• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

En kaadhal kanmaniye-5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
நிச்சயதார்த்த பத்திரிக்கை அய்யரால் படிக்கபட்டு இருவீட்டாரும் அதை ஏற்று சம்மதித்தபின்னர் இரு வீட்டினரும் தங்கள் தட்டுக்களை மாற்றி நிச்சயத்தை உறுதி செய்து கொண்டனர்.

"மாப்பிள்ளையும் பெண்ணும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துகோங்க" என்று யாரோ பெரியவர் ஒருவர் சொல்ல கண்ணாத்தள் தலை நிமிர்ந்து ஆனந்தனை முதன்முதலாக நேரில் பார்த்தாள்.

அவர்கள் இருவரின் விழிகள் சந்தித்து கொள்ள ஒருவரை ஒருவர் பரஸ்பரம் பார்த்தபின் வெட்கத்தால் கண்ணாத்தள் தலைகுனிந்து கொண்டாள்.

கண்ணாத்தாள் தலை குனிந்து அமர்ந்து இருந்தாலும் ஒரக் கண்ணால் பார்வையை தொடர ஆனந்தனும் பார்க்க அவள் வெட்கத்தால் சிவக்க ஒரு நாடகம் ஒடிக் கொண்டு இருந்தது.

மணமகன் வீட்டு தரப்பில் விஜயா அத்தை சென்று பெண்ணுக்கு பூ வைத்து விட இருவரின் திருமணம் உறுதி ஆகிவிட்டது.

கண்ணாத்தாளும் ஆனந்தனும் இருவரும் தம்பதி சமேதராக சபையினர் முன்னால் குனிந்து வணங்கி ஆசீர்வாதம் பெறும் பொழுதும் அவர்கள் பார்வைகள் மோதிக் கொண்டன.

நிச்சயதார்த்த சடங்குகள் நல்ல முறையில் முடிய மாப்பிள்ளை வீட்டார் உணவருந்தி சென்று விட, கண்ணாத்தாள் தரப்பு உறவினர்களும் உணவருந்திய பின்னர் சென்று விட்டார்கள்.

கண்ணாத்தாளின் தோழிகள் ரம்யாவும், பானுபிரியாவும் தங்களால் முடிந்தவரை அவளையும், ஆனந்தனையும, அவர்கள் இருவரும் பார்த்து கொண்ட விதத்தையும் வைத்து அவளை கலாய்த்து விட்டார்கள்.

கண்ணாத்தாள் வெட்கபட்டும், முறைத்தும், பதில் பேசியும், மிரட்டியும் பார்த்தபின்னர் இறுதியாக கெஞ்ச ஆரம்பிக்க, "அப்படி வா வழிக்கு" என்று அவளை விட்டார்கள்.

"கண்ணா... பரவாயில்லைடி உன் ஆளு நல்ல கறுப்பாக இருந்தாலும் அதேசமயம் நல்ல களையாக நல்ல குணமான ஆளாகத்தான் தெரிகிறார்" என்று தோழிகள் இருவரும் ஆனந்தனுக்கு சர்பிக்கேட் தந்தார்கள்.

கண்ணாத்தாள் அதை கேட்டு சந்தோஷமாகி அவர்கள் இருவரையும் பார்த்து சிரிக்க,
"சரிடி டைம் ஆச்சு. வீட்டில் தேடுவாங்க." என்று ரம்யாவும, பானுபிரியாவும் கிளம்பி சென்றார்கள்.

கண்ணாத்தாளிடம் அவள் அம்மா வந்து "மாப்பிள்ளை பிடித்திருக்கிறதா?" என்று ஒருமுறை கேட்க அவளும் "பிடித்திருக்கும்மா" என்று சொல்ல சந்தோஷமாக சென்றார் கமலம்.

வீட்டில் தனியாக தன்னுடைய அறையில் படுத்து இருந்த கண்ணாத்தாள் நடந்ததை நினைத்து கனவுகளில் மூழ்க. ஆனந்தனும் தன் அறையில் படுத்துக் கொண்டு இருந்த
அதே நிலையில் இருந்தான்.





கல்யாண கலாட்டாக்கள் அடுத்த எபியில் பார்க்கலாம் பிரண்ட்ஸ் படித்துவிட்டு லைக்கையும் கமெண்டையும் தாங்க பி
ஹாஹா ?சுப்பர் மாப்பிளையும் பொண்ணும் நல்ல தான் நோக்குறாங்க ??
நைஸ்? நிச்சயம் நல்லபடிய முடிச்சு வைச்சுட்டிங்க சினேகா நெக்ஸ்ட் கண்ணாலம் தான்?????????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top