாள்.
"கண்ணா! உங்கள் குரலில் மன்னவன் வந்தனாடி கேட்க ஆசை" என்றான் ஆங்கர் கவுசிக்.
"சரி" என்றவள் ஆனந்தனை ஒரு பார்வை பார்த்து விட்டு "மன்னவன் வந்தனாடி... மாயவனோ தூயவனோ நாயகனோ நானறியேன்" என்று பாடி முடித்தாள்.
போட்டி முடிவு அறிவுக்கும் தருணம் வந்தது.
கண்ணாத்தாள் உட்பட மற்ற போட்டியாளர்கள் பரபரப்பாக காதை தீட்டிய படி நின்றார்கள்.
"ஒரு கவுண்ட் டவுன் வைத்து கொள்வோம்" என்றாள் பார்கவி.
"டென்... நைன்... எய்ட்... செவன்... சிக்ஸ்... பைவ்... போர்... த்ரீ... டு... ஒன்... அண்ட் சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் இஸ்" என்றாள் பார்கவி.
"கண்ணாத்தாள்" என்றார் ஆரியமான்.
கண்ணாத்தாள் முகத்தில் மட்டுமில்லை அவளை சேர்ந்தவர்கள் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி.Message…
Last edited: