நன்றி புவிக்காஆனந்த்..தங்கை அர்ச்சனா,அவள்கணவன் ஆகாஷ்
தனலஷ்மி..தனசேகர்
பெயர்பொருத்தம் சூப்பர்
அத்தியாயமும் சூப்பர்
அவங்க கல்யாணத்துக்கு போக மாட்டாங்க ரிசப்ஷனுக்குதான் போவாங்கOh... Kalyaanatthukku poganum ivanga... Enna nadakuthu nu aakash sonna maathiri oru kai paathuralaam
நன்றி பிரேமி சிஸ்டர்luv marriage la odhuka patta rendu peru friends uh ...avnga naala kalyanathuku kooda poga mudilaye ..nice epi sis
தனலட்சுமியும் அர்ச்சனவும் எப்பிடி ஒன்ன ?பிரண்ட்ஸா ? அது என்ன மா கடைசிய ஒரு குண்டு?விதி சதினு? சரி அடுத்த யூடில தெரிய போகுது ??நைஸ் மா????"சாரிக்கா... நான் உங்களை மறந்து என் பிரச்சனையை பெரிதாக நினைத்து அழுதுட்டு இருக்கேன. நீங்கதான் என்னை விட பெரிய அளவில் பாதிப்பை சந்தித்து இருக்கீங்க. சாரிக்கா" என்று தன் கண்ணீரை துடைத்து கொண்டு அர்ச்சனாவிற்கு ஆறுதல் கூற ஆரம்பித்தாள் தனலட்சுமி.
"அர்ச்சனா... நீ இப்பொழுது சொல்லு. நாம் நாலு பேரும் கல்யாணத்துக்கு போகலாம். அங்கே என்ன நடந்தாலும் ஒரு கை பார்த்திடலாம்" என்றான் அவள் காதல் கணவன் ஆகாஷ்.
"ஆமாம் தனா... இப்படி இங்கே உட்கார்ந்து அழுதுகிட்டு இருக்கறதை விட அங்கே போய் என்ன நடக்குதுன்னு பார்த்து விடலாம்" என்றான் அவள் காதல் கணவன் தனசேகர்.
"வேண்டாங்க... அங்கே போயி எங்களால் இன்னொரு முறை நீங்க ரெண்டுபேரும் அவமான படுவதை எங்களுக்கு விருப்பம் இல்லை" என்று தனலட்சுமி சொல்ல அவளை அனைவரும் கேள்விகளுடன் பார்த்தனர்.
"ஆமாங்க...தனா சரியாகத்தான் சொல்கிறாள். இப்பொழுது நம்மை எதிரியாக நினைக்கிற ரெண்டு வீட்டு உறவினர்களும் அங்கே ஒன்றாக இருக்கிற நேரத்தில் நாம் போயி அவமான பட வேண்டாம்." என்றாள் அர்ச்சனா.
"நம் குழந்தைகளை தூக்கிட்டு நாம் வீணாக அலைந்து, நம்ம மனசையும், உடம்பையும் கெடுத்துகிட்டு, குழந்தைகளும் அதை பார்த்து பயந்து மிரண்டு அழுகறதெல்லாம் வேண்டாம்."
என்றாள் தனலட்சுமி.
"எங்கள் கூட பிறந்தவர்கள் திருமணத்தை பார்க்க முடியாது மத்தபடி எங்க அண்ணாதான் மாப்பிள்ளை. இவள் தங்கைதான் பொண்ணு. யாரும் புதியவர்கள் இல்லை" என்றாள் அர்ச்சனா.
"ஆமாம் அக்கா சொல்றதுதான் சரி. எனக்கு செய்தியை கேள்வி பட்டதும் கொஞ்சம் வருத்தமாக இருந்தது. அக்கா சொன்னபிறகு நான் தெளிவாகியிட்டேன். நாம் இங்கே இருந்து அவங்களை நல்லா இருக்கட்டும் என்று வாழ்த்துவோம். அதுவே போதும்" என்றாள் தனலட்சுமி.
"சரிப்பா. உங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை செய்யுங்கள். நாங்கள் எதையும் செய்ய தயாராக இருக்கிறோம்" என்றான் ஆகாஷ்.
"கவலைபடாதீங்கப்பா. அங்கே நடக்கிறதை நமக்கு வாட்ஸ்அப் மூலம் வீடியோவாக அனுப்ப ஏற்பாடு செய்து விட்டேன். கல்யாண போட்டோக்களும் நமக்கு வர அங்கே இருக்கிற என் பிரண்ட்ஸ் வழியாக ஏற்பாடு செய்து விட்டேன்." என்று சந்தோஷமான விஷயத்தை கூறினான் தனசேகர்.
"அப்படியா! நல்ல வேளைதான் செஞ்சிருக்கீங்க. என்ன தனா இப்ப சந்தோஷமா" என்று அர்ச்சனா கேட்க,
"இதனால் அவங்களுக்கு ஏதாவது பிரச்சனை வருமா?" என்று சந்தேகம் எழுப்பினாள் தனலட்சுமி.
"ஒரு பிரச்சனையும் வராது சிஸ்டர். அவர்கள் நம்ம ஆளுக என்று யாருக்கும் துளி கூட டவுட் வராது. நீங்க கவலைபடத் தேவையில்லை" என்று ஆகாஷ் சொல்ல சந்தோஷமாகி சிரித்தாள் தனலட்சுமி.
"தனா சிரிச்சிட்டாள்" என்று அர்ச்சனா ஆனந்தமாக சொல்ல, "இதுதானே ஆசைபட்டாய் தனசேகரா" என்றான் ஆகாஷ்.
"அவள் எப்பொழுதும் இப்படியே இருக்கனும் என்பதுதான் என் ஆசை" என்று தனசேகர் கூற, தனலட்சுமி அவன் அருகில் சென்று அமர்ந்து தோளில் சாய்ந்தாள்.
"எனக்கும் அதுதான் ப்ரோ" என்று அர்ச்சனா அருகில் ஆகாஷ் அமர அவன் தோளில் சாய்ந்தாள் அர்ச்சனா.
இவர்கள் தங்கள் உடன்பிறந்த சகோதர சகோதரிகளை சந்திக்க வழி இல்லாமல் அழுது பின்னர் ஆறுதல் அடைகிறார்கள் ஆனால் விதி நடத்த இருக்கும் நாடகத்தை அறிய இவர்களுக்கு வாய்பில்லை.
நன்றி சரண்யா சிஸ்டர்nice epi..