காலையில் வீட்டில் இருந்து வெளியே வரும் போது இருந்த வெண்ணிலாவின் மன நிலைக்கும் வெற்றியின் ஆபீசில் இருந்து வெளியேறி வரும் போது இருக்கும் வெண்ணிலாவின் மன நிலைக்கும் இடையிலான வித்தியாசம் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசமாக இருந்தது.
தன் ஒட்டுமொத்த சந்தோஷமும் ஒரே கணத்தில் தொலைந்து போனதை எண்ணி வேதனை கொண்டவளாக வீட்டிற்கு செல்ல மனமின்றி அந்த பார்க்கினுள் உலாவி கொண்டிருந்தாள் வெண்ணிலா.
தூரத்தில் நான்கு, ஐந்து சிறுவர்கள் எவ்வித கவலையுமின்றி சந்தோஷமாக சிரித்து விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்து வெண்ணிலாவின் மனதில் அவளது சிறு வயது ஞாபகங்கள் அலை பாயத் தொடங்கியது.
வலியே என் உயிர் வலியே
நீ உலவுகிறாய் என் விழி வழியே
சகியே என் இளம் சகியே
உன் நினைவுகளால் நீ துரத்துறியே
மதியே என் முழு மதியே
வெண் பகல் இரவாய் நீ படுத்துறியே
நதியே என் இளம் நதியே
உன் அலைகளினால் நீ உரசுறியே
யாரோ... மனதிலே... ஏனோ... கனவிலே...
நீயா... உயிரிலே... தீயா... தெரியவே...
காற்று வந்து மூங்கில் என்னை பாடச் சொல்கின்றதோ
மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமை ஆகின்றதோ
மனம் மனம் எங்கிலும் ஏதோ கனம் கனம் மாறுதே
தினம் தினம் ஞாபகம் வந்து ரணம் ரணம் தந்ததே
அலைகளின் ஓசையில் கிளிஞ்லாய் வாழ்கிறேன்
நீயா...
முழுமையாய்
நானா...
வெறுமையாய்
நாமா... இனி சேர்வோமா...
யாரோ... மனதிலே... ஏனோ... கனவிலே...
நீயா... உயிரிலே... தீயா... தெரியவே...
மிக மிகக் கூர்மையாய் என்னை ரசித்ததும் உன் கண்கள் தான்
மிருதுவாய் பேசியே என்னுள் வசித்ததும் பார்த்தே தான்
கண்களைக் காணவே இமைகளே மறுப்பதா
வெந்நீர்...
பெண்ணிலா
கண்ணீர்...
கண்ணிலா...
நானும்... வெறும் கானலா...
யாரோ...
யாரோ...
மனதிலே... ஏனோ...
ஏனோ...
கனவிலே...
ஓ... நீயா...
ஓ... நீயா...
உயிரிலே.. தீயா..
தீயா...
தெரியவே...
காற்று வந்து மூங்கில் என்னை பாடச் சொல்கின்றதோ
மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமை ஆகின்றதோ
யாரோ... மனதிலே... ஏனோ... கனவிலே...
நீயா... உயிரிலே... தீயா... தெரியவே...
கண்களின் ஓரம் நீர் கசிய உதட்டில் உறைந்த புன்னகையோடு அதனைப் பார்த்து கொண்டிருந்தவள் தோளில் யாரோ கை வைத்து திருப்ப அதிர்ந்து போன வெண்ணிலா சூர்யா அறைந்ததில் மொத்தமாக உறைந்து போனாள்.
வெண்ணிலாவின் அதிர்ந்த முகத்தை பார்த்து தன் கையை உதறிய சூர்யா தான் செய்த காரியத்தை எண்ணி மனம் வருந்தினான்.
"சே....உன்னை எல்லாம் எண்ண பண்ண சரியாகுவ சொல்லு....சின்ன பொண்ணு தானேனு நானும் விட்டு கொடுத்து போனா நீ ஓவரா போயிட்டே இருக்க...
காலையில் உன் கூட பேசாமல் போனதுக்கு காரணம் நம்ம குடும்ப விசயத்தை ஊருக்கே வெளிச்சம் போட்டு காட்ட வேண்டாம்னு தானே தவிர உன்னை அவமானப்படுத்தனும்னு இல்லை....உனக்கு ஒரு அவமானம் வந்தா அது எனக்கும் தான்....ஏன்டி என்னை இப்படி கஷ்டப்படுத்துற..... உன் மேல இப்போ கூட என்னால கோபப்பட முடியலடி....உன்னோட குழந்தை தனத்தை எண்ணி கவலை தான் வருது.....நானாகவே உன்னை வெறுக்க நினைச்சாலும் என்னால முடியல ஐசும்மா....என்னதான் கோபமாக பேசுனாலும் உன்னை மறக்க முடியல அது தான் உண்மை..." என்று சூர்யா பேசப் பேச அசையாமல் அவன் அறைந்த கன்னத்தில் கை வைத்து நின்றாள் வெண்ணிலா.
"டிவோர்ஸ் பண்ணிட்டா எல்லாம் சரியாகிவிடுமா சொல்லு??? ஒருத்தரை ஒருத்தர் டெய்லி பார்க்க வேண்டி இருக்காது....ஆனா நம்மளோட ஞாபகங்களை மறக்க முடியுமா சொல்லு....தனியா போயிட்டா மனதில் வலி மட்டும் தான் மிஞ்சும்....சந்தோஷம் இல்ல...." என்று சூர்யா கூறவும் அவன் கூறிய வார்த்தைகளை மீண்டும் மீண்டும் தனக்குள் வெண்ணிலா கூறி பார்த்து கொண்டாள்.
"ஞாபகங்கள், நினைவுகளை என்னால் மறக்க முடியுமா??? இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட இவனைப் பற்றி தானே யோசித்தேன்.....ஒரு வேளை சூர்யா சொல்வது போல மன வேதனை மட்டும் தான் எனக்கு கிடைக்குமா???" என்ற அச்சம் வெண்ணிலாவைத் தொற்றிக் கொண்டது.
வெண்ணிலாவின் குழப்பமான முகத்தை பார்த்த சூர்யா வெண்ணிலாவின் அருகில் வந்து அவள் கன்னத்தில் மேல் இருந்த அவளது கையை எடுத்து விட்டு தன் கையால் அவள் கன்னத்தை மெல்ல வருடிக் கொடுத்தான்.
சூர்யாவின் பேச்சில் சற்று மனம் இளக நின்ற வெண்ணிலாவின் கண் முன்னே காலையில் சூர்யாவோடு ஜனனியை பார்த்த தோற்றம் நினைவு வர கோபம் கொண்டு அவனது கையை தட்டி விட்டாள்.
"என்ன பண்ணுறத எல்லாம் பண்ணிட்டு வந்து நல்லவன் மாதிரி டயலாக் விடுறியா??? எனக்கு உன் ஞாபகங்கள் தேவையே இல்ல....உன்னோட நினைவுகள் எல்லாவற்றையுமே நான் மறக்க நினைக்குறேன்....உன்னோட உண்மையான முகம் எல்லோருக்கும் தெரிய வந்துடும்னு தானே இப்படி எல்லாம் வந்து சமாதானம் பேசுற....நீ நினைக்குறது எப்போவுமே நடக்காது....என்னை ஏமாத்துனதுக்காக கண்டிப்பாக உன்னை பழி வாங்குவேன்...." என்று வெண்ணிலா கூறவும்
அத்தனை நேரம் பெரும் பிரயத்தனப்பட்டு கட்டுப்படுத்தி வைத்திருந்த சூர்யாவின் பொறுமை எல்லாம் காற்றோடு பறந்து போனது.
"ஹேய்....." என்று கோபத்துடன் வெண்ணிலாவின் கழுத்தில் கை வைக்கப் போன சூர்யா சுற்றி நின்ற நபர்கள் அவர்களை திரும்பி பார்க்கவும் தன் கையை பின்னிழுத்துக் கொண்டான்.
"உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியாதா?? எப்போவோ நடந்த ஒண்ணுமே இல்லாத பிரச்சினையை தலையில் தூக்கி வைச்சிட்டு தைய்யா தக்கானு குதிச்சிட்டு இருக்க...சரி உனக்கு டிவோர்ஸ் தானே வேணும்...எங்கே எந்த பேப்பரில் சைன் பண்ணணும்னு சொல்லு உன் இஷ்டப்படி பண்ணுறேன்...." என்று சூர்யா கூறவும் அவனை நம்பாமல் பார்த்தாள் வெண்ணிலா.
"இவன் இவ்வளவு சீக்கிரமாக பின் வாங்க மாட்டானே....ஏதோ உள்குத்து இருக்கு போல...." என்று யோசித்தவாறு வெண்ணிலா நிற்க
"பட் வன் கண்டிசன்...." என்று கூறினான் சூர்யா.
"அது தானே பார்த்தேன்....இவனாவது பின் வாங்குறதாவது...." என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட வெண்ணிலா அவனைக் கேள்வியாக நோக்கினாள்.
சூர்யா வெண்ணிலாவை நோக்கி அடியெடுத்து வைக்க மிரண்டு போன வெண்ணிலா சற்று பின்னாடி நகர்ந்தாள்.
மேலும் மேலும் சூர்யா அவளை நோக்கி வர குழப்பத்தோடும் பயத்தோடும் நகர்ந்த வெண்ணிலா அதற்கு மேல் நகர இடமின்றி ஒரு மரத்தின் மேல் மோதி நின்றாள்.
வெண்ணிலாவின் பயந்து போன தோற்றத்தை பார்த்து சிரித்த சூர்யா மெல்ல அவள் காதருகில் குனிந்து
"நாளைக்கு கோர்ட்டில் ஜட்ஜ் எதுக்காக டிவோர்ஸ் வாங்குறீங்கனு கேட்டா உனக்கு சொல்றதுக்கு ஸ்ட்ராங் ரீசன் வேணும்லே....." என்று கேட்கவும்
"அது தான் ஜனனி...." என்று கூற போனவள் சூர்யாவின் பார்வையில் மிரட்சியடைந்து எதுவும் பேசாமல் தன் வாயை மூடிக்கொண்டாள்.
"யூ ஸீ ஜனனி எல்லாம் ஒரு எவிடன்சா நீ கொண்டு போனா அதை எப்படி எனக்கு சாதகமாக மாற்றனும்னு எனக்கு நல்லாவே தெரியும்.....நீ வீணா உன் டைம்மை வேஸ்ட் பண்ணாதே ஐசு...நான் வேணும்னா உனக்கு ஒரு ஐடியா தரவா ஐசு....." என்று சூர்யா கேட்க
ஏற்கனவே சூர்யா தன் அருகில் நெருங்கி நின்றதில் பலவீனமாக உணர்ந்த வெண்ணிலா அவனுடைய
"ஐசு..." என்ற அழைப்பில் கோபம் தலைக்கேற சீற்றத்தோடு அவன் தோள்களை பிடித்து தள்ளி விட்டாள்.
"இன்னொரு வாட்டி ஐசு கீசுனு சொன்ன அப்புறம் நடக்குறதே வேற சொல்லிட்டேன்....எனக்கு எதை எங்கே பண்ணணும்னு நல்லாவே தெரியும். உங்க வேலை எதுவோ அதை மட்டும் பாருங்க...." என்று படபடவென பொரிந்து விட்டு அவனை தாண்டி செல்லப் போக அவளை நகர விடாத படி அவள் தோளின் இருபுறமும் கை வைத்து அவளை மரத்தோடு சேர்த்து பிடித்து வைத்தான் சூர்யா.
சூர்யாவின் பிடியில் வெண்ணிலாவின் தோள்கள் இரண்டும் வலிக்க வலி தாங்காமல் தன் முகத்தை சுளித்தாள் வெண்ணிலா.
"என்ன குளிர் விட்டு போச்சா???" என்ற சூர்யாவின் கேள்வியில்
சிரித்துக் கொண்ட வெண்ணிலா
"என்ன கோபம் வருதா??? மனசுக்குள்ள அவ்வளவு கஷ்டம் வருதா என்ன??" என்று கேட்கவும் அவளது மன எண்ணங்களை புரிந்து கொண்ட சூர்யா அவள் தோளின் மேல் இருந்த தன் கைகளை விலக்கி விட்டு மரத்தின் மேல் தன் கைகள் இரண்டையும் அணை போல வைத்து அவளை சிறை செய்து வைத்தான்.
தன்னை கோபப்படுத்தினால் தான் நினைத்த காரியத்தை சாதித்து விடலாம் என்ற வெண்ணிலாவின் எண்ணத்தை தவிடு பொடியாக்க வேண்டும் என்று நினைத்து கொண்ட சூர்யா அவளைப் பார்த்து புன்னகைக்க வெண்ணிலாவின் புன்னகை சட்டென்று காணாமல் போனது.
"ஆனாலும் நீ எனக்கு நல்ல என்டர்டெயின்மண்ட்ட தர்ற ஐசு...." என்று சூர்யா கூற
அவனை முறைத்து பார்த்தவள்
"வழி விடுங்க நான் போகணும்...." என்று கூறவும் அவள் கூறியது எதுவும் காதில் கேட்காதது போல அசையாமல் நின்றான் சூர்யா.
"சூர்யா வழி விடுங்க...." என்று வெண்ணிலா மீண்டும் சற்று சத்தமாக கூறவும் அவள் கண்களை நேருக்கு நேராக நோக்கினான் சூர்யா.
Last edited: