லீனாவிடம் சென்ற ராஜ், ஆதிக் சொன்னதைச் சொல்லிவிட்டு பார்ட்டிக்கு சென்றுவிட, லீனாவிற்கே ஆதிக்கின் இச்செய்கை விசித்திரமாக இருந்தது..
ஏழு மணி போல லீனாவை அழைத்துக் கொண்டு ஐடிசியை அடைந்து, மலேசியா தொழிலதிபர்களிடம் மற்றொரு தொழில் முறை ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டவனுக்கு, அந்த ஒப்பந்தம் லீனாவின் சாதுரியத்தால் மட்டுமே என்பது தெளிவாய் புரிந்தது..
தொழில் முறை விருந்தில் எப்போதும் மதுவை புறக்கணிப்பவன், இன்று கொஞ்சம் கொஞ்சமாய் எடுத்துக் குடிக்க, புதிதாய் கற்று கொண்ட பழக்கம்.. அதனால், ஐந்து க்ளாஸை கூட அவனால் கடக்க முடியவில்லை..
அண்ணன் இரண்டாவது டம்பளரை எடுத்துக் குடிப்பதை தூரத்தில் இருந்தே கண்டிருந்தவன், அங்கிருந்த சிப்பந்தியை அழைத்து ஆதியை கை காண்பித்து அவருக்கு கோலாவைத் தவிர இனி எதுவும் கொடுக்க கூடாது எனப் பணித்து நகர, அதற்குப் பிறகு கொடுக்கப்பட்ட மூன்று க்ளாஸுமே கோலா தான்..
முகர்ந்து பார்த்தாலே மட்டையாகிவிடும் க்ரூப்பை சேர்ந்தவனுக்கு, இரண்டு க்ளாஸ் மிக்ஸிங் சரக்கே உச்சக் கட்ட போதைக்கு இழுத்துச் செல்ல, கண்கள் சொரூக இருக்கையில் சாய்ந்து அமர்ந்துவிட்டான் ஆதிக்..
ஆதிக்கு அருகே அமர்ந்திருந்த லீனாவிற்கு அவனது குடியும் அதைத் தொடர்ந்த மயக்கமும் புதிதாய் இருக்க, கண்களைச் சுழற்றி ராஜை தேடியவள், அவன் இல்லையென்றதும் அங்குள்ள பாதுகாவலரை அழைத்துத் தானே அவனது டிரைவருடன் வீட்டிற்குக் கிளம்பிவிட்டாள்..
லீனா ஆதிக்கை அழைத்துச் சென்ற சில நிமிடங்களில் பாதுகாவலர் ராஜை அழைத்து நடந்ததைச் சொல்ல, லீனாவிற்கு அழைத்தவன், “எங்க இருக்கீங்க லீனா..?” அதட்டலான கேள்வி தான்..
“நம்ம வீட்டுக்கு தான் ராஜ்..அதுவும் நம்ம காருல தான் போயிட்டு இருக்கோம்..” எனத் திமிராய் பதிலளித்தவள் மட்டும் இந்நேரம் எதிரில் நின்றிருந்தால் சப்பென ஒன்று வைத்திருப்பான்..
“லீனா உன் மரியாதைய நீயே கெடுத்துக்காத..போனை டிரைவர் கிட்ட கொடு..”
“ஹே ராஜ் டென்ஷன் ஆகாதீங்க..வெய்ட்..” இயல்பாய் உரைத்தவள் டிரைவரிடம் போனைக் கொடுக்க
“முருகா, அந்த மேடத்தை வீட்டுல இறக்கிவிட்டுட்டு நம்ம வீட்டுக்கு போ..” என ராஜ் சொன்னதும்
“சார்...ஆதிக் சார் காருல வாந்தி எடுத்துட்டாரு..நம்ம வீடு தான் பக்கத்துல இருக்கு..” டிரைவரின் பதிலுக்கு “சரி” என்றவன் அழைப்பைத் துண்டித்து அடுத்த அழைப்பை மதியழகிக்கு விடுத்தான்..
“அண்ணி..வீட்டுல எல்லாம் தூங்கியாச்சா..?” தூங்கிக் கொண்டிருந்தவளை எழுப்பி அவன் கேட்டதும்
“ராஜ்...எல்லோரும் மட்டும் இல்ல நான் கூட தூங்கிட்டு தான் இருக்கேன்..” என அரைத் தூக்கத்தில் சொன்னதும்
“சரி அண்ணி..கொஞ்சம் எந்திரிச்சு வாசலுக்கு போய் அண்ணாவை ரூமுக்கு கூட்டிட்டு போங்க..”
“ஏன் ராஜ்? உங்க அண்ணனுக்கு வழி மறந்து போச்சா..?” ஒருபக்கம் தூக்கத்தைத் தொடர்ந்து கொண்டே மறுபக்கம் பேசும் மதியை மானசீகமாக முறைத்தவன்
“ஆமா, வாசல்ல இருந்து ரூமுக்கு எப்படி வரணும்னு மறந்து போச்சாம்..நீங்க போய் கூட்டிட்டு வாங்க..” என்றவனிடம்
“ராஜ், ப்ளீஸ் நீயே அட்ரெஸ் கொடுத்து அனுப்பி வை..நான் கொஞ்சம் தூங்குறேன்..” என்றவள் அழைப்பைத் துண்டித்துவிட்டாள்..
அவளது செய்கையில் தனது தலையில் அடித்துக் கொண்டவன் மறுபடியும் அவளது எண்ணுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டேயிருக்க ஒருகட்டத்தில் அழைப்பை எடுத்து, “இப்போ என்ன ராஜ் நான் வாசலுக்கு போகணும் அவ்ளோ தானே..போறேன்..” அவனது பதிலை எதிர்பாராமல் அழைப்பைத் துண்டித்தவள், இரவு உடைக்கு மேலே ஒரு கோட்டை அணிந்து கொண்டு வெளி வாசலில் போடப்பட்ட இருக்கையில் சாய்ந்தவள் தூங்கத் துவங்கிய சில நொடிகளிலே ஆதிக்கின் கார் போர்ட்டிக்கோவில் நின்றது..
கார் நின்ற சத்தம் கேட்டு மதி வர, காரில் இருந்து ஆதிக்கை கை தாங்கலாய் பிடித்து நின்றாள் லீனா...அவள் பிடித்திருந்த விதமும் ஆதிக் சாய்ந்திருந்த விதத்தையும் பார்க்க இருவரும் கட்டிப் பிடித்து நிற்பது போல் இருக்க, வேகமாய் லீனாவின் அருகே சென்று ஆதிக்கை தன்பக்கம் இழுத்துக் கொண்டாள்..
மதியின் செய்கை ‘இது என் பொம்மை’ எனப் பிடித்திழுக்கும் குழந்தையின் செய்கையைப் போல் இருக்க, காரின் டிரைவருக்கு கூட லேசாக இதழ் வளைந்தது..
“நீங்க..?” ‘நீங்க யாரு?’ எனக் கேள்வியாய் கேட்க வந்தவள் மதியின் முறைப்பில் அக்கேள்வியை விடுத்து
“நீதான் மேடம பார்த்துக்க வந்த நர்ஸா..ஓகே..சார் லேசா ட்ரிங்க் பண்ணிருக்காரு வாமிட் வேற பண்ணிட்டாரு..சோ டேக் கேர்..” என்றவளுக்கு மதி உரிமையாய் ஆதிக்கை பிடித்து இழுத்தது புலப்படவில்லை..
அவளுக்குப் பதிலளிக்காத மதி, டிரைவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஆதிக்கை இழுத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்று மறைந்தாள்..
ஏதும் பேசாமல் அமைதியாய் சென்ற மதியை, ‘பாவம் ஊமை போல’ என நினைத்துக் கொண்ட லீனாவை வேறொரு காரில் முருகன் அழைத்துச் சென்றான்..
எப்படியோ படி வரை அழைத்து வந்துவிட்டவளால் அறைக்கு கூட்டிச் செல்ல தெம்பில்லாமல் போய்விட, ஆதிக்கை படியில் அமர்த்தி பின்னோடு கைக் கொடுத்து ஒவ்வொரு படியாய் தூக்கி வந்தவளுக்கு பத்து படிக்கு மேல் தூக்க முடியவில்லை..
“ஓஹ் மை கார்ட்…” இடுப்பில் கை வைத்து பெருமூச்சு விட்டு, அடுத்த ஒரு மணி நேரம் முயன்று அறைக்கு இழுத்துச் சென்றுவிட்டாள்..
அங்கிருந்த துண்டை தண்ணீரில் நனைத்தவள், அவனது முகம் முழுவதும் துடைத்துவிட்டு சட்டையைக் கழற்ற, உண்ட உணவு செரித்திருந்தது..
அவன் மீது வந்த நாற்றம் வேறு வயிற்றைப் பிரட்டிக் கொண்டு வர, கொஞ்சம் பினாயிலும் டெட்டாயிலும் கலந்த தண்ணீரை டவல் கொண்டு அவனது உடல் முழுவதும் துடைத்துவிட்டு, ரூம் ஸ்பிரே, பாடி ஸ்பிரே என அனைத்தையும் அடித்து முடித்து மூச்சு விட்டவளுக்கு இப்போது தான் சுவாசிக்கச் சுலபமாய் இருந்தது..
அவனது சட்டையை அழுக்கு கூடையில் போட்டுவிட்டு அவனுக்கு அருகே அமர்ந்தவளுக்குச் சன்னமாய் ஒலித்த அவனது அலைபேசியில் கவனம் போக, பேண்டினுள் கைவிட்டு அலைபேசியை எடுத்து நோண்டத் துவங்கியவளுக்கு கோபம் உச்ச டெஸிபியை தொட்டது..
மதி குளிர்வாள்…