அத்தியாயம் – 32
வீட்டின் வாசலில் நின்றிருந்த இருவரையும் பார்த்த மனோ, “வா சூர்யா, வா அனு..” என்று புன்னகை முகத்துடன் வீட்டின் உள்ளே அழைத்தான்.. அவனின் மலர்ந்த முகம் கண்ட சூர்யாவின் முகம் வெளுத்துப்போனது.. அவனின் முகத்தைக் கவனிக்காதது போல வீட்டின் உள்ளே சென்றான் மனோ..
வீட்டின் உள்ளே சென்ற மனோ, “தென்றல் சீக்கிரமா வா.. அனுவும் சூர்யாவும் வந்திருக்காங்க..” என்று மாடியை நோக்கிக் குரல் கொடுக்க தூக்கம் கலைந்து எழுந்த தென்றல், “இதோ வரேன் பாவா..” என்று கூறியவள் குளியலறைக்குள் புகுந்தாள்..
“இருவரும் கொஞ்சநேரம் இருங்க தென்றல் இப்பொழுது வந்துவிடுவாள்..” என்று கூறினான் மனோ.. இருவரும் அமைதியாக சோபாவில் அமர்ந்தனர்.. சூர்யாவின் முகத்தைப் பார்த்தான்..
அவனின் முகம் தெளியாமல் இருப்பதைக் கண்ட மனோ, “என்ன சூர்யா என்ன யோசனையில் இருக்கிறாய்..?” என்று சாதாரணமாக கேட்டான்.. அவனின் கேள்வியில் மனோவை நிமிர்ந்துப் பார்த்தான் சூர்யா..
சூர்யா வந்ததன் ஒரே காரணம் அவனின் அப்பா சொன்ன வாக்கியம்.. ‘அவங்களுக்கு ஏதாவது தீங்கு செய்யணும் என்று நினைச்ச நான் நானாக இருக்க மாட்டேன்..’ என்று சொன்னது சூர்யாவின் மனதை ரொம்பவே குழப்பியது..
நேற்று இரவு முழுக்க அனு – சூர்யா இருவரும் குழப்பத்திலேயே இருந்தனர்.. இருவரும் பேசாமல் இருப்பதைக் கண்ட ரவிச்சந்திரனும், கோமதியும் எதுவும் கண்டு கொள்ளவே இல்லை.. அதுதான் அந்த கேள்விக்கு விடையை தெரிந்துக் கொள்ளவும், மனோவிடம் மன்னிப்பு கேட்கவும் வந்தான் சூர்யா..
“எனக்கு ஒரு கேள்விக்கு விடை தெரியணும்..” என்று சொல்ல, “என்ன கேள்விடா..” என்று அவனின் முகத்தைப் பார்த்துக் கொண்டே கேட்ட மனோவின் இடது புருவம் உயர்ந்தது.. இருவரும் பேசுவதை அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தாள் அனு..
“என்னோட அப்பா உங்களுக்கு யாரு..?” என்று கேட்டதும் சூர்யாவை ஆழ்ந்துப் பார்த்த மனோ மனதிற்குள், ‘என்னிடம் உண்மையை வாங்க இவ்வளவு தூரம் வந்திருக்க.. ஆனால் அது உன்னால் முடியுமா சூர்யா..’ என்று நினைத்தவன், “சூர்யாவோட அப்பா தட்ஸ் ஆல்..” என்று சிரித்த முகத்துடன் சொல்ல சூர்யாவின் முகத்தில் குழப்பமே அதிகமானது..
மனோவிடம் உண்மையை வாங்க ஒரே ஆளு நம்ம தென்றல் மட்டுமே.. வேற யாரும் அவனின் மனதில் இருக்கும் உண்மையை அறிய முடியுமா..?!
அவனின் குழப்ப முகத்தைப் பார்த்த மனோ, “எல்லா விஷயத்திற்கும் விடை தேடுவதை விட்டுட்டு சந்தோசமாக இருடா.. அதை விட்டுட்டு நீ மனசில் போட்டு குழப்பிட்டு உன்னை சுத்தி இருக்கும் எல்லோரையும் குழப்பாதே..” என்று சொல்லி அவனின் பேச்சிற்கு முற்றுபுள்ளி வைத்தான் மனோ..
மனோவைப் பார்த்துக் கொண்டிருந்த அனு முற்றிலும் குழம்பினாள்.. ‘என்ன இவரும் புதிராக பேசுகிறாய்..?!’ என்று மனதிற்குள் புலம்பினாள் அனு.. அடுத்த பத்து நிமிசத்தில் குளித்துமுடித்து கீழே இறங்கி வந்தாள் தென்றல்..
மாடியில் இருந்து இறங்கும் போது இருவரின் முகத்தைப் பார்த்த தென்றலுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது.. ‘சூர்யா – அனு இருவரும் குழப்பத்தில் இருக்காங்க அவங்களிடம் உண்மையை சொல்லக்கூடாது..’ என்ற தெளிவான முடிவுடன் கீழே இறங்கி வந்தாள்..
அவள் வரும் வரையில் இருவரிடமும் பேசிக்கொண்டிருந்த மனோவைப் பார்த்தவள், “வாங்க சூர்யா வா அனு..” என்று அழைத்துவிட்டு, “ஒரு நிமிஷம் இருங்க நான் காபி போட்டு எடுத்து வருகிறேன்..” என்று சமையலறைக்குள் நுழைந்தாள்..
அவளின் முகத்தைப்பார்த்த அனு, “சூர்யா நீங்க இருவரும் பேசிட்டு இருங்க நான் இப்பொழுது வருகிறேன்..” என்று சொல்லிவிட்டு எழுந்தவள் சமையலறையை நோக்கி சென்றாள்..
அனு செல்வதைப் பார்த்த சூர்யா, “ஸாரி மனோ அண்ணா..” என்று சொல்ல அவனைத் திரும்பிப் பார்த்த மனோ, “ஏய் நேற்று நடந்ததை இன்னமும் மனசில் வச்சிருக்கியா..?” என்று கேட்டான்.. மனோ இப்படி கேட்டதும் அவனின் முகத்தை திகைத்தபடியே பார்த்தான் சூர்யா..
சூர்யாவின் திகைத்த முகம் கண்ட மனோ, “டேய் சூர்யா என்னடா அப்படி பார்க்கிற..?” என்று கேட்டவன், சூர்யாவின் முகத்தைப் பார்த்துவிட்டு, “அனுவிடம் நீ ஏதாவது சொல்லிட்டியா..?!” என்று கேட்டான்..
மனோவின் முகத்தையே பார்த்த சூர்யா இல்லையென தலையசைத்துவிட்டு, “இல்ல அண்ணா அவளிடம் இன்னும் ஒண்ணும் சொல்லல..” என்று தலையைக்குனிந்தவண்ணம் சொல்ல, “அப்போ ப்ரீயா விடு..” என்று கூறினான்..
“அது முடியாது அண்ணா..” என்று சொல்ல, அவனின் முகத்தைக் கேள்வியாக பார்த்த மனோ, “உனக்கும் அனுவிற்கு சண்டையா..?” என்று கேட்டுவிட்டு சூர்யாவின் முகத்தைப் பார்த்தான்.. அவன் அமைதியாக இருக்க, “உங்கள் இருவருக்கும் சண்டை வர நான் காரணமா..?” என்று கேட்டான்..
அவனின் கேள்விக்கு பதில் சொல்லாத சூர்யா மனோவைப் பார்த்தான்.. நேற்று ஒரு தொழிலதிபராக தன்னுடன் சரிக்கு சரியாகப் போட்டியிட்டு தன்னை வென்ற அதே மனோ, இன்று தன்னுடைய வீட்டிற்கு வந்த சூர்யாவை புன்னகை முகம் மாறாமல் வரவேற்றான்..
நேற்று அவன் கண்ட மனோவுக்கும், இன்று இவன் காணும் மனோவிற்கும் இடையே மலையளவு இருந்த வித்தியாசத்தையும், மனோவின் மனமாற்றத்தையும் உணர்ந்தான் சூர்யா..
“நீங்க மட்டும் எப்படி அண்ணா இப்படி மாறினீங்க..?!” என்று தன்னுடைய மனதில் தோன்றியதை உடனே அவனிடம் கேட்டுவிட்டான்.. அவனின் கேள்வியில் சிரித்த மனோ, “தென்றல் தான் காரணம்..” என்று சொல்லிவிட்டு சமையலறையைப் பார்க்க அனுவிடம் பேசிக் கொண்டிருந்தாள் தென்றல்..
மனோவின் பார்வையில் இருந்த மாற்றமே சூர்யாவிற்கு சொன்னது அவனின் காதல் மனதை பற்றி..! தென்றலோ சமையலறையில் அனுவை ஓட்டிக்கொண்டிருந்தாள்..
“என்னடி காலையிலேயே இருவரும் வந்திருக்கீங்க..?” என்று கேட்டவள் தன்னுடைய வேலையைத் தொடர, “ என்னது காலையிலேயேவா..? இது மதியானம்..” என்று கூறியவள் தென்றலைப் பார்த்து, “இன்னைக்கு உனக்கு பிறந்தநாள் தென்றல் மறந்து விட்டாயா..?!” என்று அனு சிரிப்புடன் கேட்டாள்..
“நான் என்னோட பிறந்தநாளை மறக்கவே மாட்டேன் அனு..” என்று அவள் மனதில் ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு சிரிப்புடன் சொல்ல, “என்னடி ஒரு மார்க்கமாக இருக்க..?!” என்று தென்றலை வம்பிற்கு இழுத்தாள் அனு..
அவளின் கேள்வியில் தன்னை வெளிப்படுத்தாத தென்றல், “நீ என்னம்மா நீ ஒரு மார்க்கமாக இருக்க..? சூர்யா உன்னை நல்ல பார்த்துக் கொள்கிறாரா..? இல்ல பாவாகிட்ட சொல்லி மிரட்ட சொல்லலாமா..?” என்று கேட்டவளின் வாயில் தக்காளியை வைத்து அடைத்தாள் அனு..
அவள் அடைத்த தக்காளியை மென்று தின்ற தென்றல், “லூசு என்னடி இப்படியெல்லாம் பண்ற..?” என்று காபியை கப்பில் ஊற்றிய தென்றல், “என்னடி ரொம்ப குழப்பத்தில் இருக்க..?! என்ன விஷயம் சொல்லு..” என்று கேட்டாள்..
தென்றலின் முகத்தைப் பார்த்த அனு, “இனிமேல் உன்னை பார்க்க முடியாதோ என்று ரொம்பவே பயமாக இருக்கிறது தென்றல்..” என்றவள் மனதில் இருந்த பயத்தை வெளிப்படுத்த அனுவைக் கேள்வியாக நோக்கினாள் தென்றல்..
அவளின் பார்வை கண்ட அனு, “சூர்யா ஆர். கே. கன்ஸ்ட்ரக்ஷன் எம். டி.” என்று அவள் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு சொல்ல அவளின் முகத்தைப் பார்த்த சிரிக்க ஆரம்பித்தாள் தென்றல்.. அவள் சிரிப்பதைக் கேள்வியாகப் பார்த்தாள் அனு..
அவளின் பார்வையைக் கண்ட தென்றல், “இந்த விஷயத்துக்கும் இத்தனை பில்டப் தேவைதானா அனு..?” என்று கேட்டவள் சிரித்துக் கொண்டே, “என்னை பார்க்கணும் என்று சொல்லு.. அவங்க அனுப்பல என்றால் நம்ம ஆர்மியை நான் அனுப்பிவிடுகிறேன்..” என்று குறும்புடன் கூறினாள்..
அவள் குறும்பைக் கண்ட அனு, “ப்ளீஸ் தென்றல்.. விளையாடாதே..” என்றவள் சோகமாக சொல்ல, “இந்த விஷயம் எனக்கு எப்போவோ தெரியும்..” என்று அனுவின் தலையில் குண்டைத்தூக்கி போட்டாள் தென்றல்..
அவள் சொன்னதைக் கேட்டதும் அனு, “என்னடி சொல்ற..” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள்.. அவளின் கேள்வியில் அனுவைப் பார்த்து புன்னகைத்த தென்றல், “எனக்கு முன்னாடியே தெரியும் அனு.. நான்தான் உன்னிடம் சொல்லாமல் இருந்தேன்.. ஏன் பாவாவிற்கு கூட இந்த உண்மை தெரியுமா என்று தெரியல..” என்று கூறியவளைக் கேள்வியாக பார்த்தாள் அனு..
“நம்ம மதன் சாரை தூண்டிவிடதே சூர்யா தான்.. அதில் தான் எனக்கு சந்தேகம் வந்தது.. அதுக்கு அப்புறம்தான் பாவாவிற்கும் எனக்கும் சண்டை வந்தது..” என்று கூறியவள் காபியை எடுத்துக்கொண்டு ஹாலிற்கு சென்று மனோவிற்கு சூர்யாவிற்கும் கொடுத்துவிட்டு மனோவின் அருகில் அமர்ந்தாள் தென்றல்..
வீட்டின் வாசலில் நின்றிருந்த இருவரையும் பார்த்த மனோ, “வா சூர்யா, வா அனு..” என்று புன்னகை முகத்துடன் வீட்டின் உள்ளே அழைத்தான்.. அவனின் மலர்ந்த முகம் கண்ட சூர்யாவின் முகம் வெளுத்துப்போனது.. அவனின் முகத்தைக் கவனிக்காதது போல வீட்டின் உள்ளே சென்றான் மனோ..
வீட்டின் உள்ளே சென்ற மனோ, “தென்றல் சீக்கிரமா வா.. அனுவும் சூர்யாவும் வந்திருக்காங்க..” என்று மாடியை நோக்கிக் குரல் கொடுக்க தூக்கம் கலைந்து எழுந்த தென்றல், “இதோ வரேன் பாவா..” என்று கூறியவள் குளியலறைக்குள் புகுந்தாள்..
“இருவரும் கொஞ்சநேரம் இருங்க தென்றல் இப்பொழுது வந்துவிடுவாள்..” என்று கூறினான் மனோ.. இருவரும் அமைதியாக சோபாவில் அமர்ந்தனர்.. சூர்யாவின் முகத்தைப் பார்த்தான்..
அவனின் முகம் தெளியாமல் இருப்பதைக் கண்ட மனோ, “என்ன சூர்யா என்ன யோசனையில் இருக்கிறாய்..?” என்று சாதாரணமாக கேட்டான்.. அவனின் கேள்வியில் மனோவை நிமிர்ந்துப் பார்த்தான் சூர்யா..
சூர்யா வந்ததன் ஒரே காரணம் அவனின் அப்பா சொன்ன வாக்கியம்.. ‘அவங்களுக்கு ஏதாவது தீங்கு செய்யணும் என்று நினைச்ச நான் நானாக இருக்க மாட்டேன்..’ என்று சொன்னது சூர்யாவின் மனதை ரொம்பவே குழப்பியது..
நேற்று இரவு முழுக்க அனு – சூர்யா இருவரும் குழப்பத்திலேயே இருந்தனர்.. இருவரும் பேசாமல் இருப்பதைக் கண்ட ரவிச்சந்திரனும், கோமதியும் எதுவும் கண்டு கொள்ளவே இல்லை.. அதுதான் அந்த கேள்விக்கு விடையை தெரிந்துக் கொள்ளவும், மனோவிடம் மன்னிப்பு கேட்கவும் வந்தான் சூர்யா..
“எனக்கு ஒரு கேள்விக்கு விடை தெரியணும்..” என்று சொல்ல, “என்ன கேள்விடா..” என்று அவனின் முகத்தைப் பார்த்துக் கொண்டே கேட்ட மனோவின் இடது புருவம் உயர்ந்தது.. இருவரும் பேசுவதை அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தாள் அனு..
“என்னோட அப்பா உங்களுக்கு யாரு..?” என்று கேட்டதும் சூர்யாவை ஆழ்ந்துப் பார்த்த மனோ மனதிற்குள், ‘என்னிடம் உண்மையை வாங்க இவ்வளவு தூரம் வந்திருக்க.. ஆனால் அது உன்னால் முடியுமா சூர்யா..’ என்று நினைத்தவன், “சூர்யாவோட அப்பா தட்ஸ் ஆல்..” என்று சிரித்த முகத்துடன் சொல்ல சூர்யாவின் முகத்தில் குழப்பமே அதிகமானது..
மனோவிடம் உண்மையை வாங்க ஒரே ஆளு நம்ம தென்றல் மட்டுமே.. வேற யாரும் அவனின் மனதில் இருக்கும் உண்மையை அறிய முடியுமா..?!
அவனின் குழப்ப முகத்தைப் பார்த்த மனோ, “எல்லா விஷயத்திற்கும் விடை தேடுவதை விட்டுட்டு சந்தோசமாக இருடா.. அதை விட்டுட்டு நீ மனசில் போட்டு குழப்பிட்டு உன்னை சுத்தி இருக்கும் எல்லோரையும் குழப்பாதே..” என்று சொல்லி அவனின் பேச்சிற்கு முற்றுபுள்ளி வைத்தான் மனோ..
மனோவைப் பார்த்துக் கொண்டிருந்த அனு முற்றிலும் குழம்பினாள்.. ‘என்ன இவரும் புதிராக பேசுகிறாய்..?!’ என்று மனதிற்குள் புலம்பினாள் அனு.. அடுத்த பத்து நிமிசத்தில் குளித்துமுடித்து கீழே இறங்கி வந்தாள் தென்றல்..
மாடியில் இருந்து இறங்கும் போது இருவரின் முகத்தைப் பார்த்த தென்றலுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது.. ‘சூர்யா – அனு இருவரும் குழப்பத்தில் இருக்காங்க அவங்களிடம் உண்மையை சொல்லக்கூடாது..’ என்ற தெளிவான முடிவுடன் கீழே இறங்கி வந்தாள்..
அவள் வரும் வரையில் இருவரிடமும் பேசிக்கொண்டிருந்த மனோவைப் பார்த்தவள், “வாங்க சூர்யா வா அனு..” என்று அழைத்துவிட்டு, “ஒரு நிமிஷம் இருங்க நான் காபி போட்டு எடுத்து வருகிறேன்..” என்று சமையலறைக்குள் நுழைந்தாள்..
அவளின் முகத்தைப்பார்த்த அனு, “சூர்யா நீங்க இருவரும் பேசிட்டு இருங்க நான் இப்பொழுது வருகிறேன்..” என்று சொல்லிவிட்டு எழுந்தவள் சமையலறையை நோக்கி சென்றாள்..
அனு செல்வதைப் பார்த்த சூர்யா, “ஸாரி மனோ அண்ணா..” என்று சொல்ல அவனைத் திரும்பிப் பார்த்த மனோ, “ஏய் நேற்று நடந்ததை இன்னமும் மனசில் வச்சிருக்கியா..?” என்று கேட்டான்.. மனோ இப்படி கேட்டதும் அவனின் முகத்தை திகைத்தபடியே பார்த்தான் சூர்யா..
சூர்யாவின் திகைத்த முகம் கண்ட மனோ, “டேய் சூர்யா என்னடா அப்படி பார்க்கிற..?” என்று கேட்டவன், சூர்யாவின் முகத்தைப் பார்த்துவிட்டு, “அனுவிடம் நீ ஏதாவது சொல்லிட்டியா..?!” என்று கேட்டான்..
மனோவின் முகத்தையே பார்த்த சூர்யா இல்லையென தலையசைத்துவிட்டு, “இல்ல அண்ணா அவளிடம் இன்னும் ஒண்ணும் சொல்லல..” என்று தலையைக்குனிந்தவண்ணம் சொல்ல, “அப்போ ப்ரீயா விடு..” என்று கூறினான்..
“அது முடியாது அண்ணா..” என்று சொல்ல, அவனின் முகத்தைக் கேள்வியாக பார்த்த மனோ, “உனக்கும் அனுவிற்கு சண்டையா..?” என்று கேட்டுவிட்டு சூர்யாவின் முகத்தைப் பார்த்தான்.. அவன் அமைதியாக இருக்க, “உங்கள் இருவருக்கும் சண்டை வர நான் காரணமா..?” என்று கேட்டான்..
அவனின் கேள்விக்கு பதில் சொல்லாத சூர்யா மனோவைப் பார்த்தான்.. நேற்று ஒரு தொழிலதிபராக தன்னுடன் சரிக்கு சரியாகப் போட்டியிட்டு தன்னை வென்ற அதே மனோ, இன்று தன்னுடைய வீட்டிற்கு வந்த சூர்யாவை புன்னகை முகம் மாறாமல் வரவேற்றான்..
நேற்று அவன் கண்ட மனோவுக்கும், இன்று இவன் காணும் மனோவிற்கும் இடையே மலையளவு இருந்த வித்தியாசத்தையும், மனோவின் மனமாற்றத்தையும் உணர்ந்தான் சூர்யா..
“நீங்க மட்டும் எப்படி அண்ணா இப்படி மாறினீங்க..?!” என்று தன்னுடைய மனதில் தோன்றியதை உடனே அவனிடம் கேட்டுவிட்டான்.. அவனின் கேள்வியில் சிரித்த மனோ, “தென்றல் தான் காரணம்..” என்று சொல்லிவிட்டு சமையலறையைப் பார்க்க அனுவிடம் பேசிக் கொண்டிருந்தாள் தென்றல்..
மனோவின் பார்வையில் இருந்த மாற்றமே சூர்யாவிற்கு சொன்னது அவனின் காதல் மனதை பற்றி..! தென்றலோ சமையலறையில் அனுவை ஓட்டிக்கொண்டிருந்தாள்..
“என்னடி காலையிலேயே இருவரும் வந்திருக்கீங்க..?” என்று கேட்டவள் தன்னுடைய வேலையைத் தொடர, “ என்னது காலையிலேயேவா..? இது மதியானம்..” என்று கூறியவள் தென்றலைப் பார்த்து, “இன்னைக்கு உனக்கு பிறந்தநாள் தென்றல் மறந்து விட்டாயா..?!” என்று அனு சிரிப்புடன் கேட்டாள்..
“நான் என்னோட பிறந்தநாளை மறக்கவே மாட்டேன் அனு..” என்று அவள் மனதில் ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு சிரிப்புடன் சொல்ல, “என்னடி ஒரு மார்க்கமாக இருக்க..?!” என்று தென்றலை வம்பிற்கு இழுத்தாள் அனு..
அவளின் கேள்வியில் தன்னை வெளிப்படுத்தாத தென்றல், “நீ என்னம்மா நீ ஒரு மார்க்கமாக இருக்க..? சூர்யா உன்னை நல்ல பார்த்துக் கொள்கிறாரா..? இல்ல பாவாகிட்ட சொல்லி மிரட்ட சொல்லலாமா..?” என்று கேட்டவளின் வாயில் தக்காளியை வைத்து அடைத்தாள் அனு..
அவள் அடைத்த தக்காளியை மென்று தின்ற தென்றல், “லூசு என்னடி இப்படியெல்லாம் பண்ற..?” என்று காபியை கப்பில் ஊற்றிய தென்றல், “என்னடி ரொம்ப குழப்பத்தில் இருக்க..?! என்ன விஷயம் சொல்லு..” என்று கேட்டாள்..
தென்றலின் முகத்தைப் பார்த்த அனு, “இனிமேல் உன்னை பார்க்க முடியாதோ என்று ரொம்பவே பயமாக இருக்கிறது தென்றல்..” என்றவள் மனதில் இருந்த பயத்தை வெளிப்படுத்த அனுவைக் கேள்வியாக நோக்கினாள் தென்றல்..
அவளின் பார்வை கண்ட அனு, “சூர்யா ஆர். கே. கன்ஸ்ட்ரக்ஷன் எம். டி.” என்று அவள் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு சொல்ல அவளின் முகத்தைப் பார்த்த சிரிக்க ஆரம்பித்தாள் தென்றல்.. அவள் சிரிப்பதைக் கேள்வியாகப் பார்த்தாள் அனு..
அவளின் பார்வையைக் கண்ட தென்றல், “இந்த விஷயத்துக்கும் இத்தனை பில்டப் தேவைதானா அனு..?” என்று கேட்டவள் சிரித்துக் கொண்டே, “என்னை பார்க்கணும் என்று சொல்லு.. அவங்க அனுப்பல என்றால் நம்ம ஆர்மியை நான் அனுப்பிவிடுகிறேன்..” என்று குறும்புடன் கூறினாள்..
அவள் குறும்பைக் கண்ட அனு, “ப்ளீஸ் தென்றல்.. விளையாடாதே..” என்றவள் சோகமாக சொல்ல, “இந்த விஷயம் எனக்கு எப்போவோ தெரியும்..” என்று அனுவின் தலையில் குண்டைத்தூக்கி போட்டாள் தென்றல்..
அவள் சொன்னதைக் கேட்டதும் அனு, “என்னடி சொல்ற..” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள்.. அவளின் கேள்வியில் அனுவைப் பார்த்து புன்னகைத்த தென்றல், “எனக்கு முன்னாடியே தெரியும் அனு.. நான்தான் உன்னிடம் சொல்லாமல் இருந்தேன்.. ஏன் பாவாவிற்கு கூட இந்த உண்மை தெரியுமா என்று தெரியல..” என்று கூறியவளைக் கேள்வியாக பார்த்தாள் அனு..
“நம்ம மதன் சாரை தூண்டிவிடதே சூர்யா தான்.. அதில் தான் எனக்கு சந்தேகம் வந்தது.. அதுக்கு அப்புறம்தான் பாவாவிற்கும் எனக்கும் சண்டை வந்தது..” என்று கூறியவள் காபியை எடுத்துக்கொண்டு ஹாலிற்கு சென்று மனோவிற்கு சூர்யாவிற்கும் கொடுத்துவிட்டு மனோவின் அருகில் அமர்ந்தாள் தென்றல்..
Last edited: