- Joined
- Jan 17, 2018
- Messages
- 1,547
- Reaction score
- 7,648
அத்தியாயம் – 4
அன்று காலை ராசப்பனின் வீட்டில், எல்லோரும் தடபுடலாக வேலை பார்த்துக் கொண்டு இருந்தனர். காலை எழுந்து வந்த ராசப்பன், வீட்டில் தடபுடலாக நடக்கும் ஏற்பாடுகளை பார்த்து, மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.
இரண்டு நாட்கள் முன் தந்தைக்கும், அவனுக்கும் அப்படி ஒரு சண்டை வீட்டில். அதன் எதிரொலி தான், இந்த தடபுடலான ஏற்பாடு. அவன் இறங்கி வந்ததை பார்த்த அவனின் தாய் காமாட்சி, அவனை பார்த்து முறைத்தார்.
“ஏன் டா ராசு, அப்படி அப்பா கூட சண்டை போட்டுட்டு இப்போ இன்னும் கிளம்பாம இருந்தா என்ன டா அர்த்தம்?” என்று எகிறினார்.
“ம்மா.. நீ போ மா முன்னாடி, எல்லோரையும் கூட்டிட்டு. நான் பின்னாடியே வந்திடுறேன், அப்பா கிட்ட சொல்லிடுங்க” என்று கூறிவிட்டு அவன் காலை உணவை உண்டுவிட்டு, மீண்டும் மாடியில் இருக்கும் அவனறைக்கு சென்றான்.
கண்ணாடியில் தன் முகம் பார்த்தவன், முதன் முதலில் அவனின் மனைவியை பார்த்த தினத்தை நினைத்து பார்த்தான்.
அன்று சம்யுக்தாவின் பத்தாவது பிறந்தநாள், ஊரில் திருவிழாவும் கூட, சம்யுக்தாவின் குடும்பத்தினர் வந்து இருந்தனர் திருவிழாவிற்கு. பத்து வயதிற்குரிய துறுதுறுப்பும், குண்டு கன்னமும், அந்த கண்களில் வழியும் குறும்பும் தான் முதன் முதலில் ராசப்பனை திரும்பி பார்க்க வைத்தது.
அவளை விட எழு வயது பெரியவனான அவனுக்கு, அப்பொழுது ஒரு குட்டி வாலாக தான் தெரிந்தாள். அவளின் குறும்பை அப்பொழுது ரசித்தான், துறுதுறுவென்று இங்கும் அங்கும் ஓடிக் கொண்டு இருந்தவளை பிடித்து இருந்தது.
நாட்கள் செல்ல செல்ல, ஒவ்வொரு வருட திருவிழாவிலும் அவள் செய்யும் குறும்பை ரசித்துக் கொண்டு இருந்தவன், ஒரு கட்டத்தில் அவளை ரசிக்க தொடங்கினான்.
அவளின் கண்ணுக்குள் இருக்கும் பந்து இங்கும், அங்கும் ஓடும் அழகை ரசிப்பதில் அவனுக்கு மிகவும் பிடிக்கும். அவளின் பதினைந்தாவது பிறந்தநாளில் தான், அவனுக்கு அவளின் முகம் மிகவும் பரிச்சயமானதாக தோன்றியது.
இதுவரை, அவன் கண்கள் அவளை மட்டுமே கவனித்ததில் அவளின் பெற்றோர்களை கவனிக்க தவறினான். இப்பொழுது அவன் அவளின் பெற்றோர்களை கவனித்து பார்த்தான், பார்த்தவன் அதிர்ந்தான்.
அவனின் அத்தை அல்லவா, அவளின் அன்னை. அவர்களும், மகளின் கையை பிடித்துக் கொண்டு, கூட்டத்தில் யாரையோ பார்த்துக் கொண்டு நின்று இருந்ததை கவனித்து, யாரை கவனிக்கிறார்கள் என்று பார்த்தான்.
அங்கே அவனின் தந்தை, அந்த கோவில் கமிட்டிகாரர்களிடம் ஏதோ பேசிக் கொண்டு இருந்தார். அவர் அருகில், அவனின் அன்னை பொங்கல் வைத்துக் கொண்டு இருந்தார் அவனின் அக்கா கோதையுடனும், தங்கை ரோஜாவுடனும்.
அருகில் இருந்தும் தூரத்தில், இருந்து பார்த்துக் கொண்டு இருந்த அத்தையின் நிலையை நினைத்து வருந்தினான். அவனுக்கும், அவனின் தந்தையின் கோபமும், அவரின் வாதமும் தெரியும்.
அவர் பார்வையில், அது சரியே என்றாலும், இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படி கோபத்தை பிடித்துக் கொண்டு வீண் பிடிவாதம் பிடிக்க வேண்டும். வாழும் நாட்கள் எவ்வளவு என்று, இன்று யாராலும் கணிக்க முடியாது.
இந்த நாட்களில், ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது தான் மிகவும் அவசியம். அத்தையிடமோ, தந்தந்தையிடமோ எதுவும் பேசிட முடியாது இப்பொழுது.
அதுவும் தந்தையிடம் முடியவே முடியாது, ஏனெனில் அவன் அப்படி ஒரு தறுதலையாக அந்த கால கட்டத்தில் இருந்தான். படிப்பு மீது ஒரு பற்றுதல் இல்லாமல், கல்லூரியில் அரியர்ஸ் அத்தனை வைத்து இருந்தான்.
“தடிமாடு! இப்படி படிக்கிறதுக்கு என்னத்துக்கு காலேஜ் போவனும். நாலு மாடு வாங்கி தரேன், மேய்க்க போ அதை” என்று வீட்டில் வசை மொழி நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகும், அவன் தந்தையிடம் இருந்து.
இவனுக்கு அடுத்து தங்கை ரோஜா, படிப்பில் கெட்டி. நன்றாக படித்து, கல்லூரியில் அடி எடுத்து வைத்து, அந்த ஆண்டு டாப் பத்து மாணவர்களுள் ஒருத்தியாக தேர்ந்தெடுத்து பரிசு பெற்று இருந்தாள்.
அவனோ அரியர்ஸ் கிளியர் செய்கிறேன் என்ற பெயரில், இன்னும் அவனின் நண்பர்களுடன் கல்லூரியை சுற்றி வலம் வந்து கொண்டு இருந்தான். இந்த நிலையில் அவன் தந்தையிடம், எதையும் கேட்டுவிட முடியாது.
அவன் அத்தையிடமோ, இப்பொழுது போய் பேச அவன் மனம் இடம் கொடுக்கவில்லை. அவன் மனதில், அவனின் கண்ணழகி நன்றாக அமர்ந்து விட்டாள் அப்பொழுதே.
அவளை பற்றியும், அத்தை, மாமா பற்றியும் தெரிந்து கொள்ள அவன் அப்பொழுதே தீயாக வேலை செய்தான், நண்பர்களின் உதவியோடு. அவன் தந்தைக்கு எந்த ஒரு சந்தேகமும் வர கூடாது என்பதற்காக, அவன் எப்படி இருந்தானோ தறுதலையாக அதை விட கூட ஒரு படி மேலாக தறுதலையாகவே அவர் முன் நின்றான், அவன் அரசியலில் இறங்க போகிறேன் என்று சொல்லும் பொழுது.
“டேய்! என்னை வேறுபேத்தாம ஒழுங்கா ஓடிடு, அரசியல் பத்தி என்ன டா தெரியும் உனக்கு. ஊருல, உனக்கு என்ன பெயர் இருக்கு தெரியுமா? வெளியே தலை காட்ட முடியல என்னால, உன்னை நம்பி முதல யார் டா சீட் கொடுப்பா?” என்று ஏகத்துக்கும் எரிச்சல் பட்டார்.
அன்று காலை ராசப்பனின் வீட்டில், எல்லோரும் தடபுடலாக வேலை பார்த்துக் கொண்டு இருந்தனர். காலை எழுந்து வந்த ராசப்பன், வீட்டில் தடபுடலாக நடக்கும் ஏற்பாடுகளை பார்த்து, மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.
இரண்டு நாட்கள் முன் தந்தைக்கும், அவனுக்கும் அப்படி ஒரு சண்டை வீட்டில். அதன் எதிரொலி தான், இந்த தடபுடலான ஏற்பாடு. அவன் இறங்கி வந்ததை பார்த்த அவனின் தாய் காமாட்சி, அவனை பார்த்து முறைத்தார்.
“ஏன் டா ராசு, அப்படி அப்பா கூட சண்டை போட்டுட்டு இப்போ இன்னும் கிளம்பாம இருந்தா என்ன டா அர்த்தம்?” என்று எகிறினார்.
“ம்மா.. நீ போ மா முன்னாடி, எல்லோரையும் கூட்டிட்டு. நான் பின்னாடியே வந்திடுறேன், அப்பா கிட்ட சொல்லிடுங்க” என்று கூறிவிட்டு அவன் காலை உணவை உண்டுவிட்டு, மீண்டும் மாடியில் இருக்கும் அவனறைக்கு சென்றான்.
கண்ணாடியில் தன் முகம் பார்த்தவன், முதன் முதலில் அவனின் மனைவியை பார்த்த தினத்தை நினைத்து பார்த்தான்.
அன்று சம்யுக்தாவின் பத்தாவது பிறந்தநாள், ஊரில் திருவிழாவும் கூட, சம்யுக்தாவின் குடும்பத்தினர் வந்து இருந்தனர் திருவிழாவிற்கு. பத்து வயதிற்குரிய துறுதுறுப்பும், குண்டு கன்னமும், அந்த கண்களில் வழியும் குறும்பும் தான் முதன் முதலில் ராசப்பனை திரும்பி பார்க்க வைத்தது.
அவளை விட எழு வயது பெரியவனான அவனுக்கு, அப்பொழுது ஒரு குட்டி வாலாக தான் தெரிந்தாள். அவளின் குறும்பை அப்பொழுது ரசித்தான், துறுதுறுவென்று இங்கும் அங்கும் ஓடிக் கொண்டு இருந்தவளை பிடித்து இருந்தது.
நாட்கள் செல்ல செல்ல, ஒவ்வொரு வருட திருவிழாவிலும் அவள் செய்யும் குறும்பை ரசித்துக் கொண்டு இருந்தவன், ஒரு கட்டத்தில் அவளை ரசிக்க தொடங்கினான்.
அவளின் கண்ணுக்குள் இருக்கும் பந்து இங்கும், அங்கும் ஓடும் அழகை ரசிப்பதில் அவனுக்கு மிகவும் பிடிக்கும். அவளின் பதினைந்தாவது பிறந்தநாளில் தான், அவனுக்கு அவளின் முகம் மிகவும் பரிச்சயமானதாக தோன்றியது.
இதுவரை, அவன் கண்கள் அவளை மட்டுமே கவனித்ததில் அவளின் பெற்றோர்களை கவனிக்க தவறினான். இப்பொழுது அவன் அவளின் பெற்றோர்களை கவனித்து பார்த்தான், பார்த்தவன் அதிர்ந்தான்.
அவனின் அத்தை அல்லவா, அவளின் அன்னை. அவர்களும், மகளின் கையை பிடித்துக் கொண்டு, கூட்டத்தில் யாரையோ பார்த்துக் கொண்டு நின்று இருந்ததை கவனித்து, யாரை கவனிக்கிறார்கள் என்று பார்த்தான்.
அங்கே அவனின் தந்தை, அந்த கோவில் கமிட்டிகாரர்களிடம் ஏதோ பேசிக் கொண்டு இருந்தார். அவர் அருகில், அவனின் அன்னை பொங்கல் வைத்துக் கொண்டு இருந்தார் அவனின் அக்கா கோதையுடனும், தங்கை ரோஜாவுடனும்.
அருகில் இருந்தும் தூரத்தில், இருந்து பார்த்துக் கொண்டு இருந்த அத்தையின் நிலையை நினைத்து வருந்தினான். அவனுக்கும், அவனின் தந்தையின் கோபமும், அவரின் வாதமும் தெரியும்.
அவர் பார்வையில், அது சரியே என்றாலும், இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படி கோபத்தை பிடித்துக் கொண்டு வீண் பிடிவாதம் பிடிக்க வேண்டும். வாழும் நாட்கள் எவ்வளவு என்று, இன்று யாராலும் கணிக்க முடியாது.
இந்த நாட்களில், ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது தான் மிகவும் அவசியம். அத்தையிடமோ, தந்தந்தையிடமோ எதுவும் பேசிட முடியாது இப்பொழுது.
அதுவும் தந்தையிடம் முடியவே முடியாது, ஏனெனில் அவன் அப்படி ஒரு தறுதலையாக அந்த கால கட்டத்தில் இருந்தான். படிப்பு மீது ஒரு பற்றுதல் இல்லாமல், கல்லூரியில் அரியர்ஸ் அத்தனை வைத்து இருந்தான்.
“தடிமாடு! இப்படி படிக்கிறதுக்கு என்னத்துக்கு காலேஜ் போவனும். நாலு மாடு வாங்கி தரேன், மேய்க்க போ அதை” என்று வீட்டில் வசை மொழி நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகும், அவன் தந்தையிடம் இருந்து.
இவனுக்கு அடுத்து தங்கை ரோஜா, படிப்பில் கெட்டி. நன்றாக படித்து, கல்லூரியில் அடி எடுத்து வைத்து, அந்த ஆண்டு டாப் பத்து மாணவர்களுள் ஒருத்தியாக தேர்ந்தெடுத்து பரிசு பெற்று இருந்தாள்.
அவனோ அரியர்ஸ் கிளியர் செய்கிறேன் என்ற பெயரில், இன்னும் அவனின் நண்பர்களுடன் கல்லூரியை சுற்றி வலம் வந்து கொண்டு இருந்தான். இந்த நிலையில் அவன் தந்தையிடம், எதையும் கேட்டுவிட முடியாது.
அவன் அத்தையிடமோ, இப்பொழுது போய் பேச அவன் மனம் இடம் கொடுக்கவில்லை. அவன் மனதில், அவனின் கண்ணழகி நன்றாக அமர்ந்து விட்டாள் அப்பொழுதே.
அவளை பற்றியும், அத்தை, மாமா பற்றியும் தெரிந்து கொள்ள அவன் அப்பொழுதே தீயாக வேலை செய்தான், நண்பர்களின் உதவியோடு. அவன் தந்தைக்கு எந்த ஒரு சந்தேகமும் வர கூடாது என்பதற்காக, அவன் எப்படி இருந்தானோ தறுதலையாக அதை விட கூட ஒரு படி மேலாக தறுதலையாகவே அவர் முன் நின்றான், அவன் அரசியலில் இறங்க போகிறேன் என்று சொல்லும் பொழுது.
“டேய்! என்னை வேறுபேத்தாம ஒழுங்கா ஓடிடு, அரசியல் பத்தி என்ன டா தெரியும் உனக்கு. ஊருல, உனக்கு என்ன பெயர் இருக்கு தெரியுமா? வெளியே தலை காட்ட முடியல என்னால, உன்னை நம்பி முதல யார் டா சீட் கொடுப்பா?” என்று ஏகத்துக்கும் எரிச்சல் பட்டார்.