அதில் கூசி சிலிர்த்தவள், “சாரி..” எனக் கண்கள் மூடிக் கேட்க
குனிந்து அவளது இமைக்கு முத்தமிட்டவன், “போதும் சாரி..கோபம் ஈகோ இருக்க வேண்டியது தான்..ஆனா நம்ம வாழ்க்கைய வீணாக்குற கோபம் ஈகோ தேவையில்ல மதி...சரி அதெல்லாம் விடு..டூ யூ லவ் மீ ஆர் நாட்..?” என்றவனின் கண்கள் சிரித்து இதழ் அவளது விரல்களை வருடிக் கொண்டிருந்தது..
அதில் கிளர்ந்தவள், தலையசைக்க, “வாயைத் திறந்து சொல்லு டி..” என்றவனைவிட்டு எழுந்தவள், அவன் முன் மண்டியிட்டு
“ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் ஆதிக்...எங்க அப்பா அம்மாவிட நீ என்னை நல்லா சமாளிப்பே அப்புறம் என்னைப் பார்த்துக்குவன்னு நம்பிக்கையிருக்கு...என் அம்மா அப்பா என்னை வச்சிக்க முடியாததால உன்கிட்ட கொடுக்கல உன்னால மட்டும் தான் சமாளிக்க முடியும்னு கொடுத்திருக்காங்க..நீ சொன்ன மாதிரி என் ஈகோ எல்லாம் விட்டு சொல்றேன் ஆதிக், ஐ அம் இன் லவ் வித் யூ மேட்லி..” என்றவள் வியப்பாய் நோக்கும் அவனது பார்வையைப் பொருட்படுத்தாமல் கன்னம் தீண்டி இதழில் முத்தம் பதித்திருந்தாள்…
அவளது மெல்லிய இதழொற்றலைத் தடுத்தவன் வன்மையாய் மாற்றிக் கொண்டேயிருக்க, ஒருக் கட்டத்தில் மூச்சு வாங்கப் பிரிந்த மதியழகியை தூக்கியவன் கட்டிலை நோக்கித் தனது நடையை எட்டிப் போட்டிருந்தான்..
அவனது கழுத்தில் கரம் கோர்த்து மாலையிட்டவள், “ஆதிக் ட்ரெஸ் ஈரமா இருக்கு..” என்றவளின் ஹஸ்கி வாய்சில் நடையை நிறுத்தியவன் கள்ளச் சிரிப்பொன்றை உதிர்த்து
“ஆமா ஈரமா இருக்குல்ல…?” என்றக் கேள்வியுடன் விடிவிளக்கைப் போட்டு, மற்ற விளக்குகளை அணைக்க அவனது கள்ளத்தனம் அறியாதவளும்
“ஆமா ஆதிக்…” என அவனுக்கு ஒத்து ஊத
அறை பாதி இருளில் மங்கிய மறு நொடியே அவளது ஆடைக் கலைந்து நெருக்கமாகியிருந்தான் ஆதிக் வர்மன்..
அவனது செய்கையின் குலைந்தவள், வாய்மொழியாய் அவனைத் தடுக்க முயல, அவளது இதழ் சுவைத்து மறுப்புகளை பொய்யாக்கியவனைக் கட்டிலில் தள்ளியவள், அங்கிருந்த போர்வைக்குள் புகுந்திருந்தாள்..
அவளுடன் அப்போர்வைக்குள் முன்னேறியவன் காமன் கோட்டையில் ஒவ்வொரு பாடமாய் அவளுக்கு சொல்லிக் கொடுக்க முயல அவனுடன் இணைந்து கற்றவளின் மென்மை கொஞ்சமும் நோகாமல் கையாண்டவனுக்கு இன்னும் இன்னும் அவள் வேண்டுமென்ற தேவை மட்டும் நீண்டு கொண்டேயிருந்தது..
அவன் அயர்ந்து விலகும் நேரம் அவள் பாடத்தை தொடங்கி வைக்க, அவள் விலகும் சமயம் அவன் அவளுள் மூழ்கி அவளையும் மூழ்க வைத்திருந்தான்…
ஒவ்வொரு தொடுகைகளுக்கும் அவளது மறுப்புகளுக்கும் உச்சங்களுக்கும் இடையில் அழகியென கொஞ்சி கெஞ்சி தடைகளை உடைத்தெறிந்தவனின் முத்தங்கள் மட்டும் நாபியின் அருகேயிருந்த மச்சத்துக்குச் சொந்தமாகியது..
தொட்டபின் விட்டுவிட முடியாத ஆழி சுழலில் சிக்கிய இருவருக்குமே மீளவும் தெரியாமல், மீண்டு வரவும் பிடிக்காமல் தான் போனது...இருவருமே ஒரு கட்டத்தில் அயர்ந்து விலக, அவனது கைச்சிறைக்குள் அடைக்கலம் புகுந்தவளுக்கு நாணமென்னும் அணிகலன் அழகாய் அவளிடம் தஞ்சமடைந்திருந்தது..
அவளது தலைமுடிக் கோதி நெற்றியில் இதழ் பதித்து, “அழகி..” எனக் கிறக்கமாய் அழைக்க, அவனது மொழியின் வழியே தேவையறிந்தவள் அவனது மார்போடு புதைத்திருந்த முகத்தை அசைக்க அவளது செய்கையில் கிளந்தவன் அடுத்தப் பாடத்தை தொடங்கியிருந்தான்…
எப்போதும் அதிகாலையில் கதவைத் தட்டும் வேணியின் குரல் எங்கோ ஒரு மூலையில் கேட்க, அதில் விழித்த ஆதிக் மதியின் தூக்கத்தை தொடரவிட்டு, கதவைத் திறக்க அங்கே நின்ற வேணியின் முகம் பார்க்க அவனுக்கு வெட்கமாய் இருந்தது..
பெண்களின் வெட்கம் அழகு என்றால், ஆண்கள் வெட்கப்படும் தருணங்கள் பேரழகு தானே..மகனது முகத்தில் எரிந்த பல்பைக் கண்டே அவனது மனம் புரிந்து கொண்டவர், வேறெதுவும் கேள்வி கேளாமல்,
“நீ போய் தூங்கு டா..” என்று மட்டும் சொல்லிச் சென்றுவிட்டார்…
அன்னைப் போனபின் ராஜ் அலைபேசியில் அழைப்புவிடுக்க, அப்போது மணியைப் பார்த்தவன், ராஜின் அழைப்பைத் துண்டித்து தலை கோதி அன்னையின் அறைக்குச் சென்றான்..
தாயிடமும் தந்தையிடமும் முறையாய் மதியை ஊட்டி அழைத்துச் செல்வதைச் சொன்னவன், அவர்களிடம் அனுமதி கேட்க, தோள் மேல் வளர்ந்து தொழிலதிபன் ஆன பின்பும் தங்களிடம் அனுமதி கேட்கும் பிள்ளையின் குணத்தில் நிறைந்தவர்கள் சந்தோஷமாய் சம்மதித்தனர்..
அவர்களைத் தொடர்ந்த ரேகாவின் கிண்டல்களைக் காதில் வாங்காதது போல் அவ்விடம்விட்டு அகன்று மதியை எழுப்பினான்…
“மதி..மதி..” என அழைத்தவனின் அழைப்பில் அவனது முகம் பார்க்க வெட்கியவள் தூங்குவது போல நடிக்க,
அவளது நடிப்பை அறிந்தவன்,”ஹே குடிகாரி எந்திரி டி..” என்றான் அவளுக்கு முன் அமர்ந்து..
அவனது அழைப்பில் சண்டைக் கோழியாய் சிலிர்த்தவள், “ஆதிக்...வேணாம்..” என ஒற்றைவிரல் நீட்டி எச்சரிக்க, அவளது விரல் மடக்கியவன்
“நைட்லாம் மாமா மாமான்னு உருகிட்டு இப்போ ஆதிக்கா..” சினம் போலும் கேட்டவனின் வார்த்தையில் வெட்கம் கொண்டவள்..
“ச்சீஈ...வாயை மூடு..” என்க
“என்ன டி ச்சீ..ஒழுங்கா சர்ட்டகொடு..” என்றவன் அவள் அணிந்திருந்த அவனது சட்டையின் காலரைத் தன்னோக்கி பிடித்திழுத்தான்..
அவனது செய்கையைத் தடுத்தவள் கொஞ்சம் பின் சென்று, “எதுக்கு எழுப்புனீங்க மாமா..?” என்று கேட்டு வைக்க
“யம்மா...தாயே நீ ஆதிக்னே கூப்பிடு..மாமா கூப்பிட்டு வந்த வேலையை மறக்க வைக்காத..” என்றவன் அவளைக் குளித்து கிளம்ப வைத்து கீழே இறங்கும் போது நண்பகலைத் தொட்டது..
தன்னைப் பார்த்து சிரிக்கும் வேணியையும் ரேகாவையும் கண்டு வெட்கம் கொண்டவள், ஆதியினோடே ஒன்றி நடக்க,
“ஆதிக் நீ போய் காரை ரிவர்ஸ் எடு..மதி வருவா..” என்ற வேணி, மதியை பிடித்து வைத்துக் கொண்டார்..
ஆதி அவ்விடம் விட்டு அகன்றதும், மதியின் கன்னம் தடவி திருஷ்டி கழித்தவர், அவளது அன்னைக்கு அழைப்பு விடுத்துக் கொடுக்க, வேணியின் மனம் கண்டு சிலாகித்துப் போனாள் மதியழகி..
குழலியிடம் தாங்கள் தேனிலவு போவதைச் சொல்லி வைக்க, குழலிக்கும் செழியனுக்கும் மனம் நிறைந்தது..
ரேகாவின் கேலிகளில் கன்னம் சிவந்தவள்..தூரமாய் நின்ற ராஜை சத்தமாய் அழைத்து, “ராஜ்..நீ ரேகாவை ஒழுங்காவே கவனிக்க மாட்டியாமே அப்படியா..” எனக் கேட்க, அதில் ரேகாவின் அருகே அவன் வந்து அவளிடம் என்னவென விசாரித்தான்…
ரேகா வாயை மூடியதும், சிரித்த முகமாய் நின்ற வேணியிடம் திரும்பியவள், “நல்லா சாப்பிட்டு ரெடியா இருங்க அத்தை...உங்களுக்கு அடுத்தடுத்த வேலையிருக்கு..” எனக் கண்ணைச் சிமிட்டி சொல்ல, அதில் திருப்தியானவர்
“உன்னையே சமாளிச்சிட்டோம் உன் பிள்ளைய சமாளிக்க மாட்டோமா..?” என்று விழி மலர்த்தி கேட்க
“என்னை மாதிரி ஒரு பிள்ளைனா சமாளிக்கலாம்..ஒரே நேரத்துல என்னை மாதிரி ரெண்டு புள்ள வந்துட்டா என்ன பண்ணுவீங்க..?”எனக் குறும்பாய் கேட்டவள் ஆதிக்கை நோக்கி வேகமெடுக்க, அவளது ஓட்டத்தில் சிரித்தனர் வேணியும் தர்மரும்…
காரில் அவளுக்காய் காத்திருந்த ஆதிக்கு அவள் ஒவ்வொரு முறை ஓடிவரும் போதும், தவறாமல் அவர்களது முதல் நாள் சந்திப்பு நினைவுக்கு வந்து மென்னகையை அவனது இதழில் இருத்திச் சென்றது..
குறுநகையும் குறுகுறு பார்வையுமாய் தன்னைப் பார்க்கும் ஆதியைக் கண்ணடித்து கலைத்தவள், “மாமா..ஐ வான்னா கிஸ் யூ..” என்று கேட்டு அவன் முகம் பார்க்க,
சம்சாரம் அது மின்சாரம் என அறிந்தவனின் கரத்தில் கார் வேகமெடுத்தது..