அவனை திரும்பி பார்த்த ஜனனி
"சூர்யா கிட்ட நிலா பத்தி கேட்கலாம்....." என்று எண்ணி கொண்டு வாய் திறக்க போக அவளது போனும் அடித்தது.
"ஒரு நிமிஷம்...." என்று விட்டு போனை அட்டன்ட் செய்து காதில் வைத்த ஜனனி மறுமுனையில் சொன்ன செய்தி கேட்டு தடுமாறி விழப் போக சூர்யா அவளை தாங்கிப் பிடித்தான்.
"ஜனனி என்ன ஆச்சு????" என்று சூர்யா கேட்கவும் கண்கள் கலங்க அவனைப் பார்த்தவள் அவன் மேல் சாய்ந்து கதறி அழ சூர்யா என்ன என்று புரியாமல் அவள் கையில் இருந்த போனை வாங்கி தன் காதில் வைத்தான்.
"ஹலோ யாரு பேசுறீங்க????" என்று சூர்யா கேட்கவும்
மறுமுனையில் ஒரு பெண்மணி
"ஜனனி அம்மா எங்கே????" என்று பதட்டத்துடன் கேட்டார்.
"நான் ஜனனியோட பிரண்ட் தான் பேசறேன்.....ஏதாவது பிரச்சனையா???" என்று சூர்யா கேட்க
மறுமுனையில்
"ஜனனி அம்மாவோட அப்பாவும், அம்மாவும் வந்த காய் ஆக்ஸிடண்ட் ஆயிடுச்சாம்னு ஹாஸ்பிடல்ல இருந்து கால் வந்ததுங்க.....அது தான் அம்மாவுக்கு கால் பண்ணுனேன்....." என்று கூறவும்
"ஓஹ் காட்....எந்த ஹாஸ்பிடல்????" என்று கேட்டான் சூர்யா.
"விஜயா ஹாஸ்பிடல்....." என்று அவர் கூறவும்
சரியென்று விட்டு போனை வைத்த சூர்யா ஜனனியை அருகில் இருந்த கதிரையில் அமரச் செய்து விட்டு கார் பார்க்கிங்கை நோக்கி சென்றான்.
"என்ன சூர்யா போகலாமா???" என்று பெருமாள் கேட்கவும்
அவரருகில் வந்த சூர்யா
"அப்பா....ஜனனியோட பேரண்ட்ஸ்க்கு ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சாம்.....நான் ஜனனி கூட போய் என்ன ஏதுனு பார்த்துட்டு வரேன்.....நீங்க இப்போ வீட்டுக்கு போங்கபா......" என்று கூறவும்
"அச்சச்சோ.....நான் வேணா கூட வரவா???" என்று கேட்டார் மகாலட்சுமி.
"இல்ல மா நான் பார்த்துக்குறேன்.....நீங்க முதல்ல வீட்டுக்கு போங்க.....நான் எதுவும் தேவைனா கால் பண்ணுறேன்......" என்று கூறவும் சரியென்று விட்டு பெருமாள் காரை எடுத்துக்கொண்டு புறப்பட வெண்ணிலாவோ ஜனனி சொன்ன வார்த்தைகளையே திரும்ப திரும்ப நினைத்து கொண்டு இருந்தாள்.
உள்ளே வந்த சூர்யா ஜனனியை அழைத்து கொண்டு ஆட்டோ ஒன்றில் ஏறி ஹாஸ்பிடலை நோக்கி சென்றான்.
ஹாஸ்பிடல் செல்லும் வழி நெடுகிலும் ஜனனி சூர்யாவின் கையை பிடித்து கொண்டு
"அம்மா....அப்பா....என்னை விட்டு போயிடாதீங்க....." என்று புலம்பிக் கொண்டே வர சூர்யாவிற்கு அவளை பார்க்கவே கவலையாக இருந்தது.
ஹாஸ்பிடலில் சென்று இறங்கியதும் ஜனனி வேகமாக ரிசப்சனில் விசாரித்து விட்டு தன் தாய், தந்தை இருந்த ஐ.சி.யூ வை நோக்கி சென்றாள்.
அவளைப் பின் தொடர்ந்து வந்த சூர்யா ஜனனியை பார்த்து கவலையுடன் நின்று கொண்டிருக்க ஐ.சி.யூ வில் இருந்து டாக்டர் வெளியேறி வந்தார்.
ஜனனியையும், சூர்யாவையும் கேள்வியாக டாக்டர் பார்க்கவும் அவரருகில் வந்த சூர்யா
"இது அவங்க டாட்டர்....நான் அவங்க பிரண்ட்...." என்று கூறவும்
"ஸாரி ஸார்....அவங்க அப்பாவை எங்களால காப்பாற்ற முடியல.....அவங்க அம்மா ரொம்ப கிரிட்டிகல் ஸ்டேஜ்ல இருக்காங்க....." என்று டாக்டர் கூற
"அப்பா......." என்று கதறி அழுது கொண்டே மயங்கி சரிந்தாள் ஜனனி.
அவசரமாக ஜனனியை தூக்கி ஸ்ட்ரெச்சரில் சூர்யா வைக்க அவளை அடுத்த பக்கமாக பரிசோதிக்க கொண்டு சென்றனர்.
அவளைப் பரிசோதனை செய்து பார்த்து விட்டு வெளியே வந்த டாக்டர்
"இந்த மாதிரி டைம்ல அவங்களை கொஞ்சம் கேர்புல்லா பார்த்துக்கணும் மிஸ்டர்...." என்று கூறவும்
அவரை குழப்பமாக பார்த்த சூர்யா
"ஜனனிக்கு என்ன ஆச்சு டாக்டர்???" என்று கேட்டான்.
"சீ இஸ் பிரக்னென்ட்....." என்று டாக்டர் கூற
"வாட்????????" என்று அதிர்ந்து போய் நின்றான் சூர்யா.
அப்போது ஒரு நர்ஸ் அவசரமாக ஓடி வந்து
"டாக்டர் அந்த பேஷண்ட்டோட பல்ஸ் ரேட் லோ ஆகிட்டே இருக்கு....." என்று கூற
மறுபடியும் இன்னொரு அதிர்ச்சியா என்று திண்டாடிப் போனான் சூர்யா.
அப்போது அவன் தோள் மேல் கை வைக்கவும் திரும்பி பார்த்த சூர்யா ஜனனியை காணவும்
"ஜனனி....டாக்டர்....." என்று தடுமாற்றத்துடன் கூற
"அம்மா....." என்று கண் கலங்கினாள் ஜனனி.
ஜனனியை கைத்தாங்கலாக ஐ.சி.யூ வின் புறமாக சூர்யா அழைத்துச் செல்ல அவர்கள் அருகில் வந்த டாக்டர்
"ஸாரி ஸார்....அவங்கள இனி எங்களால காப்பாற்ற முடியாது....கடைசியாக ஏதாவது பேசணும்னா பேசிக்கோங்க...." என்று விட்டு சென்று விட
"அம்மா......" என்று கத்தி கொண்டே தட்டுத் தடுமாறி ஐ.சி.யூ வினுள் சென்றாள் ஜனனி.
ஜனனியை காணவும் அவளது அம்மா அவளின் புறமாக கை நீட்ட அவரது கைகளை பற்றி கொண்ட ஜனனி
"அம்மா என்ன விட்டு போயிடாதேமா.....நீ இல்லாமல் நான் எப்படிமா இருப்பேன்??? நீயும் போயிட்டா நான் எங்கேமா போவேன்???? ப்ளீஸ் மா என்ன விட்டு போகாதேமா...." என்று கண்ணீர் வடிக்க சூர்யாவோ வேதனையாக அவளை பார்த்து கொண்டு நின்றான்.
அப்போது ஜனனியின் அம்மா சூர்யாவை பார்க்க ஜனனி தன் அம்மாவிடம்
"இது தான் சூர்யா...." என்று கூறவும் அவர் அவனை அருகில் வருமாறு சைகை செய்தார்.
சூர்யா அவர் அருகில் வரவும் ஜனனியின் கையை எடுத்து அவனது கையில் வைத்தவர்
"நான் போயிட்டா....என்....பொண்ண.....பார்த்து....பார்த்துக்கோபா......" என்று கூற
"உங்களுக்கு எதுவும் ஆகாது மா.....ஜனனி எனக்கு கூடப் பிறக்காத தங்கை மாதிரி.....நான் அவளை பார்த்துபேன்......" என்று சூர்யா கூறவும் அவனை பார்த்து புன்னகத்து கொண்டே அவர் உயிர் அவர் உடலை விட்டு பிரிந்து சென்றது.
"அம்மா........" என்று ஜனனி கதறி அழ சூர்யா அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கத் தொடங்கினான்.
வெண்ணிலாவிற்கு சூர்யா அழைப்பு மேற்கொள்ள அதுவோ ஸ்விட்ச் ஆஃபில் இருந்தது.
அதன் பிறகு பெருமாளிற்கு அழைத்து சூர்யா நடந்தவற்றை சொல்ல நடு இரவு என்று கூட பார்க்காமல் அவர்கள் அனைவரும் ஜனனிக்கு உதவி புரிய வந்தனர்.
வெண்ணிலா இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்து போய் பழைய பிரச்சினை எல்லாம் மறந்து ஜனனிக்கு துணையாக நின்றாள்.
ஜனனியோ இதை எல்லாம் பார்த்து குற்ற உணர்வில் துடி துடித்து போனாள்.
சூர்யா, வெண்ணிலா இருவரது ஒட்டுமொத்த குடும்பமும் தனக்கு செய்த உதவியை பார்த்து ஜனனி தான் செய்த தவறை எல்லாம் உணர்ந்து வருந்த அங்கே எல்லாம் கை மீறி சென்றதை அவள் அறிந்திருக்கவில்லை.
எல்லா கடமைகளும் முடிந்து இரண்டு, மூன்று நாட்கள் கழித்து வெண்ணிலா மற்றும் சூர்யா அவர்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
அது நாள் வரை மனதில் மூலையில் முடங்கி கிடந்த பிரச்சினை எல்லாம் வெண்ணிலாவின் முன் பூதாகரமாக வந்து நின்றது.
இன்று சூர்யாவிடம் ஜனனி பற்றி பேசி விட வேண்டும் என்ற எண்ணத்தோடு வெண்ணிலா காத்து நிற்க சூர்யா வந்து சேர்ந்தான்.
அறைக்குள் வந்த நொடியில் இருந்து சூர்யா ஜனனியை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்க வெண்ணிலாவோ கோபத்தை கட்டுப்படுத்த பிரயத்தனப் பட்டு கொண்டிருந்தாள்.
ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் வெண்ணிலா
"ஸ்டாப் இட் சூர்யா...." என்று கத்த சூர்யா அதிர்ச்சியாக அவளை பார்த்தான்.
"ஜனனி.....ஜனனி.....ஜனனி....எப்போ பாரு ஜனனி....அப்படி என்ன தான் வசியம் பண்ணுணாளோ தெரியல அவ....." என்று வெண்ணிலா கூறவும்
"என்ன பேசுற நிலா நீ?????" என்று அதிர்ச்சியாக கேட்டான் சூர்யா.
"நான் என்ன பேசுறேனு உங்களுக்கு தெரியாதா??? உங்களுக்கு அந்த ஜனனி தானே முக்கியம்....அது தான் இத்தனை நாளா அவ கூடவே இருந்திங்கலே....இப்போவும் அவ மேல இருந்த ஆசை போகலயா???" என்று கேட்ட வெண்ணிலா அடுத்த நொடி சூர்யாவின் அறையில் சுருண்டு கீழே விழுந்து கிடந்தாள்.
வெண்ணிலா அதிர்ச்சியாக சூர்யாவை பார்க்க அவனோ ஆக்ரோஷமாக அவள் முடியை பற்றி தூக்கி
"என்னடி நினைச்சுட்டு இருக்க உன் மனசுல???? இத்தனை நாள் உன் பேச்சை கேட்கமாட்டோமானு ஏங்கிட்டு இருந்தேன்.....ஆனா இப்போ.....சே....நீயும் சராசரி பொண்ணுங்க மாதிரி உன் புத்தியை காட்டிட்டியேடி....உன்னை எல்லாம்....." என்று மீண்டும் அவளை அடிக்க கை ஓங்கியவன்
"சே...." என்றவாறு அவள் மீதிருந்த கையை உதற மறுபடியும் வெண்ணிலா கீழே விழுந்தாள்.
அப்போதுதான் தான் செய்த காரியத்தின் வீரியம் புரிய
"என்ன காரியம் பண்ணிட்ட சூர்யா???" என்று தனக்குத்தானே கூறி கொண்டவன்
வெண்ணிலாவைப் பார்க்க அவளோ அதிர்ச்சியில் கன்னத்தில் கை வைத்து கொண்டிருந்தாள்.
சூர்யா அவளருகில் வரப்போக வெண்ணிலாவோ வேகமாக எழுந்து பெட்டி ஒன்றில் தன் உடைகளை எல்லாம் அள்ளி போட்டு கொண்டு நிற்க சூர்யா அவளருகில் வந்து அவள் கைகளை பிடித்தான்.
"மரியாதையா என் மேல இருந்து கையை எடுங்க.....இல்லேனா மரியாதை கெட்டுடும்...." என்று வெண்ணிலா சத்தமிட
"நிலா ஐ யம் ஸாரி....நான் ஏதோ கோபத்துல..." என்று சூர்யா கூறவும்
அவனை முறைத்து பார்த்தவள்
"நான் சராசரி பொண்ணு தான் சூர்யா...என்னோட புருஷன் எனக்கு தான்னு நினைச்சு வாழுற சராசரி பொண்ணு.....வேற எந்த பொண்ணு கூட என் புருஷன் பேசுனாலும் அதை தாங்கிக்க முடியாத சராசரி பொண்ணு...என் ஒட்டுமொத்த காதலும் என்னோட புருஷனுக்கு மட்டும் தான்னு வாழுற சராசரி பொண்ணு தான்.....ஆனா அதற்காக நீங்க பண்ண துரோகத்தை மறப்பேனு நினைக்காதீங்க சூர்யா.....என்னோட வாழ்க்கையை மொத்தமாக அழிச்சுட்டீங்களே....கண்டிப்பாக உங்களுக்கு இதுக்கு தண்டனை கொடுப்பேன் மிஸ்டர். சூர்யதேவன்...." என்று விட்டு கோபமாக வெண்ணிலா வீட்டை விட்டு வெளியேறி செல்ல சூர்யா திக்பிரமை பிடித்தாற் போல உறைந்து நின்றான்......