அத்தியாயம் – 2
அவள் நிற்பதை பார்த்து புரியாமல் நின்ற மனோ அவளின் கேள்வி புரிய, “எனக்கு கண்ணு இரண்டும் நல்லாவே இருக்கிறது.. உனக்கு தான் பைத்தியம் கிளம்பிடுச்சு போல..” என்று அவன் பதில் கூறவே கோபத்தில் அவனை முறைத்தாள் தென்றல்..
“ஆமா எனக்குதான் பைத்தியம் நான்தான் வேண்டுமென்றே உன்னோட வண்டியின் குறுக்கே வந்து விழுந்தேன் பாரு.. செய்வது ஃபிராடு தனம் இதில் இவனுங்க எல்லாம் நியாயம் பேச வந்துட்டாங்க..” என்று அவளும் அவனை மரியாதை இல்லாமல் பேசினாள்..
பிரதாப்போ தென்றலையும், மனோவையும் மாறிமாறிப் பார்த்தான்.. அவனுக்கு தெரியும் தென்றலுக்கு எப்பொழுதும் கோபத்தைப் பிடித்து வைக்க தெரியாது.. கோபம் வந்தால் சண்டை போடுவாள் ஆனால் அடுத்த நொடியே அனைத்தையும் மறந்து விடுவாள்..
அவளைப் பார்த்துக் கொண்டிருந்த பிரதாப் மனோவைப் பார்த்ததும், ‘இந்த அண்ணா என்ன செய்ய போறாங்களோ தெரியலையே..?!’ என்று மனதிற்குள் நினைத்தவனின் பார்வை மனோவை பயத்துடனே பார்த்தது..
அவள் தன்னை மரியாதை இல்லாமல் பேசுவதைக் கவனிக்காதவன் அவளைப் பார்வையால் அளந்தான்.. பிறது தன் மனதிற்குள், ‘இவள் எதுக்கு பழைய படத்தில் வரும் விஜயசாந்தி ரேஞ்சில் நிற்கிறாள்..?!’ என்று யோசிக்க,
அவனின் மனமோ, ‘டேய் மடையா இப்போ உனக்கு அவள் விஜயசாந்தி ரேஞ்சில் நிற்பதா முக்கியம்..?! உன்னோட கார் கண்ணாடியை எதுக்கு உடைத்தாள் என்று கேளுடா..’ என்று சொல்ல அவளைப் பார்த்தவனுக்கு, ‘இப்படியும் ஒரு பொண்ணு இருப்பாளா..?’ என்றே தோன்றியது..
“ஏய் இப்பொழுது எதற்கு கார் கண்ணாடியை உடைத்தாய்..?!” என்று கேட்டவனின் குரலில் அதிகாரம் அதிகமாகவே வெளிப்பட்டது..
அவனின் குரலில் அதிகாரத்தை நொடியில் கண்டுக்கொண்ட தென்றல், “என்ன ரொம்ப அதிகாரமாக கேட்கிறாய்.. ஆமா நான் தான் உடைத்தேன்.. ஒன்வே என்பது தெரியாமல் நீ வந்து என்னை இடிச்சு கீழே தள்ளிவிட்டு எதுவும் தெரியாதது போல போவ.. நான் பார்த்துட்டு சும்மா இருக்கணுமா..?!” என்று கேட்டாள்..
அவள் தெனாவெட்டாக நிற்பதைப் பார்த்தவன், ‘எனக்கு முன்னாடி என்னோட எதிரிங்க கூட நடுங்குவாங்க.. இவள் பாரு என்ன தெனாவெட்டாக நிற்கிறாள்..?!’ என்று மனதில் நினைத்தவன்,
அவளின் பேச்சைக் கேட்ட மனோ கொஞ்சம் கூட அதிராமல், “அதுக்கு என்னோட கார் கண்ணாடியை உடைப்பாயா..? அதைப் பார்த்துவிட்டு நான் சும்மா போகணும் என்று சொல்கிறாயா..? இதை யார் சரி செய்வது..?! அதற்கு ஏற்படும் செலவை யார் ஏற்பது..?!” என்று கேட்டதும்,
அவனைப் பார்த்த தென்றலுக்கு கோபம் எல்லை கடக்க, “உன்னோட கார் கண்ணாடி உடைந்தது என்று இந்த குதிக் குதிக்கிறீயே..? நீ இடித்த இடியில் நான் பரலோகம் போன எங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு நீயா வந்து பதில் சொல்வாய்..? இல்ல என்னோட இழப்பை சரி செய்வாயா..?” என்று கோபத்தில் கேட்டாள் தென்றல்..
அவளின் வார்த்தைகளைக் கேட்ட பிரதாப், ‘தென்றலுக்கு வீடு மட்டும் தானே இருக்கிறது.. அங்கே யார் இருக்காங்க.. அதுதான் யாருமே இல்லையே..’ என்று யோசித்தவன், ‘என்னோட தென்றல் இப்படியெல்லாம் பேச மாட்டாளே..?!’ என்று யோசித்துக் கொண்டே அங்கே நடப்பதைக் கவனித்தான்..
இப்பொழுதும் அவளின் பக்கம் இருக்கும் நியாயம் மனோவிற்குப் புரிந்தாலும் கூட, ‘இப்படியெல்லாம் ஒரு பொண்ணு இருப்பதும் ஒன்று தான் இல்லாமல் இருப்பதும் ஒன்று தான்..’ என்று நினைத்த மனோ,
“நீ சொல்வது எல்லாம் சரிதான்.. ஆனால் இப்பொழுது என்னோட கார் கண்ணாடிக்கு என்ன பதில்..?!” என்று இடது புருவம் உயர்த்தி அவளைப் பார்த்துக் கேட்டான் மனோ..
அதற்குள் அங்கேகூடி இருந்த கூட்டத்தைக் கண்டு அங்கே வந்த ட்ராபிக் போலீஸ், “இங்கே என்ன பிரச்சனை..?” என்று கேட்டதும், “இவன் ஒன்வே ல வந்து என்னை இடித்து கீழே தள்ளிவிட்டு தப்பிக்க பார்த்தான்.. அதுதான் கார் கண்ணாடியை உடைத்தேன்..” என்று சொல்ல,
‘நான் எப்பொழுது ராங்கா வந்தேன்..?! இது என்னடா காலையில் ஒரே ரோதனையாப் போச்சு..’ என்று மனதினுள் பேசிய மனோவின் காதில் அவள் மரியாதை இல்லாமல் பேசுவது கேட்டதும் கோபத்தோடு அவளின் பக்கம் திரும்பினான்..
அவள் சொன்னதைக் கேட்டவன், “என்ன அவன் இவன் என்றெல்லாம் பேசுகிறாய்..?! இன்னொரு முறை மரியாதை இல்லாமல் பேசினால் இங்கு நடப்பதே வேற.. பொண்ணு என்பதால் பொறுமையாக நின்று பேசுகிறேன்..” என்று கோபத்தில் கத்தினான்..
அவன் பேசுவதைக் கேட்ட தென்றல், “உனக்கு மரியாதை ரொம்ப முக்கியமோ..? முதலில் டயலாக்கை மாற்றுங்க.. இது எல்லாம் தேஞ்சி போன ரெக்கார்டு..” என்று சாதாரணமாக சொல்ல,
‘இவள் யாரைச் சொல்கிறாள்..?!’ என்று புரியாமல் திரும்பிப் பார்த்த டிராபிக் போலீஸ் அங்கே நின்று ருத்ர தாண்டவம் ஆடிய மனோவைப் பார்த்துவிட்டு, “சார் அந்த பொண்ணு பேசியதற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் நீங்க கிளம்புங்க..” என்று சொல்ல,
அதுவரை அவனிடம் சண்டைக் கட்டிக் கொண்டிருந்த தென்றல், “என்ன சார் நீங்க அவனைக் கிளம்ப சொல்றீங்க.. இப்பொழுது அவனுக்கு நீங்க பைன் போடல உங்களின் மேல் நான் கம்ப்ளைன்ட் கொடுக்க வேண்டியது வரும்..” என்று சொல்ல, மனோ அவளைப் பார்த்த வண்ணம் வண்டியில் சாய்ந்து நின்றான்..
அவருக்கு கோபம் வந்ததும், “நீயெல்லாம் என்ன பொண்ணு மாதிரியா இருக்க..?! இப்படி பஜாரி மாதிரி ரோட்டில் நின்று கத்துகிறாய்..? அவர் யார் என்று உனக்கு தெரியுமா..?!” என்று கேட்டதும்,
“தப்பு செய்ததை தட்டிக் கேட்டால் நான் பஜாரியா..?! பரவல்ல அதைப் பற்றியெல்லாம் எனக்கு கவலை இல்ல.. இப்பொழுது அவனுக்கு நீங்க பைன் போடுவீங்களா இல்ல மாட்டிங்களா..?!” என்று கேட்டதும் அதுவரையில் பொறுமையாக இருந்த மனோவிற்கு கோபம் வர, அவளின் அருகில் வேகமாகச் சென்றவன்,
“என்னடி வார்த்தைக்கு வார்த்தை மரியாதை இல்லாமல் பேசுகிறாய்..?!” என்று தென்றலின் கன்னத்தில் ‘பளார்..’ என்று ஒன்று விட்டான்.. இதை அங்கே யாரும் எதிர்பார்க்கவே இல்லை.. பிரதாப் அதிர்வில் அப்படியே நின்றான்.. அவளை அடித்ததற்கு எல்லாம் அவன் கவலைபாடவே இல்லை..
“நீயெல்லாம் ஒரு பொண்ணு..?!” என்று மனோ சொன்ன வார்த்தை தென்றலின் மனதில் முள்ளேன்று தைத்தது.. அவளை அடித்தவன் உடனே போலீஸ்காரர் பக்கம் திரும்பி,
“காலையில் யார் மூஞ்சியில் முழித்தேனோ..? எல்லாம் தண்ட செலவு.. இந்தாங்க உங்களோட பைன்..” என்று பணத்தைக் கொடுத்துவிட்டு கிளம்பினான்.. ‘அவன் இதுவரையில் செய்யாத குற்றத்திற்கு தண்டனை வாங்கியதே கிடையாது..’ அந்த கோபத்தில் அவனின் முகம் இறுகியது..
மற்றொன்று என்னவென்றால் தன்னோட தகுதிக்கு அவளிடம் நேருக்கு நேர் மோதியது தன்னோட தன்மானத்திற்கே இழுக்கு என்று நினைத்தான்..
அவன் காரின் அருகில் போகும் வரையில் அமைதியாக நின்ற தென்றல், “ஹலோ..” என்று சொடக்குப் போட்டுக் கூப்பிட நின்று அவளைத் திரும்பிப் பார்த்தான் மனோ..
அவனின் அருகில் சென்றவள், “சத்தியமா நீ நல்ல முகத்தில் முழித்திருக்க மாட்டாய்.. இந்த உன்னோட கார் கண்ணாடிக்கு பணம்..” என்று அவனின் கையில் கொடுத்தவள்,
“உனக்கும் எனக்கும் முதல் கணக்கு பைசல் ஆகிவிட்டது.. ஆனால் என்னை அடித்த கணக்கு இன்னும் அப்படியே தான் இருக்கிறது மிஸ்டர்.. ஒரு பொண்ணு என்று கூட பார்க்காமல் நடுரோட்டில் என்னை அடித்துவிட்டு ஸாரி கூட கேட்காமல் போகிறாய் இல்ல.. இதுக்கு உனக்கு கண்டிப்பாக தண்டனை இருக்கு..” என்றவள் தொடர்ந்து..
“அதை நான் கொடுக்க மாட்டேன்.. எனக்கு இந்த பழிக்கு பழி வாங்கும் எண்ணம் எல்லாம் வரவே வராது.. ஆனால் இது இத்தோட முடிந்தது என்று மட்டும் நினைக்காதே..” என்றவள் அவனைப் பார்த்து கர்வமாக புன்னகைத்தாள்..
“தென்றல் மேல கைவச்சதுக்கு நீ அனுபவிப்படா..” என்று கூறியவள் தனது ஸ்கூட்டியை எடுக்க அவளின் பின்னோடு ஏறியமர்ந்தான் பிரதாப்..
அவளின் மந்தகாசமான புன்னகை அவனின் மனதை ஏதோ செய்தது.. அவள் சென்றதும் கூட்டத்தில் இருந்த அனைவரும் களைந்து செல்ல, தனது காரை எடுத்துக் கொண்டு தனது வழியில் சென்றான் மனோ..!
அவள் நிற்பதை பார்த்து புரியாமல் நின்ற மனோ அவளின் கேள்வி புரிய, “எனக்கு கண்ணு இரண்டும் நல்லாவே இருக்கிறது.. உனக்கு தான் பைத்தியம் கிளம்பிடுச்சு போல..” என்று அவன் பதில் கூறவே கோபத்தில் அவனை முறைத்தாள் தென்றல்..
“ஆமா எனக்குதான் பைத்தியம் நான்தான் வேண்டுமென்றே உன்னோட வண்டியின் குறுக்கே வந்து விழுந்தேன் பாரு.. செய்வது ஃபிராடு தனம் இதில் இவனுங்க எல்லாம் நியாயம் பேச வந்துட்டாங்க..” என்று அவளும் அவனை மரியாதை இல்லாமல் பேசினாள்..
பிரதாப்போ தென்றலையும், மனோவையும் மாறிமாறிப் பார்த்தான்.. அவனுக்கு தெரியும் தென்றலுக்கு எப்பொழுதும் கோபத்தைப் பிடித்து வைக்க தெரியாது.. கோபம் வந்தால் சண்டை போடுவாள் ஆனால் அடுத்த நொடியே அனைத்தையும் மறந்து விடுவாள்..
அவளைப் பார்த்துக் கொண்டிருந்த பிரதாப் மனோவைப் பார்த்ததும், ‘இந்த அண்ணா என்ன செய்ய போறாங்களோ தெரியலையே..?!’ என்று மனதிற்குள் நினைத்தவனின் பார்வை மனோவை பயத்துடனே பார்த்தது..
அவள் தன்னை மரியாதை இல்லாமல் பேசுவதைக் கவனிக்காதவன் அவளைப் பார்வையால் அளந்தான்.. பிறது தன் மனதிற்குள், ‘இவள் எதுக்கு பழைய படத்தில் வரும் விஜயசாந்தி ரேஞ்சில் நிற்கிறாள்..?!’ என்று யோசிக்க,
அவனின் மனமோ, ‘டேய் மடையா இப்போ உனக்கு அவள் விஜயசாந்தி ரேஞ்சில் நிற்பதா முக்கியம்..?! உன்னோட கார் கண்ணாடியை எதுக்கு உடைத்தாள் என்று கேளுடா..’ என்று சொல்ல அவளைப் பார்த்தவனுக்கு, ‘இப்படியும் ஒரு பொண்ணு இருப்பாளா..?’ என்றே தோன்றியது..
“ஏய் இப்பொழுது எதற்கு கார் கண்ணாடியை உடைத்தாய்..?!” என்று கேட்டவனின் குரலில் அதிகாரம் அதிகமாகவே வெளிப்பட்டது..
அவனின் குரலில் அதிகாரத்தை நொடியில் கண்டுக்கொண்ட தென்றல், “என்ன ரொம்ப அதிகாரமாக கேட்கிறாய்.. ஆமா நான் தான் உடைத்தேன்.. ஒன்வே என்பது தெரியாமல் நீ வந்து என்னை இடிச்சு கீழே தள்ளிவிட்டு எதுவும் தெரியாதது போல போவ.. நான் பார்த்துட்டு சும்மா இருக்கணுமா..?!” என்று கேட்டாள்..
அவள் தெனாவெட்டாக நிற்பதைப் பார்த்தவன், ‘எனக்கு முன்னாடி என்னோட எதிரிங்க கூட நடுங்குவாங்க.. இவள் பாரு என்ன தெனாவெட்டாக நிற்கிறாள்..?!’ என்று மனதில் நினைத்தவன்,
அவளின் பேச்சைக் கேட்ட மனோ கொஞ்சம் கூட அதிராமல், “அதுக்கு என்னோட கார் கண்ணாடியை உடைப்பாயா..? அதைப் பார்த்துவிட்டு நான் சும்மா போகணும் என்று சொல்கிறாயா..? இதை யார் சரி செய்வது..?! அதற்கு ஏற்படும் செலவை யார் ஏற்பது..?!” என்று கேட்டதும்,
அவனைப் பார்த்த தென்றலுக்கு கோபம் எல்லை கடக்க, “உன்னோட கார் கண்ணாடி உடைந்தது என்று இந்த குதிக் குதிக்கிறீயே..? நீ இடித்த இடியில் நான் பரலோகம் போன எங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு நீயா வந்து பதில் சொல்வாய்..? இல்ல என்னோட இழப்பை சரி செய்வாயா..?” என்று கோபத்தில் கேட்டாள் தென்றல்..
அவளின் வார்த்தைகளைக் கேட்ட பிரதாப், ‘தென்றலுக்கு வீடு மட்டும் தானே இருக்கிறது.. அங்கே யார் இருக்காங்க.. அதுதான் யாருமே இல்லையே..’ என்று யோசித்தவன், ‘என்னோட தென்றல் இப்படியெல்லாம் பேச மாட்டாளே..?!’ என்று யோசித்துக் கொண்டே அங்கே நடப்பதைக் கவனித்தான்..
இப்பொழுதும் அவளின் பக்கம் இருக்கும் நியாயம் மனோவிற்குப் புரிந்தாலும் கூட, ‘இப்படியெல்லாம் ஒரு பொண்ணு இருப்பதும் ஒன்று தான் இல்லாமல் இருப்பதும் ஒன்று தான்..’ என்று நினைத்த மனோ,
“நீ சொல்வது எல்லாம் சரிதான்.. ஆனால் இப்பொழுது என்னோட கார் கண்ணாடிக்கு என்ன பதில்..?!” என்று இடது புருவம் உயர்த்தி அவளைப் பார்த்துக் கேட்டான் மனோ..
அதற்குள் அங்கேகூடி இருந்த கூட்டத்தைக் கண்டு அங்கே வந்த ட்ராபிக் போலீஸ், “இங்கே என்ன பிரச்சனை..?” என்று கேட்டதும், “இவன் ஒன்வே ல வந்து என்னை இடித்து கீழே தள்ளிவிட்டு தப்பிக்க பார்த்தான்.. அதுதான் கார் கண்ணாடியை உடைத்தேன்..” என்று சொல்ல,
‘நான் எப்பொழுது ராங்கா வந்தேன்..?! இது என்னடா காலையில் ஒரே ரோதனையாப் போச்சு..’ என்று மனதினுள் பேசிய மனோவின் காதில் அவள் மரியாதை இல்லாமல் பேசுவது கேட்டதும் கோபத்தோடு அவளின் பக்கம் திரும்பினான்..
அவள் சொன்னதைக் கேட்டவன், “என்ன அவன் இவன் என்றெல்லாம் பேசுகிறாய்..?! இன்னொரு முறை மரியாதை இல்லாமல் பேசினால் இங்கு நடப்பதே வேற.. பொண்ணு என்பதால் பொறுமையாக நின்று பேசுகிறேன்..” என்று கோபத்தில் கத்தினான்..
அவன் பேசுவதைக் கேட்ட தென்றல், “உனக்கு மரியாதை ரொம்ப முக்கியமோ..? முதலில் டயலாக்கை மாற்றுங்க.. இது எல்லாம் தேஞ்சி போன ரெக்கார்டு..” என்று சாதாரணமாக சொல்ல,
‘இவள் யாரைச் சொல்கிறாள்..?!’ என்று புரியாமல் திரும்பிப் பார்த்த டிராபிக் போலீஸ் அங்கே நின்று ருத்ர தாண்டவம் ஆடிய மனோவைப் பார்த்துவிட்டு, “சார் அந்த பொண்ணு பேசியதற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் நீங்க கிளம்புங்க..” என்று சொல்ல,
அதுவரை அவனிடம் சண்டைக் கட்டிக் கொண்டிருந்த தென்றல், “என்ன சார் நீங்க அவனைக் கிளம்ப சொல்றீங்க.. இப்பொழுது அவனுக்கு நீங்க பைன் போடல உங்களின் மேல் நான் கம்ப்ளைன்ட் கொடுக்க வேண்டியது வரும்..” என்று சொல்ல, மனோ அவளைப் பார்த்த வண்ணம் வண்டியில் சாய்ந்து நின்றான்..
அவருக்கு கோபம் வந்ததும், “நீயெல்லாம் என்ன பொண்ணு மாதிரியா இருக்க..?! இப்படி பஜாரி மாதிரி ரோட்டில் நின்று கத்துகிறாய்..? அவர் யார் என்று உனக்கு தெரியுமா..?!” என்று கேட்டதும்,
“தப்பு செய்ததை தட்டிக் கேட்டால் நான் பஜாரியா..?! பரவல்ல அதைப் பற்றியெல்லாம் எனக்கு கவலை இல்ல.. இப்பொழுது அவனுக்கு நீங்க பைன் போடுவீங்களா இல்ல மாட்டிங்களா..?!” என்று கேட்டதும் அதுவரையில் பொறுமையாக இருந்த மனோவிற்கு கோபம் வர, அவளின் அருகில் வேகமாகச் சென்றவன்,
“என்னடி வார்த்தைக்கு வார்த்தை மரியாதை இல்லாமல் பேசுகிறாய்..?!” என்று தென்றலின் கன்னத்தில் ‘பளார்..’ என்று ஒன்று விட்டான்.. இதை அங்கே யாரும் எதிர்பார்க்கவே இல்லை.. பிரதாப் அதிர்வில் அப்படியே நின்றான்.. அவளை அடித்ததற்கு எல்லாம் அவன் கவலைபாடவே இல்லை..
“நீயெல்லாம் ஒரு பொண்ணு..?!” என்று மனோ சொன்ன வார்த்தை தென்றலின் மனதில் முள்ளேன்று தைத்தது.. அவளை அடித்தவன் உடனே போலீஸ்காரர் பக்கம் திரும்பி,
“காலையில் யார் மூஞ்சியில் முழித்தேனோ..? எல்லாம் தண்ட செலவு.. இந்தாங்க உங்களோட பைன்..” என்று பணத்தைக் கொடுத்துவிட்டு கிளம்பினான்.. ‘அவன் இதுவரையில் செய்யாத குற்றத்திற்கு தண்டனை வாங்கியதே கிடையாது..’ அந்த கோபத்தில் அவனின் முகம் இறுகியது..
மற்றொன்று என்னவென்றால் தன்னோட தகுதிக்கு அவளிடம் நேருக்கு நேர் மோதியது தன்னோட தன்மானத்திற்கே இழுக்கு என்று நினைத்தான்..
அவன் காரின் அருகில் போகும் வரையில் அமைதியாக நின்ற தென்றல், “ஹலோ..” என்று சொடக்குப் போட்டுக் கூப்பிட நின்று அவளைத் திரும்பிப் பார்த்தான் மனோ..
அவனின் அருகில் சென்றவள், “சத்தியமா நீ நல்ல முகத்தில் முழித்திருக்க மாட்டாய்.. இந்த உன்னோட கார் கண்ணாடிக்கு பணம்..” என்று அவனின் கையில் கொடுத்தவள்,
“உனக்கும் எனக்கும் முதல் கணக்கு பைசல் ஆகிவிட்டது.. ஆனால் என்னை அடித்த கணக்கு இன்னும் அப்படியே தான் இருக்கிறது மிஸ்டர்.. ஒரு பொண்ணு என்று கூட பார்க்காமல் நடுரோட்டில் என்னை அடித்துவிட்டு ஸாரி கூட கேட்காமல் போகிறாய் இல்ல.. இதுக்கு உனக்கு கண்டிப்பாக தண்டனை இருக்கு..” என்றவள் தொடர்ந்து..
“அதை நான் கொடுக்க மாட்டேன்.. எனக்கு இந்த பழிக்கு பழி வாங்கும் எண்ணம் எல்லாம் வரவே வராது.. ஆனால் இது இத்தோட முடிந்தது என்று மட்டும் நினைக்காதே..” என்றவள் அவனைப் பார்த்து கர்வமாக புன்னகைத்தாள்..
“தென்றல் மேல கைவச்சதுக்கு நீ அனுபவிப்படா..” என்று கூறியவள் தனது ஸ்கூட்டியை எடுக்க அவளின் பின்னோடு ஏறியமர்ந்தான் பிரதாப்..
அவளின் மந்தகாசமான புன்னகை அவனின் மனதை ஏதோ செய்தது.. அவள் சென்றதும் கூட்டத்தில் இருந்த அனைவரும் களைந்து செல்ல, தனது காரை எடுத்துக் கொண்டு தனது வழியில் சென்றான் மனோ..!