அத்தியாயம் – 6
அவனின் முகம் மாறுவதைக் கண்டவள் கோபத்தில் பல்லைக் கடித்துக் கொண்டே அவனைப் பார்க்க அவன் பேசும் வரையில் அமைதியாக இருந்தவள் அவன் போனை வைத்ததும், “என்ன சார் டெண்டர் உங்களுக்கு கிடைத்துவிட்டாதா..?!” என்று நக்கலாகக் கேட்டாள் தென்றல்..
அவள் சொல்வது உண்மைதான் அந்த கவர்மெண்ட் டெண்டர் இவர்கள் நிறுவனத்திற்கு தான் கிடைத்துள்ளது என்றுதான் போனில் தெரிவிக்கப்பட்டது..
அவள் அப்படி கேட்டதும், “உன்னோட மனதில் என்னதான் நினைக்கிறாய்..?! நான் கொடுத்த கொட்டேஷனை கொடுக்காமல் உன்னோட இஸ்டத்திற்கு செய்கிறாய் என்று கோபத்தில் தான் கேட்டேன்..” என்று அவன் அவனின் பக்கத்தில் இருக்கும் நியாயத்தை அவன் கூறினான்.. அவனின் குரல் கொஞ்சம் தாழ்ந்து தான் வந்தது..
“என்ன கேட்டீங்க நேரத்திற்கு நேரம் ஆள் மாத்திட்டு இருக்கேன் என்று கேட்டதையா சார் சொல்றீங்க..?!” என்று ஒன்றும் அறியாதவள் போல அவனின் கேள்வியை வைத்தே அவனை அடித்தாள்..
அவளின் கேள்வியை கேட்டு அவன் அதிர்ந்து நிற்க அவனை நிமிர்ந்து பார்த்தவள், “உங்களின் மனதில் என்னை பற்றி என்ன நினைச்சிட்டு இருக்கீங்க..” என்று கேட்டதற்கு, “நான் சொன்ன டெண்டர் கொட்டேஷனை கொடுக்காமல் உன்னை யார் மாற்றிக் கொடுக்க சொன்னது..? அதற்கு முதலில் பதில் சொல்லு..” என்று அவன் அதிகரமாகச் சொல்ல,
“அந்த கேள்விக்கு நான் அப்புறம் பதில் சொல்றேன்.. முதலில் என்னோட கேள்விக்கு பதில் சொல்லுடா..” என்று மரியாதை இல்லாமல் பேசியதும் அவனுக்கு கோபம் வர, “உனக்கெல்லாம் ஒருமுறை சொன்னால் புரியாது.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கிப் பழகு.. இல்ல அன்னைக்கு நான் கொடுத்தது உன்னோட நினைவில் இருக்கும் என்று நினைக்கிறேன்..” என்று அவன் அவளை அடித்தை நினைவு படுத்தவும்,
“உனக்கு என்ன மரியாதை வேண்டிக் கிடைகிறது..?! உன்னிடம் வேலை செய்கிறேன் என்பதற்காக நீ அடித்தால் கூட வாங்கிட்டு அமைதியாக கண்ணை கசக்கிட்டு போவேன் என்று மட்டும் நினைக்காதே..” என்று உச்சகட்ட கோபத்தில் பேசினாள் தென்றல்..
அவன் ஏதோ சொல்ல வரும் முன்பே அவனை கைநீட்டி தடுத்தவள், “உங்களின் விளக்கம் எனக்கு தேவை இல்ல.. நீங்க என்னை பார்த்து எப்படி அப்படி கேட்கலாம்..?! உங்களுக்கு என்ன தகுதி இருக்கு என்னை அப்படி கேட்க..?! இல்ல என்னை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்..?!” என்று கேள்விகளை தொடுத்தாள் தென்றல்..
அவளின் கேள்வி கணைகள் அவனை கூறுபோட அப்படியே சிலையென நின்றான் மனோ.. ‘உப்பு தின்றவன் தண்ணி குடித்தே தீர வேண்டும்.. தவறு செய்தவன் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும்..’ அவன் அமைதியாக இருந்தான்..
அவன் அமைதியாக இருப்பதைப் பார்த்து, “நான் எவன்கூட போனதை நீ வந்து பார்த்தா..?!” என்று கேட்டதும் அந்த கேள்வி அவனை முகத்தில் அறைந்தது போல இருந்தது..
“உன்னை மரியாதை இல்லாமல் பேசியதற்கு உனக்கு இந்த அளவுக்கு கோபம் வருதே.. அன்னைக்கு நடுரோட்டில் வைத்து என்னை அடித்தாயே..?! அதுக்கு நான் உன்னை பழிவாங்க வேண்டும் என்று நினைத்திருந்தால் உனக்கு இந்த டெண்டரை கிடைக்க முடியாத அளவிற்கு செய்ய எனக்கு தெரியாதா..?!” என்று கேட்டதும் அவனுக்கு எதோ புரிவது போல இருக்க அவள் சொல்ல வருவதை கவனிக்க ஆரம்பித்தான் மனோ..
“யாரோ செஞ்ச தவறுக்கு நான் இவனிடம் வாங்கிக் கட்டிக்க வேண்டும் என்று என்னோட தலையில் எழுதி இருக்கிறது..” என்று வாய்விட்டுக் கூறியவள், “நான் டெண்டர் கொட்டேஷனை மாற்றி அனுப்பவில்லை என்றால் உன்னோட ட்ரீம் டெண்டர் உனக்கு அடுத்து இருக்கும் ஆர்.கே.கன்ஸ்ட்ரக்ஷனுக்கு போயிருக்கும்..” என்று அவள் கோபத்தில் கூறியதும்,
‘என்னோட ட்ரீம் டெண்டர் என்ற உண்மை இவளுக்கு எப்படி தெரியும்..?’ என்று அதிர்ந்தான் மனோ. அவனின் அதிர்ந்த முகத்தை பார்த்த தென்றல், “உன்னோட ட்ரீம் டெண்டர் எனக்கு எப்படி தெரியும் என்று யோசிக்கிறாயா..?! தெரியும் நல்லாவே தெரியும்.. டெண்டர் கொட்டேஷன் பேப்பர் சைன் வாங்க வந்த பொழுது நீ போனில் பேசியதைக் கேட்டேன்..” என்று சொல்ல அவனுக்கு புதிர்கள் அதிகம் ஆகியதே தவிர குறையவே இல்லை..
“அதை கேட்ட பிறகும் என்னோட மனசு என்ன நினைத்து தெரியுமா..?! இவனுக்கு இந்த டெண்டர் கிடைத்தால் இவன் முகத்தில் புன்னகை மலருமா..?! என்ற எதிர்பார்ப்பு தான் இருந்தது.. யார் என்ன நினைக்கிறாங்க..? என்று உனக்கெப்படி தெரியும்.. பாசம் என்றால் என்ன அர்த்தம் என்று தெரியாதா உன்னிடம் பேசுவது எல்லாம் செவுடன் காதில் சங்கு ஊதுவது போல தான்..” என்று கூறியவளின் குரலில் ஆதங்கம் மட்டுமே வெளிப்பட்டது.. அவள் பேச பேச அவனின் மனம் அவளின் பால் சாய ஆரமித்தது..
“நீங்க கொடுத்த கொட்டேஷன் உங்கள் மேனேஜர் மதன் மூலம் உங்களுக்கு எதிர் ஆர். கே. கன்ஸ்ட்ரக்ஷனுக்கு தகவல் போய்விட்டது..” என்று அவள் சொல்லவும், அவனால் அவள் சொல்வதை நம்பவே முடியவில்லை..
மதன் இங்கே பல வருடமாக வேலை செய்யும் ஒரு நேர்மையான மனிதர்.. அவரை எப்படி சந்தேகப்பட அவனால் முடியும்..? அவன் அவளை நம்பாமல் சந்தேகமாகப் பார்க்க, அவனின் பார்வை கண்ட தென்றல், “என்ன நான் சொல்வதில் நம்பிக்கை இல்லையா..?!” என்று கேட்டவள்,
“உங்களுக்கு நம்பிக்கை இருக்காது.. ஏன்னென்றால் நான் வாய் பேச மட்டும் தான் லாய்க் என்று என்னை பற்றி உங்களின் மனதில் இருக்கும் கருத்து எனக்கு தெரியும் சார்..” என்று சாரில் நன்றாக அழுத்தம் கொடுக்க அவனின் முகம் சிவக்க ஆரமித்தது..
“உங்கள் கம்பெனி முழுக்க முழுக்க கேமரா இருக்கும் இல்ல அதில் பாருங்க..” என்று சொல்ல அவனும் போய் அந்த போட்டேஜை எடுத்து பார்க்க, அதில் மதன் பேசிய அனைத்தும் இருக்க, அவளின் முகத்தை நிமிர்ந்து பார்த்தான் மனோ..
“என்ன ஸார் நான் சொன்னது உண்மையா..?!” என்று கேட்டவள், “இந்த நிறுவனத்தில் நான் நேர்மையுடன் வேலை செய்யும் ஒரே காரணத்திற்காகத்தான் நானே கொட்டேஷன் கொடுத்தேன்..” என்று சொல்ல அவனுக்கு ஒன்றும் புரியவே இல்லை..
அவனின் புரியாத பார்வையைக் கண்ட தென்றல், “அன்னைக்கு நீங்க கொடுத்த கொட்டேஷனை குறிக்கும் பொழுது மதன் என்னை நோட் பண்ணுவதை கவனித்தேன்.. அதுதான் அவனின் முன்னாடி நீங்க கொடுத்த டெண்டர் கொட்டேஷன் கொடுத்து லெட்டர் டைப் பண்ணி வைத்துவிட்டு அதை கவனிக்க மறந்தது போல எழுந்து சென்றதும் அவர் வந்து அந்த லெட்டரை எடுத்துப் பார்த்ததை நான் மறைந்து நின்று பார்த்தேன்.. அதுதான் கொட்டேஷன் அமௌன்ட் மாற்றி கோட் பண்ணினேன் அனுப்பினேன்...” என்று கூறியவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் மனோ..
‘அவள் தங்கள் நிறுவனம் முன்னணியில் இருக்க வேண்டும் என்று நல்ல எண்ணத்தில் செய்த காரியத்தை நாம் தான் தவறாக நினைத்துவிட்டோம்’ என்று அவனின் மனம் வருந்தினான்.. அந்த நினைவு மனதில் வந்த மறுநொடியே, “சாரி தென்றல்! நான் தான் புரியாமல் ஏதேதோ பேசிவிட்டேன்..” என்று அவன் மன்னிப்பு கேட்க, கைகள் இரண்டையும் தட்ட ஆரம்பித்தாள் தென்றல்..
“சூப்பர் ஸார் சான்சே இல்ல.. உங்களின் நிறுவனத்திற்கு நல்லது நினைத்த எனக்கு நீங்க கொடுத்த பட்டம் நடத்தை கேட்டவள்.. அதை அப்படியே சர்டிபிகேட் போட்டு சைன் பண்ணி கொடுத்தீங்க என்றால் நான் வேறு இடங்களுக்கு வேலைக்கு சொல்லும் பொழுது ரொம்ப உதவும்..” என்று அவள் சிரித்தவண்ணம் சொல்ல, “இப்பொழுது எதற்கு இப்படியெல்லாம் பேசுகிறாய்..?!” என்று கேட்டவனின் குரலில் பிசிர் தட்டியது..
அவனையே பார்த்தவள், “நான் ராகுல் கூட பல்சரில் வந்தேன், சாயந்திரம் சுனில் கூட பார்க் போகிறேன் என்று சொன்னது எல்லாம் உண்மைதான்.. இல்லை என்று நான் மறுக்கவும் மாட்டேன்.. அவங்க எல்லாம் என்னோட பிரிண்ட்ஸ்..” சொல்ல மனோவின் மனம் ஏன்னென்றே அறியாமல் நிம்மதியாக ஒரு பெருமூச்சை வெளியிட்டது.. அதற்கு காரணம் அறியாமல் நின்றிருந்தான் மனோ..
அவனின் முகம் மாறுவதைக் கண்டவள் கோபத்தில் பல்லைக் கடித்துக் கொண்டே அவனைப் பார்க்க அவன் பேசும் வரையில் அமைதியாக இருந்தவள் அவன் போனை வைத்ததும், “என்ன சார் டெண்டர் உங்களுக்கு கிடைத்துவிட்டாதா..?!” என்று நக்கலாகக் கேட்டாள் தென்றல்..
அவள் சொல்வது உண்மைதான் அந்த கவர்மெண்ட் டெண்டர் இவர்கள் நிறுவனத்திற்கு தான் கிடைத்துள்ளது என்றுதான் போனில் தெரிவிக்கப்பட்டது..
அவள் அப்படி கேட்டதும், “உன்னோட மனதில் என்னதான் நினைக்கிறாய்..?! நான் கொடுத்த கொட்டேஷனை கொடுக்காமல் உன்னோட இஸ்டத்திற்கு செய்கிறாய் என்று கோபத்தில் தான் கேட்டேன்..” என்று அவன் அவனின் பக்கத்தில் இருக்கும் நியாயத்தை அவன் கூறினான்.. அவனின் குரல் கொஞ்சம் தாழ்ந்து தான் வந்தது..
“என்ன கேட்டீங்க நேரத்திற்கு நேரம் ஆள் மாத்திட்டு இருக்கேன் என்று கேட்டதையா சார் சொல்றீங்க..?!” என்று ஒன்றும் அறியாதவள் போல அவனின் கேள்வியை வைத்தே அவனை அடித்தாள்..
அவளின் கேள்வியை கேட்டு அவன் அதிர்ந்து நிற்க அவனை நிமிர்ந்து பார்த்தவள், “உங்களின் மனதில் என்னை பற்றி என்ன நினைச்சிட்டு இருக்கீங்க..” என்று கேட்டதற்கு, “நான் சொன்ன டெண்டர் கொட்டேஷனை கொடுக்காமல் உன்னை யார் மாற்றிக் கொடுக்க சொன்னது..? அதற்கு முதலில் பதில் சொல்லு..” என்று அவன் அதிகரமாகச் சொல்ல,
“அந்த கேள்விக்கு நான் அப்புறம் பதில் சொல்றேன்.. முதலில் என்னோட கேள்விக்கு பதில் சொல்லுடா..” என்று மரியாதை இல்லாமல் பேசியதும் அவனுக்கு கோபம் வர, “உனக்கெல்லாம் ஒருமுறை சொன்னால் புரியாது.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கிப் பழகு.. இல்ல அன்னைக்கு நான் கொடுத்தது உன்னோட நினைவில் இருக்கும் என்று நினைக்கிறேன்..” என்று அவன் அவளை அடித்தை நினைவு படுத்தவும்,
“உனக்கு என்ன மரியாதை வேண்டிக் கிடைகிறது..?! உன்னிடம் வேலை செய்கிறேன் என்பதற்காக நீ அடித்தால் கூட வாங்கிட்டு அமைதியாக கண்ணை கசக்கிட்டு போவேன் என்று மட்டும் நினைக்காதே..” என்று உச்சகட்ட கோபத்தில் பேசினாள் தென்றல்..
அவன் ஏதோ சொல்ல வரும் முன்பே அவனை கைநீட்டி தடுத்தவள், “உங்களின் விளக்கம் எனக்கு தேவை இல்ல.. நீங்க என்னை பார்த்து எப்படி அப்படி கேட்கலாம்..?! உங்களுக்கு என்ன தகுதி இருக்கு என்னை அப்படி கேட்க..?! இல்ல என்னை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்..?!” என்று கேள்விகளை தொடுத்தாள் தென்றல்..
அவளின் கேள்வி கணைகள் அவனை கூறுபோட அப்படியே சிலையென நின்றான் மனோ.. ‘உப்பு தின்றவன் தண்ணி குடித்தே தீர வேண்டும்.. தவறு செய்தவன் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும்..’ அவன் அமைதியாக இருந்தான்..
அவன் அமைதியாக இருப்பதைப் பார்த்து, “நான் எவன்கூட போனதை நீ வந்து பார்த்தா..?!” என்று கேட்டதும் அந்த கேள்வி அவனை முகத்தில் அறைந்தது போல இருந்தது..
“உன்னை மரியாதை இல்லாமல் பேசியதற்கு உனக்கு இந்த அளவுக்கு கோபம் வருதே.. அன்னைக்கு நடுரோட்டில் வைத்து என்னை அடித்தாயே..?! அதுக்கு நான் உன்னை பழிவாங்க வேண்டும் என்று நினைத்திருந்தால் உனக்கு இந்த டெண்டரை கிடைக்க முடியாத அளவிற்கு செய்ய எனக்கு தெரியாதா..?!” என்று கேட்டதும் அவனுக்கு எதோ புரிவது போல இருக்க அவள் சொல்ல வருவதை கவனிக்க ஆரம்பித்தான் மனோ..
“யாரோ செஞ்ச தவறுக்கு நான் இவனிடம் வாங்கிக் கட்டிக்க வேண்டும் என்று என்னோட தலையில் எழுதி இருக்கிறது..” என்று வாய்விட்டுக் கூறியவள், “நான் டெண்டர் கொட்டேஷனை மாற்றி அனுப்பவில்லை என்றால் உன்னோட ட்ரீம் டெண்டர் உனக்கு அடுத்து இருக்கும் ஆர்.கே.கன்ஸ்ட்ரக்ஷனுக்கு போயிருக்கும்..” என்று அவள் கோபத்தில் கூறியதும்,
‘என்னோட ட்ரீம் டெண்டர் என்ற உண்மை இவளுக்கு எப்படி தெரியும்..?’ என்று அதிர்ந்தான் மனோ. அவனின் அதிர்ந்த முகத்தை பார்த்த தென்றல், “உன்னோட ட்ரீம் டெண்டர் எனக்கு எப்படி தெரியும் என்று யோசிக்கிறாயா..?! தெரியும் நல்லாவே தெரியும்.. டெண்டர் கொட்டேஷன் பேப்பர் சைன் வாங்க வந்த பொழுது நீ போனில் பேசியதைக் கேட்டேன்..” என்று சொல்ல அவனுக்கு புதிர்கள் அதிகம் ஆகியதே தவிர குறையவே இல்லை..
“அதை கேட்ட பிறகும் என்னோட மனசு என்ன நினைத்து தெரியுமா..?! இவனுக்கு இந்த டெண்டர் கிடைத்தால் இவன் முகத்தில் புன்னகை மலருமா..?! என்ற எதிர்பார்ப்பு தான் இருந்தது.. யார் என்ன நினைக்கிறாங்க..? என்று உனக்கெப்படி தெரியும்.. பாசம் என்றால் என்ன அர்த்தம் என்று தெரியாதா உன்னிடம் பேசுவது எல்லாம் செவுடன் காதில் சங்கு ஊதுவது போல தான்..” என்று கூறியவளின் குரலில் ஆதங்கம் மட்டுமே வெளிப்பட்டது.. அவள் பேச பேச அவனின் மனம் அவளின் பால் சாய ஆரமித்தது..
“நீங்க கொடுத்த கொட்டேஷன் உங்கள் மேனேஜர் மதன் மூலம் உங்களுக்கு எதிர் ஆர். கே. கன்ஸ்ட்ரக்ஷனுக்கு தகவல் போய்விட்டது..” என்று அவள் சொல்லவும், அவனால் அவள் சொல்வதை நம்பவே முடியவில்லை..
மதன் இங்கே பல வருடமாக வேலை செய்யும் ஒரு நேர்மையான மனிதர்.. அவரை எப்படி சந்தேகப்பட அவனால் முடியும்..? அவன் அவளை நம்பாமல் சந்தேகமாகப் பார்க்க, அவனின் பார்வை கண்ட தென்றல், “என்ன நான் சொல்வதில் நம்பிக்கை இல்லையா..?!” என்று கேட்டவள்,
“உங்களுக்கு நம்பிக்கை இருக்காது.. ஏன்னென்றால் நான் வாய் பேச மட்டும் தான் லாய்க் என்று என்னை பற்றி உங்களின் மனதில் இருக்கும் கருத்து எனக்கு தெரியும் சார்..” என்று சாரில் நன்றாக அழுத்தம் கொடுக்க அவனின் முகம் சிவக்க ஆரமித்தது..
“உங்கள் கம்பெனி முழுக்க முழுக்க கேமரா இருக்கும் இல்ல அதில் பாருங்க..” என்று சொல்ல அவனும் போய் அந்த போட்டேஜை எடுத்து பார்க்க, அதில் மதன் பேசிய அனைத்தும் இருக்க, அவளின் முகத்தை நிமிர்ந்து பார்த்தான் மனோ..
“என்ன ஸார் நான் சொன்னது உண்மையா..?!” என்று கேட்டவள், “இந்த நிறுவனத்தில் நான் நேர்மையுடன் வேலை செய்யும் ஒரே காரணத்திற்காகத்தான் நானே கொட்டேஷன் கொடுத்தேன்..” என்று சொல்ல அவனுக்கு ஒன்றும் புரியவே இல்லை..
அவனின் புரியாத பார்வையைக் கண்ட தென்றல், “அன்னைக்கு நீங்க கொடுத்த கொட்டேஷனை குறிக்கும் பொழுது மதன் என்னை நோட் பண்ணுவதை கவனித்தேன்.. அதுதான் அவனின் முன்னாடி நீங்க கொடுத்த டெண்டர் கொட்டேஷன் கொடுத்து லெட்டர் டைப் பண்ணி வைத்துவிட்டு அதை கவனிக்க மறந்தது போல எழுந்து சென்றதும் அவர் வந்து அந்த லெட்டரை எடுத்துப் பார்த்ததை நான் மறைந்து நின்று பார்த்தேன்.. அதுதான் கொட்டேஷன் அமௌன்ட் மாற்றி கோட் பண்ணினேன் அனுப்பினேன்...” என்று கூறியவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் மனோ..
‘அவள் தங்கள் நிறுவனம் முன்னணியில் இருக்க வேண்டும் என்று நல்ல எண்ணத்தில் செய்த காரியத்தை நாம் தான் தவறாக நினைத்துவிட்டோம்’ என்று அவனின் மனம் வருந்தினான்.. அந்த நினைவு மனதில் வந்த மறுநொடியே, “சாரி தென்றல்! நான் தான் புரியாமல் ஏதேதோ பேசிவிட்டேன்..” என்று அவன் மன்னிப்பு கேட்க, கைகள் இரண்டையும் தட்ட ஆரம்பித்தாள் தென்றல்..
“சூப்பர் ஸார் சான்சே இல்ல.. உங்களின் நிறுவனத்திற்கு நல்லது நினைத்த எனக்கு நீங்க கொடுத்த பட்டம் நடத்தை கேட்டவள்.. அதை அப்படியே சர்டிபிகேட் போட்டு சைன் பண்ணி கொடுத்தீங்க என்றால் நான் வேறு இடங்களுக்கு வேலைக்கு சொல்லும் பொழுது ரொம்ப உதவும்..” என்று அவள் சிரித்தவண்ணம் சொல்ல, “இப்பொழுது எதற்கு இப்படியெல்லாம் பேசுகிறாய்..?!” என்று கேட்டவனின் குரலில் பிசிர் தட்டியது..
அவனையே பார்த்தவள், “நான் ராகுல் கூட பல்சரில் வந்தேன், சாயந்திரம் சுனில் கூட பார்க் போகிறேன் என்று சொன்னது எல்லாம் உண்மைதான்.. இல்லை என்று நான் மறுக்கவும் மாட்டேன்.. அவங்க எல்லாம் என்னோட பிரிண்ட்ஸ்..” சொல்ல மனோவின் மனம் ஏன்னென்றே அறியாமல் நிம்மதியாக ஒரு பெருமூச்சை வெளியிட்டது.. அதற்கு காரணம் அறியாமல் நின்றிருந்தான் மனோ..
Last edited: