சென்ற பதிவுக்கு லைக், கமெண்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றி
காலையில் கண் விழித்த வெண்ணிலா சுற்றிலும் தன் பார்வையை சுழல விட்டாள்.
புதிய இடமாக இருப்பதை போல இருக்கவும் சட்டென்று எழுந்து அமர்ந்த வெண்ணிலா அப்போது தான் தன் அருகில் தூங்கி கொண்டிருந்த சூர்யாவை பார்த்தாள்.
வெண்ணிலாவின் கைகள் தன்னிச்சையாக அவள் கழுத்தில் இருந்த தாலிக்கயிற்றை வருட சொல்லிலடங்கா வேதனை அவளை ஆட்கொண்டது.
கண்கள் கலங்க அவனைப் பார்த்து கொண்டிருந்தவள் சூர்யா சிறிது அசைவது போல இருக்கவும் உடனே தன்னை சுதாரித்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.
குளித்து முடித்து வெண்ணிலா வெளியே வரவும் சூர்யா கட்டிலில் எழுந்து அமரவும் சரியாக இருந்தது.
வெண்ணிலா, சூர்யா இருவரது பார்வையும் ஒன்றாக சந்திக்க ஒரு இனம் புரியாத கனத்த அமைதி அங்கே நிலவியது.
சூர்யாவின் கண்கள் வெண்ணிலாவை காதலோடு பார்க்க வெண்ணிலாவோ உணர்ச்சிகள் அற்ற ஒரு வெற்றுப் பார்வையை அவன் மேல் செலுத்தினாள்.
ஒரு சில நிமிடங்கள் நடந்த இந்த மெளன பாஷையை வெண்ணிலா முடித்து வைக்கும் முகமாக வேகமாக அந்த அறையை விட்டு வெளியேறி செல்ல சூர்யாவோ வெண்ணிலாவின் மன நிலை பற்றி தெரிந்து கொள்ள முடியாமல் குழம்பி போனான்.
கீழே ஹாலுக்கு வந்த வெண்ணிலா மகாலட்சுமியை காணவும் அவரருகில் சென்று நின்றாள்.
"வாடா நிலா.....நீ எந்திரிக்க லேட் ஆகுமோ தெரியாதுனு தான் யோசிச்சுட்டு இருந்தேன்.....நீயே வந்துட்ட.....காபி எதுவும் போட்டு தரவா????" என்று மகாலட்சுமி கேட்கவும்
"அய்யோ ஆன்டி......நீங்க சும்மா உட்காருங்க.....காபி வேணும்னா நான் போட்டு எடுத்துக்க மாட்டேனா என்ன???? இருந்தாலும் நீங்க என்ன இவ்வளவு சோம்பேறியா மாற்ற பார்க்காதீங்க....." என்று வெண்ணிலா சிரித்துக்கொண்டே கூற
மேலே சூர்யா அவர்கள் அறையில் இருந்து
"நிலா.....நிலா...." என்று சத்தமிட்டான்.
மகாலட்சுமி மற்றும் பெருமாள் ஒருவரை ஒருவர் பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்துக் கொள்ள வெண்ணிலாவோ கடுப்பாக சூர்யாவின் சத்தம் கேட்ட பக்கத்தை பார்த்து கொண்டு நின்றாள்.
வெண்ணிலாவின் அருகில் வந்து அவள் தோள் தொட்ட மகாலட்சுமி
"போம்மா போய் என்ன ஆச்சுன்னு பாரு.....நான் போய் இரண்டு பேருக்கும் காபி அனுப்பி வைக்குறேன்....." என்று கூறவும்
சரியென்று தலை அசைத்து விட்டு படியேறி சென்றாள் வெண்ணிலா.
கோபத்தை வெளிக்காட்டி கொள்ளாமல் அவர்கள் அறைக்குள் நுழைந்த வெண்ணிலா சூர்யாவை நிமிர்ந்தும் பார்க்காமல்
"எதுக்கு கூப்பிட்ட????" என்று கேட்கவும் எதுவும் பேசாமல் நின்றான் சூர்யா.
ஐந்து, பத்து நிமிடங்களுக்கு மேலாக எந்த சத்தமும் இல்லாமல் அமைதியாக இருக்கவும் வெண்ணிலா யோசனையோடு நிமிர்ந்து பார்த்தாள்.
அங்கு அவளை விட்டு பத்து அடி தள்ளி நின்று கொண்டு சூர்யா கைகளை கட்டி கொண்டு அவளையே பார்த்து கொண்டு நிற்க வெண்ணிலா தயக்கத்துடன் தன் தலையை குனிந்து கொண்டாள்.
சூர்யா அமைதியாக நின்ற வெண்ணிலாவை நெருங்கி வர வர வெண்ணிலா ஓரிரு அடிகள் பின் வாங்கி நடந்தாள்.
அறை கதவு திறந்து இருப்பதை உறுதி செய்து கொண்ட வெண்ணிலா சட்டென்று அறையை விட்டு வெளியே செல்ல பார்க்க வேகமாக அவள் முன்னால் தடுப்பு சுவரை போல வந்து நின்றான் சூர்யா.
"நான் போகணும்......" என்று வெண்ணிலா வேறெங்கோ பார்த்து கொண்டு கூற சூர்யாவோ சிலை போல அசையாமல் நின்றான்.
வெண்ணிலாவின் பொறுமை எல்லாம் ஒரு சில நொடிகளிலேயே காற்றோடு மறைந்து போக கோபமாக சூர்யாவை பார்த்தவள்
"இப்போ என்ன தான் வேணும் உங்களுக்கு???? நீங்க நினைச்சத தான் நடத்திக்காட்டிட்டீங்களே.....வேற என்ன தான் வேணும்????" என்று கேட்கவும்
"நீ தான்....." என்று கூறினான் சூர்யா.
சூர்யாவின் பதிலால் வெண்ணிலாவின் முகம் கோபத்தால் சிவக்க தன் முகத்தை மறுபுறம் திருப்பி கொண்டு நின்றாள்.
வெண்ணிலாவின் அருகில் நெருங்கி வந்து நின்ற சூர்யா அவள் முகத்தை தன் புறம் வலுக்கட்டாயமாக திருப்ப வெண்ணிலா அவன் கைகளை தட்டி விடுவதிலேயே முனைப்பாக நின்றாள்.
சூர்யா வெண்ணிலாவின் நடவடிக்கைகளை பார்த்து கோபம் கொண்டாலும் பொறுமையாக அவளை கையாள வேண்டும் என்ற எண்ணத்தோடு அவளை அழுத்தமாக பார்க்க சூர்யாவின் ஒற்றை பார்வையில் வெண்ணிலா ஸ்தம்பித்து போய் நின்றாள்.
"சொல்லு உனக்கு என்ன பிரச்சினை???? எதனால என்னை இந்தளவிற்கு அவாய்ட் பண்ற??? நான் பார்க்கமாட்டேனா....பேசமாட்டேனானு ஏங்கி இருந்த அந்த நிலா எங்க போனா???? என்னைப் பார்த்ததும் அவ கண்ணு ரெண்டும் அவ்வளவு பாவனைகளை காட்டுமே.....அந்த நிலா எங்கே???? சொல்லு.....சொல்லு....." என்று சூர்யா சத்தமிடவும் வெண்ணிலா கண்கள் கலங்க அவனைப் பார்த்து பேசாமல் அழுத்தமாக நின்றாள்.
"சொல்லு டி........." என்று சூர்யா சத்தமிட
திடுக்கிட்டு அவனை பார்த்த வெண்ணிலா
"எதை சொல்ல சொல்லுறீங்க சூர்யா???? உங்களை நம்பி நான் ஏமாந்து போனதையா??? இல்ல ஊருக்கு முன்னாடி உங்க மதிப்பு போக கூடாதுனு என்னை கல்யாணம் பண்ணிட்டீங்களே அதையா??? இல்ல உங்களுக்கு நான் செகண்ட் ஆப்ஷனா இருக்கேனே அதையா????" என்று கேட்கவும் இம்முறை அதிர்ந்து நிற்பது சூர்யாவின் முறையானது.
அப்போது கதவு தட்டும் ஓசை கேட்கவும் தன் கண்களை துடைத்து கொண்டு கதவை திறந்த வெண்ணிலா எதிரில் நின்று கொண்டிருந்த மகாலட்சுமியை பார்த்து புன்னகத்தாள்.
வெண்ணிலாவின் முகத்தை பார்த்து ஏதோ சரியில்லை என்பதை மட்டும் உணர்ந்து கொண்ட மகாலட்சுமி எதுவும் பேசாமல் காஃபி டிரேயை வெண்ணிலாவிடம் கொடுத்து விட்டு சென்று விட வெண்ணிலா டிரேயை மேஜை மேல் வைத்து வெண்ணிலா வெளியேறி சென்றாள்.
சூர்யாவோ வெண்ணிலா சொல்லி விட்டு சென்ற வார்த்தைகளையே மீண்டும் மீண்டும் யோசித்து பார்த்து கொண்டு நிற்க அவனுக்கு எதுவுமே புரியவில்லை.
"நான் அவளை ஏமாத்துனேனா???? அவ எனக்கு செகண்ட் ஆப்ஷனா?????" என்று கோபத்துடன் மனதிற்குள் நினைத்துக் கொண்டவன் கை முஷ்டி இறுக அருகில் இருந்த கதிரையில் ஓங்கி குத்தினான்.
"என்னதான் நினைச்சுட்டு இருக்கா அவ மனசுல??? அவ பின்னாடியே போறேனு என்னை இளக்காரமாக நினைச்சுட்டலே நிலா.... இனிமேல் நீயாக வந்து நான் பேசுனது தப்புன்னு மன்னிப்பு கேட்குற வரை நான் உன் கூட பேசமாட்டேன்......." என்று அவசரத்தில் கோபப்பட்டு முடிவெடுத்து கொண்ட சூர்யா அதன் பிறகு வெண்ணிலா இருந்த பக்கம் திரும்பி கூட பார்க்கவில்லை.
பெரியவர்கள் முன்னால் சாதாரணமாக இருப்பது போல காட்டிக் கொள்ள வெண்ணிலா மற்றும் சூர்யா வெகு சிரமப்பட்டனர்.
பெரியவர்கள் இவர்களது மனஸ்தாபத்தை பற்றி தெரியாமல் எப்போதும் போல இருந்து விட வெண்ணிலா மற்றும் சூர்யாவிற்கு இடையில் விழுந்த விரிசல் விரிந்து கொண்டே போனது.
ஒரு சில மாதங்கள் இவர்கள் இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தை ஆடிக் கொண்டிருக்க விதி மறுபடியும் ஜனனி ரூபத்தில் வந்து சேர்ந்தது.
சூட்டிங் சென்று விட்டு வைபவின் பிறந்தநாளுக்காக கிஃப்ட் வாங்க கடைக்கு சென்ற வெண்ணிலா ஒவ்வொரு தளமாக வேடிக்கை பார்த்து கொண்டு சென்றாள்.
அப்போது ஜனனியை தூரத்தில் கண்டு கொண்ட வெண்ணிலாவின் இதழ்கள் வேதனையோடு புன்னகைக்க அவள் மனமோ
"இவள் என் வாழ்வில் வந்திராவிட்டால் நான் இந்த நிலைக்கு ஆளாகி இருக்க மாட்டேனே....." என்று ஊமையாக அழுதது.
எந்த வேலையும் செய்ய பிடிப்பின்றி போகவே வெண்ணிலா அந்த இடத்தை இட்டு வெளியேறி சென்றாள்.
அப்போது வெண்ணிலாவின் போன் அடிக்கவும் எடுத்து பார்த்தவள்
"வெற்றி....." என்று புன்னகையோடு போனை அட்டன்ட் செய்தாள்.
"ஹலோ மேடம்....எப்படி இருக்கீங்க????ரொம்ப பிஸி போல......வீட்டுக்கு வந்து ஒரு வாரத்திற்கு மேல ஆச்சே....." என்று வெற்றி கேட்கவும்
"சூட்டிங் ஷெட்யூல் அப்படி வெற்றி....கண்டிப்பாக நாளைக்கு வீட்டுக்கு வருவேன்.....அம்மா, அப்பா, அபி, வைபவ் குட்டி எல்லோரும் எப்படி இருக்காங்க????" என்று கேட்டாள் வெண்ணிலா.
"எல்லாரும் ரொம்ப சூப்பராக இருக்கோம்.....அடுத்த வாரம் ஒரு இம்பார்டண்ட் டே..... என்ன நாள் ஞாபகம் இருக்குலே...." என்று வெற்றி கேட்கவும்
சிறிது நேரம்
"என்னவாக இருக்கும்????" என்று யோசித்து பார்ப்பது போல செய்தவள்
"தெரியலையே வெற்றி......" என்று கூறினாள்.
"அத்தை.....என்ன மறந்துட்டேலே......" என்று மறுமுனையில் வைபவ் கூச்சலிட அவனது பேச்சை கேட்டு சிரித்துக் கொண்டே வெண்ணிலா
"நீ நான் பேசுறத கேட்டுட்டு இருக்கேன்னு தெரியும் டா குட்டி.....அது தான் விளையாடுனேன்....நெக்ஸ் வீக் எங்க செல்ல குட்டி வைபவோட பர்த்டே....அதை நான் எப்படி மறப்பேன்......" என்று கூறவும் மறுபுறம் வைபவ் குதூகலத்துடன் சிரிக்கும் சத்தம் வெண்ணிலாவை பரவசமூட்டியது.
அதன் பிறகு பொதுவாக சில நிமிடங்கள் அவர்களுடன் போனில் பேசிய வெண்ணிலா மனதளவில் சிறிது சந்தோஷமாக உணர்ந்தாள்.
அதே சந்தோஷ மனநிலையோடு வீட்டுக்கு வந்த வெண்ணிலா மகாலட்சுமி, பெருமாள் மற்றும் அக்ஸயாவோடு அரட்டை அடித்துக் கொண்டிருந்தாள்.
காலையில் கண் விழித்த வெண்ணிலா சுற்றிலும் தன் பார்வையை சுழல விட்டாள்.
புதிய இடமாக இருப்பதை போல இருக்கவும் சட்டென்று எழுந்து அமர்ந்த வெண்ணிலா அப்போது தான் தன் அருகில் தூங்கி கொண்டிருந்த சூர்யாவை பார்த்தாள்.
வெண்ணிலாவின் கைகள் தன்னிச்சையாக அவள் கழுத்தில் இருந்த தாலிக்கயிற்றை வருட சொல்லிலடங்கா வேதனை அவளை ஆட்கொண்டது.
கண்கள் கலங்க அவனைப் பார்த்து கொண்டிருந்தவள் சூர்யா சிறிது அசைவது போல இருக்கவும் உடனே தன்னை சுதாரித்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.
குளித்து முடித்து வெண்ணிலா வெளியே வரவும் சூர்யா கட்டிலில் எழுந்து அமரவும் சரியாக இருந்தது.
வெண்ணிலா, சூர்யா இருவரது பார்வையும் ஒன்றாக சந்திக்க ஒரு இனம் புரியாத கனத்த அமைதி அங்கே நிலவியது.
சூர்யாவின் கண்கள் வெண்ணிலாவை காதலோடு பார்க்க வெண்ணிலாவோ உணர்ச்சிகள் அற்ற ஒரு வெற்றுப் பார்வையை அவன் மேல் செலுத்தினாள்.
ஒரு சில நிமிடங்கள் நடந்த இந்த மெளன பாஷையை வெண்ணிலா முடித்து வைக்கும் முகமாக வேகமாக அந்த அறையை விட்டு வெளியேறி செல்ல சூர்யாவோ வெண்ணிலாவின் மன நிலை பற்றி தெரிந்து கொள்ள முடியாமல் குழம்பி போனான்.
கீழே ஹாலுக்கு வந்த வெண்ணிலா மகாலட்சுமியை காணவும் அவரருகில் சென்று நின்றாள்.
"வாடா நிலா.....நீ எந்திரிக்க லேட் ஆகுமோ தெரியாதுனு தான் யோசிச்சுட்டு இருந்தேன்.....நீயே வந்துட்ட.....காபி எதுவும் போட்டு தரவா????" என்று மகாலட்சுமி கேட்கவும்
"அய்யோ ஆன்டி......நீங்க சும்மா உட்காருங்க.....காபி வேணும்னா நான் போட்டு எடுத்துக்க மாட்டேனா என்ன???? இருந்தாலும் நீங்க என்ன இவ்வளவு சோம்பேறியா மாற்ற பார்க்காதீங்க....." என்று வெண்ணிலா சிரித்துக்கொண்டே கூற
மேலே சூர்யா அவர்கள் அறையில் இருந்து
"நிலா.....நிலா...." என்று சத்தமிட்டான்.
மகாலட்சுமி மற்றும் பெருமாள் ஒருவரை ஒருவர் பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்துக் கொள்ள வெண்ணிலாவோ கடுப்பாக சூர்யாவின் சத்தம் கேட்ட பக்கத்தை பார்த்து கொண்டு நின்றாள்.
வெண்ணிலாவின் அருகில் வந்து அவள் தோள் தொட்ட மகாலட்சுமி
"போம்மா போய் என்ன ஆச்சுன்னு பாரு.....நான் போய் இரண்டு பேருக்கும் காபி அனுப்பி வைக்குறேன்....." என்று கூறவும்
சரியென்று தலை அசைத்து விட்டு படியேறி சென்றாள் வெண்ணிலா.
கோபத்தை வெளிக்காட்டி கொள்ளாமல் அவர்கள் அறைக்குள் நுழைந்த வெண்ணிலா சூர்யாவை நிமிர்ந்தும் பார்க்காமல்
"எதுக்கு கூப்பிட்ட????" என்று கேட்கவும் எதுவும் பேசாமல் நின்றான் சூர்யா.
ஐந்து, பத்து நிமிடங்களுக்கு மேலாக எந்த சத்தமும் இல்லாமல் அமைதியாக இருக்கவும் வெண்ணிலா யோசனையோடு நிமிர்ந்து பார்த்தாள்.
அங்கு அவளை விட்டு பத்து அடி தள்ளி நின்று கொண்டு சூர்யா கைகளை கட்டி கொண்டு அவளையே பார்த்து கொண்டு நிற்க வெண்ணிலா தயக்கத்துடன் தன் தலையை குனிந்து கொண்டாள்.
சூர்யா அமைதியாக நின்ற வெண்ணிலாவை நெருங்கி வர வர வெண்ணிலா ஓரிரு அடிகள் பின் வாங்கி நடந்தாள்.
அறை கதவு திறந்து இருப்பதை உறுதி செய்து கொண்ட வெண்ணிலா சட்டென்று அறையை விட்டு வெளியே செல்ல பார்க்க வேகமாக அவள் முன்னால் தடுப்பு சுவரை போல வந்து நின்றான் சூர்யா.
"நான் போகணும்......" என்று வெண்ணிலா வேறெங்கோ பார்த்து கொண்டு கூற சூர்யாவோ சிலை போல அசையாமல் நின்றான்.
வெண்ணிலாவின் பொறுமை எல்லாம் ஒரு சில நொடிகளிலேயே காற்றோடு மறைந்து போக கோபமாக சூர்யாவை பார்த்தவள்
"இப்போ என்ன தான் வேணும் உங்களுக்கு???? நீங்க நினைச்சத தான் நடத்திக்காட்டிட்டீங்களே.....வேற என்ன தான் வேணும்????" என்று கேட்கவும்
"நீ தான்....." என்று கூறினான் சூர்யா.
சூர்யாவின் பதிலால் வெண்ணிலாவின் முகம் கோபத்தால் சிவக்க தன் முகத்தை மறுபுறம் திருப்பி கொண்டு நின்றாள்.
வெண்ணிலாவின் அருகில் நெருங்கி வந்து நின்ற சூர்யா அவள் முகத்தை தன் புறம் வலுக்கட்டாயமாக திருப்ப வெண்ணிலா அவன் கைகளை தட்டி விடுவதிலேயே முனைப்பாக நின்றாள்.
சூர்யா வெண்ணிலாவின் நடவடிக்கைகளை பார்த்து கோபம் கொண்டாலும் பொறுமையாக அவளை கையாள வேண்டும் என்ற எண்ணத்தோடு அவளை அழுத்தமாக பார்க்க சூர்யாவின் ஒற்றை பார்வையில் வெண்ணிலா ஸ்தம்பித்து போய் நின்றாள்.
"சொல்லு உனக்கு என்ன பிரச்சினை???? எதனால என்னை இந்தளவிற்கு அவாய்ட் பண்ற??? நான் பார்க்கமாட்டேனா....பேசமாட்டேனானு ஏங்கி இருந்த அந்த நிலா எங்க போனா???? என்னைப் பார்த்ததும் அவ கண்ணு ரெண்டும் அவ்வளவு பாவனைகளை காட்டுமே.....அந்த நிலா எங்கே???? சொல்லு.....சொல்லு....." என்று சூர்யா சத்தமிடவும் வெண்ணிலா கண்கள் கலங்க அவனைப் பார்த்து பேசாமல் அழுத்தமாக நின்றாள்.
"சொல்லு டி........." என்று சூர்யா சத்தமிட
திடுக்கிட்டு அவனை பார்த்த வெண்ணிலா
"எதை சொல்ல சொல்லுறீங்க சூர்யா???? உங்களை நம்பி நான் ஏமாந்து போனதையா??? இல்ல ஊருக்கு முன்னாடி உங்க மதிப்பு போக கூடாதுனு என்னை கல்யாணம் பண்ணிட்டீங்களே அதையா??? இல்ல உங்களுக்கு நான் செகண்ட் ஆப்ஷனா இருக்கேனே அதையா????" என்று கேட்கவும் இம்முறை அதிர்ந்து நிற்பது சூர்யாவின் முறையானது.
அப்போது கதவு தட்டும் ஓசை கேட்கவும் தன் கண்களை துடைத்து கொண்டு கதவை திறந்த வெண்ணிலா எதிரில் நின்று கொண்டிருந்த மகாலட்சுமியை பார்த்து புன்னகத்தாள்.
வெண்ணிலாவின் முகத்தை பார்த்து ஏதோ சரியில்லை என்பதை மட்டும் உணர்ந்து கொண்ட மகாலட்சுமி எதுவும் பேசாமல் காஃபி டிரேயை வெண்ணிலாவிடம் கொடுத்து விட்டு சென்று விட வெண்ணிலா டிரேயை மேஜை மேல் வைத்து வெண்ணிலா வெளியேறி சென்றாள்.
சூர்யாவோ வெண்ணிலா சொல்லி விட்டு சென்ற வார்த்தைகளையே மீண்டும் மீண்டும் யோசித்து பார்த்து கொண்டு நிற்க அவனுக்கு எதுவுமே புரியவில்லை.
"நான் அவளை ஏமாத்துனேனா???? அவ எனக்கு செகண்ட் ஆப்ஷனா?????" என்று கோபத்துடன் மனதிற்குள் நினைத்துக் கொண்டவன் கை முஷ்டி இறுக அருகில் இருந்த கதிரையில் ஓங்கி குத்தினான்.
"என்னதான் நினைச்சுட்டு இருக்கா அவ மனசுல??? அவ பின்னாடியே போறேனு என்னை இளக்காரமாக நினைச்சுட்டலே நிலா.... இனிமேல் நீயாக வந்து நான் பேசுனது தப்புன்னு மன்னிப்பு கேட்குற வரை நான் உன் கூட பேசமாட்டேன்......." என்று அவசரத்தில் கோபப்பட்டு முடிவெடுத்து கொண்ட சூர்யா அதன் பிறகு வெண்ணிலா இருந்த பக்கம் திரும்பி கூட பார்க்கவில்லை.
பெரியவர்கள் முன்னால் சாதாரணமாக இருப்பது போல காட்டிக் கொள்ள வெண்ணிலா மற்றும் சூர்யா வெகு சிரமப்பட்டனர்.
பெரியவர்கள் இவர்களது மனஸ்தாபத்தை பற்றி தெரியாமல் எப்போதும் போல இருந்து விட வெண்ணிலா மற்றும் சூர்யாவிற்கு இடையில் விழுந்த விரிசல் விரிந்து கொண்டே போனது.
ஒரு சில மாதங்கள் இவர்கள் இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தை ஆடிக் கொண்டிருக்க விதி மறுபடியும் ஜனனி ரூபத்தில் வந்து சேர்ந்தது.
சூட்டிங் சென்று விட்டு வைபவின் பிறந்தநாளுக்காக கிஃப்ட் வாங்க கடைக்கு சென்ற வெண்ணிலா ஒவ்வொரு தளமாக வேடிக்கை பார்த்து கொண்டு சென்றாள்.
அப்போது ஜனனியை தூரத்தில் கண்டு கொண்ட வெண்ணிலாவின் இதழ்கள் வேதனையோடு புன்னகைக்க அவள் மனமோ
"இவள் என் வாழ்வில் வந்திராவிட்டால் நான் இந்த நிலைக்கு ஆளாகி இருக்க மாட்டேனே....." என்று ஊமையாக அழுதது.
எந்த வேலையும் செய்ய பிடிப்பின்றி போகவே வெண்ணிலா அந்த இடத்தை இட்டு வெளியேறி சென்றாள்.
அப்போது வெண்ணிலாவின் போன் அடிக்கவும் எடுத்து பார்த்தவள்
"வெற்றி....." என்று புன்னகையோடு போனை அட்டன்ட் செய்தாள்.
"ஹலோ மேடம்....எப்படி இருக்கீங்க????ரொம்ப பிஸி போல......வீட்டுக்கு வந்து ஒரு வாரத்திற்கு மேல ஆச்சே....." என்று வெற்றி கேட்கவும்
"சூட்டிங் ஷெட்யூல் அப்படி வெற்றி....கண்டிப்பாக நாளைக்கு வீட்டுக்கு வருவேன்.....அம்மா, அப்பா, அபி, வைபவ் குட்டி எல்லோரும் எப்படி இருக்காங்க????" என்று கேட்டாள் வெண்ணிலா.
"எல்லாரும் ரொம்ப சூப்பராக இருக்கோம்.....அடுத்த வாரம் ஒரு இம்பார்டண்ட் டே..... என்ன நாள் ஞாபகம் இருக்குலே...." என்று வெற்றி கேட்கவும்
சிறிது நேரம்
"என்னவாக இருக்கும்????" என்று யோசித்து பார்ப்பது போல செய்தவள்
"தெரியலையே வெற்றி......" என்று கூறினாள்.
"அத்தை.....என்ன மறந்துட்டேலே......" என்று மறுமுனையில் வைபவ் கூச்சலிட அவனது பேச்சை கேட்டு சிரித்துக் கொண்டே வெண்ணிலா
"நீ நான் பேசுறத கேட்டுட்டு இருக்கேன்னு தெரியும் டா குட்டி.....அது தான் விளையாடுனேன்....நெக்ஸ் வீக் எங்க செல்ல குட்டி வைபவோட பர்த்டே....அதை நான் எப்படி மறப்பேன்......" என்று கூறவும் மறுபுறம் வைபவ் குதூகலத்துடன் சிரிக்கும் சத்தம் வெண்ணிலாவை பரவசமூட்டியது.
அதன் பிறகு பொதுவாக சில நிமிடங்கள் அவர்களுடன் போனில் பேசிய வெண்ணிலா மனதளவில் சிறிது சந்தோஷமாக உணர்ந்தாள்.
அதே சந்தோஷ மனநிலையோடு வீட்டுக்கு வந்த வெண்ணிலா மகாலட்சுமி, பெருமாள் மற்றும் அக்ஸயாவோடு அரட்டை அடித்துக் கொண்டிருந்தாள்.