• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Enathu Punnagaiyin Mugavari - 32

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 32

வீட்டின் வாசலில் நின்றிருந்த இருவரையும் பார்த்த மனோ, “வா சூர்யா, வா அனு..” என்று புன்னகை முகத்துடன் வீட்டின் உள்ளே அழைத்தான்.. அவனின் மலர்ந்த முகம் கண்ட சூர்யாவின் முகம் வெளுத்துப்போனது.. அவனின் முகத்தைக் கவனிக்காதது போல வீட்டின் உள்ளே சென்றான் மனோ..

வீட்டின் உள்ளே சென்ற மனோ, “தென்றல் சீக்கிரமா வா.. அனுவும் சூர்யாவும் வந்திருக்காங்க..” என்று மாடியை நோக்கிக் குரல் கொடுக்க தூக்கம் கலைந்து எழுந்த தென்றல், “இதோ வரேன் பாவா..” என்று கூறியவள் குளியலறைக்குள் புகுந்தாள்..

“இருவரும் கொஞ்சநேரம் இருங்க தென்றல் இப்பொழுது வந்துவிடுவாள்..” என்று கூறினான் மனோ.. இருவரும் அமைதியாக சோபாவில் அமர்ந்தனர்.. சூர்யாவின் முகத்தைப் பார்த்தான்..

அவனின் முகம் தெளியாமல் இருப்பதைக் கண்ட மனோ, “என்ன சூர்யா என்ன யோசனையில் இருக்கிறாய்..?” என்று சாதாரணமாக கேட்டான்.. அவனின் கேள்வியில் மனோவை நிமிர்ந்துப் பார்த்தான் சூர்யா..

சூர்யா வந்ததன் ஒரே காரணம் அவனின் அப்பா சொன்ன வாக்கியம்.. ‘அவங்களுக்கு ஏதாவது தீங்கு செய்யணும் என்று நினைச்ச நான் நானாக இருக்க மாட்டேன்..’ என்று சொன்னது சூர்யாவின் மனதை ரொம்பவே குழப்பியது..

நேற்று இரவு முழுக்க அனு – சூர்யா இருவரும் குழப்பத்திலேயே இருந்தனர்.. இருவரும் பேசாமல் இருப்பதைக் கண்ட ரவிச்சந்திரனும், கோமதியும் எதுவும் கண்டு கொள்ளவே இல்லை.. அதுதான் அந்த கேள்விக்கு விடையை தெரிந்துக் கொள்ளவும், மனோவிடம் மன்னிப்பு கேட்கவும் வந்தான் சூர்யா..

“எனக்கு ஒரு கேள்விக்கு விடை தெரியணும்..” என்று சொல்ல, “என்ன கேள்விடா..” என்று அவனின் முகத்தைப் பார்த்துக் கொண்டே கேட்ட மனோவின் இடது புருவம் உயர்ந்தது.. இருவரும் பேசுவதை அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தாள் அனு..

“என்னோட அப்பா உங்களுக்கு யாரு..?” என்று கேட்டதும் சூர்யாவை ஆழ்ந்துப் பார்த்த மனோ மனதிற்குள், ‘என்னிடம் உண்மையை வாங்க இவ்வளவு தூரம் வந்திருக்க.. ஆனால் அது உன்னால் முடியுமா சூர்யா..’ என்று நினைத்தவன், “சூர்யாவோட அப்பா தட்ஸ் ஆல்..” என்று சிரித்த முகத்துடன் சொல்ல சூர்யாவின் முகத்தில் குழப்பமே அதிகமானது..

மனோவிடம் உண்மையை வாங்க ஒரே ஆளு நம்ம தென்றல் மட்டுமே.. வேற யாரும் அவனின் மனதில் இருக்கும் உண்மையை அறிய முடியுமா..?!

அவனின் குழப்ப முகத்தைப் பார்த்த மனோ, “எல்லா விஷயத்திற்கும் விடை தேடுவதை விட்டுட்டு சந்தோசமாக இருடா.. அதை விட்டுட்டு நீ மனசில் போட்டு குழப்பிட்டு உன்னை சுத்தி இருக்கும் எல்லோரையும் குழப்பாதே..” என்று சொல்லி அவனின் பேச்சிற்கு முற்றுபுள்ளி வைத்தான் மனோ..

மனோவைப் பார்த்துக் கொண்டிருந்த அனு முற்றிலும் குழம்பினாள்.. ‘என்ன இவரும் புதிராக பேசுகிறாய்..?!’ என்று மனதிற்குள் புலம்பினாள் அனு.. அடுத்த பத்து நிமிசத்தில் குளித்துமுடித்து கீழே இறங்கி வந்தாள் தென்றல்..

மாடியில் இருந்து இறங்கும் போது இருவரின் முகத்தைப் பார்த்த தென்றலுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது.. ‘சூர்யா – அனு இருவரும் குழப்பத்தில் இருக்காங்க அவங்களிடம் உண்மையை சொல்லக்கூடாது..’ என்ற தெளிவான முடிவுடன் கீழே இறங்கி வந்தாள்..

அவள் வரும் வரையில் இருவரிடமும் பேசிக்கொண்டிருந்த மனோவைப் பார்த்தவள், “வாங்க சூர்யா வா அனு..” என்று அழைத்துவிட்டு, “ஒரு நிமிஷம் இருங்க நான் காபி போட்டு எடுத்து வருகிறேன்..” என்று சமையலறைக்குள் நுழைந்தாள்..

அவளின் முகத்தைப்பார்த்த அனு, “சூர்யா நீங்க இருவரும் பேசிட்டு இருங்க நான் இப்பொழுது வருகிறேன்..” என்று சொல்லிவிட்டு எழுந்தவள் சமையலறையை நோக்கி சென்றாள்..

அனு செல்வதைப் பார்த்த சூர்யா, “ஸாரி மனோ அண்ணா..” என்று சொல்ல அவனைத் திரும்பிப் பார்த்த மனோ, “ஏய் நேற்று நடந்ததை இன்னமும் மனசில் வச்சிருக்கியா..?” என்று கேட்டான்.. மனோ இப்படி கேட்டதும் அவனின் முகத்தை திகைத்தபடியே பார்த்தான் சூர்யா..

சூர்யாவின் திகைத்த முகம் கண்ட மனோ, “டேய் சூர்யா என்னடா அப்படி பார்க்கிற..?” என்று கேட்டவன், சூர்யாவின் முகத்தைப் பார்த்துவிட்டு, “அனுவிடம் நீ ஏதாவது சொல்லிட்டியா..?!” என்று கேட்டான்..

மனோவின் முகத்தையே பார்த்த சூர்யா இல்லையென தலையசைத்துவிட்டு, “இல்ல அண்ணா அவளிடம் இன்னும் ஒண்ணும் சொல்லல..” என்று தலையைக்குனிந்தவண்ணம் சொல்ல, “அப்போ ப்ரீயா விடு..” என்று கூறினான்..

“அது முடியாது அண்ணா..” என்று சொல்ல, அவனின் முகத்தைக் கேள்வியாக பார்த்த மனோ, “உனக்கும் அனுவிற்கு சண்டையா..?” என்று கேட்டுவிட்டு சூர்யாவின் முகத்தைப் பார்த்தான்.. அவன் அமைதியாக இருக்க, “உங்கள் இருவருக்கும் சண்டை வர நான் காரணமா..?” என்று கேட்டான்..

அவனின் கேள்விக்கு பதில் சொல்லாத சூர்யா மனோவைப் பார்த்தான்.. நேற்று ஒரு தொழிலதிபராக தன்னுடன் சரிக்கு சரியாகப் போட்டியிட்டு தன்னை வென்ற அதே மனோ, இன்று தன்னுடைய வீட்டிற்கு வந்த சூர்யாவை புன்னகை முகம் மாறாமல் வரவேற்றான்..

நேற்று அவன் கண்ட மனோவுக்கும், இன்று இவன் காணும் மனோவிற்கும் இடையே மலையளவு இருந்த வித்தியாசத்தையும், மனோவின் மனமாற்றத்தையும் உணர்ந்தான் சூர்யா..

“நீங்க மட்டும் எப்படி அண்ணா இப்படி மாறினீங்க..?!” என்று தன்னுடைய மனதில் தோன்றியதை உடனே அவனிடம் கேட்டுவிட்டான்.. அவனின் கேள்வியில் சிரித்த மனோ, “தென்றல் தான் காரணம்..” என்று சொல்லிவிட்டு சமையலறையைப் பார்க்க அனுவிடம் பேசிக் கொண்டிருந்தாள் தென்றல்..

மனோவின் பார்வையில் இருந்த மாற்றமே சூர்யாவிற்கு சொன்னது அவனின் காதல் மனதை பற்றி..! தென்றலோ சமையலறையில் அனுவை ஓட்டிக்கொண்டிருந்தாள்..

“என்னடி காலையிலேயே இருவரும் வந்திருக்கீங்க..?” என்று கேட்டவள் தன்னுடைய வேலையைத் தொடர, “ என்னது காலையிலேயேவா..? இது மதியானம்..” என்று கூறியவள் தென்றலைப் பார்த்து, “இன்னைக்கு உனக்கு பிறந்தநாள் தென்றல் மறந்து விட்டாயா..?!” என்று அனு சிரிப்புடன் கேட்டாள்..

“நான் என்னோட பிறந்தநாளை மறக்கவே மாட்டேன் அனு..” என்று அவள் மனதில் ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு சிரிப்புடன் சொல்ல, “என்னடி ஒரு மார்க்கமாக இருக்க..?!” என்று தென்றலை வம்பிற்கு இழுத்தாள் அனு..

அவளின் கேள்வியில் தன்னை வெளிப்படுத்தாத தென்றல், “நீ என்னம்மா நீ ஒரு மார்க்கமாக இருக்க..? சூர்யா உன்னை நல்ல பார்த்துக் கொள்கிறாரா..? இல்ல பாவாகிட்ட சொல்லி மிரட்ட சொல்லலாமா..?” என்று கேட்டவளின் வாயில் தக்காளியை வைத்து அடைத்தாள் அனு..

அவள் அடைத்த தக்காளியை மென்று தின்ற தென்றல், “லூசு என்னடி இப்படியெல்லாம் பண்ற..?” என்று காபியை கப்பில் ஊற்றிய தென்றல், “என்னடி ரொம்ப குழப்பத்தில் இருக்க..?! என்ன விஷயம் சொல்லு..” என்று கேட்டாள்..

தென்றலின் முகத்தைப் பார்த்த அனு, “இனிமேல் உன்னை பார்க்க முடியாதோ என்று ரொம்பவே பயமாக இருக்கிறது தென்றல்..” என்றவள் மனதில் இருந்த பயத்தை வெளிப்படுத்த அனுவைக் கேள்வியாக நோக்கினாள் தென்றல்..

அவளின் பார்வை கண்ட அனு, “சூர்யா ஆர். கே. கன்ஸ்ட்ரக்ஷன் எம். டி.” என்று அவள் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு சொல்ல அவளின் முகத்தைப் பார்த்த சிரிக்க ஆரம்பித்தாள் தென்றல்.. அவள் சிரிப்பதைக் கேள்வியாகப் பார்த்தாள் அனு..

அவளின் பார்வையைக் கண்ட தென்றல், “இந்த விஷயத்துக்கும் இத்தனை பில்டப் தேவைதானா அனு..?” என்று கேட்டவள் சிரித்துக் கொண்டே, “என்னை பார்க்கணும் என்று சொல்லு.. அவங்க அனுப்பல என்றால் நம்ம ஆர்மியை நான் அனுப்பிவிடுகிறேன்..” என்று குறும்புடன் கூறினாள்..

அவள் குறும்பைக் கண்ட அனு, “ப்ளீஸ் தென்றல்.. விளையாடாதே..” என்றவள் சோகமாக சொல்ல, “இந்த விஷயம் எனக்கு எப்போவோ தெரியும்..” என்று அனுவின் தலையில் குண்டைத்தூக்கி போட்டாள் தென்றல்..

அவள் சொன்னதைக் கேட்டதும் அனு, “என்னடி சொல்ற..” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள்.. அவளின் கேள்வியில் அனுவைப் பார்த்து புன்னகைத்த தென்றல், “எனக்கு முன்னாடியே தெரியும் அனு.. நான்தான் உன்னிடம் சொல்லாமல் இருந்தேன்.. ஏன் பாவாவிற்கு கூட இந்த உண்மை தெரியுமா என்று தெரியல..” என்று கூறியவளைக் கேள்வியாக பார்த்தாள் அனு..

“நம்ம மதன் சாரை தூண்டிவிடதே சூர்யா தான்.. அதில் தான் எனக்கு சந்தேகம் வந்தது.. அதுக்கு அப்புறம்தான் பாவாவிற்கும் எனக்கும் சண்டை வந்தது..” என்று கூறியவள் காபியை எடுத்துக்கொண்டு ஹாலிற்கு சென்று மனோவிற்கு சூர்யாவிற்கும் கொடுத்துவிட்டு மனோவின் அருகில் அமர்ந்தாள் தென்றல்..
 




Last edited:

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
தென்றலின் பின்னோடு வந்த அனு சூர்யாவின் அருகில் அமைதியாக அமர, “என்ன அனு எதுவும் பேசாமல் இருக்க..?” என்று அனுவை வம்பிற்கு இழுத்தாள் தென்றல்.. அனுவோ தென்றலை முறைத்தாள்..

அவளின் முறைப்பை எல்லாம் கண்டு கொள்ளாத தென்றல் மனோவைப் பார்க்க, அதுவரை அமைதியாக இருந்த மனோ, “தென்றல் சூர்யா யார் என்று தெரியுமா..?!” என்று கேட்க குடித்துக்கொண்திருந்த காபி புரையேற மனோவை பார்த்த தென்றல்..

“எனக்கு தெரியாது பாவா.. ஆமா யாரு சூர்யா சிங்கம் படத்தில் துரை சிங்கமாக நடித்திருப்பாரே சிவக்குமார் மகன் சூர்யாவா..?” என்று குரலில் குறும்பு கூத்தாட மனோவைப் பார்த்து சிரித்தவண்ணம் கேட்டாள்.. அவளின் கேள்வியில் மனோ சிரிக்க ஆரம்பித்தான்..

அவள் சொன்னதைக் கேட்ட சூர்யாவிற்கு புரையேற, அதுவரை இருந்த மனநிலை மாறி சிரிக்க ஆரம்பித்தாள் அனு.. இருவரையும் பார்த்த தென்றலுக்கும் மனோவிற்கும் சிரிப்புதான் வந்தது.. தென்றலிடம் இருந்து இப்படியொரு பதிலை யாருமே எதிர்ப்பார்க்கவே இல்லை.. மனோ சிரிப்பை அடக்க முடியாமல், “அடியே உனக்கே இது அநியாயமாக தெரியலையா..?” என்று கேட்டுவிட்டு சிரித்தான்..

“இல்ல பாவா.. இதுவரை மியூசியம் போல அமைதியாக ஒருவரையொருவர் ஒருவர் கேள்வியாக பார்த்துட்டு நீங்க பதிலும் சொல்லாமல், இவனுக்கு குழப்பமும் தீராமல் உங்கள் இருவரையும் பார்த்த அனு மனதிற்குள் புலம்புவது இது எல்லாம் தேவையா..?” என்று மூச்சுவிடாமல் பேசினாள்..

தென்றலைப் பார்த்த மனோ, “அம்மா தாயே கொஞ்சம் கொஞ்சம் மூச்சுவிட்டுட்டு பேசும்மா..” என்று சொல்ல இருவரையும் பார்த்த சூர்யாவிற்கு எல்லாமே புரிந்தது.. மனோவின் இந்த புன்னகை முகத்திற்கு ஒரே சொந்தக்காரி தென்றல் தான் என்று..! இருந்தாலும் சூர்யாவின் கேள்விக்கு இங்கே விடை கிடைக்காமல் போனது அவனுக்கு வருத்தத்தையே கொடுக்க அவன் எதுவும் பேசாமல் இருந்தான்..

அப்பொழுதுதான் தென்றல் கூறியதன் அர்த்தம் சூர்யாவிற்கு புரிய, “உங்களுக்கு எப்படி அண்ணி எது எல்லாம் தெரியும்..?” என்று கேட்டதும், “எல்லாம் உங்க முகத்தில் எழுது ஒட்டியிருக்கு..” என்று கூறியவள், “என்னை அண்ணி என்று கூப்பிடாதே சூர்யா..” என்று சிரித்துக்கொண்டே அவனின் அழைப்பை தவிர்த்தாள்..

அவளின் இந்த மறுப்பைக் கண்ட மனோ, ‘உன்னால் மட்டும் எப்படி தென்றல் என்னை முழுவதுமாகப் புரிந்து வைத்திருக்க முடிகிறது..?’ என்று மனதிற்குள் கேட்க, “நான் உன்னோட உயிர் பாவா.. என்னிடம் நீ எதையும் மறக்கவே முடியாது..” என்று அவனின் காதோரம் ரகசியமாகக் கூறினாள்..

இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த அனுவிற்கு, ‘மனோவிற்கு சூர்யா இப்படி கூப்பிடுவது பிடிக்கல.. அதுதான் சூர்யாவின் அப்படி கூப்பிட்டதும் வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்..’ என்று மட்டும் நன்றாக புரிந்தது..

அவளின் இரகசியம் கேட்டு சிரித்த மனோ, “உனக்கு நான் அப்புறம் சொல்கிறேன்..” என்று சொல்ல, “இப்போ நான் உங்க கேள்விக்கு என்ன பதில் சொல்ல..?” என்று கேட்டாள் தென்றல்..

அவளின் கேள்வியில் தென்றலை முறைத்த மனோ, “பதில் சொல்ல சொன்னால் நீ என்னையே கேள்வி கேட்கிற..?” என்று அவன் சிரிப்புடன் மிரட்ட, “நான் கேட்கும் பொழுதே உங்களுக்கு தெரியலையா பாவா.. என்னோட மண்டையில் களிமண் கூட பாக்கி இல்லையென்று..” என்று கூறி கண்சிமிட்டினாள் தென்றல்..

அவளைப் பார்த்த அனு, “நீயெல்லாம் இன்னும் திருந்தவே இல்லையா..?” என்று தனது வழக்கமான கேள்வியைக் கேட்க, “அவள் ஏன் அனு திருந்தனும்.. அவள் இப்படியே இருக்கட்டும்..” என்று சொன்ன மனோவின் தோளில் சாய்ந்த தென்றலின் மீது கைபோட்டு அணைத்துக் கொண்டான் மனோ..

இருவரையும் பார்த்த சூர்யா, “நீங்க இருவரும் உண்மையைச் சொல்ல மாட்டிடீங்க.. ஆனால் உங்க இருவருக்கும் உண்மை தெரியும்..” என்றவன் சொல்ல சூர்யாவைப் பார்த்த தென்றல்,

“பாவா இவன் என்ன உண்மை உண்மை என்று உண்மை கட்டிட்டு அழுகிறான் என்ன உண்மை அது உங்களுக்கு தெரியுமா..?” என்று கேட்டாள்.. அவளின் கேள்வியில் அனுதான் குழம்பினாள்..

‘இவள் என்ன இப்படி கேட்கிற..? இவளுக்கு உண்மை தெரியும் இல்ல.. அப்புறம் ஏன் இப்படி குழப்பற..?’ என்று மனதிற்குள் புலம்பிய அனு, ‘ஆமா இவங்க இருவரும் எந்த உண்மையைப் பற்றி பேசறாங்க..’ என்று குழம்பினாள்.. கடைசியில் வடிவேலு நிலையில் தான் இருந்தாள் அனு..

தென்றலைப் பார்த்த மனோ, ‘சூர்யா எம். டி. என்ற உண்மை உனக்கு தெரியவே தெரியாது..?’ என்று தனது விழியால் கேட்டான்.. அவனைப் பார்த்து குறும்பாகக் புன்னகைத்த தென்றல், ‘செத்துப்போன எங்க பாட்டி சத்திய எனக்கு தெரியாது பாவா..’ என்று உதட்டை அசைத்தவளைப் பார்த்து சிரித்தான் மனோ..

மனோ சிரிப்பதை அனு - சூர்யா இருவரும் கேள்வியாக பார்க்க, “டேய் இவளோட அல்ச்சட்டியம் தாங்கலடா.. தயவுசெஞ்சு நீயே சொல்லிருடா..” என்று சிரித்துக் கொண்டே கூறிய மனோவைப் பார்த்த சூர்யா,

“நான் ஆர். கே. கன்ஸ்ட்ரக்ஷன் எம். டி. என்று உங்களுக்கு தெரியாதா..?” என்று கேட்டதும், “என்ன சூர்யா சொல்ற..?!” என்று அதிர்ந்த தென்றலைப் பார்த்த அனு, ‘ஹப்பா என்ன நடிப்புடா சாமி.. என்ன நடிப்பு நடிக்கிறாள்..’ என்று நினைத்தாள்.. மனோவோ, ‘இது உனக்கே கொஞ்சம் ஓவராக தெரியல..?!’ என்று முறைத்தான்..

கணவன் - மனைவி இருவரையும் பார்த்த சூர்யா, “என்ன அதிர்ச்சியாக இருக்கா.. ஏன் மனோ உங்களிடம் சொல்லவே இல்லையா..?” என்று கேட்டதும், “இல்ல சூர்யா இவர் என்னிடம் எதுவுமே சொல்ல..” என்று இருபொருள் பட கூறிய தென்றலைப் பார்த்த மனோ..

“தென்றல் உன்னோட விளையாட்டு எல்லை தாண்டி போயிட்டு இருக்குடி..” என்று கண்டித்தான். மனோ சொன்னதும் தனது விளையாட்டுத்தனத்தை விட்ட தென்றல் சூர்யாவைப் பார்த்து, “சூர்யா இதுவரை நீ செய்த தவறை எல்லாம் மன்னித்து என்னோட தோழி ஒருத்திக்காக மட்டும் தான்.. அதற்கும் காரணம் நீ எங்களில் ஒருத்தன்..” என்று கூறினாள்.. மனோ தென்றலையே பார்த்தான்..

அவள் அப்படி சொன்னதும், “ஸாரி தென்றல்.. இனிமேல் அப்படி பண்ண மாட்டேன்.. நான் பழிவாங்க நினைத்ததற்கு என்னோட அப்பாவிடம், அனுவிடமும் நல்ல திட்டு வாங்கிடேன்..” என்று கூறியவன், “நான் மன்னிப்பு கேட்கத்தான் வந்தேன்..” என்று சொல்ல அவனைப் பார்த்த அனுவிற்கு மனம் நிம்மதியடைந்தது..

சூர்யா சொன்னதைக் கேட்ட தென்றல், “சூர்யா நீ திருந்திட்டியா..?!” என்று கேட்டதும் மனோவுக்கு சிரிப்புவர, “போதும் சாமி.. என்னை சேல்ஸ்மேன் நிலைக்கு கொண்டு வந்திராதீங்க.. ஆல்ரெடி நான் கொஞ்சம் குழப்பத்தில் இருக்கேன்.. என்னை மேலும் குழப்பாதீங்க..” என்று சொல்ல தென்றலும் அனுவும் சிரித்தனர்..

கடைசிவரை சூர்யா – அனு இருவரும் வந்த காரியம் நிறைவேறவே இல்லை.. இன்னொரு பக்கம் தென்றல், ‘அனுவிற்காக பேச போன பொழுது ரவிச்சந்திரனைப் பார்த்து இவர் ஏன் அதிரவே இல்லை..?!’ குழப்பம் சூழ்ந்தது.. இவர்களையெல்லாம் குழப்பிவிட்டு வேடிக்கை பார்த்தான் மனோ.. அடுத்து என்ன நடக்குமோ..?!
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இரண்டாவது பாராவில் தப்பு
வந்திட்டுது, சந்தியா செல்லம்

ஒண்ணு "தென்றல் இங்கே யாரு
வந்திருக்காங்கன்னு பாரு அனுவும்
சூர்யாவும் வந்திருக்காங்க என்று
மாடியை நோக்கிக்"ன்னு வரணும்

இல்லேன்னா, "தென்றல் சீக்கிரமா
வா அனுவும் சூர்யாவும்
வந்திருக்காங்க என்று மாடியை
நோக்கிக்"ன்னு வரணும் பா
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அதே 2nd பாராவில் "இதோ
வரேன் பாவா" என்பதில்
எதுக்கு "ஒரு" வந்தது,
சந்தியா ஸ்ரீ டியர்?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top