சென்ற பதிவுக்கு லைக், கமெண்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றி!!!!!
ஆபிஸ் வந்து சேர்ந்த சூர்யாவிற்கு தன் மன எண்ணங்களை அவனாலேயே புரிந்து கொள்ள முடியவில்லை.
காலையில் வெண்ணிலாவைப் பழி தீர்க்க வேண்டும் என்று நினைத்த மனது அவளை காணவில்லை என்று தெரிந்ததும் பதட்டம் அடைந்தது ஏன்?? என்ற கேள்வி அவன் மனதை முழுமையாக ஆக்கிரமித்திருந்தது.
"எல்லாவற்றுக்கும் நிலாவுடனான உன் காதல் தான் காரணம்..." என்று மனம் பதிலளிக்க
"நோ....அந்த காதல் மனம் கொண்ட சூர்யா செத்து பல நாள் ஆச்சு...." என்று சத்தமிட்டவன் தான் இருக்கும் இடம் உணர்ந்து தன் தலையை அழுந்த கோதிக் கொண்டான்.
அதன் பின் சூர்யாவை வேலைகள் சூழ்ந்து கொள்ள தன் வேலையில் முழுமையாக அவன் மூழ்கி போனான்.
கதவு தட்டப்படும் ஓசை கேட்டு நிமிர்ந்து பார்த்த சூர்யா கதவின் அருகில் நின்று கொண்டிருந்த ராபர்டை கேள்வியாக நோக்கினான்.
"சார் டைம் பத்தி மணி ஆச்சு...." என்று தயக்கத்துடன் ராபர்ட் கூறவும்
கையில் இருந்த தன் வாட்சை திருப்பி பார்த்த சூர்யா
"ஓஹ் காட் பத்து மணி ஆச்சா??? டைம் போனதே தெரியல...." என்றவாறே பைல்களை மூடி வைத்து விட்டு எழுந்து கொண்டவன்
"ஓகே ராபர்ட்....மார்னிங் மீட் பண்ணலாம்....என்னால உங்களுக்கும் லேட் ஆயிடுச்சு....ஸாரி..." என்று கூறவும்
"ஸார் ஸாரி எல்லாம் எதுக்கு??? இதுவும் என்னோட வேலை தானே...." என்று ராபர்ட் கூற சிரித்துக் கொண்டே அவன் தோளில் தட்டி விட்டு லிப்ட் நோக்கி சென்றான் சூர்யா.
பார்க்கிங்கிற்கு வந்து தன் காரை எடுத்துக்கொண்டு சூர்யா சென்று விட ராபர்ட் தன் பைக்கை ஸ்டார்ட் செய்து கொண்டு புறப்பட்டான்.
காரை நிறுத்தி விட்டு வீட்டினுள் நுழைந்த சூர்யா டைனிங் டேபிளில் தலை சாய்த்து தூங்கி கொண்டிருந்த மகாலட்சுமி அருகில் வந்து நின்றான்.
ஆள் அரவம் கேட்டு கண் விழித்த மகாலட்சுமி
"வந்துட்டியா சூர்யா??? கை, கால் கழுவிட்டு வா.....சாப்பாடு எடுத்து வைக்குறேன்...." என்றவாறு எழுந்து கொள்ள
அவர் கை பிடித்து அமரச் செய்த சூர்யா
"ஏன்மா இவ்வளவு லேட் நைட்ல முழிச்சுட்டு இருக்கீங்க??? நான் என்ன சின்ன பையனா??? எனக்கு போட்டு சாப்பிட தெரியாதா என்ன??" என்று கேட்கவும்
அவனைப் பார்த்து புன்னகத்த மகாலட்சுமி
"நம்ம குழந்தைங்களுக்காக காத்துட்டு இருக்குறதும் ஒரு வகை சந்தோஷம் தான் கண்ணா...." என்று கூற சிரித்துக் கொண்டே கை கழுவி விட்டு சாப்பிட வந்தமர்ந்தான் சூர்யா.
ஓரக் கண்ணால் மகாலட்சுமியின் முகத்தை கவனித்துக் கொண்டே சாப்பிட்டு கொண்டிருந்த சூர்யாவிற்கு அவரது மன எண்ணங்கள் புரியாமல் இல்லை.
"எல்லாம் சரியாகிவிடும்...." என்று நினைத்து கொண்டே சாப்பிட்டு முடித்தவன் மகாலட்சுமிக்கு சுத்தம் செய்வதில் உதவி விட்டு தன் அறைக்குள் நுழைந்து கொண்டான்.
அது வரை இருந்த மனநிலை முற்றிலும் மாற அந்த அறையை போன்றே அவன் மனதையும் வெறுமை சூழ்ந்து கொண்டது.
வெண்ணிலாவின் வீட்டில் மாட்டப்பட்டிருந்ததைப் போன்ற அதே புகைப்படம் அவனது அறையிலும் மாட்டப்பட்டிருந்தது.
கண்கள் கலங்க மெல்ல அந்த புகைப்படத்தை வருடிக் கொடுத்த சூர்யா
"ஏன்டீ இப்படி பண்ணுண??? உன்னை காதலிச்சது தப்பா?? நான் எங்கே போனாலும் என் பின்னாலேயே நிழல் மாதிரியே வந்தியே....எல்லோரோட சந்தோஷத்தையும் ஒரே நாள்ல அழிச்சுட்டியே....ஏன்???? ஏன்???? ஐசும்மா....என் கிட்ட திரும்பி வந்துடு...." என்று புலம்பிக் கொண்டே கட்டிலில் வந்து இருந்தவன் அப்படியே உறங்கிப் போனான்.
வெண்ணிலாவின் விழிகள் இரண்டும் கண்ணீர் வடிக்க தன் கையில் இருந்த புகைப்படத்தை வெறித்துப் பார்த்து கொண்டிருந்தாள்.
சூர்யாவோடு மிக மிக நெருக்கமாக ஒரு பெண் அணைத்தபடி நின்றிருக்க சூர்யாவின் கரங்களோ அவளை முழுமையாக வளைத்து பிடித்திருந்தது.
அவ்வாறான பல புகைப்படங்கள் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு கோணங்களில் எடுக்கப்பட்டிருக்க அறை முழுவதும் அந்த புகைப்படங்கள் சிதறி கிடந்தன.
அந்த அறையின் நிசப்தத்தை கலைக்கும் வகையில் அவள் போன் அடிக்கவும் சலிப்பாக போனை எடுத்து காதில் வைத்தவள் மறுமுனையில் யாரோ பேசப் பேச போனை தூர எறிந்துவிட்டு
கண்கள் சிவக்க தன் கையில் இருந்த புகைப்படத்தை விட்டெறிந்தவள் தன் கையில் முகத்தை புதைத்து கொண்டு தேற்றுவார் யாரும் இன்றி தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாள்.
காலை பொழுதில் நிலவை மறைத்து கொண்டு சூரியனின் வெளிச்சம் சுற்றிலும் பரவ மெல்ல கண் திறந்தாள் வெண்ணிலா.
இரவு முழுவதும் அழுததால் என்னவோ தலை வலி தாளாமல் வெண்ணிலா இரு கைகளாலும் தன் தலையை தாங்கிக் கொண்டாள்.
மெல்ல எழுந்து நின்றவள் தட்டுத் தடுமாறி குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.
குளித்து முடித்து வெளியே வந்த வெண்ணிலாவிற்கு தலை வலி குறைந்து இருந்தாலும் மனதில் இருந்த வலி குறையவில்லை.
சாதாரண காட்டன் சல்வார் ஒன்றை அணிந்து கொண்டு படியிறங்கி ஹாலுக்கு வந்த வெண்ணிலாவை முழுக் குடும்பமுமே ஆச்சரியமாக பார்த்தது.
வெற்றியின் அருகில் வந்த அபிநயா
"என்ன வெற்றி அதிசயமாக உங்க தங்கச்சி காலங்கார்த்தாலேயே அதுவும் எட்டு மணிக்கு எல்லாம் எழுந்து வந்துட்டா...." என்று கூறவும்
அவளை முறைத்து பார்த்தவன்
"எட்டு மணி உனக்கு காலங்கார்த்தாலேயேவா??" என்று கேட்க
"இல்ல சூட்டிங்கே இருந்தாலும் நிலா இவ்வளவு ஏர்லியா வரமாட்டாளேனு கேட்டேன்.." என்று சமாளிப்பது போல சிரித்து கொண்டு கூறவும் அவளது தலையில் செல்லமாக தட்டினான் வெற்றி.
"அவ சின்ன வயதிலிருந்தே ஏர்லியா எழும்பிடுவா.....உனக்கு தெரியாதா என்ன??? இப்போ கொஞ்ச நாளாகதானே இப்படி எழுந்திருக்கா......அது உனக்கு பொறுக்காதே...." என்று வெற்றி கூறவும்
"ஆமா உங்க தங்கச்சியை நீங்க விட்டு கொடுத்துட்டாலும்...." என்று நொடித்துக் கொண்ட அபிநயா சமையலறைக்குள் சென்று விட புன்னகையோடு வெற்றி வெண்ணிலாவின் அருகில் சென்றான்.
"என்ன நிலா உடம்புக்கு எதுவும் சரி இல்லையா??? முகமெல்லாம் ஒரு மாதிரியாக இருக்கு???" என்று வெற்றி வெண்ணிலாவின் தலையை வாஞ்சையோடு வருடிய வண்ணம் கேட்கவும்
கலங்கிய தன் கண்களை சிரமப்பட்டு கட்டுப்படுத்தியவள்
"இல்ல வெற்றி லைட்டா தலை வலி அவ்வளவு தான்....காபி சாப்பிட்டா சரியாகிவிடும்..." என்று விட்டு செல்ல வெற்றியின் பார்வை வெண்ணிலாவையே பின் தொடர்ந்தது.
வெண்ணிலாவின் வெற்றி என்ற அழைப்பே அவள் மனதளவில் குழப்பமாக இருக்கிறாள் என்பதை அவனுக்கு உணர்த்தியது.
வெண்ணிலாவிற்கு சிறு வயதில் இருந்தே வெற்றியிடம் ஏதாவது காரியம் ஆக வேண்டும் என்றாலோ, அதீத சந்தோஷம் ஏற்பட்டாலோ அல்லது அவளுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் மட்டுமே தான் அவனை வெற்றி என்று அழைப்பாள்.
இன்றைய வெண்ணிலாவின் வெற்றி என்ற அழைப்புக்கான காரணத்தை வெற்றி அறிந்திருந்தாலும் வெண்ணிலாவாக முன் வந்து அவள் மனதில் உள்ளவற்றை கூறட்டும் என்று விட்டு வெற்றி தன் வேலைகளை கவனிக்க சென்றான்.
சாப்பிடுகிறேன் என்ற பெயரில் தட்டில் வைத்த ஒரு இட்லியை ஒரு மணி நேரமாகியும் சாப்பிட்ட வண்ணம் இருந்தாள் வெண்ணிலா.
வைபவ் வெண்ணிலாவின் அருகில் வந்து அவள் கையை பிடித்து இழுக்கவும் அவனைத் திரும்பி பார்த்தாள்.
"வாட் ஹேப்பன்ட் த்ரீ???" என்று வைபவ் கேட்கவும்
"த்ரீயா???" என்று குழப்பமாக கேட்டாள் வெண்ணிலா.
"ஆமா நிலாவுக்கு இங்கிலீஷ்ல மூன்....மூன்னா த்ரீ தானே...." என்று வைபவ் கேட்க
"அடப்பாவி....." என்று தன் வாயின் மேல் கை வைத்த வெண்ணிலா
"ஆனாலும் இந்த காலத்து பசங்க ரொம்ப விவரம் தான்...." என்று கூறவும்
"ஆனால் சிலருக்கு விவரம் பத்தலயே...." என்றவாறு அவர்கள் அருகில் வந்து நின்றாள் அபிநயா.
"வைபவ் அப்பா கூட போய் ஸ்கூல் போக ரெடி ஆகு...." என்று அபிநயா வைபவை வெற்றியிடம் அனுப்பி வைத்து விட்டு வெண்ணிலாவின் அருகில் அமர்ந்து கொண்டாள்.
ஆபிஸ் வந்து சேர்ந்த சூர்யாவிற்கு தன் மன எண்ணங்களை அவனாலேயே புரிந்து கொள்ள முடியவில்லை.
காலையில் வெண்ணிலாவைப் பழி தீர்க்க வேண்டும் என்று நினைத்த மனது அவளை காணவில்லை என்று தெரிந்ததும் பதட்டம் அடைந்தது ஏன்?? என்ற கேள்வி அவன் மனதை முழுமையாக ஆக்கிரமித்திருந்தது.
"எல்லாவற்றுக்கும் நிலாவுடனான உன் காதல் தான் காரணம்..." என்று மனம் பதிலளிக்க
"நோ....அந்த காதல் மனம் கொண்ட சூர்யா செத்து பல நாள் ஆச்சு...." என்று சத்தமிட்டவன் தான் இருக்கும் இடம் உணர்ந்து தன் தலையை அழுந்த கோதிக் கொண்டான்.
அதன் பின் சூர்யாவை வேலைகள் சூழ்ந்து கொள்ள தன் வேலையில் முழுமையாக அவன் மூழ்கி போனான்.
கதவு தட்டப்படும் ஓசை கேட்டு நிமிர்ந்து பார்த்த சூர்யா கதவின் அருகில் நின்று கொண்டிருந்த ராபர்டை கேள்வியாக நோக்கினான்.
"சார் டைம் பத்தி மணி ஆச்சு...." என்று தயக்கத்துடன் ராபர்ட் கூறவும்
கையில் இருந்த தன் வாட்சை திருப்பி பார்த்த சூர்யா
"ஓஹ் காட் பத்து மணி ஆச்சா??? டைம் போனதே தெரியல...." என்றவாறே பைல்களை மூடி வைத்து விட்டு எழுந்து கொண்டவன்
"ஓகே ராபர்ட்....மார்னிங் மீட் பண்ணலாம்....என்னால உங்களுக்கும் லேட் ஆயிடுச்சு....ஸாரி..." என்று கூறவும்
"ஸார் ஸாரி எல்லாம் எதுக்கு??? இதுவும் என்னோட வேலை தானே...." என்று ராபர்ட் கூற சிரித்துக் கொண்டே அவன் தோளில் தட்டி விட்டு லிப்ட் நோக்கி சென்றான் சூர்யா.
பார்க்கிங்கிற்கு வந்து தன் காரை எடுத்துக்கொண்டு சூர்யா சென்று விட ராபர்ட் தன் பைக்கை ஸ்டார்ட் செய்து கொண்டு புறப்பட்டான்.
காரை நிறுத்தி விட்டு வீட்டினுள் நுழைந்த சூர்யா டைனிங் டேபிளில் தலை சாய்த்து தூங்கி கொண்டிருந்த மகாலட்சுமி அருகில் வந்து நின்றான்.
ஆள் அரவம் கேட்டு கண் விழித்த மகாலட்சுமி
"வந்துட்டியா சூர்யா??? கை, கால் கழுவிட்டு வா.....சாப்பாடு எடுத்து வைக்குறேன்...." என்றவாறு எழுந்து கொள்ள
அவர் கை பிடித்து அமரச் செய்த சூர்யா
"ஏன்மா இவ்வளவு லேட் நைட்ல முழிச்சுட்டு இருக்கீங்க??? நான் என்ன சின்ன பையனா??? எனக்கு போட்டு சாப்பிட தெரியாதா என்ன??" என்று கேட்கவும்
அவனைப் பார்த்து புன்னகத்த மகாலட்சுமி
"நம்ம குழந்தைங்களுக்காக காத்துட்டு இருக்குறதும் ஒரு வகை சந்தோஷம் தான் கண்ணா...." என்று கூற சிரித்துக் கொண்டே கை கழுவி விட்டு சாப்பிட வந்தமர்ந்தான் சூர்யா.
ஓரக் கண்ணால் மகாலட்சுமியின் முகத்தை கவனித்துக் கொண்டே சாப்பிட்டு கொண்டிருந்த சூர்யாவிற்கு அவரது மன எண்ணங்கள் புரியாமல் இல்லை.
"எல்லாம் சரியாகிவிடும்...." என்று நினைத்து கொண்டே சாப்பிட்டு முடித்தவன் மகாலட்சுமிக்கு சுத்தம் செய்வதில் உதவி விட்டு தன் அறைக்குள் நுழைந்து கொண்டான்.
அது வரை இருந்த மனநிலை முற்றிலும் மாற அந்த அறையை போன்றே அவன் மனதையும் வெறுமை சூழ்ந்து கொண்டது.
வெண்ணிலாவின் வீட்டில் மாட்டப்பட்டிருந்ததைப் போன்ற அதே புகைப்படம் அவனது அறையிலும் மாட்டப்பட்டிருந்தது.
கண்கள் கலங்க மெல்ல அந்த புகைப்படத்தை வருடிக் கொடுத்த சூர்யா
"ஏன்டீ இப்படி பண்ணுண??? உன்னை காதலிச்சது தப்பா?? நான் எங்கே போனாலும் என் பின்னாலேயே நிழல் மாதிரியே வந்தியே....எல்லோரோட சந்தோஷத்தையும் ஒரே நாள்ல அழிச்சுட்டியே....ஏன்???? ஏன்???? ஐசும்மா....என் கிட்ட திரும்பி வந்துடு...." என்று புலம்பிக் கொண்டே கட்டிலில் வந்து இருந்தவன் அப்படியே உறங்கிப் போனான்.
வெண்ணிலாவின் விழிகள் இரண்டும் கண்ணீர் வடிக்க தன் கையில் இருந்த புகைப்படத்தை வெறித்துப் பார்த்து கொண்டிருந்தாள்.
சூர்யாவோடு மிக மிக நெருக்கமாக ஒரு பெண் அணைத்தபடி நின்றிருக்க சூர்யாவின் கரங்களோ அவளை முழுமையாக வளைத்து பிடித்திருந்தது.
அவ்வாறான பல புகைப்படங்கள் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு கோணங்களில் எடுக்கப்பட்டிருக்க அறை முழுவதும் அந்த புகைப்படங்கள் சிதறி கிடந்தன.
அந்த அறையின் நிசப்தத்தை கலைக்கும் வகையில் அவள் போன் அடிக்கவும் சலிப்பாக போனை எடுத்து காதில் வைத்தவள் மறுமுனையில் யாரோ பேசப் பேச போனை தூர எறிந்துவிட்டு
கண்கள் சிவக்க தன் கையில் இருந்த புகைப்படத்தை விட்டெறிந்தவள் தன் கையில் முகத்தை புதைத்து கொண்டு தேற்றுவார் யாரும் இன்றி தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாள்.
காலை பொழுதில் நிலவை மறைத்து கொண்டு சூரியனின் வெளிச்சம் சுற்றிலும் பரவ மெல்ல கண் திறந்தாள் வெண்ணிலா.
இரவு முழுவதும் அழுததால் என்னவோ தலை வலி தாளாமல் வெண்ணிலா இரு கைகளாலும் தன் தலையை தாங்கிக் கொண்டாள்.
மெல்ல எழுந்து நின்றவள் தட்டுத் தடுமாறி குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.
குளித்து முடித்து வெளியே வந்த வெண்ணிலாவிற்கு தலை வலி குறைந்து இருந்தாலும் மனதில் இருந்த வலி குறையவில்லை.
சாதாரண காட்டன் சல்வார் ஒன்றை அணிந்து கொண்டு படியிறங்கி ஹாலுக்கு வந்த வெண்ணிலாவை முழுக் குடும்பமுமே ஆச்சரியமாக பார்த்தது.
வெற்றியின் அருகில் வந்த அபிநயா
"என்ன வெற்றி அதிசயமாக உங்க தங்கச்சி காலங்கார்த்தாலேயே அதுவும் எட்டு மணிக்கு எல்லாம் எழுந்து வந்துட்டா...." என்று கூறவும்
அவளை முறைத்து பார்த்தவன்
"எட்டு மணி உனக்கு காலங்கார்த்தாலேயேவா??" என்று கேட்க
"இல்ல சூட்டிங்கே இருந்தாலும் நிலா இவ்வளவு ஏர்லியா வரமாட்டாளேனு கேட்டேன்.." என்று சமாளிப்பது போல சிரித்து கொண்டு கூறவும் அவளது தலையில் செல்லமாக தட்டினான் வெற்றி.
"அவ சின்ன வயதிலிருந்தே ஏர்லியா எழும்பிடுவா.....உனக்கு தெரியாதா என்ன??? இப்போ கொஞ்ச நாளாகதானே இப்படி எழுந்திருக்கா......அது உனக்கு பொறுக்காதே...." என்று வெற்றி கூறவும்
"ஆமா உங்க தங்கச்சியை நீங்க விட்டு கொடுத்துட்டாலும்...." என்று நொடித்துக் கொண்ட அபிநயா சமையலறைக்குள் சென்று விட புன்னகையோடு வெற்றி வெண்ணிலாவின் அருகில் சென்றான்.
"என்ன நிலா உடம்புக்கு எதுவும் சரி இல்லையா??? முகமெல்லாம் ஒரு மாதிரியாக இருக்கு???" என்று வெற்றி வெண்ணிலாவின் தலையை வாஞ்சையோடு வருடிய வண்ணம் கேட்கவும்
கலங்கிய தன் கண்களை சிரமப்பட்டு கட்டுப்படுத்தியவள்
"இல்ல வெற்றி லைட்டா தலை வலி அவ்வளவு தான்....காபி சாப்பிட்டா சரியாகிவிடும்..." என்று விட்டு செல்ல வெற்றியின் பார்வை வெண்ணிலாவையே பின் தொடர்ந்தது.
வெண்ணிலாவின் வெற்றி என்ற அழைப்பே அவள் மனதளவில் குழப்பமாக இருக்கிறாள் என்பதை அவனுக்கு உணர்த்தியது.
வெண்ணிலாவிற்கு சிறு வயதில் இருந்தே வெற்றியிடம் ஏதாவது காரியம் ஆக வேண்டும் என்றாலோ, அதீத சந்தோஷம் ஏற்பட்டாலோ அல்லது அவளுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் மட்டுமே தான் அவனை வெற்றி என்று அழைப்பாள்.
இன்றைய வெண்ணிலாவின் வெற்றி என்ற அழைப்புக்கான காரணத்தை வெற்றி அறிந்திருந்தாலும் வெண்ணிலாவாக முன் வந்து அவள் மனதில் உள்ளவற்றை கூறட்டும் என்று விட்டு வெற்றி தன் வேலைகளை கவனிக்க சென்றான்.
சாப்பிடுகிறேன் என்ற பெயரில் தட்டில் வைத்த ஒரு இட்லியை ஒரு மணி நேரமாகியும் சாப்பிட்ட வண்ணம் இருந்தாள் வெண்ணிலா.
வைபவ் வெண்ணிலாவின் அருகில் வந்து அவள் கையை பிடித்து இழுக்கவும் அவனைத் திரும்பி பார்த்தாள்.
"வாட் ஹேப்பன்ட் த்ரீ???" என்று வைபவ் கேட்கவும்
"த்ரீயா???" என்று குழப்பமாக கேட்டாள் வெண்ணிலா.
"ஆமா நிலாவுக்கு இங்கிலீஷ்ல மூன்....மூன்னா த்ரீ தானே...." என்று வைபவ் கேட்க
"அடப்பாவி....." என்று தன் வாயின் மேல் கை வைத்த வெண்ணிலா
"ஆனாலும் இந்த காலத்து பசங்க ரொம்ப விவரம் தான்...." என்று கூறவும்
"ஆனால் சிலருக்கு விவரம் பத்தலயே...." என்றவாறு அவர்கள் அருகில் வந்து நின்றாள் அபிநயா.
"வைபவ் அப்பா கூட போய் ஸ்கூல் போக ரெடி ஆகு...." என்று அபிநயா வைபவை வெற்றியிடம் அனுப்பி வைத்து விட்டு வெண்ணிலாவின் அருகில் அமர்ந்து கொண்டாள்.