Keerthi Elango
மண்டலாதிபதி
Wow...so sweet epi...name selection superb.... Fullfilled Family with full of happinesss....
innum oru epi varuvaanga sis.. vaalukal vaandukal vaalu pillaikal ellorum.....Kutties oda per selection arumai. Mano thendral pair lovely. ????.Innakoda mudiyuthaa ???. I'll miss vaalu pillaikal.
Oru epi thane irukku. Athan ippave feel ayachu.innum oru epi varuvaanga sis.. vaalukal vaandukal vaalu pillaikal ellorum.....
superb story sri... thentral so cute.. sema story. all the bestஅங்கிருந்த எல்லோருக்கும் இரண்டு குழந்தைகளின் பெயர்களும் பிடித்திருக்க தென்றல் மட்டும் பித்துபிடித்ததைப் போல அமர்ந்திருக்க அவளின் கைகளில் அழுத்தம் கொடுத்தது அவளை மீட்டு எடுத்தவனின் முகத்தைப் பார்த்தவளுக்கு வார்த்தைகளே வரவில்லை..
எல்லோரும் சந்தோசத்தில் இருக்க, “மாமா இருவருக்கும் பெயர் செலக்க்ஷன் சூப்பர்.. அக்கா பெயர் இளந்தென்றல், இளநிலா, இளமாறன்..” என்று அவன் ரசித்துச் சொல்ல அப்பொழுதுதான் தென்றலின் முகம் பார்த்தான் மனோ..
அவள் அவனைப் பார்த்து, “பாவா..” என்று அழைக்க அவளைப் பார்த்து சிரித்தான் மனோ.. வாண்டுகள் எல்லோரும் சந்தோசத்தில் துள்ளிக்குதித்து தங்களின் மகிழ்ச்சியை வெளிபடுத்த நிகழ்ச்சி முடிந்தது எல்லோரும் பேசிக்கொண்டிருக்க குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு அறைக்குள் வந்த தென்றலின் பின்னோடு அறைக்குள் நுழைந்தான் மனோ..
நிலாவையும், மாறனையும் தொட்டிலில் படுக்கவைத்த தென்றல் மனோ உள்ளே நுழைந்ததும் கதவை சாத்தி தாழிட்டாள்.. அவள் தாழிட்டதும் அவளின் அருகில் வந்து நின்றான் மனோ..
அவளுக்கு குழந்தைகளுக்கு வைத்த பெயரின் முதல் இரண்டு எழுத்தின் விளக்கம் ரொம்பவும் தேவையாக இருக்க அவனின் சட்டை காலரைப் பற்றியவள், “பாவா சொல்லு என்னோட பெயரின் முதல் எழுத்தைக்கொண்டு நிலாவுக்கும், மாறனுக்கும் பெயர் வச்சிருக்க.. பெயரை ஏன் அப்படி வச்சிருக்க..” என்று அவள் ஆவேசமாகக் கேட்டாள்..
அவளின் ஆதங்கம் எல்லாம் மனோவின் முதல் எழுத்தில் குழந்தைகளின் பெயரை தேர்வு செய்யாமல் இப்படி என்னோட பெயரின் முதல் எழுத்தை வைத்தே பெயர் வைத்தது அவளுக்கு ஆச்சர்யமாகவும் அதே அளவு கோபமும் வந்தது.. அந்த கோபம் முழுக்க அவனிடம் திரும்பியது..
அவளின் கோபத்தைக் கூட ரசித்த மனோ, “உனக்கு அப்புறம்தான் எனக்கு எல்லா உறவுகளும்.. நம்மோட காதல் வாழ்க்கைக்கு இவங்க பரிசு என்றால் இந்த மனோவின் வாழ்க்கைக்கு அர்த்தமே தென்றல் மட்டும்.. என்னோட புயல் மட்டும்தான்.. அதுதான் இந்த பெயர்..” என்று அழுத்தமாகக் கூறினான்..
அவனின் பார்வை முழுக்க அவளின் மீதே இருக்க, “நான் என்னடா செய்தேன் உனக்கு எதுக்கு என்மேல் உனக்கு இவ்வளவு பாசம், அன்பு, காதல்..” என்று தன்னுடைய மனதில் இருப்பதைக் கேட்டே விட்டாள்..
அவளின் முகத்தைக் கையில் ஏந்திய மனோ, “நீ எனக்கு என்னடி செய்யல சொல்லு பார்க்கலாம்.. இரும்பாக இருந்த என்னை மனுசனாக மாற்றி சிரிக்க வைத்து உலகத்தில் உள்ள மகிழ்ச்சியின் உச்சத்தை தொடவைத்தவள் நீ.. நீ எனக்கு எல்லாம் செஞ்சிருக்க..” என்று கூறியவன்,
“எனக்கு எல்லா உறவுகளையும், அதன் மூலம் கிடைக்கும் சந்தோசத்தை ஆனந்தத்தையும் கொடுத்தவள் நீ.. என்னோட வாழ்க்கையில் நான் ரசிக்கும் ஒவ்வொரு நொடிக்கும் அர்த்தம் கொடுத்தவள் நீ.. நீ மட்டும் தான்..” என்று கூறியவன் நிறுத்து அவளின் முகத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் தொடர்ந்தான்..
“சோ உன்னோட பெயரில் தான் நம்ம குழந்தைகள் பெயர் தொடங்கணும் என்று முடிவெடுத்தேன்.. இதில் என்னடி தப்பு இருக்கு சொல்லுடி..” என்று கேட்டவனின் குரலில் சத்தியமாக கோபம் இல்லை.. காதல் மட்டுமே இருந்தது..
“ஒரு மனுஷனை சிரிக்க வைப்பது ரொம்வ கஷ்டம்டா.. ஆனால் நீ என்னை முற்றிலும் மனுசனாக மாத்தியிருக்க.. என்னோட காதலை நான் வார்த்தையில் சொல்ல முடியாதுடி.. உனக்கு என்ன கோபம் வந்தாலும் என்னிடம் காட்டு.. நான் அதை தாங்குவேன்..” என்று சொல்லவும் அவனின் மார்பில் சாய்ந்தாள்..
“பாவா காதலுக்கு அர்த்தம் எல்லாமே மாறிவிட்டது என்று சொல்றாங்க.. ஆனால் உன்னைப்போல மனைவியை நேசிக்கும் கணவன், காதலியை நேசிக்கும் காதலன் இருக்கும் வரை காதலின் அர்த்தம் மாறாது..” என்று சொல்ல அவளை அணைத்துக் கொண்டான் மனோ..
அவளின் கூந்தலை வருடி அவளை சமாதானம் செய்த மனோ, “தென்றல் உனக்கு இந்த பெயர்கள் பிடித்திருக்கிறதா..?” என்று வருத்தத்துடன் கேட்டதும், “பாவா பெயர் ரொம்ப நல்ல இருக்கு..” என்று அவள் சிரித்துக்கொண்டே கூறினாள்..
அவளின் சிரித்த முகத்தைப் பார்த்த மனோ, “இனிமேல் என்னை ரஞ்சிதா என்று கிண்டல் பண்ணுவியா தென்றல்..?!” என்று குறும்புடன் கேட்டான்..
அவனின் கேள்வியில் அவனை நிமிர்ந்துப் பார்த்த தென்றல், “ஸாரி ரஞ்சிதா நான் இன்னும் எதைப்பற்றியும் யோசிக்கல.. சோ ஸாரி ரஞ்சிதா..” என்று குறும்பு கூத்தாட கூறியவள் கலகலவென்று சிரிக்க அவளின் சிரிப்பில் தொலைந்தது அவனின் மனது..
பெண் குழந்தை பிறந்ததில் இருந்து தென்றல் மனோவை ரஞ்சிதா என்று அழைத்துக் கிண்டல் செய்ய மனோ அதைக் கேட்டால், “நான் என்னோட பொண்ணுக்கிட்ட பேசுவதைப் பார்த்து உங்களுக்கு பொறாமை..” என்று மனோவை வம்பிற்கு இழுப்பாள்.. அவனும் அவளுக்கு ஏற்றது போலவே அவளை வம்பிற்கு இழுப்பான்.. அதைதான் இப்பொழுது பேசிட்டு இருக்காங்க..
அவனின் முகத்தைக் கையில் ஏந்திய தென்றல், “என்னோட வாழ்க்கையில் இந்த நிமிஷம் எனக்கு எல்லா உறவுகளும் இருக்காங்க என்றால் அதற்கு நீதான் பாவா காரணம்..” என்று கூறியவள் அவனின் நெற்றியில் முத்தமிட்டு, “பணம் முக்கியம் இல்லடா.. மனசு முக்கியம்.. அது உன்னிடம் இருக்கிறது..” என்று சந்தோசமாகக் கூறினாள்..
ஒரு மனிதனின் வாழ்வில் காதல் வந்தால் எத்தனை மாற்றங்கள் நிகழ்கிறது.. இதற்கு எல்லாம் மனசுதான் காரணம், ‘மனம் இருந்தால் மாற்றம் உண்டு..’ என்று எல்லோரும் சொல்றாங்க.. அந்த மனதில் காதல் இருந்தால் வாழ்க்கையே வசந்தம் தான்..
மனோவின் புயலென்று நுழைந்த தென்றல் மனோவை எந்த அளவுக்கு மாற்றி இருக்கிறாள் என்று அவளுக்கு தெரியாது.. ஆனால் மனோவிற்கு தெரியும் தான் எந்தளவுக்கு மாறி இருக்கிறோம் என்று..! அவனின் மாற்றமே அவனுக்கு வாழ்க்கையின் வசந்தத்தைக் காட்டியது தென்றலின் மூலம்..!
அவள் சொன்னதைக் கேட்டு அவளை வளைத்து அணைத்த மனோ அவளின் தேன் இதழ்களில் இதழ் பதிக்க அவனின் முத்தத்தில் தன்னை அவனிடம் தொலைத்து அவனின் கைகளில் மயங்கினாள் தென்றல்.. இருவரையும் பிரிக்க எண்ணிய மாறனும், நிலாவும் சிணுங்க அவர்கள் அழுகுரல் அவர்கள் காதலுக்கு வாழ்த்து பாடியது..