Thank you very much lalliVery nice...
Thanks appumaஎவ்வளவு உணர்வுபூர்வமான கவிதை ??? சூப்பர் புஷ் அக்கா?
Thank you premiஅது ஒரு அழகிய காணக்காலம் என்று பாட தான் முடியும் புஷ் அக்கா....
மிகவும் அருமையான வரிகள்??
பிடித்திருந்ததா? நன்றி சுவிஎன் செய்வது தோழி!!
காலச்சக்கரத்தில் சிக்கி..
மறைந்தே போகிறது..
காதலித்த அருமையான தருணங்கள்...
அருமையான கவிதை புவி..
Beautiful lines???????View attachment 3727
காலச்சக்கரமே
கடத்திப்போ ஒருமுறை
மீண்டுமாய் வேண்டும்
நான் காதலித்த காலம்
வீதியில் எனைத்தேடி அவன்
விழிக்குள் சிக்க வைக்கும் விந்தை
உயிர்வரை ஊடுருவி
உள்ளம் சிலிர்க்கவைக்கும்
அவனின் ஒற்றைப் பார்வை
விழி நிறைய கனவு சுமந்து
விடிய விடிய விழித்திருந்த
அவன் காதல் சொன்ன தினம்
மருதாணி கரம் அவன் பற்ற
மயங்கி நான் நிற்க
முதல்முதலாய் தந்த முத்தம்
கல்தூண் மறைவில் வைத்து
கண்ஜாடை காட்டி சென்ற
கண்ணாடி தாஜ்மஹால்
ஆளில்லா ஆற்றங்கரையில்
அணைத்திருந்த அந்த நொடி
நிலா சாட்சி வைத்து
நெற்றியில் இட்ட நீள் முத்தம்
இன்றும் இதழ் நுனியில்
இனிக்கும் முதல் இதழ் தீண்டல்
இன்று என்னவன்தான்
ஆனால் எங்கே அவன்
என்னவனுக்குள் தேடுகிறேன்
என் அவனை
ஆதலால்
காலச்சக்கரமே
கடத்திப்போ ஒருமுறை
மீண்டுமாய் வேண்டும்
நான் காதலித்த காலம்
Thanks darliBeautiful lines???????