“ம்ம்..தாங்க்ஸ் மதி..இப்போ ஐ அம் ஆல்ரைட்..” என்றவன் ப்ளாஸ்கில் இருந்து காபியை எடுத்து ஊற்ற,
“தாங்க்ஸா அதெல்லாம் நமக்குள்ள எதுக்கு..எனக்கு இப்படியானா நீங்க உதவ மாட்டிங்களா..?” என்றவளை கேள்வியாய் பார்த்தவனுக்கு மதியின் அதிரடி மிரட்டல்கள் புரிந்திருக்க வாய்ப்பில்லை… அவனது பார்வைக்கு பதிலளிக்காமல் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருக்க,
அவளது பார்வையை கண்டும் காணாதது போல் இருந்தவன், குளிக்கச் சென்றுவிட்டான்.. ஆதிக் விலகிய அடுத்த கணம் அறையின் வாயிலில் கேட்ட ராஜின் சத்தத்தில் வெளியே வந்த மதியழகியிடம்..
“அண்ணி..அண்ணா எங்க..?”
“குளிக்க போயிருக்காங்க ராஜ்…” என்றவள் ராஜ் வேறெதுவும் சொல்வானா என அவன் முகம் பார்த்து நிற்க, அவனோ “சரி அண்ணி நான் கீழ போறேன்..” என நகரப் போனவனை தடுத்த மதி
“ராஜ், உங்க அண்ணா எப்பவுமே குடிப்பாரா..?” எனத் தயக்கத்துடன் கேட்பவளுக்கு
“அவருக்கு தண்ணீ, தம் பழக்கம் கிடையாது அண்ணி..நேத்து தான் முதல் தடவை..”
“ம்ம்ம்...உங்க அண்ணன் இவ்ளோ குடிக்கிற அளவுக்கு நீங்க எதுக்கு விட்டிங்க ராஜ்..” என்றவளைக் குழப்பத்துடன் பார்த்தவன்,
“இல்லையே அண்ணி..அண்ணா ரெண்டு அவுன்ஸ் தான் குடிச்சாங்க அதுக்கப்புறம் குடிச்சது எல்லாமே கோக் தான்…”
“என்னது கோக்’ஆ..?” அவளது அதிர்ச்சியில் சிரித்தவன்
“ஏன் அண்ணி என்ன ஆச்சு..?”
“ரெண்டே ரெண்டு அவுன்ஸ்க்கு தான் அவ்ளோ அலப்பறையா..?” நம்பமாட்டாமல் கேட்பவளிடம்
“அண்ணாக்கு இது புது பழக்கம் இல்லையா அதான் ஒத்துக்கல போல..உடம்புக்கு ஏதும் ப்ராப்ளம் இல்லையே..?” என்றவனிடம் இல்லையென தலையசைத்தவள்..
“ராஜ்..எதுக்கு உங்க அண்ணா குடிச்சாங்க..?” மெதுவாய் அவள் கேட்க, தோலைக் குலுக்கி தெரியல எனச் செய்கை செய்தவனை அலைபேசி அழைத்துக் கொண்டது..
ராஜ் அங்கிருந்து நகர்ந்த பின் அவளுக்கு லீனாவின் நினைவு வர, சட்டையை மாட்டிக் கொண்டிருந்த ஆதிக்கின் முன்னால் வந்தவள்,
“ஆதிக்..உன்னை நான் எதுக்கு தொடக் கூடாது..?” என்க
இரவு முழுவதும் தன் மேல் உறங்கிவிட்டு, இப்போது இக்கேள்வி கேட்கும் அவளை முறைத்தவன், “எதுக்கு கேட்குற..?” என்றான்
“உனக்கு நான் தொட்டா மட்டும் பிடிக்காது அவா தொட்டா பிடிக்குமா..?”
“என்ன உளறுத..? போய் குளிச்சிட்டு சாப்பிடு..” என்றவன் சிதறி கிடந்த வாட்சையும், பர்ஸையும் எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்..
‘என்னது நான் உளருதேனா..?’ தன்னைத் தானே கேட்டுக் கொண்டு கட்டிலில் ஏறி அமர்ந்தவளை, வேணி அழைப்பதாய் வேலைக்கார பெண் வந்து அழைக்க
“வருகிறேன்..” என்றவள் உடைமாற்றிக் கொண்டு வேணியைக் காண விரைந்தாள்..
தொலைக்காட்சி பெட்டியின் முன் வேணி அமர்ந்திருக்க, ரேகா உட்கார்ந்து ஸ்வெட்டர் பின்னிக் கொண்டிருந்தாள்..
“குட் மார்னிங் ரேக்ஸ்..” என்றவள்
“குட் மார்னிங் அத்தை..” விடிந்து பல மணி நேரம் கழித்து காலை வணக்கம் சொல்லும் மருமகளை முறைத்தவர்,
“இது தான் எழுந்து வரும் நேரமா..?” அதிகாரமாய் கேட்டவரைப் புரியாமல் மதி பார்க்க..
“மதி, தினமும் ஆறு மணிக்கு முன்ன எந்திரிச்சு குளிச்சு ஆறு மணிக்கெல்லாம் விளக்கேத்தனும் புரிஞ்சுதா..? ஆதி ஆறு மணிக்கு ஜாக்கிங் எல்லாம் போயிட்டு எட்டு மணிக்கு வருவான்..அவனுக்கும் ராஜுக்கும் சத்துமாவு கஞ்சி கொடுக்கனும்..அப்புறம் சமையல் கார அம்மாகிட்ட மெனு சொல்லி அவங்க சரியா வேலை பார்க்காங்களான்னு பாரு..புரிஞ்சுதா..?” அக்மார்க் மாமியாராய் வேணி மிரட்ட
அமெரிக்காவில் சுமதி மற்றும் அன்னைச் செய்யும் வேலைகளைக் கவனித்தவளுக்கு தானும் இதேப் போல வேலை செய்ய வேண்டும் என எண்ணம் இருந்ததால், வேணி சொன்ன அனைத்திற்கும் தலையாட்டி வைக்க, அவளது பவ்யத்தில் ரேகாவே வாயடைத்து நின்றுவிட்டாள்..
“எல்லாம் ஓகே அத்தை..ஆனா அந்த மிட்நைட் ஆறு மணிக்கு மட்டும்…?” அவளின் இழுவையில் ரேகா சிரித்துவிட,
மதிக்கு கொஞ்சமும் சலிக்காத வேணி, “வாசல் தெளிச்சு கோலமும் போட்டிரு..” என்றவர் பேச்சு முடிந்தது என்பது போல டிவியின் ஆழ்ந்து விட்டார்..
உதட்டை பிதுக்கி பாவம் போல நின்ற மதியிடம், “இங்க எதுக்கு இப்போ மசமசன்னு நிக்கிற மதி..போய் சாப்பிடு..” என வேணி அதட்ட
ஒற்றைக் காலை தரையில் உதைத்து, “ஹி ஹி இந்தா போறேன் அத்தை போறேன்..” என்றவள் சமையல் அறைப் பக்கம் நகர்ந்ததும்
“அத்தை பாவம் அவங்கள எதுக்கு அதட்டுறீங்க..?” என ரேகா வேணியிடம் கேட்க
“ரேகா...அவளுக்கு நம்ம வீடு நம்ம குடும்பம்னு நினைப்பு வரணும்..அவளை அவள் இஷ்டத்துக்கு விட்டா வீடு லாட்ஜ் மாதிரி தான் அவளுக்கு இருக்கும்…போகப் போக புரியும்…” என்றவர் மதி என்னச் செய்கிறாள்? என்பதைப் பார்க்க அவளது பின்னோடு சென்றார்.
அலுவலகத்திற்கு வந்த ஆதிக், ராஜிடம் இன்றைய வேலைகளைக் கேட்டு தெரிந்து கொண்டு வேலையில் மூழ்க, சிறிது நேரத்தில் அறையின் கதவைத் தட்டிவிட்டு அறைக்குள் பிரவேசித்தாள் லீனா..
நிமிர்ந்து யாரெனப் பார்த்தவன், “சொல்லுங்க மிஸ்.லீனா..” வார்த்தை அவளிடமும் பார்வை கணினியிலுமாய் இருக்க
“சார்...ஹவ் ஆர் யூ நவ்..?”என்றவளை புரியாமல் ஏறிட்டான் ஆதிக்..
“பர்டன்..”
“இல்ல சார்..நேத்து நான் தான் உங்களை வீட்டுல விட்டேன்..” என்றதும் நிதானமாய் பார்த்தவனுக்கு காலையில் மதி கேட்ட கேள்வி நினைவுக்கு வர
“நீங்க எதுக்கு என்னை ட்ராப் பண்ணனும்..? நான் உங்க கிட்ட கேட்டனா..?” என்றான் கணினியில் ஏதோ டைப் செய்தபடி…
“இல்ல சார்..நீங்க அங்கேயே மயங்கிட்டிங்க அதான்..”
“யார் மயங்குனாலும் இப்படி தான் வீட்டுல ட்ராப் பண்ணுவீங்களா…?” கேள்வியைக் கேட்டவன் மொபைலின் மெசேஜ் டோனில் அதில் பார்வையைப் பதிக்க, லீனாவிடம் இருந்து வந்த மெசேஜையும் அப்போது தான் பார்த்தான்..
அவளிடம் வந்திருந்த மெசேஜ் வாசிக்கப்பட்டதில் இருந்து மதி படித்திருக்கிறாள் எனத் தெரிந்து கொண்டவன்..
“சொல்லுங்க மிஸ். லீனா..” என்க
“இல்ல சார் அதுவந்து…?”
“லிஸன் மிஸ். லீனா..உங்க வேலை எதுவோ இனி அதை மட்டும் பாருங்க..இந்தக் கரிசனம் உதவியெல்லாம் வேற யாருக்காச்சும் பண்ணுங்க..காட் இட்..” என்றவன் வாயிலை நோக்கி கை காண்பித்துபின், “ஒன் மினிட்..” என்றவனின் குரலில் நின்று திரும்பி பார்த்தவளிடம்
“மிஸ். லீனா..தேங்க்ஸ் ஃபார் யுவர் ஹெல்ப்..உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் வேணும்னா கண்டிப்பா ராஜ் மூலமா சொல்லுங்க..” என்னிடம் நேரடியாக வரும் வேலையை இனி வைத்து கொள்ளாதே என மறைமுகமாகச் சொன்னவன் வேலையில் மூழ்கிவிட்டான்..
ஆதிக்கின் அறைக்கு வேலை நின்று போன் பேசிக் கொண்டிருந்த ராஜிக்கு, லீனா ஆதிக்கின் அறையில் இருந்து வருவது தெரிய,
“என்ன அண்ணா..? இது என்ன புதுசா இருக்கு..?” என்ற கேள்விகளைக் கேட்டுக் கொண்டே ஆதிக்கின் அறைக்குள் நுழைந்தான் கோபத்தோடு..
ஆதி வருவான்…