சென்ற பதிவுக்கு லைக், கமெண்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றி......
வெண்ணிலா அதிர்ச்சியாக அக்ஸயாவையே பார்த்து கொண்டு நிற்க அவளருகில் வந்த மகாலட்சுமி
"என்னடா நிலா??? இப்படி திடீர்னு வந்து நிற்குறாங்க இவங்கனு யோசிக்குறியா???" என்று கேட்கவும் வெண்ணிலா என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்த வண்ணம் நின்றாள்.
"அவளுக்கு இது ஸ்வீட் சர்ப்பரைஸ் மா.....நான் நிலாவை கூட்டிட்டு போய் ரெடி பண்ணி கூட்டிட்டு வரேன்.....நீங்க உட்காருங்கம்மா....." என்று அபிநயா மகாலட்சுமியிடம் கூறி விட்டு வெண்ணிலாவை அழைத்து கொண்டு செல்ல கனவில் நடப்பது போல வெண்ணிலா அபிநயாவின் பின்னால் சென்றாள்.
சூர்யாவின் பார்வையோ வெண்ணிலாவின் அதிர்ந்த முகத்தையே அளவிட்டு கொண்டிருந்தது.
"இவ முகமே சரி இல்லை.....எதையோ யோசிச்சு அவளை அவளே குழப்பிட்டு இருக்கா.....அவளை பார்த்து எத்தனை நாளாச்சு??? ஆனா அந்த ஏக்கம், காதல் எதுவுமே அவ முகத்தில் இல்லையே.....கண்டிப்பாக நிலாகிட்ட நான் பேசியே ஆகணும்....." என்று சூர்யா மனதிற்குள் முடிவெடுத்து கொண்டான்.
மறுபுறம் தன்னறையில் வெண்ணிலா அபிநயா சொன்னதை எல்லாம் சாவி கொடுத்த பொம்மை போல செய்து கொண்டிருந்தாள்.
அங்கே என்ன நடக்கிறது என்பது அவள் மூளைக்கு சிறிதும் எட்டவில்லை.
எளிமையான நீல நிற பட்டு புடவையில் அபிநயாவின் கை வண்ணத்தில் சிறு ஒப்பனையோடு நடந்து வந்த வெண்ணிலாவைப் பார்த்து ஆண்டாள் சிறிது கண் கலங்கவே அவர் கைகளை மகாலட்சுமி ஆதரவாக பற்றி கொண்டார்.
அதன் பிறகு சம்பிரதாயங்கள் அனைத்தும் ஆரம்பிக்கப்பட வெண்ணிலா - சூர்யதேவனின் நிச்சயதார்த்தம் தொடங்கியது.
அய்யர் நிச்சயப்பத்திரிகை வாசிக்க ஆண்டாள்- அழகர் மற்றும் பெருமாள் - மகாலட்சுமி தம்பதியினர் தாம்பூலம் மாற்றி கொண்டனர்.
அதன் பின்னர் சூர்யா வெண்ணிலாவிற்கு மோதிரம் மாட்டி விடுவதற்காக அவளருகில் வர வெண்ணிலாவோ இலக்கின்றி சுவரை வெறித்துப் பார்த்து கொண்டு நின்றாள்.
வெண்ணிலாவின் முகத்தை பார்த்து பெரியவர்கள் எல்லோரும் குழப்பமடைய அபிநயா வெண்ணிலாவின் அருகில் வந்து அவள் தோள் மீது கை வைத்தாள்.
அபிநயாவின் கை படவும் கனவில் இருந்து எழுந்து கொள்வது போல விழித்த வெண்ணிலா அப்போது தான் தன் எதிரில் நின்று கொண்டிருந்த சூர்யாவை பார்த்தாள்.
பெரியவர்களின் குழப்பமான முகத்தை பார்த்து அவர்கள் அருகில் வந்த வெற்றி
"ஏன் எல்லோரும் த்ரீல் மூவி பார்க்குற ரேஞ்ச்ல இருக்குறீங்க??? நிலாவுக்கு இது சர்ப்பரைஸ்....ஷோ அவ ஷாக் ஆனா நியாயம் இருக்கு....நீங்க எல்லாரும் ஏன் ஷாக் ஆகுறிங்க???" என்று கேட்கவும்
ஆண்டாள் சிறிது தயக்கத்தோடு
"அவகிட்ட ஒரு வார்த்தை கேட்டுடலாம் வெற்றி...." என்று கூறினார்.
ஆண்டாள் சொன்னதைக் கேட்டு வெற்றி மனதிற்குள்
"அவ ஆல்ரெடி வீட்டில் லவ் பண்ணுறத சொன்னா என்ன நினைப்பாங்கனு கன்பியுஸ்ல இருக்கா.....பிரண்ட்னு பழக விட்ட சூர்யாவை தப்பா நினைச்சிடுவாங்களோனு தான் மேடம் பீல் பண்ணுறாங்க....இதை நான் இப்போ உங்க கிட்ட சொல்ல முடியாதே...." என்று வெகு தப்பாக யோசித்தவன்
ஆண்டாளின் அருகில் வந்து
"நிலா எதுவும் சொல்லாம இருக்குறதுலயே புரியலயா??? அவளுக்கும் இதுல சம்மதம் தான்....பொண்ணு கொஞ்சம் ஷாக் ஆகிட்டா அவ்வளவு தான்...." என்று அவரை சமாதானப்படுத்திய வெற்றி அபிநயாவை திரும்பி பார்த்தான்.
அபிநயா வெண்ணிலாவின் கை பிடித்து எழுந்து நிற்க செய்ய எழுந்து நின்ற வெண்ணிலா சூர்யாவை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.
"இல்ல....இல்ல....இந்த திருமணம் நடக்க கூடாது....சூர்யா என்ன ஏமாற்றிட்டு பொய்யா வேஷம் போடுறான்....அவனை நம்பவே கூடாது.....இந்த திருமணத்தை நான் நடக்க விடமாட்டேன்....." என்று வெண்ணிலா மனதிற்குள் நினைத்துக் கொண்டு அனைவரிடமும் இதைப் பற்றி கூறலாம் என்று வாய் திறக்கையில் சூர்யாவின் கைகள் அவள் விரலில் மோதிரத்தை மாட்டி விட்டிருந்தது.
வெண்ணிலா அதிர்ச்சியாக அவனைப் பார்க்க சூர்யா அவளை பார்த்து கண் சிமிட்டி சிரித்தான்.
சூர்யாவின் சிரிப்பில் வெண்ணிலாவின் மனம் அவன் பால் ஈர்க்கப்பட்டாலும் முயன்று தன் மனதை கட்டி போட்டவள் சூர்யாவை கோபமாக பார்த்தாள்.
அதன் பிறகு பெரியவர்கள் அனைவரும் தங்களுக்குள் திருமணத் திகதி பற்றி பேச ஆரம்பித்து விட அபிநயா மற்றும் வெற்றி, வெண்ணிலா மற்றும் சூர்யாவிற்கு தனிமை கொடுத்து சென்றனர்.
"நிலா....." என்று சூர்யா அழைக்கவும்
கோபமாக அவனை நிமிர்ந்து பார்த்த வெண்ணிலா
"இப்போ என்ன டிராமா போடலாம்னு இருக்க????" என்று கேட்க
"டிராமாவா??????" என்று அவளை புரியாமல் பார்த்தான் சூர்யா.
"எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லை....நீங்களாகவே எல்லார்கிட்டயும் சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க....இல்லைனே நான் வேற ஏதாவது பண்ணிடுவேன்....." என்று விட்டு வெண்ணிலா சென்று விட
"என்னாச்சு இவளுக்கு????" என்று யோசித்த வண்ணம் நின்றான் சூர்யா.
"ஒரு வேளை நான் இவ்வளவு நாளா பேசலேனு கோபமாக இருக்கா போல....சரியான பச்சை மிளகாய் இவ.....
நான் அவ்வளவு சீக்கிரம் பின் வாங்க மாட்டேன் ஐசும்மா.....இந்த சின்ன ரீசன்காக கல்யாணத்தை நிறுத்துறதா???? நெவர்.....இந்த கல்யாணம் நடக்கும்....." என்று கோபமாக படியேறி சென்ற வெண்ணிலாவை பார்த்து தனக்குள் கூறி கொண்டவன் பெரியவர்கள் நால்வரின் அருகில் சென்றான்.
"நான் ஒரு விஷயம் சொல்லணும்...." என்றவாறு தங்கள் முன்னால் நின்ற சூர்யாவை பெரியவர்கள் நால்வரும் கேள்வியாக நோக்கினர்.
"அடுத்த வாரம் ஏதாவது நல்ல முஹூர்த்தம் இருந்தா அப்போவே கல்யாணத்தை வச்சிக்கலாமே....." என்று சூர்யா கூறவும்
"என்ன?????" என்று அனைவரும் அதிர்ச்சியாக அவனைப் பார்த்தனர்.
"இல்ல....என் வயசு தானே வெற்றிக்கும் அபிக்கும்.....அவங்களுக்கே ஒரு பையன்....அதுவும் நாலு வயசு பையன்....." என்று பெருமூச்சு விட்டு கொள்ள பெரியவர்கள் அனைவரும் வாய் விட்டு சிரித்தனர்.
"படவா.....பெரியவங்க கிட்ட என்ன பேசணும்னு தெரியாதா உனக்கு????" என்று மகாலட்சுமி சூர்யாவின் காதை பிடித்து செல்லமாக திருக
"என்ன உங்களுக்கு அடுத்த பேரக்குழந்தைங்கள பார்க்க ஆசை இருக்கும்னு நினைச்சு சொன்னேன்...." என்று சூர்யா கூற மகாலட்சுமி தன் தலையில் தட்டி கொண்டார்.
"உனக்கு கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லைடா...." என்று விட்டு மகாலட்சுமி சென்று ஆண்டாளின் அருகில் நின்று கொள்ள
சூர்யாவின் அருகில் வந்த அழகர்
"உன் நேரம் அடுத்த வாரம் நல்ல நாள் எதுவும் இல்லை டா கண்ணா...அதனால அதற்கு அடுத்த வாரம் தான் நல்ல நாள் வருது.....அப்போ தான் உன்னை நிலாகிட்ட நாங்க பணயமா அனுப்ப போறோம்....." என்று கூற
"ஏதோ ஜெயிலுக்கு அனுப்புற மாதிரி சொல்லுறீங்களே மாமா...." என்று சூர்யா கூறவும்
"மேரேஜ் ஒரு ஜெயில் தான்டா....." என்றவாறே அவர்கள் அருகில் வந்து நின்றான் வெற்றி.
"ஓஹ்.....அப்படியா????" என்றவாறு வந்த அபிநயாவைப் பார்த்து வெற்றி திருதிருவென்று விழிக்க இவர்கள் அனைவரது சம்பாஷணைகளையும் பார்த்து பெரியவர்கள் அனைவரும் மனம் விட்டு சிரித்தனர்.
ஆனால் வெண்ணிலாவோ தன் அறையில் சூர்யா அவள் கையில் போட்டு விட்ட மோதிரத்தை வெறித்துப் பார்த்து கொண்டு இருந்தாள்.
"சீட்டர்......சீட்டர்......" என்று முணுமுணுத்துக் கொண்டே இருந்தவள் கோபமாக தன் விரலில் இருந்து மோதிரத்தை கழட்டப் பார்க்க அந்த மோதிரமோ அவள் விரலை விட்டு அசையவே இல்லை.
விழியிலே என் விழியிலே
கனவுகள் கலைந்ததே
உயிரிலே நினைவுகள்
தழும்புதே
கன்னங்களில் கண்ணீர் வந்து
உன் பெயரை எழுதுதே
முத்தமிட்ட உதடுகள்
உளறுதே
நான் என்னை காணாமல்
தினம் உன்னை தேடினேன்
என் கண்ணீர் துளியில் நமக்காக
ஒரு மாலை சூடினேன்
விழியிலே என் விழியிலே
கனவுகள்
கலைந்ததே
உயிரிலே நினைவுகள்
தழும்புதே
இமைகளிலே கனவுகளை
விதைத்தேனே
ரகசியமாய் நீரூற்றி
வளர்த்தேனே
இங்கு வெறும் காற்றிலே
நான் விரல் நீட்டினேன்
உன் கையோடு கை சேரத்தான்
உன் உறவும் இல்லை என் நிழலும் இல்லை
இனி என் காதல் தொலை தூரம்தான்
நான் சாம்பல் ஆனாலும்
என் காதல் வாழுமே
அந்த சாம்பல் மீதும் உனக்காக
சில பூக்கள் பூக்குமே
விழியிலே என் விழியிலே
கனவுகள் கலைந்ததே
உயிரிலே நினைவுகள்
தழும்புதே
உள்ளிருக்கும் இதயத்துக்கு
எனை புரியும்
யாருக்குத்தான் நாம் காதல்
விடை தெரியும்
காதல் சிறகானாது
இன்று சருகானாது
என் உள் நெஞ்சம் உடைகின்றது
உன் பாதை எது என் பயணம் அது
பனி திரை ஒன்று மறைக்கின்றது
ஏன் இந்த சாபங்கள்
நான் பாவம் இல்லையா
விதி கண்ணாமூச்சி விளயாட
நாம் காதல் பொம்மையா
விழியிலே என் விழியிலே
கனவுகள் கலைந்ததே
உயிரிலே நினைவுகள் தழும்புதே
மனக் குமுறல் தாளாமல் தேம்பி தேம்பி அழுத வெண்ணிலா அப்படியே உறங்கிப் போனாள்.
வெண்ணிலாவின் வீட்டை விட்டு புறப்பட்டு செல்வதற்கு முன்னர் சூர்யா வெண்ணிலாவிடம் பேசுவதற்காக அவளை தேடி பார்த்தான்.
சூர்யாவின் பார்வையின் பொருளை உணர்ந்து கொண்ட வெற்றி அவனின் அருகில் வந்து
"என்ன தேடல் ரொம்ப பலமாக இருக்கு???" என்று கேட்கவும்
திரும்பி அவனைப் பார்த்த சூர்யா
"அது தான் தெரியுதுலே....அப்புறம் எதுக்கு ஒரு கேள்வி...." என்று கேட்டான்.
"நிலா அவ ரூம்ல இருப்பா.....அவளுக்கு இது ஒரு ஷாக் தானே.....அதுவும் அவ லவ் பண்ணத அவ சொல்லாமல் நாங்க தெரிஞ்சுகிட்டோம்னு கில்டியா இருக்குறா போல...." என்று வெற்றி கூறவும்
சூர்யாவின் உள் மனதோ "இல்லை....வெண்ணிலாவின் மனதில் வேறு ஏதோ குழப்பம் இருக்கு...." என்று நினைத்து கொண்டது.
சிறிது நேரத்தில் சூர்யாவின் குடும்பத்தினர் புறப்பட்டு சென்று விட வெற்றி வெண்ணிலாவை தேடி அவளது அறையை நோக்கி சென்றான்.
அறைக் கதவை தட்டி விட்டு வெற்றி காத்து நிற்க கதவு தட்டும் ஓசை கேட்டு கண் விழித்த வெண்ணிலா எழுந்து சென்று கதவை திறந்தாள்.
வெண்ணிலாவின் கலங்கிய முகத்தை பார்த்து பதற்றம் கொண்ட வெற்றி
"நிலா என்னடா ஆச்சு????" என்று கேட்டான்.
வெண்ணிலா அதிர்ச்சியாக அக்ஸயாவையே பார்த்து கொண்டு நிற்க அவளருகில் வந்த மகாலட்சுமி
"என்னடா நிலா??? இப்படி திடீர்னு வந்து நிற்குறாங்க இவங்கனு யோசிக்குறியா???" என்று கேட்கவும் வெண்ணிலா என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்த வண்ணம் நின்றாள்.
"அவளுக்கு இது ஸ்வீட் சர்ப்பரைஸ் மா.....நான் நிலாவை கூட்டிட்டு போய் ரெடி பண்ணி கூட்டிட்டு வரேன்.....நீங்க உட்காருங்கம்மா....." என்று அபிநயா மகாலட்சுமியிடம் கூறி விட்டு வெண்ணிலாவை அழைத்து கொண்டு செல்ல கனவில் நடப்பது போல வெண்ணிலா அபிநயாவின் பின்னால் சென்றாள்.
சூர்யாவின் பார்வையோ வெண்ணிலாவின் அதிர்ந்த முகத்தையே அளவிட்டு கொண்டிருந்தது.
"இவ முகமே சரி இல்லை.....எதையோ யோசிச்சு அவளை அவளே குழப்பிட்டு இருக்கா.....அவளை பார்த்து எத்தனை நாளாச்சு??? ஆனா அந்த ஏக்கம், காதல் எதுவுமே அவ முகத்தில் இல்லையே.....கண்டிப்பாக நிலாகிட்ட நான் பேசியே ஆகணும்....." என்று சூர்யா மனதிற்குள் முடிவெடுத்து கொண்டான்.
மறுபுறம் தன்னறையில் வெண்ணிலா அபிநயா சொன்னதை எல்லாம் சாவி கொடுத்த பொம்மை போல செய்து கொண்டிருந்தாள்.
அங்கே என்ன நடக்கிறது என்பது அவள் மூளைக்கு சிறிதும் எட்டவில்லை.
எளிமையான நீல நிற பட்டு புடவையில் அபிநயாவின் கை வண்ணத்தில் சிறு ஒப்பனையோடு நடந்து வந்த வெண்ணிலாவைப் பார்த்து ஆண்டாள் சிறிது கண் கலங்கவே அவர் கைகளை மகாலட்சுமி ஆதரவாக பற்றி கொண்டார்.
அதன் பிறகு சம்பிரதாயங்கள் அனைத்தும் ஆரம்பிக்கப்பட வெண்ணிலா - சூர்யதேவனின் நிச்சயதார்த்தம் தொடங்கியது.
அய்யர் நிச்சயப்பத்திரிகை வாசிக்க ஆண்டாள்- அழகர் மற்றும் பெருமாள் - மகாலட்சுமி தம்பதியினர் தாம்பூலம் மாற்றி கொண்டனர்.
அதன் பின்னர் சூர்யா வெண்ணிலாவிற்கு மோதிரம் மாட்டி விடுவதற்காக அவளருகில் வர வெண்ணிலாவோ இலக்கின்றி சுவரை வெறித்துப் பார்த்து கொண்டு நின்றாள்.
வெண்ணிலாவின் முகத்தை பார்த்து பெரியவர்கள் எல்லோரும் குழப்பமடைய அபிநயா வெண்ணிலாவின் அருகில் வந்து அவள் தோள் மீது கை வைத்தாள்.
அபிநயாவின் கை படவும் கனவில் இருந்து எழுந்து கொள்வது போல விழித்த வெண்ணிலா அப்போது தான் தன் எதிரில் நின்று கொண்டிருந்த சூர்யாவை பார்த்தாள்.
பெரியவர்களின் குழப்பமான முகத்தை பார்த்து அவர்கள் அருகில் வந்த வெற்றி
"ஏன் எல்லோரும் த்ரீல் மூவி பார்க்குற ரேஞ்ச்ல இருக்குறீங்க??? நிலாவுக்கு இது சர்ப்பரைஸ்....ஷோ அவ ஷாக் ஆனா நியாயம் இருக்கு....நீங்க எல்லாரும் ஏன் ஷாக் ஆகுறிங்க???" என்று கேட்கவும்
ஆண்டாள் சிறிது தயக்கத்தோடு
"அவகிட்ட ஒரு வார்த்தை கேட்டுடலாம் வெற்றி...." என்று கூறினார்.
ஆண்டாள் சொன்னதைக் கேட்டு வெற்றி மனதிற்குள்
"அவ ஆல்ரெடி வீட்டில் லவ் பண்ணுறத சொன்னா என்ன நினைப்பாங்கனு கன்பியுஸ்ல இருக்கா.....பிரண்ட்னு பழக விட்ட சூர்யாவை தப்பா நினைச்சிடுவாங்களோனு தான் மேடம் பீல் பண்ணுறாங்க....இதை நான் இப்போ உங்க கிட்ட சொல்ல முடியாதே...." என்று வெகு தப்பாக யோசித்தவன்
ஆண்டாளின் அருகில் வந்து
"நிலா எதுவும் சொல்லாம இருக்குறதுலயே புரியலயா??? அவளுக்கும் இதுல சம்மதம் தான்....பொண்ணு கொஞ்சம் ஷாக் ஆகிட்டா அவ்வளவு தான்...." என்று அவரை சமாதானப்படுத்திய வெற்றி அபிநயாவை திரும்பி பார்த்தான்.
அபிநயா வெண்ணிலாவின் கை பிடித்து எழுந்து நிற்க செய்ய எழுந்து நின்ற வெண்ணிலா சூர்யாவை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.
"இல்ல....இல்ல....இந்த திருமணம் நடக்க கூடாது....சூர்யா என்ன ஏமாற்றிட்டு பொய்யா வேஷம் போடுறான்....அவனை நம்பவே கூடாது.....இந்த திருமணத்தை நான் நடக்க விடமாட்டேன்....." என்று வெண்ணிலா மனதிற்குள் நினைத்துக் கொண்டு அனைவரிடமும் இதைப் பற்றி கூறலாம் என்று வாய் திறக்கையில் சூர்யாவின் கைகள் அவள் விரலில் மோதிரத்தை மாட்டி விட்டிருந்தது.
வெண்ணிலா அதிர்ச்சியாக அவனைப் பார்க்க சூர்யா அவளை பார்த்து கண் சிமிட்டி சிரித்தான்.
சூர்யாவின் சிரிப்பில் வெண்ணிலாவின் மனம் அவன் பால் ஈர்க்கப்பட்டாலும் முயன்று தன் மனதை கட்டி போட்டவள் சூர்யாவை கோபமாக பார்த்தாள்.
அதன் பிறகு பெரியவர்கள் அனைவரும் தங்களுக்குள் திருமணத் திகதி பற்றி பேச ஆரம்பித்து விட அபிநயா மற்றும் வெற்றி, வெண்ணிலா மற்றும் சூர்யாவிற்கு தனிமை கொடுத்து சென்றனர்.
"நிலா....." என்று சூர்யா அழைக்கவும்
கோபமாக அவனை நிமிர்ந்து பார்த்த வெண்ணிலா
"இப்போ என்ன டிராமா போடலாம்னு இருக்க????" என்று கேட்க
"டிராமாவா??????" என்று அவளை புரியாமல் பார்த்தான் சூர்யா.
"எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லை....நீங்களாகவே எல்லார்கிட்டயும் சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க....இல்லைனே நான் வேற ஏதாவது பண்ணிடுவேன்....." என்று விட்டு வெண்ணிலா சென்று விட
"என்னாச்சு இவளுக்கு????" என்று யோசித்த வண்ணம் நின்றான் சூர்யா.
"ஒரு வேளை நான் இவ்வளவு நாளா பேசலேனு கோபமாக இருக்கா போல....சரியான பச்சை மிளகாய் இவ.....
நான் அவ்வளவு சீக்கிரம் பின் வாங்க மாட்டேன் ஐசும்மா.....இந்த சின்ன ரீசன்காக கல்யாணத்தை நிறுத்துறதா???? நெவர்.....இந்த கல்யாணம் நடக்கும்....." என்று கோபமாக படியேறி சென்ற வெண்ணிலாவை பார்த்து தனக்குள் கூறி கொண்டவன் பெரியவர்கள் நால்வரின் அருகில் சென்றான்.
"நான் ஒரு விஷயம் சொல்லணும்...." என்றவாறு தங்கள் முன்னால் நின்ற சூர்யாவை பெரியவர்கள் நால்வரும் கேள்வியாக நோக்கினர்.
"அடுத்த வாரம் ஏதாவது நல்ல முஹூர்த்தம் இருந்தா அப்போவே கல்யாணத்தை வச்சிக்கலாமே....." என்று சூர்யா கூறவும்
"என்ன?????" என்று அனைவரும் அதிர்ச்சியாக அவனைப் பார்த்தனர்.
"இல்ல....என் வயசு தானே வெற்றிக்கும் அபிக்கும்.....அவங்களுக்கே ஒரு பையன்....அதுவும் நாலு வயசு பையன்....." என்று பெருமூச்சு விட்டு கொள்ள பெரியவர்கள் அனைவரும் வாய் விட்டு சிரித்தனர்.
"படவா.....பெரியவங்க கிட்ட என்ன பேசணும்னு தெரியாதா உனக்கு????" என்று மகாலட்சுமி சூர்யாவின் காதை பிடித்து செல்லமாக திருக
"என்ன உங்களுக்கு அடுத்த பேரக்குழந்தைங்கள பார்க்க ஆசை இருக்கும்னு நினைச்சு சொன்னேன்...." என்று சூர்யா கூற மகாலட்சுமி தன் தலையில் தட்டி கொண்டார்.
"உனக்கு கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லைடா...." என்று விட்டு மகாலட்சுமி சென்று ஆண்டாளின் அருகில் நின்று கொள்ள
சூர்யாவின் அருகில் வந்த அழகர்
"உன் நேரம் அடுத்த வாரம் நல்ல நாள் எதுவும் இல்லை டா கண்ணா...அதனால அதற்கு அடுத்த வாரம் தான் நல்ல நாள் வருது.....அப்போ தான் உன்னை நிலாகிட்ட நாங்க பணயமா அனுப்ப போறோம்....." என்று கூற
"ஏதோ ஜெயிலுக்கு அனுப்புற மாதிரி சொல்லுறீங்களே மாமா...." என்று சூர்யா கூறவும்
"மேரேஜ் ஒரு ஜெயில் தான்டா....." என்றவாறே அவர்கள் அருகில் வந்து நின்றான் வெற்றி.
"ஓஹ்.....அப்படியா????" என்றவாறு வந்த அபிநயாவைப் பார்த்து வெற்றி திருதிருவென்று விழிக்க இவர்கள் அனைவரது சம்பாஷணைகளையும் பார்த்து பெரியவர்கள் அனைவரும் மனம் விட்டு சிரித்தனர்.
ஆனால் வெண்ணிலாவோ தன் அறையில் சூர்யா அவள் கையில் போட்டு விட்ட மோதிரத்தை வெறித்துப் பார்த்து கொண்டு இருந்தாள்.
"சீட்டர்......சீட்டர்......" என்று முணுமுணுத்துக் கொண்டே இருந்தவள் கோபமாக தன் விரலில் இருந்து மோதிரத்தை கழட்டப் பார்க்க அந்த மோதிரமோ அவள் விரலை விட்டு அசையவே இல்லை.
விழியிலே என் விழியிலே
கனவுகள் கலைந்ததே
உயிரிலே நினைவுகள்
தழும்புதே
கன்னங்களில் கண்ணீர் வந்து
உன் பெயரை எழுதுதே
முத்தமிட்ட உதடுகள்
உளறுதே
நான் என்னை காணாமல்
தினம் உன்னை தேடினேன்
என் கண்ணீர் துளியில் நமக்காக
ஒரு மாலை சூடினேன்
விழியிலே என் விழியிலே
கனவுகள்
கலைந்ததே
உயிரிலே நினைவுகள்
தழும்புதே
இமைகளிலே கனவுகளை
விதைத்தேனே
ரகசியமாய் நீரூற்றி
வளர்த்தேனே
இங்கு வெறும் காற்றிலே
நான் விரல் நீட்டினேன்
உன் கையோடு கை சேரத்தான்
உன் உறவும் இல்லை என் நிழலும் இல்லை
இனி என் காதல் தொலை தூரம்தான்
நான் சாம்பல் ஆனாலும்
என் காதல் வாழுமே
அந்த சாம்பல் மீதும் உனக்காக
சில பூக்கள் பூக்குமே
விழியிலே என் விழியிலே
கனவுகள் கலைந்ததே
உயிரிலே நினைவுகள்
தழும்புதே
உள்ளிருக்கும் இதயத்துக்கு
எனை புரியும்
யாருக்குத்தான் நாம் காதல்
விடை தெரியும்
காதல் சிறகானாது
இன்று சருகானாது
என் உள் நெஞ்சம் உடைகின்றது
உன் பாதை எது என் பயணம் அது
பனி திரை ஒன்று மறைக்கின்றது
ஏன் இந்த சாபங்கள்
நான் பாவம் இல்லையா
விதி கண்ணாமூச்சி விளயாட
நாம் காதல் பொம்மையா
விழியிலே என் விழியிலே
கனவுகள் கலைந்ததே
உயிரிலே நினைவுகள் தழும்புதே
மனக் குமுறல் தாளாமல் தேம்பி தேம்பி அழுத வெண்ணிலா அப்படியே உறங்கிப் போனாள்.
வெண்ணிலாவின் வீட்டை விட்டு புறப்பட்டு செல்வதற்கு முன்னர் சூர்யா வெண்ணிலாவிடம் பேசுவதற்காக அவளை தேடி பார்த்தான்.
சூர்யாவின் பார்வையின் பொருளை உணர்ந்து கொண்ட வெற்றி அவனின் அருகில் வந்து
"என்ன தேடல் ரொம்ப பலமாக இருக்கு???" என்று கேட்கவும்
திரும்பி அவனைப் பார்த்த சூர்யா
"அது தான் தெரியுதுலே....அப்புறம் எதுக்கு ஒரு கேள்வி...." என்று கேட்டான்.
"நிலா அவ ரூம்ல இருப்பா.....அவளுக்கு இது ஒரு ஷாக் தானே.....அதுவும் அவ லவ் பண்ணத அவ சொல்லாமல் நாங்க தெரிஞ்சுகிட்டோம்னு கில்டியா இருக்குறா போல...." என்று வெற்றி கூறவும்
சூர்யாவின் உள் மனதோ "இல்லை....வெண்ணிலாவின் மனதில் வேறு ஏதோ குழப்பம் இருக்கு...." என்று நினைத்து கொண்டது.
சிறிது நேரத்தில் சூர்யாவின் குடும்பத்தினர் புறப்பட்டு சென்று விட வெற்றி வெண்ணிலாவை தேடி அவளது அறையை நோக்கி சென்றான்.
அறைக் கதவை தட்டி விட்டு வெற்றி காத்து நிற்க கதவு தட்டும் ஓசை கேட்டு கண் விழித்த வெண்ணிலா எழுந்து சென்று கதவை திறந்தாள்.
வெண்ணிலாவின் கலங்கிய முகத்தை பார்த்து பதற்றம் கொண்ட வெற்றி
"நிலா என்னடா ஆச்சு????" என்று கேட்டான்.