- Joined
- Jan 17, 2018
- Messages
- 1,547
- Reaction score
- 7,648
அத்தியாயம் – 3
கையில் ஆதாரத்துடன், அந்த காசியை கைது செய்ய ஜட்ஜ்யிடம் வாரென்ட் ஆர்டர் வாங்கிவிட்டு கமிஷனர் அலுவலகம் நுழைந்தவள், அவரின் அனுமதி கிடைத்தவுடன் அவரை காண அவரின் அறைக்கு சென்றாள்.
அங்கே கமிஷ்னர் காசியிடம் சிரித்து பேசிக் கொண்டு இருந்ததை பார்த்து, அவளின் ரத்தம் கொதித்தது. ஒரு ரவுடியுடன், தன் மேலதிகாரி சிரித்து பேசிக் கொண்டு இருந்ததை காண சகியாமல் சார் என்று சிறிது சத்தமாக அழைத்து விட்டாள்.
அதில் திரும்பிய கமிஷ்னர், அவளின் குற்றம் சாட்டும் பார்வையை பார்த்து திகைத்தாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல் அவளிடம் பேச தொடங்கினார்.
“இவர் ஆள்ன்னு சொல்லி, இப்போ ஒருத்தனை உங்க கஸ்டடி ல எடுத்தது இவர் ஆள் இல்லையாம். இவரை பத்தி தப்பு தப்பா சொல்லிட்டு, ஒரு குரூப் இருக்காங்க, அவங்க ஆள் தான் அவனாம்”.
“சோ இவர் மேல நீங்க கேஸ் போட்டு, கொண்டு வந்த ஆதாரம் எல்லாம் கொடுத்துட்டு வேற கேஸ் பாருங்க. அந்த கைதியை இங்க மாத்த சொல்லிட்டேன், நீங்க போகலாம் மிஸ் சம்யுக்தா” என்று கூறியவரை பார்த்து பல்லை கடித்தாள்.
“சார்! நீங்க இப்போ இவர் கிட்ட பேசிகிட்டு இருந்தது எல்லாம், ஏற்கனவே ரெகார்டாகி இருக்கு சார் என் சிப் மூலமா. அது இப்போ என் கிட்ட தான் பத்திரமா இருக்கு, இதை வெளியே மீடியா கிட்ட கொடுத்திடவா சார்” என்று வெகு பவ்யமாக கேட்டவளை பார்த்து முறைத்தான் அந்த ரவுடி காசி.
கமிஷ்னரோ பயந்தே விட்டார், அவள் கூறிய செய்தியில். இது மீடியாவுக்கு தெரிந்தால், தன்னை எவ்வளவு பேச முடியுமோ அவ்வளவு பேசி விடுவர் என்பதை அறிந்து தான் பயந்தார்.
எல்லாவற்றிற்கும் மேல், வீட்டில் பிள்ளைகளுக்கு மட்டும் இல்லாமல், தன் மனைவியும் தன் மேல் வைத்து இருந்த ஹீரோ இமேஜ் இந்த ஒரே செய்தியில் எல்லாம் கெட்டு விடுமே என்று அஞ்சினார்.
ஆகையால், இப்பொழுது அவள் என்ன சொன்னாலும் அதை கேட்கும் மனநிலைக்கு அவர் வந்து விட்டார். இதை பார்த்துக் கொண்டு இருந்த காசிக்கு, தான் எதிலோ முதல் முறையாக தோற்று விட்டோம் என்று தோன்றியது.
அதை மெய்ப்பித்தது போல், கமிஷ்னரிடம் அவள் வாரென்ட் வாங்கி வந்ததை காட்டிவிட்டு, அவனை கைது செய்ய போவதாக கூறினாள். அவள் கூறியதுடன், அங்கு இருந்த கான்ஸ்டபிலை பார்த்து அவள் கண் அசைக்கவும், அதை புரிந்து கொண்டு காசிக்கு விலங்கை மாட்டி விட்டு, தன் சகாக்களுடன் அழைத்து சென்றார்.
தலையை குனிந்து கொண்டு, தன் தவறை உணர்ந்து கொண்ட கமிஷனரை பார்த்து இப்பொழுது பேச தொடங்கினாள் சம்யுதா.
“உங்க கிட்ட, இதை நான் எதிர்பார்க்கல சார்! ஏற்கனவே நம்ம டிபார்ட்மென்ட் மேல ரொம்ப நல்ல அபிப்ராயம் மக்களுக்கு, அதுல நீங்க பண்ண இந்த செயல் வெளியே தெரிஞ்சா என்ன நடக்கும்ன்னு கொஞ்சம் யோசிங்க” என்று மேலும் அவரை கூனி குறுக வைத்துவிட்டு அங்கு இருந்து வெளியேறினாள்.
அங்கே ஜீப்பில், கான்ஸ்டபிள் காசியை வண்டியில் ஏற்றிவிட்டு இவளுக்காக காத்துக் கொண்டு இருந்தார். வந்தவள் காசியை ஒரு பார்வை பார்த்துவிட்டு, டிரைவரிடம் நேராக கோர்ட் செல்லுமாறு கூறினாள்.
“இன்னா ஏசி, நம்ம கிட்டயே உன் ஆட்டத்தை காட்டிபுட்ட. நான் யாரு, என் பின்னாடி எத்தினி பேர் இருக்காங்க தெரியுமா? எப்பா! உங்க ஏசி அம்மா கிட்ட சொல்லி வை, காசி மேல கை வச்சா இன்னா எல்லாம் நடக்கும்ன்னு” என்று கேலி சிரிப்பில் உதடு துடிக்க, அவளை பார்த்து கூறிக் கொண்டு இருந்தான் காசி.
“இன்னா, ஓவரா சவுண்ட் விடுற! இன்னொரு தபா சவுண்ட் விட்டு பாரு, ஒரே போடா போட்டு தள்ளிட்டு போயிகிட்டே இருப்பேன்” என்று அவனிடம் கர்ஜித்தவள், திரும்பி கான்ஸ்டபிளை ஒரு பார்வை பார்த்தாள்.
அதை புரிந்து கொண்டவர், அவனின் கை விலங்கை கழட்டிவிட்டு, அதை தன் கை ஒன்றிற்கும், மற்றொன்றை பக்கத்தில் இருந்த இன்னொரு கான்ஸ்டபிளுக்கும் மாட்டி விட்டார்.
பின் வண்டி ஓரிடத்தில் நிற்கவும், கதவை திறந்தவர் அவனை போகுமாறு செய்கை செய்தார். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை, இருந்தாலும் தப்பி சென்றால் நல்லது என்று தோன்றவும் அவன் தப்பி ஓட தொடங்கினான்.
வண்டியில் இருந்து இறங்கியவள், நிதானமாக தன் கை துப்பாக்கியை எடுத்து ட்ரிகரை அழுத்தி குறி பார்த்து அவனை சுட்டாள். கோர்ட்டில், கான்ஸ்டபிளை அடித்து தப்பி செல்ல முயன்றதால், சுட்டதாக கூறி அந்த கேசை மூடி வைத்து விட்டாள்.
அப்பொழுது கோர்ட் விட்டு வெளியே வந்தவள், அங்கே ராசப்பன் அவனின் ஜீப்பில் கண்களில் குளிர் கண்ணாடி அணிந்து, அந்த வேஷ்டி சட்டையில் கம்பீரமாக இருந்தவனை பார்த்து உள்ளுக்குள் ரசித்தாள்.
அவனோ கோபமாக, அவள் அருகே வந்தவன் அவளை ஒரு பார்வை பார்த்து, அவள் காதருகில் அவளுக்கு மட்டும் கேட்குமாறு முனுமுனுத்துவிட்டு சென்றான். அவன் கூறிவிட்டு சென்ற வார்த்தையில், அவளுக்கு பயம் இருந்தாலும், அதை வெளிகாட்டிக் கொள்ளாமல் அவள் அங்கு இருந்து சென்றாள்.
அன்று ஏனோ, சம்யுக்தாவிற்கு அதன் பின் வேலை செய்யும் எண்ணமில்லை. இதை எல்லாம் முடித்துக் கொண்டு அவள் ஸ்டேஷன் வந்து, அங்கே அந்த ரவுடி பாலுவிற்கு பாதுகாப்பு கொடுக்க மேலும் இரண்டு பேரை நியமித்து விட்டு, அவள் வீடு வந்து சேர மறுநாள் ஆனது.
இரண்டு நாள் என்று சொல்லிவிட்டு சென்ற மகள், இப்பொழுது மறுநாளே வந்து நிற்கவும், அவளின் வேலை முடிந்து விட்டது என்று புரிந்தது அவருக்கு. மகளை ஓய்வு எடுக்க சொல்லிவிட்டு, விசாலாட்சி நேராக சமையல் கூடத்திற்கு சென்று அவளுக்கு பிடித்த உணவுகளை சமைக்கக் தொடங்கினார்.
அங்கே அறைக்கு வந்து குளித்து விட்டு, கட்டிலில் படுத்தவள் சிறிது நேரம் அசந்து தூங்கி விட்டாள். அவள் அசந்து தூங்குவதை பார்த்து, சத்தம் செய்யாமல் அவள் அறைக்குள் நுழைந்தான் ராசப்பன்.
அங்கே அந்த அறைக்குள் அவனை தவிர, வேறு யாருக்கும் வர தைரியம் இல்லை. ராசப்பன் அவனின் ரகசிய வழி மூலமாக, அவளை பார்த்துவிட்டு செல்வது வழக்கம். இன்றும் அவன் அப்படி வந்து, அவளை பார்த்து பேச வந்து இருந்தான்.
இங்கே அவள் அசந்து தூங்குவதை பார்த்து, சத்தம் செய்யாமல் அவள் தூங்கும் அழகை ரசித்துக் கொண்டு இருந்தான். அதற்குள் தூக்கம் சிறிது கலைந்து, புரண்டு படுக்க எண்ணியவள் யாரோ தன்னை கவனிப்பது போல், உள்ளுணர்வு எச்சரிக்கை செய்யவும் சட்டென்று பாதுகாப்புக்காக எப்பொழுதும் தன்னுடனே வைத்து இருக்கும் துப்பாக்கியை, மெத்தையின் அடியில் இருந்து எடுக்க கை வைக்கவும், அவள் கையை அவன் பிடிக்கவும் சரியாக இருந்தது.
அவன் கை தன் மீது படவும், அந்த தொடுகையில் அவள் உணர்ந்து கொண்டாள், யார் இங்கு வந்து இருப்பது என்று. சட்டென்று அவள் தன் கண்களை திறந்து, அவனை திரும்பி பார்த்து முறைத்தாள்.
கையில் ஆதாரத்துடன், அந்த காசியை கைது செய்ய ஜட்ஜ்யிடம் வாரென்ட் ஆர்டர் வாங்கிவிட்டு கமிஷனர் அலுவலகம் நுழைந்தவள், அவரின் அனுமதி கிடைத்தவுடன் அவரை காண அவரின் அறைக்கு சென்றாள்.
அங்கே கமிஷ்னர் காசியிடம் சிரித்து பேசிக் கொண்டு இருந்ததை பார்த்து, அவளின் ரத்தம் கொதித்தது. ஒரு ரவுடியுடன், தன் மேலதிகாரி சிரித்து பேசிக் கொண்டு இருந்ததை காண சகியாமல் சார் என்று சிறிது சத்தமாக அழைத்து விட்டாள்.
அதில் திரும்பிய கமிஷ்னர், அவளின் குற்றம் சாட்டும் பார்வையை பார்த்து திகைத்தாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல் அவளிடம் பேச தொடங்கினார்.
“இவர் ஆள்ன்னு சொல்லி, இப்போ ஒருத்தனை உங்க கஸ்டடி ல எடுத்தது இவர் ஆள் இல்லையாம். இவரை பத்தி தப்பு தப்பா சொல்லிட்டு, ஒரு குரூப் இருக்காங்க, அவங்க ஆள் தான் அவனாம்”.
“சோ இவர் மேல நீங்க கேஸ் போட்டு, கொண்டு வந்த ஆதாரம் எல்லாம் கொடுத்துட்டு வேற கேஸ் பாருங்க. அந்த கைதியை இங்க மாத்த சொல்லிட்டேன், நீங்க போகலாம் மிஸ் சம்யுக்தா” என்று கூறியவரை பார்த்து பல்லை கடித்தாள்.
“சார்! நீங்க இப்போ இவர் கிட்ட பேசிகிட்டு இருந்தது எல்லாம், ஏற்கனவே ரெகார்டாகி இருக்கு சார் என் சிப் மூலமா. அது இப்போ என் கிட்ட தான் பத்திரமா இருக்கு, இதை வெளியே மீடியா கிட்ட கொடுத்திடவா சார்” என்று வெகு பவ்யமாக கேட்டவளை பார்த்து முறைத்தான் அந்த ரவுடி காசி.
கமிஷ்னரோ பயந்தே விட்டார், அவள் கூறிய செய்தியில். இது மீடியாவுக்கு தெரிந்தால், தன்னை எவ்வளவு பேச முடியுமோ அவ்வளவு பேசி விடுவர் என்பதை அறிந்து தான் பயந்தார்.
எல்லாவற்றிற்கும் மேல், வீட்டில் பிள்ளைகளுக்கு மட்டும் இல்லாமல், தன் மனைவியும் தன் மேல் வைத்து இருந்த ஹீரோ இமேஜ் இந்த ஒரே செய்தியில் எல்லாம் கெட்டு விடுமே என்று அஞ்சினார்.
ஆகையால், இப்பொழுது அவள் என்ன சொன்னாலும் அதை கேட்கும் மனநிலைக்கு அவர் வந்து விட்டார். இதை பார்த்துக் கொண்டு இருந்த காசிக்கு, தான் எதிலோ முதல் முறையாக தோற்று விட்டோம் என்று தோன்றியது.
அதை மெய்ப்பித்தது போல், கமிஷ்னரிடம் அவள் வாரென்ட் வாங்கி வந்ததை காட்டிவிட்டு, அவனை கைது செய்ய போவதாக கூறினாள். அவள் கூறியதுடன், அங்கு இருந்த கான்ஸ்டபிலை பார்த்து அவள் கண் அசைக்கவும், அதை புரிந்து கொண்டு காசிக்கு விலங்கை மாட்டி விட்டு, தன் சகாக்களுடன் அழைத்து சென்றார்.
தலையை குனிந்து கொண்டு, தன் தவறை உணர்ந்து கொண்ட கமிஷனரை பார்த்து இப்பொழுது பேச தொடங்கினாள் சம்யுதா.
“உங்க கிட்ட, இதை நான் எதிர்பார்க்கல சார்! ஏற்கனவே நம்ம டிபார்ட்மென்ட் மேல ரொம்ப நல்ல அபிப்ராயம் மக்களுக்கு, அதுல நீங்க பண்ண இந்த செயல் வெளியே தெரிஞ்சா என்ன நடக்கும்ன்னு கொஞ்சம் யோசிங்க” என்று மேலும் அவரை கூனி குறுக வைத்துவிட்டு அங்கு இருந்து வெளியேறினாள்.
அங்கே ஜீப்பில், கான்ஸ்டபிள் காசியை வண்டியில் ஏற்றிவிட்டு இவளுக்காக காத்துக் கொண்டு இருந்தார். வந்தவள் காசியை ஒரு பார்வை பார்த்துவிட்டு, டிரைவரிடம் நேராக கோர்ட் செல்லுமாறு கூறினாள்.
“இன்னா ஏசி, நம்ம கிட்டயே உன் ஆட்டத்தை காட்டிபுட்ட. நான் யாரு, என் பின்னாடி எத்தினி பேர் இருக்காங்க தெரியுமா? எப்பா! உங்க ஏசி அம்மா கிட்ட சொல்லி வை, காசி மேல கை வச்சா இன்னா எல்லாம் நடக்கும்ன்னு” என்று கேலி சிரிப்பில் உதடு துடிக்க, அவளை பார்த்து கூறிக் கொண்டு இருந்தான் காசி.
“இன்னா, ஓவரா சவுண்ட் விடுற! இன்னொரு தபா சவுண்ட் விட்டு பாரு, ஒரே போடா போட்டு தள்ளிட்டு போயிகிட்டே இருப்பேன்” என்று அவனிடம் கர்ஜித்தவள், திரும்பி கான்ஸ்டபிளை ஒரு பார்வை பார்த்தாள்.
அதை புரிந்து கொண்டவர், அவனின் கை விலங்கை கழட்டிவிட்டு, அதை தன் கை ஒன்றிற்கும், மற்றொன்றை பக்கத்தில் இருந்த இன்னொரு கான்ஸ்டபிளுக்கும் மாட்டி விட்டார்.
பின் வண்டி ஓரிடத்தில் நிற்கவும், கதவை திறந்தவர் அவனை போகுமாறு செய்கை செய்தார். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை, இருந்தாலும் தப்பி சென்றால் நல்லது என்று தோன்றவும் அவன் தப்பி ஓட தொடங்கினான்.
வண்டியில் இருந்து இறங்கியவள், நிதானமாக தன் கை துப்பாக்கியை எடுத்து ட்ரிகரை அழுத்தி குறி பார்த்து அவனை சுட்டாள். கோர்ட்டில், கான்ஸ்டபிளை அடித்து தப்பி செல்ல முயன்றதால், சுட்டதாக கூறி அந்த கேசை மூடி வைத்து விட்டாள்.
அப்பொழுது கோர்ட் விட்டு வெளியே வந்தவள், அங்கே ராசப்பன் அவனின் ஜீப்பில் கண்களில் குளிர் கண்ணாடி அணிந்து, அந்த வேஷ்டி சட்டையில் கம்பீரமாக இருந்தவனை பார்த்து உள்ளுக்குள் ரசித்தாள்.
அவனோ கோபமாக, அவள் அருகே வந்தவன் அவளை ஒரு பார்வை பார்த்து, அவள் காதருகில் அவளுக்கு மட்டும் கேட்குமாறு முனுமுனுத்துவிட்டு சென்றான். அவன் கூறிவிட்டு சென்ற வார்த்தையில், அவளுக்கு பயம் இருந்தாலும், அதை வெளிகாட்டிக் கொள்ளாமல் அவள் அங்கு இருந்து சென்றாள்.
அன்று ஏனோ, சம்யுக்தாவிற்கு அதன் பின் வேலை செய்யும் எண்ணமில்லை. இதை எல்லாம் முடித்துக் கொண்டு அவள் ஸ்டேஷன் வந்து, அங்கே அந்த ரவுடி பாலுவிற்கு பாதுகாப்பு கொடுக்க மேலும் இரண்டு பேரை நியமித்து விட்டு, அவள் வீடு வந்து சேர மறுநாள் ஆனது.
இரண்டு நாள் என்று சொல்லிவிட்டு சென்ற மகள், இப்பொழுது மறுநாளே வந்து நிற்கவும், அவளின் வேலை முடிந்து விட்டது என்று புரிந்தது அவருக்கு. மகளை ஓய்வு எடுக்க சொல்லிவிட்டு, விசாலாட்சி நேராக சமையல் கூடத்திற்கு சென்று அவளுக்கு பிடித்த உணவுகளை சமைக்கக் தொடங்கினார்.
அங்கே அறைக்கு வந்து குளித்து விட்டு, கட்டிலில் படுத்தவள் சிறிது நேரம் அசந்து தூங்கி விட்டாள். அவள் அசந்து தூங்குவதை பார்த்து, சத்தம் செய்யாமல் அவள் அறைக்குள் நுழைந்தான் ராசப்பன்.
அங்கே அந்த அறைக்குள் அவனை தவிர, வேறு யாருக்கும் வர தைரியம் இல்லை. ராசப்பன் அவனின் ரகசிய வழி மூலமாக, அவளை பார்த்துவிட்டு செல்வது வழக்கம். இன்றும் அவன் அப்படி வந்து, அவளை பார்த்து பேச வந்து இருந்தான்.
இங்கே அவள் அசந்து தூங்குவதை பார்த்து, சத்தம் செய்யாமல் அவள் தூங்கும் அழகை ரசித்துக் கொண்டு இருந்தான். அதற்குள் தூக்கம் சிறிது கலைந்து, புரண்டு படுக்க எண்ணியவள் யாரோ தன்னை கவனிப்பது போல், உள்ளுணர்வு எச்சரிக்கை செய்யவும் சட்டென்று பாதுகாப்புக்காக எப்பொழுதும் தன்னுடனே வைத்து இருக்கும் துப்பாக்கியை, மெத்தையின் அடியில் இருந்து எடுக்க கை வைக்கவும், அவள் கையை அவன் பிடிக்கவும் சரியாக இருந்தது.
அவன் கை தன் மீது படவும், அந்த தொடுகையில் அவள் உணர்ந்து கொண்டாள், யார் இங்கு வந்து இருப்பது என்று. சட்டென்று அவள் தன் கண்களை திறந்து, அவனை திரும்பி பார்த்து முறைத்தாள்.