- Joined
- Jan 17, 2018
- Messages
- 1,547
- Reaction score
- 7,648
அத்தியாயம் – 7
அன்று காலை சம்யுக்தா, அந்த பள்ளியின் வெளியே என்ன நடக்கிறது என்று கண்காணிக்க செல்ல வேண்டும் என்று தீர்மானித்து கிளம்பிக் கொண்டு இருந்தாள். அப்பொழுது அவளை தேடி, அவளின் அறைக்கு வந்த அவளின் அன்னை, இன்று எங்கும் போக வேண்டாம் என்று கூறவும், ஏன் என்று கேட்டாள்.
“இன்னைக்கு நாள் நல்லா இருக்கு, அதனால உன்னை அங்க உன் புருஷன் வீட்டுக்கு கூட்டிட்டு போக எல்லோரும் வராங்க சம்யு” என்று அன்னை கூறிவிட்டு செல்லவும், பல்லை கடித்தாள் மனதிற்குள்.
செல்லை எடுத்து, அவளின் கணவருக்கு அழைப்பு விடுத்தாள். ரிங் போய்க்கொண்டிருக்கிறதே தவிர, அதை எடுக்கும் வழியை காணோம்.
“டேய் ராசுகுட்டி! பிளான் பண்ணி என்னை போக விடாம பண்ணுற ல. இரு டா நீ செத்த இன்னைக்கு, கைல சிக்கின கைமா போட்ருவேன் உன்னை” என்று மனதிற்குள் அவனை வறுத்து எடுத்தாள்.
அவனை இதுவரை இப்படி மரியாதை குறைவாக எண்ணியதும் இல்லை, பேசியதும் இல்லை. ஆனால் நேற்று அங்கு நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, இருவரும் அடிதடியில் இறங்காத குறை தான்.
அவளுக்கு உடுத்த சேலையும், நகையும் கொண்டு வந்து வைத்தார் அவளின் அன்னை. இனி ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையில் அன்னை கொடுத்த புடவையை அணிந்து கொண்டு தயாரானாள்.
“ஹ்ம்ம்.. எங்க அண்ணனுக்கு கடைசி, அத்தை மக தான் கிடைச்சு இருக்காப்ல. ஏன் கோதை அக்கா, அண்ணன் ஏன் இப்படி யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணிகிச்சு” என்று ராசப்பனின் தங்கை ரோஜா, அவளின் அக்கா கோதையிடம் கதை அளந்துக் கொண்டே, சம்யுக்தா அறைக்கு வந்து சேர்ந்தாள்.
“நமக்கு இப்போ எதுக்கு இந்த ஆராய்ச்சி, நமக்கு கொடுத்த வேலையை இப்போ பார்க்கலாம் வா” என்று கூறிவிட்டு, தம்பி மனைவி சம்யுக்தாவிடம் சென்றாள்.
இருவரின் சம்பாஷனையும் கேட்டுக் கொண்டு இருந்த சம்யுக்தாவிற்கு, இனி தான் அங்கே சென்ற பிறகு அவர்களின் தந்தையின் மறு பக்கத்தை போட்டு உடைத்தால் என்ன செய்வார்கள் இவர்கள் என்ற எண்ணம் எழுந்து, மனதை வலிக்க செய்தது.
“சம்யு! பூ வைக்கணும் ஹேர்பின் இருக்கா?” என்று கோதை அவளிடம் கேட்ட உடன் தான் சுய உனர்வுக்கு வந்தாள்.
“சாரி அண்ணி! நீங்க வந்ததை கவனிக்கல, வாங்க. வா ரோஜா, எப்படி இருக்க?” என்று அவர்களை வரவேற்று, நலம் விசாரித்துக் கொண்டு இருந்தாள்.
கையோடு ஹேர்பின் எடுத்துக் கொடுத்து, ரோஜாவிடம் பேசிக் கொண்டு இருந்த சம்யுக்தாவை பார்க்க கோதைக்கு ஆச்சர்யமாக இருந்தது. அன்றைக்கு, தந்தையை கேள்வி கேட்ட சம்யுக்தா இவள் தானா என்று சந்தேகம் வந்தது.
அந்த அளவிற்கு, புகுந்த வீட்டு ஆட்களுக்கு அவள் இப்பொழுது கொடுக்கும் மரியாதையும், பணிவும் அவளை வியப்பில் ஆழ்த்தியது. அவளை அழைத்துக் கொண்டு இருவரும் கீழே இறங்கி வர, அங்கே நடு கூடத்தில் அவள் அமர மனை போட்டு இருந்தனர்.
அதில் அவளை அமர வைத்து, நலங்கு செய்தனர் அங்கு கூடி இருந்த உறவு பெண்கள். அவளுக்கு நலங்கு செய்து முடித்த கையோடு, பக்கத்தில் இன்னொரு மனையை போட்டு அதில் ராசப்பனை அமர வைத்தனர்.
அதுவரை லேசான மனநிலையில் இருந்த சம்யுக்தா, அவன் அருகில் வந்து உட்காரவும், அவனை பார்த்து யாருமறியாமல் முறைக்க தொடங்கினாள் அவனை.
“ஹே ஐ பியுட்டி! மாமனை பார்த்து ரொமாண்டிக் லுக் விடனும் பேபி, இப்படி முறைக்க கூடாது” என்று அவளை பார்த்து கண்ணடித்து சிரிக்கவும், இவள் பல்லை கடித்தாள்.
“நீ தனியா மாட்டுவ ல, உன்னை அப்போ கவனிச்சுக்குறேன் டா ராசுகுட்டி” என்று கூறியவளை பார்த்து இப்பொழுது, இவன் முறைத்தான்.
“எனக்கு பிரித்விராஜ்ன்னு இன்னொரு பேர் இருக்கு, அழகா மாமனை ப்ரித்வின்னு கூப்பிடு பியுட்டி” எனவும், அவள் வேண்டும் என்றே அவனை ராசுகுட்டி, ராசுகுட்டி என்று அழைத்து சீண்டிக் கொண்டு இருந்தாள்.
“நீ தனியா மாட்டுவ என் கிட்ட, அப்போ உன்னை கவனிச்சுக்குறேன் யுக்தா” என்று கூறியவனை பார்த்து, இவள் பழிப்பு காட்டினாள்.
அதற்குள் பெரியவர்கள், இவர்களுக்கு நலங்கு வைத்து முடித்துவிட்டு மணமக்களை அழைத்துக் கொண்டு, அவர்களின் குல தெய்வ கோவிலுக்கு அழைத்து சென்றனர்.
அங்கே பூஜை ஏற்பாடு செய்து இருந்ததால், எல்லோரும் அங்கே குழுமி இருந்தனர். சம்யுக்தாவை பொங்கல் வைக்க சொல்ல, அவள் திருதிருவென்று முழித்தாள்.
வேலை, வேலை என்று ஓடிக் கொண்டு இருந்ததால், அன்னை சொல்லியும் கூட கிட்சன் பக்கம் எட்டி பார்க்கவில்லை அவள். சுடு தண்ணீர் வைக்கவே திணறும் அவளை, பொங்கல் வைக்க கூறினால் பாவம் என்ன செய்வாள் அவளும்.
ராசப்பனோ, அவள் முழித்தது அதன் பிறகு அவள் அன்னையிடமும், தன் தாயிடம் கேட்டு அவள் பொங்கல் வைக்கும் அழகை எல்லாம் வளைத்து வளைத்து போட்டோ எடுத்தும், வீடியோ எடுத்தும் கொண்டு இருந்தான்.
ஒரு வழியாக பொங்கல் வைத்து முடிக்கவும், மணமக்கள் இருவரும் சேர்ந்து அதை எடுத்துக் கொண்டு சாமிக்கு படையல் போட்டனர். அங்கே பூஜை முடிந்து தீபாராதனை காட்டும் பொழுது, இருவரும் மனதிற்குள் இனி எப்பொழுதும் பிரியாமலும், குடும்பத்தில் ஒற்றுமையும் நிலைத்து இருக்க வேண்டினர்.
அவர்களின் வேண்டுதலை கேட்ட கடவுளோ, அதற்க்கு இன்னும் சில சோதனைகளை கடக்க வேண்டும் என்பது போல் மனதில் கூறிக் கொண்டார். அதன் பிறகு, அங்கே சம்யுக்தா தன் பெற்றவர்களிடம் பிரியா விடை பெற்றுக் கொண்டு சிறிது கண் கலங்கி, ராசப்பனுடன் புகுந்த வீடு சென்றாள்.
வீட்டிற்கு வெளியே இருவரையும் நிற்க வைத்து, அவளின் நாத்தனார் இருவரும் ஆலம் சுற்றி அவர்களை வரவேற்றனர். வலது காலை எடுத்து வைத்து, அந்த வீட்டிற்குள் இப்பொழுது உரிமையாக உள்ளே நுழைந்தாள்.
எந்த வீடு, அவளின் அன்னையை விரட்டியதோ அதே வீட்டிற்குள் இப்பொழுது உரிமையாக, அந்த வீட்டு மருமகளாக உள்ளே நுழைந்து இருக்கிறாள்.
“அம்மா! கவலை படாதீங்க, சீக்கிரம் உங்களையும், அப்பாவையும் மாமாவே வந்து கூப்பிடுவார் வீட்டுக்கு. அப்புறம் நீங்க ஆசைப்பட்ட மாதிரி, எல்லோரும் சேர்ந்தே இருக்கலாம்” என்று மனதிற்குள் தன் தாயிடம் சொல்லிக் கொண்டாள்.
ஹாலில் இருவரையும் அமர வைத்து, பாலும், பழமும் மணமக்களுக்கு கொடுத்து உபசரித்தனர் உறவு பெண்மணிகள். சிறிது நேரத்தில், ராசப்பனின் தூரத்து முறை பெண்கள் எல்லாம் அவனை கேலி செய்ய தொடங்கினர்.
“எங்களை எல்லாம் இப்படி ஏமாத்திபுட்டியே மாமா, உனக்காக நாங்க எம்புட்டு ஆசையா காத்து இருந்தோம். இப்படி பட்டணத்து பிள்ளையை கட்டிகிட்டியே, இது நியாயமா?” என்று கண்ணீர் வடிக்காத குறையாக, அவனை வம்பு வளர்த்துக் கொண்டு இருந்தனர்.
அன்று காலை சம்யுக்தா, அந்த பள்ளியின் வெளியே என்ன நடக்கிறது என்று கண்காணிக்க செல்ல வேண்டும் என்று தீர்மானித்து கிளம்பிக் கொண்டு இருந்தாள். அப்பொழுது அவளை தேடி, அவளின் அறைக்கு வந்த அவளின் அன்னை, இன்று எங்கும் போக வேண்டாம் என்று கூறவும், ஏன் என்று கேட்டாள்.
“இன்னைக்கு நாள் நல்லா இருக்கு, அதனால உன்னை அங்க உன் புருஷன் வீட்டுக்கு கூட்டிட்டு போக எல்லோரும் வராங்க சம்யு” என்று அன்னை கூறிவிட்டு செல்லவும், பல்லை கடித்தாள் மனதிற்குள்.
செல்லை எடுத்து, அவளின் கணவருக்கு அழைப்பு விடுத்தாள். ரிங் போய்க்கொண்டிருக்கிறதே தவிர, அதை எடுக்கும் வழியை காணோம்.
“டேய் ராசுகுட்டி! பிளான் பண்ணி என்னை போக விடாம பண்ணுற ல. இரு டா நீ செத்த இன்னைக்கு, கைல சிக்கின கைமா போட்ருவேன் உன்னை” என்று மனதிற்குள் அவனை வறுத்து எடுத்தாள்.
அவனை இதுவரை இப்படி மரியாதை குறைவாக எண்ணியதும் இல்லை, பேசியதும் இல்லை. ஆனால் நேற்று அங்கு நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, இருவரும் அடிதடியில் இறங்காத குறை தான்.
அவளுக்கு உடுத்த சேலையும், நகையும் கொண்டு வந்து வைத்தார் அவளின் அன்னை. இனி ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையில் அன்னை கொடுத்த புடவையை அணிந்து கொண்டு தயாரானாள்.
“ஹ்ம்ம்.. எங்க அண்ணனுக்கு கடைசி, அத்தை மக தான் கிடைச்சு இருக்காப்ல. ஏன் கோதை அக்கா, அண்ணன் ஏன் இப்படி யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணிகிச்சு” என்று ராசப்பனின் தங்கை ரோஜா, அவளின் அக்கா கோதையிடம் கதை அளந்துக் கொண்டே, சம்யுக்தா அறைக்கு வந்து சேர்ந்தாள்.
“நமக்கு இப்போ எதுக்கு இந்த ஆராய்ச்சி, நமக்கு கொடுத்த வேலையை இப்போ பார்க்கலாம் வா” என்று கூறிவிட்டு, தம்பி மனைவி சம்யுக்தாவிடம் சென்றாள்.
இருவரின் சம்பாஷனையும் கேட்டுக் கொண்டு இருந்த சம்யுக்தாவிற்கு, இனி தான் அங்கே சென்ற பிறகு அவர்களின் தந்தையின் மறு பக்கத்தை போட்டு உடைத்தால் என்ன செய்வார்கள் இவர்கள் என்ற எண்ணம் எழுந்து, மனதை வலிக்க செய்தது.
“சம்யு! பூ வைக்கணும் ஹேர்பின் இருக்கா?” என்று கோதை அவளிடம் கேட்ட உடன் தான் சுய உனர்வுக்கு வந்தாள்.
“சாரி அண்ணி! நீங்க வந்ததை கவனிக்கல, வாங்க. வா ரோஜா, எப்படி இருக்க?” என்று அவர்களை வரவேற்று, நலம் விசாரித்துக் கொண்டு இருந்தாள்.
கையோடு ஹேர்பின் எடுத்துக் கொடுத்து, ரோஜாவிடம் பேசிக் கொண்டு இருந்த சம்யுக்தாவை பார்க்க கோதைக்கு ஆச்சர்யமாக இருந்தது. அன்றைக்கு, தந்தையை கேள்வி கேட்ட சம்யுக்தா இவள் தானா என்று சந்தேகம் வந்தது.
அந்த அளவிற்கு, புகுந்த வீட்டு ஆட்களுக்கு அவள் இப்பொழுது கொடுக்கும் மரியாதையும், பணிவும் அவளை வியப்பில் ஆழ்த்தியது. அவளை அழைத்துக் கொண்டு இருவரும் கீழே இறங்கி வர, அங்கே நடு கூடத்தில் அவள் அமர மனை போட்டு இருந்தனர்.
அதில் அவளை அமர வைத்து, நலங்கு செய்தனர் அங்கு கூடி இருந்த உறவு பெண்கள். அவளுக்கு நலங்கு செய்து முடித்த கையோடு, பக்கத்தில் இன்னொரு மனையை போட்டு அதில் ராசப்பனை அமர வைத்தனர்.
அதுவரை லேசான மனநிலையில் இருந்த சம்யுக்தா, அவன் அருகில் வந்து உட்காரவும், அவனை பார்த்து யாருமறியாமல் முறைக்க தொடங்கினாள் அவனை.
“ஹே ஐ பியுட்டி! மாமனை பார்த்து ரொமாண்டிக் லுக் விடனும் பேபி, இப்படி முறைக்க கூடாது” என்று அவளை பார்த்து கண்ணடித்து சிரிக்கவும், இவள் பல்லை கடித்தாள்.
“நீ தனியா மாட்டுவ ல, உன்னை அப்போ கவனிச்சுக்குறேன் டா ராசுகுட்டி” என்று கூறியவளை பார்த்து இப்பொழுது, இவன் முறைத்தான்.
“எனக்கு பிரித்விராஜ்ன்னு இன்னொரு பேர் இருக்கு, அழகா மாமனை ப்ரித்வின்னு கூப்பிடு பியுட்டி” எனவும், அவள் வேண்டும் என்றே அவனை ராசுகுட்டி, ராசுகுட்டி என்று அழைத்து சீண்டிக் கொண்டு இருந்தாள்.
“நீ தனியா மாட்டுவ என் கிட்ட, அப்போ உன்னை கவனிச்சுக்குறேன் யுக்தா” என்று கூறியவனை பார்த்து, இவள் பழிப்பு காட்டினாள்.
அதற்குள் பெரியவர்கள், இவர்களுக்கு நலங்கு வைத்து முடித்துவிட்டு மணமக்களை அழைத்துக் கொண்டு, அவர்களின் குல தெய்வ கோவிலுக்கு அழைத்து சென்றனர்.
அங்கே பூஜை ஏற்பாடு செய்து இருந்ததால், எல்லோரும் அங்கே குழுமி இருந்தனர். சம்யுக்தாவை பொங்கல் வைக்க சொல்ல, அவள் திருதிருவென்று முழித்தாள்.
வேலை, வேலை என்று ஓடிக் கொண்டு இருந்ததால், அன்னை சொல்லியும் கூட கிட்சன் பக்கம் எட்டி பார்க்கவில்லை அவள். சுடு தண்ணீர் வைக்கவே திணறும் அவளை, பொங்கல் வைக்க கூறினால் பாவம் என்ன செய்வாள் அவளும்.
ராசப்பனோ, அவள் முழித்தது அதன் பிறகு அவள் அன்னையிடமும், தன் தாயிடம் கேட்டு அவள் பொங்கல் வைக்கும் அழகை எல்லாம் வளைத்து வளைத்து போட்டோ எடுத்தும், வீடியோ எடுத்தும் கொண்டு இருந்தான்.
ஒரு வழியாக பொங்கல் வைத்து முடிக்கவும், மணமக்கள் இருவரும் சேர்ந்து அதை எடுத்துக் கொண்டு சாமிக்கு படையல் போட்டனர். அங்கே பூஜை முடிந்து தீபாராதனை காட்டும் பொழுது, இருவரும் மனதிற்குள் இனி எப்பொழுதும் பிரியாமலும், குடும்பத்தில் ஒற்றுமையும் நிலைத்து இருக்க வேண்டினர்.
அவர்களின் வேண்டுதலை கேட்ட கடவுளோ, அதற்க்கு இன்னும் சில சோதனைகளை கடக்க வேண்டும் என்பது போல் மனதில் கூறிக் கொண்டார். அதன் பிறகு, அங்கே சம்யுக்தா தன் பெற்றவர்களிடம் பிரியா விடை பெற்றுக் கொண்டு சிறிது கண் கலங்கி, ராசப்பனுடன் புகுந்த வீடு சென்றாள்.
வீட்டிற்கு வெளியே இருவரையும் நிற்க வைத்து, அவளின் நாத்தனார் இருவரும் ஆலம் சுற்றி அவர்களை வரவேற்றனர். வலது காலை எடுத்து வைத்து, அந்த வீட்டிற்குள் இப்பொழுது உரிமையாக உள்ளே நுழைந்தாள்.
எந்த வீடு, அவளின் அன்னையை விரட்டியதோ அதே வீட்டிற்குள் இப்பொழுது உரிமையாக, அந்த வீட்டு மருமகளாக உள்ளே நுழைந்து இருக்கிறாள்.
“அம்மா! கவலை படாதீங்க, சீக்கிரம் உங்களையும், அப்பாவையும் மாமாவே வந்து கூப்பிடுவார் வீட்டுக்கு. அப்புறம் நீங்க ஆசைப்பட்ட மாதிரி, எல்லோரும் சேர்ந்தே இருக்கலாம்” என்று மனதிற்குள் தன் தாயிடம் சொல்லிக் கொண்டாள்.
ஹாலில் இருவரையும் அமர வைத்து, பாலும், பழமும் மணமக்களுக்கு கொடுத்து உபசரித்தனர் உறவு பெண்மணிகள். சிறிது நேரத்தில், ராசப்பனின் தூரத்து முறை பெண்கள் எல்லாம் அவனை கேலி செய்ய தொடங்கினர்.
“எங்களை எல்லாம் இப்படி ஏமாத்திபுட்டியே மாமா, உனக்காக நாங்க எம்புட்டு ஆசையா காத்து இருந்தோம். இப்படி பட்டணத்து பிள்ளையை கட்டிகிட்டியே, இது நியாயமா?” என்று கண்ணீர் வடிக்காத குறையாக, அவனை வம்பு வளர்த்துக் கொண்டு இருந்தனர்.