~6~
கணவனும் மகளுமாய் சண்டைப் போட்டுக் கொண்டு தன்னை முறைத்துப் போகிறார்களே என்ற கடுப்பில் வாசலைப் பார்த்து முணுமுணுக்கும் போதே போன வேகத்தில் திரும்பி வந்த செழியன்..
“என்னடி முணுமுணுக்கிற..?” என்றார்.
“ம்க்கும்...முணுமுணுத்துட்டாலும்..ஆமா ரெண்டு பேரும் என்ன பேசுனீங்க..?” என்றாள் தனது காரியத்தில் கண்ணாய்.
“அது உனக்கு எதுக்கு..? இன்னும் மூணு நாளுல நாம இந்தியா போறோம்..டிரெஸ் எல்லாம் எடுத்து பேக் பண்ணி வை..” என்றவரை விழி விரியப் பார்த்தவருக்கு உப்புமா தொண்டையில் சிக்கிக் கொள்ள, தலையைத் தட்டி தண்ணீர் புகட்டும் கணவனை நம்பாத பார்வை பார்த்தவர்.
“உண்மையாவாங்க..? எப்படி மதி இதுக்கு சரி சொன்னா..?” பதினெட்டு வருடமாய் சம்பளத்தின் பின்னே ஓடியவர், இங்கிருந்து இந்தியா பக்கமே வரமாட்டேன் எனச் சொல்லிய மகள் எல்லாம் திடீரென்று மாறுவதை நம்புவது சிரமம் தானே,
“உண்மையா தான்..மதி நம்ம கூட வருவான்னு நான் சொன்னேனா..நாம் ரெண்டு பேரும் தான் போறோம்..அவ தனியா வருவா..”
“மதிய தனியா விட்டுட்டு நாம எப்படிங்க போக முடியும்..முதல்ல பொண்ணு இல்லாம யாருக்கு மாப்பிள்ளை பார்க்க போறீங்க..” குழலியின் கத்தலுக்கு லேசாகத் தலையசைத்த செழியன்.
“நாம போய் மாப்பிள்ளை பார்க்கலாம்..மதி இந்தியா வருவா..”
“இது விளையாட்டு காரியம்னு நினைச்சிங்களா..?உங்க பொண்ண பத்தி தெரிந்தும் எதுக்கு இந்த விசப் பரீட்சை..இவள நம்பி நாம மாப்பிள்ளை பார்க்கிறதும் மண் குதிரைய நம்பி ஆத்துல இறங்குறதும் ஒண்ணு தான்..” மனைவியின் சொல்வதும் உண்மை தானே என மனம் முரண்டினாலும்.
“அவள பத்தி எனக்குத் தெரியும்..நீ உன் வாய மூடிக்கிட்டு எல்லாத்தையும் எடுத்து வை..அப்படியே நம்ம வீட்டு வேலை செய்யுற அந்த மேரியை மதி கூட வீட்டுலயே தங்கச் சொல்லு..” இது தான் முடிவு என்பதைப் போல் பேசிய செழியன், தனது கை கடிகாரத்தில் மணியைப் பார்த்தவர் அலுவலகத்திற்கு விரைந்துவிட்டார்.
கணவன் அலுவலகம் கிளம்பி போனது கூடத் தெரியாமல் அமர்ந்தவருக்கு, “மகள் என்ன செய்யப் போகிறாளோ..?” என்ற பயம் பிடித்துக் கொண்டது.
காரில் சென்று கொண்டிருந்த மதிக்கும், தந்தையுடன் நடந்த விவாதமே கண் முன்னே வந்து நின்றது..
குழலியிடம் எதிர்த்துப் பேசும் மதியை கண்டனத்துடன் பார்த்தவர், “லேட் நைட் வீடுக்கு வந்ததும் இல்லாம குடிச்சிட்டு வேற வருவியா நீ..” என்றார்..தனது கேள்விக்கு அவள் கூனிக் குறுகி போய் நிற்பாள் என்றெல்லாம் நினைக்க வில்லை என்றாலும் அவளது பதிலில் சோர்ந்து தான் போனார்..
“டேட், நான் ஒண்ணும் மொடக் குடிகாரி இல்ல, பட் பார்ட்டியில நான் மட்டும் குடிக்காம இருந்தா எல்லோரும் என்ன நினைப்பாங்க..அன்ட் ஆல்சோ இங்க இருக்கிற கல்ச்சர்ல இதுலாம் சாதாரணம்..” வளர்ந்து ஒரு நிலையில் நிற்பவளுக்கு அறிவுரைக் கூற மனம் ஒப்பாமல், அவளருகே இருந்து சேரில் அமர்ந்தவர்..
“உங்க அம்மாவும் இத்தனை வருஷமா இங்க இருந்தும் வராத பழக்கம் உனக்கு மட்டும் எப்படி மதி..?”
“ஐ டோண்ட் நோ..பட் இதுலாம் இங்க சகஜம்..இதயே சும்மா பேசி பெரிய இஸ்யூ ஆக்காதீங்க டாட்...அன்ட் ஆல்சோ உங்க கிட்ட இருந்து இப்படி ஒரு பிகேவியர எதிர் பார்க்கல..” சூடாய் பதில் கொடுக்கும் மகளை அடித்து விடலாமா எனப் பரபரத்த கைகளை அடக்கியவர்..
“ஸ்டாப் இட் நான்சென்ஸ்..உனக்கு மேரேஜ்க்கு அலையன்ஸ் பார்க்க அடுத்த வாரம் நாம இந்தியா போறோம் கெட் ரெடி..” மகள் முன்னே அதிர்ந்து பேசியிராதவர் இன்று கத்திய கத்தலில் ஒரு நிமிடம் ஸ்தம்பித்த மதி
“டேட்..எனக்கு மேரேஜ்ல இன்ட்ரெஸ்ட் இல்ல..அப்புறம் இந்த ஸ்டூபிட் கமிட்மென்ட்ஸ்லாம் எனக்கு செட் ஆகாது டாடி...இன்னும் எனக்கு யார் மேலையும் லவ் வரல, அப்படியே லவ் வந்தாலும் ஃபர்ஸ் லிவ்-இன்-டுகெதர் அதுல பிடிச்சிருந்தா தான் மேரேஜ்..” என்றவளை இப்போது கன்னம் கன்னமாய் அறையத் தான் நினைத்தார் செழியன், ஆனாலும் மகளின் குணம் தெரிந்து நிதானத்தை விடாமல்,
“மதி, திஸ் இஸ் லாஸ்ட்..என்னோட முடிவுல எந்த மாற்றமும் இல்லை..லீவ் எடுத்துட்டு இந்தியா வரும் வழிய பாரு..இல்லை வர வேண்டாம்னு நினைச்சா..? உனக்கு என்னைப் பத்தி தெரியும்..இனி உன்னோட இஷ்டம்..” கறாராய் அவர் பேசி முடிக்கும் முன் கோபமாய் வெளியேறியிருந்தாள் மதி.
சற்று முன் நடந்த அனைத்தையும் நினைத்த மதியின் விழிகளில் கோபம் கொப்பளிக்க, தந்தையிடம் காட்ட முடியாத கோபத்தை தனது வண்டியில் காட்டியவளின் நிதானமில்லா வேகம் என்றும் ஆபத்து தானே.
இங்கே குழலியின் நிலையோ அதைவிட மோசமாகவிருந்தது, கணவன் எடுத்தது நல்ல முடிவு எனத் தெரிந்தாலும், மகளைத் தனியாக விட்டுச் செல்ல மனம் இடம் கொடுக்கவில்லை..தான் இறங்கிப் போய் மகளிடம் கெஞ்சி மிஞ்சிக் கேட்டால் கூட மகள் வர மாட்டாள் என்பது ஸ்திரம்.
நினைவுகளைத் தூர ஒதுக்கியவருக்கு நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற நிலையான எண்ணத்துடன் தங்களது உடைமைகளை எடுத்து அடுக்கத் தொடங்கினார்.
இன்னும் கிளம்புவதற்கு ஒரு வாரமே மீதமிருக்க, எடுத்த வைத்தவற்றைச் சரி பார்த்தவருக்கு மதியின் பாரா முகம் வருத்தத்தை வாரி இறைத்தது.
தந்தையுடன் நடந்த சண்டைக்கு பின் வீட்டில் அமைதியைத் தனது ஆயுதமாய் கையில் எடுத்தாள் மதி. தான் மது அருந்ததியது தவறு என மனம் உரைத்தாலும், முழுக்க முழுக்க ஈகோவை சுமந்து நிற்கும் புத்தி அதை ஒத்துக் கொள்ள மறுத்தது.
‘கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கப் போறாங்களாமே பார்க்கட்டும் பார்க்கட்டும்...அவன் எப்படி என் கூட இருக்காம்னு பார்த்திடுதேன்..மேரேஜ் முடிந்த அடுத்த நாளே டிவோர்ஸ்க்கு அப்ளை பண்ண சைன் வாங்கிடனும்” இதை மனதில் ஆயிரம் முறையாய் நினைத்து அல்ல பதிய வைத்துக் கொண்டவளுக்கு இது நடக்கும் வாய்ப்பும் கிட்டவே கிட்டாது என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை..
செழியனுக்கு அன்றே மகள் மீதிருந்த கோபம் வடிந்துவிட, வருத்தம் மட்டுமே மிச்சமிருந்தது..இப்போது நாம் இறங்கிப் போனால் இவள் மேலேறி விடுவாள் என்பதை அறிந்தவர், கோபம் என்னும் முகமூடியை அணிந்து கொண்டார்.
அப்படி இப்படியென்று இந்தியா திரும்பும் நாளும் வந்துவிட்டது, தங்களது பூர்வீகம் மதுரையில் யாருமில்லாததால்,காஞ்சிபுரத்திலிருக்கும் செழியனின் சித்தப்பா வீட்டிற்கு செல்வது என முடிவு செய்யப்பட்டு அவரிடமே மாப்பிள்ளை பார்க்கும் வேலையையும் ஓப்படைவிட்டார் செழியன்.
இன்னும் ஃப்ளைட் ஏற 2 மணி நேரமே மீதமிருக்க, மூன்று தினங்களாய் நடந்த பிரச்சனைகளின் தாக்கத்தில் தன்னைக் கண்டு கொள்ளாது தனது பேச்சை மீறி இந்தியா செல்லும் பெற்றவர்களைத் தடுக்கும் வழியறியாது முகத்தில் எந்தவொரு உணர்ச்சியையும் காட்டாது இறுகிப் போயிருந்தாள் மதி. இவளுக்குத் தான் ஒன்றும் சளைத்தவர் அல்ல என்பதைப் போல் அமர்ந்திருந்தார் செழியன், ஆனால் அன்னையால் அப்படி இருக்க இயலாதே, அழுதே ஓய்ந்துவிட்டவரை விமான நிலையத்தில் அனைவரும் பார்த்து சென்றனர்.
அவரின் அழுகை சிறிதும் தன்னைப் பாதிக்கவில்லை என்பதைப் போல் இறுகிப்போய் மொபைலை நோண்டிக்கொண்டிருந்தாள் மதி..விமானத்திற்கான அழைப்பும் வந்துவிட, செழியன் தான் குழலியைத் தேற்றி அழைத்துச் சென்றாரே தவிர, மதி அப்போதும் வாயைத் திறக்கவில்லை...செழியனே ஒரு நிமிடம் மகளின் பிடிவாதம் மற்றும் அழுத்தத்தில் சோர்வடைந்து தான் போனார்.
‘அவசரப் படுகிறோமோ..?’ என மனம் எழுப்பிய கேள்விக்கு
‘வருவது வரட்டும்..” எனப் புத்தி பதிலளிக்க, கல்யாணம் வாழ்க்கை என்பது வியாபாரம் அல்ல என்பதை அச்சமயம் மறந்து தான் போனார் அத்தொழிலதிபன்,
மகளைப் பிரிந்து தம்பதி சகிதமாய் விமான நிலையத்தினுள் பிரவேசிக்கும் செழியனின் விழிகள் கலங்கியிருக்க, வீம்பாய் நின்ற மதியின் விழிகளிலும் நீர் நிறைந்திருந்தது.
******************