அத்தியாயம் – 11
அவன் கொடுத்த ஒரு வாரமும் சீக்கிரமாகச் சென்று மறைய அன்று காலையில் ஊட்டியில் இருந்து கிளம்பி கோவை வந்து சேர்ந்தாள் தென்றல்..
ஊட்டியில் இருந்து வந்தவள் தன்னுடைய வீட்டை சுத்தம் செய்து சமையல் செய்துவிட்டு தனது அறையில் அமைதியாக அமர்ந்தாள்..
ஊட்டியில் இருக்கும் பொழுது அவள் தனது காதலை அறிந்து சந்தோசம் அடைந்தாலும் அவளின் மனதோரம் ஏதோவொன்று உறுத்திக்கொண்டே இருக்க அது என்னவென்று புரியாமல் அமர்ந்திருந்தாள் தென்றல்..
மனோ சொன்ன வார்த்தைகளால் அவளின் மனம் காயப்பட்டு இருந்தது அவளுக்கு அதுவரை தெரியவே இல்லை.. ஆனால் அவனை நேரில் சந்திக்க வேண்டும் என்று நினைக்க அவளின் மனது உறுத்த ஆரம்பித்தது..
‘இந்த உறுத்தலின் காரணம் என்ன..?’ என்று தென்றல் அவளின் மனதிடம் கேட்டதும், ‘நேரத்திற்கு நேரம் ஆளை மாற்றும் உனக்கு எல்லாம்..?!’ என்று அவன் கேட்ட வார்த்தை அவளின் அடி மனதில் அழமாக பதிந்திருப்பதை அப்பொழுது தான் உணர்ந்தாள்..
அதை உணர்ந்த தென்றல், “நான் என்ன தப்பு செய்தேன்..?! ஒருவர் விளையாட்டாக சிரித்து சந்தோசமாக இருந்தால் இந்த உலகம் அவங்களுக்கு கொடுக்கும் பெயர் நடத்தைக் கெட்டவளா..?!” என்று கேட்டவளின் மனம் வலித்தது..
‘அவன் இப்படி ஒரு கேள்வி கேட்க யார் காரணம்..?’ என்று அவள் கேட்டதும், அவளின் மனதில் இருந்த கோபம் அனைத்தும் அவளை பெற்றவள் மீது திரும்பியது..
‘என்னைப் பெற்றவள் என்னை ஒழுங்காக வளர்த்தி இருந்தால் நான் ஏன் இந்த வார்த்தை வாங்க போகிறேன்.. இதுக்கு எல்லாம் அவள்தான் காரணம்.. என்னதான் நான் நல்லவழியில் வளர்ந்தாலும், அவள் கொடுத்துச் சென்ற அனாதை என்ற பட்டம் தானே எனக்கு முன்னாடி சென்று நிற்கிறது..’ என்று நினைத்தவளின் காதல் அவளின் ஆழ்மனதில் புதைக்கப்பட அவன் சொன்ன சொற்கள் அவளின் கண்முன்னே வந்து நின்றது..
“அவன் மீது கொண்ட காதலா பெரியதா..? இல்ல அவன் கொடுத்தவலி பெரியதா..?” என்று யோசிக்க அவன் பேசிய வார்த்தைகள் பெரியது என்று அவளின் மனதில் தோன்றியதும், தன்னுடைய காதலை மனதில் மறைந்தது..
அவளுக்குள் நடக்கும் மாற்றம் அவளுக்கு புரிந்தாலும், அவனின் காதல் கொடுத்த சந்தோசத்தை விட அவன் வார்த்தைகள் கொடுத்த வலிதான் அவளுக்கு அதிகமாக இருந்தது..
அந்த வலிதான் அவளின் காதலை அடி மனதில் போட்டு புதைத்தது.. அவனிடம் அவள் ஆடிய கண்ணாமூச்சி ஆட்டம் எல்லாம் மாறி, அவளின் மனதின் அடி ஆழத்தில் மறைவதைப் பார்த்தவள்,
“மனோ இப்பொழுது நீ சொன்ன வார்த்தைகள் தான் என்னோட காதலை மறைக்கிறதே, நான் உன்னை மறக்கவில்லை.. இன்று என்னோட மனதில் மறைந்த காதலை நீதான் வெளிக்கொண்டு வரணும்.. உன்மேல் எனக்கு கோபம் இல்ல மனோ.. என் மீது தான் எனக்கு கோபம்..” என்றவள் கண்ணீரோடு படுக்கையில் படுத்து உறங்க ஆரம்பித்தாள்..
‘ஒரு பெண் விளையாட்டாக இருக்கிறாள்..’ என்று நாம் வார்த்தைகளை விடவே கூடாது.. அந்த வார்த்தைகள் தான் நம்மை அவர்களிடம் இருந்து பிரித்துவிடும்.. ஒருவர் என்ன இயல்போடு இருக்கிறார்களோ அதே இயல்பை ஏற்க நாமும் பழக வேண்டும்..
அவளின் அடி மனதில் புதைந்த காதல் தானாகவே வெளிப்படுமா..?! மனோ அவள் மனதில் இருக்கும் காதலை வெளி கொண்டுவருவானா..?!
அதன்பிறகு குட்டி தூக்கம் போட்டு எழுந்தவள் மணியைப் பார்க்க அவளின் காலிங்பெல் அடிக்க, “பிரதாப் வந்துவிட்டானா..?!” என்ற கேள்வியுடன் எழுந்து சென்று கதவைத் திறக்க அங்கே நின்றிருந்த நிவாஸைப் பார்த்தவள்,
“ஹாய் நிவாஸ் செல்லம்.. என்ன நீங்க மட்டும் வந்திருக்கீங்க..?!” என்று கேட்டதும் அவனின் பின்னோடு வீட்டிற்குள் நுழைத்த அனுவைப் பார்த்த தென்றல்,
“என்னடா நிவாஸ் தனியாக வந்தானோ என்று நினைத்தேன்.. நீதான் அழைத்துக் கொண்டு வந்திருக்கிறாயோ..?!” என்று கேட்டவளுக்கு பதில் சொல்லாமல் சோபாவில் அமர்ந்தாள் அனு..
அவளோடு அமைதியாக அமர்ந்திருந்த நிவாஸைப் பார்த்த தென்றல், “டேய் நிவாஸ் உனக்கு என்னடா ஆச்சு..? எப்பவும் ஏதாவது பேசுவாய்.. இன்னைக்கு என்ன ரொம்ப அமைதியாக இருக்கிறாய்..?” என்று அவனின் அருகில் சென்று அமர்ந்து அவனின் முகத்தைப் பார்க்க அவன் அழுக ஆரம்பித்தான்..
அவன் திடீரென்று அழுவதைப் பார்த்த தென்றல், அவனைத் தூக்கி மடியில் அமர வைத்து, “என்னடா எதுக்கு அழுகிறாய்..? என்னவென்று நீ சொன்னால் தானே எனக்கு தெரியும்..?” என்று கேட்டதும்,
“தென்றல் நாங்க வீட்டு மாத்திட்டோம்.. அது ரொம்ப தூரமாக இருக்கு.. இனிமேல் உன்னை தினமும் பார்க்க முடியாது.. உன்னோடு பேச முடியாது.. உன்னோட சண்டை போட முடியாது..” என்று அவன் பட்டியலை அடுக்க தென்றலுக்கு அவனின் பாசம் கண்டு கண்கள் கலங்கினாலும் தன்னை சமாளித்துக் கொண்டு,
“டேய் இதுக்கு போய் யாராவது அழுவாங்களா..?!” என்று அவனின் கண்களைத் துடைத்துவிட்டவள், “இங்கே பாரு நீ எவ்வளவு தூரம் போனாலும் தென்றல் உன்னைப் பார்க்க வருவேன்.. இதுக்கெல்லாம் அழுதால் நம்ம கேங் மானம் போகாது..?” என்று அவள் சிரிப்புடன் சொல்ல அப்பொழுதுதான் சிரித்தான் நிவாஸ்..
அவன் சிரிப்பதைப் பார்த்த அனு, “நீ ஹப்பாடியோ சரியான ஆளுடா.. இதே பதிலை தானே நானும் ஒரு வாரமாக சொல்கிறேன்.. என்னோட பேச்சை நீ கேட்ட..?!” என்று கேட்டவள் தென்றல் பக்கம் திரும்பி,
“ஒரு வாரம் இவனை சமாளிக்க இவங்க வீட்டில் பட்டபாடு.. இவங்க அம்மா இவனால் அழுதுட்டாங்க தென்றல்..” என்று சொல்ல,
நிவாஸ் பக்கம் திரும்பிய தென்றல்,
“டேய் நான் ஒரு வாரம் ஊரில் இல்ல.. அதுக்கு இத்தனை வேலையை பண்ணிட்டு இப்போ வந்து அழுகிறாயா..?” என்று கேட்டவள் சிரிக்க, அவளின் முகத்தைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தான் நிவாஸ்
“ம்ம் இப்போ நல்ல சிரி..” என்று அவளின் முகத்தை தனது சால்வையில் துடைத்து விட்டவளைப் பார்த்த அனு, “நாளைக்கு வேலைக்கு வருகிறாயா தென்றல்..?!” என்று கேட்டதும், அனுவின் பக்கம் திரும்பிய தென்றல், “ம்ம் வருகிறேன்..” என்று கூறினாள்..
அவளின் குரலில் பழைய துள்ளல் இல்லாததைக் கவனித்த அனு, “என்னடி ஒரு ஸ்ருதியே இல்லாமல் சொல்கிறாய்..?” என்று கேட்டதும், “தென்றல் அனு நீங்க பேசிட்டு இருங்க நான் பிரதாப் அண்ணாவைப் பார்த்துவிட்டு வருகிறேன்..” என்று சொல்ல, அவனின் கைகளைப் பற்றிய தென்றல்,
“குட்டிப்பையா நாம் வெளியே பார்க் போகலாம்..” என்று சொல்ல அவளைப் புரியாத பார்வைப் பார்க்க ஆரம்பித்தாள் அனு.. ஆனால் அனுவின் பார்வையைக் கண்டுக் கொள்ளாமல், “நீ போய் பிரதாப் அண்ணாவைப் பார்த்துட்டு வா நிவாஸ்..” என்று சொல்ல,
“சரி தென்றல் சீக்கிரம் கிளம்பு..” என்று சொல்லிவிட்டு அவன் ஓட அவள் எழுந்து பார்க்கிற்கு கிளம்பினாள்.. அவளைப் பார்த்துக் கொண்டே அமைதியாக அமர்ந்திருந்தாள் அனு..
அனு அமைதியாக இருந்தாலும் அவளின் பார்வை தென்றல் மீதே இருந்தது.. தென்றல் முகத்தில் இருந்த குழப்ப ரேகைகளைப் பார்த்தவள், ‘என்ன இவள் இவ்வளவு குழப்பத்தில் இருக்கிறாள்..?! இவள் இப்படி இருக்கும் ஆளே கிடையாதே..?! என்ன விசயமாக இருக்கும்..?’ என்று யோசித்துக் கொண்டிருந்தாள்..
கொஞ்ச நேரத்தில் கிளம்பிய தென்றல் அனுவை அழைத்துக் கொண்டு வெளியே வர பிரதாப்புடன் வந்து சேர்த்தான் நிவாஸ்.. நால்வரும் கிளம்பிப் பக்கத்தில் இருக்கும் பார்க்கிற்கு சென்றனர்.. பிரதாப், நிவாஸ் இருவரும் விளையாட செல்ல ஒரு சிமிண்ட் பெஞ்சில் அமைதியாக அமர்ந்தாள் தென்றல்..
இவர்கள் பார்க்கின் உள்ளே நுழையும்போது தென்றலை இரண்டு கண்கள் சுவாரஸ்யமாக பார்த்ததையும் அவளைத் தொடர்ந்து அவன் வருவதையும் கவனிக்காமல் இருந்தாள் தென்றல்..
அவள் அமைதியை இருப்பதைக் கண்ட அனு அவளின் அருகில் அமர்ந்து அவளின் கைகளோடு தனது கைகளைக் கோர்த்த அனு தென்றலுக்கு தைரியம் கொடுக்க வாய் திறந்தாள் தென்றல்..
“அனு என்னோட பிறந்தநாள் அன்று என்ன நடந்தது என்று தெரியுமா..?!” என்று தென்றல் கேட்டதும், இல்லை என்று தலையசைத்தாள் அனு..
அவளிடம் நடந்தது அனைத்தையும் கூறியவள், “இப்பொழுது சொல்லு அனு நான் என்ன செய்யட்டும்..?!” என்று கேட்டதும் தென்றலுக்கு என்ன பதில் சொல்வது என்று அறியாமல் அமர்ந்திருந்தாள் அனுபமா..
அவன் கொடுத்த ஒரு வாரமும் சீக்கிரமாகச் சென்று மறைய அன்று காலையில் ஊட்டியில் இருந்து கிளம்பி கோவை வந்து சேர்ந்தாள் தென்றல்..
ஊட்டியில் இருந்து வந்தவள் தன்னுடைய வீட்டை சுத்தம் செய்து சமையல் செய்துவிட்டு தனது அறையில் அமைதியாக அமர்ந்தாள்..
ஊட்டியில் இருக்கும் பொழுது அவள் தனது காதலை அறிந்து சந்தோசம் அடைந்தாலும் அவளின் மனதோரம் ஏதோவொன்று உறுத்திக்கொண்டே இருக்க அது என்னவென்று புரியாமல் அமர்ந்திருந்தாள் தென்றல்..
மனோ சொன்ன வார்த்தைகளால் அவளின் மனம் காயப்பட்டு இருந்தது அவளுக்கு அதுவரை தெரியவே இல்லை.. ஆனால் அவனை நேரில் சந்திக்க வேண்டும் என்று நினைக்க அவளின் மனது உறுத்த ஆரம்பித்தது..
‘இந்த உறுத்தலின் காரணம் என்ன..?’ என்று தென்றல் அவளின் மனதிடம் கேட்டதும், ‘நேரத்திற்கு நேரம் ஆளை மாற்றும் உனக்கு எல்லாம்..?!’ என்று அவன் கேட்ட வார்த்தை அவளின் அடி மனதில் அழமாக பதிந்திருப்பதை அப்பொழுது தான் உணர்ந்தாள்..
அதை உணர்ந்த தென்றல், “நான் என்ன தப்பு செய்தேன்..?! ஒருவர் விளையாட்டாக சிரித்து சந்தோசமாக இருந்தால் இந்த உலகம் அவங்களுக்கு கொடுக்கும் பெயர் நடத்தைக் கெட்டவளா..?!” என்று கேட்டவளின் மனம் வலித்தது..
‘அவன் இப்படி ஒரு கேள்வி கேட்க யார் காரணம்..?’ என்று அவள் கேட்டதும், அவளின் மனதில் இருந்த கோபம் அனைத்தும் அவளை பெற்றவள் மீது திரும்பியது..
‘என்னைப் பெற்றவள் என்னை ஒழுங்காக வளர்த்தி இருந்தால் நான் ஏன் இந்த வார்த்தை வாங்க போகிறேன்.. இதுக்கு எல்லாம் அவள்தான் காரணம்.. என்னதான் நான் நல்லவழியில் வளர்ந்தாலும், அவள் கொடுத்துச் சென்ற அனாதை என்ற பட்டம் தானே எனக்கு முன்னாடி சென்று நிற்கிறது..’ என்று நினைத்தவளின் காதல் அவளின் ஆழ்மனதில் புதைக்கப்பட அவன் சொன்ன சொற்கள் அவளின் கண்முன்னே வந்து நின்றது..
“அவன் மீது கொண்ட காதலா பெரியதா..? இல்ல அவன் கொடுத்தவலி பெரியதா..?” என்று யோசிக்க அவன் பேசிய வார்த்தைகள் பெரியது என்று அவளின் மனதில் தோன்றியதும், தன்னுடைய காதலை மனதில் மறைந்தது..
அவளுக்குள் நடக்கும் மாற்றம் அவளுக்கு புரிந்தாலும், அவனின் காதல் கொடுத்த சந்தோசத்தை விட அவன் வார்த்தைகள் கொடுத்த வலிதான் அவளுக்கு அதிகமாக இருந்தது..
அந்த வலிதான் அவளின் காதலை அடி மனதில் போட்டு புதைத்தது.. அவனிடம் அவள் ஆடிய கண்ணாமூச்சி ஆட்டம் எல்லாம் மாறி, அவளின் மனதின் அடி ஆழத்தில் மறைவதைப் பார்த்தவள்,
“மனோ இப்பொழுது நீ சொன்ன வார்த்தைகள் தான் என்னோட காதலை மறைக்கிறதே, நான் உன்னை மறக்கவில்லை.. இன்று என்னோட மனதில் மறைந்த காதலை நீதான் வெளிக்கொண்டு வரணும்.. உன்மேல் எனக்கு கோபம் இல்ல மனோ.. என் மீது தான் எனக்கு கோபம்..” என்றவள் கண்ணீரோடு படுக்கையில் படுத்து உறங்க ஆரம்பித்தாள்..
‘ஒரு பெண் விளையாட்டாக இருக்கிறாள்..’ என்று நாம் வார்த்தைகளை விடவே கூடாது.. அந்த வார்த்தைகள் தான் நம்மை அவர்களிடம் இருந்து பிரித்துவிடும்.. ஒருவர் என்ன இயல்போடு இருக்கிறார்களோ அதே இயல்பை ஏற்க நாமும் பழக வேண்டும்..
அவளின் அடி மனதில் புதைந்த காதல் தானாகவே வெளிப்படுமா..?! மனோ அவள் மனதில் இருக்கும் காதலை வெளி கொண்டுவருவானா..?!
அதன்பிறகு குட்டி தூக்கம் போட்டு எழுந்தவள் மணியைப் பார்க்க அவளின் காலிங்பெல் அடிக்க, “பிரதாப் வந்துவிட்டானா..?!” என்ற கேள்வியுடன் எழுந்து சென்று கதவைத் திறக்க அங்கே நின்றிருந்த நிவாஸைப் பார்த்தவள்,
“ஹாய் நிவாஸ் செல்லம்.. என்ன நீங்க மட்டும் வந்திருக்கீங்க..?!” என்று கேட்டதும் அவனின் பின்னோடு வீட்டிற்குள் நுழைத்த அனுவைப் பார்த்த தென்றல்,
“என்னடா நிவாஸ் தனியாக வந்தானோ என்று நினைத்தேன்.. நீதான் அழைத்துக் கொண்டு வந்திருக்கிறாயோ..?!” என்று கேட்டவளுக்கு பதில் சொல்லாமல் சோபாவில் அமர்ந்தாள் அனு..
அவளோடு அமைதியாக அமர்ந்திருந்த நிவாஸைப் பார்த்த தென்றல், “டேய் நிவாஸ் உனக்கு என்னடா ஆச்சு..? எப்பவும் ஏதாவது பேசுவாய்.. இன்னைக்கு என்ன ரொம்ப அமைதியாக இருக்கிறாய்..?” என்று அவனின் அருகில் சென்று அமர்ந்து அவனின் முகத்தைப் பார்க்க அவன் அழுக ஆரம்பித்தான்..
அவன் திடீரென்று அழுவதைப் பார்த்த தென்றல், அவனைத் தூக்கி மடியில் அமர வைத்து, “என்னடா எதுக்கு அழுகிறாய்..? என்னவென்று நீ சொன்னால் தானே எனக்கு தெரியும்..?” என்று கேட்டதும்,
“தென்றல் நாங்க வீட்டு மாத்திட்டோம்.. அது ரொம்ப தூரமாக இருக்கு.. இனிமேல் உன்னை தினமும் பார்க்க முடியாது.. உன்னோடு பேச முடியாது.. உன்னோட சண்டை போட முடியாது..” என்று அவன் பட்டியலை அடுக்க தென்றலுக்கு அவனின் பாசம் கண்டு கண்கள் கலங்கினாலும் தன்னை சமாளித்துக் கொண்டு,
“டேய் இதுக்கு போய் யாராவது அழுவாங்களா..?!” என்று அவனின் கண்களைத் துடைத்துவிட்டவள், “இங்கே பாரு நீ எவ்வளவு தூரம் போனாலும் தென்றல் உன்னைப் பார்க்க வருவேன்.. இதுக்கெல்லாம் அழுதால் நம்ம கேங் மானம் போகாது..?” என்று அவள் சிரிப்புடன் சொல்ல அப்பொழுதுதான் சிரித்தான் நிவாஸ்..
அவன் சிரிப்பதைப் பார்த்த அனு, “நீ ஹப்பாடியோ சரியான ஆளுடா.. இதே பதிலை தானே நானும் ஒரு வாரமாக சொல்கிறேன்.. என்னோட பேச்சை நீ கேட்ட..?!” என்று கேட்டவள் தென்றல் பக்கம் திரும்பி,
“ஒரு வாரம் இவனை சமாளிக்க இவங்க வீட்டில் பட்டபாடு.. இவங்க அம்மா இவனால் அழுதுட்டாங்க தென்றல்..” என்று சொல்ல,
நிவாஸ் பக்கம் திரும்பிய தென்றல்,
“டேய் நான் ஒரு வாரம் ஊரில் இல்ல.. அதுக்கு இத்தனை வேலையை பண்ணிட்டு இப்போ வந்து அழுகிறாயா..?” என்று கேட்டவள் சிரிக்க, அவளின் முகத்தைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தான் நிவாஸ்
“ம்ம் இப்போ நல்ல சிரி..” என்று அவளின் முகத்தை தனது சால்வையில் துடைத்து விட்டவளைப் பார்த்த அனு, “நாளைக்கு வேலைக்கு வருகிறாயா தென்றல்..?!” என்று கேட்டதும், அனுவின் பக்கம் திரும்பிய தென்றல், “ம்ம் வருகிறேன்..” என்று கூறினாள்..
அவளின் குரலில் பழைய துள்ளல் இல்லாததைக் கவனித்த அனு, “என்னடி ஒரு ஸ்ருதியே இல்லாமல் சொல்கிறாய்..?” என்று கேட்டதும், “தென்றல் அனு நீங்க பேசிட்டு இருங்க நான் பிரதாப் அண்ணாவைப் பார்த்துவிட்டு வருகிறேன்..” என்று சொல்ல, அவனின் கைகளைப் பற்றிய தென்றல்,
“குட்டிப்பையா நாம் வெளியே பார்க் போகலாம்..” என்று சொல்ல அவளைப் புரியாத பார்வைப் பார்க்க ஆரம்பித்தாள் அனு.. ஆனால் அனுவின் பார்வையைக் கண்டுக் கொள்ளாமல், “நீ போய் பிரதாப் அண்ணாவைப் பார்த்துட்டு வா நிவாஸ்..” என்று சொல்ல,
“சரி தென்றல் சீக்கிரம் கிளம்பு..” என்று சொல்லிவிட்டு அவன் ஓட அவள் எழுந்து பார்க்கிற்கு கிளம்பினாள்.. அவளைப் பார்த்துக் கொண்டே அமைதியாக அமர்ந்திருந்தாள் அனு..
அனு அமைதியாக இருந்தாலும் அவளின் பார்வை தென்றல் மீதே இருந்தது.. தென்றல் முகத்தில் இருந்த குழப்ப ரேகைகளைப் பார்த்தவள், ‘என்ன இவள் இவ்வளவு குழப்பத்தில் இருக்கிறாள்..?! இவள் இப்படி இருக்கும் ஆளே கிடையாதே..?! என்ன விசயமாக இருக்கும்..?’ என்று யோசித்துக் கொண்டிருந்தாள்..
கொஞ்ச நேரத்தில் கிளம்பிய தென்றல் அனுவை அழைத்துக் கொண்டு வெளியே வர பிரதாப்புடன் வந்து சேர்த்தான் நிவாஸ்.. நால்வரும் கிளம்பிப் பக்கத்தில் இருக்கும் பார்க்கிற்கு சென்றனர்.. பிரதாப், நிவாஸ் இருவரும் விளையாட செல்ல ஒரு சிமிண்ட் பெஞ்சில் அமைதியாக அமர்ந்தாள் தென்றல்..
இவர்கள் பார்க்கின் உள்ளே நுழையும்போது தென்றலை இரண்டு கண்கள் சுவாரஸ்யமாக பார்த்ததையும் அவளைத் தொடர்ந்து அவன் வருவதையும் கவனிக்காமல் இருந்தாள் தென்றல்..
அவள் அமைதியை இருப்பதைக் கண்ட அனு அவளின் அருகில் அமர்ந்து அவளின் கைகளோடு தனது கைகளைக் கோர்த்த அனு தென்றலுக்கு தைரியம் கொடுக்க வாய் திறந்தாள் தென்றல்..
“அனு என்னோட பிறந்தநாள் அன்று என்ன நடந்தது என்று தெரியுமா..?!” என்று தென்றல் கேட்டதும், இல்லை என்று தலையசைத்தாள் அனு..
அவளிடம் நடந்தது அனைத்தையும் கூறியவள், “இப்பொழுது சொல்லு அனு நான் என்ன செய்யட்டும்..?!” என்று கேட்டதும் தென்றலுக்கு என்ன பதில் சொல்வது என்று அறியாமல் அமர்ந்திருந்தாள் அனுபமா..
Last edited: