• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Enathu Punnagaiyin Mugavari - 12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 12

காலையில் சரியான நேரத்திற்கு அலுவலகத்தில் நுழைந்த தென்றலைப் பார்த்த அனு, “என்னம்மா காலையில் ரொம்ப சீக்கிரம் வந்துவிட்டாய்..?” என்று கேட்டதற்கு, “இனிமேல் எல்லாம் அப்படித்தான்..” என்று கூறியவள் தனது இருக்கையில் அமர்ந்து தனது வேலையைத் தொடங்க, நேரான நிமிர்ந்த நடையுடன் அலுவலகத்தின் உள்ளே நுழைந்தான் மனோ..

அவன் வருவதைப் பார்த்து செல்லோரும் எழுந்து விஷ் பண்ண அவளும் எழுந்து விஷ் பண்ணிவிட்டு தனது வேலையைத் தொடர அவளை புருவம் உயர்த்தி பார்த்த வண்ணம் தனது அறைக்குள் சென்று மறைந்தான் மனோ..

அவனின் பார்வை தன்னைத் தொடர்வதை உணர்ந்தாலும் அவள் கவனிக்காதது போல அமர்ந்து தனது வேலையைத் தொடர, கிட்டத்தட்ட எட்டு மாதங்களாக அவளின் சிரிப்பை கண்டே பழகிய அவனுக்கு அவளின் முகம் பார்க்கவே பிடிக்கவில்லை.. அவள் சிரிக்க மாட்டாளா..?! தன்னோடு சண்டை இழுக்க மாட்டாளா..?’ என்று அவனின் மனம் அவளையே நினைக்க தொடங்கியது..

‘அவளை மற்ற வழியே இல்லையா..? அவள் இனிமேல் சிரிக்கவே மாட்டாளோ..?’ என்ற எண்ணங்கள் அவனை ஆளுமை செய்ய அவனின் மனம் சஞ்சலம் அடைந்தது.. ‘இதுக்கு என்னதான் தீர்வு..?’ என்று அவன் யோசிக்க ஆரம்பித்தான்..

அந்த எண்ணத்தை ஓரம் கட்டியவன் அடுத்தடுத்த’ வேலைகளைக் கவனிக்க வேலையில் இருந்த கவனத்தில் அவன் சாப்பிடுவதையே மறந்துவிட்டு தனது வேலையைத் தொடர்ந்தான்..

அவனின் அறைக்குள் வந்தவனுக்கு அடுத்தடுத்த வேலையாக அவனின் ப்ராஜெக்ட் வேலைகள் இருக்க அந்த பிளான் பற்றி தன்னுடைய வேலைகளை ஆரம்பித்தான்.. அவனுக்கு வேலை என்று வந்துவிட்டால் மற்ற எதிலுமே கவனம் செலுத்த மாட்டான்..

மதியம் அவன் சாப்பிடாமல் வேலைப் பார்க்க மதியம் சாப்பிட்டுவிட்டு தனது இடத்திற்கு வந்தவளுக்கு பாட்டு கேட்க தோன்றியதும் அடுத்த நொடியே தனது செல்லை எடுத்து பாடலை ஒலிக்க விட்டவள் ஹெட்செட் மாட்டிக்கொண்டு பாடலைக் கேட்க கண்மூடி கேட்க ஆரம்பித்தாள்..

அந்தநேரம் மணியைப் பார்த்த மனோ, ‘சாப்பிட செல்லலாம்..’ என்று எழுந்து வெளியே வர அந்த அறையில் எந்த பணியாளரும் இல்லாமல் காலியாக இருக்க தென்றல் மட்டும் தனது கேபினில் அமர்ந்திருப்பதைக் கண்ட மனோ அவளின் அருகில் சென்றான்.. அவன் வந்ததையோ தன்னை கவனித்தையோ அறியாத தென்றல்,

எங்கிருந்தோ இளங்குயிலின்

இன்னிசை கேட்டு கண்விழித்தேன்..

நினைவு அலைகள் மனதில் எழும்பும் நேரம்

தட்டிவிட்டேன் மனக்கதவை

திறந்து பார்க்க விரைந்து வா

நெஞ்சம் உந்தன் நெஞ்சம்

கொண்ட சஞ்சலங்கள் மறைய..” என்று அவள் பாட அவளின் பாடலைக்கேட்டு அவன் அப்படியே நின்றான்.. அவனின் மனதில் உள்ள சஞ்சலங்களுக்கு அவள் அந்த பாடலின் மூலம் தீர்வு சொல்கிறாளோ என்று யோசித்தான் மனோ.. அவன் நினைத்து போலவே அவன் செய்த தவறைச் சுட்டிக் காட்டுவது போலவே இருந்தது அவள் பாடிய பாடலின் வரிகள்..

நீங்காமல் தானே நிழல் போலே நானே

வருவேன் உன் பின்னோடு எந்நாளும் தான்

பூப்போன்ற மனதை பொல்லாத மனதால்

தவறாக எடைப்போட்டு சென்றாலும்தான்

பாலைப்போல கல்லும் கூட வெண்மையானது

பருகிடாது விளங்கிடாது உண்மையானது

நீயும் காணக்கூடும் இங்கும்

ஓர் தினம் இந்த பால்மனம்..” என்று பாடியவளின் குரலில் மட்டுமே அந்த பாடலுக்கு உண்டான சோகம் இருந்ததே தவிர, அவளின் முகம் அன்று பூத்த தாமரை மலர் போல அழகாக மலர்ந்திருக்க அவளோ பாடலை ரசித்து பாடிக்கொண்டிருந்தாள்..

அவளின் பாடல் வரிகளையும் அவளின் முகத்தையும் பார்த்தவன், ‘உன்னை என்னால் புரிந்துக் கொள்ளவே முடியலடி புயல்..’ என்று நினைத்தவன்,

‘உன்னோட முகத்தில் இருக்கும் புன்னகை பார்க்க எவ்வளவு அழகாக இருக்கிறது.. ஆனால் நீ சிரிக்கவே மாட்டேன் என்று சத்தியாக்கிரகம் செய்கிறாய்.. ஏன் புயல் என்னை இப்படி வதைக்கிறாய்..?’ என்று கேட்டவன் அந்த இடத்தைவிட்டு அகல மெதுவாக கண்திறந்த தென்றல் மனோ செல்வதைப் பார்த்து,

“நான் பாடிய பாடல் அவனுக்கு கேட்டிருக்குமோ..?!” என்று சந்தேகமாக வாய்விட்டு கூறியவள், “என்னோட பாடலைக் கேட்டால் கரித்துக் கொட்டாமல் போகமாட்டானே..?” என்று நினைத்தவள்,

“இவனை ரொம்ப பழி வாங்குகிறோமோ..?” என்று அவனுக்காக யோசித்தவள், “இப்படி இருந்தால் தான் அவனுக்கும் அவன் செய்த தவறு புரியும்..” என்று கூறியவள் அடுத்த வேலைகளைக் கவனிக்க தொடங்கினாள்.. இப்பொழுது எல்லாம் அவள் அதிகம் பேசுவதே கிடையாது..

அவள் இப்பொழுது எல்லாம் பர்மிஷன் கேட்டு வந்து நிற்பதே இல்லை.. அவனிடம் அவள் காட்டும் ஒதுக்கத்தை உணர்ந்தே இருந்தான் மனோ.. நாட்கள் தெளிந்த நீரோடை போல செல்ல, அந்த மாலை பொழுது அவனின் மனதில் இருந்த கேள்விகளுக்கு பதிலைக் கொடுத்தது..

அன்று மாலை அவன் ஆபீஸ் வெளியே கிளம்ப அவனின் காரை வழிமறித்து நின்றனர் சிறுவர்கள்.. அவர்களைப் பார்த்த மனோ, ‘இவங்க எதுக்கு என்னோட காரை வழிமறித்து நிற்கின்றனர்..’ என்று யோசித்தவன் காரை விட்டு கீழே இறங்கியவன்,

“உங்களுக்கு எல்லாம் என்னடா வேண்டும்..?!” என்று இடது புருவம் உயர்த்தி அவன் அதிகாரமாகக் கேட்க அவனை பார்வையால் அளந்தனர் அந்த வாண்டுகள்..

மனோவைப் பார்த்த நிவாஸ், “நீதான் இந்த கன்ஸ்ட்ரக்ஷன் ஓனரா..?!” என்று அவனைப் போலவே இடது புருவம் உயர்த்தி கேட்டான்..

அவனைப் பார்த்த மனோ, ‘இத்துணுண்டு இருந்துட்டு இதுக்கு எல்லாம் திமிரைப் பாரு..’ என்று நினைத்தவன், “ஆமா நான் தான் இந்த கன்ஸ்ட்ரக்ஷன் ஓனர்..” என்று அவன் சொல்ல,

“ஓஓ நீதான் எங்களோட தென்றலைத் திட்டியதா..? தென்றல் அந்த கேள்வி கேட்க உனக்கு என்ன தைரியம்..?” என்று கேட்டான் சுனில்..

அவர்கள் தென்றலைப் பற்றி பேச காரில் சாய்ந்து நின்ற மனோ, “இந்த நிறுவனத்தில் பல தென்றல் வேலைப் பார்கிறார்கள் நீங்க எந்த தென்றலை சொல்றீங்க..?” என்று அவன் யோசனையோடு கேட்க,

“உன்னோட பி.ஏ. தென்றல்..” என்று அழுத்ததுடன் கூறினான் சிவசுதன்.. அவன் அழுத்தமாக சொன்னதும், ‘தென்றல் பற்றி பேசும் இவங்க எல்லாம் யாரு..?’ என்று மனோவின் மனதில் கேள்வி எழுந்தது..

“அவளைப் பற்றி பேச நீங்க யாருங்க ஸார்..” என்று அவன் குழந்தைகளைப் பார்த்து மரியாதையுடன் கேட்டதும்,

“நாங்கதான் தென்றலின் பெஸ்ட் பிரிண்ட்ஸ்.. என்னோட பெயர் நிவாஸ், சுனில், பிரதாப், ஷிவானி, ராகுல்..” என்று அவர்கள் தங்களின் பெயரைச் சொல்ல, மனோவிற்கு அதிர்ச்சி அதிகமாகவே இருந்தது..

அவர்கள் நின்ற தோரணையைப் பார்த்த மனோ, ‘இவனுங்க எல்லாம் ஸ்கூல் பசங்களா..?! இவனுங்களை வைத்துதான் என்னை கடுப்பேற்றினாளா..?!’ என்று நினைத்தவன் அவர்கள் உயரத்தைப் பார்த்து அவர்களின் வயதை கணக்கிட்டவன்,

“நீங்க எல்லாம் வந்தீங்க..?” என்று கேட்டதும், “பிரதாப் இவனுக்கு நக்கல் ரொம்ப ஓவராக இருக்கிறது..” என்று சுனில் சொல்ல, “டேய் என்னதான் இருந்தாலும் நம்ம தென்றல் வேலை செய்யும் ஓனரிடம் பேசுகிறோம்.. அவளுக்காக இவனுக்கு கொஞ்சம் மரியாதை கொடுக்கலாம்..” என்று ராகுல் கூறியதும்,

“என்ன தைரியம் இருந்தால் எங்க தென்றலைப் பார்த்து நீ அந்த கேள்வி கேட்பாய்..? அவளைப் பற்றி உனக்கு என்ன தெரியும்..?” என்று பிரதாப் அவளை போலவே கேட்க,

‘எனக்கு நல்ல வேண்டும்.. இவங்க எல்லாம் சின்ன பசங்க என்று தெரியாமல் அவளிடம் வாய்விட்டேனே.. எல்லாம் அவளைப் போலவே கேள்வி கேட்கிறது..’ என்று நினைத்தவன்,

“நீங்க எல்லாம் இவ்வளவு பெரிய ஆள் என்று எனக்கு தெரியாதுங்க ஸார்.. இனிமேல் உங்க தென்றலை நான் எதுவும் பேசல போதுமா..?” என்று அவன் அவர்களுக்கு மரியாதைக் கொடுத்துப் பேச,

“ம்ம் அந்த பயம் இருக்கட்டும்.. இனிமேல் அவள் அழுவது போல ஏதாவது பேசின அப்புறம் கையில் இருக்கும் ஸ்டெம்பை வைத்து உன்னோட மண்டையை பிளந்துவிடுவேன்..” என்று நிவாஸ் கோபத்தோடு சொல்ல மனோவிற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை..

அவனோட இடத்திற்கே வந்து அவனையே மிரட்டும் அந்த வாண்டுகளை நினைத்து அவன் மலைத்துப்போய் நிற்க, அலுவலகம் விட்டு வெளியே வந்த அனுவும், தென்றலும் அவர்களைப் பார்த்துவிட்டு அருகில் வந்தனர்..

அந்த ஐவரின் பக்கத்தில் வந்த தென்றல், “டேய் நீங்க எதுக்குடா இங்கே வந்தீங்க..?” என்று கேட்டதும், “இந்த இரும்பு மனிதனைப் பார்க்கத்தான்..” என்று அசராமல் பதில் சொன்னான் சுனில்..

அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியில் அனு மனோவைத் திரும்பிப் பார்க்க அவனோ தென்றலைக் கேள்வியாக நோக்கினான்.. அவளோ அதற்கு எல்லாம் பயப்படாமல், “இவனைப் பார்த்து நீங்க என்னடா செய்ய போறீங்க..” என்று கேட்டதும், “உன்னை அழுக வைத்தான் இல்ல அதுதான் இவனை ஒரு வழி பண்ணிட்டு போகலாம் என்று வந்தோம்..” என்று ராகுல் சொல்ல,

மனோவோ தென்றலின் பக்கம் திரும்பி, “நீ ஆபீஸ் உள்ளே மிரட்டுவது பத்தாது என்று.. ஆபீஸ் வெளியே வாண்டுகளை வைத்து மிரட்டுகிறாயா..?” என்று கேட்டதும்,

“எங்க கண்ணு முன்னாடியே நீ தென்றலை மிரட்டுகிறாய்..?! இது எல்லாம் நல்லதே இல்ல.. நான் எல்லா நேரமும் சும்மா இருக்க மாட்டேன்..” என்று நிவாஸ் மனோவிற்கு பதில் கொடுக்க தென்றல் வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தாள்..

அவள் சொன்னது போலவே அவளின் சிரிப்பை பார்த்த மனோ, ‘இவள் இப்படி சிரிப்பதைப் பார்த்து எத்தனை நாள் ஆச்சு..’ என்று நினைத்தவன் அவளின் சிரித்த முகத்தை அவனின் மனத்தில் பதிய வைத்தான்..
 




Last edited:

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அவள் சிரிப்பதைப் பார்த்து அவளின் அருகில் வந்த அனு, “அடியே சிரிக்காதே..” என்று அவளின் கையைப் பிடித்துக் கிள்ள, “அடியே கிள்ளாதே என்னால் சிரிப்பை அடக்கவே முடியலடி.. என்னை கொஞ்சம் புரிந்துக்கொள் அனு..” என்று சொன்னவள்

மனோவின் முகத்தைப் பார்த்துவிட்டு, “இவரிடம் என்னடா பேச்சு வாங்க போகலாம்..” என்று அவர்களை அழைத்துச் செல்ல அவர்களின் பின்னோடு சென்றாள் அனு..

அவர்களோடு இணைந்து நடந்த தென்றல், “டேய் அவனை திட்ட நீங்க நேரில் வருவீங்க என்று எனக்கு தெரியலடா..” என்று கூறியவள் சிரிக்க, “அவனோட இடத்திற்கே வந்து அவனையே மிரட்டும் உங்கள் தைரியத்தை நான் பாராட்டுகிறேன் டா” என்று சொல்ல, “தேங்க்ஸ் தென்றல்..” என்று எல்லாம் கோரஸ் பாடினர்..

அவர்கள் சென்றது தனது காரில் ஏறி சென்றவன் அவன் அறைக்கு சென்று வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தான்.. கண்களில் கண்ணீர் வரும் வரையில் சிரித்தவன், ‘ஐயோ புயல் என்னால முடியலடி.. நான் இந்த மாதிரி சிரித்து பதினேழு வருடம் ஆச்சு தேங்க்ஸ் டா தென்றல்..’ என்று மனதிற்குள் ஆவலுடன் பேசினான்..

அந்த நிகழ்விற்கு பிறகு நாட்கள் தெளிந்த நீரோடை போல செல்ல, அவளும் இப்பொழுது எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் புன்னகைக்க ஆரம்பித்தாள்..

காலையில் எழுவதற்கே பிடிக்காமல் படுக்கையில் புரண்டு கொண்டே படுத்திருந்தாள் தென்றல்.. அவளுக்கு இன்று ஆபீஸ் போகவே விருப்பம் இல்லை.. அது ஏன் என்று அவளுக்கு தெரியவில்லை..

அவள் மெதுவாக எழுந்து பல்லை விலக்கி குளித்துவிட்டு வந்த பிறகும் கூட அவளின் சோர்வு குறையாமல் இருக்க ஈர தலையுடன் அப்படியே படுத்து உறங்கிவிட்டாள்.. அவள் அன்று ஆபீஸ் போகவும் இல்லை.. லீவும் சொல்லவில்லை.. மெயில் மட்டும் பண்ணிவிட்டு படுத்து உறங்கிவிட்டாள்..

அவள் செல் அடிக்கும் சத்தம் கேட்டு மெல்ல கண்விழித்தவள் மணியைப் பார்க்க அது பத்தாக பத்து நிமிடம் தான் உள்ளது என்று அவளுக்கு எடுத்துரைக்க, “ஐயோ இனி நான் கிளம்பிப் போவதற்குள் இன்னும் அரை மணி நேரம் வேற ஆகுமே..” என்று புலம்பியவள்,

அவசர அவசரமாக எழுந்து கிளம்பியவள் சாப்பிடாமல் கூட ஆபீஸ் செல்ல அவளின்செல் அடித்துக் கொண்டே இருக்க, “இந்த பொன் கண்டு பிடித்தவனை கட்டிவைத்து உதைக்கணும்.. நம்ம அவசரமாக போன் பண்ணும் போது போனே போகாது.. நெட்வர்க் பிசி என்று வரும்..” என்று புலம்பிய வண்ணம் வண்டியை எடுத்தவள் வண்டி அடுத்து நின்ற இடம் அலுவலகம் தான்..

தென்றல் வண்டியை நிறுத்திவிட்டு அவசர அவசரமாக அலுவலகத்தின் உள்ளே நுழைந்தாள். அவள் வரவர தென்றலின் செல் அடிக்க, “ஸ்ஸ் எவண்டா அது காலையில் இருந்து போன் பண்ணிட்டே இருப்பது..?” என்று செல்லை எடுத்துப் பார்த்தவள் முகம் தாமரை மலரென மலர்ந்தது.. அந்த வேகத்துடன் அலுவலகத்தின் உள்ளே வந்தாள்..

எப்பொழுதும் போல அலுவலகத்தின் உள்ளே நுழைந்தவனின் பார்வை அவளின் இருக்கையை பார்த்துவிட்டு அவனது அறைக்குள் சென்று அமர்ந்தவன்,

அவளின் செல்லிற்கு அழைக்க அது அடித்ததே தவிர வேறு யாரும் எடுக்கவே இல்லை.. அவள் செல் அடித்தது.. அடித்ததுக் கொண்டே இருந்தது.. ஆனால் அவள் எடுக்கவே இல்லை.. என்ன விஷயம் என்று யோசிக்க ஆரம்பித்தவன்,

அங்கிருந்த இண்டர்காமில் அனுவை அழைத்தவன், “என்ன தென்றல் இன்னும் வரவே இல்லையா..? எதுக்கு லீவ் என்று ஏதாவது சொன்னாங்களா..?” என்று அவன் கேட்டதும்,

“தெரியல சார்.. எப்பொழுதும் இந்த நேரம் வந்திருப்பாள்.. இன்று ஏனோ இந்நேரம் ஆகியும் அவள் வரல..” என்று கூறியவள் போனை வைக்கவும் தென்றல் வரவும் சரியாக இருந்தது..

அந்த நேரம் உள்ளே வந்த தென்றல், “ஹாய் அனு செல்லம்..” என்று சொல்ல அவளை நிமிர்ந்துப் பார்த்த அனு, “என்னடி இன்னைக்கு இவ்வளவு லேட்டாக வருகிறாய்.. இரும்பு மனிதன் உன்னை கேட்டான்.. போ போய் பதில் சொல்லிட்டு வா..” என்று அவள் சொல்ல அவனின் அறையின் கதவைத் தட்டி அனுமதி பெற்றுக் கொண்டு உள்ளே நுழைந்தவள்,

“ஸாரி சார் இன்னைக்கு கொஞ்சம் லேட்டாகிடுச்சு.. இனிமேல் இப்படி நடக்காது..” என்று அவனைப் பார்க்காமல் பேசிய தென்றலையே பார்த்தான் மனோ.. அவள் முகத்தில் இருந்த சோர்வே சொல்லியது அவளுக்கு உடல்நிலை சரியில்லை என்று!

அவளின் முகத்தைப் பார்த்து மனதிற்குள், ‘இவளை வீட்டிற்கு போ என்று உரிமையாக சொல்லவும் என்னால் முடியாது.. அப்படியே சொன்னாலும் அவள் கேட்க மாட்டாள்.. வீம்பாக வேலை செய்வாள்.. அனுவிடம் சொல்லலாம் என்றால் அவள் என்ன நினைப்பாள் என்றே தெரியல.. இப்போ என்ன பண்ணுவது..?’ என்று யோசித்தவன்,

“உங்களுக்கு எல்லாம் எத்தனை முறைதான் சொல்வது.. லேட்டாக வாராதீங்க என்று.. நீங்க இன்னைக்கு லேட்டாக வந்து என்னிடம் காரணம் சொல்லிட்டு நீங்க போய் உங்க வேலையைப் பார்ப்பீங்க.. நாளை இதே காரணத்தை சொல்லிட்டு வேற யாராவது வந்து நிற்பாங்க.. உங்களோட காரணங்களைக் கேட்கத்தான் நான் இங்கே இருக்கிறேனா..?!” என்று கத்தியவன் குரலைக்கேட்டு எதுவும் பேசாமல் நின்றாள்..

அவளுக்கு தெரியும், ‘இவன் இப்படித்தான்..’ என்று..! அதனால் அவள் அவனின் வார்த்தைகளில் பாதிக்கப்படவே இல்ல.. அவன் பேசிட்டு இருக்க இவள் காதில் வாங்காமல் நின்றிருக்க, “போங்க இன்னைக்கு போய் வீட்டில் தூங்கி எழுந்து நாளைக்கு நேரத்திற்கு வர பாருங்கள்..” என்று சொல்ல அப்பொழுது அவனின் முகத்தை நிமிர்ந்துப் பார்த்த தென்றல்,

“ஹலோ சார்.. என்னோட செல்லில் அரைமணி நேரத்தில் அறுபது கால் என்ட்ரி ஆகிருக்கிறது..?! இது உங்களின் மொபைல் நம்பர் தானே..?! தேவை இல்லாமல் அழைக்க உங்களுக்கு என்ன லூஸா பிடித்திருக்கிறது..?” என்று கேட்டவளின் முகத்தை நிமிர்ந்துப் பார்த்தவன் அவனின் இருக்கையில் இருந்து எழுந்து வந்தான்..

அவன் வருவதைப் பார்த்து அவள் மனதில் பயம் ஏழ, அவளின் அருகில் வந்த மனோ, “இப்படி எல்லாம் பொய் சொல்ல கூடாது..” என்று அவன் அழுத்ததுடன் சொல்ல, அவனை நிமிர்ந்துப் பார்த்தாள் தென்றல்..

அவளின் முகத்தில் இருந்த கேள்வியைப் படித்தவன், “இருபது கால்ஸ் தான் நான் பண்ணினேன்.. அது உனக்கு எப்படி அறுபது ஆச்சு..” என்று கேட்டவனின் குரலில் இருந்த மாற்றத்தை தென்றல் கவனிக்கவே செய்தாள்..

“என்னோட பி.ஏ. நீங்கதான்.. உங்களுக்கு நான்தான் அழைப்பேன்.. சோ நேரத்திற்கு வந்து பழகுங்க.. இன்று நீங்கள் போகலாம்..” என்று அவன் வாசலை நோக்கி கைகாட்ட, ‘ம்ம் ரொம்பத்தான்..’ என்று நினைத்தவள் அவனின் அறையை விட்டு வெளியே சென்றாள்..

அவள் அறையைவிட்டு சென்றதும், ‘இவ்வளவு முடியல என்று தெரியுது.. அப்புறம் எதற்கு வேலைக்கு கிளம்பி வரணும்..’ என்று அவன் மனதில் நினைக்க, “எல்லாம் நீங்க திட்டுவீங்க என்று தான்..” என்று கூறியவளின் குரலைக்கேட்டு திடுக்கிட்டவன் அவளை நிமிர்ந்து பார்க்க, “தேங்க்ஸ் ஸார்..” என்று கூறியவள் அவனின் அறையின் கதவை மூடிவிட்டு சென்றாள்..

‘அடியே புயல் உன்னை என்ன செய்வது என்று எனக்கே தெரியல..’ என்று நினைத்தவன், அவனின் வேலைகளைக் கவனிக்க சென்றான்..
 




Last edited:

Nadarajan

முதலமைச்சர்
Joined
Apr 28, 2018
Messages
5,558
Reaction score
6,007
Location
Tamilnadu
குட்டீஸ் பண்ணும் சேட்டை சூப்பர். ரொம்பவே தைரியம் தான் மனோ ஆபீஸ்கே வந்து பசங்க சண்டை போடுறாங்க
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top