இன்னும் ஒரு மாதத்தில் குழந்தை பிறந்துவிடும் என மருத்துவர்கள் கூற, வெற்றியோ மிகவும் பயத்துடன் இருந்தான்... அன்று அப்படி அவளை அணைத்துக் கொண்டு நிற்க,
சக்தியோ, இதழி திறமையால் மீண்டும் ஒரு பெரிய ஆர்டர் அவனுக்கு கிடைத்ததில் சந்தோசமாக கட்டியணைத்துக் கொண்டு நிற்க, அதே நேரம் கதவை திறந்து கொண்டு மெதுவாக ஆருஷ் உள்ளே நுழைந்தவன் இருவரும் கட்டிக் கொண்டு நிற்பதை பார்த்து சத்தமில்லாமல் வெளியில் வந்தவன்,
வெற்றி அறைக்கு சென்றான். அங்கு வெற்றியும், இனியும் அணைத்து நிற்பதை பார்த்தவன் அவர்கள் முன் வந்து நின்று " சித்தா " என ஓங்கி குரல் கொடுத்து வாய் பொத்தி சிரிக்க, வெற்றிக்கு தான் மிகவும் வெட்கமாக போய் விட்டது...
" பிரிக்க குடும்பமாவே சுத்துறீங்களேடா " என கேலியாக கூறி அவனை தூக்கிக் கொண்டு வெளியில் வந்தான் வெற்றி...
ஆருஷ் வெற்றியை " சித்தா " என்றும், இனியை " இம்மா " என்றும் அழைப்பான்... இருவரும் மேலும் அப்படி பாசமாக இருப்பான்...
வெற்றி ஆருஷுடன் " உனக்கு தம்பியும், தங்கையும் வர போறாங்க " என கூறி குதூகலித்துக் கொண்டிருக்கிறார்கள்....
இப்படியாக நாட்கள் செல்ல அன்று ஓவிய ரிசல்ட் வர, அதை யாருமே கவனிக்கவே இல்லை.. அடுத்த ஒரே வாரத்தில் இதழிக்கான சிங்கப்பூர் செல்வதற்கான பிளைட் டிக்கெட் வீடு தேடி வர, அப்படியே திக்கு முக்காடி போனாள் அவள்..
எதிர் பார்க்காத வெற்றி... இரண்டாம் இடம் என இன்வெட்டேஷனுடன் அவளுக்கு டிக்கெட் சேர்த்து வந்திருந்தது... சந்தோஷத்தில் அப்படியே சக்தியை அணைத்துக் கொண்டாள்... பின்னே அவன் தானே அவளை கட்டாய படுத்தி அனுப்பி அவளின் திறமையை அவளுக்கு எடுத்து கூறியது....
வெற்றி தான் " அண்ணே .. சிங்கப்பூர் போயிட்டு, அப்படியே உங்க ஹனிமூன் முடிச்சுட்டு வாங்க " என கண்ணடித்துக் கூற,
சக்தி கேள்வியாக இதழியை பார்க்க, அவள் அவனை பார்த்தால் தானே..?
அப்புறம் என்ன நல்ல படியாக சக்தி குடும்பம் மூன்று பேரும் அங்கு செல்வது முடிவாகி விட்டது...
அங்கு செல்ல இரண்டு வாரம் இருக்கும் முன் இனிக்கு வலி வர அவளை மருத்துவமனையில் சேர்க்க, டாக்டர் இது பிரசவ வலி தான் என கூற, வெற்றி பயத்துடன் சக்தியை பிடித்துக் கொண்டான்..
வெற்றி கை நடுங்கி கொண்டிருக்க, அவனின் இந்த அவஸ்தை புதிதாக இருந்தது சக்திக்கு... அதே நேரம் ஒரு மனது தானும் இதே அவஸ்த்தையை அனுபவிக்க ஆசைக் கொண்டது... அப்படியே அவன் இதழியை பார்க்க, அவளோ ஆர்வமாக இனி இருக்கும் அறையை பார்த்துக் கொண்டு இருந்தாள்..
அடுத்த பல மணி நேரத்தில் இரண்டு நர்ஸ் வந்து “ வாழ்த்துக்கள் சார், உங்களுக்கு பையனும், பொண்ணும் பிறந்திருக்கு.. குளிக்க வைச்சுட்டு இருக்காங்க " என கூறி செல்ல,
கண்களில் துளிர்த்த சிறு கண்ணீர் துளியுடன் சக்தியை அணைத்துக் கொண்டான்... அடுத்த கொஞ்ச நேரத்தில் கைகளில் குழந்தையை பஞ்சு பொதியென ஏந்தி இரண்டு நர்ஸ் அவர்கள் அருகில் வர,
அதை கண்ட வெற்றி " அண்ணா குழந்தையை நீ வாங்கு " என கூற,கண்களில் துளிர்த்த கண்ணீர் துளியுடன் மெதுவாக ஒரு குழந்தையை சக்தி வாங்க,
மனதோ தன் குழந்தையை தான் இப்படி தூக்க வில்லையே என்ற ஏக்கம் வருவதாய்.., இனி குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் கண்டு இதழி இரவு சக்தியிடம் கூறும் பொழுது அவனுக்கு மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும்...
அவனின் கஷ்டத்தை அவள் அறிந்தாளோ என்னவோ அதன் பிறகு அவள் எதையும் அவனிடம் கூறுவதில்லை.. ஆனால் இன்று அவனுக்கு அந்த அனுபவம், அந்த உணர்வு, அந்த வலி எல்லாம் வேண்டும் போல்...
இன்னொரு குழந்தையை நாராயணன் வாங்கிக் கொண்டார்... வெற்றி ஆவலாக இனி இருக்கும் அறையை பார்க்க, அடுத்த அரைமணி நேரத்தில் அவளை ரூம் மாற்ற ஆவலாக ஓடி சென்றான் வெற்றி...
அடுத்த ஒரு வாரத்தில் இனியையும், குழந்தையும் ஆலம் சுற்றி வீட்டில் அழைத்து வந்தனர்...அவர்கள் வீட்டுக்கு வந்த நாளில் இருந்து ஆருஷ் இருப்பிடம் குழந்தைகள் அருகில் தான் இருந்தது...
அன்று ஆருஷை தூக்கிய சக்தி " கண்ணா உனக்கு தம்பி வேணுமா.? பாப்பா வேணுமா.? " என கேட்க
வேகமாக தலையை ஆட்டிய ஆருஷ் " நானா ப்பா... நோ டம்பி, நோ பாப்பு.. சித்தா பாப்பா நானு போதும் " என தலையை ஆட்டி ஆட்டி கூறி அவனை விட்டு இறங்கி வெளியில் ஓடி சென்றான் அவன்.. அவனுக்கு வெற்றியின் இரு குழந்தைகளும் தம்பி, தங்கையாக போதும் என கூறினான்...
ஆருஷ் கூறிய பதிலை கேட்டு சக்தி தலை தொங்கி போக, இதழியோ வாய் விட்டு சிரித்தாள், மனமோ எல்லாம் வெற்றி மாமா வேலையா இருக்கும் என சிரித்துக் கொண்டாள்.......
அதன் பிறகு சக்தி ஒரு வித யோசனையாக சுற்ற அன்று இரவு அவனை தடுத்த இதழி,
“ மாமா என்ன ஆச்சு உங்களுக்கு நானும் ரெண்டு நாளா உங்களை பாக்குறேன் ரொம்ப பீலிங்ஆ சுத்துறீங்க.. ஏதாவது பிரச்சனையா... சிங்கபூர் போறதை பத்தி யோசிகுறீங்களா..? “ என அவனின் கையை பிடித்து கேட்க,
“ பச்.. அதெல்லாம் ஒண்ணும் இல்ல இதழி “ என அவளின் கையை தள்ளி விட்டு கட்டிலில் வந்து படுத்துக் கொண்டான்...
அவன் அருகில் வந்த அவள், அவனை தன் பக்கமாக திருப்பி, “ சொல்லுங்க மாமா.. என்ன ஆச்சு “ என சிறு கோபம் காட்டி கேட்க,
அவளையே ஒரு முறை ஆழ்ந்து பார்த்த சக்தி, எரிச்சலாக, கோபமாக, ஆவேசமாக “ எனக்கு இன்னொரு குழந்தை வேணும், அந்த குழந்தையோட அசைவு, ஆதி முதல் அந்தம் வரை நான் உணரனும், அன்னைக்கு வெற்றி அழுதான் பார்த்தியா அதே போல நானும் அழணும், குழந்தையை முதல் முதலா நான் தான் என் கையில் ஏந்தணும், உன்னை அந்த நேரம் அப்படி பாத்துக்கணும்.. இப்படி நிறைய ஆசை இருக்கு.. உன்னால உடனே இதை நிறை வேற்ற முடியுமா...? “ கோபமாக கேட்டு அவளை ஆவேசமாக பிடித்து உலுக்க,
அவனை நிதானமாக பார்த்தவள் “ நானா இதை எல்லாம் செய்ய வேண்டாம்னு உங்களை தடுத்தேன்... நீங்க தான் சின்ன முத்தம், சின்னதா ஒரு கட்டிபிடித்தல் இதுவே போதும்ன்னு சுத்துறீங்க.., பொண்டாட்டிக்கு எல்லாம் பார்த்து பார்த்து செய்யணும்னு நீங்க தான் சொல்லிட்டு சுத்துறீங்க.. இதுல என் மேல கோபப்படுறதை பாரேன் “ என மெதுவாக முணுமுணுத்துக் கொண்டு இதழை சுழித்த அவள் அவனின் மறுபக்கமாக திரும்பி படுத்துக் கொள்ள,
வேகமாக எழுந்த சக்தி, அவளை தன் புறமாக திருப்பி “ என்ன சொன்ன “ என,
“ எல்லாம் சரியா தான் கேட்டுச்சு “ என மீண்டும் திரும்பி படுக்க,
“ உனக்கு ஓகேவா./ என் மேல கோபம் இல்லையே.. ஆருஷ் உண்டான நேரம் உன்கிட்ட நான் இல்ல.. அதை நினைச்சு தான் நா.. நான் விலகி இருந்தேன் “ என தடுமாற்றமாக கூற,
“ அதுக்கு தான் நீங்க இப்போ எங்களை நல்லா பாத்துக்கிறீங்களே... அப்புறம் என்ன குட்டிமாமா, பழசை எல்லாம் மறந்து விடுங்க மாமா.., ஆனா ஒண்ணு இந்த லிப்ஸ்ஷை மட்டும் மறக்காதீங்க “ என சிறு கேலியுடன் கூற,
“ ஆஹான்... அப்படியா லிப்சை மறக்க கூடாதா.? “ என கேள்வியாக கேட்டவன், அவளையும், அவளுடனான அந்த நினைவையும் நான் இன்னும் மறக்கவில்லை என்று அவளுக்கு விளக்க ஆரம்பித்தான்...
கடலோடு முத்தம் தந்தும் கலையாத வானம் போல உடலோடு ஒட்டிக்கொள்ளவோ..?
உடலோடு அங்கும் இங்கும் உறைகின்ற ஜீவன் போல உன்னோடு கட்டிக் கொள்ளவோ..?
உன்னை தேடி மண்ணில் வந்தேன் என்னைத்தேடி நீயும் வந்தாய் உன்னை நானும் என்னை நீயும் கண்டுக் கொண்டோம்...
பல பேர்கள் காதல் செய்து பழங்காதல் தீரும் போது, பூமி வாழப் புதிய காதல் கொண்டு வந்தோம்...
பனியோ பனியின் துளியோ உன் இதழ் மேல் என்ன பனியோ தேனோ நான் சுவைத்தால் என்ன..?
வேர் காதலால் கசிந்துருகி சாய்ந்தது...