• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

En kaadhal kanmaniye-34(FINAL)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
கண்ணாத்தாள் முதல் பாடல் பாட வந்தாள். அவள் கண்கள் ஆனந்தனை தேட அவன் பார்வையில் படும்படி நிற்க அவள் உற்சாகமாகி பின் "பாடறியேன் படிப்பறியேன் பள்ளி கூடம் நானறியேன்" பாடலை அருமையாக பாடி முடித்தாள்.

அவள் பாடலுக்கு அரங்கம் அதிர முதல் பாடலை சிறப்பாக பாடியதில் அனைவருக்கும் மகிழ்ச்சி ஏற்பட்டது.

இரண்டாவது பாடலுக்கு வந்து நின்ற பொழுது அவள் கண்கள் தேடி பார்க்க ஆனந்தனும் சரண்யாவும் அவள் கண்களுக்கு தெரியவில்லை.

கண்ணாத்தாள் குழம்பி சுற்றிலும் எல்லா பக்கமும் பார்த்து விட்டு சோகமாகி "எங்கே எனது கவிதை கனவில் எழுதி மடித்த கவிதை" என்ற பாடலை மிக சோகமான குரலில் பாடி விட்டு சென்று விட்டாள்.

மூன்றாவது பாடல் பாட வந்த பொழுது சரண்யா எதிர் நிற்க அவள் கண்களில் அவ்வளவு ஆனந்தம்.

ஆனந்தனை பார்க்க அவன் தெரியாத காரணத்தால் குழம்பி பார்க்க மறைவாக நின்றிருந்த ஆனந்தனை சரண்யா காட்டி கொடுத்தாள்.

கணவனை கண்டு மகிழ்ந்த கண்ணாத்தாள் "மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன" என்ற பாடலை பாடினாள்.

நான்காவது மற்றும் இறுதி பாடலை பாட வந்தவளுக்கு எதிரே ஆனந்தன் நின்று பார்க்க மனத்தில் உற்சாகம் அடைய "கண்ணா மூச்சி ஏனடா என் கண்ணா" என்று பாடலை பாடினாள்.

கண்ணாத்தாள் பாடிய நான்கு பாடலிலும் அவளின் மனதில் உணர்ச்சிகள் கலக்க அரங்கமே அவள் இசையில் லயித்து பாடி முடித்த பின்னர் கை தட்டி பாராட்டுகளை தெரிவித்தனர்.

ஆரியமான், வித்யா, மித்ரா, ஆங்கர் பார்கவி, கவுசிக் என்று அனைவரும் அவள் பாடலை பாராட்டினார்கள்.

வாக்கெடுப்பு முடிவுகளுக்காக காத்திருக்கும் வேளையில் ஆங்கர் பார்கவி ஆனந்தனையும் கண்ணாத்தாளையும் மேடைக்கு அழைக்க இருவரும் மேடையில் நின்றார்கள்.

"கண்ணாத்தாள்... உங்களிடம் ஒரு கேள்வி. இது உங்கள் இருவரை பார்த்து வரும் அனைவரின் மனத்தில் உள்ள கேள்வி. உங்களை விட பத்து வயது பெரியதாக உள்ளவரை அதுவும் கறுப்பாக உள்ள ஒருவரை திருமணம் செய்து ஆனந்தமாக வாழ்கிறீர்கள். இதன் ரகசியம் என்ன?"

கண்ணாத்தாள் பதிலுக்காக அனைவரும் காதுகளை தீட்ட
"அவர் என் மீது வைத்துள்ள அன்புதான் காரணம். அவர் என்னை மனைவியாக மட்டும் பார்க்கவில்லை. அவரின் முதல் குழந்தையாக என்னை பார்த்து இதுவரை என்னை ஒரு வார்த்தை அதட்டாமல் நான் செய்த தவறுகளை ஏற்று அன்பாக திருத்தி வரும் அவர் அன்பின் முன் வயது பேதம், நிற பேதம் எல்லாம் மறைந்து விட்டது." என்றவள் கூற அதை கேட்ட அவளின் உறவுகள் முகத்தில் ஆனந்தம் கலந்த மகிழ்ச்சி.

கண்ணாத்தாளிடம் மைக்கை வாங்கிய ஆனந்தன்
"நீங்கள் கேட்ட நிற பேதம், வயது வித்தியாச உணர்வுகள் எனக்குள் ஆரம்பத்தில் இருந்து வந்தது. கண்ணாத்தாளின் கள்ளம் கபடமற்ற முகம் மற்றும் தூய்மையான அன்பால் நான் அவளை காதலிக்க ஆரம்பித்து விட்டேன். அவள் என் மனைவி என்பதை தாண்டி காதல் கண்மணியாகி விட எல்லா உணர்வுகளும் அதில் அழிந்து விட்டன" என்றான்.

"உங்கள் காதல் கண்மணிக்கு காதலை சொல்ல வாய்ப்பு தருகிறோம்." என்று பார்கவி கூறினாள்.
ஆனந்தன் மேடையில் அவளை காதலுடன் பார்த்து "ஐ லவ் யூ கண்ணா" என்று சொல்லி ரோஜாவை நீட்ட வாங்கியபடி "மீ டு" என்றாள்.


"கண்ணா! எங்களுக்காக ஏழு ஸ்வரங்களில் பாடல் பாட முடியுமா?" என்றாள் பார்கவி.

"சரி" என்ற கண்ணாத்தாள் "ஏழு ஸ்வரங்களில் எத்தனை ராகம்" என்ற பாடலை பாடி முடித்தாள்.

"கண்ணா! உங்கள் குரலில் மன்னவன் வந்தனாடி கேட்க ஆசை" என்றான் ஆங்கர் கவுசிக்.

"சரி" என்றவள் ஆனந்தனை ஒரு பார்வை பார்த்து விட்டு "மன்னவன் வந்தனாடி... மாயவனோ தூயவனோ நாயகனோ நானறியேன்" என்று பாடி முடித்தாள்.

போட்டி முடிவு அறிவுக்கும் தருணம் வந்தது.

கண்ணாத்தாள் உட்பட மற்ற போட்டியாளர்கள் பரபரப்பாக காதை தீட்டிய படி நின்றார்கள்.

"ஒரு கவுண்ட் டவுன் வைத்து கொள்வோம்" என்றாள் பார்கவி.

"டென்... நைன்... எய்ட்... செவன்... சிக்ஸ்... பைவ்... போர்... த்ரீ... டு... ஒன்... அண்ட் சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் இஸ்" என்றாள் பார்கவி.

"கண்ணாத்தாள்" என்றார் ஆரியமான்.

கண்ணாத்தாள் முகத்தில் மட்டுமில்லை அவளை சேர்ந்தவர்கள் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி.Message…
 




Last edited:

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
போட்டி முடிவுகள் வெளியாகி கண்ணாத்தாள் முதல் பரிசு வெல்ல வெற்றி கோப்பையை ஆரியமான், வித்யா, மீத்ரா கூட்டாக தர ஆனந்தனுடன் பெற்று மகிழ்ந்தாள்.

கண்ணாத்தாளை சந்தோச மிகுதியால் கட்டி அணைத்து சரண்யா, காவியா. தனலட்சுமி, அர்ச்சனா, ஜெனிபர் வாழ்த்த ஆனந்தனை கட்டி தழுவி விவேக், தனசேகர் ஆகாஷ் வாழ்த்தினார்கள்.

கண்ணாத்தாளுக்கு தென்றல் நகரில் ஒரு பரிசு அளிப்பதாக தென்றல் கன்ஷ்டரக்சன் உரிமையாளர் மனோரஞ்சன் அறிவித்தார்.
வின்னருக்கு தன் படத்தில் ஒரு பாடல் பாட வாய்ப்பு தருவதாக ஆரியமான் அறிவித்தார்.

மறுநாள் மதியம் கண்ணாத்தாள் வீட்டில் சரண்யா, விவேக், தனலட்சுமி, தனசேகர், அர்ச்சனா, ஆகாஷ், காவியா பேமிலி, ஜெனிபர் பேமிலி எல்லோரும் இருந்தார்கள்.

சூப்பர் சிங்கர் வெற்றியை கொண்டாட ஒரு சிறு விருந்து ஏற்பாடு செய்திருந்தாள் கண்ணாத்தாள்.

காலிங் பெல் சப்தம் கேட்டது.

காவியா சென்று கதவை திறந்தாள்.

"சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் கண்ணாத்தாள் வீடு இதுதானே" என்றபடி இரு தம்பதிகள், மற்றும் ஐந்து சிறுவர்கள் நின்று கொண்டு இருந்தார்கள்

"ஆமாம். அது என் அக்காதான். உள்ளே வாங்க" என்றாள் காவியா.

காவியா உள்ளே அழைக்க இரு தம்பதிகள் மற்றும் மூன்று குழந்தைகளுடன் ஐந்து வாண்டுகள் உள்ளே வந்தார்கள்.

அவர்களை பார்த்த சரண்யா "தென்றல்! அனு!" என்று கூச்சலிட்டாள்.

"சரண்!" என்று அவர்கள் இருவரும் அழைத்தபடி வர சரண்யா அவர்களை வந்து கட்டி கொண்டாள்.

சரண்யா பின்னர் வாண்டுகளை
"நிவாஸ்! பிரதாப்! ராகுல்! ஷிவானி! சுனில்!" என்று அந்த ஐந்து வாண்டுகளையும் அவள் அழைக்க "அக்கா" என்றபடி வந்து கட்டி கொண்டார்கள்.

"என்ன சரண்! சென்னை வந்த பின்னால் எங்களை மறந்து விட்டியா? எட்டு மாதத்தில் ஒரு முறை கூட வந்து எங்களை பார்க்கவில்லை." என்றாள் தென்றல்.

"என் பையன் பிறந்த அன்று வந்த உன்னை நாங்கள்தான் இப்படி தேடி வந்திருக்கிறோம்" என்றாள் அனு.

"மாமா! ஏன் சரண் அக்காவை எங்களை பார்க்க நீங்கள் அழைத்து வரவில்லை?" என்றான் நிவாஸ்.

"உங்கள் அக்கா இங்கே ஒரு அக்காவை பார்த்து கொள்வதில் பிசியாகி விட்டாள் அதனால்தான் அவள் வரவில்லை" என்றான் விவேக்.

"யார் அந்த புது அக்கா?" என்று கேட்டான் சுனில்.

"இவள்தான் கண்ணாத்தாள். என் அண்ணி கம் தங்கை" என்று அறிமுகம் செய்தாள் சரண்யா.

"இந்த அக்கா ரொம்ப அழகாக இருக்கிறாள் தென்றல்" என்று கூறினாள் ஷிவானி.

"இந்த அக்காவின் மாமா யார்?" என்றான் பிரதாப்.

"இவர்தான் என் கணவர்" என்று கண்ணாத்தாள் ஆனந்தனை காட்ட அவர்களை பார்த்தார்கள் வாண்டுகள்.

"டேய்! இவர்களுக்கும் எங்களை மாதிரி இன்டர்வியூ வைத்து விடாதீர்கள்" என்றான் மனோ.

"அதை மறந்து விட்டோமே? நல்ல வேளை ஞாபக படுத்தீ விட்டீர்கள் மாமா" என்றான் ராகுல்.

"பாவா! வந்த இடத்தில் வாயை வைத்து கொண்டு இருக்க மாட்டீர்களா?" என்றாள் தென்றல்.

"நாங்கள் பெற்ற இன்பத்தை மற்றவர்கள் பெற வேண்டும் அல்லவா?" என்றான் சூரியா.

"இந்த மாமா டிவியில் பேசியதை நாங்கள் டிவியில் பார்த்தோம். எங்களுக்கு இந்த மாமா ஒகே ஆனால் எங்கள் கண்ணா அக்காவை இதே மாதிரீ பார்த்து கொள்ள வேண்டும். என்ன சரியா மாமா?" என்று கேட்டான் ராகுல்.

"சரி" என்று ஆனந்தன் சொல்ல "தென்றல்! இந்த மாமா அக்கா எங்களுக்கு ஒகே" என்றான் நிவாஸ்.

"அப்புறம் நாங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் கண்ணா அக்காவை பார்ப்போம். நீங்கள் தடுக்க கூடாது." என்றான் சுனில்.

Write your reply...
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
"சரி" என்று ஆனந்தன் சொல்ல வாண்டுகள் குதுகலித்தார்கள்.

"சரண்! நான்தான் கண்ணா குடிபோக போகும் தென்றல் நகரை கட்ட போகும் தென்றல் கன்ஸ்டரக்சன் ஒனர்." என்றாள் தென்றல்.

"அப்படியா! நல்லதா போச்சு தென்றல். எனக்கு கண்ணா குடி போக போகிற வீட்டின் அருகே ஐந்து வீடுகள் தேவை." என்றாள் சரண்யா.

"உனக்கு இல்லாத வீடுகளா? எடுத்து கொள். சரி... ஏன்டி அவ்வளவு வீடு உனக்கு?" என்றாள் தென்றல்.

"எனக்கு மட்டுமில்லைடி. இவர்களுக்கும்தான்" என்று காவியா, ஜெனிபர், தனலட்சுமி, அர்ச்சனா குடும்பங்களை அறிமுகம் செய்தாள்.

"சரண்! எனக்கு உங்கள் எல்லோரையும் பிடித்து விட்டது. நீ கேட்ட ஐந்து வீடுகளை தாரளமாக எடுத்து கொள்ளலாம்" என்றாள் தென்றல்.

"என்ன பாவா! நான் சொன்னது சரியா?" என்றாள் தென்றல்.

"இதை நீ கேட்கனுமா புயல். நீ சொன்னால் சரியாகத்தான் இருக்கும்" என்றான் மனோ.

"அக்கா! இவர்களை எங்களுக்கு அறிமுகம் செய்து வையுங்கள்" என்றாள் கண்ணாத்தாள்.

"நான் அதை மறந்து விட்டேன் பாரு. நான், தென்றல், அனு எல்லாம் ஊட்டியில் ஒரே ஆசிரமத்தில் வளர்ந்தவர்கள்" என்றபடி தென்றல், மனோ, அனு, சூர்யா, மற்றும் ஜந்து வாண்டுகளையும் எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைத்தாள்.

பரஸ்பர அறிமுக முடிந்த நிலையில் கண்ணாத்தாள் மயங்கி விழ போக ஆனந்தன் தாங்கி கொண்டான்.

"கண்ணாவிற்கு என்ன ஆச்சு?" என்று எல்லோரும் பதற நாடி பிடித்து பார்த்த காமாட்சி சிரித்தபடி "ஆனந்த் தம்பி! நீங்கள் அப்பா ஆக போகீறீர்கள்" என்றார்.

ஆனந்தனுக்கு எல்லோரும் வாழ்த்து சொல்ல மெல்ல கண் விழித்தாள் கண்ணாத்தாள்.

"அண்ணி! நான் மட்டுமில்லை. நீங்களும் அம்மாவாக போக போகீறீர்கள்" என்றாள் சரண்யா.

"அப்படியா அக்கா." என்றபடி கண்ணாத்தாள் ஆனந்தனை பார்க்க அவன் அணைத்து முத்தமிட அவள் சிலிர்த்தாள்.

"காங்கிராட்ஸ் சரண்" என்றபடி அனுவும், தென்றலும் கட்டி அணைத்து சரண்யாவை முத்தமிட்டார்கள்.

தென்றலின் ஐவர் படையான நிவாஸ், பிரதாப், சுனில், ராகுல், ஷிவானி கட்டி அணைத்து முத்தமிட்டார்கள்.
"பாவா! நாம் தீடிரென்று சென்னை போக போகிறாமே. அங்கே புதிய உறவுகள் எப்படி அமையும் என்று யோசித்தேன். பராவாயில்லை எனக்கு இங்கும் எல்லா உறவுகளும் கிடைத்து விட்டது" என்றாள் தென்றல்.

"தென்றல்! நீயும் எங்களுடன் இருக்க போகிறாயா?" என்றாள் சரண்யா.

"பாவாவின் புது புரொஜக்ட்டாக இங்கே தென்றல் நகர் தொடங்கி பாதி சென்று விட்டது. அங்கேதான் நாம் எல்லாம் வசிக்க போகிறோம். அடுத்து அனு நகர் ,சூரியா நகர், மனோ தென்றல் அபார்மென்ட்ஸ் கட்ட போகிறோம். நாங்கள் அதை முடிக்கும் வரை இங்கே தங்கி இருப்போம்." என்றாள் தென்றல்.

"அய்யா ஜாலி! தென்றல் அக்கா! நாம் எல்லோரும் ஒன்றாக இனி இருக்க போகிறோம்" என்றாள் காவியா.

"எங்கள் படையில் இன்னும் இருவர் சேர போகிறார்கள்" என்றாள் ஷிவானி.

"ஆமாம் பிரண்ட்ஸ்" என்று காவியா, ஜெனிபர் அவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள்.

"பிரண்ட்ஸ்! நாம் எல்லாம் சேர்ந்து இனி மாசமாக இருக்கிற கண்ணா அக்காவையும் சரண்யா அக்காவையும் பார்த்து கொள்வோம்" என்றாள் தென்றல்.

"சரி தென்றல்" என்று ஏழு பேரும் சொல்ல புன்னகை மலர்களாய் அனைவரும் சிரித்தனர்.

"கண்ணாவும், சரண்யாவும் எங்களை மாதிரியே இந்த ஏழு பேர் படையிடம் மாட்டி கொண்டு அவர்கள் காட்டும் அதிகமான அன்பினால் முழிக்க போகிறார்கள்" என்றாள் அனு.

"நாங்கள் அதற்கு தயாராக இருக்கிறோம். குழந்தைகளின் கள்ளங்கபடமற்ற அன்பில் நனைய நாங்கள் ரெடி" என்று சரண்யா சொல்ல "அப்படி சொல்லுங்க அக்கா" என்றாள் கண்ணாத்தாள்.

ஏழுவர் படை "ஹே!" என்று குதூகலித்து சிரித்தார்கள்.

"புயல்! எங்கே போனாலும் நீயும் உன் படையும் உங்கள் வேலையை ஆரம்பித்து வீடுவீர்களா?" என்றான் மனோ.

"நான் என்ன செய்கிறேன் பாவா. நான் செல்லுமிடத்தில் எல்லாம் தானாக எல்லாம் நடக்கிறது. எப்படியோ எல்லோரும் நல்லா இருந்தால் சரி" என்றாள் தென்றல்.

"அக்கா! எல்லாம் இனி எல்லாம் நல்லாதான் நடக்கும்" என்று கண்ணாத்தாள் சொல்ல "என் காதல் கண்மணி சொன்னால் சரியாக இருக்கும்" என்றான் ஆனந்தன்.

"மனைவியை நேசிக்கும் அனைத்து கணவன்களுக்கும் அவள் மனைவி காதல் கண்மணிதான் அண்ணா" என்ற சரண்யா கூற அனைவரும் ஆமோதித்து சிரித்தனர் .

தென்றல் நகரில் இனி இவர்கள் குதூகலம் தொடரட்டும் நன்றி வணக்கம்

Write your reply...
 




Last edited:

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
ஆரம்பத்திலிருந்து என்னோடும் கண்ணாத்தாள் ஆனந்தனோடும் பயணம் செய்து உங்கள் கருத்துகளால் ஊக்கபடுத்தியதற்கு மிக்க நன்றிகள் சித்ராம்மா
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
@Riha ஆரம்பத்திலிருந்து என்னோடும் கண்ணாத்தாள் ஆனந்தனோடும் பயணம் செய்து உங்கள் கருத்துகளால் ஊக்கபடுத்தியதற்கு மிக்க நன்றிகள் ஹரிணி
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top