ஹாய்... ஹ்லோ... மக்களே..!!!
எல்லாரும் எப்படி இருக்கீங்க... என்னை வேரோடு சாய்த்தவளே..!! எபி 23 போடுறேன், படித்து உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க... இந்த கதைக்கு ஆதி முதல் அந்தம் வரை படித்து கமெண்ட்ஸ் சொன்ன உங்க எல்லாருக்கும் நன்றி..!! நன்றி ..!!! அடுத்த எபியோட கதை முடிந்து விடும்... படிக்காதவங்க சீக்கிரம் படிக்க ஆரம்பிச்சுகோங்க...!! முடிந்தால் நாளைக்கே எபி தாரேன்..( நம்புங்கப்பா.. இடையில் ரொம்ப உடம்பு சரியில்ல சோ விட்டுட்டேன்.. இப்போ ஆல் ரைட்.. சரி ஆகிட்டேன்.. சோ முன்னாடி மாதிரி ஓடி வந்துவிடுவேன்.. .) நான் எதிர் பார்த்ததை விட உங்களின் ஆதரவு மிகவும் பெரியது... ரொம்ப நன்றி மக்கா .....
வேர் – 23
விடியல் அற்புத அழகுடன் ரம்மியமாய் பூமியை ஆக்ரமிக்க ஆரம்பித்திருந்தது...
நிலா அழகி கொஞ்சம் கொஞ்சமாக மறைய துவங்கியிருந்த அந்த அதிகாலைப் பொழுதில் செவ்வானத்தில் பறவைகள் கூட்டை விட்டு இரையை தேடி வட்டம் வட்டமாக செல்ல,
இளம் காலை பனி வெள்ளி துளிகளாக தோட்டத்து செடிகளை மையம் கொண்டிருக்க, உறக்கம் கலைந்த இதழியோ அவளின் குட்டிமாமாவை மையம் கொண்டிருந்தாள்...
சக்தி அவளிடம் கூறிய காதலை அவளால் நம்பவே முடியவில்லை... நேற்றே இரு முறை கிள்ளி பார்த்து விட்டாள்... கிள்ளியதில் வந்த வலியில் தான் உண்மை என்று நம்பினாள்..
இப்பொழுதும் அவனை அப்படியே பார்த்திருந்தாள், மெதுவாக உறக்கம் கலைந்த சக்தி மெதுவாக அசைய, இத்தனை நேரம் அவனையே பார்திருந்தவள், அவன் எழவும் மீண்டும் படுத்துக் கொண்டாள்...
“ ஏய் கள்ளி இத்தனை நேரம் கண்ணெடுக்காம பார்த்திட்டு, நான் எழுந்ததும் படுத்துட்டா. எனக்கு தெரியாதா.? அதென்னடி எப்பவும் நான் பார்க்காத நேரம் அப்படியே அசையாம பார்க்க... பார்த்ததும் எதையும் செய்யாத மாதிரியே இருக்கியே எப்படி..? “ என கேட்டுக் கொண்டே அவளை அள்ளி தன் நெஞ்சில் போட்டுக் கொண்டான்..
“ விடுங்க குட்டிமாமா “ என அவனிடம் இருந்து விடுபட முயற்சி செய்ய,
“ நான் கேட்டதுக்கு பதில் சொல்லு லிப்ஸ் “ என கூறி மெதுவாக அவளின் இதழை வருட,
அவனின் கையை தட்டி விட்டவள் “ விடுங்க “ என மீண்டும் போராட,
“ நீ சொல்லு விடுறேன் “ என அவளை மீண்டும் அணைத்துக் கொண்டான்,
“ உன்னை தான் சைட் அடிச்சேன்.. என்று எப்படி சொல்வதாம்..? “ அவளின் மனது மெதுவாக புலம்பிக் கொண்டது,
அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தவன் “ என்ன சைட் அடிச்சியா “ என மெதுவாக அவளை பார்த்து ஒற்றை கண்சிமிட்டி கேட்க,
“ அட விடுவீங்களா..? சும்மா கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க ” என அவன் கையில் இருந்து நழுவ,
“ ம்ம்... பதில் சொல்லாமா இப்போ தப்பிச்சுட்ட.. விடமாட்டேன் “ கூறியவன், பின் நியாபகம் வந்தவனாக “ லிப்ஸ் சீக்கிரம் கிளம்பு லாயரை பார்த்துட்டு பேப்பர் குடுத்துட்டு வருவோம் “ கூறிக் கொண்டே அவளை விட்டு விலகி எழ,
அவனை யோசனையாக பார்த்தவள் “ எதுக்கு லாயரை பார்க்கணும் “ ஒன்றும் அறியாதவள் போல் அவள் கேட்க,
“ அது தான் சொன்னேனே லிப்ஸ். நேத்து உன்கிட்ட தந்த பேப்பரை அவகிட்ட கொடுத்து ரிஜிஸ்டர் பண்ணனும் “ அவளிடம் கூறிக் கொண்டு டவலை எடுத்து பாத்ரூமில் நுழைய,
அவனோடு அவளும் உள்ளே நுழைய, அவளை பார்த்து கள்ளசிரிப்பு சிரித்த சக்தி “ லிப்ஸ் நீயும் என்கூட குளிக்க வாரீயா..? “ சில்மிஷத்துடன் கேட்க,
அப்பொழுது தான் பேசும் ஆர்வத்தில் அங்கு நுழைந்ததை அறிந்து தன் தலையிலையே மெதுவாக தட்டியவள், அவனின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வெளியில் வந்தாள்...
“ ஏய்.. குளிக்க விடுடி “ கையை மெதுவாக விடுவித்துக் கொண்டு சக்தி கூற,
“ ஆமு.. குளிக்கலாம் நீங்க.. முதலில் நான் சொல்வதை காதுக் கொடுத்து கேளுங்க “ சிறு கடுப்பாக கூறியவள்,
அங்கிருந்த அலமாரியை திறந்தவள், அதில் நேற்று சக்தி கொடுத்த பேப்பர் எடுத்து அவன் முன் கிழித்து போட,
“ ஏய் லிப்ஸ்.. என்னடி பண்ணுற “ பதறிய சக்தி அவள் அருகில் ஓடி வர,
அவளோ அசையாமல் அவனை பார்த்து கையை கட்டிக் கொண்டு நின்றாள்...
அவள் அப்படியே நிற்பதை கண்டவன் “ என்ன லிப்ஸ் என்னோட கிப்ட் உனக்கு பிடிக்கலியா..? ” முகம் கலங்கி கேட்டான்,
இத்தனை நாள் இல்லாத பெரும் சந்தோசத்தை நேற்று அவன் அவள் முகத்தில் கண்டான்... எதிலோ ஜெயித்த கர்வம் நேற்று அவள் முகத்தில் தெரிந்தது...
அது அவள் காதலை ஜெயித்த கர்வம் என்று அவன் உணராமல் போவானா என்ன..? உடனே அறிந்துக் கொண்டான்... ஆனால் இன்று அவளின் இந்த கோபம் அவனை விதிர்க்க செய்ய அவள் முகத்தை, அவள் பதிலை எதிர் நோக்கி நின்றான்...
“ மாமா எனக்கு ஆபிஸ் பொறுப்பு எதுவும் வேண்டாம்.. நான் ஆசை பட்ட எல்லாம் செய்யுற உங்களுக்கு நான் இது கூட செய்யலன்னா எப்படி குட்டிமாமா..? நீங்க எப்பவும் போல இருக்க.. இதை என்னோட குட்டிமாவுக்கு நான் ஆசையா தாறதா வச்சுகோங்க மாமா “ என கூறி அவன் நெஞ்சில் சாய,
அவளை மெதுவாக அணைத்தவன் “ இல்ல இதழி, நாளைக்கு ஏதாவது பிரச்சனை, அம்மா முன்னாடி பேசுனமாதிரி வேற யாருமே பேச கூடாதுடா... இந்த சக்தியோட மனைவி நீ..!! அந்த மரியாதையை உனக்கு எல்லாரும் தரணும் இதழி...
முன்னாடி மாதிரி நடக்காதுன்னு என்ன நிச்சயமா சொல்ல முடியும்...? யார் வாயில இருந்தும் இன்னொரு முறை, நீங்க ஒன்றும் இல்லாதவங்க என்றோ.? யாரும் இல்லாதவங்க என்றோ..? சொல்லவே கூடாது இதழி.. அதுக்கு தான் நான் உனக்கு அப்படி ஒரு அந்தஸ்து தந்தேன்...
உன்னை பற்றி எல்லாம் தெரிந்த அம்மாவே உங்களை பேசும் பொழுது, எதுவும் தெரியாதவங்க பேச எவ்வளவு நேரம் ஆகும் இதழி “ என கோபமாக கூற,
“ மாமா அது தான் எல்லாம் சரியா போச்சே, அத்தை தான் இப்போ எங்களை நல்லா பாத்துகுறாங்களே, அப்புறம் என்ன மாமா “ என கேட்க,
“ இப்போ எல்லாம் நல்லா தான் இருக்கு லிப்ஸ், நாளைக்கு எதுவும் ஆக கூடாதுல்ல “ என கூற,
“அதெல்லாம் ஒன்னும் ஆகாது மாமா, நீங்க எப்பவும் போல ஆபிஸ் எம்.டி.யா இருங்க, நா.. நான் தனியா ஏதாவது ஆரம்பிக்கவா.? “ என மெதுவாக தனது நிறைய நாள் ஆசையாகிய கனவை கூற,
அவள் முகத்தை ஆவலாக பார்த்தவன் “ என்ன சொல்லுற இதழி... நீ ஏதாவது ஆரம்பிக்க போறியா..? ஏதாவது ஐடியா வச்சுருக்கியா என்ன..? “ என ஆவலாக, சந்தோசமாக கேட்க,
“ அது மாமா... நான் எப்பவும் போல என்னோட ஆசையை செய்றேன் மாமா, எனக்கு பிடிச்சதை நான் செய்யுறேன்... ட்ராயிங், பெயிண்ட் பண்ணுறேன் மாமா, கூடவே ஹோம் டிசைன்னும் பண்ணுறேன்...
நம்ம ஆபிஸ்க்கு வரும் ஆர்டர் ஏதாவது ஹோம் டிசைன் வந்தா அதை எனக்கு வேலையா தாங்க... அதுக்கான அமௌன்ட் தனியா தாங்க, நான் என் சொந்த முயற்சியில் முன்னேறி வாரேன் மாமா, எனக்கு அந்த பெரிய பதவி எதுவும் வேண்டாம், நான் என் முயற்சியில் வளர்ந்து வாரேன். எனக்கு துணையா வருவீங்க தானே..?” என அவன் முகம் நோக்கி கேள்வியாய் நிறுத்த,
அவளை சந்தோசமாக அணைத்துக் கொண்டான் சக்தி “ உனக்கு நான் எப்பவும் துணையா இருப்பேன் லிப்ஸ் “ என அவளை அணைத்துக் கொண்டான்... இனி அவனுக்கு கவலை இல்ல.. அவளிடம் இருக்கும் திறமை அவன் அறிந்ததே, அவளின் திறமையால் மேலும் மேலும் உயர வளர்ந்து வருவாள் என்று தன் மனைவி மீது முழுமையாக நம்பிக்கை வைத்தான்..
அடுத்த நாளில் இருந்து அந்த மாடி அறை அவளின் கூடமானது.... அவளின் கனவின் வாசல் அந்த ஒற்றை மாடி அறை, அதன் வழிகாட்டி அவளின் குட்டிமாமா, அதன் திறமையாளர் யார் என்று அந்த அறையும், காலமும் தான் கூறும்.. அவளுக்கான பாதையை அவன் காட்டி விட்டான்... அதை நேராக பற்றி செல்லவும் அவன் வழி விட்டுவிட்டான்... அவள் தூரிகையே இனி அவளின் வளர்ச்சி..!!
அதன் பிறகு அவளின் பெயரில் “ தூரிகை உலகம் “ என்று ஆன்லைனில் ஒரு பேஜ் ஆரம்பித்து அதில் அவளின் கைவண்ணத்தை காட்டினாள்...
இன்ஸ்டாகிராம் உலகில் அவளும் ஒரு புள்ளியாக தன் காலெடுத்து வைத்து. அதில் அவளுகென்று பல மக்களை தன் திறமையால் கட்டி இழுத்தாள், அவளின் பல ஓவியம் பல மக்களின் மனதில் இடம் பிடித்து வீட்டின் சுவற்றில் இடம் பிடித்தது....
அவ்வபோது ஓவியர்களுக்கான சிறு சிறு போட்டிகள் வைத்து மேலும் வளர்ந்தாள்... பல போட்டிகளில் இவளும் கலந்துக் கொண்டு மேலும் மேலும் தன் திறமையை வளர்த்தாள்... இதை எல்லாம் அவள் செய்ய கிட்ட தட்ட ஒரு வருடம் ஓடிவிட்டது... அந்த ஒருவருடமும் அவளுக்காக எல்லாமுமாக சக்தி இருந்து பார்த்துக் கொண்டான்...
பல மக்களின் மனதில் அவளின் ஓவியம் இடம் பிடிக்க அவளின் ஒரு வருட தீராத உழைப்பு தேவைப்பட்டது... அதுக்கெதுக்கு ஒரு வருடம் என நாம் எண்ணலாம்.. அந்த கலையும் மிகவும் கடினமானதே...
இப்பொழுது சிங்கப்பூரில் வைத்த ஓவிய போட்டியில் இரண்டாம் இடத்தை இதழி தன் கடும் உழைப்பால் பிடித்து, சிங்கபூர் செல்ல இருக்கிறாள்.... இதுவரை தன் ஊரை விட்டு எங்கும் செல்லாத இதழி முதல் முறையாக கடல் கடந்து செல்கிறாள்.... ( பெரிய பிஸினெஸ் மேன் மட்டும் தான் அவார்ட் வாங்கணுமா என்ன..? ஓவிய மக்களும் வாங்கட்டுமே... )
( நடிகர் பொன்வண்ணன்... ( சரண்யா கணவர் ), அவரும் ஓவியர் தான். நாம் பலர் அறிந்திருப்போமா என்று தெரியவில்லை... அவர் பலவருடமாக பல ஓவியங்களை வரைந்து வருகிறார்.., ஓவிய கண்காட்சியில் தன் ஓவியம் இடம் பெற வேண்டும் என்று இப்பொழுதும் உழைத்துக் கொண்டிருக்கிறார் )
(இதழி சிங்கப்பூர் கிளம்புவதற்குள் நாம் வெற்றியை பார்த்து விடுவோம் )
பிறந்த நாள் முடிந்த கையோடு வெற்றி இனியாளை ஆபிஸ் அழைத்து சென்றுவிட்டான்... அவள் இல்லாமல் அவன் எங்கும் அசையவே மாட்டான்... அப்படி அன்யோன்யமாக வாழ்ந்தனர் இருவரும்...
அன்று ஆருஷ் முதல் பிறந்த நாள் மிகவும் ஆர்ப்பாட்டமாக சக்தி ஏற்பாடு செய்திருந்தான்.... நாராயணன் – லக்ஷ்மி இருவரும் அங்கும் இங்கும் சுற்ற அரண்மனையே பிஸியாக இருந்தது, அந்த அரண்மனையின் முதல் வாரிசான குட்டி சக்திவேல், அதாவது ஆருஷன் பிறந்த நாள்...
களைகட்டாமல் இருக்குமா என்ன..? இரு ஆபிஸ் ஊழியர்கள், சூளையில் வேலை செய்பவர்கள் என்று எல்லாரும் அவனின் பிறந்த நாளை சந்தோசமாக மாற்றிக் கொண்டு இருந்தனர்...
குட்டி சக்தி அவனுக்கு ஏக குஷி, அங்கிருந்த எல்லார் மனதையும் கொள்ள கொண்டான் அவன், முளைத்திருக்கும் சிறு பற்களையும் காட்டி எல்லாரையும் பார்த்து சிரித்தவனை அத்தனை பேரும் தூக்கி கொஞ்சிக் கொண்டனர்...
“ சக்தி சார் மாதிரி சிடுமூஞ்சியாக இல்லாமல், மேடம் மாதிரி அழகான சிரித்த முகம் “ என்று குழந்தையை கொஞ்ச, சக்திக்கோ சந்தோசம் பிடிபடவில்லை...
அதிலும் குட்டி சக்தியோ தலை கால் புரியாமல், கையை தட்டிக் கொண்டு நடக்கிறேன் என்று அங்கும், இங்கும் மோதி விழுந்து எழுந்து சிரித்துக் கொண்டு இருக்க, விழா சந்தோசமாக, மகிழ்ச்சியாக இனிதாக முடிந்தது...
அடுத்த நாள் காலையில் ஆபிஸ் கிளம்ப முடியாமல் இனியாள் அப்படியே படுத்திருக்க, அவள் அருகில் பதறி வந்த வெற்றி “ என்னாச்சு ஜில்லு “ என அவளின் அருகில் அமர்ந்து நெற்றியில் கைவத்து பார்க்க,
“ ஒன்னும் இல்லை மாமா, நேத்து வீட்டுல பங்க்ஷன் என்று அலைந்தது ஒரு மாதிரி தலை சுத்துது... ஒரு காபி குடிச்சா சரியா போகும் “ என
எல்லாரும் எப்படி இருக்கீங்க... என்னை வேரோடு சாய்த்தவளே..!! எபி 23 போடுறேன், படித்து உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க... இந்த கதைக்கு ஆதி முதல் அந்தம் வரை படித்து கமெண்ட்ஸ் சொன்ன உங்க எல்லாருக்கும் நன்றி..!! நன்றி ..!!! அடுத்த எபியோட கதை முடிந்து விடும்... படிக்காதவங்க சீக்கிரம் படிக்க ஆரம்பிச்சுகோங்க...!! முடிந்தால் நாளைக்கே எபி தாரேன்..( நம்புங்கப்பா.. இடையில் ரொம்ப உடம்பு சரியில்ல சோ விட்டுட்டேன்.. இப்போ ஆல் ரைட்.. சரி ஆகிட்டேன்.. சோ முன்னாடி மாதிரி ஓடி வந்துவிடுவேன்.. .) நான் எதிர் பார்த்ததை விட உங்களின் ஆதரவு மிகவும் பெரியது... ரொம்ப நன்றி மக்கா .....
வேர் – 23
விடியல் அற்புத அழகுடன் ரம்மியமாய் பூமியை ஆக்ரமிக்க ஆரம்பித்திருந்தது...
நிலா அழகி கொஞ்சம் கொஞ்சமாக மறைய துவங்கியிருந்த அந்த அதிகாலைப் பொழுதில் செவ்வானத்தில் பறவைகள் கூட்டை விட்டு இரையை தேடி வட்டம் வட்டமாக செல்ல,
இளம் காலை பனி வெள்ளி துளிகளாக தோட்டத்து செடிகளை மையம் கொண்டிருக்க, உறக்கம் கலைந்த இதழியோ அவளின் குட்டிமாமாவை மையம் கொண்டிருந்தாள்...
சக்தி அவளிடம் கூறிய காதலை அவளால் நம்பவே முடியவில்லை... நேற்றே இரு முறை கிள்ளி பார்த்து விட்டாள்... கிள்ளியதில் வந்த வலியில் தான் உண்மை என்று நம்பினாள்..
இப்பொழுதும் அவனை அப்படியே பார்த்திருந்தாள், மெதுவாக உறக்கம் கலைந்த சக்தி மெதுவாக அசைய, இத்தனை நேரம் அவனையே பார்திருந்தவள், அவன் எழவும் மீண்டும் படுத்துக் கொண்டாள்...
“ ஏய் கள்ளி இத்தனை நேரம் கண்ணெடுக்காம பார்த்திட்டு, நான் எழுந்ததும் படுத்துட்டா. எனக்கு தெரியாதா.? அதென்னடி எப்பவும் நான் பார்க்காத நேரம் அப்படியே அசையாம பார்க்க... பார்த்ததும் எதையும் செய்யாத மாதிரியே இருக்கியே எப்படி..? “ என கேட்டுக் கொண்டே அவளை அள்ளி தன் நெஞ்சில் போட்டுக் கொண்டான்..
“ விடுங்க குட்டிமாமா “ என அவனிடம் இருந்து விடுபட முயற்சி செய்ய,
“ நான் கேட்டதுக்கு பதில் சொல்லு லிப்ஸ் “ என கூறி மெதுவாக அவளின் இதழை வருட,
அவனின் கையை தட்டி விட்டவள் “ விடுங்க “ என மீண்டும் போராட,
“ நீ சொல்லு விடுறேன் “ என அவளை மீண்டும் அணைத்துக் கொண்டான்,
“ உன்னை தான் சைட் அடிச்சேன்.. என்று எப்படி சொல்வதாம்..? “ அவளின் மனது மெதுவாக புலம்பிக் கொண்டது,
அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தவன் “ என்ன சைட் அடிச்சியா “ என மெதுவாக அவளை பார்த்து ஒற்றை கண்சிமிட்டி கேட்க,
“ அட விடுவீங்களா..? சும்மா கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க ” என அவன் கையில் இருந்து நழுவ,
“ ம்ம்... பதில் சொல்லாமா இப்போ தப்பிச்சுட்ட.. விடமாட்டேன் “ கூறியவன், பின் நியாபகம் வந்தவனாக “ லிப்ஸ் சீக்கிரம் கிளம்பு லாயரை பார்த்துட்டு பேப்பர் குடுத்துட்டு வருவோம் “ கூறிக் கொண்டே அவளை விட்டு விலகி எழ,
அவனை யோசனையாக பார்த்தவள் “ எதுக்கு லாயரை பார்க்கணும் “ ஒன்றும் அறியாதவள் போல் அவள் கேட்க,
“ அது தான் சொன்னேனே லிப்ஸ். நேத்து உன்கிட்ட தந்த பேப்பரை அவகிட்ட கொடுத்து ரிஜிஸ்டர் பண்ணனும் “ அவளிடம் கூறிக் கொண்டு டவலை எடுத்து பாத்ரூமில் நுழைய,
அவனோடு அவளும் உள்ளே நுழைய, அவளை பார்த்து கள்ளசிரிப்பு சிரித்த சக்தி “ லிப்ஸ் நீயும் என்கூட குளிக்க வாரீயா..? “ சில்மிஷத்துடன் கேட்க,
அப்பொழுது தான் பேசும் ஆர்வத்தில் அங்கு நுழைந்ததை அறிந்து தன் தலையிலையே மெதுவாக தட்டியவள், அவனின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வெளியில் வந்தாள்...
“ ஏய்.. குளிக்க விடுடி “ கையை மெதுவாக விடுவித்துக் கொண்டு சக்தி கூற,
“ ஆமு.. குளிக்கலாம் நீங்க.. முதலில் நான் சொல்வதை காதுக் கொடுத்து கேளுங்க “ சிறு கடுப்பாக கூறியவள்,
அங்கிருந்த அலமாரியை திறந்தவள், அதில் நேற்று சக்தி கொடுத்த பேப்பர் எடுத்து அவன் முன் கிழித்து போட,
“ ஏய் லிப்ஸ்.. என்னடி பண்ணுற “ பதறிய சக்தி அவள் அருகில் ஓடி வர,
அவளோ அசையாமல் அவனை பார்த்து கையை கட்டிக் கொண்டு நின்றாள்...
அவள் அப்படியே நிற்பதை கண்டவன் “ என்ன லிப்ஸ் என்னோட கிப்ட் உனக்கு பிடிக்கலியா..? ” முகம் கலங்கி கேட்டான்,
இத்தனை நாள் இல்லாத பெரும் சந்தோசத்தை நேற்று அவன் அவள் முகத்தில் கண்டான்... எதிலோ ஜெயித்த கர்வம் நேற்று அவள் முகத்தில் தெரிந்தது...
அது அவள் காதலை ஜெயித்த கர்வம் என்று அவன் உணராமல் போவானா என்ன..? உடனே அறிந்துக் கொண்டான்... ஆனால் இன்று அவளின் இந்த கோபம் அவனை விதிர்க்க செய்ய அவள் முகத்தை, அவள் பதிலை எதிர் நோக்கி நின்றான்...
“ மாமா எனக்கு ஆபிஸ் பொறுப்பு எதுவும் வேண்டாம்.. நான் ஆசை பட்ட எல்லாம் செய்யுற உங்களுக்கு நான் இது கூட செய்யலன்னா எப்படி குட்டிமாமா..? நீங்க எப்பவும் போல இருக்க.. இதை என்னோட குட்டிமாவுக்கு நான் ஆசையா தாறதா வச்சுகோங்க மாமா “ என கூறி அவன் நெஞ்சில் சாய,
அவளை மெதுவாக அணைத்தவன் “ இல்ல இதழி, நாளைக்கு ஏதாவது பிரச்சனை, அம்மா முன்னாடி பேசுனமாதிரி வேற யாருமே பேச கூடாதுடா... இந்த சக்தியோட மனைவி நீ..!! அந்த மரியாதையை உனக்கு எல்லாரும் தரணும் இதழி...
முன்னாடி மாதிரி நடக்காதுன்னு என்ன நிச்சயமா சொல்ல முடியும்...? யார் வாயில இருந்தும் இன்னொரு முறை, நீங்க ஒன்றும் இல்லாதவங்க என்றோ.? யாரும் இல்லாதவங்க என்றோ..? சொல்லவே கூடாது இதழி.. அதுக்கு தான் நான் உனக்கு அப்படி ஒரு அந்தஸ்து தந்தேன்...
உன்னை பற்றி எல்லாம் தெரிந்த அம்மாவே உங்களை பேசும் பொழுது, எதுவும் தெரியாதவங்க பேச எவ்வளவு நேரம் ஆகும் இதழி “ என கோபமாக கூற,
“ மாமா அது தான் எல்லாம் சரியா போச்சே, அத்தை தான் இப்போ எங்களை நல்லா பாத்துகுறாங்களே, அப்புறம் என்ன மாமா “ என கேட்க,
“ இப்போ எல்லாம் நல்லா தான் இருக்கு லிப்ஸ், நாளைக்கு எதுவும் ஆக கூடாதுல்ல “ என கூற,
“அதெல்லாம் ஒன்னும் ஆகாது மாமா, நீங்க எப்பவும் போல ஆபிஸ் எம்.டி.யா இருங்க, நா.. நான் தனியா ஏதாவது ஆரம்பிக்கவா.? “ என மெதுவாக தனது நிறைய நாள் ஆசையாகிய கனவை கூற,
அவள் முகத்தை ஆவலாக பார்த்தவன் “ என்ன சொல்லுற இதழி... நீ ஏதாவது ஆரம்பிக்க போறியா..? ஏதாவது ஐடியா வச்சுருக்கியா என்ன..? “ என ஆவலாக, சந்தோசமாக கேட்க,
“ அது மாமா... நான் எப்பவும் போல என்னோட ஆசையை செய்றேன் மாமா, எனக்கு பிடிச்சதை நான் செய்யுறேன்... ட்ராயிங், பெயிண்ட் பண்ணுறேன் மாமா, கூடவே ஹோம் டிசைன்னும் பண்ணுறேன்...
நம்ம ஆபிஸ்க்கு வரும் ஆர்டர் ஏதாவது ஹோம் டிசைன் வந்தா அதை எனக்கு வேலையா தாங்க... அதுக்கான அமௌன்ட் தனியா தாங்க, நான் என் சொந்த முயற்சியில் முன்னேறி வாரேன் மாமா, எனக்கு அந்த பெரிய பதவி எதுவும் வேண்டாம், நான் என் முயற்சியில் வளர்ந்து வாரேன். எனக்கு துணையா வருவீங்க தானே..?” என அவன் முகம் நோக்கி கேள்வியாய் நிறுத்த,
அவளை சந்தோசமாக அணைத்துக் கொண்டான் சக்தி “ உனக்கு நான் எப்பவும் துணையா இருப்பேன் லிப்ஸ் “ என அவளை அணைத்துக் கொண்டான்... இனி அவனுக்கு கவலை இல்ல.. அவளிடம் இருக்கும் திறமை அவன் அறிந்ததே, அவளின் திறமையால் மேலும் மேலும் உயர வளர்ந்து வருவாள் என்று தன் மனைவி மீது முழுமையாக நம்பிக்கை வைத்தான்..
அடுத்த நாளில் இருந்து அந்த மாடி அறை அவளின் கூடமானது.... அவளின் கனவின் வாசல் அந்த ஒற்றை மாடி அறை, அதன் வழிகாட்டி அவளின் குட்டிமாமா, அதன் திறமையாளர் யார் என்று அந்த அறையும், காலமும் தான் கூறும்.. அவளுக்கான பாதையை அவன் காட்டி விட்டான்... அதை நேராக பற்றி செல்லவும் அவன் வழி விட்டுவிட்டான்... அவள் தூரிகையே இனி அவளின் வளர்ச்சி..!!
அதன் பிறகு அவளின் பெயரில் “ தூரிகை உலகம் “ என்று ஆன்லைனில் ஒரு பேஜ் ஆரம்பித்து அதில் அவளின் கைவண்ணத்தை காட்டினாள்...
இன்ஸ்டாகிராம் உலகில் அவளும் ஒரு புள்ளியாக தன் காலெடுத்து வைத்து. அதில் அவளுகென்று பல மக்களை தன் திறமையால் கட்டி இழுத்தாள், அவளின் பல ஓவியம் பல மக்களின் மனதில் இடம் பிடித்து வீட்டின் சுவற்றில் இடம் பிடித்தது....
அவ்வபோது ஓவியர்களுக்கான சிறு சிறு போட்டிகள் வைத்து மேலும் வளர்ந்தாள்... பல போட்டிகளில் இவளும் கலந்துக் கொண்டு மேலும் மேலும் தன் திறமையை வளர்த்தாள்... இதை எல்லாம் அவள் செய்ய கிட்ட தட்ட ஒரு வருடம் ஓடிவிட்டது... அந்த ஒருவருடமும் அவளுக்காக எல்லாமுமாக சக்தி இருந்து பார்த்துக் கொண்டான்...
பல மக்களின் மனதில் அவளின் ஓவியம் இடம் பிடிக்க அவளின் ஒரு வருட தீராத உழைப்பு தேவைப்பட்டது... அதுக்கெதுக்கு ஒரு வருடம் என நாம் எண்ணலாம்.. அந்த கலையும் மிகவும் கடினமானதே...
இப்பொழுது சிங்கப்பூரில் வைத்த ஓவிய போட்டியில் இரண்டாம் இடத்தை இதழி தன் கடும் உழைப்பால் பிடித்து, சிங்கபூர் செல்ல இருக்கிறாள்.... இதுவரை தன் ஊரை விட்டு எங்கும் செல்லாத இதழி முதல் முறையாக கடல் கடந்து செல்கிறாள்.... ( பெரிய பிஸினெஸ் மேன் மட்டும் தான் அவார்ட் வாங்கணுமா என்ன..? ஓவிய மக்களும் வாங்கட்டுமே... )
( நடிகர் பொன்வண்ணன்... ( சரண்யா கணவர் ), அவரும் ஓவியர் தான். நாம் பலர் அறிந்திருப்போமா என்று தெரியவில்லை... அவர் பலவருடமாக பல ஓவியங்களை வரைந்து வருகிறார்.., ஓவிய கண்காட்சியில் தன் ஓவியம் இடம் பெற வேண்டும் என்று இப்பொழுதும் உழைத்துக் கொண்டிருக்கிறார் )
(இதழி சிங்கப்பூர் கிளம்புவதற்குள் நாம் வெற்றியை பார்த்து விடுவோம் )
பிறந்த நாள் முடிந்த கையோடு வெற்றி இனியாளை ஆபிஸ் அழைத்து சென்றுவிட்டான்... அவள் இல்லாமல் அவன் எங்கும் அசையவே மாட்டான்... அப்படி அன்யோன்யமாக வாழ்ந்தனர் இருவரும்...
அன்று ஆருஷ் முதல் பிறந்த நாள் மிகவும் ஆர்ப்பாட்டமாக சக்தி ஏற்பாடு செய்திருந்தான்.... நாராயணன் – லக்ஷ்மி இருவரும் அங்கும் இங்கும் சுற்ற அரண்மனையே பிஸியாக இருந்தது, அந்த அரண்மனையின் முதல் வாரிசான குட்டி சக்திவேல், அதாவது ஆருஷன் பிறந்த நாள்...
களைகட்டாமல் இருக்குமா என்ன..? இரு ஆபிஸ் ஊழியர்கள், சூளையில் வேலை செய்பவர்கள் என்று எல்லாரும் அவனின் பிறந்த நாளை சந்தோசமாக மாற்றிக் கொண்டு இருந்தனர்...
குட்டி சக்தி அவனுக்கு ஏக குஷி, அங்கிருந்த எல்லார் மனதையும் கொள்ள கொண்டான் அவன், முளைத்திருக்கும் சிறு பற்களையும் காட்டி எல்லாரையும் பார்த்து சிரித்தவனை அத்தனை பேரும் தூக்கி கொஞ்சிக் கொண்டனர்...
“ சக்தி சார் மாதிரி சிடுமூஞ்சியாக இல்லாமல், மேடம் மாதிரி அழகான சிரித்த முகம் “ என்று குழந்தையை கொஞ்ச, சக்திக்கோ சந்தோசம் பிடிபடவில்லை...
அதிலும் குட்டி சக்தியோ தலை கால் புரியாமல், கையை தட்டிக் கொண்டு நடக்கிறேன் என்று அங்கும், இங்கும் மோதி விழுந்து எழுந்து சிரித்துக் கொண்டு இருக்க, விழா சந்தோசமாக, மகிழ்ச்சியாக இனிதாக முடிந்தது...
அடுத்த நாள் காலையில் ஆபிஸ் கிளம்ப முடியாமல் இனியாள் அப்படியே படுத்திருக்க, அவள் அருகில் பதறி வந்த வெற்றி “ என்னாச்சு ஜில்லு “ என அவளின் அருகில் அமர்ந்து நெற்றியில் கைவத்து பார்க்க,
“ ஒன்னும் இல்லை மாமா, நேத்து வீட்டுல பங்க்ஷன் என்று அலைந்தது ஒரு மாதிரி தலை சுத்துது... ஒரு காபி குடிச்சா சரியா போகும் “ என