அத்தியாயம் – 7
அவனிடம் அனுமதி கூட கேட்காமல் நிறுவனத்தை விட்டு வெளியே வந்தவளின் முகத்தை பார்த்த வாட்ச்மேன் தாத்தா, “என்னடா இன்னைக்கு சீக்கிரம் கிளம்பிட்ட..?!” என்று கேட்டதும், “நான் ஊருக்குப் போகிறேன் தாத்தா.. திரும்ப வர இருபது நாள் ஆகும்..” என்று புன்னகையுடன் சொல்ல, “நல்லபடியாக போய்ட்டு வாடா கண்ணா..” என்று புன்னகையுடன் சொன்னவர் அவரது வேலையை கவனிக்க அவளும் தனது வழியில் நடக்க ஆரமித்தாள்..
அவளின் மனதில் இருந்த கொதிப்பு மட்டும் அடங்க மறுத்தது.. அப்படியே நடந்தவளின் பார்வை எதிரே இருந்த பூங்காவை நோக்கிச் செல்ல அங்கே சென்று ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்தாள்..
அந்த இடம் அவளின் மனதிற்கு அமைதியைக் கொடுக்க, “என்னை பார்த்து என்ன கேள்வி கேட்டுவிட்டான்.. அதுவும் என்னை பார்த்து..” என்று நினைத்தவள் கோபத்தில் மூச்சை இழுத்துவிட, அவளின் மனம் சமாதானம் அடைய மறுத்தது..
“அப்படி சொன்னால் யார் அந்த ராகுல், யார் அந்த பிரதாப் என்று என்னிடம் கேட்டிருந்தால் கூட பரவல்ல..” என்று நினைத்தவள் ஒரு நொடி, ‘இவனுக்கு ராகுல், சுனில், நிவாஸ் எல்லாம் யார் என்று தெரிந்தால் அவனின் ரியாக்ஷன் எப்படி இருக்கும்..?!’ என்று கண்ணை முடி அவன் முகம் போகும் போக்கை நினைத்துப் பார்த்தவள் தன்னையும் மீறி சிரிக்க ஆரமித்தாள்..
“ஹா.. ஹா.. ஹா.. இரும்பு மனிதா.. நீ சும்மாவே ஒரு சிடுமூஞ்சி.. இதில் உன்னோட முகத்தைக் கற்பனை பண்ணிப் பார்த்தால் ஐயோ அம்மா என்னால் முடியலடா ராமா..” என்று அவள் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்துவிட்டு நிமிர்ந்து பார்க்க அங்கே கோபத்தின் மொத்த ரூபமாக நின்றிருந்தான் சுனில்..
அவனை அங்கே எதிர்பார்க்காத தென்றல், “டேய் நீ எப்போடா வந்தா..?!” என்று கேட்டதும், “உனக்கு பைத்தியம் முத்திவிட்டதா..?!” என்று அவன் கேட்ட கேள்வியில் அவள் திருதிருவென முழிக்க, “மூஞ்சியை பாரு தேவாங்கு..” என்று கூறிய சுனிலை முறைத்தாள் தென்றல்..
அவளின் முறைப்பை கண்ட சுனில் அவளின் அருகில் அமர்ந்து, “என்ன முறைக்கிற..?! தனியாக உட்கார்ந்து சிரிக்கும் உன்னைப் பார்த்தால் யாராக இருந்தாலும் உன்னைப் பைத்தியம் என்று தான் நினைப்பாங்க..” என்று சொல்ல, ‘அவன் சொல்வதும் உண்மைதான்..’ என்று நினைத்து அமைதியாக இருந்தாள் தென்றல்..
அவள் அமைதியாக இருப்பதைப் பார்த்த சுனில், “இப்பொழுது சொல்லு நீ இப்படி தனியாக உட்கார்ந்து சிரிக்க யார் காரணம்..?!” என்று கேட்டதும் அவள் நொடியும் தாமதிக்காமல், “இரும்புமனிதன்..” என்று கூறினாள்..
“இரும்பு மனிதனா..?! அவன் என்ன பண்ணினான்..?” என்று அறிவான கேள்வியைக் கேட்டான் சுனில்.. அவன் கேட்ட கேள்வியில் அவளின் மனம் மீண்டும் நடந்தவற்றை நினைக்க, “அது பற்றி அப்புறம் சொல்கிறேன்.. எனக்கு எங்கே ஐஸ்க்ரீம்..?!” என்று கேட்டாள் தென்றல்..
அவள் ஐஸ் என்று சொன்னதும் சுதாரித்த சுனில், “எதுக்கு உனக்கு ஐஸ்..?!” என்று கேட்டான்.. அவனின் கேள்வியில் அவள் மீண்டும் கடுப்பாக, “டேய் நேற்று என்னிடம் என்ன சொல்லிட்டுப் போனா..?” என்றதும், “என்ன சொல்லிட்டு போனேன்..?!” என்று அவன் யோசிக்க, “டேய் நீயும் என்னை வாதிக்காதே.. எனக்கு ஐஸ் வாங்கித்தரேன் என்று சொல்லிட்டு தானே போனா..?!” என்று அவள் அழுகாத குறையாக கேட்டதும் அவனுக்கு சிரிப்பு வைத்தது..
“நாங்கெல்லாம் அரசியல்வாதிங்க.. கொடுத்த வாக்கை கொடுத்த இடத்திலேயே மறந்துவிடுவோம்..” என்று அவன் சிரிப்புடன் சொல்ல, “நான் யார் என்று உனக்கு தெரியும் என்று நினைக்கிறேன்..” என்று அவள் அவனை மிரட்டினாள்..
அவள் மிரட்டியதும், “இங்கே பாரு தென்றல் என்னிடம் பாக்கெட் மணி இல்ல.. நீ தான் எனக்கு ஐஸ் வாங்கித் தரவேண்டும்..” என்று அவன் சொல்ல, அவளும் யோசிக்க ஆரமித்தாள்..
‘இப்பொழுது இருக்கும் கடுப்புக்கு ஜில்லுனு ஒரு ஐஸ் சாப்பிட்டால் சும்மா சூப்பராக இருக்குமே..’ என்று நினைத்தவள், “சரிடா சுனில் வா நாம் ஐஸ்க்ரீம் பார்லர் போகலாம்..” என்று அழைத்துச் சென்றாள்..
அவளுக்கு எல்லாம் மறந்து போனது என்று சொல்ல முடியாது.. ஆனால் இப்பொழுது அந்த விஷயத்தை மறந்துவிட்டாள் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்..
அவளும் சுனிலும் பேசிய வண்ணம் ஐஸ்க்ரீம் பார்லர் சென்று இருவரும் அமரவும், பிரதாப், ராகுல், நிவாஸ், ஷிவானி நால்வரும் வரவும் சரியாக இருந்தது..
அவள் வருவதைக் கவனித்த சுனில், “தென்றல் நம்ம பட்டாளம் வந்துவிட்டது..” என்று குஷியாக சொல்ல, ‘அவன் யாரைச் சொல்வான்..’ என்று தெரிந்து வைத்திருந்த தென்றல்,
“வரட்டும் சுனில் இந்த நிவாஸ் தான் என்னை மாட்டவே வைத்தான்.. இருக்குடா இன்னைக்கு அவனுக்கு தனி கச்சேரி..” என்று பல்லைக் கடித்த தென்றலைப் பார்த்த சுனில், “உனக்கு இன்னைக்கு என்னடி ஆச்சு..?!” என்று கேட்டதும், “என்னோட வாயைக் கிளறி வாங்கிக் கட்டிகாதே சுனில்..” என்று எச்சரிக்கை செய்தாள் தென்றல்.. அவள் எப்பொழுது இப்படிதான் என்பதால் சுனில் அதிகம் அவளைக் கண்டுக் கொள்ளவே இல்லை..
அவர்கள் நால்வரும் வந்து அமர, தென்றலோ மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருக்க ஒருவரை ஒருவர் கேள்வியாகப் பார்த்துக் கொண்டே அமர்ந்தவர்கள் சுனிலிடம் கேட்டதும், ‘அவள் செம கோபத்தில் இருக்க.. என்ன என்று கேட்டால் பதில் பேச மாட்டேன் என்கிறாள்..’ என்று அவன் சைகையில் சொல்ல அவள் அமைதியாக அமர்ந்திருந்தாள்..
அவளின் முகத்தைப் பார்த்த பிரதாப், “எதுக்கு இப்படி மூஞ்சியை முனி அடித்து போல வைத்திருக்கிறாய்..?” என்று கேட்டதும், “எனக்கு இன்னைக்கு முனி அடித்துவிட்டது..” என்று தென்றல் சொல்லவும், “நீ திருப்பி அடிக்காமல் வந்திருக்க மாட்டாயே..?!” என்று நக்கலாகக் கேட்டான் ஷிவானி..
“நீ சொல்வதும் சரிதான் ஷிவானி.. முனிக்கே பேய் ஓட்டிட்டுதான் வந்தேன்..” என்று சொல்ல, அப்புறம் அவர்கள் அடுத்தடுத்து பேச்சு கொடுக்க அவள் மற்றதை மறந்து சிரிக்க ஆரமித்தாள் தென்றல்..
அவள் சென்றதும் அறைக்குள் சென்றவனின் போன் அடிக்க அதை எடுக்க மனம் இல்லாமல் அமர்ந்திருந்தான் மனோ.. அதுவிடாமல் அடித்துக்கொண்தே இருக்க எரிச்சலுடன் போனை எடுத்து காதில் வைத்தும்,
“ஹாய் மனோ.. நான் சாரு..” என்று சொல்ல, ‘சாரு..?!’ என்று யோசித்த மனோ, “ஹே சாரு..! எப்பொழுது இந்தியா வந்த..?! என்ன திடீரென்று கனடா இருந்து வந்திருக்கிறாய்..?!” என்று அவன் சந்தோஷத்தில் கேட்டதும்,
“டேய் என்னை எல்லாம் இன்னும் நினைவில் தான் வைத்திருக்கிறாயா..?! எங்கே இருக்கிறாய் அட்ரஸ் சொல்லு..” என்று கேட்டதும், “நீ எங்கே இருக்கிறாய் அதை முதலில் சொல்லு சாரு..” என்று சந்தோசமாகக் கேட்டான் மனோ..
“இங்கே உன்னோட கன்ஸ்ட்ரக்ஷன் பக்கத்தில் இருக்கும் ஐஸ்கிரீம் பார்லர் பக்கத்தில் இருக்கிறேன் டா..” என்று அவள் சொன்னதும், “நீ அங்கேயே இரு சாரு நான் இதோ இப்பொழுது வருகிறேன்..” என்று கூறியவன் வெளியே வந்து காரை எடுத்துக் கொண்டு சென்றான்..
அவன் காரை பார்லர் முன்னாடி நிறுத்த அவன் இறங்கியதும் அவனைப் பார்த்த சாரு, “ஹாய் மனோ..” என்று சொல்லி காரை விட்டு அவள் இறங்க, “என்னோ திடீரென்று வந்து நின்று பெரிய ஷாக் எல்லாம் கொடுக்கிறாய்..” என்று அவன் கேட்டதும் அவனைப் பார்த்து சிரித்த சாருலதா மனோவின் அன்புதோழி..
‘இவனுக்கு தோழியா..?! என்று யோசிக்கிறீங்களா..?! ஏன் மனோவிற்கு தோழி இருக்க கூடாதா என்ன..?!
இவள் அவனை சின்ன வயதில் இருந்து பார்க்கிறாள்.. அதனால் இவனை பற்றி அவளுக்கு நன்றாகவே தெரியும்.. இப்பொழுது திருமணம் முடிந்து கனடாவில் இருக்கிறாள்..
“என்ன பண்றது மனோ..?! உனக்கு ஷாக் கொடுக்க நான் இப்படியெல்லாம் அதிரடியாக வந்து இறங்க வேண்டி இருக்கிறது..?! அப்படி வந்தால் தானே உன்னோட குரலில் சந்தோசத்தைப் பார்க்க முடிகிறது..” என்று கேட்டதும்,
“அம்மா தாயே நான் வாயே திறக்கவில்லை.. வா உள்ளே போய் உட்கார்ந்து பேசலாம்..” என்று அவன் அழைக்க, “நீ முதலில் போ..” என்று சொல்ல அவன் முன்னே செல்ல அவனின் பின்னோடு வந்தாள் சாரு..
எல்லோரிடமும் பேசியபடி திரும்பியா தென்றலின் பார்வை விழுந்தனர் மனோவும், சாருவும்.. அவர்கள் இருவரையும் பார்த்த தென்றல், “என்னோட கண்ணாடிக்கு பவர் போயிடுச்சோ..?” என்று அவள் ஏழாவது அறிவை தட்டி யோசிக்க அதை கேட்டு சிரிக்க ஆரமித்தனர் சிறுவர்கள்..
அவனிடம் அனுமதி கூட கேட்காமல் நிறுவனத்தை விட்டு வெளியே வந்தவளின் முகத்தை பார்த்த வாட்ச்மேன் தாத்தா, “என்னடா இன்னைக்கு சீக்கிரம் கிளம்பிட்ட..?!” என்று கேட்டதும், “நான் ஊருக்குப் போகிறேன் தாத்தா.. திரும்ப வர இருபது நாள் ஆகும்..” என்று புன்னகையுடன் சொல்ல, “நல்லபடியாக போய்ட்டு வாடா கண்ணா..” என்று புன்னகையுடன் சொன்னவர் அவரது வேலையை கவனிக்க அவளும் தனது வழியில் நடக்க ஆரமித்தாள்..
அவளின் மனதில் இருந்த கொதிப்பு மட்டும் அடங்க மறுத்தது.. அப்படியே நடந்தவளின் பார்வை எதிரே இருந்த பூங்காவை நோக்கிச் செல்ல அங்கே சென்று ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்தாள்..
அந்த இடம் அவளின் மனதிற்கு அமைதியைக் கொடுக்க, “என்னை பார்த்து என்ன கேள்வி கேட்டுவிட்டான்.. அதுவும் என்னை பார்த்து..” என்று நினைத்தவள் கோபத்தில் மூச்சை இழுத்துவிட, அவளின் மனம் சமாதானம் அடைய மறுத்தது..
“அப்படி சொன்னால் யார் அந்த ராகுல், யார் அந்த பிரதாப் என்று என்னிடம் கேட்டிருந்தால் கூட பரவல்ல..” என்று நினைத்தவள் ஒரு நொடி, ‘இவனுக்கு ராகுல், சுனில், நிவாஸ் எல்லாம் யார் என்று தெரிந்தால் அவனின் ரியாக்ஷன் எப்படி இருக்கும்..?!’ என்று கண்ணை முடி அவன் முகம் போகும் போக்கை நினைத்துப் பார்த்தவள் தன்னையும் மீறி சிரிக்க ஆரமித்தாள்..
“ஹா.. ஹா.. ஹா.. இரும்பு மனிதா.. நீ சும்மாவே ஒரு சிடுமூஞ்சி.. இதில் உன்னோட முகத்தைக் கற்பனை பண்ணிப் பார்த்தால் ஐயோ அம்மா என்னால் முடியலடா ராமா..” என்று அவள் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்துவிட்டு நிமிர்ந்து பார்க்க அங்கே கோபத்தின் மொத்த ரூபமாக நின்றிருந்தான் சுனில்..
அவனை அங்கே எதிர்பார்க்காத தென்றல், “டேய் நீ எப்போடா வந்தா..?!” என்று கேட்டதும், “உனக்கு பைத்தியம் முத்திவிட்டதா..?!” என்று அவன் கேட்ட கேள்வியில் அவள் திருதிருவென முழிக்க, “மூஞ்சியை பாரு தேவாங்கு..” என்று கூறிய சுனிலை முறைத்தாள் தென்றல்..
அவளின் முறைப்பை கண்ட சுனில் அவளின் அருகில் அமர்ந்து, “என்ன முறைக்கிற..?! தனியாக உட்கார்ந்து சிரிக்கும் உன்னைப் பார்த்தால் யாராக இருந்தாலும் உன்னைப் பைத்தியம் என்று தான் நினைப்பாங்க..” என்று சொல்ல, ‘அவன் சொல்வதும் உண்மைதான்..’ என்று நினைத்து அமைதியாக இருந்தாள் தென்றல்..
அவள் அமைதியாக இருப்பதைப் பார்த்த சுனில், “இப்பொழுது சொல்லு நீ இப்படி தனியாக உட்கார்ந்து சிரிக்க யார் காரணம்..?!” என்று கேட்டதும் அவள் நொடியும் தாமதிக்காமல், “இரும்புமனிதன்..” என்று கூறினாள்..
“இரும்பு மனிதனா..?! அவன் என்ன பண்ணினான்..?” என்று அறிவான கேள்வியைக் கேட்டான் சுனில்.. அவன் கேட்ட கேள்வியில் அவளின் மனம் மீண்டும் நடந்தவற்றை நினைக்க, “அது பற்றி அப்புறம் சொல்கிறேன்.. எனக்கு எங்கே ஐஸ்க்ரீம்..?!” என்று கேட்டாள் தென்றல்..
அவள் ஐஸ் என்று சொன்னதும் சுதாரித்த சுனில், “எதுக்கு உனக்கு ஐஸ்..?!” என்று கேட்டான்.. அவனின் கேள்வியில் அவள் மீண்டும் கடுப்பாக, “டேய் நேற்று என்னிடம் என்ன சொல்லிட்டுப் போனா..?” என்றதும், “என்ன சொல்லிட்டு போனேன்..?!” என்று அவன் யோசிக்க, “டேய் நீயும் என்னை வாதிக்காதே.. எனக்கு ஐஸ் வாங்கித்தரேன் என்று சொல்லிட்டு தானே போனா..?!” என்று அவள் அழுகாத குறையாக கேட்டதும் அவனுக்கு சிரிப்பு வைத்தது..
“நாங்கெல்லாம் அரசியல்வாதிங்க.. கொடுத்த வாக்கை கொடுத்த இடத்திலேயே மறந்துவிடுவோம்..” என்று அவன் சிரிப்புடன் சொல்ல, “நான் யார் என்று உனக்கு தெரியும் என்று நினைக்கிறேன்..” என்று அவள் அவனை மிரட்டினாள்..
அவள் மிரட்டியதும், “இங்கே பாரு தென்றல் என்னிடம் பாக்கெட் மணி இல்ல.. நீ தான் எனக்கு ஐஸ் வாங்கித் தரவேண்டும்..” என்று அவன் சொல்ல, அவளும் யோசிக்க ஆரமித்தாள்..
‘இப்பொழுது இருக்கும் கடுப்புக்கு ஜில்லுனு ஒரு ஐஸ் சாப்பிட்டால் சும்மா சூப்பராக இருக்குமே..’ என்று நினைத்தவள், “சரிடா சுனில் வா நாம் ஐஸ்க்ரீம் பார்லர் போகலாம்..” என்று அழைத்துச் சென்றாள்..
அவளுக்கு எல்லாம் மறந்து போனது என்று சொல்ல முடியாது.. ஆனால் இப்பொழுது அந்த விஷயத்தை மறந்துவிட்டாள் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்..
அவளும் சுனிலும் பேசிய வண்ணம் ஐஸ்க்ரீம் பார்லர் சென்று இருவரும் அமரவும், பிரதாப், ராகுல், நிவாஸ், ஷிவானி நால்வரும் வரவும் சரியாக இருந்தது..
அவள் வருவதைக் கவனித்த சுனில், “தென்றல் நம்ம பட்டாளம் வந்துவிட்டது..” என்று குஷியாக சொல்ல, ‘அவன் யாரைச் சொல்வான்..’ என்று தெரிந்து வைத்திருந்த தென்றல்,
“வரட்டும் சுனில் இந்த நிவாஸ் தான் என்னை மாட்டவே வைத்தான்.. இருக்குடா இன்னைக்கு அவனுக்கு தனி கச்சேரி..” என்று பல்லைக் கடித்த தென்றலைப் பார்த்த சுனில், “உனக்கு இன்னைக்கு என்னடி ஆச்சு..?!” என்று கேட்டதும், “என்னோட வாயைக் கிளறி வாங்கிக் கட்டிகாதே சுனில்..” என்று எச்சரிக்கை செய்தாள் தென்றல்.. அவள் எப்பொழுது இப்படிதான் என்பதால் சுனில் அதிகம் அவளைக் கண்டுக் கொள்ளவே இல்லை..
அவர்கள் நால்வரும் வந்து அமர, தென்றலோ மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருக்க ஒருவரை ஒருவர் கேள்வியாகப் பார்த்துக் கொண்டே அமர்ந்தவர்கள் சுனிலிடம் கேட்டதும், ‘அவள் செம கோபத்தில் இருக்க.. என்ன என்று கேட்டால் பதில் பேச மாட்டேன் என்கிறாள்..’ என்று அவன் சைகையில் சொல்ல அவள் அமைதியாக அமர்ந்திருந்தாள்..
அவளின் முகத்தைப் பார்த்த பிரதாப், “எதுக்கு இப்படி மூஞ்சியை முனி அடித்து போல வைத்திருக்கிறாய்..?” என்று கேட்டதும், “எனக்கு இன்னைக்கு முனி அடித்துவிட்டது..” என்று தென்றல் சொல்லவும், “நீ திருப்பி அடிக்காமல் வந்திருக்க மாட்டாயே..?!” என்று நக்கலாகக் கேட்டான் ஷிவானி..
“நீ சொல்வதும் சரிதான் ஷிவானி.. முனிக்கே பேய் ஓட்டிட்டுதான் வந்தேன்..” என்று சொல்ல, அப்புறம் அவர்கள் அடுத்தடுத்து பேச்சு கொடுக்க அவள் மற்றதை மறந்து சிரிக்க ஆரமித்தாள் தென்றல்..
அவள் சென்றதும் அறைக்குள் சென்றவனின் போன் அடிக்க அதை எடுக்க மனம் இல்லாமல் அமர்ந்திருந்தான் மனோ.. அதுவிடாமல் அடித்துக்கொண்தே இருக்க எரிச்சலுடன் போனை எடுத்து காதில் வைத்தும்,
“ஹாய் மனோ.. நான் சாரு..” என்று சொல்ல, ‘சாரு..?!’ என்று யோசித்த மனோ, “ஹே சாரு..! எப்பொழுது இந்தியா வந்த..?! என்ன திடீரென்று கனடா இருந்து வந்திருக்கிறாய்..?!” என்று அவன் சந்தோஷத்தில் கேட்டதும்,
“டேய் என்னை எல்லாம் இன்னும் நினைவில் தான் வைத்திருக்கிறாயா..?! எங்கே இருக்கிறாய் அட்ரஸ் சொல்லு..” என்று கேட்டதும், “நீ எங்கே இருக்கிறாய் அதை முதலில் சொல்லு சாரு..” என்று சந்தோசமாகக் கேட்டான் மனோ..
“இங்கே உன்னோட கன்ஸ்ட்ரக்ஷன் பக்கத்தில் இருக்கும் ஐஸ்கிரீம் பார்லர் பக்கத்தில் இருக்கிறேன் டா..” என்று அவள் சொன்னதும், “நீ அங்கேயே இரு சாரு நான் இதோ இப்பொழுது வருகிறேன்..” என்று கூறியவன் வெளியே வந்து காரை எடுத்துக் கொண்டு சென்றான்..
அவன் காரை பார்லர் முன்னாடி நிறுத்த அவன் இறங்கியதும் அவனைப் பார்த்த சாரு, “ஹாய் மனோ..” என்று சொல்லி காரை விட்டு அவள் இறங்க, “என்னோ திடீரென்று வந்து நின்று பெரிய ஷாக் எல்லாம் கொடுக்கிறாய்..” என்று அவன் கேட்டதும் அவனைப் பார்த்து சிரித்த சாருலதா மனோவின் அன்புதோழி..
‘இவனுக்கு தோழியா..?! என்று யோசிக்கிறீங்களா..?! ஏன் மனோவிற்கு தோழி இருக்க கூடாதா என்ன..?!
இவள் அவனை சின்ன வயதில் இருந்து பார்க்கிறாள்.. அதனால் இவனை பற்றி அவளுக்கு நன்றாகவே தெரியும்.. இப்பொழுது திருமணம் முடிந்து கனடாவில் இருக்கிறாள்..
“என்ன பண்றது மனோ..?! உனக்கு ஷாக் கொடுக்க நான் இப்படியெல்லாம் அதிரடியாக வந்து இறங்க வேண்டி இருக்கிறது..?! அப்படி வந்தால் தானே உன்னோட குரலில் சந்தோசத்தைப் பார்க்க முடிகிறது..” என்று கேட்டதும்,
“அம்மா தாயே நான் வாயே திறக்கவில்லை.. வா உள்ளே போய் உட்கார்ந்து பேசலாம்..” என்று அவன் அழைக்க, “நீ முதலில் போ..” என்று சொல்ல அவன் முன்னே செல்ல அவனின் பின்னோடு வந்தாள் சாரு..
எல்லோரிடமும் பேசியபடி திரும்பியா தென்றலின் பார்வை விழுந்தனர் மனோவும், சாருவும்.. அவர்கள் இருவரையும் பார்த்த தென்றல், “என்னோட கண்ணாடிக்கு பவர் போயிடுச்சோ..?” என்று அவள் ஏழாவது அறிவை தட்டி யோசிக்க அதை கேட்டு சிரிக்க ஆரமித்தனர் சிறுவர்கள்..
Last edited: