• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

En kaathal kannalagi p1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
விருதுநகர் மாவட்டத்தில், சிவகாசி அருகே உள்ள சேத்துபட்டி கிராமத்தில் வருகிற M.L.A. தேர்தலுக்கான பிரச்சாரம் நடந்து கொண்டு இருந்தது. அந்த பதவிக்கு நிற்பவன், அந்த ஊரின் தலைவர் ராமச்சந்திர மூர்த்தியின் மூன்றாம் மகன் ராசப்பன் @ ப்ரித்விராஜ்.

“நான் எல்லா அரசியல்வாதிங்க மாதிரி, வாக்குறுதி எல்லாம் அள்ளி கொடுக்க மாட்டேன். நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நான் நல்லது செய்வேன் நினைச்சா எனக்கு வோட்டு போடுங்க. நிச்சயம் என்னால முடிஞ்சதை நான் செய்வேன், உங்கள் வோட்டை எங்கள் சின்னமான கண்ணுக்கு போடுமாறு கேட்டுக் கொள்கின்றேன்” என்று கூறிவிட்டு, மீண்டும் ஒரு கும்பிடு போட்டு அவன் இருக்கைக்கு வந்து அமர்ந்து, இந்த கூட்டத்துக்கு பாதுகாப்பு வழங்க வந்த, அந்த அதிகாரியின் மேல் அவன் கண் சென்றது.


“உங்களை எல்லாம், யாரு வர சொன்னா? முதல இடத்தை காலி பண்ணுங்க, இல்லை நான் என்ன பண்ணுவேன்னு உங்களுக்கு நல்லா தெரியும்” என்று அங்கு இருந்தவர்களை மிரட்டிக் கொண்டு இருந்தான்.


“டேய் உதவாக்கரை!” என்ற தந்தையின் அழைப்பில் கடுப்பாகி, அங்கே ஊஞ்சலில் அமர்ந்து இருந்தவரை பார்த்து முறைத்தான்.

“என்ன முறைப்பு! ஒரு காசு இந்த வீட்டுக்கு சம்பாதிச்சு கொடுக்க துப்பில்லை, இதுல வந்தவங்களை மரியாதை இல்லாம பேசுறது. ஐயா! என்ற மவன் அப்படித்தான், சும்மா அவன் சொல்லுறதை எல்லாம் கேட்காதீங்க”.

“நீ இப்படி செய்து இருப்பன்னு, நான் நினைக்கல. இனி உனக்கும் இந்த வீட்டுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, வெளியே போ” என்று உறுமினார் அவனின் தந்தை.

அவனோ ஸ்டைலாக, அங்கே போடப்பட்டு இருந்த அந்த சோபாவில் அமர்ந்து, கால் மேல் கால் போட்டு அமர்ந்து தந்தையை கேலியாக பார்த்தான்.

“இந்த வீடு என் பெயர் ல இருக்கு, தாத்தா இதை என் பெயர் ல எழுதிக் கொடுத்து இருக்கார். உங்களுக்கு என் கூட இருக்க இஷ்டமில்லைனா, நீங்க வேணும்னா வெளியே போங்க” என்று அவரை பார்த்து கூறவும், அப்பொழுது தான் அவருக்கும் அது நியாபகம் வந்தது.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top