அத்தியாயம் – 9
தென்றல் சென்றதும் சாருவின் பக்கம் திரும்பிய மனோ, “என்னிடம் இருந்து உண்மையை வாங்காமல் நீ இங்கிருந்து போக மாட்டாய் என்று எனக்கு நன்றாகத் தெரிந்துவிட்டது..” என்று கூறியவனைப் பார்த்து சிரித்த சாரு..
“ஒரு புத்தகத்தைப் படிக்கும் போது அதன் கடைசி பக்கம் இல்லை என்றால் எப்படி மண்டை வெடிக்குமோ அதே போல என்னோட மண்டையும் வெடிக்கிறது..” என்று சாரு சிரிப்புடன் கூறினாள்..
“அவள் பெயர் தென்றல் என்று உன்னிடம் சொல்லிவிட்டேன்..” என்று அவன் சொல்ல, “அதுக்கு மேல சொல்லுடா.. அவள் எங்கே இருக்கிறாள்..? உனக்கு எப்படி அவளை தெரியும்..?! இப்பொழுது என்ன செய்கிறாள்..?! அவளின் குணம் என்ன..?!” என்று கேள்விகளைக் கேட்ட சாருவைப் பார்த்தவன் கையெடுத்துக் கும்பிட, “என்ன எஸ்கேப் ஆகலாம் என்று பார்க்கிறாயா..?! முதலில் பதிலை சொல்லுடா..” என்று சிரிப்புடன் கேட்டாள்..
“அவளை நான் சந்தித்த நாளை உன்னிடம் சொன்னால் நீ விழுந்து விழுந்து சிரிப்பாய் சாரு..” என்று மனோ சொல்ல, “ஹே முதலில் சொல்லுடா.. சிரிப்பு வருதா..?! இல்லையா..? என்று நான் சொல்கிறேன்..” என்று கேட்க, அவன் சந்தித்த நாளை சொல்ல வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரமித்தாள்..
“டேய் போதும் போதும் என்னால் சிரிக்கவே முடியல..” என்று சொல்ல, “நான் சொன்னேன் இல்ல நீ சிரிப்பாய் என்று..” என்று அவன் சொல்ல, “சரிடா மேலே சொல்லு..” என்று அவள் சொல்ல, அவன் ‘நான் அவளை அடித்துவிட்டேன்’ என்று சொன்னதும்,
“ஒரு பொண்ணை அத்தனை பேர் முன்னாடி அடிக்கக்கூடாது என்ற பேஸிக் மெனஸ் கூட உனக்கு தெரியாத மனோ..” என்று கேட்டாள்.. ஒரு தோழியாக இருந்து புன்னகை பூத்தவள், ‘அவன் தவறு செய்தான்’ என்று தெரிந்ததும், அவனை கண்டிக்கவும் அவள் மறக்கவில்லை..
“அப்பொழுது தவறாகவே தெரியவில்லை சாரு.. ஆனால் இன்னைக்கு அவள் சொன்னதும் அவளின் சந்திப்பு ஒரு நல்ல வழியில் நிகழ்ந்திருக்க கூடாதா என்று தோன்றுகிறது..” என்று கூறியவனின் குரலில் இருந்த மாற்றத்தைக் கவனித்தாள் சாரு..
“சரிடா அப்புறம் அவளை எப்பொழுது மறுபடியும் சந்தித்தாய்..?!” என்று அவள் பேச்சை மாற்ற அவனும், “என்னோட அலுவலகத்தில் சந்தித்தேன் சாரு..” என்று அன்று நடந்ததைச் சொல்ல, அவளோ, “டேய் சரியான வாலு போல.. எதையும் மனதில் வைத்துக் கொள்வதே இல்ல..” என்று சொல்ல,
அவனும், “நிஜம்தான் சாரு கோபத்தை அவளால் கொஞ்ச நேரம் கூட இழுத்துப் பிடிக்க முடியாது..” என்று அவன் அவளைப் பற்றிய விவரங்கள் சொல்ல, கன்னத்தில் கைகளைத் தாங்கியவண்ணம் அவன் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டாள் சாரு.. ‘அவன் இப்படி பேசமாட்டானா..?!’ என்று அவன் ஏங்கிய ஏக்கம் அவளுக்கு மட்டுமே தெரியும்..
பத்து வயதில் அவள் பார்த்த மனோவை அவள் மீண்டும் பார்க்க, ‘இதற்கு எல்லாம் தென்றல் தான் காரணம்..’ என்று சாருவின் மனம் சொன்னது.. ‘என்னோட தோழனை எனக்கு மீட்டுக்கொடுத்துவிடு தென்றல்...’ என்று தென்றலிடம் பேசினாள் சாரு..
இதுதான் நட்பு தன்னுடைய தோழன் மனதில் இருந்தவளின் பெயர் மட்டும் கேட்டு அவளிடம் தனது நண்பனையே மீட்டுக் கொடுக்க சொல்லி கேட்கும் நட்பு.. உயர்ந்த நட்பு..
அவன் சொல்வதை அவள் கவனிக்க, “எனக்கு அவளோட புன்னகை ரொம்ப பிடிக்கும் தெரியுமா சாரு.. என்ன திட்டு திட்டினாலும் அடுத்த நொடியே அது எல்லாம் மறந்துவிட்டு என் முன்னே சிரித்த முகத்துடன் வந்து நிற்பாள்.. நான் அந்த தருணத்தை மனதிற்குள் மிகவும் ரசிப்பேன்.. அவள் புன்னகைப்பது பார்த்து சில நேரத்தில் பொறாமை கூட பட்டிருக்கிறேன்.. என்னால் இப்படி சிரிக்க முடியவில்லையே..” என்று அவன் சொல்ல, அவனின் மனதை ஒரு தோழியாக புரிந்துக் கொண்ட சாரு..
“நீ பேசுவதை எல்லாம் பார்த்தால், நீ சீக்கிரம் சிரிக்க போகிறாய் மனோ.. நீ தென்றல் பற்றி சொல்ல சொல்ல அவளை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் தான் அதிகமாக இருக்கிறது மனோ..” என்று சாரு சொல்ல,
“நானே இனி அவளைப் பார்க்க முடியாதோ என்ற வருத்தத்தில் இருக்கிறேன் சாரு..” என்று சொல்ல, அவனின் முகத்தை நிமிர்ந்துப் பார்க்க, அவனின் இறுகிய முகத்தில் இருந்த வருத்தம் கண்டு திகைத்தாள் சாரு.. மனோ எந்த உணர்வுகளையும் அதிகமாக வெளிக்காட்டவே மாட்டான்..
அப்படி இருப்பவனின் முகத்தில் இருந்த வருத்தம் கண்டு சாரு, ‘உன்னோட மனதில் ஒரு பெண் இருக்கிறாள்.. அதுவும் நீ அவளை இந்த அளவிற்கு நேசிக்கிறாய் என்று நினைக்க நினைக்க எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது மனோ..’ என்று மனதில் நினைத்தவள், “இன்னைக்கு என்ன சண்டை..?” என்று கேட்டாள் சாரு..
அவளுக்கு தெரியும், ‘மனோ ஒரு முன்கோபி’ என்று.. ‘அவன் கோபத்தில் என்ன காரியம் செய்தானோ..?!’ என்று சாருவின் மனம் பதற, அவன் அலுவலகத்தில் நடந்தவற்றைக் கூறினான்..
“டேய் உனக்கு அறிவு இருக்க இல்லையா..? ஒருத்தர் ஒன்று சொன்னால் அது உண்மையா..?! பொய்யா..? அவர்கள் சீரியசாக பேசுகிறார்களா..? இல்ல விளையாட்டாக பேசுகிறார்களா..? என்று கூடவா உனக்கு தெரியாது..” என்று அவள் சரியான கோபத்தில் அவனை திட்ட ஆரமித்தாள்..
“எனக்கு அவள் சொல்லும் பொழுது எல்லாம் ஏற்பட்ட கோபத்தில் இன்று யோசிக்காமல் வார்த்தைகளை விட்டுவிட்டேன்.. அவள் அந்த அளவுக்கு கத்திட்டு போகிறாள்..” என்று அவன் சொல்ல,
“பளார்.. பளார்.. என்று இரண்டு அரை அறியாமல் விட்டாள் என்று சந்தோசப்படு.. நான் அந்த இடத்தில் இருந்த அடிக்கிற அடியில் உன்னோட செவினியைத் திரும்பி இருக்கும்.. அவள் கேட்டதில் என்ன தவறு உனக்கு அவளைப் பற்றி என்ன தெரியும்..?!” என்று கேட்டதும் அவன் அமைதியாக இருந்தான்..
“அவளுக்கு யார் யார் எல்லாம் இருக்காங்க என்று உனக்கு தெரியுமா..?” என்று அவள் கேட்டதும், “அவளுக்கு யாரும் இல்ல சாரும்மா.. கிட்டதட்ட என்னோட நிலையில் தான் அவளும் இருக்கிறாள்..” என்று அவன் வருத்தத்துடன் கூறியதும்,
“உன்னோட நிலையில் தான் அவளும் இருக்கிறாள் என்று சொல்கிறாய் இல்ல.. அப்படி ஒரு நிலையில் இருந்தும், நீ ஒரு நாள் கூட தப்பான வழிக்கு போகவில்லையே.. அவள் மட்டும் தப்பான வழிக்கு போவாள் என்று உன்னோட மனது எப்படிடா நினைத்தது..?!” என்று அவள் நிறுத்தி நிதானமாகக் கேட்டதும், அவன் ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்தான்..
“ஒருவர் பேசுவதை வைத்து அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்று சொல்லும் பிஸ்னஸ்மென் நீ.. இப்பொழுது நீயே அந்த தவறை செய்யலாமா..?!” என்று கேட்டு அவனின் தவறை அவள் அவனுக்கு புரிய வைத்தவள்,
“ஒரு வார்த்தை பேசும் பொழுது அது நமக்கு எதிரில் இருக்கும் மனிதரை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை தெரிந்து ஒரு முறைக்கு பலமுறை யோசித்து ஒரு வார்த்தை விட வேண்டும் மனோ..” என்று ஒரு தோழியாக இருந்து அவனுக்கு எல்லாவற்றையும் புரிய வைத்தாள் சாரு..
அப்பொழுதுதான் மணியைப் பார்த்தவள், “டேய் மனோ மணி எட்டு.. நான் கிளம்புகிறேன் மனோ.. நாளைக்கு காலையில் கனடா போயிருவேன்..” என்று சொல்ல, அவளைப் பார்த்து சரியென தலையசைத்த மனோ,
“அடுத்த முறை வரும் பொழுது சஞ்சையையும் அழைத்துவா சாரு..” என்று சொன்னவள், “நீ முதலில் உன்னோட புன்னகை இளவரசியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு உன்னோட காதலியிடம் காதலை சொல்ல பாருடா கிறுக்க..” என்று சிரிப்புடன் சொன்னவளுடன் எழுந்து நடந்தவன்,
“சரி அங்கே போனதும் போன் பண்ணுடி.. மறந்த கனடா வந்து மண்டையை உடைப்பேன்..” என்று அவன் சொல்ல, “பாருடா சிடுமூஞ்சி சித்தப்பன் எல்லாம் மிரட்டுகிறான்..” என்று சொன்னவள், காரின் அருகே வந்தும்,
“நான் கிளம்புகிறேன் மனோ.. உன்னோட தென்றலைப் பார்க்க முடியவில்லை என்று கொஞ்சம் கொஞ்சம் வருத்தம் இருக்கிறது.. அடுத்தமுறை வரும்பொழுது கண்டிப்பா உன்னோட இளவரசியை என்னோட கண்ணில் கட்டுடா..” என்று அவள் சிரிப்புடன் சொல்ல,
“எதுக்கு அவளை கடத்திட்டு போகலாம் என்ற புது பிளானில் இருக்கிறாயா..?!” என்று அவன் கேட்டதும், “உன்னோட இளவரசியைக் கடத்தினால் நீ என்னை சும்மா விடுவாய் பாரு.. நாடு விட்டு நாடு வந்து என்னை மொத்துவியே.. யார் உன்னிடம் வாங்கிக் கட்டுவது..?! என்னால் முடியாது சாமி..” என்று சந்தோசமாகக் கூறியவள்,
“நான் கிளம்புகிறேன்டா.. ஊருக்கு போனதும் உனக்கு போன் பண்றேன்..” என்று கிளம்பிச் சென்றாள் சாரு.. அவள் கிளம்பியதும் தன்னுடைய காரில் ஏறியவன் காரை எடுத்தான்..
தென்றல் சென்றதும் சாருவின் பக்கம் திரும்பிய மனோ, “என்னிடம் இருந்து உண்மையை வாங்காமல் நீ இங்கிருந்து போக மாட்டாய் என்று எனக்கு நன்றாகத் தெரிந்துவிட்டது..” என்று கூறியவனைப் பார்த்து சிரித்த சாரு..
“ஒரு புத்தகத்தைப் படிக்கும் போது அதன் கடைசி பக்கம் இல்லை என்றால் எப்படி மண்டை வெடிக்குமோ அதே போல என்னோட மண்டையும் வெடிக்கிறது..” என்று சாரு சிரிப்புடன் கூறினாள்..
“அவள் பெயர் தென்றல் என்று உன்னிடம் சொல்லிவிட்டேன்..” என்று அவன் சொல்ல, “அதுக்கு மேல சொல்லுடா.. அவள் எங்கே இருக்கிறாள்..? உனக்கு எப்படி அவளை தெரியும்..?! இப்பொழுது என்ன செய்கிறாள்..?! அவளின் குணம் என்ன..?!” என்று கேள்விகளைக் கேட்ட சாருவைப் பார்த்தவன் கையெடுத்துக் கும்பிட, “என்ன எஸ்கேப் ஆகலாம் என்று பார்க்கிறாயா..?! முதலில் பதிலை சொல்லுடா..” என்று சிரிப்புடன் கேட்டாள்..
“அவளை நான் சந்தித்த நாளை உன்னிடம் சொன்னால் நீ விழுந்து விழுந்து சிரிப்பாய் சாரு..” என்று மனோ சொல்ல, “ஹே முதலில் சொல்லுடா.. சிரிப்பு வருதா..?! இல்லையா..? என்று நான் சொல்கிறேன்..” என்று கேட்க, அவன் சந்தித்த நாளை சொல்ல வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரமித்தாள்..
“டேய் போதும் போதும் என்னால் சிரிக்கவே முடியல..” என்று சொல்ல, “நான் சொன்னேன் இல்ல நீ சிரிப்பாய் என்று..” என்று அவன் சொல்ல, “சரிடா மேலே சொல்லு..” என்று அவள் சொல்ல, அவன் ‘நான் அவளை அடித்துவிட்டேன்’ என்று சொன்னதும்,
“ஒரு பொண்ணை அத்தனை பேர் முன்னாடி அடிக்கக்கூடாது என்ற பேஸிக் மெனஸ் கூட உனக்கு தெரியாத மனோ..” என்று கேட்டாள்.. ஒரு தோழியாக இருந்து புன்னகை பூத்தவள், ‘அவன் தவறு செய்தான்’ என்று தெரிந்ததும், அவனை கண்டிக்கவும் அவள் மறக்கவில்லை..
“அப்பொழுது தவறாகவே தெரியவில்லை சாரு.. ஆனால் இன்னைக்கு அவள் சொன்னதும் அவளின் சந்திப்பு ஒரு நல்ல வழியில் நிகழ்ந்திருக்க கூடாதா என்று தோன்றுகிறது..” என்று கூறியவனின் குரலில் இருந்த மாற்றத்தைக் கவனித்தாள் சாரு..
“சரிடா அப்புறம் அவளை எப்பொழுது மறுபடியும் சந்தித்தாய்..?!” என்று அவள் பேச்சை மாற்ற அவனும், “என்னோட அலுவலகத்தில் சந்தித்தேன் சாரு..” என்று அன்று நடந்ததைச் சொல்ல, அவளோ, “டேய் சரியான வாலு போல.. எதையும் மனதில் வைத்துக் கொள்வதே இல்ல..” என்று சொல்ல,
அவனும், “நிஜம்தான் சாரு கோபத்தை அவளால் கொஞ்ச நேரம் கூட இழுத்துப் பிடிக்க முடியாது..” என்று அவன் அவளைப் பற்றிய விவரங்கள் சொல்ல, கன்னத்தில் கைகளைத் தாங்கியவண்ணம் அவன் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டாள் சாரு.. ‘அவன் இப்படி பேசமாட்டானா..?!’ என்று அவன் ஏங்கிய ஏக்கம் அவளுக்கு மட்டுமே தெரியும்..
பத்து வயதில் அவள் பார்த்த மனோவை அவள் மீண்டும் பார்க்க, ‘இதற்கு எல்லாம் தென்றல் தான் காரணம்..’ என்று சாருவின் மனம் சொன்னது.. ‘என்னோட தோழனை எனக்கு மீட்டுக்கொடுத்துவிடு தென்றல்...’ என்று தென்றலிடம் பேசினாள் சாரு..
இதுதான் நட்பு தன்னுடைய தோழன் மனதில் இருந்தவளின் பெயர் மட்டும் கேட்டு அவளிடம் தனது நண்பனையே மீட்டுக் கொடுக்க சொல்லி கேட்கும் நட்பு.. உயர்ந்த நட்பு..
அவன் சொல்வதை அவள் கவனிக்க, “எனக்கு அவளோட புன்னகை ரொம்ப பிடிக்கும் தெரியுமா சாரு.. என்ன திட்டு திட்டினாலும் அடுத்த நொடியே அது எல்லாம் மறந்துவிட்டு என் முன்னே சிரித்த முகத்துடன் வந்து நிற்பாள்.. நான் அந்த தருணத்தை மனதிற்குள் மிகவும் ரசிப்பேன்.. அவள் புன்னகைப்பது பார்த்து சில நேரத்தில் பொறாமை கூட பட்டிருக்கிறேன்.. என்னால் இப்படி சிரிக்க முடியவில்லையே..” என்று அவன் சொல்ல, அவனின் மனதை ஒரு தோழியாக புரிந்துக் கொண்ட சாரு..
“நீ பேசுவதை எல்லாம் பார்த்தால், நீ சீக்கிரம் சிரிக்க போகிறாய் மனோ.. நீ தென்றல் பற்றி சொல்ல சொல்ல அவளை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் தான் அதிகமாக இருக்கிறது மனோ..” என்று சாரு சொல்ல,
“நானே இனி அவளைப் பார்க்க முடியாதோ என்ற வருத்தத்தில் இருக்கிறேன் சாரு..” என்று சொல்ல, அவனின் முகத்தை நிமிர்ந்துப் பார்க்க, அவனின் இறுகிய முகத்தில் இருந்த வருத்தம் கண்டு திகைத்தாள் சாரு.. மனோ எந்த உணர்வுகளையும் அதிகமாக வெளிக்காட்டவே மாட்டான்..
அப்படி இருப்பவனின் முகத்தில் இருந்த வருத்தம் கண்டு சாரு, ‘உன்னோட மனதில் ஒரு பெண் இருக்கிறாள்.. அதுவும் நீ அவளை இந்த அளவிற்கு நேசிக்கிறாய் என்று நினைக்க நினைக்க எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது மனோ..’ என்று மனதில் நினைத்தவள், “இன்னைக்கு என்ன சண்டை..?” என்று கேட்டாள் சாரு..
அவளுக்கு தெரியும், ‘மனோ ஒரு முன்கோபி’ என்று.. ‘அவன் கோபத்தில் என்ன காரியம் செய்தானோ..?!’ என்று சாருவின் மனம் பதற, அவன் அலுவலகத்தில் நடந்தவற்றைக் கூறினான்..
“டேய் உனக்கு அறிவு இருக்க இல்லையா..? ஒருத்தர் ஒன்று சொன்னால் அது உண்மையா..?! பொய்யா..? அவர்கள் சீரியசாக பேசுகிறார்களா..? இல்ல விளையாட்டாக பேசுகிறார்களா..? என்று கூடவா உனக்கு தெரியாது..” என்று அவள் சரியான கோபத்தில் அவனை திட்ட ஆரமித்தாள்..
“எனக்கு அவள் சொல்லும் பொழுது எல்லாம் ஏற்பட்ட கோபத்தில் இன்று யோசிக்காமல் வார்த்தைகளை விட்டுவிட்டேன்.. அவள் அந்த அளவுக்கு கத்திட்டு போகிறாள்..” என்று அவன் சொல்ல,
“பளார்.. பளார்.. என்று இரண்டு அரை அறியாமல் விட்டாள் என்று சந்தோசப்படு.. நான் அந்த இடத்தில் இருந்த அடிக்கிற அடியில் உன்னோட செவினியைத் திரும்பி இருக்கும்.. அவள் கேட்டதில் என்ன தவறு உனக்கு அவளைப் பற்றி என்ன தெரியும்..?!” என்று கேட்டதும் அவன் அமைதியாக இருந்தான்..
“அவளுக்கு யார் யார் எல்லாம் இருக்காங்க என்று உனக்கு தெரியுமா..?” என்று அவள் கேட்டதும், “அவளுக்கு யாரும் இல்ல சாரும்மா.. கிட்டதட்ட என்னோட நிலையில் தான் அவளும் இருக்கிறாள்..” என்று அவன் வருத்தத்துடன் கூறியதும்,
“உன்னோட நிலையில் தான் அவளும் இருக்கிறாள் என்று சொல்கிறாய் இல்ல.. அப்படி ஒரு நிலையில் இருந்தும், நீ ஒரு நாள் கூட தப்பான வழிக்கு போகவில்லையே.. அவள் மட்டும் தப்பான வழிக்கு போவாள் என்று உன்னோட மனது எப்படிடா நினைத்தது..?!” என்று அவள் நிறுத்தி நிதானமாகக் கேட்டதும், அவன் ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்தான்..
“ஒருவர் பேசுவதை வைத்து அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்று சொல்லும் பிஸ்னஸ்மென் நீ.. இப்பொழுது நீயே அந்த தவறை செய்யலாமா..?!” என்று கேட்டு அவனின் தவறை அவள் அவனுக்கு புரிய வைத்தவள்,
“ஒரு வார்த்தை பேசும் பொழுது அது நமக்கு எதிரில் இருக்கும் மனிதரை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை தெரிந்து ஒரு முறைக்கு பலமுறை யோசித்து ஒரு வார்த்தை விட வேண்டும் மனோ..” என்று ஒரு தோழியாக இருந்து அவனுக்கு எல்லாவற்றையும் புரிய வைத்தாள் சாரு..
அப்பொழுதுதான் மணியைப் பார்த்தவள், “டேய் மனோ மணி எட்டு.. நான் கிளம்புகிறேன் மனோ.. நாளைக்கு காலையில் கனடா போயிருவேன்..” என்று சொல்ல, அவளைப் பார்த்து சரியென தலையசைத்த மனோ,
“அடுத்த முறை வரும் பொழுது சஞ்சையையும் அழைத்துவா சாரு..” என்று சொன்னவள், “நீ முதலில் உன்னோட புன்னகை இளவரசியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு உன்னோட காதலியிடம் காதலை சொல்ல பாருடா கிறுக்க..” என்று சிரிப்புடன் சொன்னவளுடன் எழுந்து நடந்தவன்,
“சரி அங்கே போனதும் போன் பண்ணுடி.. மறந்த கனடா வந்து மண்டையை உடைப்பேன்..” என்று அவன் சொல்ல, “பாருடா சிடுமூஞ்சி சித்தப்பன் எல்லாம் மிரட்டுகிறான்..” என்று சொன்னவள், காரின் அருகே வந்தும்,
“நான் கிளம்புகிறேன் மனோ.. உன்னோட தென்றலைப் பார்க்க முடியவில்லை என்று கொஞ்சம் கொஞ்சம் வருத்தம் இருக்கிறது.. அடுத்தமுறை வரும்பொழுது கண்டிப்பா உன்னோட இளவரசியை என்னோட கண்ணில் கட்டுடா..” என்று அவள் சிரிப்புடன் சொல்ல,
“எதுக்கு அவளை கடத்திட்டு போகலாம் என்ற புது பிளானில் இருக்கிறாயா..?!” என்று அவன் கேட்டதும், “உன்னோட இளவரசியைக் கடத்தினால் நீ என்னை சும்மா விடுவாய் பாரு.. நாடு விட்டு நாடு வந்து என்னை மொத்துவியே.. யார் உன்னிடம் வாங்கிக் கட்டுவது..?! என்னால் முடியாது சாமி..” என்று சந்தோசமாகக் கூறியவள்,
“நான் கிளம்புகிறேன்டா.. ஊருக்கு போனதும் உனக்கு போன் பண்றேன்..” என்று கிளம்பிச் சென்றாள் சாரு.. அவள் கிளம்பியதும் தன்னுடைய காரில் ஏறியவன் காரை எடுத்தான்..
Last edited: