மனோரஞ்சன் – இளந்தென்றல் திருமணத்திற்கு உங்களை அன்போடு அழைப்பது உங்களின் சந்தியா ஸ்ரீ. அனைவரும் திருமணத்தில் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்துமாறு கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு உங்களின் வரவை எதிர்பார்க்கும் அன்பு உள்ளம் கொண்ட உங்களின் தோழி சந்தியா ஸ்ரீ
அத்தியாயம் – 16
அதற்கு பிறகு நாட்கள் விரைந்தோடிச் செல்ல ஒரு நல்ல நாலாகப் பார்த்து தன்னுடைய தாத்தா, சாரு, ரிஷி மூவரையும் அழைத்துக்கொண்டு தென்றலைப் பெண்கேட்டு வந்தான் மனோ.
அவர்களை வரவேற்ற ஷீலாம்மா வீட்டின் ஹாலில் இருக்கும் சோபாவில் அமரவைத்து பேசிக்கொண்டு இருக்க தென்றலுக்கு அனு அலங்காரம் செய்துக் கொண்டிருந்தாள்..
ஷீலாம்மா ஒரு சோபாவில் அமர்ந்திருக்க இன்னொரு சோபாவில் ராஜசேகரும், மனோவும் அமர, அதற்கு அடுத்த சோபாவில் ரிஷியும், சாருவும் அமர்ந்தனர்.
வீட்டின் உள்ளே நுழைந்ததும் மனோவின் பார்வை தென்றலைத் தேடியதைக் கவனித்த நிவாஸ் அவனின் அருகில் சென்றவன், “மாமா அக்காவுக்கு உள்ளே அலங்காரம் நடக்குது..” என்று மனோவிற்கு தகவல் தெரிவித்தான்..
அவனின் அருகில் குனிந்த மனோ, “தேங்க்ஸ் நிவாஸ் குட்டி..” என்று சொல்ல, “என்ன மனோ குட்டி பையனிடம் ரகசியம் பேசுகிறாய்..?!” என்று குறும்பாகக் கேட்டாள் சாரு..
மனோ அவளுக்கு பதில் சொல்லும் முன்னாடியே, “மாமானுக்கும் மாப்பிள்ளைக்கு நடுவே ஆயிரம் இருக்கும்.. அது எல்லாம் உங்களிடம் சொல்ல முடியுமா..?” என்று கேட்டதும் சாரு, “டேய் நீதானே அன்னைக்கு என்னோட மனோவோட மண்டையை உடைக்கிறேன் என்று சொன்னாய்..?” என்று கேட்டதும்,
“அது அன்னைக்கு சொன்னேன்..” என்று அவன் இழுக்க இவர்கள் இருவரின் இடையே நடக்கும் பேச்சு வார்த்தையை உள்ளிருந்து கவனித்த தென்றல் சிரிக்க, “என்னடி தென்றல் என்ன சிரிப்பு..” என்று கேட்டாள் அனு..
“அங்கே நிவாஸ் என்ன கேள்வி கேட்கிறான் பாரு..” என்று சொல்ல, “எல்லாம் எங்களுக்கும் கேட்கிறது நீ நேராக உட்காரு தலைபின்னனும்..” என்று அனு சொல்ல கண்ணாடியைப் பார்த்தவண்ணம் அமர்ந்தாள் தென்றல்..
“அது அன்னைக்கு இன்னைக்கு என்னடா பதில்..” என்று நிவாஸிடம் கேட்டாள் சாரு.. அதுக்கு அவன் சொன்ன பதில் இருக்கே, “நாங்க குழந்தைகள் எங்களின் முடிவும் அரசியல்வாதியின் முடிவும் ஒரே மாதிரி.. எந்த நேரம் என்ன பேசுவோம், என்ன செய்வோம் என்று எங்களுக்கு தெரியாது..” என்று நிவாஸ் சொன்னதைக் கேட்ட தென்றல்,
“ஐயோ சரிக்கு சரி வாயடிக்கிறான் இந்த நிவாஸ்..” என்று சொல்ல, “மாமா அந்த அக்காகிட்ட சொல்லி வைங்க..” என்று சுனிலைப் புரியாமல் பார்த்தான் மனோ..
“என்ன கண்ணா சொல்லி வைக்கணும்..” என்று ராஜசேகர் பணிவாகக் கேட்டதும், “எங்களோட வழியில் அவர்களை தலையிட வேண்டாம் என்று சொல்லுங்க தாத்தா..” என்றான் சுனில்..
“இதுக்கு நீயேன்ன சொல்கிறாய் சாரு..” என்று அவர் அவளைப் பார்த்து கேள்வி கேட்டதும், “தலையைத்தானே விடக்கூடாது.. மூக்கை நுழைக்கலாம் இல்ல..” என்று கேட்டதும் அவளின் அருகில் சென்ற நிவாஸ், “அக்கா கொஞ்சம் குனிங்க..” என்று சொல்ல, “என்னடா..” என்று கேட்டுக் கொண்டே குனிந்தாள்..
அவளின் கன்னத்தில் முத்தமிட்ட நிவாஸ், “நீங்க நல்ல பேசறீங்க.. அப்படியே எங்க தென்றல் அக்கா மாதிரி.. அதனால் நீங்களும் எங்களோட கேங்தான்..” என்று அவன் சொல்ல,
அவனைத் தூக்கி மடியில் அமரவைத்த ரிஷி, “டேய் என்னடா இப்படி பொசுக்குன்னு போஸ்டிங் கொடுத்துடீங்க..?” என்று கேட்டதும், “நாங்க இப்பொழுது தானே சொன்னோம்.. எங்க முடிவு அடிக்கடி மாறிட்டே இருக்கும்..” என்று சொல்ல அவனின் கன்னத்தில் முத்தம் பதித்த ரிஷி,
“நிவாஸ் நானும் இவளைக் கல்யாணம் பண்ணிய நாளில் இருந்து இவளின் வாயை அடிக்கணும் என்று பார்க்கிறேன் என்னால முடியாதை நீ செய்துவிட்டாய்..” என்று சொல்ல அவனின் மீது சாய்ந்து அவனின் முகத்தைப் பார்த்தான்..
“இது எல்லாம் எங்களுக்கு ஜுஜிபி மேட்டர்..” என்றவன், “மாமா எனக்கு இவரை பிடித்திருக்கிறது.. இவங்க மொத்தம் உன்னோட கேங் தான் செல்லம்..” என்று மனோ கூறினான்.. அவனின் மடியில் சுனில் அமர்ந்து கொள்ள மனோவின் அருகில் ராகுல் அமர்ந்து கொண்டான்..
ஷிவானி பிரதாப் இருவரும் அங்கிருந்த குட்டி சேரில் அமர்ந்திருக்க குழந்தைகள் பேசுவதைப் பார்த்து தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர் அவர்களின் பெற்றோர்.. ஷீலாம்மா ராஜசேகருடன் பேசிக்கொண்டிருந்தார்..
நம்ம பஞ்சபண்டவர் மனோவிடம் அமர்ந்துக் கதைபேசிக் கொண்டிருக்க அதைப் பார்த்த தென்றல், “அங்கே பாரு அனு.. எல்லா வாண்டுகளும் அவனுக்கு பக்கத்தில் உட்கார்ந்து பேசிட்டு இருக்குதுங்க..” என்று கூறினாள் தென்றல்
அவளின் தலையில் மல்லிகை பூவைச்சூடிய அனு, “என்ன தென்றல் பொறாமையா..?” என்று சிரிப்புடன் கேட்டதும், “கொஞ்சம் அனு..” என்று அவள் சிரிப்புடன் சொல்ல அவளின் முகத்தைப் பார்த்த அனு, “நீ பொறாமை படவில்லை என்றால் தான் அதிசயம்..” என்று கூறியவள்
கண்ணாடியில் தென்றலின் முகத்தைப் பார்த்து, “நீ ரொம்ப அழகாக இருக்கிறாய் தென்றல்..” என்று கூறியதும், கண்ணாடியில் தன்னுடைய கோலத்தைப் பார்த்தாள் தென்றல்..
ஆரஞ்சு கலரில் பச்சை வண்ண கரையுள்ள உள்ள சேலை கட்டி நேரெடுத்து கூந்தலைத் தளர்வாக பின்னலிட்டு அதில் மல்லிகை பூச்சூடி கண்களுக்கு அழகாக மையிட்டு மூக்கில் மூக்குத்தி மின்ன கழுத்தில் ஒரு சின்ன செயின் போட்டி கைகளில் கண்ணாடி கண்ணாடி வளையல்கள் போட்டிருக்க நெற்றியில் சின்னதாக ஒரு ஸ்டிக்கர் போட்டும் வைத்திருக்க கண்களுக்கு ஸ்பெக்ஸ் போட்டிருந்தாள்.. அவளின் அழகிற்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் அவளின் இதழ்களில் புன்னகை மலர்ந்திருந்தது..
தென்றல் தன்னை மெய்மறந்து கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருக்க, “ஏய் என்னடி மெய்மறந்து நீயே உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்..” என்று கேட்டதும், அனுவை நிமிர்ந்துப் பார்த்த தென்றல்..
“இல்லடி அலங்காரம் பண்ணுகிறேன் என்று சொல்லி என்னை இந்நேரம் வரையில் பாடாய் படுத்திவிட்டு இப்படி அலங்கோலம் பண்ணி வைத்திருக்கிறாயே இது உனக்கே நியாயமா..?” என்று தென்றல் சிரிக்காமல் கேட்டதும் அவளின் கண்ணில் இருந்த குறும்பைக் கண்ட அனுபமா
“ஒஹ் இதுதான் உங்களின் ஊரில் அலங்கோலமா..? இன்னொருமுறை நான் அலங்கோலம் பண்ணட்டுமா..?” என்று அனு அவளைப் பார்த்துக் கேலியாகக் கேட்டதும், “அம்மா தாயே வேண்டாம்.. இதுவே நல்லத்தான் இருக்கு.. என்னை ஆளை விடுமா..” என்று அவள் கெஞ்சவும், “அந்த பயம் இருக்கணும்..” என்று சொல்ல,
“அனு தென்றலை அழைத்துவா..” என்று ஹாலில் இருந்து குரல் கொடுத்தாள் ராதா.. அவரின் குரல் கேட்ட தென்றல், “எனக்கு ஒரு சந்தேகம் அனு..” என்று கூறிய தென்றலைக் கேள்வியாகப் பார்த்தாள் அனு..
“இல்ல இந்த டீ கொடுக்கும் பத்து நிமிசத்தில் அவன்தான் எனக்கு எல்லாம் என்று எல்லோரும் எப்படி முடிவேடுக்கிறாங்க..” என்று கேட்டதும் அனு அவளை முறைத்தாள்..
அவளின் முறைப்பைப் பார்த்த தென்றல், “ஏன் கேட்கிறேன் என்றால் காலேஜில் ஒரு குரூப் எடுக்க நாம் எந்த அளவுக்கு யோசிக்கிறோம்.. கல்யாணம் என்று வந்தால் மட்டும் காபி டம்ளாரை கையில் கொடுத்து அதை கொடுக்கும் பத்து நிமிஷத்தில் அவன்தான் எனக்கு எல்லாம் என்று எப்படி எல்லோரும் முடிவேடுக்கறாங்க..?” என்று கேட்டதும் தென்றலை முறைத்த அனு,
“இந்த கேள்விக்கு பதிலை நான் ஷீலாம்மாகிட்ட கேட்டு சொல்லவா தென்றல்..?” என்று அனு கோபமாகக் கேட்க, “ஒருத்தங்க அறிவாக யோசித்தால் உங்களுக்கு எல்லாம் பிடிக்காதே..” என்று அவள் உதட்டைப் பிதுக்கியபடியே கூறிய தென்றலைப் பார்த்த அனு..
“இப்பொழுது தானே தெரியுது..” என்று அனு கூறியதும் தன்னை கண்ணாடியில் ஆராய்ந்த தென்றல், “என்னடி தெரியுது..?!” என்று கேட்டதும், “மனோ எதுக்கு அதிரடியாக உன்னை சம்மதிக்க வைத்தார் என்று நான் கூட யோசனை செய்தேன்.. உன்னை யோசிக்க விட்டால் உன்னோட மூளையில் இருக்கும் களிமண்ணை வைத்து நீ தப்பு தப்பாக யோசித்து அதை செய்யவும் செய்வ என்று அவருக்கு தெரிந்துவிட்டது போல.. அதுதான் உன்னை யோசிக்கவே இடம் கொடுக்காமல் பொண்ணு கேட்டு வந்துவிட்டார்..” என்று அனு மூச்சு விட்டாமல் சொல்ல இப்பொழுது அனுவை முறைப்பது தென்றலின் முறையானது..
“உன்னோட முறைப்புக்கெல்லாம் பயப்பட நான் ஆள் இல்லை..” என்றவள் தென்றலின் கையில் காபி டம்ளர் வைத்த தட்டிக் கொடுத்தவள், “என்னிடம் கேட்ட கேள்வியை யோசிச்சிட்டே போய் காபியைக் கொடும்மா..” என்று கூறினாள் அனு..
அவளிடம் தட்டை வாங்கிய தென்றல், “அதை எதுக்கு நான் யோசிக்கணும்..?” என்று கேட்டதும், “உன்னோட அந்த சந்தேகம் எனக்கும் இருக்கு.. உனக்கு விடை கிடைத்தால் எனக்கு சொல்லிக் கொடுப்பாய் இல்ல அதுதான்..” என்று அனு சிரிக்காமல் கூறினாள்
அனுவை முறைத்த தென்றல், “என்னோட கையில் என்ன இருக்கிறது என்று பாரு..” என்று சொல்ல, “அது ஆறிப்போகும் முன்னால் கொண்டு போய் கொடு..” என்று சொல்லி தென்றலுக்கு பிபியை ஏற்றினாள் அனு..
அத்தியாயம் – 16
அதற்கு பிறகு நாட்கள் விரைந்தோடிச் செல்ல ஒரு நல்ல நாலாகப் பார்த்து தன்னுடைய தாத்தா, சாரு, ரிஷி மூவரையும் அழைத்துக்கொண்டு தென்றலைப் பெண்கேட்டு வந்தான் மனோ.
அவர்களை வரவேற்ற ஷீலாம்மா வீட்டின் ஹாலில் இருக்கும் சோபாவில் அமரவைத்து பேசிக்கொண்டு இருக்க தென்றலுக்கு அனு அலங்காரம் செய்துக் கொண்டிருந்தாள்..
ஷீலாம்மா ஒரு சோபாவில் அமர்ந்திருக்க இன்னொரு சோபாவில் ராஜசேகரும், மனோவும் அமர, அதற்கு அடுத்த சோபாவில் ரிஷியும், சாருவும் அமர்ந்தனர்.
வீட்டின் உள்ளே நுழைந்ததும் மனோவின் பார்வை தென்றலைத் தேடியதைக் கவனித்த நிவாஸ் அவனின் அருகில் சென்றவன், “மாமா அக்காவுக்கு உள்ளே அலங்காரம் நடக்குது..” என்று மனோவிற்கு தகவல் தெரிவித்தான்..
அவனின் அருகில் குனிந்த மனோ, “தேங்க்ஸ் நிவாஸ் குட்டி..” என்று சொல்ல, “என்ன மனோ குட்டி பையனிடம் ரகசியம் பேசுகிறாய்..?!” என்று குறும்பாகக் கேட்டாள் சாரு..
மனோ அவளுக்கு பதில் சொல்லும் முன்னாடியே, “மாமானுக்கும் மாப்பிள்ளைக்கு நடுவே ஆயிரம் இருக்கும்.. அது எல்லாம் உங்களிடம் சொல்ல முடியுமா..?” என்று கேட்டதும் சாரு, “டேய் நீதானே அன்னைக்கு என்னோட மனோவோட மண்டையை உடைக்கிறேன் என்று சொன்னாய்..?” என்று கேட்டதும்,
“அது அன்னைக்கு சொன்னேன்..” என்று அவன் இழுக்க இவர்கள் இருவரின் இடையே நடக்கும் பேச்சு வார்த்தையை உள்ளிருந்து கவனித்த தென்றல் சிரிக்க, “என்னடி தென்றல் என்ன சிரிப்பு..” என்று கேட்டாள் அனு..
“அங்கே நிவாஸ் என்ன கேள்வி கேட்கிறான் பாரு..” என்று சொல்ல, “எல்லாம் எங்களுக்கும் கேட்கிறது நீ நேராக உட்காரு தலைபின்னனும்..” என்று அனு சொல்ல கண்ணாடியைப் பார்த்தவண்ணம் அமர்ந்தாள் தென்றல்..
“அது அன்னைக்கு இன்னைக்கு என்னடா பதில்..” என்று நிவாஸிடம் கேட்டாள் சாரு.. அதுக்கு அவன் சொன்ன பதில் இருக்கே, “நாங்க குழந்தைகள் எங்களின் முடிவும் அரசியல்வாதியின் முடிவும் ஒரே மாதிரி.. எந்த நேரம் என்ன பேசுவோம், என்ன செய்வோம் என்று எங்களுக்கு தெரியாது..” என்று நிவாஸ் சொன்னதைக் கேட்ட தென்றல்,
“ஐயோ சரிக்கு சரி வாயடிக்கிறான் இந்த நிவாஸ்..” என்று சொல்ல, “மாமா அந்த அக்காகிட்ட சொல்லி வைங்க..” என்று சுனிலைப் புரியாமல் பார்த்தான் மனோ..
“என்ன கண்ணா சொல்லி வைக்கணும்..” என்று ராஜசேகர் பணிவாகக் கேட்டதும், “எங்களோட வழியில் அவர்களை தலையிட வேண்டாம் என்று சொல்லுங்க தாத்தா..” என்றான் சுனில்..
“இதுக்கு நீயேன்ன சொல்கிறாய் சாரு..” என்று அவர் அவளைப் பார்த்து கேள்வி கேட்டதும், “தலையைத்தானே விடக்கூடாது.. மூக்கை நுழைக்கலாம் இல்ல..” என்று கேட்டதும் அவளின் அருகில் சென்ற நிவாஸ், “அக்கா கொஞ்சம் குனிங்க..” என்று சொல்ல, “என்னடா..” என்று கேட்டுக் கொண்டே குனிந்தாள்..
அவளின் கன்னத்தில் முத்தமிட்ட நிவாஸ், “நீங்க நல்ல பேசறீங்க.. அப்படியே எங்க தென்றல் அக்கா மாதிரி.. அதனால் நீங்களும் எங்களோட கேங்தான்..” என்று அவன் சொல்ல,
அவனைத் தூக்கி மடியில் அமரவைத்த ரிஷி, “டேய் என்னடா இப்படி பொசுக்குன்னு போஸ்டிங் கொடுத்துடீங்க..?” என்று கேட்டதும், “நாங்க இப்பொழுது தானே சொன்னோம்.. எங்க முடிவு அடிக்கடி மாறிட்டே இருக்கும்..” என்று சொல்ல அவனின் கன்னத்தில் முத்தம் பதித்த ரிஷி,
“நிவாஸ் நானும் இவளைக் கல்யாணம் பண்ணிய நாளில் இருந்து இவளின் வாயை அடிக்கணும் என்று பார்க்கிறேன் என்னால முடியாதை நீ செய்துவிட்டாய்..” என்று சொல்ல அவனின் மீது சாய்ந்து அவனின் முகத்தைப் பார்த்தான்..
“இது எல்லாம் எங்களுக்கு ஜுஜிபி மேட்டர்..” என்றவன், “மாமா எனக்கு இவரை பிடித்திருக்கிறது.. இவங்க மொத்தம் உன்னோட கேங் தான் செல்லம்..” என்று மனோ கூறினான்.. அவனின் மடியில் சுனில் அமர்ந்து கொள்ள மனோவின் அருகில் ராகுல் அமர்ந்து கொண்டான்..
ஷிவானி பிரதாப் இருவரும் அங்கிருந்த குட்டி சேரில் அமர்ந்திருக்க குழந்தைகள் பேசுவதைப் பார்த்து தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர் அவர்களின் பெற்றோர்.. ஷீலாம்மா ராஜசேகருடன் பேசிக்கொண்டிருந்தார்..
நம்ம பஞ்சபண்டவர் மனோவிடம் அமர்ந்துக் கதைபேசிக் கொண்டிருக்க அதைப் பார்த்த தென்றல், “அங்கே பாரு அனு.. எல்லா வாண்டுகளும் அவனுக்கு பக்கத்தில் உட்கார்ந்து பேசிட்டு இருக்குதுங்க..” என்று கூறினாள் தென்றல்
அவளின் தலையில் மல்லிகை பூவைச்சூடிய அனு, “என்ன தென்றல் பொறாமையா..?” என்று சிரிப்புடன் கேட்டதும், “கொஞ்சம் அனு..” என்று அவள் சிரிப்புடன் சொல்ல அவளின் முகத்தைப் பார்த்த அனு, “நீ பொறாமை படவில்லை என்றால் தான் அதிசயம்..” என்று கூறியவள்
கண்ணாடியில் தென்றலின் முகத்தைப் பார்த்து, “நீ ரொம்ப அழகாக இருக்கிறாய் தென்றல்..” என்று கூறியதும், கண்ணாடியில் தன்னுடைய கோலத்தைப் பார்த்தாள் தென்றல்..
ஆரஞ்சு கலரில் பச்சை வண்ண கரையுள்ள உள்ள சேலை கட்டி நேரெடுத்து கூந்தலைத் தளர்வாக பின்னலிட்டு அதில் மல்லிகை பூச்சூடி கண்களுக்கு அழகாக மையிட்டு மூக்கில் மூக்குத்தி மின்ன கழுத்தில் ஒரு சின்ன செயின் போட்டி கைகளில் கண்ணாடி கண்ணாடி வளையல்கள் போட்டிருக்க நெற்றியில் சின்னதாக ஒரு ஸ்டிக்கர் போட்டும் வைத்திருக்க கண்களுக்கு ஸ்பெக்ஸ் போட்டிருந்தாள்.. அவளின் அழகிற்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் அவளின் இதழ்களில் புன்னகை மலர்ந்திருந்தது..
தென்றல் தன்னை மெய்மறந்து கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருக்க, “ஏய் என்னடி மெய்மறந்து நீயே உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்..” என்று கேட்டதும், அனுவை நிமிர்ந்துப் பார்த்த தென்றல்..
“இல்லடி அலங்காரம் பண்ணுகிறேன் என்று சொல்லி என்னை இந்நேரம் வரையில் பாடாய் படுத்திவிட்டு இப்படி அலங்கோலம் பண்ணி வைத்திருக்கிறாயே இது உனக்கே நியாயமா..?” என்று தென்றல் சிரிக்காமல் கேட்டதும் அவளின் கண்ணில் இருந்த குறும்பைக் கண்ட அனுபமா
“ஒஹ் இதுதான் உங்களின் ஊரில் அலங்கோலமா..? இன்னொருமுறை நான் அலங்கோலம் பண்ணட்டுமா..?” என்று அனு அவளைப் பார்த்துக் கேலியாகக் கேட்டதும், “அம்மா தாயே வேண்டாம்.. இதுவே நல்லத்தான் இருக்கு.. என்னை ஆளை விடுமா..” என்று அவள் கெஞ்சவும், “அந்த பயம் இருக்கணும்..” என்று சொல்ல,
“அனு தென்றலை அழைத்துவா..” என்று ஹாலில் இருந்து குரல் கொடுத்தாள் ராதா.. அவரின் குரல் கேட்ட தென்றல், “எனக்கு ஒரு சந்தேகம் அனு..” என்று கூறிய தென்றலைக் கேள்வியாகப் பார்த்தாள் அனு..
“இல்ல இந்த டீ கொடுக்கும் பத்து நிமிசத்தில் அவன்தான் எனக்கு எல்லாம் என்று எல்லோரும் எப்படி முடிவேடுக்கிறாங்க..” என்று கேட்டதும் அனு அவளை முறைத்தாள்..
அவளின் முறைப்பைப் பார்த்த தென்றல், “ஏன் கேட்கிறேன் என்றால் காலேஜில் ஒரு குரூப் எடுக்க நாம் எந்த அளவுக்கு யோசிக்கிறோம்.. கல்யாணம் என்று வந்தால் மட்டும் காபி டம்ளாரை கையில் கொடுத்து அதை கொடுக்கும் பத்து நிமிஷத்தில் அவன்தான் எனக்கு எல்லாம் என்று எப்படி எல்லோரும் முடிவேடுக்கறாங்க..?” என்று கேட்டதும் தென்றலை முறைத்த அனு,
“இந்த கேள்விக்கு பதிலை நான் ஷீலாம்மாகிட்ட கேட்டு சொல்லவா தென்றல்..?” என்று அனு கோபமாகக் கேட்க, “ஒருத்தங்க அறிவாக யோசித்தால் உங்களுக்கு எல்லாம் பிடிக்காதே..” என்று அவள் உதட்டைப் பிதுக்கியபடியே கூறிய தென்றலைப் பார்த்த அனு..
“இப்பொழுது தானே தெரியுது..” என்று அனு கூறியதும் தன்னை கண்ணாடியில் ஆராய்ந்த தென்றல், “என்னடி தெரியுது..?!” என்று கேட்டதும், “மனோ எதுக்கு அதிரடியாக உன்னை சம்மதிக்க வைத்தார் என்று நான் கூட யோசனை செய்தேன்.. உன்னை யோசிக்க விட்டால் உன்னோட மூளையில் இருக்கும் களிமண்ணை வைத்து நீ தப்பு தப்பாக யோசித்து அதை செய்யவும் செய்வ என்று அவருக்கு தெரிந்துவிட்டது போல.. அதுதான் உன்னை யோசிக்கவே இடம் கொடுக்காமல் பொண்ணு கேட்டு வந்துவிட்டார்..” என்று அனு மூச்சு விட்டாமல் சொல்ல இப்பொழுது அனுவை முறைப்பது தென்றலின் முறையானது..
“உன்னோட முறைப்புக்கெல்லாம் பயப்பட நான் ஆள் இல்லை..” என்றவள் தென்றலின் கையில் காபி டம்ளர் வைத்த தட்டிக் கொடுத்தவள், “என்னிடம் கேட்ட கேள்வியை யோசிச்சிட்டே போய் காபியைக் கொடும்மா..” என்று கூறினாள் அனு..
அவளிடம் தட்டை வாங்கிய தென்றல், “அதை எதுக்கு நான் யோசிக்கணும்..?” என்று கேட்டதும், “உன்னோட அந்த சந்தேகம் எனக்கும் இருக்கு.. உனக்கு விடை கிடைத்தால் எனக்கு சொல்லிக் கொடுப்பாய் இல்ல அதுதான்..” என்று அனு சிரிக்காமல் கூறினாள்
அனுவை முறைத்த தென்றல், “என்னோட கையில் என்ன இருக்கிறது என்று பாரு..” என்று சொல்ல, “அது ஆறிப்போகும் முன்னால் கொண்டு போய் கொடு..” என்று சொல்லி தென்றலுக்கு பிபியை ஏற்றினாள் அனு..
Last edited: