• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Ennai Verodu Saithavale(ne)...!!! Epi - 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
ஹாய்.. ஹலோ.. மக்களே....

என்னை வேரோடு சாய்த்தவளே(னே)..!! அடுத்த எபி கொண்டு வந்துட்டேன்.. படிச்சு ஒரு லைக். அப்படியே ஒரு கமெண்ட். போட்டுட்டு போனால் நான் மகிழ்வேன்... இதுவரை படிச்சு கமெண்ட்ஸ் சொன்ன எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி டியர்ஸ்... இன்னைக்கு கொஞ்சம் பெரிய எபி மக்களே....;););)

வேர் – 4

வெற்றி கூறியதுப் போல் அடுத்த மாதத்தில் இருந்து காலேஜ் செல்ல ஆரம்பித்தாள் இனியாள்... வெற்றியின் முடிவுக்கு யாரும் எதிர்ப்பு கூறாததால் அவளும் தன் படிப்பை தொடர்ந்தாள்..

அன்று கோபமாக சென்ற சக்திவேல் 2 நாள் கழித்து தான் வீடு வந்தான்.. அதன் பிறகு அவளை அவன் கண்டுக் கொள்ளவே இல்லை... அவளும் அவனை காணாததால் அவளுக்கு அவனின் விலகல் பெரிதாக தெரியவில்லை...

அன்று டைனிங்டேபிளில் அமர்ந்து தான் வாங்கி வந்த பார்சலை எடுத்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்.. அப்பொழுது தான் மாடியில் இருந்து இறங்கி வந்த அவள்..

“ காலைடிபன் தான் ரெடி ஆகிட்டே இவர் ஏன்.. கடையில் வாங்கி சாப்பிட்டு இருக்கார் “ என்ற யோசனையுடன் பார்த்துக் கொண்டே அவனை நோக்கி வந்தாள்...

அவன் அருகில் அவள் நிற்பதைக் கொண்ட அவன் பூரியை வாயில் வைத்துக் கொண்டே அவளை நோக்கி பார்த்துவிட்டு மீண்டும் அடுத்த பூரியை உள்ளே தள்ளிக் கொண்டு இருந்தான்...

“ இன்னைக்கு என்ன ரொம்ப தான் பண்ணுறார் “ என யோசிக்க.. “ அடியே... இவன் கொஞ்ச நாளா இப்படி தான் திரிகிறான் ” என அவளின் மனசாட்சி எடுத்துக் கொடுக்க..

“ ஓஹோ.. துரை கோவமா இருக்கார் போல.. அது தான் இதை போட்டு கடிக்கிறாரா…. காலையில் இதை சாப்பிட்டா எப்படி.. சாப்பிட்ட மாதிரி இருக்குமா..? “ என யோசித்துக் கொண்டே அவனுக்கு முன் ஒரு தட்டை எடுத்து வைத்து அதில் இரண்டு இட்டிலியை எடுத்து வைத்து, சட்னியையும் ஊற்றி அவன் முன் வைக்க...

அதையும், அவளையும் பார்த்த அவன் இடத்தை விட்டு எழுந்து சென்றுவிட்டான்...

அப்பொழுது தான் அவனின் உதாசீனம் அவளை வலிக்க செய்வதாய்... அப்படியே கண்களில் நீர் வழிய நின்றவளின், தோளில் ஒரு கரம் விழ வேகமாக கண்களை துடைத்துக் கொண்டு திரும்பி பார்க்க..

“ நீ.. எதுக்கும் கவலைப் படாத இதழி.. அவனுக்கு உன் மேல ரொம்ப பாசம்.. என்னால தான் எல்லாம்.. சீக்கிரம் எல்லாம் சரி ஆகும்.. ஆனா ஒண்ணு என்னை மன்னிச்சுடு ” என்று என்று அவளை நோக்கி கையெடுத்து வணகியவரைக் கண்டு அவள் மனம் கலங்குவதாய்....

“ அப்படி.. ஒண்ணும் இல்ல..மே.. “ முன்பு அவள் லக்ஷ்மியை “ அத்தை “ என்று அழைத்ததால், அவளை திட்டிய அவர் “ யார் யாருக்கு அத்தை.. மேடம்.. சொல்லு “ மிரட்டி வைத்திருந்தார்... அது தான் இன்று மேடம் என அழைக்க வந்தவளை அவர் தடுத்து....

“ வாய் நிறைய அன்பா. அத்தைன்னு கூப்டும்மா ” என கண்ணீர் மல்க கூறியவரை கண்டு அவள் கண்களும் கலங்குவதாய்...

அந்த நேரம் அங்கு வந்த இனியாளும் இக்காட்சியை காண... தயங்கி அங்கு நின்றவளை, பார்த்த லட்சுமி அழைக்க.., தாயை கண்ட கன்றுக் குட்டியாய் ஓடி வர இருவரையும் அணைத்துக் கொண்டார்...

இனி அவர் எப்பொழுதும் அவர்களுக்கு கொடுமை படுத்திய மாமியாராக இல்லாமல்.. பாசம் பொழியும் தாயாய் மாறுவார்..

இவர்களின் பாசபிணைப்பை கண்ட வெற்றி “ சரி.. சரி மாமியாரும், மருமக்களும் கொஞ்சுனது போதும்... இனி.. வா உன்னை அப்படியே காலேஜ்ல டிராப் பண்ணுறேன் “ என்றுக் கூறி அவளை அழைத்து சென்றான் வெற்றி...

அவர்கள் இருவரும்ஜோடியாக செல்வதைக் கண்ட லக்ஷ்மியின் மனது நிறைவதாய்... சக்திவேலை நினைத்தால் தான் அவரால் ஒரு முடிவெடுக்க முடியவில்லை.. இனியாளை கண்டு ஆனந்தமாக கண் கலங்கி நின்றவளை தோளோடு அணைத்துக் கொண்டார் அவர்....

செங்கல் சூளையில் இருந்து தாமதமாக திரும்பிய சக்தி.. வேலையாள் பரிமாறிய இரவு உணவை உண்டு விட்டு எப்பொழுது போல் தன் குழந்தையை காண சென்றான்..

ஆம், அவன் இதழி தூங்கிக் கொண்டு இருக்கும் பொழுது மட்டும் ஆசை தீர தன் மகனை கொஞ்சிக் கொள்வான்... காலையில் அவள் எழுமுன்.. அதாவது இனியாள் எழுந்து சென்றதும்... இதழி இருக்கும் அறைக்கு வந்து தூங்கிக் கொண்டு இருக்கும் தன் குழந்தைக்கு ஆசையாக முத்தம் வைத்து செல்பவன்...

அதன் பிறகு இரவு அவள் உறங்கியதும் வருவான்.. சில நேரம் அறைக்கு வந்து குழந்தையை தூக்கிக் கொண்டு அவன் தங்கி இருக்கும் அறைக்கு சென்று வெகு நேரம் அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருப்பான்..

“ இவனின் பிறப்பை தனக்கு.. ஒரு அப்பாவாக கூட அறிவிக்கவில்லையே “என்று கோபமாக வரும்.. ஆனாலும் அவளுக்காக பொறுத்துக் கொள்வான்..

இன்று குழந்தையை காண செல்ல வந்தவன் அப்படியே அந்த குளிர் காற்றை அனுபவித்து அப்படியே நின்றுவிட்டான்... அப்பொழுது அவன் மனதில் குழந்தை முகம் மாறாமல் “ குட்டி மாமா..!! குட்டி மாமா..!! “ என்று அவனையே சுற்றி வரும் இதழினி வந்துப் போனாள்..

கூடவே இப்பொழுது அவளின் குட்டிமாமாவை கண்டு முகம் திருப்பி செல்லும் இதழினியும் வந்துப் போனாள்...

இப்பொழுது உள்ள இதழினியின் முகம் வந்துப் போக அவன் முகத்தில் பல உணர்வுக் குவியல்... தலையை அழுந்த கோதிய அவன் அவள் படுத்திருக்கும் அறையை எட்டிப் பார்த்தான்...

இன்றும் அவளும், குழந்தையும் கீழே படுத்திருந்தனர்... “ இந்த வீட்டின் இளவரசன் அவன் மகன்..... அவனையும் இவளை போல் மாற்றுகிறாளே.. ” என்ற கோபம் வர...

ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டான்.... ஆழஉள்ளிழுத்துபுகையை வெளிவிட மனதும் கொஞ்சம் கோபத்தை குறைப்பதாய்...

மீண்டும் அவள் அறையை எட்டிப் பார்க்க.. குழந்தையை இறுக்க அணைத்துப் படுத்திருக்கும் காட்சிகண்ணில் தெரிவதாய்.. அதை கண்டதும் முகம் இறுக அப்படியே அவன் அறை நோக்கி சென்றான்....

தூக்கம் என்பது அறவே வரவில்லை அவனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்..

இப்படியாக நாட்களும், மாதங்களும் கழிந்தது, இனியாள் காலையில் சிறு சிறு உதவிகள் செய்துவிட்டு அவள் தனது கல்லூரியை நோக்கி செல்வாள்..

இதழிக்கு தான் நேரம் போகவே செய்யாது.. கொஞ்ச நேரம் நாராயணனிடம் அமர்ந்துப் பேசுவாள்... எப்பொழுதும் அவர்களை நேசிக்கும் ஜீவன் அவர்...

சில நேரம் இவர்களுடன் லக்ஷ்மியும் சேர்த்துக் கொள்வார்.. அப்பொழுது அவர் குழந்தையை கைகளில் வைத்துக்கொண்டே ஆசி தீர குழந்தையை கொஞ்சுவார்... இப்பொழுது கொஞ்சம்.. கொஞ்சமாக... லக்ஷ்மியும் இதழியும் நன்றாக பேசிக் கொள்கின்றனர்...

காலையில் சூளைக்கு செல்லும் சக்தி வர இரவு ஆகும்... இதழி மதியம் தூங்கும் நேரம் வீட்டுக்கு வந்து அவன் குழந்தையை கொஞ்சிக் கொள்வான்.... அவன் குழந்தையை பார்க்கிறதுக்கு, தூக்குறதும் அவளுக்கு தெரியும்.... ஆனாலும் கண்டும் காணாமல் இருப்பாள்.. சில நேரம் அவன் வரும் பொழுது இவளுக்கு தூக்கம் வரவில்லை என்றாலும், அவன் வருவதற்காய் தூங்குவதாய் நடிப்பாள்..

அன்று " இதழி உனக்கு வீட்டுல நேரம் போகுதா.. இல்லை ஏதாவது கிளாஸ் உன்னை சேர்த்து விடவா.. முன்னாடி ஏதாவது செய்து... கு.. குட்டிமாமா என்று ஆரம்பித்து பாதியில் நிறுத்திக் கொண்டான்... என்னை தேடி வந்து காட்டுவியே அதே மாதிரி ஏதாவது செய்கிறாயா? " என அவளை தேடி வந்து சக்தி கேட்க...

" என்ன திடீர் பாசம் வழியுது.. இந்த 4 மாசாமா இப்படியே தானே இருக்கேன் இனியும் இப்படியே இருக்கேன் " என இந்த சில மாதமாக அவளிடம் முகம் கொடுத்து பேசாமல் விலகி சென்ற கோபத்தை இப்பொழுது வார்த்தையில் காட்டினாள்...

அவள் அப்படி கோபம் காட்டவும் அவனுக்கு வாழ்க்கையில் சலிப்பு தட்டியது.." பச்.. என்ன இதழி இப்படி எது பேசவந்தாலும் இப்படியே பேசினா எப்படி.." என சிறு கோபம் காட்டி பேச

அவன் கோபம் அவளை தாக்க பேசாமல் கட்டிலில் ஏறி படுத்துக் கொண்டாள்... அவளின் இந்த செயல் கோபம் வரஅவள் கையை பிடித்து எழுந்து அமரவைத்த அவன் " இதழினி “ என அழுத்தி அழைக்க

அந்த நேரம் கதவை திறந்துக் கொண்டு இனியாள் வந்தாள் கையில் குழந்தையுடன்...

அந்த நேரம் அவன் கோபம் மறையை ஆசையாக குழந்தையைப் பார்த்தான்..

அவளிடம் குழந்தையை வாங்காமல் இதழினியை பார்த்துக் கொண்டு இருந்தான் சக்தி... அவள் தான் கூறிவிட்டாளே ” குழந்தையை தூக்கினால் வீட்டை விட்டு சென்று விடுவேன் “ என...

“ஆமா இவரு பெரிய துரை, நான் சொல்லாமல் குழந்தையை தூக்கமாட்டாராம், இத்தனை நேரம் என்னை மட்டும் பிடிச்சுட்டு இருந்தார்... அப்போ மட்டும் நான் சொன்னது இவருக்கு தெரியாதாம் “ மனதில் அவனை வறுத்துக் கொண்டு கண்களைஎங்கோ திருப்பிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.......

அவளை பார்த்த அவனுக்கு அவள் நிலை புரிவதாய்... இதழ் புன்னகையில் விரிய , இனியாளை நோக்கி புன்சிரிப்புடன் குழந்தையை வாங்கி கொண்டான்...

“ இவள் முன் ஒருநாளும் குழந்தையை வாங்க மாட்டாங்க.இன்னைக்கு வாங்குறாங்களே “ அவள் ஆச்சரியமாக பார்க்க ....
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
அவளின் ஆச்சரிய பார்வையை கண்ட அவன் சிரித்துக் கொண்டே “ என் பொண்டாட்டி குழந்தையைநான் தூக்கினா வீட்டை விட்டு போயிருவேன்னு சொன்னா. அது தான் அவனை தூரத்தில் இருந்து பார்த்துட்டு இருந்தேன்.. இப்போ இவனை தூக்க என் பொண்டாட்டி பெர்மிசன் குடுத்துட்டா” என கூறி ஆர்ப்பாட்டமாய் சிரிக்க...

இனி தன் தங்கையை அவன் பார்த்துக் கொள்வான் என்று சந்தோசமாக அறையை விட்டு வெளியில் வந்தாள் இனியாள்... அவள் வரவும் வெற்றி அழைக்கவே அவனை நோக்கி சென்றாள்....

கொஞ்சம் நேரம் கழித்து மெதுவாக கண்ணை அவன் புறம் திருப்பி பார்த்த இதழினி அவனை கண்டு அப்படியே அதிர்ந்து விட்டாள்.. இந்தசிலநாளில் அவனை நிறையவே கஷ்டபடுத்திவிட்டோம் என குற்ற உணர்ச்சியில் அப்படியே அவனை பார்த்து கொண்டு இருந்தாள்...

அருகில் இருந்த சோபாவில் அமர்ந்து,மடியிலிருந்த குழந்தையின் மேல் சக்தியின் பார்வை பிரியத்துடன் பதிந்திருக்க, முகம்கொள்ளாசிரிப்புடன், ஒரு புதையலை பார்ப்பதுப் போல் பிரமிப்புடன் பார்த்திருந்தான்...

அவனுடைய விரல்கள் மென்மையாக குழந்தையின் வெண்பிஞ்சு பாதங்களை வருட, மென்மையாக குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டான்… உறங்கிக் கொண்டிருந்த மகன், விழிக்காமலே சிரிக்க... அப்படியே மெதுவாக குனிந்து அவனுடையபிஞ்சு விரல்களில் மென்மையாக முத்தமிட்டான்...

அவனுடைய விழிகளில் பளபளப்பு, ரசைனையுடன் விரிந்த உதடுகள், பூவினும் மெல்லிய உணர்வுடன் தன் குழந்தையை வருடிய விதம்.., செல்ல முத்தம்.. எல்லாமே...! அவனுடைய பிரியத்தை பறைசாற்றின...

அவனை தாம் ரொம்பவே தவிக்க விட்டுவிட்டோம் என எண்ணம் வருவதாய்... தன் கணவன், தன் குழந்தையை கொஞ்சும் அழகை அங்கிருந்தே ரசித்தவளின் இதழ்களில் மெல்லிய புன்சிரிப்பின் தடம்... அந்த நிமிடமே உயர்ந்தவன் அவளை பார்த்து விட்டான்...

அவன் பார்த்ததும், தன்னை ஒருவாறாக சமாளித்து அந்த பக்கம் திரும்பியவளைக் கண்டு சிறு சிரிப்புடன், “ இதழி.., இங்கவாயேன்..! ” என அழைக்க..

ஏனோ தெரியாமல் மந்திரத்துக்கு கட்டுண்டவள் போல் எழும்பி அவனை நோக்கிசெல்ல.., சிறுமலர்ச்சி அவனிடம்.., இதழி தான் அழைத்ததும் வருகிறாளா..? அப்படியே ஆச்சரியம் பொங்க அவளை சிறு சிரிப்புடன் பார்த்திருந்தான்..

அவள் அருகில் வரவும், அவளை தன் அருகில் இழுத்து அமரவைத்த அவன் “ இவனைப் பாரேன் அப்படியே என்னை மாதிரியே இருக்கான் “ என கண்களில் பெருமை பொங்க கூறியவனை சிறு சிரிப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தாள் இதழி..

அவளின் புன்னகையை கண்ட அவன் “ தேங்க்ஸ் “ என

கேள்வியாய் புருவம் சுருக்கியவளைக் கண்டு “ இன்னைக்கு தான் உன் கண்கள் அழகா சிரிக்குது... நான் சின்ன வயசுல பார்த்த இதழினி ஒரு நிமிடம் வந்துப் போனாள்.., நீ மாற ஆரம்பிச்சுட்ட இதழி., “ மென்குரலில் நிறுத்த..,

அத்தனைநேரம் இருந்த இதம் மறைய, முகம் கோபத்தை தத்தெடுக்க...

“ இல்லை.., பொய்.., என் கண்ணுல உள்ள சிரிப்பு எல்லாம் மறைஞ்சுப் போய் ரொம்ப நாள் ஆச்சு.., “ என கோபத்துடன் மறுக்க..

“ ஊகும்.. இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி நான் பார்த்தேன்.. பழைய இதழினி வந்துப் போனாள் உன்கண்ணில்..”

“ நோ..வீண் கற்பனை... கற்பனை எல்லாம் நிஜம் ஆகிடாது..!! “ என பழைய கோபத்துடன் வெடிக்க...

அவளின் கோபத்தை கண்டுக் கொள்ளாது “ கற்பனை இல்லை.. நிஜம்!!! அந்த சிரிப்பை மீட்டெடுத்து.. பழைய இதழினியை தக்க வைக்க என்னால் முடியும் ..” என சவால் விட..,

“ ஹூம்.., அது கடலில் தண்ணீர் வற்றட்டும், அப்போ பார்த்துக்கலாம்..!! ”

“ம்... பார்ப்போம்.. என்னடா செல்லம்..!!”

அவள், அவனை முறைக்க..

குழந்தை பக்கம் பார்வையை திருப்பி “ உங்கஅம்மாவை மாற்ற என்னால் முடியும் தானே..?? ”அப்பொழுது தான் விழிக்க தொடங்கிய குழந்தையுடன் அவன் கொஞ்சலாக கேட்க...

அவன் கூறியது புரிந்தது போல், குழந்தையும் கண்களை சிமிட்டி " ங்கா " என சிறு சத்தம் எழுப்ப..

இருவரையும் முறைத்துக் கொண்டு “ பச்...” என திரும்பி நடந்த மனைவியை அவன் விழிகள் தாபமாக.. !!! ரசனையாக..!!! குறும்பாக …!!! காதலாக..!!! தொடர்ந்தன....

அன்று இரவு வெகு நேரம் ஆகியும் இதழி உறங்காமல், குழந்தையை தட்டிக் கொடுத்துக் கொண்டே இருந்தாள்... இனியாள் இன்னும் வரகாணும்.. ஒரு பார்வையை மகன் மேலும், இன்னொரு பார்வையை வாசலிலும் வைத்திருந்தாள்... வெகு நேரம் ஆகியும் அவள் வராததால். தூக்கம் வராமல் படுத்திருந்தாள்...

அதே நேரம் தன் அம்மா அழைத்ததால் அவரிடம் பேசிவிட்டு அவன் அறைக்கு வந்தான் சக்திவேல்... வந்து கதவை தாழ்போடவும் அதிர்ந்து எழுந்த அவள் “ஏஏய்... நீ.. நீ எதுக்கு என் அறைக்கு வார” என அவள் பதறி வினவ..

“ இத.. பாருடா. என் அறைக்கு வர நான் யார் கிட்ட கேட்கணும்.. ம்ம்.. “ எனஒற்றை புருவம் உயர்த்திக் கேட்டுக் கொண்டே அவள் அருகில் வர..

பக்கத்துல வாராத “ அக்கா எங்க.. அவளை வர சொல் ” என

“ஹலோ.. மேடம்... உங்க அக்கா என் தம்பி கூட இருக்கா.. அவனுக்கு அவன் பொண்டாடியை காணாமல் இருக்க முடியலியாம்.. எனக்கும் அதே தான்.. அது தான் நானும், என் பொண்டாடியை தேடி ஆசையா ஓடி வந்துட்டேன் “ என கண்களை சிமிட்டி சிரிக்க....

கண்கள் தெறித்து விழுவதுப் போல் கண்களை விரித்த அவளை கண்டு ஆர்பாட்டமாக சிரித்த அவன் “ ஏன்.. இப்படி பயப்படுற.. ஈசி..” என கூறி அவள் கன்னத்தில் மெதுவாக தட்டிய அவன், அவள் அருகில் குனிந்து உறங்கிக் கொண்டு இருந்த மகனை கைகளில் தூக்கிக் கொண்டான்...

அவன் விலகி செல்லவும், இழுத்து வைத்திருந்த மூச்சை வெளிவிட்ட அவள் அவனை பார்த்துக் கொண்டே தன் இடத்தில் படுத்தாள்.. படுத்த சிறிது நேரத்தில் உறங்கிவிட...

அவளை பார்த்துக் கொண்டு இருந்த அவன், அவள் உறங்கவும், தன் மகனுக்கென வாங்கி வைத்திருந்த தொட்டிலில் அவனை படுக்க வைத்தான்...

மெதுவாக அவள் அருகில் வந்து அவளை தன் கைகளில் தூக்கி கட்டிலில் படுக்க வைத்தான்... படுக்கவைத்து போர்வையை அவள் மேல் போர்த்தி விட்ட அவன் அவள் நெற்றியில் மெதுவாக இதழ் ஒற்றி எடுத்து, அவள் அருகில் சரிந்துக் கொண்டான்...

மறுநாள் கலையில் எழுந்த அவள் தான் எப்படி கட்டிலில் படுத்தோம் என யோசிக்க... அதற்கு விடையாய் அவள் அருகில் அவன்... அதிர்ந்துவிழித்த அவள் அவனை விட்டு எழ அவளை விடாமல் தடுத்த அவன் “ இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு இதழ் “ என கண்ணை மூடிக் கொண்டே கூற...

“ த... தம்பி அழறான்..” என வாயில் வந்ததை உளறிவிட்டு, தப்பித்தோம் பிழைத்தோம் என குளியலறை நோக்கி ஓடினாள்.. அவளின் அதிர்ந்த முகத்தை கண்டு முகம் புன்னகையில் விரிய விட்ட தூக்கத்தை தொடர்ந்தான் சக்தி...

காலையில் எக்ஸாம் என இரவில் வெகு நேரம் படித்த இனியாள், காலையில் வெகு தாமதமாக எழுந்த அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டு இருந்தாள்.... அவளுக்கான சாப்பாட்டை டிபன் பாக்ஸில் அடைத்துக் கொண்டு இருந்தான் வெற்றி…

“ மாமா தள்ளுங்க நான் செய்றேன் “ என வந்த இதழியை விரட்டிய அவன் " அண்ணி நீங்களே ரொம்ப வீக்கா இருக்கீங்களாம். அண்ணா உங்களை வீட்டில் ஒரு வேலையும் செய்ய கூடாதுன்னு சொல்லிருக்காங்க “ என நமட்டு சிரிப்புடன் கூற..

" ரொம்ப தான் " என செல்லமாக நொடித்துக் கொண்டு அவன் செய்வதை பார்த்துக் கொண்டு இருந்தாள்..

இனியாளை விட வெற்றி பம்பரமாக சுற்றிக் கொண்டு இருப்பதை பார்த்த அனைவருக்கும் மகிழ்ச்சி பெருகுவதாய்... வெற்றி இனியாள் மீது உயிரையே வைத்திருந்தான் என்பது யாவரும் அறிந்ததே.. ஆனால் இன்று அவன் செயலைக் கண்ட லட்சுமிக்கு அவனின் இத்தனைய காதல் தெரிந்தது... அப்படியே சந்தோசத்துடன் வெற்றியை பார்த்து கொண்டு இருந்தார்...

அவளுக்கான டிபனை தட்டில் எடுத்த வெற்றி அவன் அறைக்கு சென்று அவளிடம் கொடுக்க..

அதை கையில் வாங்கி சாப்பிட்டுக் கொண்டே புக்கை புரட்டியவளை கண்ட அவன் கையில் இருந்த தட்டை வாங்கி கொண்டு " நீ படி... நான் ஊட்டி விடுறேன் " என ஊட்டி விட...

அவள் கண்களில் சிறு கண்ணீர் துளி... அதை கண்ட அவன் என்ன சின்ன பிள்ளை மாதிரி அழுற என செல்லமாக கடிந்து கொண்டு கன்னத்தில் வழிந்த கண்ணீரை சுண்டி விட…

" நான் உனக்கு குழந்தை தானே மாமா " என சிணுங்கலாக கேட்க...

" ஆமாடா. தங்கம் நீ குழந்தை தான் " என சிறு கடுப்புடன் கூற..

குறும்பாக சிரித்த அவள் " போ.. நீ எனக்கு ஊட்டி விடவேண்டாம் " என முகத்தை திருப்ப..

“ ஏண்டா தங்கம் நான் உனக்கு ஊட்ட வேண்டாமா? இன்னைக்கு இதை பழகினால் தானே.. நாளைக்கு என் பொண்ணுக்கோ, பையனுக்கோ.., இதை செய்யமுடியும் “ என கண்சிமிட்டி சிரிக்க..

" யோவ் மாமா... நான் மட்டும் தான் உனக்கு குழந்தை " என கண்களை சுருக்கி கூற..

" அட போடி... லவ்வே பண்ணாம.. ஒரு வாரத்துக்கு முன்னாடி கல்யாணம் பண்ணுனவனுக்கு எல்லாம் 4 மாச குழந்தையே புதுசா பிறந்திருக்கு.. நான் பல வருசமா லவ் பண்ணுறேன் ஒரு பாப்பாவையும் காணும் " என கிண்டலாக கூற…

" நானே உனக்கு குழந்தை தானே அப்புறம் ஏன் மாமா.. நீ வேற பொண்ணுக்கும், பையனுக்கும் ஆசைப்படுற " என கண்சிமிட்டலுடன் கேட்க...

" என்னடி...இப்படி சொல்லிட்ட... சில விஷயம் குழந்தை பண்ணுனா தாண்டி நல்லா இருக்கும் " என ரசனையாக கூற…

" அப்படியா.. அப்படி என்ன பண்ணுமாம் ..? " என் யோசனையாக கேட்க..

அவளை பார்த்த அவனுக்கு குறும்பு கூத்தாட.. " அடேய்..!! வெற்றி உனக்கு ஜாக்பார்ட் அடிக்க போகுதுடா...!! பேசவே பயந்தவ.. இந்த வாயயடிக்குறா... அப்படியே தேவையானதை வாங்கிட வேண்டியது தான் என மனது கூச்சலிட "

அந்த கூச்சலை அவளுக்கு காட்டாமல் " குழந்தை அப்பா என்று அழைக்குறதே அப்படியே வானத்துல பறக்குற உணர்வை கொடுக்கும் “ என கண்களில் குறும்பு வழிய கூற…

அவனின் குறும்பை கவனிக்காத அவள் "அப்படியா.. !!! அப்பா..!! அப்பா...!! நான் ரெண்டு நேரம் கூப்டுட்டேன் நீங்க பறக்கவே இல்லையே " என சிரிப்புடன் வினவ…
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
"அட.. ஆண்டவா....!!! எப்படி எனக்கு இப்படி ஒரு அறிவாளி பொண்டாட்டியை தந்த " என கடவுளுக்கு ஒரு கேள்வியை அனுப்பி விட்டு " அதெல்லாம் குழந்தை அழைத்தா தான் பறக்க முடியும் " என

"ஓ.. அப்படியா.. சரி வேற சொல்லுங்க " என

" குழந்தை செல்லமா என் நெஞ்சுல சாஞ்சுகிட்டு.. என் மீசையை பிடிச்சு இழுப்பான்... அது எவ்ளோ சுகமா இருக்கும் தெரியுமா " என கண்களை மூடி ரசனையாக கூறியவனை கண்ட அவள் முகத்தில் குறும்பு கூத்தாட.. அவன் மீசையை பிடித்து இழுக்க..

" ஆ... வலிக்குதுடி.." என மெதுவாக முனங்க..

" குழந்தை இழுத்தா மட்டும் வலிக்காத " என இதழ் சுழித்தவளை கண்டவனின் பார்வை சுவாரசியமாக மாற...

" அடுத்து ஒன்னு சொல்லட்டா." என குறும்பு குரலில் ஆர்வமாக கேட்க..

அவனின் ஆர்வத்தை பார்த்த அவளும், அவனை ஆர்வமாக பார்க்க... " என் பையன் நான் கேட்குற நேரம் எல்லாம் முத்தம் தருவான்.. அதிலும் 100 முத்தம் கேட்டா கூட தருவான்.. " என கண்களில் மயக்கத்துடன் கூற...

அவனுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கத்தில் அவன் கூறுவதை, உள் அர்த்தத்தை அறியாமல் " அவன் 100 தந்தா.. நான் ஆயிரம் தருவேன் " என வீராப்புடன் கூறிக் கொண்டு அவனின் முகம் நோக்கி குனிய..,

அவனின் குறும்பு கண்களை கண்ட அவள் " யூ " என கூறி வெட்கம் கொண்ட முகத்தை அவனுக்கு காட்டாமல் அவன் கன்னத்தில் மெதுவாக அடித்து விட்டு வெளியில் ஓடி விட்டாள் அவள்..

அவள் ஓட “ கிறுக்கு பயபுள்ளை... குறும்பை பாரேன் “ என சிவாஜி ஸ்டைலில் கூறிய தலை ஒதுக்கி திரும்பவும்...,

“ டேய்..... என்ன ஒரு கிஸ் கூட வாங்காம விட்டுட்ட “ என அவனின் மனசாட்சி வேறு வந்து கடுபேத்த...,

அதை விரட்டிய அவன் “ அவன்.., இவன் காதலிக்கும் போதே பிரஞ்ச் கிஸ், இந்தியா கிஸ், லண்டன் கிஸ் ரேஞ்சுக்கு போறான்.. நான் பல வருஷம் அந்த லவ்வை பண்ணி, கல்யாணமும் பண்ணி, ஒரு கிஸ் பண்ண முடியாம இருக்கேன் ”

“ அதிலும் இவ்ளோ நேரம் பேசி.. உலகத்துல இல்லாத ஆசையெல்லாம் கொண்டு வந்து ஒரு பிரஞ்ச் கிஸ்.. அட...!! அது கூட வேண்டாமய்யா...!!! ஒரு கிராமத்து கிஸ்சாச்சும் தந்தாளா..? அதுவும் இல்லை.. போடா வெற்றி உனக்கு சக்தி அளவுக்கு அதிர்ஷ்டம் இல்லை “ என தன்னை தானே நொந்துக் கொண்டான்....

வெளியில் நின்று இவனின் புலம்பலை கேட்ட இனியாளும் சிரிப்புடன் “ பிரஞ்ச் கிஸ் வேணுமா “ காலேஜ் போயிட்டு வந்து வச்சுகிறேன் கச்சேரியை “ “ என எண்ணி காலேஜ் நோக்கி சென்றாள் அவள்....

இவர்களை தன் அறை வாசலில் இருந்து ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தாள் இதழி.. “ நான் குட்டிமாமாவை விரும்புவதுப் போல் அவரும் என்னை விரும்பினால்.., இப்படி தானே பார்த்து பார்த்து செய்வார் “ என நினைத்து அறையை நோக்கிப் பார்த்தாள்... அவனோ இன்னும் தூங்கிக் கொண்டு இருந்தான்.... அவன் மேல் கோபம் பெருக முகத்தை திருப்பிக் கொண்டாள்...அன்று முழுவதும் அவள் கோபம் தொடருவதாய்..


வேர் சாய மறுக்கிறது...:confused::confused:
 




AnithaKarmegam

இணை அமைச்சர்
Joined
Jan 21, 2018
Messages
711
Reaction score
1,865
Age
27
Location
Thiruvarur
"அட.. ஆண்டவா....!!! எப்படி எனக்கு இப்படி ஒரு அறிவாளி பொண்டாட்டியை தந்த " என கடவுளுக்கு ஒரு கேள்வியை அனுப்பி விட்டு " அதெல்லாம் குழந்தை அழைத்தா தான் பறக்க முடியும் " என

"ஓ.. அப்படியா.. சரி வேற சொல்லுங்க " என

" குழந்தை செல்லமா என் நெஞ்சுல சாஞ்சுகிட்டு.. என் மீசையை பிடிச்சு இழுப்பான்... அது எவ்ளோ சுகமா இருக்கும் தெரியுமா " என கண்களை மூடி ரசனையாக கூறியவனை கண்ட அவள் முகத்தில் குறும்பு கூத்தாட.. அவன் மீசையை பிடித்து இழுக்க..

" ஆ... வலிக்குதுடி.." என மெதுவாக முனங்க..

" குழந்தை இழுத்தா மட்டும் வலிக்காத " என இதழ் சுழித்தவளை கண்டவனின் பார்வை சுவாரசியமாக மாற...

" அடுத்து ஒன்னு சொல்லட்டா." என குறும்பு குரலில் ஆர்வமாக கேட்க..

அவனின் ஆர்வத்தை பார்த்த அவளும், அவனை ஆர்வமாக பார்க்க... " என் பையன் நான் கேட்குற நேரம் எல்லாம் முத்தம் தருவான்.. அதிலும் 100 முத்தம் கேட்டா கூட தருவான்.. " என கண்களில் மயக்கத்துடன் கூற...

அவனுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கத்தில் அவன் கூறுவதை, உள் அர்த்தத்தை அறியாமல் " அவன் 100 தந்தா.. நான் ஆயிரம் தருவேன் " என வீராப்புடன் கூறிக் கொண்டு அவனின் முகம் நோக்கி குனிய..,

அவனின் குறும்பு கண்களை கண்ட அவள் " யூ " என கூறி வெட்கம் கொண்ட முகத்தை அவனுக்கு காட்டாமல் அவன் கன்னத்தில் மெதுவாக அடித்து விட்டு வெளியில் ஓடி விட்டாள் அவள்..

அவள் ஓட “ கிறுக்கு பயபுள்ளை... குறும்பை பாரேன் “ என சிவாஜி ஸ்டைலில் கூறிய தலை ஒதுக்கி திரும்பவும்...,

“ டேய்..... என்ன ஒரு கிஸ் கூட வாங்காம விட்டுட்ட “ என அவனின் மனசாட்சி வேறு வந்து கடுபேத்த...,

அதை விரட்டிய அவன் “ அவன்.., இவன் காதலிக்கும் போதே பிரஞ்ச் கிஸ், இந்தியா கிஸ், லண்டன் கிஸ் ரேஞ்சுக்கு போறான்.. நான் பல வருஷம் அந்த லவ்வை பண்ணி, கல்யாணமும் பண்ணி, ஒரு கிஸ் பண்ண முடியாம இருக்கேன் ”

“ அதிலும் இவ்ளோ நேரம் பேசி.. உலகத்துல இல்லாத ஆசையெல்லாம் கொண்டு வந்து ஒரு பிரஞ்ச் கிஸ்.. அட...!! அது கூட வேண்டாமய்யா...!!! ஒரு கிராமத்து கிஸ்சாச்சும் தந்தாளா..? அதுவும் இல்லை.. போடா வெற்றி உனக்கு சக்தி அளவுக்கு அதிர்ஷ்டம் இல்லை “ என தன்னை தானே நொந்துக் கொண்டான்....

வெளியில் நின்று இவனின் புலம்பலை கேட்ட இனியாளும் சிரிப்புடன் “ பிரஞ்ச் கிஸ் வேணுமா “ காலேஜ் போயிட்டு வந்து வச்சுகிறேன் கச்சேரியை “ “ என எண்ணி காலேஜ் நோக்கி சென்றாள் அவள்....

இவர்களை தன் அறை வாசலில் இருந்து ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தாள் இதழி.. “ நான் குட்டிமாமாவை விரும்புவதுப் போல் அவரும் என்னை விரும்பினால்.., இப்படி தானே பார்த்து பார்த்து செய்வார் “ என நினைத்து அறையை நோக்கிப் பார்த்தாள்... அவனோ இன்னும் தூங்கிக் கொண்டு இருந்தான்.... அவன் மேல் கோபம் பெருக முகத்தை திருப்பிக் கொண்டாள்...அன்று முழுவதும் அவள் கோபம் தொடருவதாய்..


வேர் சாய மறுக்கிறது...:confused::confused:
parunga vetri pora speed patha unga ooru pasanga bayangarama irupanga polaye..:p ipo than neenga gd girl indha mari daily oru epi kudupingalam en chellam la.....:)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top