• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Enathu Punnagaiyin Mugavari - 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 9

தென்றல் சென்றதும் சாருவின் பக்கம் திரும்பிய மனோ, “என்னிடம் இருந்து உண்மையை வாங்காமல் நீ இங்கிருந்து போக மாட்டாய் என்று எனக்கு நன்றாகத் தெரிந்துவிட்டது..” என்று கூறியவனைப் பார்த்து சிரித்த சாரு..

“ஒரு புத்தகத்தைப் படிக்கும் போது அதன் கடைசி பக்கம் இல்லை என்றால் எப்படி மண்டை வெடிக்குமோ அதே போல என்னோட மண்டையும் வெடிக்கிறது..” என்று சாரு சிரிப்புடன் கூறினாள்..

“அவள் பெயர் தென்றல் என்று உன்னிடம் சொல்லிவிட்டேன்..” என்று அவன் சொல்ல, “அதுக்கு மேல சொல்லுடா.. அவள் எங்கே இருக்கிறாள்..? உனக்கு எப்படி அவளை தெரியும்..?! இப்பொழுது என்ன செய்கிறாள்..?! அவளின் குணம் என்ன..?!” என்று கேள்விகளைக் கேட்ட சாருவைப் பார்த்தவன் கையெடுத்துக் கும்பிட, “என்ன எஸ்கேப் ஆகலாம் என்று பார்க்கிறாயா..?! முதலில் பதிலை சொல்லுடா..” என்று சிரிப்புடன் கேட்டாள்..

“அவளை நான் சந்தித்த நாளை உன்னிடம் சொன்னால் நீ விழுந்து விழுந்து சிரிப்பாய் சாரு..” என்று மனோ சொல்ல, “ஹே முதலில் சொல்லுடா.. சிரிப்பு வருதா..?! இல்லையா..? என்று நான் சொல்கிறேன்..” என்று கேட்க, அவன் சந்தித்த நாளை சொல்ல வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரமித்தாள்..

“டேய் போதும் போதும் என்னால் சிரிக்கவே முடியல..” என்று சொல்ல, “நான் சொன்னேன் இல்ல நீ சிரிப்பாய் என்று..” என்று அவன் சொல்ல, “சரிடா மேலே சொல்லு..” என்று அவள் சொல்ல, அவன் ‘நான் அவளை அடித்துவிட்டேன்’ என்று சொன்னதும்,

“ஒரு பொண்ணை அத்தனை பேர் முன்னாடி அடிக்கக்கூடாது என்ற பேஸிக் மெனஸ் கூட உனக்கு தெரியாத மனோ..” என்று கேட்டாள்.. ஒரு தோழியாக இருந்து புன்னகை பூத்தவள், ‘அவன் தவறு செய்தான்’ என்று தெரிந்ததும், அவனை கண்டிக்கவும் அவள் மறக்கவில்லை..

“அப்பொழுது தவறாகவே தெரியவில்லை சாரு.. ஆனால் இன்னைக்கு அவள் சொன்னதும் அவளின் சந்திப்பு ஒரு நல்ல வழியில் நிகழ்ந்திருக்க கூடாதா என்று தோன்றுகிறது..” என்று கூறியவனின் குரலில் இருந்த மாற்றத்தைக் கவனித்தாள் சாரு..

“சரிடா அப்புறம் அவளை எப்பொழுது மறுபடியும் சந்தித்தாய்..?!” என்று அவள் பேச்சை மாற்ற அவனும், “என்னோட அலுவலகத்தில் சந்தித்தேன் சாரு..” என்று அன்று நடந்ததைச் சொல்ல, அவளோ, “டேய் சரியான வாலு போல.. எதையும் மனதில் வைத்துக் கொள்வதே இல்ல..” என்று சொல்ல,

அவனும், “நிஜம்தான் சாரு கோபத்தை அவளால் கொஞ்ச நேரம் கூட இழுத்துப் பிடிக்க முடியாது..” என்று அவன் அவளைப் பற்றிய விவரங்கள் சொல்ல, கன்னத்தில் கைகளைத் தாங்கியவண்ணம் அவன் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டாள் சாரு.. ‘அவன் இப்படி பேசமாட்டானா..?!’ என்று அவன் ஏங்கிய ஏக்கம் அவளுக்கு மட்டுமே தெரியும்..

பத்து வயதில் அவள் பார்த்த மனோவை அவள் மீண்டும் பார்க்க, ‘இதற்கு எல்லாம் தென்றல் தான் காரணம்..’ என்று சாருவின் மனம் சொன்னது.. ‘என்னோட தோழனை எனக்கு மீட்டுக்கொடுத்துவிடு தென்றல்...’ என்று தென்றலிடம் பேசினாள் சாரு..

இதுதான் நட்பு தன்னுடைய தோழன் மனதில் இருந்தவளின் பெயர் மட்டும் கேட்டு அவளிடம் தனது நண்பனையே மீட்டுக் கொடுக்க சொல்லி கேட்கும் நட்பு.. உயர்ந்த நட்பு..

அவன் சொல்வதை அவள் கவனிக்க, “எனக்கு அவளோட புன்னகை ரொம்ப பிடிக்கும் தெரியுமா சாரு.. என்ன திட்டு திட்டினாலும் அடுத்த நொடியே அது எல்லாம் மறந்துவிட்டு என் முன்னே சிரித்த முகத்துடன் வந்து நிற்பாள்.. நான் அந்த தருணத்தை மனதிற்குள் மிகவும் ரசிப்பேன்.. அவள் புன்னகைப்பது பார்த்து சில நேரத்தில் பொறாமை கூட பட்டிருக்கிறேன்.. என்னால் இப்படி சிரிக்க முடியவில்லையே..” என்று அவன் சொல்ல, அவனின் மனதை ஒரு தோழியாக புரிந்துக் கொண்ட சாரு..

“நீ பேசுவதை எல்லாம் பார்த்தால், நீ சீக்கிரம் சிரிக்க போகிறாய் மனோ.. நீ தென்றல் பற்றி சொல்ல சொல்ல அவளை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் தான் அதிகமாக இருக்கிறது மனோ..” என்று சாரு சொல்ல,

“நானே இனி அவளைப் பார்க்க முடியாதோ என்ற வருத்தத்தில் இருக்கிறேன் சாரு..” என்று சொல்ல, அவனின் முகத்தை நிமிர்ந்துப் பார்க்க, அவனின் இறுகிய முகத்தில் இருந்த வருத்தம் கண்டு திகைத்தாள் சாரு.. மனோ எந்த உணர்வுகளையும் அதிகமாக வெளிக்காட்டவே மாட்டான்..

அப்படி இருப்பவனின் முகத்தில் இருந்த வருத்தம் கண்டு சாரு, ‘உன்னோட மனதில் ஒரு பெண் இருக்கிறாள்.. அதுவும் நீ அவளை இந்த அளவிற்கு நேசிக்கிறாய் என்று நினைக்க நினைக்க எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது மனோ..’ என்று மனதில் நினைத்தவள், “இன்னைக்கு என்ன சண்டை..?” என்று கேட்டாள் சாரு..

அவளுக்கு தெரியும், ‘மனோ ஒரு முன்கோபி’ என்று.. ‘அவன் கோபத்தில் என்ன காரியம் செய்தானோ..?!’ என்று சாருவின் மனம் பதற, அவன் அலுவலகத்தில் நடந்தவற்றைக் கூறினான்..

“டேய் உனக்கு அறிவு இருக்க இல்லையா..? ஒருத்தர் ஒன்று சொன்னால் அது உண்மையா..?! பொய்யா..? அவர்கள் சீரியசாக பேசுகிறார்களா..? இல்ல விளையாட்டாக பேசுகிறார்களா..? என்று கூடவா உனக்கு தெரியாது..” என்று அவள் சரியான கோபத்தில் அவனை திட்ட ஆரமித்தாள்..

“எனக்கு அவள் சொல்லும் பொழுது எல்லாம் ஏற்பட்ட கோபத்தில் இன்று யோசிக்காமல் வார்த்தைகளை விட்டுவிட்டேன்.. அவள் அந்த அளவுக்கு கத்திட்டு போகிறாள்..” என்று அவன் சொல்ல,

“பளார்.. பளார்.. என்று இரண்டு அரை அறியாமல் விட்டாள் என்று சந்தோசப்படு.. நான் அந்த இடத்தில் இருந்த அடிக்கிற அடியில் உன்னோட செவினியைத் திரும்பி இருக்கும்.. அவள் கேட்டதில் என்ன தவறு உனக்கு அவளைப் பற்றி என்ன தெரியும்..?!” என்று கேட்டதும் அவன் அமைதியாக இருந்தான்..

“அவளுக்கு யார் யார் எல்லாம் இருக்காங்க என்று உனக்கு தெரியுமா..?” என்று அவள் கேட்டதும், “அவளுக்கு யாரும் இல்ல சாரும்மா.. கிட்டதட்ட என்னோட நிலையில் தான் அவளும் இருக்கிறாள்..” என்று அவன் வருத்தத்துடன் கூறியதும்,

“உன்னோட நிலையில் தான் அவளும் இருக்கிறாள் என்று சொல்கிறாய் இல்ல.. அப்படி ஒரு நிலையில் இருந்தும், நீ ஒரு நாள் கூட தப்பான வழிக்கு போகவில்லையே.. அவள் மட்டும் தப்பான வழிக்கு போவாள் என்று உன்னோட மனது எப்படிடா நினைத்தது..?!” என்று அவள் நிறுத்தி நிதானமாகக் கேட்டதும், அவன் ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்தான்..

“ஒருவர் பேசுவதை வைத்து அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்று சொல்லும் பிஸ்னஸ்மென் நீ.. இப்பொழுது நீயே அந்த தவறை செய்யலாமா..?!” என்று கேட்டு அவனின் தவறை அவள் அவனுக்கு புரிய வைத்தவள்,

“ஒரு வார்த்தை பேசும் பொழுது அது நமக்கு எதிரில் இருக்கும் மனிதரை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை தெரிந்து ஒரு முறைக்கு பலமுறை யோசித்து ஒரு வார்த்தை விட வேண்டும் மனோ..” என்று ஒரு தோழியாக இருந்து அவனுக்கு எல்லாவற்றையும் புரிய வைத்தாள் சாரு..

அப்பொழுதுதான் மணியைப் பார்த்தவள், “டேய் மனோ மணி எட்டு.. நான் கிளம்புகிறேன் மனோ.. நாளைக்கு காலையில் கனடா போயிருவேன்..” என்று சொல்ல, அவளைப் பார்த்து சரியென தலையசைத்த மனோ,

“அடுத்த முறை வரும் பொழுது சஞ்சையையும் அழைத்துவா சாரு..” என்று சொன்னவள், “நீ முதலில் உன்னோட புன்னகை இளவரசியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு உன்னோட காதலியிடம் காதலை சொல்ல பாருடா கிறுக்க..” என்று சிரிப்புடன் சொன்னவளுடன் எழுந்து நடந்தவன்,

“சரி அங்கே போனதும் போன் பண்ணுடி.. மறந்த கனடா வந்து மண்டையை உடைப்பேன்..” என்று அவன் சொல்ல, “பாருடா சிடுமூஞ்சி சித்தப்பன் எல்லாம் மிரட்டுகிறான்..” என்று சொன்னவள், காரின் அருகே வந்தும்,

“நான் கிளம்புகிறேன் மனோ.. உன்னோட தென்றலைப் பார்க்க முடியவில்லை என்று கொஞ்சம் கொஞ்சம் வருத்தம் இருக்கிறது.. அடுத்தமுறை வரும்பொழுது கண்டிப்பா உன்னோட இளவரசியை என்னோட கண்ணில் கட்டுடா..” என்று அவள் சிரிப்புடன் சொல்ல,

“எதுக்கு அவளை கடத்திட்டு போகலாம் என்ற புது பிளானில் இருக்கிறாயா..?!” என்று அவன் கேட்டதும், “உன்னோட இளவரசியைக் கடத்தினால் நீ என்னை சும்மா விடுவாய் பாரு.. நாடு விட்டு நாடு வந்து என்னை மொத்துவியே.. யார் உன்னிடம் வாங்கிக் கட்டுவது..?! என்னால் முடியாது சாமி..” என்று சந்தோசமாகக் கூறியவள்,

“நான் கிளம்புகிறேன்டா.. ஊருக்கு போனதும் உனக்கு போன் பண்றேன்..” என்று கிளம்பிச் சென்றாள் சாரு.. அவள் கிளம்பியதும் தன்னுடைய காரில் ஏறியவன் காரை எடுத்தான்..
 




Last edited:

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அந்த இரவு நேரத்தில் சாலை ஓரத்தில் நின்றிருந்த மின் விளக்குகள் அனைத்தும் பளிச்சென்று எரிய அதை பார்த்தவண்ணம் துரிதமான வேகத்தில் வண்டியைச் செலுத்திக் கொண்டிருந்தவன் மனதில் அவளின் நினைவுகள் பயணிக்க அதே யோசனையுடன் வீடு வந்து சேர்ந்தான் மனோரஞ்சன்..!

அவன் வீட்டிற்குள் நுழைய அங்கே இருந்த அமைதி அவனை மிகவும் பாதித்தது.. தன்னுடைய பதினேழு வருட வாழ்க்கையில் அவன் அந்த அமைதியைத் தான் அதிகம் நேசிக்கிறான்.. இன்று ஏனோ அவனின் மனம் அந்த அமைதியை வெறுத்தது..

அந்த வீட்டை சுற்றிலும் பார்வையை ஒட்டியவன் மனதில், ‘தங்ககூண்டி அடைக்கப்பட்ட கிளிபோல இத்தனை நாளும் அனாதையாக இருந்திருக்கிறேன்..’ என்று நினைத்தவன், அப்படியே சோபாவில் அமர அங்கிருந்த அமைதி அவனை மிகவும் பாதிக்க அவளின் கேள்விகள் அவனின் மனதில் ஈட்டியாக இறங்கியது..

அவனுக்கே தெரியாமல் அவனின் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்துவிட்டாள் அவனுடைய ‘புயல்..’ இந்த ஒரு ஏழு மாதமாக அவள் செய்த சேட்டைகள் அனைத்தும் மனதில் படமாக ஓட, சாரு சொல்லிய விஷயத்தை யோசிக்க ஆரமித்தான்..

அந்த நேரத்தில் அவனின் அமைதியைக் கலைக்கும் வகையில் அவனின் செல்போன் அடிக்க, அதை எடுத்துப் பார்த்தான் மனோ.. திரையில் மின்னிய தாத்தாவின் பெயரை பார்த்தவன், “ஹலோ தாத்தா..” என்று இவன் அழைக்க, “மனோ இப்படி இருக்கிறாய்..?” என்று தனது கம்பீரமான குரலில் கேட்டார் அவனின் தாத்தா ராஜசேகர்..

“நான் நல்ல இருக்கிறேன் தாத்தா.. நீங்க எப்படி இருக்கீங்க..?!” என்று இவன் கேட்டதும், அவனின் குரலில் இருந்த மாற்றத்தை உணர்ந்தவர், “என்னப்பா ஒரு மாதிரியாக பேசுகிறாய்..?” என்று கேட்டார்..

அவரின் குரலில் இருந்த பதட்டத்தை உணர்ந்தவன், “ஒன்றுமில்லை தாத்தா.. நீங்க எப்படி இருக்கீங்க..?” என்று கேட்ட பேரனுக்கு, “நான் நல்ல இருக்கிறேன் கண்ணா.. அங்கே வேலை எல்லாம் எப்படி போகிறது..?!” என்று கேட்டதும், “ம்ம் நல்ல இருக்கிறது தாத்தா..” என்று சொல்ல,

“உன்னோட ட்ரீம் டெண்டர் உன்னோட கைக்கு கிடைத்துவிட்டது என்று கேள்விப்பட்டேன் கண்ணா.. அந்த டெண்டர் உனக்கு கிடைத்ததில் எனக்கு ரொம்ப சந்தோசம் கண்ணா..” என்று அவர் சொல்ல,

‘டெண்டர் கிடைத்துவிட்டது தாத்தா.. ஆனால் அதைவிட பொக்கிஷமான ஒரு பொருளை தொலைத்துவிட்டு தனியாக நிற்கிறேன் தாத்தா..’ என்று தன்னுடைய மனதிற்குள்ளேயே சொல்லிக் கொண்டான் மனோ.. “சரிப்பா நேரம் ஆச்சு நீ சாப்பிட்டுவிட்டு தூங்கு..” என்று தனது அழைப்பை துண்டித்தார் ராஜசேகர்..

அவர் போனை வைத்தும், செல்லை வைத்தவன் அவளைப் பற்றி யோசிக்க சோபாவில் அமர்ந்தவனை நித்திராதேவி அரவணைத்து கொள்ள அமைதியாக துயில் கொண்டான் மனோரஞ்சன்..

மறுநாள் பொழுது அழகாக விடிந்தது.. எப்பொழுதும் போலவே எழுந்தவன் ஜாக்கிங் முடித்துவிட்டு வந்து குளித்துவிட்டு அலுவலகம் சென்றான். அவன் செல்லும் வழியில் சைட்டிற்கு சென்றுவிட்டு காலை பத்துமணி போல அலுவகத்தில் உள்ளே நுழைந்தான் மனோ..

அவன் அலுவலகத்தின் உள்ளே நுழைந்த மறுநொடியே, அவனின் கண்கள் தென்றல் அமரும் இடத்தைப் பார்க்க, அவளின் சீட் காலியாக இருந்தது.. அவளின் இடத்தைப் பார்த்துக் கொண்டே அறையின் உள்ளே சென்றவன் தென்றலுக்கு அழைத்தான்.. போன் ரீங் போய் கட்டாக மீண்டும் அழைத்தான் மனோ.. மீண்டும் போன் ரீங் முழுவதுமாக போய் கட்டானது..

‘இவள் வேண்டும் என்றே எடுக்காமல் இருக்கிறாள்..’ என்று மனதில் நினைத்தவன், அடுத்த வேலைகளைக் கவனிக்க, அடுத்து எந்த இடத்தில் மீட்டிங்..?! என்ன பேசவேண்டும் என்ற குறிப்புகள் எதுவும் இல்லாமல் அவனுக்கு பைத்தியமே பிடித்தது..

அப்பொழுது அவனின் செல்லிற்கு பிரைவேட் நம்பரில் இருந்து குறுஞ்செய்தி வந்தது.. அதை அறிவிக்கும் வண்ணம் அவனது செல்லில் இருந்து, ‘கீன்’ என்ற சத்தம் வர, அதை எடுத்தும் பார்த்தான் மனோ..

அந்த குறுஞ்செய்தியில், ‘உங்களுக்கு வேண்டிய தகவல்கள் உங்களின் மெயிலில் இருக்கும்..’ என்று மட்டும் இருக்க, அதைப் பார்த்த மனோவிற்கு புரிந்துவிட்டது.. இந்த குறுஞ்செய்தி அனுப்பியது தென்றல் தான் என்று..!

அவள் அனுப்பிய செய்தில் இருந்த தகவலை வைத்து அவன் மெயிலைப் பார்க்க அதில் அவளிடமிருந்து அவனுக்கு வேண்டிய குறிப்புகள், மீட்டிங் பற்றிய விவரங்கள் அனைத்தும் இருந்தது..

அதில் இருந்த தகவலின் படி அவன் வேலைகளை செய்ய அன்று மாலை அவனுக்கு ஒரு முக்கியமான மெயில் வந்தது.. அதைப்படித்தவன் மனம் கோபத்தில் கொந்தளித்தது..

அது தென்றல் அனுப்பிய மெயில் தான்.. அதில் அவள் வேலையை ரிஸைன் செய்வதாகவும், இனிமேல் அங்கே வேலை செய்ய எனக்கும் விருப்பம் இல்லை என்றும் அனுப்பி இருக்க அந்த மெயில் பார்த்த மனோ கோபத்தின் உச்சியில் இருந்தான்..

அவள் மீது கோபம் இல்லை.. அவன் மீதே அவனுக்கு கோபம்.. அவன் யோசிக்காமல் சொன்ன வார்த்தைகளுக்கு அவள் கொடுத்த தண்டனை.. அவன் அவளுக்கு வார்த்தைகளால் கொடுத்த தண்டனைக்கு, அவளும் அதே வார்த்தைகளாலேயே தண்டனை கொடுத்துவிட்டு சென்றுவிட்டாள்..

அவளுக்கு லீவ் கிடைத்து அவள் ஊருக்கு சென்றிருக்கிறாள் என்று அலுவலகத்தில் உள்ள அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தனர்.. இவர்கள் இருவரும் போட்ட சண்டை அவனின் அறையில் இருந்த நான்கு சுவர்களுக்கு மட்டுமே தெரியும்..

மனோவை இங்கே கோபத்தில் கொந்தளிக்க வைத்தவள் பேருந்தில் ஜன்னல் ஓர சீட்டில் அமர்ந்து ஊட்டியை நோக்கி சந்தோசமாக பயணித்துக் கொண்டிருந்தாள்.. அவளின் முகம் முழுக்க சந்தோஷத்தில் மலர்ந்து இருந்தது.. அவளின் அருகில் அமர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார் ஷீலாம்மா..

அந்த மலைப்பாதையில் பேருந்து பயணிக்க அந்த சாலை முழுவதும் நிறைந்து நின்ற மரங்களைப் பார்த்தவள் மனம் மிகவும் சந்தோசம் கொள்ள அந்த எழில் அழகை ரசித்தவள் பாதைக்கு ஏற்றது போல பேருந்து வளைந்து செல்ல அவளின் மனம் கொஞ்சம் யோசனையில் ஆழ்ந்தது..

‘அவன் அப்படி பேச யார் காரணம்..?!’ என்று அவள் மனதிடம் கேட்டதும், அவளின் மனம் கொஞ்சமும் யோசிக்காமல், ‘இது எல்லாவற்றிற்கும் நீதான் முத்ல் காரணம் லூசு..’ என்று சொன்னதும், ‘நான் என்ன செய்தேன்..?!’ என்று அதனிடம் கேட்டதும்,

‘நான் ராகுல் கூட வந்தேன்.. சுனில் எனக்காக பார்க்கில் காத்திருப்பான் என்று சொன்னது எல்லாம் அவனுக்கு கடுப்பை மட்டுமே கொடுக்கும்.. அவன் சிரிக்க வேண்டும் என்று நீ செய்த சேட்டைகள் அவனுக்கு கோபத்தை மட்டுமே கொடுத்திருக்கிறது..’ என்று சொல்ல ‘ஸ்ஸ்ஸ்..’ என்று என்று நாக்கைக் கடித்தவள், ‘நான்தான் அவனைக் கடுப்பைக் கிளப்பிட்டேனா..?’ என்று கேட்டவள்,

‘இப்பொழுது அவனிடம் சொல்லாமல் ஊருக்கும் கிளம்பி வந்துட்டேன்.. ஏற்கனவே அவன் கோபத்தில் கடிப்பான்.. இப்பொழுது இரும்பு மனிதனுக்கு நானே வழி போட்டுக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன்..’ என்று நினைத்தவள் யோசிக்க ஆரமித்தாள்..

அதில் அவளின் முகத்தில் புன்னகை தானாகவே மறந்தது.. அவனுடன் குறும்புடன் அவனுடன் கொஞ்சம் விளையாடிப் பார்க்க எண்ணியவள் அவனுக்கு ரிஸைன் லெட்டரை மெயில் செய்தாள்..

அந்த லெட்டர் அனுப்பிவிட்டு, ‘இரும்பு மனிதா.. உன்னிடம் என்னுடைய விளையாட்டுகள் தொடரும்.. என்னுடைய முதல் விளையாட்டு இது.. இதுக்கு உன்னிடம் இருந்து என்ன பதில் வருகிறது என்று பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்..’ என்று புன்னகையோடு நினைத்தவள் பயணம் இனிதே தொடர்ந்தது..

அவளின் விளையாட்டில் அவள் வெற்றி அடைவாளா..?! மனோ அவளை வெற்றி அடைய வைப்பானா..? இல்லை தோல்வியைக் கொடுப்பானா..? பொறுத்திருந்து பார்ப்போம்..
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
கொஞ்சம் நேரம் வந்தாலும் சாரு ஐ லைக் யுவர் கேரக்டர் நீ ஒரு குட் பிரண்ட் நண்பனுக்கு நல்லதையும் கெட்டதையும் புரிய வைச்சிட்டப்பா
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
மனோவை பீல் பன்ன வைச்சிட்டியே வாலு புள்ளை நீ சமர்த்து புள்ளைங்கறது நீ போகறதுக்கு முன்னாடி எல்லாத்தையும் ரெடி பன்னதில் தெரியுதுடா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top