ஹாய் ஹலோ பிரண்ட்ஸ்.......
முதல்ல எல்லோருக்கும் ஒரு பெரிய நன்றி......
ஒரு வாரமாக அப்டேட் போடாம விட்டதுக்காக பெரிய மனசு பண்ணி என்னை மன்னிச்சுடுங்கோபா.......
அடுத்த அப்டேட் இதோ....
அன்றிலிருந்து சரியாக ஒரு வாரம் கழித்து சூர்யா ஆபிஸில் இருக்கும் போது ராபர்ட் சூர்யாவைத் தேடி வேகமாக வந்தான்.
“எக்ஸ்கியுஸ் மீ ஸார்..” என்ற ராபர்ட்டின் அழைப்பில்
நிமிர்ந்து பார்த்த சூர்யா
“வா ராபர்ட்…” என்று அழைத்தான்.
“ஸார் உங்களுக்கு ஒரு லெட்டர் வந்துச்சு….நேத்தே தர இருந்தேன்…நீங்க இம்பார்ட்டண்ட் மீட்டிங்கில் இருந்ததால தர முடியாமல் போச்சு…” என்று தயக்கமாக ராபர்ட் கூறவும்
“இட்ஸ் ஓகே…” என்றவாறு அவன் கையில் இருந்த லெட்டரை வாங்கி பிரித்துப் பார்த்தான் சூர்யா.
பிரித்துப் பார்த்தவனின் விழிகள் அதிர்ச்சியை தேக்கி நின்றன.
“சொன்ன மாதிரியே பண்ணிட்டா ராட்சசி…..எவ்வளவு திமிரு அவளுக்கு…அவளை….” என்று கோபமாக எழுந்தவன்
“நான் தானே அவ இஷ்டப்படி பண்ணட்டும்னு விட்டேன்….இப்போ போய் பேசி என்ன ஆகப் போகுது??? நாளைக்கு கோட்ல போயே பார்த்துக்கலாம்….” என்று நினைத்துக் கொண்டே மறுபடியும் தன் இருக்கையில் அமர்ந்து கொண்டான்.
மறுபுறம் வெண்ணிலா அவளது அறைக்கு வெளியே சிறு தோட்டம் போல அமைக்கப்பட்டிருந்த அவளது பால்கனியில் ஒரு ஓரமாக நின்று வானத்தையே வெறித்துக் கொண்டு நின்றாள்.
பால்கனி முழுவதும் வித விதமான ரோஜாப் பூக்கள் தொட்டியில் வைக்கப்பட்டிருக்க நடுவில் ஒரு சிறிய தடாகம் போன்ற அமைப்பு அமைக்கப்பட்டிருந்தது.
அதில் பலவிதமான தாமரை பூக்கள் மலர்ந்திருக்க அந்த தடாகத்தின் அருகில் சோகமே மறு உருவமாக வந்து அமர்ந்து கொண்டாள் வெண்ணிலா.
“ஏன் இந்த சோகம்???” என்றவாறு வந்த அபிநயாவைப் பார்த்து புன்னகைத்த வெண்ணிலாவின் முகத்தில் துளியளவேனும் சந்தோஷம் இல்லை.
“சொல்லுமா என்ன யோசனை???” என்று அபிநயா கேட்கவும்
“வீட்டிலேயே இருக்க போரா இருக்கு அபி…சூட்டிங்கும் வன் வீக்கிற்கு இல்ல….என்ன பண்ணுறதுனே தெரியல…” என்று வெண்ணிலா கூறவும்
“அது தான் நாளைக்கு கோர்ட்டுக்கு போகனுமே மறந்துட்டியா??” என்று அபிநயா கேட்க இல்லை என்பது போல தலை அசைத்தாள் வெண்ணிலா.
“நாளைக்கு நீ கோர்ட்டுக்குப் போயிட்டு வந்த அப்புறமாக உனக்கு பெரிய சர்ப்பரைஸ் இருக்கு….ஸோ நீ இனிமே போரிங்கா பீல் பண்ணமாட்ட…” என்று அபிநயா கூற
“சர்ப்பரைஸா??? என்ன அது???? “ என்று விழி விரித்துக் கேட்டாள் வெண்ணிலா.
“நாளைக்கு தெரிய வரும்….அது வரைக்கும் என்ன அந்த சர்ப்பரைஸ்னு யோசிச்சுட்டே இரு போரடிக்காது…” என்று விட்டு அபிநயா சென்று விட
“சும்மா இருந்த சங்கை ஊதி விட்டுட்டு போயிட்டாங்கலே….ஐயோ….இனி அதையே யோசிச்சுட்டு இருப்பேனே…” என்று தலையில் கை வைத்துக் கொண்டு இருந்தாள் வெண்ணிலா.
அடுத்த நாள் காலை வெண்ணிலா எதிர் பார்த்துக் காத்திருந்த அந்த நாள்.
வெண்ணிலாவைத் தவிர அந்த வீட்டில் அனைவருமே மிகவும் மும்முரமாக வேலை செய்து கொண்டிருக்க வெண்ணிலா குழப்பமாக
“இவர்கள் என்ன செய்கிறார்கள்???” என்று யோசித்த வண்ணம் படியிறங்கி வந்தாள்.
டைனிங் டேபிளில் வந்து வெண்ணிலா அமர்ந்து கொள்ள ஆண்டாள் அவசர அவசரமாக வெண்ணிலாவிற்கு சாப்பாட்டை பரிமாறி விட்டு சென்று விட வெண்ணிலா அதிசயமாக அவரைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
“என்ன ஆச்சு இவங்களுக்கு?? இன்னைக்கு நான் கோர்ட்டுக்கு போகப் போறேன்….ஆனா இவங்க அதைப் பத்தி கண்டுக்கவே இல்லையே!!! என்ன தான் நடக்குது இங்க???” என்று யோசித்துக் கொண்டிருக்கையில் அவளது தொலைபேசி சிணுங்கியது.
வக்கீலிடமிருந்து அழைப்பு வரவும் தன் சிந்தனைகளை எல்லாம் ஒதுக்கி விட்டு சாப்பிட்டு விட்டு வெளியேறிச் சென்றாள் வெண்ணிலா.
வெண்ணிலா வெளியேறிச் செல்லும் வரை பதட்டத்தோடு நின்று கொண்டிருந்த ஆண்டாள் அதன் பிறகே நிம்மதியாக மூச்சு விட்டுக் கொண்டார்.
உள்ளே செல்லலாம் என்று திரும்புகையில் அவரின் தோள் மேல் யாரோ கை வைக்கவும் “அய்ய்யோ….நிலா வந்துட்டாளோ….இப்போ எதுவும் என்கிட்ட கேட்டா நான் என்ன பதில் சொல்லுவேன்??? இதுக்காக தானே நான் அவசர அவசரமாக சாப்பாட்டை வைச்சுட்டு நிக்காம ஓடினேன்…..இப்போ எப்படி சமாளிக்க போறேன்னோ தெரியலயே….” என்று புலம்பிக் கொண்டே மெல்ல தயங்கியவாறே திரும்பிப் பார்க்க அவரின் பின்னால் நின்று அபிநயாவும், வெற்றியும் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டு நின்றனர்.
“ஐயோ….அம்மா….சிரிச்சு சிரிச்சு வயிறெல்லாம் வலிக்குது…உங்க பொண்ணப் பார்த்தா உங்களுக்கு இவ்வளவு பயமா??? ஆனாலும் நீங்க கொடுத்த ரியாக்ஷன் இருக்கே…சான்ஸே இல்ல போங்க….அப்படியே காஞ்சரிங் மூவில வர்ற பேயைப் பார்த்த மாதிரி…” என்று விட்டு வெற்றி மீண்டும் சிரிக்க அவனை முறைத்துப் பார்த்தார் ஆண்டாள்.
“ஏன்டா என்னைப் பார்த்தா உனக்கு அவ்வளவு காமெடியாவா இருக்கு…நானே இன்னைக்கு என்ன ஆகப் போகுதோனு பயத்துல இருக்கேன் நீ என்னடான்னா லூசாட்டம் சிரிச்சுட்ட நிற்குற…இப்போவே நல்லா சிரிச்சுக்க…ஈவ்னிங் நிலா வந்து இங்க நடக்குறது எல்லாம் பார்த்துட்டு சாமி ஆடுவா அப்போ இதெல்லாம் பண்ணது நீதான்னு
அவகிட்ட கோர்த்து விடுறேன் பாரு…” என்று ஆண்டாள் கூறவும்
“ஐயோ….என்னைப் பெற்ற தெய்வமே…..அப்பிடி எதுவும் பண்ணிடாதீங்க….இப்போ கோர்ட்டுக்கு போறவ கண்டிப்பாக வாயை வைச்சுட்டு சும்மா இருக்காம சூர்யா கிட்ட ஏதாவது வம்பு பண்ணி ஏழரையைக் கூட்டிட்டு தான் வருவா….இதுல நீங்க வேற ஏதாவது சொல்லி அநியாயமாக உங்க பையனோட கொலைக்கு தூபம் போட்டுடாதீங்க…” என்று வெற்றி கூற
“பரவாயில்ல ஒரு நல்லது நடக்கனும்னா சிலதை இழக்கத் தானே வேணும்….இல்லையா அத்தை…” என்ற கூறிய அபிநயாவை
“அட கிராதகி…..” என்றவாறு பார்த்தான் வெற்றி.
“சரி சரி….ஈவினிங் நிலா வந்ததும் என்ன பேசணும்னு நல்லா இரண்டு பேரும் பிரிபயார் ஆகிக்குங்க…அப்புறம் சொதப்பிடுவீங்க…” என்று விட்டு ஆண்டாள் சென்று விட
அபிநயாவின் அருகில் வந்த வெற்றி
“என்னைப் போட்டுத் தள்ள பிளான் பண்றலே இரு இரு உன்னைக் கவனிச்சுக்குறேன்…” என்று கூறவும்
“அதையும் பார்த்துடலாம்…: என்று விட்டுச் சென்றாள் அபிநயா.
மறுபுறம் கோர்ட்டில் வெற்றி சொன்ன வார்த்தையை பொய்யாக்காமல் வெண்ணிலா சூர்யாவை முறைத்துக் கொண்டு நிற்க சூர்யாவோ கைகைளைக் கட்டிக் கொண்டு வெண்ணிலாவையே பார்த்துக் கொண்டு நின்றான்.
“என்ன ரொம்ப நல்லவன் மாதிரி ஆக்ட் பண்ணா அப்படியே நான் உன்னை நம்பிடுவேனு நினைச்சியா என்ன???” என்று வெண்ணிலா கேட்கவும்
“நான் உன்னை என்னை நம்ப சொல்லவே இல்லையே…” என்று தன் தோளைக் குலுக்கினான் சூர்யா.
“உன்னை…” கோபமாக ஏதோ கூற வந்தவள் அவளது வக்கீல் வருவதைக் காணவும் அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டே கோர்ட்டினுள் நுழைந்தாள்.
சூர்யாவும், வெண்ணிலாவும் ஒரு மனதாக விவாகரத்திற்கு சம்மதம் தெரிவிக்கவே அவர்கள் இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது.
தான் நினைத்ததை சாதித்துக் காட்டி விட்டேன் என்று வெற்றிக் களிப்போடு வெண்ணிலா சூர்யாவைப் பார்க்க அவனோ அங்கே நடக்கும் சம்பவங்களுக்கும் தனக்கும் சம்பந்தம் இலலை என்பதைப் போல தன் போனில் மும்முரமாக எதையோ பார்த்துக் கொண்டு இருந்தான்.
“என்ன ஆச்சு இவனுக்கு??? வந்ததில் இருந்து இவ்வளவு சைலண்டா இருக்கான்??? இவன் கேரக்டரே இது இல்லையே….” என்று வெண்ணிலா யோசித்துக் கொண்டிருக்கையில் தான் வந்த வேலை முடிவடைந்தது என்பதைப் போல சூர்யா எழுந்து கொள்ள அவசரமாக அவனருகில் வந்தாள் வெண்ணிலா.
“என்ன மிஸ்டர் சூர்யதேவன் நான் சொன்ன படி நடத்திக் காட்டிட்டேனா???”என்று வெண்ணிலா கேட்கவும்
அவளைப் பார்த்து புன்னகைத்தக் கொண்ட சூர்யா
“ஆமா ஆமா நீங்க யாரு??? தி கிரெட் சிங்கர் வெண்ணிலா சூர்யதேவன் ஸாரி ஸாரி மிஸ். வெண்ணிலா அழகர் ஆச்சே…” என்று அந்த மிஸ் என்ற வார்த்தையை அழுத்திக் கூறவும் முகம் சிவக்க அவனைப் பார்த்தாள் வெண்ணிலா.
“ஓகே மேடம் நீங்க சொன்னதை செஞ்சு காட்டிட்டீங்க…வேற ஏதாவது சொல்ல இருக்கா???” என்று சூர்யா கேட்கவும்
“ஆமா ஒரு முக்கியமான விஷயம் இருக்கே….இப்போ தான் உங்களுக்கு டிவோர்ஸ் கிடைச்சுடுச்சே…..ஸோ இனிமே ஈஸியா நீங்க ஜனனியை மேரேஜ் பண்ணிக்கலாம்லே….” என்று கூறும் போதே வெண்ணிலாவின் குரல் கம்மியது.
இருந்தாலும் சூர்யாவின் முன்னால் தன் பலவீனத்தைக் காட்டி விடக்கூடாது என்பதற்காக முயன்று தன்னை தைரியமாகக் காட்டிக் கொண்டாள் வெண்ணிலா.
முதல்ல எல்லோருக்கும் ஒரு பெரிய நன்றி......
ஒரு வாரமாக அப்டேட் போடாம விட்டதுக்காக பெரிய மனசு பண்ணி என்னை மன்னிச்சுடுங்கோபா.......
அடுத்த அப்டேட் இதோ....
அன்றிலிருந்து சரியாக ஒரு வாரம் கழித்து சூர்யா ஆபிஸில் இருக்கும் போது ராபர்ட் சூர்யாவைத் தேடி வேகமாக வந்தான்.
“எக்ஸ்கியுஸ் மீ ஸார்..” என்ற ராபர்ட்டின் அழைப்பில்
நிமிர்ந்து பார்த்த சூர்யா
“வா ராபர்ட்…” என்று அழைத்தான்.
“ஸார் உங்களுக்கு ஒரு லெட்டர் வந்துச்சு….நேத்தே தர இருந்தேன்…நீங்க இம்பார்ட்டண்ட் மீட்டிங்கில் இருந்ததால தர முடியாமல் போச்சு…” என்று தயக்கமாக ராபர்ட் கூறவும்
“இட்ஸ் ஓகே…” என்றவாறு அவன் கையில் இருந்த லெட்டரை வாங்கி பிரித்துப் பார்த்தான் சூர்யா.
பிரித்துப் பார்த்தவனின் விழிகள் அதிர்ச்சியை தேக்கி நின்றன.
“சொன்ன மாதிரியே பண்ணிட்டா ராட்சசி…..எவ்வளவு திமிரு அவளுக்கு…அவளை….” என்று கோபமாக எழுந்தவன்
“நான் தானே அவ இஷ்டப்படி பண்ணட்டும்னு விட்டேன்….இப்போ போய் பேசி என்ன ஆகப் போகுது??? நாளைக்கு கோட்ல போயே பார்த்துக்கலாம்….” என்று நினைத்துக் கொண்டே மறுபடியும் தன் இருக்கையில் அமர்ந்து கொண்டான்.
மறுபுறம் வெண்ணிலா அவளது அறைக்கு வெளியே சிறு தோட்டம் போல அமைக்கப்பட்டிருந்த அவளது பால்கனியில் ஒரு ஓரமாக நின்று வானத்தையே வெறித்துக் கொண்டு நின்றாள்.
பால்கனி முழுவதும் வித விதமான ரோஜாப் பூக்கள் தொட்டியில் வைக்கப்பட்டிருக்க நடுவில் ஒரு சிறிய தடாகம் போன்ற அமைப்பு அமைக்கப்பட்டிருந்தது.
அதில் பலவிதமான தாமரை பூக்கள் மலர்ந்திருக்க அந்த தடாகத்தின் அருகில் சோகமே மறு உருவமாக வந்து அமர்ந்து கொண்டாள் வெண்ணிலா.
“ஏன் இந்த சோகம்???” என்றவாறு வந்த அபிநயாவைப் பார்த்து புன்னகைத்த வெண்ணிலாவின் முகத்தில் துளியளவேனும் சந்தோஷம் இல்லை.
“சொல்லுமா என்ன யோசனை???” என்று அபிநயா கேட்கவும்
“வீட்டிலேயே இருக்க போரா இருக்கு அபி…சூட்டிங்கும் வன் வீக்கிற்கு இல்ல….என்ன பண்ணுறதுனே தெரியல…” என்று வெண்ணிலா கூறவும்
“அது தான் நாளைக்கு கோர்ட்டுக்கு போகனுமே மறந்துட்டியா??” என்று அபிநயா கேட்க இல்லை என்பது போல தலை அசைத்தாள் வெண்ணிலா.
“நாளைக்கு நீ கோர்ட்டுக்குப் போயிட்டு வந்த அப்புறமாக உனக்கு பெரிய சர்ப்பரைஸ் இருக்கு….ஸோ நீ இனிமே போரிங்கா பீல் பண்ணமாட்ட…” என்று அபிநயா கூற
“சர்ப்பரைஸா??? என்ன அது???? “ என்று விழி விரித்துக் கேட்டாள் வெண்ணிலா.
“நாளைக்கு தெரிய வரும்….அது வரைக்கும் என்ன அந்த சர்ப்பரைஸ்னு யோசிச்சுட்டே இரு போரடிக்காது…” என்று விட்டு அபிநயா சென்று விட
“சும்மா இருந்த சங்கை ஊதி விட்டுட்டு போயிட்டாங்கலே….ஐயோ….இனி அதையே யோசிச்சுட்டு இருப்பேனே…” என்று தலையில் கை வைத்துக் கொண்டு இருந்தாள் வெண்ணிலா.
அடுத்த நாள் காலை வெண்ணிலா எதிர் பார்த்துக் காத்திருந்த அந்த நாள்.
வெண்ணிலாவைத் தவிர அந்த வீட்டில் அனைவருமே மிகவும் மும்முரமாக வேலை செய்து கொண்டிருக்க வெண்ணிலா குழப்பமாக
“இவர்கள் என்ன செய்கிறார்கள்???” என்று யோசித்த வண்ணம் படியிறங்கி வந்தாள்.
டைனிங் டேபிளில் வந்து வெண்ணிலா அமர்ந்து கொள்ள ஆண்டாள் அவசர அவசரமாக வெண்ணிலாவிற்கு சாப்பாட்டை பரிமாறி விட்டு சென்று விட வெண்ணிலா அதிசயமாக அவரைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
“என்ன ஆச்சு இவங்களுக்கு?? இன்னைக்கு நான் கோர்ட்டுக்கு போகப் போறேன்….ஆனா இவங்க அதைப் பத்தி கண்டுக்கவே இல்லையே!!! என்ன தான் நடக்குது இங்க???” என்று யோசித்துக் கொண்டிருக்கையில் அவளது தொலைபேசி சிணுங்கியது.
வக்கீலிடமிருந்து அழைப்பு வரவும் தன் சிந்தனைகளை எல்லாம் ஒதுக்கி விட்டு சாப்பிட்டு விட்டு வெளியேறிச் சென்றாள் வெண்ணிலா.
வெண்ணிலா வெளியேறிச் செல்லும் வரை பதட்டத்தோடு நின்று கொண்டிருந்த ஆண்டாள் அதன் பிறகே நிம்மதியாக மூச்சு விட்டுக் கொண்டார்.
உள்ளே செல்லலாம் என்று திரும்புகையில் அவரின் தோள் மேல் யாரோ கை வைக்கவும் “அய்ய்யோ….நிலா வந்துட்டாளோ….இப்போ எதுவும் என்கிட்ட கேட்டா நான் என்ன பதில் சொல்லுவேன்??? இதுக்காக தானே நான் அவசர அவசரமாக சாப்பாட்டை வைச்சுட்டு நிக்காம ஓடினேன்…..இப்போ எப்படி சமாளிக்க போறேன்னோ தெரியலயே….” என்று புலம்பிக் கொண்டே மெல்ல தயங்கியவாறே திரும்பிப் பார்க்க அவரின் பின்னால் நின்று அபிநயாவும், வெற்றியும் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டு நின்றனர்.
“ஐயோ….அம்மா….சிரிச்சு சிரிச்சு வயிறெல்லாம் வலிக்குது…உங்க பொண்ணப் பார்த்தா உங்களுக்கு இவ்வளவு பயமா??? ஆனாலும் நீங்க கொடுத்த ரியாக்ஷன் இருக்கே…சான்ஸே இல்ல போங்க….அப்படியே காஞ்சரிங் மூவில வர்ற பேயைப் பார்த்த மாதிரி…” என்று விட்டு வெற்றி மீண்டும் சிரிக்க அவனை முறைத்துப் பார்த்தார் ஆண்டாள்.
“ஏன்டா என்னைப் பார்த்தா உனக்கு அவ்வளவு காமெடியாவா இருக்கு…நானே இன்னைக்கு என்ன ஆகப் போகுதோனு பயத்துல இருக்கேன் நீ என்னடான்னா லூசாட்டம் சிரிச்சுட்ட நிற்குற…இப்போவே நல்லா சிரிச்சுக்க…ஈவ்னிங் நிலா வந்து இங்க நடக்குறது எல்லாம் பார்த்துட்டு சாமி ஆடுவா அப்போ இதெல்லாம் பண்ணது நீதான்னு
அவகிட்ட கோர்த்து விடுறேன் பாரு…” என்று ஆண்டாள் கூறவும்
“ஐயோ….என்னைப் பெற்ற தெய்வமே…..அப்பிடி எதுவும் பண்ணிடாதீங்க….இப்போ கோர்ட்டுக்கு போறவ கண்டிப்பாக வாயை வைச்சுட்டு சும்மா இருக்காம சூர்யா கிட்ட ஏதாவது வம்பு பண்ணி ஏழரையைக் கூட்டிட்டு தான் வருவா….இதுல நீங்க வேற ஏதாவது சொல்லி அநியாயமாக உங்க பையனோட கொலைக்கு தூபம் போட்டுடாதீங்க…” என்று வெற்றி கூற
“பரவாயில்ல ஒரு நல்லது நடக்கனும்னா சிலதை இழக்கத் தானே வேணும்….இல்லையா அத்தை…” என்ற கூறிய அபிநயாவை
“அட கிராதகி…..” என்றவாறு பார்த்தான் வெற்றி.
“சரி சரி….ஈவினிங் நிலா வந்ததும் என்ன பேசணும்னு நல்லா இரண்டு பேரும் பிரிபயார் ஆகிக்குங்க…அப்புறம் சொதப்பிடுவீங்க…” என்று விட்டு ஆண்டாள் சென்று விட
அபிநயாவின் அருகில் வந்த வெற்றி
“என்னைப் போட்டுத் தள்ள பிளான் பண்றலே இரு இரு உன்னைக் கவனிச்சுக்குறேன்…” என்று கூறவும்
“அதையும் பார்த்துடலாம்…: என்று விட்டுச் சென்றாள் அபிநயா.
மறுபுறம் கோர்ட்டில் வெற்றி சொன்ன வார்த்தையை பொய்யாக்காமல் வெண்ணிலா சூர்யாவை முறைத்துக் கொண்டு நிற்க சூர்யாவோ கைகைளைக் கட்டிக் கொண்டு வெண்ணிலாவையே பார்த்துக் கொண்டு நின்றான்.
“என்ன ரொம்ப நல்லவன் மாதிரி ஆக்ட் பண்ணா அப்படியே நான் உன்னை நம்பிடுவேனு நினைச்சியா என்ன???” என்று வெண்ணிலா கேட்கவும்
“நான் உன்னை என்னை நம்ப சொல்லவே இல்லையே…” என்று தன் தோளைக் குலுக்கினான் சூர்யா.
“உன்னை…” கோபமாக ஏதோ கூற வந்தவள் அவளது வக்கீல் வருவதைக் காணவும் அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டே கோர்ட்டினுள் நுழைந்தாள்.
சூர்யாவும், வெண்ணிலாவும் ஒரு மனதாக விவாகரத்திற்கு சம்மதம் தெரிவிக்கவே அவர்கள் இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது.
தான் நினைத்ததை சாதித்துக் காட்டி விட்டேன் என்று வெற்றிக் களிப்போடு வெண்ணிலா சூர்யாவைப் பார்க்க அவனோ அங்கே நடக்கும் சம்பவங்களுக்கும் தனக்கும் சம்பந்தம் இலலை என்பதைப் போல தன் போனில் மும்முரமாக எதையோ பார்த்துக் கொண்டு இருந்தான்.
“என்ன ஆச்சு இவனுக்கு??? வந்ததில் இருந்து இவ்வளவு சைலண்டா இருக்கான்??? இவன் கேரக்டரே இது இல்லையே….” என்று வெண்ணிலா யோசித்துக் கொண்டிருக்கையில் தான் வந்த வேலை முடிவடைந்தது என்பதைப் போல சூர்யா எழுந்து கொள்ள அவசரமாக அவனருகில் வந்தாள் வெண்ணிலா.
“என்ன மிஸ்டர் சூர்யதேவன் நான் சொன்ன படி நடத்திக் காட்டிட்டேனா???”என்று வெண்ணிலா கேட்கவும்
அவளைப் பார்த்து புன்னகைத்தக் கொண்ட சூர்யா
“ஆமா ஆமா நீங்க யாரு??? தி கிரெட் சிங்கர் வெண்ணிலா சூர்யதேவன் ஸாரி ஸாரி மிஸ். வெண்ணிலா அழகர் ஆச்சே…” என்று அந்த மிஸ் என்ற வார்த்தையை அழுத்திக் கூறவும் முகம் சிவக்க அவனைப் பார்த்தாள் வெண்ணிலா.
“ஓகே மேடம் நீங்க சொன்னதை செஞ்சு காட்டிட்டீங்க…வேற ஏதாவது சொல்ல இருக்கா???” என்று சூர்யா கேட்கவும்
“ஆமா ஒரு முக்கியமான விஷயம் இருக்கே….இப்போ தான் உங்களுக்கு டிவோர்ஸ் கிடைச்சுடுச்சே…..ஸோ இனிமே ஈஸியா நீங்க ஜனனியை மேரேஜ் பண்ணிக்கலாம்லே….” என்று கூறும் போதே வெண்ணிலாவின் குரல் கம்மியது.
இருந்தாலும் சூர்யாவின் முன்னால் தன் பலவீனத்தைக் காட்டி விடக்கூடாது என்பதற்காக முயன்று தன்னை தைரியமாகக் காட்டிக் கொண்டாள் வெண்ணிலா.