சினேகா உங்க கதை படிக்க போறேன் ......??? படிச்சிட்டு வந்து சொல்றேன் எப்பிடி இருக்குனு???ஹலோ மக்களே
நான் உங்கள் சினேகாஸ்ரீ திரும்ப வந்துட்டேன்.
சாரி கொஞ்சம் பெர்சனல் பிராபளம் அதான் லாங் கேப் விட்டு வருகிறேன். நான் ஒரு புதுக் கதையோடுதான் வந்து இருக்கிறேன்.
"என் காதல் கண்மணியே" என்னுடைய இரண்டாம் நாவல் இது.
நான் பல தடவை படித்து என் மனதை பாதித்த விஷயம் இது.
சிறுவயதில் திருமணம் அதுவும் தன்னை விட மிக அதிக வயதில் உள்ள ஆண்மகனை சந்தர்ப்ப சூழல் காரணமாகவோ அல்லது பெற்றோர் வற்புறுத்தல் காரணமாகவோ திருமணம் செய்து கொள்ளும் இளம் சிறு வயது பருவ பெண்கள் பலர் உண்டு.
தாங்கள் மன வேதனையை கடிதத்தின் மூலமாக வார மாத இதழ்களுக்கு அனுப்பியதை படித்துள்ளேன்.
பரிதாபத்திற்குரிய அந்த இளம் பருவ பெண்கள் ஏன் திருமணம் செய்கிறார்கள்? அவர்கள் மனோ நிலை எப்படி இருக்கும்? திருமணம் முடிந்தபின் அவர்கள் நிலை என்ன? அவர்கள் வேதனை என்ன?
திருமணமாகும் அந்த வயது இளம் தளிர் பெண்ணின் மனோ நிலை உணரும் ஒரு நல்ல கணவன் கிடைத்தால் அவர்கள் வாழ்வு எப்படி இருக்கும் என்பதே இந்த தொடர்கதை "என் காதல் கண்மணியே"
நாயகன்- ஆனந்தன்
நாயகி - கண்ணாத்தாள்
உங்கள் மேலான ஆதரவை நாடும்
உங்கள் சினேகாஸ்ரீ
Last edited: