அத்தியாயம் – 12
காலையில் சரியான நேரத்திற்கு அலுவலகத்தில் நுழைந்த தென்றலைப் பார்த்த அனு, “என்னம்மா காலையில் ரொம்ப சீக்கிரம் வந்துவிட்டாய்..?” என்று கேட்டதற்கு, “இனிமேல் எல்லாம் அப்படித்தான்..” என்று கூறியவள் தனது இருக்கையில் அமர்ந்து தனது வேலையைத் தொடங்க, நேரான நிமிர்ந்த நடையுடன் அலுவலகத்தின் உள்ளே நுழைந்தான் மனோ..
அவன் வருவதைப் பார்த்து செல்லோரும் எழுந்து விஷ் பண்ண அவளும் எழுந்து விஷ் பண்ணிவிட்டு தனது வேலையைத் தொடர அவளை புருவம் உயர்த்தி பார்த்த வண்ணம் தனது அறைக்குள் சென்று மறைந்தான் மனோ..
அவனின் பார்வை தன்னைத் தொடர்வதை உணர்ந்தாலும் அவள் கவனிக்காதது போல அமர்ந்து தனது வேலையைத் தொடர, கிட்டத்தட்ட எட்டு மாதங்களாக அவளின் சிரிப்பை கண்டே பழகிய அவனுக்கு அவளின் முகம் பார்க்கவே பிடிக்கவில்லை.. அவள் சிரிக்க மாட்டாளா..?! தன்னோடு சண்டை இழுக்க மாட்டாளா..?’ என்று அவனின் மனம் அவளையே நினைக்க தொடங்கியது..
‘அவளை மற்ற வழியே இல்லையா..? அவள் இனிமேல் சிரிக்கவே மாட்டாளோ..?’ என்ற எண்ணங்கள் அவனை ஆளுமை செய்ய அவனின் மனம் சஞ்சலம் அடைந்தது.. ‘இதுக்கு என்னதான் தீர்வு..?’ என்று அவன் யோசிக்க ஆரம்பித்தான்..
அந்த எண்ணத்தை ஓரம் கட்டியவன் அடுத்தடுத்த’ வேலைகளைக் கவனிக்க வேலையில் இருந்த கவனத்தில் அவன் சாப்பிடுவதையே மறந்துவிட்டு தனது வேலையைத் தொடர்ந்தான்..
அவனின் அறைக்குள் வந்தவனுக்கு அடுத்தடுத்த வேலையாக அவனின் ப்ராஜெக்ட் வேலைகள் இருக்க அந்த பிளான் பற்றி தன்னுடைய வேலைகளை ஆரம்பித்தான்.. அவனுக்கு வேலை என்று வந்துவிட்டால் மற்ற எதிலுமே கவனம் செலுத்த மாட்டான்..
மதியம் அவன் சாப்பிடாமல் வேலைப் பார்க்க மதியம் சாப்பிட்டுவிட்டு தனது இடத்திற்கு வந்தவளுக்கு பாட்டு கேட்க தோன்றியதும் அடுத்த நொடியே தனது செல்லை எடுத்து பாடலை ஒலிக்க விட்டவள் ஹெட்செட் மாட்டிக்கொண்டு பாடலைக் கேட்க கண்மூடி கேட்க ஆரம்பித்தாள்..
அந்தநேரம் மணியைப் பார்த்த மனோ, ‘சாப்பிட செல்லலாம்..’ என்று எழுந்து வெளியே வர அந்த அறையில் எந்த பணியாளரும் இல்லாமல் காலியாக இருக்க தென்றல் மட்டும் தனது கேபினில் அமர்ந்திருப்பதைக் கண்ட மனோ அவளின் அருகில் சென்றான்.. அவன் வந்ததையோ தன்னை கவனித்தையோ அறியாத தென்றல்,
“எங்கிருந்தோ இளங்குயிலின்
இன்னிசை கேட்டு கண்விழித்தேன்..
நினைவு அலைகள் மனதில் எழும்பும் நேரம்
தட்டிவிட்டேன் மனக்கதவை
திறந்து பார்க்க விரைந்து வா
நெஞ்சம் உந்தன் நெஞ்சம்
கொண்ட சஞ்சலங்கள் மறைய..” என்று அவள் பாட அவளின் பாடலைக்கேட்டு அவன் அப்படியே நின்றான்.. அவனின் மனதில் உள்ள சஞ்சலங்களுக்கு அவள் அந்த பாடலின் மூலம் தீர்வு சொல்கிறாளோ என்று யோசித்தான் மனோ.. அவன் நினைத்து போலவே அவன் செய்த தவறைச் சுட்டிக் காட்டுவது போலவே இருந்தது அவள் பாடிய பாடலின் வரிகள்..
“நீங்காமல் தானே நிழல் போலே நானே
வருவேன் உன் பின்னோடு எந்நாளும் தான்
பூப்போன்ற மனதை பொல்லாத மனதால்
தவறாக எடைப்போட்டு சென்றாலும்தான்
பாலைப்போல கல்லும் கூட வெண்மையானது
பருகிடாது விளங்கிடாது உண்மையானது
நீயும் காணக்கூடும் இங்கும்
ஓர் தினம் இந்த பால்மனம்..” என்று பாடியவளின் குரலில் மட்டுமே அந்த பாடலுக்கு உண்டான சோகம் இருந்ததே தவிர, அவளின் முகம் அன்று பூத்த தாமரை மலர் போல அழகாக மலர்ந்திருக்க அவளோ பாடலை ரசித்து பாடிக்கொண்டிருந்தாள்..
அவளின் பாடல் வரிகளையும் அவளின் முகத்தையும் பார்த்தவன், ‘உன்னை என்னால் புரிந்துக் கொள்ளவே முடியலடி புயல்..’ என்று நினைத்தவன்,
‘உன்னோட முகத்தில் இருக்கும் புன்னகை பார்க்க எவ்வளவு அழகாக இருக்கிறது.. ஆனால் நீ சிரிக்கவே மாட்டேன் என்று சத்தியாக்கிரகம் செய்கிறாய்.. ஏன் புயல் என்னை இப்படி வதைக்கிறாய்..?’ என்று கேட்டவன் அந்த இடத்தைவிட்டு அகல மெதுவாக கண்திறந்த தென்றல் மனோ செல்வதைப் பார்த்து,
“நான் பாடிய பாடல் அவனுக்கு கேட்டிருக்குமோ..?!” என்று சந்தேகமாக வாய்விட்டு கூறியவள், “என்னோட பாடலைக் கேட்டால் கரித்துக் கொட்டாமல் போகமாட்டானே..?” என்று நினைத்தவள்,
“இவனை ரொம்ப பழி வாங்குகிறோமோ..?” என்று அவனுக்காக யோசித்தவள், “இப்படி இருந்தால் தான் அவனுக்கும் அவன் செய்த தவறு புரியும்..” என்று கூறியவள் அடுத்த வேலைகளைக் கவனிக்க தொடங்கினாள்.. இப்பொழுது எல்லாம் அவள் அதிகம் பேசுவதே கிடையாது..
அவள் இப்பொழுது எல்லாம் பர்மிஷன் கேட்டு வந்து நிற்பதே இல்லை.. அவனிடம் அவள் காட்டும் ஒதுக்கத்தை உணர்ந்தே இருந்தான் மனோ.. நாட்கள் தெளிந்த நீரோடை போல செல்ல, அந்த மாலை பொழுது அவனின் மனதில் இருந்த கேள்விகளுக்கு பதிலைக் கொடுத்தது..
அன்று மாலை அவன் ஆபீஸ் வெளியே கிளம்ப அவனின் காரை வழிமறித்து நின்றனர் சிறுவர்கள்.. அவர்களைப் பார்த்த மனோ, ‘இவங்க எதுக்கு என்னோட காரை வழிமறித்து நிற்கின்றனர்..’ என்று யோசித்தவன் காரை விட்டு கீழே இறங்கியவன்,
“உங்களுக்கு எல்லாம் என்னடா வேண்டும்..?!” என்று இடது புருவம் உயர்த்தி அவன் அதிகாரமாகக் கேட்க அவனை பார்வையால் அளந்தனர் அந்த வாண்டுகள்..
மனோவைப் பார்த்த நிவாஸ், “நீதான் இந்த கன்ஸ்ட்ரக்ஷன் ஓனரா..?!” என்று அவனைப் போலவே இடது புருவம் உயர்த்தி கேட்டான்..
அவனைப் பார்த்த மனோ, ‘இத்துணுண்டு இருந்துட்டு இதுக்கு எல்லாம் திமிரைப் பாரு..’ என்று நினைத்தவன், “ஆமா நான் தான் இந்த கன்ஸ்ட்ரக்ஷன் ஓனர்..” என்று அவன் சொல்ல,
“ஓஓ நீதான் எங்களோட தென்றலைத் திட்டியதா..? தென்றல் அந்த கேள்வி கேட்க உனக்கு என்ன தைரியம்..?” என்று கேட்டான் சுனில்..
அவர்கள் தென்றலைப் பற்றி பேச காரில் சாய்ந்து நின்ற மனோ, “இந்த நிறுவனத்தில் பல தென்றல் வேலைப் பார்கிறார்கள் நீங்க எந்த தென்றலை சொல்றீங்க..?” என்று அவன் யோசனையோடு கேட்க,
“உன்னோட பி.ஏ. தென்றல்..” என்று அழுத்ததுடன் கூறினான் சிவசுதன்.. அவன் அழுத்தமாக சொன்னதும், ‘தென்றல் பற்றி பேசும் இவங்க எல்லாம் யாரு..?’ என்று மனோவின் மனதில் கேள்வி எழுந்தது..
“அவளைப் பற்றி பேச நீங்க யாருங்க ஸார்..” என்று அவன் குழந்தைகளைப் பார்த்து மரியாதையுடன் கேட்டதும்,
“நாங்கதான் தென்றலின் பெஸ்ட் பிரிண்ட்ஸ்.. என்னோட பெயர் நிவாஸ், சுனில், பிரதாப், ஷிவானி, ராகுல்..” என்று அவர்கள் தங்களின் பெயரைச் சொல்ல, மனோவிற்கு அதிர்ச்சி அதிகமாகவே இருந்தது..
அவர்கள் நின்ற தோரணையைப் பார்த்த மனோ, ‘இவனுங்க எல்லாம் ஸ்கூல் பசங்களா..?! இவனுங்களை வைத்துதான் என்னை கடுப்பேற்றினாளா..?!’ என்று நினைத்தவன் அவர்கள் உயரத்தைப் பார்த்து அவர்களின் வயதை கணக்கிட்டவன்,
“நீங்க எல்லாம் வந்தீங்க..?” என்று கேட்டதும், “பிரதாப் இவனுக்கு நக்கல் ரொம்ப ஓவராக இருக்கிறது..” என்று சுனில் சொல்ல, “டேய் என்னதான் இருந்தாலும் நம்ம தென்றல் வேலை செய்யும் ஓனரிடம் பேசுகிறோம்.. அவளுக்காக இவனுக்கு கொஞ்சம் மரியாதை கொடுக்கலாம்..” என்று ராகுல் கூறியதும்,
“என்ன தைரியம் இருந்தால் எங்க தென்றலைப் பார்த்து நீ அந்த கேள்வி கேட்பாய்..? அவளைப் பற்றி உனக்கு என்ன தெரியும்..?” என்று பிரதாப் அவளை போலவே கேட்க,
‘எனக்கு நல்ல வேண்டும்.. இவங்க எல்லாம் சின்ன பசங்க என்று தெரியாமல் அவளிடம் வாய்விட்டேனே.. எல்லாம் அவளைப் போலவே கேள்வி கேட்கிறது..’ என்று நினைத்தவன்,
“நீங்க எல்லாம் இவ்வளவு பெரிய ஆள் என்று எனக்கு தெரியாதுங்க ஸார்.. இனிமேல் உங்க தென்றலை நான் எதுவும் பேசல போதுமா..?” என்று அவன் அவர்களுக்கு மரியாதைக் கொடுத்துப் பேச,
“ம்ம் அந்த பயம் இருக்கட்டும்.. இனிமேல் அவள் அழுவது போல ஏதாவது பேசின அப்புறம் கையில் இருக்கும் ஸ்டெம்பை வைத்து உன்னோட மண்டையை பிளந்துவிடுவேன்..” என்று நிவாஸ் கோபத்தோடு சொல்ல மனோவிற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை..
அவனோட இடத்திற்கே வந்து அவனையே மிரட்டும் அந்த வாண்டுகளை நினைத்து அவன் மலைத்துப்போய் நிற்க, அலுவலகம் விட்டு வெளியே வந்த அனுவும், தென்றலும் அவர்களைப் பார்த்துவிட்டு அருகில் வந்தனர்..
அந்த ஐவரின் பக்கத்தில் வந்த தென்றல், “டேய் நீங்க எதுக்குடா இங்கே வந்தீங்க..?” என்று கேட்டதும், “இந்த இரும்பு மனிதனைப் பார்க்கத்தான்..” என்று அசராமல் பதில் சொன்னான் சுனில்..
அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியில் அனு மனோவைத் திரும்பிப் பார்க்க அவனோ தென்றலைக் கேள்வியாக நோக்கினான்.. அவளோ அதற்கு எல்லாம் பயப்படாமல், “இவனைப் பார்த்து நீங்க என்னடா செய்ய போறீங்க..” என்று கேட்டதும், “உன்னை அழுக வைத்தான் இல்ல அதுதான் இவனை ஒரு வழி பண்ணிட்டு போகலாம் என்று வந்தோம்..” என்று ராகுல் சொல்ல,
மனோவோ தென்றலின் பக்கம் திரும்பி, “நீ ஆபீஸ் உள்ளே மிரட்டுவது பத்தாது என்று.. ஆபீஸ் வெளியே வாண்டுகளை வைத்து மிரட்டுகிறாயா..?” என்று கேட்டதும்,
“எங்க கண்ணு முன்னாடியே நீ தென்றலை மிரட்டுகிறாய்..?! இது எல்லாம் நல்லதே இல்ல.. நான் எல்லா நேரமும் சும்மா இருக்க மாட்டேன்..” என்று நிவாஸ் மனோவிற்கு பதில் கொடுக்க தென்றல் வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தாள்..
அவள் சொன்னது போலவே அவளின் சிரிப்பை பார்த்த மனோ, ‘இவள் இப்படி சிரிப்பதைப் பார்த்து எத்தனை நாள் ஆச்சு..’ என்று நினைத்தவன் அவளின் சிரித்த முகத்தை அவனின் மனத்தில் பதிய வைத்தான்..
காலையில் சரியான நேரத்திற்கு அலுவலகத்தில் நுழைந்த தென்றலைப் பார்த்த அனு, “என்னம்மா காலையில் ரொம்ப சீக்கிரம் வந்துவிட்டாய்..?” என்று கேட்டதற்கு, “இனிமேல் எல்லாம் அப்படித்தான்..” என்று கூறியவள் தனது இருக்கையில் அமர்ந்து தனது வேலையைத் தொடங்க, நேரான நிமிர்ந்த நடையுடன் அலுவலகத்தின் உள்ளே நுழைந்தான் மனோ..
அவன் வருவதைப் பார்த்து செல்லோரும் எழுந்து விஷ் பண்ண அவளும் எழுந்து விஷ் பண்ணிவிட்டு தனது வேலையைத் தொடர அவளை புருவம் உயர்த்தி பார்த்த வண்ணம் தனது அறைக்குள் சென்று மறைந்தான் மனோ..
அவனின் பார்வை தன்னைத் தொடர்வதை உணர்ந்தாலும் அவள் கவனிக்காதது போல அமர்ந்து தனது வேலையைத் தொடர, கிட்டத்தட்ட எட்டு மாதங்களாக அவளின் சிரிப்பை கண்டே பழகிய அவனுக்கு அவளின் முகம் பார்க்கவே பிடிக்கவில்லை.. அவள் சிரிக்க மாட்டாளா..?! தன்னோடு சண்டை இழுக்க மாட்டாளா..?’ என்று அவனின் மனம் அவளையே நினைக்க தொடங்கியது..
‘அவளை மற்ற வழியே இல்லையா..? அவள் இனிமேல் சிரிக்கவே மாட்டாளோ..?’ என்ற எண்ணங்கள் அவனை ஆளுமை செய்ய அவனின் மனம் சஞ்சலம் அடைந்தது.. ‘இதுக்கு என்னதான் தீர்வு..?’ என்று அவன் யோசிக்க ஆரம்பித்தான்..
அந்த எண்ணத்தை ஓரம் கட்டியவன் அடுத்தடுத்த’ வேலைகளைக் கவனிக்க வேலையில் இருந்த கவனத்தில் அவன் சாப்பிடுவதையே மறந்துவிட்டு தனது வேலையைத் தொடர்ந்தான்..
அவனின் அறைக்குள் வந்தவனுக்கு அடுத்தடுத்த வேலையாக அவனின் ப்ராஜெக்ட் வேலைகள் இருக்க அந்த பிளான் பற்றி தன்னுடைய வேலைகளை ஆரம்பித்தான்.. அவனுக்கு வேலை என்று வந்துவிட்டால் மற்ற எதிலுமே கவனம் செலுத்த மாட்டான்..
மதியம் அவன் சாப்பிடாமல் வேலைப் பார்க்க மதியம் சாப்பிட்டுவிட்டு தனது இடத்திற்கு வந்தவளுக்கு பாட்டு கேட்க தோன்றியதும் அடுத்த நொடியே தனது செல்லை எடுத்து பாடலை ஒலிக்க விட்டவள் ஹெட்செட் மாட்டிக்கொண்டு பாடலைக் கேட்க கண்மூடி கேட்க ஆரம்பித்தாள்..
அந்தநேரம் மணியைப் பார்த்த மனோ, ‘சாப்பிட செல்லலாம்..’ என்று எழுந்து வெளியே வர அந்த அறையில் எந்த பணியாளரும் இல்லாமல் காலியாக இருக்க தென்றல் மட்டும் தனது கேபினில் அமர்ந்திருப்பதைக் கண்ட மனோ அவளின் அருகில் சென்றான்.. அவன் வந்ததையோ தன்னை கவனித்தையோ அறியாத தென்றல்,
“எங்கிருந்தோ இளங்குயிலின்
இன்னிசை கேட்டு கண்விழித்தேன்..
நினைவு அலைகள் மனதில் எழும்பும் நேரம்
தட்டிவிட்டேன் மனக்கதவை
திறந்து பார்க்க விரைந்து வா
நெஞ்சம் உந்தன் நெஞ்சம்
கொண்ட சஞ்சலங்கள் மறைய..” என்று அவள் பாட அவளின் பாடலைக்கேட்டு அவன் அப்படியே நின்றான்.. அவனின் மனதில் உள்ள சஞ்சலங்களுக்கு அவள் அந்த பாடலின் மூலம் தீர்வு சொல்கிறாளோ என்று யோசித்தான் மனோ.. அவன் நினைத்து போலவே அவன் செய்த தவறைச் சுட்டிக் காட்டுவது போலவே இருந்தது அவள் பாடிய பாடலின் வரிகள்..
“நீங்காமல் தானே நிழல் போலே நானே
வருவேன் உன் பின்னோடு எந்நாளும் தான்
பூப்போன்ற மனதை பொல்லாத மனதால்
தவறாக எடைப்போட்டு சென்றாலும்தான்
பாலைப்போல கல்லும் கூட வெண்மையானது
பருகிடாது விளங்கிடாது உண்மையானது
நீயும் காணக்கூடும் இங்கும்
ஓர் தினம் இந்த பால்மனம்..” என்று பாடியவளின் குரலில் மட்டுமே அந்த பாடலுக்கு உண்டான சோகம் இருந்ததே தவிர, அவளின் முகம் அன்று பூத்த தாமரை மலர் போல அழகாக மலர்ந்திருக்க அவளோ பாடலை ரசித்து பாடிக்கொண்டிருந்தாள்..
அவளின் பாடல் வரிகளையும் அவளின் முகத்தையும் பார்த்தவன், ‘உன்னை என்னால் புரிந்துக் கொள்ளவே முடியலடி புயல்..’ என்று நினைத்தவன்,
‘உன்னோட முகத்தில் இருக்கும் புன்னகை பார்க்க எவ்வளவு அழகாக இருக்கிறது.. ஆனால் நீ சிரிக்கவே மாட்டேன் என்று சத்தியாக்கிரகம் செய்கிறாய்.. ஏன் புயல் என்னை இப்படி வதைக்கிறாய்..?’ என்று கேட்டவன் அந்த இடத்தைவிட்டு அகல மெதுவாக கண்திறந்த தென்றல் மனோ செல்வதைப் பார்த்து,
“நான் பாடிய பாடல் அவனுக்கு கேட்டிருக்குமோ..?!” என்று சந்தேகமாக வாய்விட்டு கூறியவள், “என்னோட பாடலைக் கேட்டால் கரித்துக் கொட்டாமல் போகமாட்டானே..?” என்று நினைத்தவள்,
“இவனை ரொம்ப பழி வாங்குகிறோமோ..?” என்று அவனுக்காக யோசித்தவள், “இப்படி இருந்தால் தான் அவனுக்கும் அவன் செய்த தவறு புரியும்..” என்று கூறியவள் அடுத்த வேலைகளைக் கவனிக்க தொடங்கினாள்.. இப்பொழுது எல்லாம் அவள் அதிகம் பேசுவதே கிடையாது..
அவள் இப்பொழுது எல்லாம் பர்மிஷன் கேட்டு வந்து நிற்பதே இல்லை.. அவனிடம் அவள் காட்டும் ஒதுக்கத்தை உணர்ந்தே இருந்தான் மனோ.. நாட்கள் தெளிந்த நீரோடை போல செல்ல, அந்த மாலை பொழுது அவனின் மனதில் இருந்த கேள்விகளுக்கு பதிலைக் கொடுத்தது..
அன்று மாலை அவன் ஆபீஸ் வெளியே கிளம்ப அவனின் காரை வழிமறித்து நின்றனர் சிறுவர்கள்.. அவர்களைப் பார்த்த மனோ, ‘இவங்க எதுக்கு என்னோட காரை வழிமறித்து நிற்கின்றனர்..’ என்று யோசித்தவன் காரை விட்டு கீழே இறங்கியவன்,
“உங்களுக்கு எல்லாம் என்னடா வேண்டும்..?!” என்று இடது புருவம் உயர்த்தி அவன் அதிகாரமாகக் கேட்க அவனை பார்வையால் அளந்தனர் அந்த வாண்டுகள்..
மனோவைப் பார்த்த நிவாஸ், “நீதான் இந்த கன்ஸ்ட்ரக்ஷன் ஓனரா..?!” என்று அவனைப் போலவே இடது புருவம் உயர்த்தி கேட்டான்..
அவனைப் பார்த்த மனோ, ‘இத்துணுண்டு இருந்துட்டு இதுக்கு எல்லாம் திமிரைப் பாரு..’ என்று நினைத்தவன், “ஆமா நான் தான் இந்த கன்ஸ்ட்ரக்ஷன் ஓனர்..” என்று அவன் சொல்ல,
“ஓஓ நீதான் எங்களோட தென்றலைத் திட்டியதா..? தென்றல் அந்த கேள்வி கேட்க உனக்கு என்ன தைரியம்..?” என்று கேட்டான் சுனில்..
அவர்கள் தென்றலைப் பற்றி பேச காரில் சாய்ந்து நின்ற மனோ, “இந்த நிறுவனத்தில் பல தென்றல் வேலைப் பார்கிறார்கள் நீங்க எந்த தென்றலை சொல்றீங்க..?” என்று அவன் யோசனையோடு கேட்க,
“உன்னோட பி.ஏ. தென்றல்..” என்று அழுத்ததுடன் கூறினான் சிவசுதன்.. அவன் அழுத்தமாக சொன்னதும், ‘தென்றல் பற்றி பேசும் இவங்க எல்லாம் யாரு..?’ என்று மனோவின் மனதில் கேள்வி எழுந்தது..
“அவளைப் பற்றி பேச நீங்க யாருங்க ஸார்..” என்று அவன் குழந்தைகளைப் பார்த்து மரியாதையுடன் கேட்டதும்,
“நாங்கதான் தென்றலின் பெஸ்ட் பிரிண்ட்ஸ்.. என்னோட பெயர் நிவாஸ், சுனில், பிரதாப், ஷிவானி, ராகுல்..” என்று அவர்கள் தங்களின் பெயரைச் சொல்ல, மனோவிற்கு அதிர்ச்சி அதிகமாகவே இருந்தது..
அவர்கள் நின்ற தோரணையைப் பார்த்த மனோ, ‘இவனுங்க எல்லாம் ஸ்கூல் பசங்களா..?! இவனுங்களை வைத்துதான் என்னை கடுப்பேற்றினாளா..?!’ என்று நினைத்தவன் அவர்கள் உயரத்தைப் பார்த்து அவர்களின் வயதை கணக்கிட்டவன்,
“நீங்க எல்லாம் வந்தீங்க..?” என்று கேட்டதும், “பிரதாப் இவனுக்கு நக்கல் ரொம்ப ஓவராக இருக்கிறது..” என்று சுனில் சொல்ல, “டேய் என்னதான் இருந்தாலும் நம்ம தென்றல் வேலை செய்யும் ஓனரிடம் பேசுகிறோம்.. அவளுக்காக இவனுக்கு கொஞ்சம் மரியாதை கொடுக்கலாம்..” என்று ராகுல் கூறியதும்,
“என்ன தைரியம் இருந்தால் எங்க தென்றலைப் பார்த்து நீ அந்த கேள்வி கேட்பாய்..? அவளைப் பற்றி உனக்கு என்ன தெரியும்..?” என்று பிரதாப் அவளை போலவே கேட்க,
‘எனக்கு நல்ல வேண்டும்.. இவங்க எல்லாம் சின்ன பசங்க என்று தெரியாமல் அவளிடம் வாய்விட்டேனே.. எல்லாம் அவளைப் போலவே கேள்வி கேட்கிறது..’ என்று நினைத்தவன்,
“நீங்க எல்லாம் இவ்வளவு பெரிய ஆள் என்று எனக்கு தெரியாதுங்க ஸார்.. இனிமேல் உங்க தென்றலை நான் எதுவும் பேசல போதுமா..?” என்று அவன் அவர்களுக்கு மரியாதைக் கொடுத்துப் பேச,
“ம்ம் அந்த பயம் இருக்கட்டும்.. இனிமேல் அவள் அழுவது போல ஏதாவது பேசின அப்புறம் கையில் இருக்கும் ஸ்டெம்பை வைத்து உன்னோட மண்டையை பிளந்துவிடுவேன்..” என்று நிவாஸ் கோபத்தோடு சொல்ல மனோவிற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை..
அவனோட இடத்திற்கே வந்து அவனையே மிரட்டும் அந்த வாண்டுகளை நினைத்து அவன் மலைத்துப்போய் நிற்க, அலுவலகம் விட்டு வெளியே வந்த அனுவும், தென்றலும் அவர்களைப் பார்த்துவிட்டு அருகில் வந்தனர்..
அந்த ஐவரின் பக்கத்தில் வந்த தென்றல், “டேய் நீங்க எதுக்குடா இங்கே வந்தீங்க..?” என்று கேட்டதும், “இந்த இரும்பு மனிதனைப் பார்க்கத்தான்..” என்று அசராமல் பதில் சொன்னான் சுனில்..
அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியில் அனு மனோவைத் திரும்பிப் பார்க்க அவனோ தென்றலைக் கேள்வியாக நோக்கினான்.. அவளோ அதற்கு எல்லாம் பயப்படாமல், “இவனைப் பார்த்து நீங்க என்னடா செய்ய போறீங்க..” என்று கேட்டதும், “உன்னை அழுக வைத்தான் இல்ல அதுதான் இவனை ஒரு வழி பண்ணிட்டு போகலாம் என்று வந்தோம்..” என்று ராகுல் சொல்ல,
மனோவோ தென்றலின் பக்கம் திரும்பி, “நீ ஆபீஸ் உள்ளே மிரட்டுவது பத்தாது என்று.. ஆபீஸ் வெளியே வாண்டுகளை வைத்து மிரட்டுகிறாயா..?” என்று கேட்டதும்,
“எங்க கண்ணு முன்னாடியே நீ தென்றலை மிரட்டுகிறாய்..?! இது எல்லாம் நல்லதே இல்ல.. நான் எல்லா நேரமும் சும்மா இருக்க மாட்டேன்..” என்று நிவாஸ் மனோவிற்கு பதில் கொடுக்க தென்றல் வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தாள்..
அவள் சொன்னது போலவே அவளின் சிரிப்பை பார்த்த மனோ, ‘இவள் இப்படி சிரிப்பதைப் பார்த்து எத்தனை நாள் ஆச்சு..’ என்று நினைத்தவன் அவளின் சிரித்த முகத்தை அவனின் மனத்தில் பதிய வைத்தான்..
Last edited: