அத்தியாயம் – 5
முதல் மாதம் சம்பளம் வாங்கியதும், பிரதாப், நிவாஸ், சுனில், ராகுல், ஷிவானி ஐந்து பேரும் பெரிய ஹோட்டலுக்கு சென்றனர்.. அவர்களுக்கு பிடித்ததை வாங்கி கொடுத்துவிட்டு அவளும் சாப்பிட ஆரமிக்க, நிவாஸ் தான் முதலில் தனது பேச்சை ஆரமித்தான்..
“தென்றல் நல்ல பொண்ணாக மாறி முதல் மாத சம்பளத்தை வாங்கிட்ட என்பதில் எனக்கு ரொம்ப சந்தோசம் மா.. என்னோட அப்பாவிடம் நான் பெருமையாக சொன்னேன்..” என்று அவன் கர்வத்துடன் சொல்ல,
“டேய் நல்ல இருக்கும் என்னை ராச்சசியாக மர்ரிவிட்டாதே.. உனக்கு நான் என்னடா துரோகம் பண்ணினேன்..?! அந்த இரும்பு மனிதனிடம் என்னை மாட்டிவிட்டு விட்டாயே..?!” என்று புலம்பிய தென்றலை பார்த்த ராகுல்,
“ஏன் தென்றல் இவன்தான் கையெழுத்து கேட்டான் என்றால் நீயும் கையெழுத்து போட்டுக் கொடுத்துவிட்டு இப்பொழுது வந்து புலம்பி என்ன ஆக போகிறது..?!” என்று சிரிப்புடன் கேட்டுவிட்டு சாப்பிட ஆரமித்தான்..
“அந்த கையெழுத்தை தான் தெரியாமல் போட்டுவிட்டேன்.. என்னோட தலை எழுத்தே மாறிவிட்டது.. யாரிடமும் தென்றல் இப்படி அமைதியாக வேலை செய்ததே இல்ல தெரியுமா..?!” என்றவள் சாப்பிட,
“உனக்கு இந்த வேலை வேண்டாம் என்று விட்டுவிட்டு வரவேண்டியது தானே..” என்று கேட்டான் சுனில்..
அதை கேட்ட தென்றல், “அதை செய்ய வழியில்லாமல் தான் முழிக்கிறேன்.. எனக்கு மட்டும் அந்த இரும்பு மனிதனிடம் வேலை செய்ய ஆசை பாரு..” என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளியிட்ட தென்றலைப் பார்த்து அனைவரும் சிரித்தனர்..
“அதுதான் ஏன்..?!” என்று புரியாமல் கேட்டான் ஷிவானி.. “இவனிடம் இருக்கும் அக்ரிமெண்ட் படி நான் அந்த கம்பெனியில் ஒருவருடம் வேலை செய்ய வேண்டும்..” என்று சொல்ல
“இவன் ஒரு ஆள்.. இவனுடன் அக்ரிமெண்ட் போட்ட உன்னை நினைத்தால் எனக்கு அப்படியே பற்றிக்கொண்டு வருகிறது..” என்று திட்டினான் ராகுல்.. அவன் சொன்னதைக் கேட்டு தென்றலை முறைத்தான் நிவாஸ்..
அவன் முறைப்பதைப் பார்த்து, “டேய் நீ கொஞ்சம் வாயை வைத்து சும்மா இரு.. இவன் என்னை முறைக்கிறான்..” என்று புன்னகையுடன் கூறினாள் தென்றல்..
இவ்வாறு அனைவரும் பேசி சிரித்துக் கொண்டே சாப்பிட அந்த சாப்பாடு தேவாமிர்தமாக இருந்தது.. அவள் ஒன்று சொல்ல அதற்கு அந்த வாண்டுகள் தன்னுடைய கருத்தை சொல்கிறேன் என்று அவளை கழுவி கழுவி ஊத்த நேரம் விரைந்து சென்றது..
அவர்களை பத்திரமாக வீட்டில் கொண்டு சேர்த்த தென்றல் தன்னுடைய அறைக்கு வரும் பொழுது இரவு மணி ஏழு. அப்படியே வந்து சோபாவில் படுத்தவள் நினைவுகள் அனைத்தும் மனோவை நோக்கி சென்றது..
அவளும் அந்த அலுவலகத்தில் ஒரு மாதமாக வேலை செய்கிறாள் தான் ஆனால் அவன் யாரிடமும் சிரித்து பேசியதோ.. இல்லை பார்மாலிட்டிக்காக கூட அவன் சிரிக்காதது அவளின் மனதில் ஆழமான கேள்வி ஒன்றை உருவாக்க எழுந்து அமர்ந்தாள்..
“இவனுக்கு என்ன குறையாக இருக்கும்..?! சொத்துகள் இன்னும் நாலு தலைமுறைக்கு வேண்டும் என்ற அளவுக்கு சம்பாரித்து வைத்திருக்கின்றனர்..” என்று தனக்கு தானே கேள்வி கேட்டவள்,
“இவனுக்கு சிரிப்பே வராதா..?! இவன் சிரித்தால் அந்த புயலில் பல அழகிய மங்கைகள் அந்த இரும்பு மனிதனின் புன்னகையில் சிக்கி சின்னாபின்னமாக மாறிவிடுவார்களே..?!” என்று சிரித்துக் கொண்டே யோசித்தாள்..
“மனோரஞ்சன் பேருக்கு ஏற்ற ஏதாவது அவனிடம் இருக்கிறதா..?! எப்பொழுது பார்த்தாலும் மூஞ்சியை இஞ்சி தின்ன குரங்கு ரேஞ்சில் வைத்திருக்கிறது அந்த தேவாங்கு..” என்று தனக்கு தெரிந்த நல்ல வார்த்தைகள் சொல்லி அவனை திட்ட ஆரமித்தவள்,
“இவனுக்கு என்று யாருமே இல்லையா..?! இல்ல இந்த கதைகளில் வருவது போல முதல் லவ் பெயிலியரோ..?!” என்று யோசிக்க அவளின் மனம் இடம் தரவில்லை..
“இல்ல இவனின் முகத்தில் இருக்கும் கடுப்பைக் கண்டு பொண்ணுங்க பத்தடி தள்ளியே நிற்ப்பார்கள்..” என்று அவளுக்கு அவளே சொல்லி அவளின் மனதை தேற்றிக்கொண்டாள்..
இப்படியே அவனின் கன்ஸ்ட்ரக்ஷனில் வேலைக்கு சேர்ந்து ஆறுமாதம் ஆகிவிட்டது.. அவள் செய்யும் சேட்டையில் என்ன செய்வது என்று புரியாமல் இருக்கிறான் மனோ..
அன்று காலையில் வழக்கத்திற்கு மாறாக முதல் ஆளாக அலுவலகத்தின் உள்ளே நுழைந்த தென்றலைப் பார்த்த மனோ, தனது கையிலிருந்த வாட்சைப் பார்த்தவன், “இவள் சீக்கிரம் வர ஆளே கிடையாதே..?!” என்று தனக்கு தானே யோசிக்க ஆரமித்தான்..
இந்த ஆறு மாதத்தில் அவளின் அன்றாட செயல்கள் அனைத்தும் அவனுக்கு அத்துபடியானது.. அவள் காலையில் வந்ததும் அவன் சொல்லும் மெயிலை சரிபார்த்து அதற்கு ஏற்றது போல அவன் சொல்லும் கொட்டேஷனை குறித்து லெட்டர் டைப் பண்ணி அனுப்ப வேண்டிய கம்பெனிக்கு அனுப்புவது, அடுத்து அவன் செல்லும் மீட்டிங் பற்றியும் அவன் செல்ல வேண்டிய நேரம் மற்றும் அதற்கு தேவைப்படும் குறிப்புகள் அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருப்பாள்..
அவளை மற்றவர்கள் குறை சொல்லும் அளவிற்கு அவள் நடப்பதே இல்ல.. இதெல்லாம் யோசித்தவன் அவளை சந்தேகமாகப் பார்க்க அனுவின் கேள்விக்கு புன்னகையோடு பதில் சொல்லிக் கொண்டிருந்தான் தென்றல்..
காலையில் வந்தததும் தன்னுடைய கேபினில் அமர்ந்து வேலை செய்தவளை அறையின் உள்ளே இருந்து கவனித்துக் கொண்டிருந்தான் மனோ.. அவனுக்கு அவளின் இந்த விஷயம் மிகுந்த ஆச்சர்யத்தைக் கொடுத்தது..
அவன் அடிக்கடி சைட்டைப் பார்க்க வெளியே செல்லும் நேரங்களில் அவள் அலுவலகத்தில் செய்யும் சேட்டைகள் அனைத்தும் அவனுக்கு தெரியும் இருந்தாலும் கூட, அவன் அமைதியாக இருக்க காரணம் அவள் எந்த வேலையும் செய்யாமல் லூட்டி அடிப்பது கிடையாது.. அவள் அளவில் அவள் சரியாக இருந்தாள் அதுதான் அவனுக்கும் வேண்டும்..
அவள் தனது வேலையை மும்பரமாக தொடர, அவளை ஆராய்ச்சியுடன் பார்த்த வண்ணம் உள்ளே வந்த அனு, “என்னடா காரணமே இல்லாமல் வெளியே மலை பொழிகிறதே என்று நினைத்தேன்.. இப்பொழுது தான் தெரிகிறது இந்த புயல் இங்கே மையம் கொண்டிருக்கிறது..” என்று அவள் கிண்டலாக சொல்ல அவளை நிமிர்ந்து பார்த்த தென்றல்,
“ஹாய் அனு.. குட் மார்னிங் மா..” என்று சொல்லிவிட்டு தன்னோட வேலையை செய்ய அவளை புரியாத பார்வைப் பார்த்தாள் அனு.. ‘இவள் இப்படி எப்பொழுது செய்யவே மாட்டாள்..’ என்று யோசித்த அனு,
“ஸ்கூட்டி ரிப்பேர் என்று சொன்னாய்..?! இப்பொழுது எப்படி இவ்வளவு சீக்கிரம் வந்திருக்கிறாய்..?!” என்று கேட்டதும், “என்னை பிரதாப் கொண்டு வந்து விட்டான் அனு..” என்று அவள் கண்ணடித்த வண்ணம் சொல்லிவிட்டு, அவள் தன்னோட வேலையை செய்ய, அவள் சொன்னதைக்கேட்டு மனோவிற்கு கோபம் வந்தது..
இது எப்பொழுதும் வாடிக்கையாக நடக்கும் ஒன்றுதான்.. ஒருநாள் லேட்டாக வந்ததும் அவளிடம், ‘ஏன் லேட்டாக வந்தாய்..?!’ என்று கேட்டால், “சிவாசுதன் கூட பேசிட்டே வந்ததில் டைமை கவனிக்க மறந்துவிட்டேன்..” என்று சொல்லி அவனை கடுப்பேற்றும் வகையில் சிரித்துவிட்டு செல்வாள்..
மாலை பர்மிஷன் கேட்டு வந்து நிற்கும் தென்றலிடம், “இப்பொழுது எதற்கு பர்மிஷன்..?!” என்று அவன் தலையை நிமிர்த்தாமல் கேட்டால், “சுனில் எனக்காக பார்க்கில் வெய்ட் பண்ணுவான் சார்..” என்று கூறுவாள்..
அவன் அவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு, “ம்ம் சரி போங்க.. காலையில் வேலை இருக்கிறது.. சீக்கிரம் வாங்க..” என்று சொல்லி அனுப்பி வைத்தால் மறுநாள் காலையில் லேட்டாக வந்து நின்று அவனின் பிரஷரை ஏற்றுவாள்.. அதுதான் அவன் காலையிலேயே கடுப்பாகக் காரணம்..
இதெல்லாம் அவள் சொல்ல ஒரே காரணம் தன்னுடைய பாதுக்காப்பிற்கு என்பது அவளும் அனுவும் மட்டுமே அறிந்த விஷயம்.. அவள் ராகுல், நிவாஸ், சுனில் என்று சொல்வது எல்லாம் பதில் இருந்து பதினைந்து வயதை உடைய பொடுசுகள், வாண்டுகள் என்பது அவர்கள் மட்டுமே அறிந்த உண்மை..
‘ஆனால் மற்றவர்கள் அதைப் பற்றி என்ன நினைக்கின்றனர்..?!’ என்பதை பற்றி அவர்கள் யோசிக்கவே மாட்டார்கள்.. அவள் அப்படி சொல்லும் பொழுது பிரபா காதுகளில் இருந்து வரும் புகை அனுவிற்கு பிடிக்கும் என்றால் மனோ அவளை கொலைவெறியுடன் பார்ப்பது தென்றலுக்கு பிடிக்கும்..
அவள் அமைதியாக வேலை செய்ய காரணமே, ‘அப்படியாவது அவனின் முகத்தில் ஒரு புன்னகை அழகாக மலராத என்று தான்.. அவள் இங்கே இருக்க போவது இன்னும் ஆறுமாதம் என்றாலும் அவனை சிரிக்க வைக்க வேண்டும்..’ என்று முயற்சியை கைவிடாமல் இருந்தாள் தென்றல்..
முதல் மாதம் சம்பளம் வாங்கியதும், பிரதாப், நிவாஸ், சுனில், ராகுல், ஷிவானி ஐந்து பேரும் பெரிய ஹோட்டலுக்கு சென்றனர்.. அவர்களுக்கு பிடித்ததை வாங்கி கொடுத்துவிட்டு அவளும் சாப்பிட ஆரமிக்க, நிவாஸ் தான் முதலில் தனது பேச்சை ஆரமித்தான்..
“தென்றல் நல்ல பொண்ணாக மாறி முதல் மாத சம்பளத்தை வாங்கிட்ட என்பதில் எனக்கு ரொம்ப சந்தோசம் மா.. என்னோட அப்பாவிடம் நான் பெருமையாக சொன்னேன்..” என்று அவன் கர்வத்துடன் சொல்ல,
“டேய் நல்ல இருக்கும் என்னை ராச்சசியாக மர்ரிவிட்டாதே.. உனக்கு நான் என்னடா துரோகம் பண்ணினேன்..?! அந்த இரும்பு மனிதனிடம் என்னை மாட்டிவிட்டு விட்டாயே..?!” என்று புலம்பிய தென்றலை பார்த்த ராகுல்,
“ஏன் தென்றல் இவன்தான் கையெழுத்து கேட்டான் என்றால் நீயும் கையெழுத்து போட்டுக் கொடுத்துவிட்டு இப்பொழுது வந்து புலம்பி என்ன ஆக போகிறது..?!” என்று சிரிப்புடன் கேட்டுவிட்டு சாப்பிட ஆரமித்தான்..
“அந்த கையெழுத்தை தான் தெரியாமல் போட்டுவிட்டேன்.. என்னோட தலை எழுத்தே மாறிவிட்டது.. யாரிடமும் தென்றல் இப்படி அமைதியாக வேலை செய்ததே இல்ல தெரியுமா..?!” என்றவள் சாப்பிட,
“உனக்கு இந்த வேலை வேண்டாம் என்று விட்டுவிட்டு வரவேண்டியது தானே..” என்று கேட்டான் சுனில்..
அதை கேட்ட தென்றல், “அதை செய்ய வழியில்லாமல் தான் முழிக்கிறேன்.. எனக்கு மட்டும் அந்த இரும்பு மனிதனிடம் வேலை செய்ய ஆசை பாரு..” என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளியிட்ட தென்றலைப் பார்த்து அனைவரும் சிரித்தனர்..
“அதுதான் ஏன்..?!” என்று புரியாமல் கேட்டான் ஷிவானி.. “இவனிடம் இருக்கும் அக்ரிமெண்ட் படி நான் அந்த கம்பெனியில் ஒருவருடம் வேலை செய்ய வேண்டும்..” என்று சொல்ல
“இவன் ஒரு ஆள்.. இவனுடன் அக்ரிமெண்ட் போட்ட உன்னை நினைத்தால் எனக்கு அப்படியே பற்றிக்கொண்டு வருகிறது..” என்று திட்டினான் ராகுல்.. அவன் சொன்னதைக் கேட்டு தென்றலை முறைத்தான் நிவாஸ்..
அவன் முறைப்பதைப் பார்த்து, “டேய் நீ கொஞ்சம் வாயை வைத்து சும்மா இரு.. இவன் என்னை முறைக்கிறான்..” என்று புன்னகையுடன் கூறினாள் தென்றல்..
இவ்வாறு அனைவரும் பேசி சிரித்துக் கொண்டே சாப்பிட அந்த சாப்பாடு தேவாமிர்தமாக இருந்தது.. அவள் ஒன்று சொல்ல அதற்கு அந்த வாண்டுகள் தன்னுடைய கருத்தை சொல்கிறேன் என்று அவளை கழுவி கழுவி ஊத்த நேரம் விரைந்து சென்றது..
அவர்களை பத்திரமாக வீட்டில் கொண்டு சேர்த்த தென்றல் தன்னுடைய அறைக்கு வரும் பொழுது இரவு மணி ஏழு. அப்படியே வந்து சோபாவில் படுத்தவள் நினைவுகள் அனைத்தும் மனோவை நோக்கி சென்றது..
அவளும் அந்த அலுவலகத்தில் ஒரு மாதமாக வேலை செய்கிறாள் தான் ஆனால் அவன் யாரிடமும் சிரித்து பேசியதோ.. இல்லை பார்மாலிட்டிக்காக கூட அவன் சிரிக்காதது அவளின் மனதில் ஆழமான கேள்வி ஒன்றை உருவாக்க எழுந்து அமர்ந்தாள்..
“இவனுக்கு என்ன குறையாக இருக்கும்..?! சொத்துகள் இன்னும் நாலு தலைமுறைக்கு வேண்டும் என்ற அளவுக்கு சம்பாரித்து வைத்திருக்கின்றனர்..” என்று தனக்கு தானே கேள்வி கேட்டவள்,
“இவனுக்கு சிரிப்பே வராதா..?! இவன் சிரித்தால் அந்த புயலில் பல அழகிய மங்கைகள் அந்த இரும்பு மனிதனின் புன்னகையில் சிக்கி சின்னாபின்னமாக மாறிவிடுவார்களே..?!” என்று சிரித்துக் கொண்டே யோசித்தாள்..
“மனோரஞ்சன் பேருக்கு ஏற்ற ஏதாவது அவனிடம் இருக்கிறதா..?! எப்பொழுது பார்த்தாலும் மூஞ்சியை இஞ்சி தின்ன குரங்கு ரேஞ்சில் வைத்திருக்கிறது அந்த தேவாங்கு..” என்று தனக்கு தெரிந்த நல்ல வார்த்தைகள் சொல்லி அவனை திட்ட ஆரமித்தவள்,
“இவனுக்கு என்று யாருமே இல்லையா..?! இல்ல இந்த கதைகளில் வருவது போல முதல் லவ் பெயிலியரோ..?!” என்று யோசிக்க அவளின் மனம் இடம் தரவில்லை..
“இல்ல இவனின் முகத்தில் இருக்கும் கடுப்பைக் கண்டு பொண்ணுங்க பத்தடி தள்ளியே நிற்ப்பார்கள்..” என்று அவளுக்கு அவளே சொல்லி அவளின் மனதை தேற்றிக்கொண்டாள்..
இப்படியே அவனின் கன்ஸ்ட்ரக்ஷனில் வேலைக்கு சேர்ந்து ஆறுமாதம் ஆகிவிட்டது.. அவள் செய்யும் சேட்டையில் என்ன செய்வது என்று புரியாமல் இருக்கிறான் மனோ..
அன்று காலையில் வழக்கத்திற்கு மாறாக முதல் ஆளாக அலுவலகத்தின் உள்ளே நுழைந்த தென்றலைப் பார்த்த மனோ, தனது கையிலிருந்த வாட்சைப் பார்த்தவன், “இவள் சீக்கிரம் வர ஆளே கிடையாதே..?!” என்று தனக்கு தானே யோசிக்க ஆரமித்தான்..
இந்த ஆறு மாதத்தில் அவளின் அன்றாட செயல்கள் அனைத்தும் அவனுக்கு அத்துபடியானது.. அவள் காலையில் வந்ததும் அவன் சொல்லும் மெயிலை சரிபார்த்து அதற்கு ஏற்றது போல அவன் சொல்லும் கொட்டேஷனை குறித்து லெட்டர் டைப் பண்ணி அனுப்ப வேண்டிய கம்பெனிக்கு அனுப்புவது, அடுத்து அவன் செல்லும் மீட்டிங் பற்றியும் அவன் செல்ல வேண்டிய நேரம் மற்றும் அதற்கு தேவைப்படும் குறிப்புகள் அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருப்பாள்..
அவளை மற்றவர்கள் குறை சொல்லும் அளவிற்கு அவள் நடப்பதே இல்ல.. இதெல்லாம் யோசித்தவன் அவளை சந்தேகமாகப் பார்க்க அனுவின் கேள்விக்கு புன்னகையோடு பதில் சொல்லிக் கொண்டிருந்தான் தென்றல்..
காலையில் வந்தததும் தன்னுடைய கேபினில் அமர்ந்து வேலை செய்தவளை அறையின் உள்ளே இருந்து கவனித்துக் கொண்டிருந்தான் மனோ.. அவனுக்கு அவளின் இந்த விஷயம் மிகுந்த ஆச்சர்யத்தைக் கொடுத்தது..
அவன் அடிக்கடி சைட்டைப் பார்க்க வெளியே செல்லும் நேரங்களில் அவள் அலுவலகத்தில் செய்யும் சேட்டைகள் அனைத்தும் அவனுக்கு தெரியும் இருந்தாலும் கூட, அவன் அமைதியாக இருக்க காரணம் அவள் எந்த வேலையும் செய்யாமல் லூட்டி அடிப்பது கிடையாது.. அவள் அளவில் அவள் சரியாக இருந்தாள் அதுதான் அவனுக்கும் வேண்டும்..
அவள் தனது வேலையை மும்பரமாக தொடர, அவளை ஆராய்ச்சியுடன் பார்த்த வண்ணம் உள்ளே வந்த அனு, “என்னடா காரணமே இல்லாமல் வெளியே மலை பொழிகிறதே என்று நினைத்தேன்.. இப்பொழுது தான் தெரிகிறது இந்த புயல் இங்கே மையம் கொண்டிருக்கிறது..” என்று அவள் கிண்டலாக சொல்ல அவளை நிமிர்ந்து பார்த்த தென்றல்,
“ஹாய் அனு.. குட் மார்னிங் மா..” என்று சொல்லிவிட்டு தன்னோட வேலையை செய்ய அவளை புரியாத பார்வைப் பார்த்தாள் அனு.. ‘இவள் இப்படி எப்பொழுது செய்யவே மாட்டாள்..’ என்று யோசித்த அனு,
“ஸ்கூட்டி ரிப்பேர் என்று சொன்னாய்..?! இப்பொழுது எப்படி இவ்வளவு சீக்கிரம் வந்திருக்கிறாய்..?!” என்று கேட்டதும், “என்னை பிரதாப் கொண்டு வந்து விட்டான் அனு..” என்று அவள் கண்ணடித்த வண்ணம் சொல்லிவிட்டு, அவள் தன்னோட வேலையை செய்ய, அவள் சொன்னதைக்கேட்டு மனோவிற்கு கோபம் வந்தது..
இது எப்பொழுதும் வாடிக்கையாக நடக்கும் ஒன்றுதான்.. ஒருநாள் லேட்டாக வந்ததும் அவளிடம், ‘ஏன் லேட்டாக வந்தாய்..?!’ என்று கேட்டால், “சிவாசுதன் கூட பேசிட்டே வந்ததில் டைமை கவனிக்க மறந்துவிட்டேன்..” என்று சொல்லி அவனை கடுப்பேற்றும் வகையில் சிரித்துவிட்டு செல்வாள்..
மாலை பர்மிஷன் கேட்டு வந்து நிற்கும் தென்றலிடம், “இப்பொழுது எதற்கு பர்மிஷன்..?!” என்று அவன் தலையை நிமிர்த்தாமல் கேட்டால், “சுனில் எனக்காக பார்க்கில் வெய்ட் பண்ணுவான் சார்..” என்று கூறுவாள்..
அவன் அவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு, “ம்ம் சரி போங்க.. காலையில் வேலை இருக்கிறது.. சீக்கிரம் வாங்க..” என்று சொல்லி அனுப்பி வைத்தால் மறுநாள் காலையில் லேட்டாக வந்து நின்று அவனின் பிரஷரை ஏற்றுவாள்.. அதுதான் அவன் காலையிலேயே கடுப்பாகக் காரணம்..
இதெல்லாம் அவள் சொல்ல ஒரே காரணம் தன்னுடைய பாதுக்காப்பிற்கு என்பது அவளும் அனுவும் மட்டுமே அறிந்த விஷயம்.. அவள் ராகுல், நிவாஸ், சுனில் என்று சொல்வது எல்லாம் பதில் இருந்து பதினைந்து வயதை உடைய பொடுசுகள், வாண்டுகள் என்பது அவர்கள் மட்டுமே அறிந்த உண்மை..
‘ஆனால் மற்றவர்கள் அதைப் பற்றி என்ன நினைக்கின்றனர்..?!’ என்பதை பற்றி அவர்கள் யோசிக்கவே மாட்டார்கள்.. அவள் அப்படி சொல்லும் பொழுது பிரபா காதுகளில் இருந்து வரும் புகை அனுவிற்கு பிடிக்கும் என்றால் மனோ அவளை கொலைவெறியுடன் பார்ப்பது தென்றலுக்கு பிடிக்கும்..
அவள் அமைதியாக வேலை செய்ய காரணமே, ‘அப்படியாவது அவனின் முகத்தில் ஒரு புன்னகை அழகாக மலராத என்று தான்.. அவள் இங்கே இருக்க போவது இன்னும் ஆறுமாதம் என்றாலும் அவனை சிரிக்க வைக்க வேண்டும்..’ என்று முயற்சியை கைவிடாமல் இருந்தாள் தென்றல்..