ஹாய்.. ஹலோ.. மக்களே....
என்னை வேரோடு சாய்த்தவளே(னே)..!! அடுத்த எபி கொண்டு வந்துட்டேன்.. படிச்சு ஒரு லைக். அப்படியே ஒரு கமெண்ட். போட்டுட்டு போனால் நான் மகிழ்வேன்... இதுவரை படிச்சு கமெண்ட்ஸ் சொன்ன எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி டியர்ஸ்... இன்னைக்கு கொஞ்சம் பெரிய எபி மக்களே....
வேர் – 4
வெற்றி கூறியதுப் போல் அடுத்த மாதத்தில் இருந்து காலேஜ் செல்ல ஆரம்பித்தாள் இனியாள்... வெற்றியின் முடிவுக்கு யாரும் எதிர்ப்பு கூறாததால் அவளும் தன் படிப்பை தொடர்ந்தாள்..
அன்று கோபமாக சென்ற சக்திவேல் 2 நாள் கழித்து தான் வீடு வந்தான்.. அதன் பிறகு அவளை அவன் கண்டுக் கொள்ளவே இல்லை... அவளும் அவனை காணாததால் அவளுக்கு அவனின் விலகல் பெரிதாக தெரியவில்லை...
அன்று டைனிங்டேபிளில் அமர்ந்து தான் வாங்கி வந்த பார்சலை எடுத்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்.. அப்பொழுது தான் மாடியில் இருந்து இறங்கி வந்த அவள்..
“ காலைடிபன் தான் ரெடி ஆகிட்டே இவர் ஏன்.. கடையில் வாங்கி சாப்பிட்டு இருக்கார் “ என்ற யோசனையுடன் பார்த்துக் கொண்டே அவனை நோக்கி வந்தாள்...
அவன் அருகில் அவள் நிற்பதைக் கொண்ட அவன் பூரியை வாயில் வைத்துக் கொண்டே அவளை நோக்கி பார்த்துவிட்டு மீண்டும் அடுத்த பூரியை உள்ளே தள்ளிக் கொண்டு இருந்தான்...
“ இன்னைக்கு என்ன ரொம்ப தான் பண்ணுறார் “ என யோசிக்க.. “ அடியே... இவன் கொஞ்ச நாளா இப்படி தான் திரிகிறான் ” என அவளின் மனசாட்சி எடுத்துக் கொடுக்க..
“ ஓஹோ.. துரை கோவமா இருக்கார் போல.. அது தான் இதை போட்டு கடிக்கிறாரா…. காலையில் இதை சாப்பிட்டா எப்படி.. சாப்பிட்ட மாதிரி இருக்குமா..? “ என யோசித்துக் கொண்டே அவனுக்கு முன் ஒரு தட்டை எடுத்து வைத்து அதில் இரண்டு இட்டிலியை எடுத்து வைத்து, சட்னியையும் ஊற்றி அவன் முன் வைக்க...
அதையும், அவளையும் பார்த்த அவன் இடத்தை விட்டு எழுந்து சென்றுவிட்டான்...
அப்பொழுது தான் அவனின் உதாசீனம் அவளை வலிக்க செய்வதாய்... அப்படியே கண்களில் நீர் வழிய நின்றவளின், தோளில் ஒரு கரம் விழ வேகமாக கண்களை துடைத்துக் கொண்டு திரும்பி பார்க்க..
“ நீ.. எதுக்கும் கவலைப் படாத இதழி.. அவனுக்கு உன் மேல ரொம்ப பாசம்.. என்னால தான் எல்லாம்.. சீக்கிரம் எல்லாம் சரி ஆகும்.. ஆனா ஒண்ணு என்னை மன்னிச்சுடு ” என்று என்று அவளை நோக்கி கையெடுத்து வணகியவரைக் கண்டு அவள் மனம் கலங்குவதாய்....
“ அப்படி.. ஒண்ணும் இல்ல..மே.. “ முன்பு அவள் லக்ஷ்மியை “ அத்தை “ என்று அழைத்ததால், அவளை திட்டிய அவர் “ யார் யாருக்கு அத்தை.. மேடம்.. சொல்லு “ மிரட்டி வைத்திருந்தார்... அது தான் இன்று மேடம் என அழைக்க வந்தவளை அவர் தடுத்து....
“ வாய் நிறைய அன்பா. அத்தைன்னு கூப்டும்மா ” என கண்ணீர் மல்க கூறியவரை கண்டு அவள் கண்களும் கலங்குவதாய்...
அந்த நேரம் அங்கு வந்த இனியாளும் இக்காட்சியை காண... தயங்கி அங்கு நின்றவளை, பார்த்த லட்சுமி அழைக்க.., தாயை கண்ட கன்றுக் குட்டியாய் ஓடி வர இருவரையும் அணைத்துக் கொண்டார்...
இனி அவர் எப்பொழுதும் அவர்களுக்கு கொடுமை படுத்திய மாமியாராக இல்லாமல்.. பாசம் பொழியும் தாயாய் மாறுவார்..
இவர்களின் பாசபிணைப்பை கண்ட வெற்றி “ சரி.. சரி மாமியாரும், மருமக்களும் கொஞ்சுனது போதும்... இனி.. வா உன்னை அப்படியே காலேஜ்ல டிராப் பண்ணுறேன் “ என்றுக் கூறி அவளை அழைத்து சென்றான் வெற்றி...
அவர்கள் இருவரும்ஜோடியாக செல்வதைக் கண்ட லக்ஷ்மியின் மனது நிறைவதாய்... சக்திவேலை நினைத்தால் தான் அவரால் ஒரு முடிவெடுக்க முடியவில்லை.. இனியாளை கண்டு ஆனந்தமாக கண் கலங்கி நின்றவளை தோளோடு அணைத்துக் கொண்டார் அவர்....
செங்கல் சூளையில் இருந்து தாமதமாக திரும்பிய சக்தி.. வேலையாள் பரிமாறிய இரவு உணவை உண்டு விட்டு எப்பொழுது போல் தன் குழந்தையை காண சென்றான்..
ஆம், அவன் இதழி தூங்கிக் கொண்டு இருக்கும் பொழுது மட்டும் ஆசை தீர தன் மகனை கொஞ்சிக் கொள்வான்... காலையில் அவள் எழுமுன்.. அதாவது இனியாள் எழுந்து சென்றதும்... இதழி இருக்கும் அறைக்கு வந்து தூங்கிக் கொண்டு இருக்கும் தன் குழந்தைக்கு ஆசையாக முத்தம் வைத்து செல்பவன்...
அதன் பிறகு இரவு அவள் உறங்கியதும் வருவான்.. சில நேரம் அறைக்கு வந்து குழந்தையை தூக்கிக் கொண்டு அவன் தங்கி இருக்கும் அறைக்கு சென்று வெகு நேரம் அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருப்பான்..
“ இவனின் பிறப்பை தனக்கு.. ஒரு அப்பாவாக கூட அறிவிக்கவில்லையே “என்று கோபமாக வரும்.. ஆனாலும் அவளுக்காக பொறுத்துக் கொள்வான்..
இன்று குழந்தையை காண செல்ல வந்தவன் அப்படியே அந்த குளிர் காற்றை அனுபவித்து அப்படியே நின்றுவிட்டான்... அப்பொழுது அவன் மனதில் குழந்தை முகம் மாறாமல் “ குட்டி மாமா..!! குட்டி மாமா..!! “ என்று அவனையே சுற்றி வரும் இதழினி வந்துப் போனாள்..
கூடவே இப்பொழுது அவளின் குட்டிமாமாவை கண்டு முகம் திருப்பி செல்லும் இதழினியும் வந்துப் போனாள்...
இப்பொழுது உள்ள இதழினியின் முகம் வந்துப் போக அவன் முகத்தில் பல உணர்வுக் குவியல்... தலையை அழுந்த கோதிய அவன் அவள் படுத்திருக்கும் அறையை எட்டிப் பார்த்தான்...
இன்றும் அவளும், குழந்தையும் கீழே படுத்திருந்தனர்... “ இந்த வீட்டின் இளவரசன் அவன் மகன்..... அவனையும் இவளை போல் மாற்றுகிறாளே.. ” என்ற கோபம் வர...
ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டான்.... ஆழஉள்ளிழுத்துபுகையை வெளிவிட மனதும் கொஞ்சம் கோபத்தை குறைப்பதாய்...
மீண்டும் அவள் அறையை எட்டிப் பார்க்க.. குழந்தையை இறுக்க அணைத்துப் படுத்திருக்கும் காட்சிகண்ணில் தெரிவதாய்.. அதை கண்டதும் முகம் இறுக அப்படியே அவன் அறை நோக்கி சென்றான்....
தூக்கம் என்பது அறவே வரவில்லை அவனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்..
இப்படியாக நாட்களும், மாதங்களும் கழிந்தது, இனியாள் காலையில் சிறு சிறு உதவிகள் செய்துவிட்டு அவள் தனது கல்லூரியை நோக்கி செல்வாள்..
இதழிக்கு தான் நேரம் போகவே செய்யாது.. கொஞ்ச நேரம் நாராயணனிடம் அமர்ந்துப் பேசுவாள்... எப்பொழுதும் அவர்களை நேசிக்கும் ஜீவன் அவர்...
சில நேரம் இவர்களுடன் லக்ஷ்மியும் சேர்த்துக் கொள்வார்.. அப்பொழுது அவர் குழந்தையை கைகளில் வைத்துக்கொண்டே ஆசி தீர குழந்தையை கொஞ்சுவார்... இப்பொழுது கொஞ்சம்.. கொஞ்சமாக... லக்ஷ்மியும் இதழியும் நன்றாக பேசிக் கொள்கின்றனர்...
காலையில் சூளைக்கு செல்லும் சக்தி வர இரவு ஆகும்... இதழி மதியம் தூங்கும் நேரம் வீட்டுக்கு வந்து அவன் குழந்தையை கொஞ்சிக் கொள்வான்.... அவன் குழந்தையை பார்க்கிறதுக்கு, தூக்குறதும் அவளுக்கு தெரியும்.... ஆனாலும் கண்டும் காணாமல் இருப்பாள்.. சில நேரம் அவன் வரும் பொழுது இவளுக்கு தூக்கம் வரவில்லை என்றாலும், அவன் வருவதற்காய் தூங்குவதாய் நடிப்பாள்..
அன்று " இதழி உனக்கு வீட்டுல நேரம் போகுதா.. இல்லை ஏதாவது கிளாஸ் உன்னை சேர்த்து விடவா.. முன்னாடி ஏதாவது செய்து... கு.. குட்டிமாமா என்று ஆரம்பித்து பாதியில் நிறுத்திக் கொண்டான்... என்னை தேடி வந்து காட்டுவியே அதே மாதிரி ஏதாவது செய்கிறாயா? " என அவளை தேடி வந்து சக்தி கேட்க...
" என்ன திடீர் பாசம் வழியுது.. இந்த 4 மாசாமா இப்படியே தானே இருக்கேன் இனியும் இப்படியே இருக்கேன் " என இந்த சில மாதமாக அவளிடம் முகம் கொடுத்து பேசாமல் விலகி சென்ற கோபத்தை இப்பொழுது வார்த்தையில் காட்டினாள்...
அவள் அப்படி கோபம் காட்டவும் அவனுக்கு வாழ்க்கையில் சலிப்பு தட்டியது.." பச்.. என்ன இதழி இப்படி எது பேசவந்தாலும் இப்படியே பேசினா எப்படி.." என சிறு கோபம் காட்டி பேச
அவன் கோபம் அவளை தாக்க பேசாமல் கட்டிலில் ஏறி படுத்துக் கொண்டாள்... அவளின் இந்த செயல் கோபம் வரஅவள் கையை பிடித்து எழுந்து அமரவைத்த அவன் " இதழினி “ என அழுத்தி அழைக்க
அந்த நேரம் கதவை திறந்துக் கொண்டு இனியாள் வந்தாள் கையில் குழந்தையுடன்...
அந்த நேரம் அவன் கோபம் மறையை ஆசையாக குழந்தையைப் பார்த்தான்..
அவளிடம் குழந்தையை வாங்காமல் இதழினியை பார்த்துக் கொண்டு இருந்தான் சக்தி... அவள் தான் கூறிவிட்டாளே ” குழந்தையை தூக்கினால் வீட்டை விட்டு சென்று விடுவேன் “ என...
“ஆமா இவரு பெரிய துரை, நான் சொல்லாமல் குழந்தையை தூக்கமாட்டாராம், இத்தனை நேரம் என்னை மட்டும் பிடிச்சுட்டு இருந்தார்... அப்போ மட்டும் நான் சொன்னது இவருக்கு தெரியாதாம் “ மனதில் அவனை வறுத்துக் கொண்டு கண்களைஎங்கோ திருப்பிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.......
அவளை பார்த்த அவனுக்கு அவள் நிலை புரிவதாய்... இதழ் புன்னகையில் விரிய , இனியாளை நோக்கி புன்சிரிப்புடன் குழந்தையை வாங்கி கொண்டான்...
“ இவள் முன் ஒருநாளும் குழந்தையை வாங்க மாட்டாங்க.இன்னைக்கு வாங்குறாங்களே “ அவள் ஆச்சரியமாக பார்க்க ....
என்னை வேரோடு சாய்த்தவளே(னே)..!! அடுத்த எபி கொண்டு வந்துட்டேன்.. படிச்சு ஒரு லைக். அப்படியே ஒரு கமெண்ட். போட்டுட்டு போனால் நான் மகிழ்வேன்... இதுவரை படிச்சு கமெண்ட்ஸ் சொன்ன எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி டியர்ஸ்... இன்னைக்கு கொஞ்சம் பெரிய எபி மக்களே....
வேர் – 4
வெற்றி கூறியதுப் போல் அடுத்த மாதத்தில் இருந்து காலேஜ் செல்ல ஆரம்பித்தாள் இனியாள்... வெற்றியின் முடிவுக்கு யாரும் எதிர்ப்பு கூறாததால் அவளும் தன் படிப்பை தொடர்ந்தாள்..
அன்று கோபமாக சென்ற சக்திவேல் 2 நாள் கழித்து தான் வீடு வந்தான்.. அதன் பிறகு அவளை அவன் கண்டுக் கொள்ளவே இல்லை... அவளும் அவனை காணாததால் அவளுக்கு அவனின் விலகல் பெரிதாக தெரியவில்லை...
அன்று டைனிங்டேபிளில் அமர்ந்து தான் வாங்கி வந்த பார்சலை எடுத்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்.. அப்பொழுது தான் மாடியில் இருந்து இறங்கி வந்த அவள்..
“ காலைடிபன் தான் ரெடி ஆகிட்டே இவர் ஏன்.. கடையில் வாங்கி சாப்பிட்டு இருக்கார் “ என்ற யோசனையுடன் பார்த்துக் கொண்டே அவனை நோக்கி வந்தாள்...
அவன் அருகில் அவள் நிற்பதைக் கொண்ட அவன் பூரியை வாயில் வைத்துக் கொண்டே அவளை நோக்கி பார்த்துவிட்டு மீண்டும் அடுத்த பூரியை உள்ளே தள்ளிக் கொண்டு இருந்தான்...
“ இன்னைக்கு என்ன ரொம்ப தான் பண்ணுறார் “ என யோசிக்க.. “ அடியே... இவன் கொஞ்ச நாளா இப்படி தான் திரிகிறான் ” என அவளின் மனசாட்சி எடுத்துக் கொடுக்க..
“ ஓஹோ.. துரை கோவமா இருக்கார் போல.. அது தான் இதை போட்டு கடிக்கிறாரா…. காலையில் இதை சாப்பிட்டா எப்படி.. சாப்பிட்ட மாதிரி இருக்குமா..? “ என யோசித்துக் கொண்டே அவனுக்கு முன் ஒரு தட்டை எடுத்து வைத்து அதில் இரண்டு இட்டிலியை எடுத்து வைத்து, சட்னியையும் ஊற்றி அவன் முன் வைக்க...
அதையும், அவளையும் பார்த்த அவன் இடத்தை விட்டு எழுந்து சென்றுவிட்டான்...
அப்பொழுது தான் அவனின் உதாசீனம் அவளை வலிக்க செய்வதாய்... அப்படியே கண்களில் நீர் வழிய நின்றவளின், தோளில் ஒரு கரம் விழ வேகமாக கண்களை துடைத்துக் கொண்டு திரும்பி பார்க்க..
“ நீ.. எதுக்கும் கவலைப் படாத இதழி.. அவனுக்கு உன் மேல ரொம்ப பாசம்.. என்னால தான் எல்லாம்.. சீக்கிரம் எல்லாம் சரி ஆகும்.. ஆனா ஒண்ணு என்னை மன்னிச்சுடு ” என்று என்று அவளை நோக்கி கையெடுத்து வணகியவரைக் கண்டு அவள் மனம் கலங்குவதாய்....
“ அப்படி.. ஒண்ணும் இல்ல..மே.. “ முன்பு அவள் லக்ஷ்மியை “ அத்தை “ என்று அழைத்ததால், அவளை திட்டிய அவர் “ யார் யாருக்கு அத்தை.. மேடம்.. சொல்லு “ மிரட்டி வைத்திருந்தார்... அது தான் இன்று மேடம் என அழைக்க வந்தவளை அவர் தடுத்து....
“ வாய் நிறைய அன்பா. அத்தைன்னு கூப்டும்மா ” என கண்ணீர் மல்க கூறியவரை கண்டு அவள் கண்களும் கலங்குவதாய்...
அந்த நேரம் அங்கு வந்த இனியாளும் இக்காட்சியை காண... தயங்கி அங்கு நின்றவளை, பார்த்த லட்சுமி அழைக்க.., தாயை கண்ட கன்றுக் குட்டியாய் ஓடி வர இருவரையும் அணைத்துக் கொண்டார்...
இனி அவர் எப்பொழுதும் அவர்களுக்கு கொடுமை படுத்திய மாமியாராக இல்லாமல்.. பாசம் பொழியும் தாயாய் மாறுவார்..
இவர்களின் பாசபிணைப்பை கண்ட வெற்றி “ சரி.. சரி மாமியாரும், மருமக்களும் கொஞ்சுனது போதும்... இனி.. வா உன்னை அப்படியே காலேஜ்ல டிராப் பண்ணுறேன் “ என்றுக் கூறி அவளை அழைத்து சென்றான் வெற்றி...
அவர்கள் இருவரும்ஜோடியாக செல்வதைக் கண்ட லக்ஷ்மியின் மனது நிறைவதாய்... சக்திவேலை நினைத்தால் தான் அவரால் ஒரு முடிவெடுக்க முடியவில்லை.. இனியாளை கண்டு ஆனந்தமாக கண் கலங்கி நின்றவளை தோளோடு அணைத்துக் கொண்டார் அவர்....
செங்கல் சூளையில் இருந்து தாமதமாக திரும்பிய சக்தி.. வேலையாள் பரிமாறிய இரவு உணவை உண்டு விட்டு எப்பொழுது போல் தன் குழந்தையை காண சென்றான்..
ஆம், அவன் இதழி தூங்கிக் கொண்டு இருக்கும் பொழுது மட்டும் ஆசை தீர தன் மகனை கொஞ்சிக் கொள்வான்... காலையில் அவள் எழுமுன்.. அதாவது இனியாள் எழுந்து சென்றதும்... இதழி இருக்கும் அறைக்கு வந்து தூங்கிக் கொண்டு இருக்கும் தன் குழந்தைக்கு ஆசையாக முத்தம் வைத்து செல்பவன்...
அதன் பிறகு இரவு அவள் உறங்கியதும் வருவான்.. சில நேரம் அறைக்கு வந்து குழந்தையை தூக்கிக் கொண்டு அவன் தங்கி இருக்கும் அறைக்கு சென்று வெகு நேரம் அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருப்பான்..
“ இவனின் பிறப்பை தனக்கு.. ஒரு அப்பாவாக கூட அறிவிக்கவில்லையே “என்று கோபமாக வரும்.. ஆனாலும் அவளுக்காக பொறுத்துக் கொள்வான்..
இன்று குழந்தையை காண செல்ல வந்தவன் அப்படியே அந்த குளிர் காற்றை அனுபவித்து அப்படியே நின்றுவிட்டான்... அப்பொழுது அவன் மனதில் குழந்தை முகம் மாறாமல் “ குட்டி மாமா..!! குட்டி மாமா..!! “ என்று அவனையே சுற்றி வரும் இதழினி வந்துப் போனாள்..
கூடவே இப்பொழுது அவளின் குட்டிமாமாவை கண்டு முகம் திருப்பி செல்லும் இதழினியும் வந்துப் போனாள்...
இப்பொழுது உள்ள இதழினியின் முகம் வந்துப் போக அவன் முகத்தில் பல உணர்வுக் குவியல்... தலையை அழுந்த கோதிய அவன் அவள் படுத்திருக்கும் அறையை எட்டிப் பார்த்தான்...
இன்றும் அவளும், குழந்தையும் கீழே படுத்திருந்தனர்... “ இந்த வீட்டின் இளவரசன் அவன் மகன்..... அவனையும் இவளை போல் மாற்றுகிறாளே.. ” என்ற கோபம் வர...
ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டான்.... ஆழஉள்ளிழுத்துபுகையை வெளிவிட மனதும் கொஞ்சம் கோபத்தை குறைப்பதாய்...
மீண்டும் அவள் அறையை எட்டிப் பார்க்க.. குழந்தையை இறுக்க அணைத்துப் படுத்திருக்கும் காட்சிகண்ணில் தெரிவதாய்.. அதை கண்டதும் முகம் இறுக அப்படியே அவன் அறை நோக்கி சென்றான்....
தூக்கம் என்பது அறவே வரவில்லை அவனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்..
இப்படியாக நாட்களும், மாதங்களும் கழிந்தது, இனியாள் காலையில் சிறு சிறு உதவிகள் செய்துவிட்டு அவள் தனது கல்லூரியை நோக்கி செல்வாள்..
இதழிக்கு தான் நேரம் போகவே செய்யாது.. கொஞ்ச நேரம் நாராயணனிடம் அமர்ந்துப் பேசுவாள்... எப்பொழுதும் அவர்களை நேசிக்கும் ஜீவன் அவர்...
சில நேரம் இவர்களுடன் லக்ஷ்மியும் சேர்த்துக் கொள்வார்.. அப்பொழுது அவர் குழந்தையை கைகளில் வைத்துக்கொண்டே ஆசி தீர குழந்தையை கொஞ்சுவார்... இப்பொழுது கொஞ்சம்.. கொஞ்சமாக... லக்ஷ்மியும் இதழியும் நன்றாக பேசிக் கொள்கின்றனர்...
காலையில் சூளைக்கு செல்லும் சக்தி வர இரவு ஆகும்... இதழி மதியம் தூங்கும் நேரம் வீட்டுக்கு வந்து அவன் குழந்தையை கொஞ்சிக் கொள்வான்.... அவன் குழந்தையை பார்க்கிறதுக்கு, தூக்குறதும் அவளுக்கு தெரியும்.... ஆனாலும் கண்டும் காணாமல் இருப்பாள்.. சில நேரம் அவன் வரும் பொழுது இவளுக்கு தூக்கம் வரவில்லை என்றாலும், அவன் வருவதற்காய் தூங்குவதாய் நடிப்பாள்..
அன்று " இதழி உனக்கு வீட்டுல நேரம் போகுதா.. இல்லை ஏதாவது கிளாஸ் உன்னை சேர்த்து விடவா.. முன்னாடி ஏதாவது செய்து... கு.. குட்டிமாமா என்று ஆரம்பித்து பாதியில் நிறுத்திக் கொண்டான்... என்னை தேடி வந்து காட்டுவியே அதே மாதிரி ஏதாவது செய்கிறாயா? " என அவளை தேடி வந்து சக்தி கேட்க...
" என்ன திடீர் பாசம் வழியுது.. இந்த 4 மாசாமா இப்படியே தானே இருக்கேன் இனியும் இப்படியே இருக்கேன் " என இந்த சில மாதமாக அவளிடம் முகம் கொடுத்து பேசாமல் விலகி சென்ற கோபத்தை இப்பொழுது வார்த்தையில் காட்டினாள்...
அவள் அப்படி கோபம் காட்டவும் அவனுக்கு வாழ்க்கையில் சலிப்பு தட்டியது.." பச்.. என்ன இதழி இப்படி எது பேசவந்தாலும் இப்படியே பேசினா எப்படி.." என சிறு கோபம் காட்டி பேச
அவன் கோபம் அவளை தாக்க பேசாமல் கட்டிலில் ஏறி படுத்துக் கொண்டாள்... அவளின் இந்த செயல் கோபம் வரஅவள் கையை பிடித்து எழுந்து அமரவைத்த அவன் " இதழினி “ என அழுத்தி அழைக்க
அந்த நேரம் கதவை திறந்துக் கொண்டு இனியாள் வந்தாள் கையில் குழந்தையுடன்...
அந்த நேரம் அவன் கோபம் மறையை ஆசையாக குழந்தையைப் பார்த்தான்..
அவளிடம் குழந்தையை வாங்காமல் இதழினியை பார்த்துக் கொண்டு இருந்தான் சக்தி... அவள் தான் கூறிவிட்டாளே ” குழந்தையை தூக்கினால் வீட்டை விட்டு சென்று விடுவேன் “ என...
“ஆமா இவரு பெரிய துரை, நான் சொல்லாமல் குழந்தையை தூக்கமாட்டாராம், இத்தனை நேரம் என்னை மட்டும் பிடிச்சுட்டு இருந்தார்... அப்போ மட்டும் நான் சொன்னது இவருக்கு தெரியாதாம் “ மனதில் அவனை வறுத்துக் கொண்டு கண்களைஎங்கோ திருப்பிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.......
அவளை பார்த்த அவனுக்கு அவள் நிலை புரிவதாய்... இதழ் புன்னகையில் விரிய , இனியாளை நோக்கி புன்சிரிப்புடன் குழந்தையை வாங்கி கொண்டான்...
“ இவள் முன் ஒருநாளும் குழந்தையை வாங்க மாட்டாங்க.இன்னைக்கு வாங்குறாங்களே “ அவள் ஆச்சரியமாக பார்க்க ....