அத்தியாயம் – 1
காலையிலேயே வானம் இருட்டிக் கொண்டு மழை பொழியும் நிலையில் இருக்க குளிர் தென்றல் இதமாக வீச, சூரியன் தனது முகத்தைக் காட்ட கார் மேகத்துடன் போர்க்களம் நடத்தியது. சிலுசிலுவென தென்றலுடன் இணைந்து மெல்லிய மழைத்தூறல் மண்ணை நனைக்க ஊட்டியின் வானிலைக்கு ஏற்றது போல மாறிக் கொண்டிருந்தது கோவை மாநகரம்..!
அந்த நகரத்தின் மைய பகுதியில் அமைத்துள்ள ஒரு ப்ளாட்டில் அந்த வானிலைக்கு ஏற்றது போலவே ஒரு அழகிய கானம் கேட்டது.
“மழையே ஒஹ் மழையே, புன்னகை தூவுறியே..
சிலையாய் ஒரு சிலையாய் நிற்க வச்சு பார்க்குறியே..
முத்து முத்து மல்லிகையாய் முத்தமிட்டு சிரிக்கிறியே..
சின்னவுளி நீர்த்துளியாய் என்னைக் கொஞ்சம் செதுக்குறியே..” என்ற பாடலை அதே துள்ளலுடன் பாடியவண்ணம் சமையல் செய்து கொண்டிருந்த தென்றல்.
அவள் பாடலில் தன்னைத தொலைத்த வண்ணம் இருக்க மணியை கவனிக்காமல் விட்டது தான் அங்கே வினையாகிப் போனது.. நேரம் செல்வதைக் கவனிக்காமல் இருந்தவள், பாடல் முடிந்ததும் திரும்பிப் பார்க்க மணி எட்டு ஆக பத்து நிமிஷம் இருக்கிறது என்று காட்டியது..
அதைப் பார்த்த தென்றல், “என்னோட கண்ணுக்கு கண்ணாடி போட்டும் கண்ணு தெரியவில்லையோ..?” என்று ஸ்பெக்ஸை கலட்டி துடைத்துவிட்டு மீண்டும் போட்டுக் கொண்டு மணியைப் பார்க்க அதில் மூன்று நிமிஷம் சென்று மணி ஆக எழு நிமிஷம் இருக்கிறது என்று காட்டியதும், “ஐயோ இன்னும் மணி எட்டு ஆக போகிறதா..?! இந்த பிரதாப் வந்தால் என்னை திட்டியே ஒரு வழி பண்ணிருவானே..” என்று புலம்பியவள் சமையலை முடித்துவிட்டு குளிக்க சென்றவள்.. சரியாக அரைமணி நேரத்தில் ரெடியாகி வெளியே வந்தாள்..
அதே பரபரப்புடன் சமையல் அறைக்கு சென்றவள் சமைத்ததை தட்டில் போட்டு சாப்பிட அமரவும் காலிங்பெல் ஒலிக்க, “ஏற்கனவே லேட்.. இதில் இந்த பெல் வேற சரியாக சாப்பிடும் நேரத்திற்கு அடிக்கும்.. முதலில் இதை கலட்டி காயலாங்கடையில் போடணும்..” என்று தட்டை கையில் எடுத்துக் கொண்டே சென்றவள், கதவை திறக்க உள்ளே வந்தான் பிரதாப்..!
அவனைப் பார்த்த தென்றல், “டேய் எருமை எதுக்குடா இப்போ காலிங்பெல் அடித்தாய்..?!” என்று கேட்டுக் கொண்டே அவன் வீட்டிற்கு வர வழிவிட்டு நின்றவளை முறைத்த வண்ணம் உள்ளே வந்தான் பிரதாப்..
அவனின் பார்வை கண்டு, “என்னடா முறைக்கிறாய்..?!” என்று கேட்டவண்ணம் சோபாவில் அமர்ந்தவள், அவசர அவசரமாக சாப்பிட, அவளின் எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்த பிரதாப், “மணி என்ன என்று தெரியுதா லூசு..?!” என்று கேட்டதும், “ம்ம் நல்ல தெரியும்..” என்று கூறினாள்..
“லேட் ஆகும் என்றால் முன்னாடியே சொல்ல வேண்டியது தானே.. என்னோட அப்பா வாசலில் நின்றுகொண்டு கத்துகிறார்.. எனக்கு மானமே போகிறது..” என்று பிரதாப் காலையில் வாங்கிய திட்டைப் பற்றி சொல்ல, “சாரி டா லேட் ஆகிருச்சு..” என்று உதட்டைப் பிதுக்கினாள் தென்றல்..
அவளைப் பார்த்த பிரதாப், “உன்னோட சொல்பேச்சு கேட்டு டைபிங் கிளாஸ் சேர்ந்தேன் பாரு என்னை சொல்லணும்.. எட்டு மணிக்கு கிளாஸ் நீ இன்னும் ரெடி ஆகவே இல்ல.. இந்த லட்சணத்தில் அடுத்த மாதம் எக்ஸாம் வேற..” என்று தலையில் அடித்துக் கொண்டான்..
அவனைப் பார்த்து சிரித்த தென்றல், “உன்னோட அப்பா தானே, ‘என்னோட மகனுக்கு அரசாங்க உத்தியோகம் வாங்கி தீருவேன்’ என்று சொன்னார்.. அவரைப் போய் கேளுடா.. என்னை திட்ட வந்துட்டா.. அரசாங்க உத்தியோகம் சும்மா கொடுப்பாங்க பாரு..” என்று சொல்லியவள், சாப்பிட்டுவிட்டு கையைக் கழுவி சிங்கிள் போட்டுவிட்டு, சுடிதார் துப்பட்டாவை எடுத்து போட்டு பின் பண்ணினாள்..
அவளுக்கு அந்த நேரத்திலும் ஒரு சந்தேகம் தோன்ற, “ஏண்டா இப்போவே உங்க அப்பா இப்படி சொல்கிறாரே.. நாளைக்கு உனக்கு திருமணம் என்றால் எப்படிடா முடிவு எடுப்பார்..” என்று கேட்டாள் தென்றல்..
“அவர சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் வருகிற பிரகாஷ்ராஜ் மாதிரியே பொண்ணை அவரே செலக்ட் பண்ணிட்டு என்னிடம் சொல்லுவார்..” என்று சொல்ல, “ஐயோ செம.. பிரதாப் அன்னைக்கு உன்னோட நெற்றியில் பெரிய நாமம் தான்..” என்று சிரிக்க அவன் கோபத்தில் முறைத்தான்..
பிறகு அவளைப் பார்த்த பிரதாப், “ஏய் இன்னைக்கு நீ கிளாஸுக்கு வரலை என்று முன்னாடியே சொல்லிருந்தால் நான் ஷிவானி [சிவசுதன்] கூட பார்க் போயிருப்பேன் இல்ல..” என்று கேட்டவன் அவளின் ஸ்கூட்டியின் சாவியை எடுக்க, அவனின் கையில் இருந்து சாவியை பறித்தவள்..
அவள் சாவியை வாங்கியதும், “உன்னோட நியூ மாடல் பல்சர்[சைக்கில்] எங்கே..?!” என்று கேட்டதும், “அது பஞ்சர் தென்றல்.. அதுதான் உன்னோட ஸ்கூட்டியில் போகலாம் என்று வந்தேன்..” என்று சொல்ல அவனை முறைத்த தென்றல்,
“மகனே இன்னைக்கு மட்டும் தான் நான் உன்னை ஸ்கூட்டியில் அழைச்சிட்டு போவேன்... நாளைக்கு நீதான் என்னை பல்சரில் டிராப் பண்ற இல்ல..” என்று மிரட்டியவள்,
“வாடா ஒன்பது மணிக்காவது க்ளாஸுக்கு போகலாம்.. உனக்கெல்லாம் நேரத்தில் கிளம்பணும் என்று தோன்றவே தோன்றாதே..” என்று திட்ட அவள் சொன்னதைக் கேட்ட பிரதாப்,
“எல்லாம் என்னோட நேரம்டி.. இரு எனக்கும் ஒரு நேரம் வரும் அப்பொழுது இருக்கு உனக்கு..” என்று கூறிய பிரதாப் வீட்டை விட்டு வெளியே வர வீட்டைப் பூட்டியவண்ணம், “இன்னைக்கு என்ன டைப் பண்ண சொல்ல போறாரோ..?!” என்று புலம்பிய வண்ணம் அவள் மாடியிலிருந்து இறங்கினாள்..
அவளின் பின்னோடு இறங்கிய பிரதாப், “நம்மைப் போல இன்னும் பத்துபேர் இருந்த ஊர் உருப்பட்டுவிடும்..” என்று சொல்ல கலகலவென்று சிரித்த தென்றல், “அதுதான் நம்ம இருக்கோம் இல்ல..” என்று கூறியவள் தனது ஹெல்மெட்டைத் தலையில் மாட்டிக் கொண்டு, “ம்ம் சீக்கிரம் ஏறுடா.. மணி ஒன்பது ஆக போகிறது..” என்று சொல்ல ஸ்கூட்டியில் பின்னாடி அமர்ந்தான் பிரதாப்.. தென்றல் வண்டியை எடுத்தாள்.. இவங்க டைபிங் கிளாஸ் போவதற்குள் தென்றல் பற்றி தெரிந்து கொள்ளுங்க..
தென்றல் இருபத்தி மூன்று வயதை உடைய தேவதை என்று சொல்ல எனக்கும் ஆசைதான்.. ஆனால் அவள் நீங்க கற்பனை பண்ணும் அளவிற்கு அழகு இல்லை..
ஐந்தரை அடி உயரம், வட்ட முகம், வில்லென்று வளைந்த புருவம்.. அழகான மீன் போன்ற விழிகள், அந்த விழிகளுக்கு கண்ணாடி அணிதிருப்பது அவளின் அழகிற்கு அழகை சேர்க்கும்.. நேரான நாசி.. ரோஜா இதழ் போன்ற வடிவான இதழ்கள்.. சங்கு கழுத்து இடை வரை வளர்ந்த கூத்தலை ஸ்டலை வெட்டி விட்டிருந்தாள்.. பூசினார் போல உடல் அமைப்பை உடைய அழகு பாவை..
அவளின் அழகிற்கு அழகு சேர்க்கும் அவள் உதிர்க்கும் புன்னகை..!தனது இதழ்களைத் திறந்து அரிசி தெரிய அவள் சிரித்தால் அதில் மயங்காத மானிடரே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அவளின் புன்னகை அவ்வளவு அழகு..!
எம்.பி.ஏ. முடித்துவிட்டு கோவையில் பெரிய கன்ஸ்ட்ரக்ஷனில் வேலை பார்க்கிறாள்.. ஒரு கம்பெனியில் கூட இவள் ஒரு மாசம் முழுவதும் வேலை செய்ததே கிடையாது.. அவளுக்கு எதிரி வேற யாருமே இல்ல அவளோட வாய் தான்.. இந்த அழகிக்கு வாய் மட்டும் காது வரையில் இருக்கும்.. மௌனத்திற்கும் இவளுக்கும் வெகுதூரம்.. இவள் பற்றி இப்பொழுது இவ்வளவுதான் ஞாபகம் வந்தால் கண்டிப்பாக சொல்கிறேன்..
ஹலோ ஹலோ என்ன எல்லோரும் தென்றலுக்கு ஜோடி பிரதாப்பா..?! என்று யோசிக்கிறீங்க.. பிரதாப் தென்றலுக்கு ஜோடி எல்லாம் கிடையாதுங்க..
அவன் பக்கத்து ப்ளாட்டில் இருக்கும் ஏழாவது படிக்கும் பையன்.. அவன் இருபத்தி மூன்று வயது உடைய தென்றலுக்கு ஜோடியா..?! நினைக்கும் பொழுதே சிரிப்பை அடக்க முடியல..!
இப்பொழுது புரிந்ததா தென்றல் முகம்..?! இது தாங்க தென்றல் இவளுக்கு எட்டு, பத்து, பண்ணிரண்டு, பதினைத்து வயதை உடைய சிவசுதன்[ஷிவானி], பிரதாப், ராகுல், நிவாஸ், சுனில் எல்லாம் தோழர்கள்.. இவர்களுடன் இவள் பேசுவது பார்த்து நம்மை போலவே பலர் ஏமார்ந்திருக்கிறார்கள்..
இவர்கள் எல்லோரும் ஒரே இடத்தில் இல்லை ஆனாலும் கூட இவர்கள் நட்பு தென்றல் மூலம் நன்றாகவே தொடர்கிறது என்பது வேறு விஷயம்.. அவளை சுற்றி எப்பொழுது புன்னகை முகங்களே இருக்கும்..
அதே கோவை மாவட்டத்தில் முக்கியமான பகுதியில் அமைதியே தனது அழகாக கொண்டு அமைக்கப்பட்டிருந்தது அந்த வீடு. அந்த வீட்டை வெளியே இருந்து பார்க்கும் நடுத்தர மக்களின் மனதில் எப்பொழுதும் உலாவும் ஒரே கேள்வி, ‘இந்த வீட்டில் யாராவது இருக்கிறார்களா..?! இல்ல வீடு மட்டும் தான் இருக்கிறாதா..?’ என்ற கேள்வியுடனே அந்த வீட்டை கடந்து செல்வார்கள்..
அந்த வீட்டின் கேட்டை தாண்டி உள்ளே சென்றால் கார்டனில் அமைக்கப்பட்டிருக்கும் அழகிய ஊஞ்சல் அனைவரின் மனதையும் ஊஞ்சலாடவே அழைக்கும்.. வீட்டிற்குள் நுழைந்ததும் பெரிய ஹால், அதற்கு நேராக அமைக்கப்பட்ட பூஜை அறை அந்த அறையில் தெய்வங்கள் எல்லாம் வெறும் புகைபடத்தில் மட்டுமே இருக்கின்றனர்..
அதன் அருகில் இடது புறம் இருக்கும் அறைதான் சமையல் அறை, ஆனால் அந்த வீட்டில் சமையல் செய்ய என்று யாரும் இல்லை என்பது வேறு விஷயம். அந்த அறையில் இருந்து வெளியே வந்தால், சமையல் அறைக்கு நேர் எதிரே விருந்தினர் அறையும், அலுவலக அறையும் இருக்கும்..
காலையிலேயே வானம் இருட்டிக் கொண்டு மழை பொழியும் நிலையில் இருக்க குளிர் தென்றல் இதமாக வீச, சூரியன் தனது முகத்தைக் காட்ட கார் மேகத்துடன் போர்க்களம் நடத்தியது. சிலுசிலுவென தென்றலுடன் இணைந்து மெல்லிய மழைத்தூறல் மண்ணை நனைக்க ஊட்டியின் வானிலைக்கு ஏற்றது போல மாறிக் கொண்டிருந்தது கோவை மாநகரம்..!
அந்த நகரத்தின் மைய பகுதியில் அமைத்துள்ள ஒரு ப்ளாட்டில் அந்த வானிலைக்கு ஏற்றது போலவே ஒரு அழகிய கானம் கேட்டது.
“மழையே ஒஹ் மழையே, புன்னகை தூவுறியே..
சிலையாய் ஒரு சிலையாய் நிற்க வச்சு பார்க்குறியே..
முத்து முத்து மல்லிகையாய் முத்தமிட்டு சிரிக்கிறியே..
சின்னவுளி நீர்த்துளியாய் என்னைக் கொஞ்சம் செதுக்குறியே..” என்ற பாடலை அதே துள்ளலுடன் பாடியவண்ணம் சமையல் செய்து கொண்டிருந்த தென்றல்.
அவள் பாடலில் தன்னைத தொலைத்த வண்ணம் இருக்க மணியை கவனிக்காமல் விட்டது தான் அங்கே வினையாகிப் போனது.. நேரம் செல்வதைக் கவனிக்காமல் இருந்தவள், பாடல் முடிந்ததும் திரும்பிப் பார்க்க மணி எட்டு ஆக பத்து நிமிஷம் இருக்கிறது என்று காட்டியது..
அதைப் பார்த்த தென்றல், “என்னோட கண்ணுக்கு கண்ணாடி போட்டும் கண்ணு தெரியவில்லையோ..?” என்று ஸ்பெக்ஸை கலட்டி துடைத்துவிட்டு மீண்டும் போட்டுக் கொண்டு மணியைப் பார்க்க அதில் மூன்று நிமிஷம் சென்று மணி ஆக எழு நிமிஷம் இருக்கிறது என்று காட்டியதும், “ஐயோ இன்னும் மணி எட்டு ஆக போகிறதா..?! இந்த பிரதாப் வந்தால் என்னை திட்டியே ஒரு வழி பண்ணிருவானே..” என்று புலம்பியவள் சமையலை முடித்துவிட்டு குளிக்க சென்றவள்.. சரியாக அரைமணி நேரத்தில் ரெடியாகி வெளியே வந்தாள்..
அதே பரபரப்புடன் சமையல் அறைக்கு சென்றவள் சமைத்ததை தட்டில் போட்டு சாப்பிட அமரவும் காலிங்பெல் ஒலிக்க, “ஏற்கனவே லேட்.. இதில் இந்த பெல் வேற சரியாக சாப்பிடும் நேரத்திற்கு அடிக்கும்.. முதலில் இதை கலட்டி காயலாங்கடையில் போடணும்..” என்று தட்டை கையில் எடுத்துக் கொண்டே சென்றவள், கதவை திறக்க உள்ளே வந்தான் பிரதாப்..!
அவனைப் பார்த்த தென்றல், “டேய் எருமை எதுக்குடா இப்போ காலிங்பெல் அடித்தாய்..?!” என்று கேட்டுக் கொண்டே அவன் வீட்டிற்கு வர வழிவிட்டு நின்றவளை முறைத்த வண்ணம் உள்ளே வந்தான் பிரதாப்..
அவனின் பார்வை கண்டு, “என்னடா முறைக்கிறாய்..?!” என்று கேட்டவண்ணம் சோபாவில் அமர்ந்தவள், அவசர அவசரமாக சாப்பிட, அவளின் எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்த பிரதாப், “மணி என்ன என்று தெரியுதா லூசு..?!” என்று கேட்டதும், “ம்ம் நல்ல தெரியும்..” என்று கூறினாள்..
“லேட் ஆகும் என்றால் முன்னாடியே சொல்ல வேண்டியது தானே.. என்னோட அப்பா வாசலில் நின்றுகொண்டு கத்துகிறார்.. எனக்கு மானமே போகிறது..” என்று பிரதாப் காலையில் வாங்கிய திட்டைப் பற்றி சொல்ல, “சாரி டா லேட் ஆகிருச்சு..” என்று உதட்டைப் பிதுக்கினாள் தென்றல்..
அவளைப் பார்த்த பிரதாப், “உன்னோட சொல்பேச்சு கேட்டு டைபிங் கிளாஸ் சேர்ந்தேன் பாரு என்னை சொல்லணும்.. எட்டு மணிக்கு கிளாஸ் நீ இன்னும் ரெடி ஆகவே இல்ல.. இந்த லட்சணத்தில் அடுத்த மாதம் எக்ஸாம் வேற..” என்று தலையில் அடித்துக் கொண்டான்..
அவனைப் பார்த்து சிரித்த தென்றல், “உன்னோட அப்பா தானே, ‘என்னோட மகனுக்கு அரசாங்க உத்தியோகம் வாங்கி தீருவேன்’ என்று சொன்னார்.. அவரைப் போய் கேளுடா.. என்னை திட்ட வந்துட்டா.. அரசாங்க உத்தியோகம் சும்மா கொடுப்பாங்க பாரு..” என்று சொல்லியவள், சாப்பிட்டுவிட்டு கையைக் கழுவி சிங்கிள் போட்டுவிட்டு, சுடிதார் துப்பட்டாவை எடுத்து போட்டு பின் பண்ணினாள்..
அவளுக்கு அந்த நேரத்திலும் ஒரு சந்தேகம் தோன்ற, “ஏண்டா இப்போவே உங்க அப்பா இப்படி சொல்கிறாரே.. நாளைக்கு உனக்கு திருமணம் என்றால் எப்படிடா முடிவு எடுப்பார்..” என்று கேட்டாள் தென்றல்..
“அவர சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் வருகிற பிரகாஷ்ராஜ் மாதிரியே பொண்ணை அவரே செலக்ட் பண்ணிட்டு என்னிடம் சொல்லுவார்..” என்று சொல்ல, “ஐயோ செம.. பிரதாப் அன்னைக்கு உன்னோட நெற்றியில் பெரிய நாமம் தான்..” என்று சிரிக்க அவன் கோபத்தில் முறைத்தான்..
பிறகு அவளைப் பார்த்த பிரதாப், “ஏய் இன்னைக்கு நீ கிளாஸுக்கு வரலை என்று முன்னாடியே சொல்லிருந்தால் நான் ஷிவானி [சிவசுதன்] கூட பார்க் போயிருப்பேன் இல்ல..” என்று கேட்டவன் அவளின் ஸ்கூட்டியின் சாவியை எடுக்க, அவனின் கையில் இருந்து சாவியை பறித்தவள்..
அவள் சாவியை வாங்கியதும், “உன்னோட நியூ மாடல் பல்சர்[சைக்கில்] எங்கே..?!” என்று கேட்டதும், “அது பஞ்சர் தென்றல்.. அதுதான் உன்னோட ஸ்கூட்டியில் போகலாம் என்று வந்தேன்..” என்று சொல்ல அவனை முறைத்த தென்றல்,
“மகனே இன்னைக்கு மட்டும் தான் நான் உன்னை ஸ்கூட்டியில் அழைச்சிட்டு போவேன்... நாளைக்கு நீதான் என்னை பல்சரில் டிராப் பண்ற இல்ல..” என்று மிரட்டியவள்,
“வாடா ஒன்பது மணிக்காவது க்ளாஸுக்கு போகலாம்.. உனக்கெல்லாம் நேரத்தில் கிளம்பணும் என்று தோன்றவே தோன்றாதே..” என்று திட்ட அவள் சொன்னதைக் கேட்ட பிரதாப்,
“எல்லாம் என்னோட நேரம்டி.. இரு எனக்கும் ஒரு நேரம் வரும் அப்பொழுது இருக்கு உனக்கு..” என்று கூறிய பிரதாப் வீட்டை விட்டு வெளியே வர வீட்டைப் பூட்டியவண்ணம், “இன்னைக்கு என்ன டைப் பண்ண சொல்ல போறாரோ..?!” என்று புலம்பிய வண்ணம் அவள் மாடியிலிருந்து இறங்கினாள்..
அவளின் பின்னோடு இறங்கிய பிரதாப், “நம்மைப் போல இன்னும் பத்துபேர் இருந்த ஊர் உருப்பட்டுவிடும்..” என்று சொல்ல கலகலவென்று சிரித்த தென்றல், “அதுதான் நம்ம இருக்கோம் இல்ல..” என்று கூறியவள் தனது ஹெல்மெட்டைத் தலையில் மாட்டிக் கொண்டு, “ம்ம் சீக்கிரம் ஏறுடா.. மணி ஒன்பது ஆக போகிறது..” என்று சொல்ல ஸ்கூட்டியில் பின்னாடி அமர்ந்தான் பிரதாப்.. தென்றல் வண்டியை எடுத்தாள்.. இவங்க டைபிங் கிளாஸ் போவதற்குள் தென்றல் பற்றி தெரிந்து கொள்ளுங்க..
தென்றல் இருபத்தி மூன்று வயதை உடைய தேவதை என்று சொல்ல எனக்கும் ஆசைதான்.. ஆனால் அவள் நீங்க கற்பனை பண்ணும் அளவிற்கு அழகு இல்லை..
ஐந்தரை அடி உயரம், வட்ட முகம், வில்லென்று வளைந்த புருவம்.. அழகான மீன் போன்ற விழிகள், அந்த விழிகளுக்கு கண்ணாடி அணிதிருப்பது அவளின் அழகிற்கு அழகை சேர்க்கும்.. நேரான நாசி.. ரோஜா இதழ் போன்ற வடிவான இதழ்கள்.. சங்கு கழுத்து இடை வரை வளர்ந்த கூத்தலை ஸ்டலை வெட்டி விட்டிருந்தாள்.. பூசினார் போல உடல் அமைப்பை உடைய அழகு பாவை..
அவளின் அழகிற்கு அழகு சேர்க்கும் அவள் உதிர்க்கும் புன்னகை..!தனது இதழ்களைத் திறந்து அரிசி தெரிய அவள் சிரித்தால் அதில் மயங்காத மானிடரே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அவளின் புன்னகை அவ்வளவு அழகு..!
எம்.பி.ஏ. முடித்துவிட்டு கோவையில் பெரிய கன்ஸ்ட்ரக்ஷனில் வேலை பார்க்கிறாள்.. ஒரு கம்பெனியில் கூட இவள் ஒரு மாசம் முழுவதும் வேலை செய்ததே கிடையாது.. அவளுக்கு எதிரி வேற யாருமே இல்ல அவளோட வாய் தான்.. இந்த அழகிக்கு வாய் மட்டும் காது வரையில் இருக்கும்.. மௌனத்திற்கும் இவளுக்கும் வெகுதூரம்.. இவள் பற்றி இப்பொழுது இவ்வளவுதான் ஞாபகம் வந்தால் கண்டிப்பாக சொல்கிறேன்..
ஹலோ ஹலோ என்ன எல்லோரும் தென்றலுக்கு ஜோடி பிரதாப்பா..?! என்று யோசிக்கிறீங்க.. பிரதாப் தென்றலுக்கு ஜோடி எல்லாம் கிடையாதுங்க..
அவன் பக்கத்து ப்ளாட்டில் இருக்கும் ஏழாவது படிக்கும் பையன்.. அவன் இருபத்தி மூன்று வயது உடைய தென்றலுக்கு ஜோடியா..?! நினைக்கும் பொழுதே சிரிப்பை அடக்க முடியல..!
இப்பொழுது புரிந்ததா தென்றல் முகம்..?! இது தாங்க தென்றல் இவளுக்கு எட்டு, பத்து, பண்ணிரண்டு, பதினைத்து வயதை உடைய சிவசுதன்[ஷிவானி], பிரதாப், ராகுல், நிவாஸ், சுனில் எல்லாம் தோழர்கள்.. இவர்களுடன் இவள் பேசுவது பார்த்து நம்மை போலவே பலர் ஏமார்ந்திருக்கிறார்கள்..
இவர்கள் எல்லோரும் ஒரே இடத்தில் இல்லை ஆனாலும் கூட இவர்கள் நட்பு தென்றல் மூலம் நன்றாகவே தொடர்கிறது என்பது வேறு விஷயம்.. அவளை சுற்றி எப்பொழுது புன்னகை முகங்களே இருக்கும்..
அதே கோவை மாவட்டத்தில் முக்கியமான பகுதியில் அமைதியே தனது அழகாக கொண்டு அமைக்கப்பட்டிருந்தது அந்த வீடு. அந்த வீட்டை வெளியே இருந்து பார்க்கும் நடுத்தர மக்களின் மனதில் எப்பொழுதும் உலாவும் ஒரே கேள்வி, ‘இந்த வீட்டில் யாராவது இருக்கிறார்களா..?! இல்ல வீடு மட்டும் தான் இருக்கிறாதா..?’ என்ற கேள்வியுடனே அந்த வீட்டை கடந்து செல்வார்கள்..
அந்த வீட்டின் கேட்டை தாண்டி உள்ளே சென்றால் கார்டனில் அமைக்கப்பட்டிருக்கும் அழகிய ஊஞ்சல் அனைவரின் மனதையும் ஊஞ்சலாடவே அழைக்கும்.. வீட்டிற்குள் நுழைந்ததும் பெரிய ஹால், அதற்கு நேராக அமைக்கப்பட்ட பூஜை அறை அந்த அறையில் தெய்வங்கள் எல்லாம் வெறும் புகைபடத்தில் மட்டுமே இருக்கின்றனர்..
அதன் அருகில் இடது புறம் இருக்கும் அறைதான் சமையல் அறை, ஆனால் அந்த வீட்டில் சமையல் செய்ய என்று யாரும் இல்லை என்பது வேறு விஷயம். அந்த அறையில் இருந்து வெளியே வந்தால், சமையல் அறைக்கு நேர் எதிரே விருந்தினர் அறையும், அலுவலக அறையும் இருக்கும்..