• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Ennai Ko(Ve)llum Vennilavei - 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Pavi sen

புதிய முகம்
Joined
Mar 16, 2018
Messages
15
Reaction score
14
Location
Coimbatore
Story...spr but epi update Pana rmba late panringa sis..konjo sekro podunga..eagerly waiting for next episode
 




Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,073
Reaction score
7,772
Location
Tirunelveli
Story...spr but epi update Pana rmba late panringa sis..konjo sekro podunga..eagerly waiting for next episode
konjam personnel work jasthi ahitu sisy..inaiku nyt ud podurein..ini daily update irukum...thanks and sorry
 




Shalini01

இணை அமைச்சர்
Joined
Oct 8, 2018
Messages
668
Reaction score
271
Location
Australia
****

“டாக் சார்..என்னை விட்டிருங்க..ப்ளீஸ்..” தனது முதுகை இறுக்கமாய் பற்றிக் கொண்டு சத்தமிட்டவளையும் நாயையும் மாறி மாறி பார்த்த அந்நெடியவன்.

அவளின் கைகளை விலக்க நினைக்க அதுவோ உடும்பு பிடியாய் இருந்தது.

ஒரு ஆணின் மீது ஏறி அமர்ந்திருக்கிறோம் என்ற உணர்வு அவளுக்குச் சுத்தமாய் இல்லை, அவளது உலகில் நாயும் அவளுமே மிஞ்சிவிடச் சுற்றம் மறந்து..

“டாக் சார்..நான் குளிக்கவே மாட்டேன் சோ என்னை மட்டும் நீங்க விட்டிடுங்க ப்ளீஸ்..” இறுக்கமாய் கண்ணை மூடிக் கொண்டு

“நான் வேணும்னா உங்க கிட்ட என்கிட்ட இருக்கிற மணி, ஸ்நாக்ஸ் எல்லத்தையும்… நோ… நோ... மணி மட்டும் தரேன்..ப்ளீஸ் சார் என்னை மன்னிச்சு விட்டிருங்க..”

அவளின் பேச்சு வார்த்தையில் நாய் இப்போது சன்னமாய் குழைக்கத் துவங்க

“ஓகே ஓகே..டென்ஷன் ஆகாதீங்க..ஸ்நாக்ஸும் தரேன்..ப்ளீஸ் என்னை மட்டும் விட்டிருங்க..” என்றாள் பாவமாய்..

அவளின் தோளைத் தட்டி அழைத்தால் கூட நிமிராமல் புலம்ப, நாயைப் பார்த்து பயத்தில் இருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டவன்..

அவளைத் தன்னிடம் இருந்து கொஞ்சமாய் பிரித்து, நாயை நோக்கி சொடக்கிட அதுவும் வாலை ஆட்டிக் கொண்டு வந்த வழியே சென்று மறைந்தது.

நாய் ஓடியப்பின்னும் மதி விடாமல், “டாக் சார் ப்ளீஸ் சார்..” எனக் கெஞ்சிக் கொண்டேயிருக்க, இது கதைக்கு ஆகாது என்று தெரிந்தவன்.

“ஹலோ..” இடுப்பைக் கட்டியிருக்கும் அவளது கரங்களை விடுவித்தவாறே குரல் கொடுத்தான்.

“டாக் போயிடுச்சு நீ என்னைப் போக விடுறீயா..” சுள்ளென விழும் அவனது பேச்சில் அரைக் கண் திறந்து அவனின் முகம் பார்த்தவள், இப்போது கண்களை அகலமாய் திறந்து அவனது முகம் காண, அவனும் அவளைத் தான் விடாமல் பார்த்து கொண்டிருந்தான்.

அவனிடம் இருந்து முகத்தை மட்டுமே விலக்கிப் பார்த்தவளின் கரங்கள் இன்னும் அவனை அணைவாய் பிடித்திருக்க, “என்ன..?” என்றான் ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கி, அவனது செய்கையில் நடப்புக்கு வந்த மதி..

சட்டென்று அவனிடம் பிரிந்து, “ஹலோ மிஸ்டர் இப்படி தான் பொண்ணுங்கள பிடிச்சி வச்சிக்கிறதா..?” அவளின் வார்த்தையில் மட்டும் தான் கடினம் இருந்தது, முகமோ அதற்கு நேரெதிராய் செம்மையேறி இருந்தது.

“என்னது நான் உன்னை பிடிச்சி வச்சிருந்தேனா..?” மற்றவன் உண்மையான கோபத்துடன் கேட்க

“ஆமா நீ தான் என்னைப் பிடிச்சி வச்சிருந்த..உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்..இந்த மதியலகி கிட்டயே வா..” ஆள்காட்டி விரலை தன் முன் ஆட்டி ஆட்டி பேசுபவளின் விரலை பிடித்தவன், (பயபுள்ளைக்கு ‘ழ’ கூடஒழுங்கா வரல இதுலாம் பேசுற பேச்ச பாருங்க மக்களே..)

“கை நீட்டி பேசாத..” உறுமலாய் அவன் சொல்லும் போதே

“ஹாங்..நான் அப்படி தான் பேசுவேன்..என்ன பண்ணுவ..?” வலது கையை அவன் பிடித்திருக்க, இப்போது இடது கையில் இருக்கும் விரலை அவனது முகத்துக்கு நேர் நீட்டினாள்..

சொல்ல சொல்ல கேட்காமல் செய்யும் மதியின் இரு கரங்களை வளைத்து பின்னோக்கிப் பிடித்தவன்

“எங்க இப்போ கை நீட்டி பேசு..” என்றான் நக்கலாய்

இறுக்கமாய் அவன் பிடித்ததில் வலியெடுக்க, “விடுடா ஸ்டுபீட்..எருமை..இந்த மதியலகி கிட்டயே உன் ரெளடித் தனத்தைக் காட்டுறீயா..” என்றவளின் முகத்தை இப்போது பின்னிருந்து எக்கிப் பார்த்து,

“உன் பெயரை ஒழுங்கா சொல்லு கையை விடுறேன்..” என்றவனை முறைத்தவள்

“ஆர் யூ மேட்..என் நேம் எனக்குத் தெரியாதா..இடியட்..”

“இவ்வளவு இறுக்கமா கையை வளைச்சு பிடிச்சும் உனக்கு வலிக்கலையா..?” அழுவாள் என அவன் நினைக்க அவளோ வாய் குறையாமல் பேசிக் கொண்டிருந்தாள்

“வலிக்கும்னு உனக்குத் தெரிஞ்சும் எதுக்கு இப்படி பிடிச்சிருக்க, விடு..” அவளின் பதிலில் சின்னதாய் ஒரு சிரிப்பு அவனின் இதழில் தவழ்ந்தாலும், பிடியின் இறுக்கத்தை குறைக்காமல்

“இவ்வளவு நேரம் நீ பேசுனதுக்கு சாரி சொல்லு நான் உன்னை மன்னிச்சு விடுறேன்..”

‘சாரி’ சொல்லவேண்டும் என்பதில் அவளது முகம் கோபத்தை தத்தெடுக்க

“முடியாது போடா..நான் எதுக்கு உனக்கு சாரி சொல்லனும்..” என்றாள் திமிராய்

வந்ததில் இருந்து மரியாதையில்லாமல் பேசுவதும் இல்லாமல், இப்போது டா வேறு போடுகிறாளே என்பதில் கோபம் தலைக்கேற

“ஹே..ஒழுங்கா சாரி சொல்லுறியா இல்ல கையை உடைக்கவா..?” அவள் பெண் என்பதையும் மறந்து அவன் சண்டைக்கு நின்றான்..

“நீ கையை உடைக்கும் வரைக்கும் சும்மா இருப்பேன்னு நினைச்சியா..உன்னை..” அவனிடமிருந்து திமிறி வெளிவர நினைத்து, கையை விடாமல் அசைக்க, அவனது பொறுமை காற்றில் பறந்தது.

“பொம்பளையாச்சேன்னு அமைதியா இருந்தா…” என்றவனின் பேச்சில் குறுக்கே வந்தவள்

“இல்லனா என்ன டா பண்ணிருப்ப..” துள்ளனான அவளின் பேச்சில் பிடித்திருந்த கையைவிட்டு, அடிக்க கை ஓங்க இழுத்துத் திருப்பியதில் கால் தவறி அவன் மீதே சரிந்து விழுந்தாள் மதியழகி..

ஆதியும் மதியும் வருவார்கள்…
Superb
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top