சென்ற பதிவுக்கு லைக், கமெண்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றி..... கதையில் ஏதாவது நிறை, குறை இருந்தால் தாராளமாக சொல்லிடுங்கோ பிரண்ட்ஸ்.......
காரில் சென்று கொண்டிருந்த வெண்ணிலா எதிரில் சூர்யா ஷாப்பிங் காம்ப்ளக்சில் இருந்து வெளியேறி வருவதைக் காணவும் சட்டென்று தன் காரை நிறுத்தினாள்.
காரில் இருந்து இறங்கிய வெண்ணிலா சூர்யாவை நோக்கி நடை போட்டாள்.
சூர்யாவை நெருங்க நெருங்க அவளது இதயம் தாறுமாறாக அடித்துக் கொண்டது.
"சே என்ன இது??? டீன் ஏஜ் பசங்க மாதிரி இப்படி பிஹேவ் பண்ணுறேன்.....ஏதோ பர்ஸ்ட் டைம் சூர்யாவோடு பேசப் போகிற மாதிரி....வெண்ணிலா காம் டவுன்....காம் டவுன்...." என்று ஆழ்ந்து மூச்சை எடுத்து விட்டு தன்னை சமன் செய்தவள் சூர்யாவின் அருகில் சென்றாள்.
அப்போது சூர்யாவிற்கு மறுபுறம் இருந்து ஒரு பெண் அவனோடு பேசி சிரித்து கொண்டு வரவும் ஆணியடித்தாற் போல அந்த இடத்திலேயே உறைந்து நின்றாள் வெண்ணிலா.
"ஜனனி....." என்று அவள் உதடுகள் முணுமுணுக்க கண்களில் இருந்து எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடுவேன் என்ற நிலையில் கண்ணீர் நிறைந்து இருந்தது.
அப்போது தான் அந்த பெண்ணை வெண்ணிலா நன்றாக கவனித்தாள்.
மேடிட்ட வயிற்றோடு சூர்யாவின் தோளை ஒரு கையால் பற்றி கொண்டு அவன் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் சிரித்த வண்ணமாக கேட்டு கொண்டு வருபவளைப் பார்க்க வெண்ணிலாவிற்கு கோபம் எல்லையில்லாமல் பற்றி கொண்டு வந்தது.
"உன்னை போய் நம்பினேனே....." என்று மனதிற்குள் சூர்யாவை அர்ச்சித்த வெண்ணிலா கோபம் கட்டுக்கடங்காமல் அவர்களை நோக்கி சென்றாள்.
திடீரென்று தங்கள் முன்னால் வந்து நின்ற வெண்ணிலாவை சூர்யாவும், ஜனனியும் ஆச்சரியமாக பார்த்தனர்.
"நிலா...." என்று ஜனனி ஏதோ கூற வரவும் கை காட்டி அவளை நிறுத்துமாறு கூறியவள் சூர்யாவின் கண்களை நேருக்கு நேராக நோக்கினாள்.
வெண்ணிலாவின் பார்வையில் இருந்த வெறுப்பை பார்த்த சூர்யா ஒரு கணம் துணுக்குற்றான்.
"நிலா...நீ இப்போவும் தப்பாக தான் புரிஞ்சுட்டு இருக்க...." என்று சூர்யா கூறவும்
"ஓஹ்....நான் என்ன நினைக்கிறேனு கூட உங்களுக்கு தெரியுமா???" என்று வெண்ணிலா கேலியாக கேட்க அவளை முறைத்து பார்த்தான் சூர்யா.
"உங்களை நம்பி நம்பி ஏமாந்து போறதே எனக்கு வேலையா போயிடுச்சு இல்லே....." என்று வருத்தத்துடன் கூறிய வெண்ணிலா
கண்கள் கலங்க ஜனனியையும், அவள் கை பற்றி இருந்த சூர்யாவின் தோளையும் பார்த்தவள்
"இப்போ கூட நான் தான் தப்பு பண்ணிட்டேன்னு உங்க கிட்ட மன்னிப்பு கேட்க வந்தேன்.....ஆனா நான் தப்பு பண்ணலனு நீங்க நிரூபிச்சுட்டீங்க.....எப்போவும் என்னோட கணிப்பு தவறானதே இல்லை...." என்று கூற
மறுப்பாக தலை அசைத்த சூர்யா
"ஒரு சில நேரங்களில் தப்பாக மாறிடும் நிலா....." என்று கூறினான்.
"நீ எதையும் காது கொடுத்துக் கேட்க மாட்ட....எதையும் தீர விசாரிக்க மாட்ட....நான் புடிச்ச முயலுக்கு மூணு கால்னு இருப்ப....நான் என்ன சொன்னாலும் நீ இப்போ கேட்கப் போறதில்லை....உன் கிட்ட விளக்கம் சொல்லி உன்னை புரிந்து கொள்ள வைக்க இப்போ எனக்கு நேரமும் இல்லை....இந்த இடமும் இதற்கு சரியா இல்ல.....இப்போ எங்களுக்கு வழி விடு நாங்க போகணும்....." என்று கூறிய சூர்யா ஜனனியின் கை பற்றி அழைத்து செல்ல வெண்ணிலா மொத்தமாக உடைந்து போனாள்.
ஜனனி வெண்ணிலாவை கடந்து செல்லும் போது ஒரு கணம் தயங்கி நிற்க அவளை கேள்வியாக நோக்கினான் சூர்யா.
"சூர்யா....நிலா என்ன சொல்ல வரானு கொஞ்சம் கேட்கலாமே...." என்று ஜனனி கூற
வெண்ணிலாவை திரும்பி பார்த்த சூர்யா
"அடுத்தவங்க பேசுறதை கேட்கும் அளவுக்கு அவங்களுக்கு பொறுமை இல்லை ஜனனி....வீணாக நம்ம நேரம் தான் செலவாகும்....ரொம்ப நேரம் நீ இப்படி வெளியில் அலைந்து திரியுறது உன் ஹெல்த்க்கு நல்லது இல்லை....வா போகலாம்...." என்று விட்டு முன்னே செல்ல
தவிப்போடு வெண்ணிலாவைப் பார்த்த ஜனனி
"இல்ல சூர்யா...." எனவும்
"ஜனனி....." என்று சூர்யாவின் உறுமலில் ஜனனி மட்டுமின்றி வெண்ணிலாவும் துணுக்குற்றாள்.
"ஒழுங்காக வந்து காரில் ஏறு...." என்று சூர்யா கூறவும்
மறுத்து பேசாமல் காரில் சென்று ஜனனி ஏறி கொள்ள
வெண்ணிலாவின் அருகில் வந்த சூர்யா
"ஆள் வளர்ந்த அளவுக்கு உன் அறிவு வளரல ஐசு.....முதல்ல உன் அறிவை வளர்த்துக்கோ.....அப்புறம் அடுத்தவங்களைப் பற்றி குறை சொல்லலாம்.....உன்னை நான் அப்புறம் மீட் பண்ணுறேன் ஐசு...." என்று அவள் கன்னத்தில் தட்டி விட்டு செல்ல கோபமும், ஆற்றாமையும் ஒன்று சேர புழுதியை கிளப்பி கொண்டு சென்ற சூர்யாவின் காரையே வெறித்த வண்ணம் நின்றாள் வெண்ணிலா.
"மேடம் நீங்க சிங்கர் வெண்ணிலா தானே...." என்று தன் அருகில் கேட்ட குரலில் சுய நினைவுக்கு வந்த அவளைச் சுற்றி பல நபர்கள் ஒன்று கூடுவதை பார்த்து அவசரமாக தன் காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டு சென்றாள்.
ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு சாலை ஓரத்தில் தன் காரை நிறுத்திய வெண்ணிலாவின் மனம் முழுவதும் உலைக் களமாக கொதித்து கொண்டிருந்தது.
"அந்த ஜனனி முன்னாடி என்னை அவமானப்படுத்திட்டேலே சூர்யா....இதற்கும் சேர்த்து உன்னை பழி வாங்குறேன்...." என்று கருவி கொண்ட வெண்ணிலா தன் போனை எடுத்து வெற்றிக்கு அழைப்பை மேற்கொண்டாள்.
"ஹலோ நிலா....என்னடா இந்த நேரத்தில் கால் பண்ணி இருக்க??? ஏதாவது பிரச்சனையா???" என்று வெற்றி கேட்கவும்
அவனது கவனிப்பில் மனம் உருகி போன வெண்ணிலா தன் குரலை சரி செய்து கொண்டு
"எங்கே இருக்க வெற்றி???" என்று கேட்டாள்.
அவளது பேச்சிலேயே ஏதோ இருக்கிறது என்பதை தெரிந்து கொண்ட வெற்றி
"ஆபீசில் இருக்கேன் மா....ஏதாவது உதவி வேண்டுமா???" என்று கேட்கவும்
"நீ அங்கேயே இரு....நேர்ல வந்து பேசுறேன்....எங்கேயும் போயிடாத...." என்று வெண்ணிலா கூற சரியென்று விட்டு போனை வைத்த வெற்றிக்கு மனதில் ஆயிரம் கேள்விகள் எழுந்தன.
வெண்ணிலா சந்தோஷமாக வீட்டில் இருந்து சென்றவுடன் அபிநயா வெற்றிக்கு போன் செய்து வெண்ணிலாவின் நடவடிக்கைகளை பற்றி கூற மனதிற்குள் ஆயிரம் கனவுகளை எழுப்பி கொண்ட வெற்றி வெண்ணிலாவின் அழைப்பை பார்த்ததும் எல்லாம் சரியாக போகிறது என்று சந்தோஷம் கொண்டான்.
ஆனால் நடந்ததோ வேறு என்பதை அவன் அறிந்தால் என்ன ஆகும்?????
ஒரு பெரிய வீட்டின் முன்னால் சூர்யா காரை நிறுத்த ஜனனி காரில் இருந்து இறங்கி கொண்டாள்.
"ஓகே ஜனனி டேக் கேர்....ஏதாவது ஹெல்ப் வேணும்னா கால் பண்ணு....நான் ஆபீஸ்க்கு கிளம்புறேன் பாய்...." என்று விட்டு சூர்யா செல்ல போக
"ஒரு நிமிஷம் சூர்யா..." என்று அவனை தடுத்தாள் ஜனனி.
"ப்ளீஸ் ஜனனி....நீ என்ன சொல்ல வரேனு தெரியும்....இப்போ நான் யாரோட அட்வைசையும் கேட்குற மனநிலையில் இல்லை...நீ போய் ரெஸ்ட் எடு....உன் வீட்டில் தங்கி இருக்குற கமலம் ஆன்டி வர்றாங்க அவங்களோட போய் பத்திரமாக இருந்துக்கோ..." என்று விட்டு ஜனனியின் முகத்தையும் திரும்பி பார்க்காமல் சூர்யா சென்று விட முகம் வாட கவலையுடன் நின்று கொண்டிருந்தாள் ஜனனி.
காரில் சென்று கொண்டிருந்த வெண்ணிலா எதிரில் சூர்யா ஷாப்பிங் காம்ப்ளக்சில் இருந்து வெளியேறி வருவதைக் காணவும் சட்டென்று தன் காரை நிறுத்தினாள்.
காரில் இருந்து இறங்கிய வெண்ணிலா சூர்யாவை நோக்கி நடை போட்டாள்.
சூர்யாவை நெருங்க நெருங்க அவளது இதயம் தாறுமாறாக அடித்துக் கொண்டது.
"சே என்ன இது??? டீன் ஏஜ் பசங்க மாதிரி இப்படி பிஹேவ் பண்ணுறேன்.....ஏதோ பர்ஸ்ட் டைம் சூர்யாவோடு பேசப் போகிற மாதிரி....வெண்ணிலா காம் டவுன்....காம் டவுன்...." என்று ஆழ்ந்து மூச்சை எடுத்து விட்டு தன்னை சமன் செய்தவள் சூர்யாவின் அருகில் சென்றாள்.
அப்போது சூர்யாவிற்கு மறுபுறம் இருந்து ஒரு பெண் அவனோடு பேசி சிரித்து கொண்டு வரவும் ஆணியடித்தாற் போல அந்த இடத்திலேயே உறைந்து நின்றாள் வெண்ணிலா.
"ஜனனி....." என்று அவள் உதடுகள் முணுமுணுக்க கண்களில் இருந்து எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடுவேன் என்ற நிலையில் கண்ணீர் நிறைந்து இருந்தது.
அப்போது தான் அந்த பெண்ணை வெண்ணிலா நன்றாக கவனித்தாள்.
மேடிட்ட வயிற்றோடு சூர்யாவின் தோளை ஒரு கையால் பற்றி கொண்டு அவன் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் சிரித்த வண்ணமாக கேட்டு கொண்டு வருபவளைப் பார்க்க வெண்ணிலாவிற்கு கோபம் எல்லையில்லாமல் பற்றி கொண்டு வந்தது.
"உன்னை போய் நம்பினேனே....." என்று மனதிற்குள் சூர்யாவை அர்ச்சித்த வெண்ணிலா கோபம் கட்டுக்கடங்காமல் அவர்களை நோக்கி சென்றாள்.
திடீரென்று தங்கள் முன்னால் வந்து நின்ற வெண்ணிலாவை சூர்யாவும், ஜனனியும் ஆச்சரியமாக பார்த்தனர்.
"நிலா...." என்று ஜனனி ஏதோ கூற வரவும் கை காட்டி அவளை நிறுத்துமாறு கூறியவள் சூர்யாவின் கண்களை நேருக்கு நேராக நோக்கினாள்.
வெண்ணிலாவின் பார்வையில் இருந்த வெறுப்பை பார்த்த சூர்யா ஒரு கணம் துணுக்குற்றான்.
"நிலா...நீ இப்போவும் தப்பாக தான் புரிஞ்சுட்டு இருக்க...." என்று சூர்யா கூறவும்
"ஓஹ்....நான் என்ன நினைக்கிறேனு கூட உங்களுக்கு தெரியுமா???" என்று வெண்ணிலா கேலியாக கேட்க அவளை முறைத்து பார்த்தான் சூர்யா.
"உங்களை நம்பி நம்பி ஏமாந்து போறதே எனக்கு வேலையா போயிடுச்சு இல்லே....." என்று வருத்தத்துடன் கூறிய வெண்ணிலா
கண்கள் கலங்க ஜனனியையும், அவள் கை பற்றி இருந்த சூர்யாவின் தோளையும் பார்த்தவள்
"இப்போ கூட நான் தான் தப்பு பண்ணிட்டேன்னு உங்க கிட்ட மன்னிப்பு கேட்க வந்தேன்.....ஆனா நான் தப்பு பண்ணலனு நீங்க நிரூபிச்சுட்டீங்க.....எப்போவும் என்னோட கணிப்பு தவறானதே இல்லை...." என்று கூற
மறுப்பாக தலை அசைத்த சூர்யா
"ஒரு சில நேரங்களில் தப்பாக மாறிடும் நிலா....." என்று கூறினான்.
"நீ எதையும் காது கொடுத்துக் கேட்க மாட்ட....எதையும் தீர விசாரிக்க மாட்ட....நான் புடிச்ச முயலுக்கு மூணு கால்னு இருப்ப....நான் என்ன சொன்னாலும் நீ இப்போ கேட்கப் போறதில்லை....உன் கிட்ட விளக்கம் சொல்லி உன்னை புரிந்து கொள்ள வைக்க இப்போ எனக்கு நேரமும் இல்லை....இந்த இடமும் இதற்கு சரியா இல்ல.....இப்போ எங்களுக்கு வழி விடு நாங்க போகணும்....." என்று கூறிய சூர்யா ஜனனியின் கை பற்றி அழைத்து செல்ல வெண்ணிலா மொத்தமாக உடைந்து போனாள்.
ஜனனி வெண்ணிலாவை கடந்து செல்லும் போது ஒரு கணம் தயங்கி நிற்க அவளை கேள்வியாக நோக்கினான் சூர்யா.
"சூர்யா....நிலா என்ன சொல்ல வரானு கொஞ்சம் கேட்கலாமே...." என்று ஜனனி கூற
வெண்ணிலாவை திரும்பி பார்த்த சூர்யா
"அடுத்தவங்க பேசுறதை கேட்கும் அளவுக்கு அவங்களுக்கு பொறுமை இல்லை ஜனனி....வீணாக நம்ம நேரம் தான் செலவாகும்....ரொம்ப நேரம் நீ இப்படி வெளியில் அலைந்து திரியுறது உன் ஹெல்த்க்கு நல்லது இல்லை....வா போகலாம்...." என்று விட்டு முன்னே செல்ல
தவிப்போடு வெண்ணிலாவைப் பார்த்த ஜனனி
"இல்ல சூர்யா...." எனவும்
"ஜனனி....." என்று சூர்யாவின் உறுமலில் ஜனனி மட்டுமின்றி வெண்ணிலாவும் துணுக்குற்றாள்.
"ஒழுங்காக வந்து காரில் ஏறு...." என்று சூர்யா கூறவும்
மறுத்து பேசாமல் காரில் சென்று ஜனனி ஏறி கொள்ள
வெண்ணிலாவின் அருகில் வந்த சூர்யா
"ஆள் வளர்ந்த அளவுக்கு உன் அறிவு வளரல ஐசு.....முதல்ல உன் அறிவை வளர்த்துக்கோ.....அப்புறம் அடுத்தவங்களைப் பற்றி குறை சொல்லலாம்.....உன்னை நான் அப்புறம் மீட் பண்ணுறேன் ஐசு...." என்று அவள் கன்னத்தில் தட்டி விட்டு செல்ல கோபமும், ஆற்றாமையும் ஒன்று சேர புழுதியை கிளப்பி கொண்டு சென்ற சூர்யாவின் காரையே வெறித்த வண்ணம் நின்றாள் வெண்ணிலா.
"மேடம் நீங்க சிங்கர் வெண்ணிலா தானே...." என்று தன் அருகில் கேட்ட குரலில் சுய நினைவுக்கு வந்த அவளைச் சுற்றி பல நபர்கள் ஒன்று கூடுவதை பார்த்து அவசரமாக தன் காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டு சென்றாள்.
ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு சாலை ஓரத்தில் தன் காரை நிறுத்திய வெண்ணிலாவின் மனம் முழுவதும் உலைக் களமாக கொதித்து கொண்டிருந்தது.
"அந்த ஜனனி முன்னாடி என்னை அவமானப்படுத்திட்டேலே சூர்யா....இதற்கும் சேர்த்து உன்னை பழி வாங்குறேன்...." என்று கருவி கொண்ட வெண்ணிலா தன் போனை எடுத்து வெற்றிக்கு அழைப்பை மேற்கொண்டாள்.
"ஹலோ நிலா....என்னடா இந்த நேரத்தில் கால் பண்ணி இருக்க??? ஏதாவது பிரச்சனையா???" என்று வெற்றி கேட்கவும்
அவனது கவனிப்பில் மனம் உருகி போன வெண்ணிலா தன் குரலை சரி செய்து கொண்டு
"எங்கே இருக்க வெற்றி???" என்று கேட்டாள்.
அவளது பேச்சிலேயே ஏதோ இருக்கிறது என்பதை தெரிந்து கொண்ட வெற்றி
"ஆபீசில் இருக்கேன் மா....ஏதாவது உதவி வேண்டுமா???" என்று கேட்கவும்
"நீ அங்கேயே இரு....நேர்ல வந்து பேசுறேன்....எங்கேயும் போயிடாத...." என்று வெண்ணிலா கூற சரியென்று விட்டு போனை வைத்த வெற்றிக்கு மனதில் ஆயிரம் கேள்விகள் எழுந்தன.
வெண்ணிலா சந்தோஷமாக வீட்டில் இருந்து சென்றவுடன் அபிநயா வெற்றிக்கு போன் செய்து வெண்ணிலாவின் நடவடிக்கைகளை பற்றி கூற மனதிற்குள் ஆயிரம் கனவுகளை எழுப்பி கொண்ட வெற்றி வெண்ணிலாவின் அழைப்பை பார்த்ததும் எல்லாம் சரியாக போகிறது என்று சந்தோஷம் கொண்டான்.
ஆனால் நடந்ததோ வேறு என்பதை அவன் அறிந்தால் என்ன ஆகும்?????
ஒரு பெரிய வீட்டின் முன்னால் சூர்யா காரை நிறுத்த ஜனனி காரில் இருந்து இறங்கி கொண்டாள்.
"ஓகே ஜனனி டேக் கேர்....ஏதாவது ஹெல்ப் வேணும்னா கால் பண்ணு....நான் ஆபீஸ்க்கு கிளம்புறேன் பாய்...." என்று விட்டு சூர்யா செல்ல போக
"ஒரு நிமிஷம் சூர்யா..." என்று அவனை தடுத்தாள் ஜனனி.
"ப்ளீஸ் ஜனனி....நீ என்ன சொல்ல வரேனு தெரியும்....இப்போ நான் யாரோட அட்வைசையும் கேட்குற மனநிலையில் இல்லை...நீ போய் ரெஸ்ட் எடு....உன் வீட்டில் தங்கி இருக்குற கமலம் ஆன்டி வர்றாங்க அவங்களோட போய் பத்திரமாக இருந்துக்கோ..." என்று விட்டு ஜனனியின் முகத்தையும் திரும்பி பார்க்காமல் சூர்யா சென்று விட முகம் வாட கவலையுடன் நின்று கொண்டிருந்தாள் ஜனனி.