அவளின் நெருங்கிய தோழிகளான ரம்யாவுக்கு திருமணம் திருச்சியில் உள்ள தனியார் என்ஜீனியரிங் காலேஜ் புராபசராக வேலை செய்யும் ஆனந்த் என்பவருடனும் , பானுபிரியாவுக்கு அவள் மாமா மகன் ராஜ்குமாருடனும் ஏற்கனவே நிச்சயம் செய்து வரும் தை பொங்கல் முடிந்த பின்னர் வரும் முகூர்த்தங்களில் திருமணம் நிச்சயம் ஆகி காத்திருக்கிறார்கள்.
கண்ணாத்தாள் தன் திருமண தகவலை சொல்ல அவர்கள் அவளை சந்தோஷமாக வாழ்த்த தோழிகளின் சந்தோஷமாக பல மடங்காக பெருகியது.
"நான் பிளஸ்டுதான் ஆனால் அவரு என்ஜினீயரிங் காலேஜ் புரோபசரு அதுமாதிரிதாம்பா நீ கவலைபடாதே" என்று ரம்யா சொல்ல சற்று ஆறுதல் ஆனாள் கண்ணாதாள்.
"பானுக்கு கவலையே இல்லை ஊரைவிட்டு போக தேவை இல்லை அவள் மாமாவையே கட்டிக்க போகிறாள்" என்று ரம்யா ஆரம்பித்தாள்.
பானுபிரியாவை இருவரும் கிண்டல் பன்ன அவள் இவர்களை கிண்டல் செய்ய என்று மூவரும் கவலைகளை மறந்து சந்தோஷமாக இருக்க ஆரம்பித்தார்கள்.
தன் நெருங்கிய தோழிகளான ரம்யாவும், பானுபிரியாவும் வீட்டில் இருக்க, அவர்களின் வீட்டிலும் தோட்டத்திலும் நேரத்தை சந்தோஷமாக கழித்த கண்ணாத்தாள் பின்னர் அத்தை வீடு வந்து விடைபெற்று கிளம்பி கோயிலுக்கு சென்றாள்.
தோழிகள் மூவரும் கோயிலுக்கு சென்றுவிட்டு அவர்கள் வீடு திரும்பினார்கள்
ஆனந்தன் வெள்ளி மாலை சென்னையிலிருந்து கிளம்பி மறுநாள் காலை சொந்த ஊரான ஆண்டிமடம் வந்து சேர்ந்தான்.
காலை சாப்பாடு முடித்துவிட்டு மாமா வீட்டிற்கு சென்று மாணிக்கம் மாமாவையும், அத்தை விஜயா, மாமா மகன் அருண்குமார், அவன் மனைவி ரஞ்சிதா என அனைவரையும் சந்தித்து பேசினான் ஆனந்தன்.
"அருண்... எனக்கு அந்த பெண்ணை ஒருமுறை நேரில் பார்த்து பேச வேண்டும்" என்று தன்னுடைய ஆசையை வெளிபடுத்தினான் ஆனந்தன்.
"ஆனந்த்... இது சென்னை சிட்டி இல்லை. இது கிராமம்பா. இங்கே நீ நினைக்கிற மாதிரி உடனே நேரில் சந்தித்து பார்த்து பேசுவது எல்லாம் முடியாது" என்றான் அருண்குமார்.
ஆனந்தனுக்கும் அது தெரியும் என்றாலும் கண்ணாத்தாளை பார்க்க விரும்பியதால் ஒர் ஆர்வத்தில் கேட்டுவிட்டான்.
"கவலைபடாதே ஆனந்த். அந்த பொண்ணு தினமும் மாரியம்மன் கோயிலுக்கு வந்துவிட்டு அப்புறமாக முருகன் கோவிலுக்கு வந்துட்டு வீட்டுக்கு போகும். சாயங்காலம் கோவிலில் நாம் பார்த்துடலாம்" என்று அருண்குமார் அவன் பிரச்சனைக்கு தீர்வும் சொல்ல சந்தோஷமானான் ஆனந்தன்.
"ரொம்ப நன்றி அருண்" என்று ஆனந்தன் சந்தோஷமாக கூற,
"ஆனந்த்... அந்த பொண்ணை தூரத்திலிருந்துதான் நீ பார்க்க வேண்டும். அவளிடம் நாம் பேச எல்லாம் முடியாது" என்று அருண் நிபந்தனை விதித்தான்.
கண்ணாத்தாளை நேரில் பார்த்தால் மட்டும் போதும் என்று நினைத்த ஆனந்தன்,
"சரிப்பா... எனக்கு அந்த பெண்ணை ஜஸ்ட் பார்த்தால் மட்டும் போதும்பா" என்று சம்மதித்தான்.